திருநாவுக்கரசர் (அப்பர்)
இயற்றிய
தேவாரம் (திருமுறை 5)
திருநாவுக்கரசர் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐💐🌹🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻 |
---|
திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் 5. ஐந்தாம் திருமுறை 1. கோயில் - திருக்குறுந்தொகை #1071 அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் பொன்னம் பாலிக்கும் மேலும் இ பூ மிசை என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற இன்னம் பாலிக்குமோ இ பிறவியே மேல் #1072 அரும்பு அற்றப்பட ஆய் மலர் கொண்டு நீர் சுரும்பு அற்றப்பட தூவி தொழு-மினோ கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் பெரும்பற்றப்புலியூர் எம்பிரானையே மேல் #1073 அரிச்சுற்ற வினையால் அடர்ப்புண்டு நீர் எரி சுற்ற கிடந்தார் என்று அயலவர் சிரிச்சுற்று பல பேசப்படாமுனம் திரு சிற்றம்பலம் சென்று அடைந்து உய்ம்-மினே மேல் #1074 அல்லல் என் செயும் அருவினை என் செயும் தொல்லை வல்வினை தொந்தம்தான் என் செயும் தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு எல்லை இல்லது ஓர் அடிமை பூண்டேனுக்கே மேல் #1075 ஊனில் ஆவி உயிர்க்கும் பொழுது எலாம் நான் நிலாவி இருப்பன் என் நாதனை தேன் நிலாவிய சிற்றம்பலவனார் வான் நிலாவி இருக்கவும் வைப்பரே மேல் #1076 சிட்டர் வானவர் சென்று வரம் கொளும் சிட்டர் வாழ் தில்லை சிற்றம்பலத்து உறை சிட்டன் சேவடி கைதொழ செல்லும் அ சிட்டர்-பால் அணுகான் செறு காலனே மேல் #1077 ஒருத்தனார் உலகங்கட்கு ஒரு சுடர் திருத்தனார் தில்லை சிற்றம்பலவனார் விருத்தனார் இளையார் விடம் உண்ட எம் அருத்தனார் அடியாரை அறிவரே மேல் #1078 விண் நிறைந்தது ஓர் வெவ் அழலின் உரு எண் நிறைந்த இருவர்க்கு அறிவு ஒணா கண் நிறைந்த கடி பொழில் அம்பலத் துள் நிறைந்து நின்று ஆடும் ஒருவனே மேல் #1079 வில்லை வட்டப்பட வாங்கி அவுணர்-தம் வல்லை வட்டம் மதில் மூன்று உடன் மாய்த்தவன் தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்து ஓடுதல் உண்மையே மேல் #1080 நாடி நாரணன் நான்முகன் என்று இவர் தேடியும் திரிந்தும் காண வல்லாரோ மாட மாளிகை சூழ் தில்லை அம்பலத்து ஆடி பாதம் என் நெஞ்சுள் இருக்கவே மேல் #1081 மதுர வாய்மொழி மங்கை ஓர் பங்கினன் சதுரன் சிற்றம்பலவன் திரு மலை அதிர ஆர்த்து எடுத்தான் முடி பத்து இற மிதிகொள் சேவடி சென்று அடைந்து உய்ம்-மினே மேல் 2. கோயில் - திருக்குறுந்தொகை #1082 பனை கை மும்மத வேழம் உரித்தவன் நினைப்பவர் மனம் கோயிலா கொண்டவன் அனைத்து வேடம் ஆம் அம்பல கூத்தனை தினைத்தனை பொழுதும் மறந்து உய்வனோ மேல் #1083 தீர்த்தனை சிவனை சிவலோகனை மூர்த்தியை முதல் ஆய ஒருவனை பார்த்தனுக்கு அருள்செய்த சிற்றம்பல கூத்தனை கொடியேன் மறந்து உய்வனோ மேல் #1084 கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி இட்டமாய் இடுகாட்டு எரி ஆடுவான் சிட்டர் வாழ் தில்லை அம்பல கூத்தனை எள்தனை பொழுதும் மறந்து உய்வனோ மேல் #1085 மாணி பால் கறந்து ஆட்டி வழிபட நீண் உலகு எலாம் ஆள கொடுத்த என் ஆணியை செம்பொன் அம்பலத்துள் நின்ற தாணுவை தமியேன் மறந்து உய்வனோ மேல் #1086 பித்தனை பெருங்காடு அரங்கா உடை முத்தனை முளை வெண் மதிசூடியை சித்தனை செம்பொன் அம்பலத்துள் நின்ற அத்தனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1087 நீதியை நிறைவை மறை நான்கு உடன் ஓதியை ஒருவர்க்கும் அறிவு ஒணா சோதியை சுடர் செம்பொனின் அம்பலத்து ஆதியை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1088 மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணினன் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனார் செய்ய மாது உறை சிற்றம்பலத்து எங்கள் ஐயனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1089 முழுதும் வான்_உலகத்து உள தேவர்கள் தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால் எழுதி மேய்ந்த சிற்றம்பல கூத்தனை இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ மேல் #1090 கார் உலாம் மலர் கொன்றை அம் தாரனை வார் உலாம் முலை மங்கை மணாளனை தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ மேல் #1091 ஓங்கு மால் வரை ஏந்தலுற்றான் சிரம் வீங்கி விம்முற ஊன்றிய தாளினான் தேங்கு நீர் வயல் சூழ் தில்லை கூத்தனை பாங்கு இலா தொண்டனேன் மறந்து உய்வனோ மேல் 3. திருநெல்வாயில் திருவரத்துறை - திருக்குறுந்தொகை #1092 கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட உடல் உளானை ஒப்பாரி இலாத எம் அடல் உளானை அரத்துறை மேவிய சுடர் உளானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1093 கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை விரும்பு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா அரும்பு ஒப்பானை அரத்துறை மேவிய சுரும்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1094 ஏறு ஒப்பானை எல்லா உயிர்க்கும் இறை வேறு ஒப்பானை விண்ணோரும் அறிகிலா ஆறு ஒப்பானை அரத்துறை மேவிய ஊறு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1095 பரப்பு ஒப்பானை பகல் இருள் நன் நிலா இரப்பு ஒப்பானை இள மதி சூடிய அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய சுரப்பு ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1096 நெய் ஒப்பானை நெய்யில் சுடர் போல்வது ஓர் மெய் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் ஐ ஒப்பானை அரத்துறை மேவிய கை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1097 நிதி ஒப்பானை நிதியின் கிழவனை விதி ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் அதி ஒப்பானை அரத்துறை மேவிய கதி ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1098 புனல் ஒப்பானை பொருந்தலர்-தம்மையே மினல் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் அனல் ஒப்பானை அரத்துறை மேவிய கனல் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1099 பொன் ஒப்பானை பொன்னில் சுடர் போல்வது ஓர் மின் ஒப்பானை விண்ணோரும் அறிகிலார் அன் ஒப்பானை அரத்துறை மேவிய தன் ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1100 காழியானை கன விடை ஊரும் மெய் வாழியானை வல்லோரும் என்ற இன்னவர் ஆழியான் பிரமற்கும் அரத்துறை ஊழியானை கண்டீர் நாம் தொழுவதே மேல் #1101 கலை ஒப்பானை கற்றார்க்கு ஓர் அமுதினை மலை ஒப்பானை மணி முடி ஊன்றிய அலை ஒப்பானை அரத்துறை மேவிய நிலை ஒப்பானை கண்டீர் நாம் தொழுவதே மேல் 4. திருஅண்ணாமலை - திருக்குறுந்தொகை #1102 வட்டனை மதிசூடியை வானவர் சிட்டனை திரு அண்ணாமலையனை இட்டனை இகழ்ந்தார் புரம் மூன்றையும் அட்டனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1103 வானனை மதி சூடிய மைந்தனை தேனனை திரு அண்ணாமலையனை ஏனனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த ஆனனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1104 மத்தனை மத யானை உரித்த எம் சிந்தனை திரு அண்ணாமலையனை முத்தனை முனிந்தார் புரம் மூன்று எய்த அத்தனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1105 காற்றனை கலக்கும் வினை போய் அற தேற்றனை திரு அண்ணாமலையனை கூற்றனை கொடியார் புரம் மூன்று எய்த ஆற்றனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1106 மின்னனை வினை தீர்த்து எனை ஆட்கொண்ட தென்னனை திரு அண்ணாமலையனை என்னனை இகழ்ந்தார் புரம் மூன்று எய்த அன்னனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1107 மன்றனை மதியாதவன் வேள்வி மேல் சென்றனை திரு அண்ணாமலையனை வென்றனை வெகுண்டார் புரம் மூன்றையும் கொன்றனை கொடியேன் மறந்து உய்வனோ மேல் #1108 வீரனை விடம் உண்டனை விண்ணவர் தீரனை திரு அண்ணாமலையனை ஊரனை உணரார் புரம் மூன்று எய்த ஆரனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1109 கருவினை கடல்-வாய் விடம் உண்ட எம் திருவினை திரு அண்ணாமலையனை உருவினை உணரார் புரம் மூன்று எய்த அருவினை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1110 அருத்தனை அரவு ஐந்தலை நாகத்தை திருத்தனை திரு அண்ணாமலையனை கருத்தனை கடியார் புரம் மூன்று எய்த வருத்தனை அடியேன் மறந்து உய்வனோ மேல் #1111 அரக்கனை அலற விரல் ஊன்றிய திருத்தனை திரு அண்ணாமலையனை இரக்கமாய் என் உடல் உறு நோய்களை துரக்கனை தொண்டனேன் மறந்து உய்வனோ மேல் 5. திருஅண்ணாமலை - திருக்குறுந்தொகை #1112 பட்டி ஏறு உகந்து ஏறி பல இலம் இட்டம் ஆக இரந்து உண்டு உழிதரும் அட்டமூர்த்தி அண்ணாமலை கைதொழ கெட்டு போம் வினை கேடு இல்லை காண்-மினே மேல் #1113 பெற்றம் ஏறுவர் பெய் பலிக்கு ஏன்று அவர் சுற்றமா மிகு தொல்புகழாளொடும் அற்றம் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ நல் தவத்தொடு ஞானத்து இருப்பரே மேல் #1114 பல் இல் ஓடு கை ஏந்தி பல இலம் ஒல்லை சென்று உணங்கல் கவர்வார் அவர் அல்லல் தீர்க்கும் அண்ணாமலை கைதொழ நல்ல ஆயின நம்மை அடையுமே மேல் #1115 பாடி சென்று பலிக்கு என்று நின்றவர் ஓடி போயினர் செய்வது ஒன்று என்-கொலோ ஆடி பாடி அண்ணாமலை கைதொழ ஓடி போகும் நம் மேலை வினைகளே மேல் #1116 தேடி சென்று திருந்து அடி ஏத்து-மின் நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் ஆடி பாடி அண்ணாமலை கைதொழ ஓடி போம் நமது உள்ள வினைகளே மேல் #1117 கட்டி ஒக்கும் கரும்பினிடை துணி வெட்டி வீணைகள் பாடும் விகிர்தனார் அட்டமூர்த்தி அண்ணாமலை மேவிய நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே மேல் #1118 கோணிக்கொண்டையர் வேடம் முன் கொண்டவர் பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் ஆணிப்பொன்னின் அண்ணாமலை கைதொழ பேணி நின்ற பெருவினை போகுமே மேல் #1119 கண்டம்தான் கறுத்தான் காலன் ஆருயிர் பண்டு கால்கொடு பாய்ந்த பரமனார் அண்டத்து ஓங்கும் அண்ணாமலை கைதொழ விண்டு போகும் நம் மேலை வினைகளே மேல் #1120 முந்தி சென்று முப்போதும் வணங்கு-மின் அந்தி வாய் ஒளியான்-தன் அண்ணாமலை சிந்தியா எழுவார் வினை தீர்த்திடும் கந்த மா மலர் சூடும் கருத்தனே மேல் #1121 மறையினானொடு மாலவன் காண்கிலா நிறையும் நீர்மையுள் நின்று அருள்செய்தவன் உறையும் மாண்பின் அண்ணாமலை கைதொழ பறையும் நாம் செய்த பாவங்கள் ஆனவே மேல் 6. திருஆரூர் - திருக்குறுந்தொகை #1122 எப்போதும் இறையும் மறவாது நீர் முப்போதும் பிரமன் தொழ நின்றவன் செப்பு ஓதும் பொனின் மேனி சிவன் அவன் அ போதைக்கு அஞ்சல் என்னும் ஆரூரனே மேல் #1123 சடையின் மேலும் ஓர் தையலை வைத்தவர் அடைகிலா அரவை அரை ஆர்த்தவர் படையின் நேர் தடம் கண் உமை பாகமா அடைவர் போல் இடுகாடர் ஆரூரரே மேல் #1124 விண்ட வெண் தலையே கலன் ஆகவே கொண்டு அகம் பலி தேரும் குழகனார் துண்ட வெண் பிறை வைத்த இறையவர் அண்டவாணர்க்கு அருளும் ஆரூரரே மேல் #1125 விடையும் ஏறுவர் வெண் தலையில் பலி கடைகள்-தோறும் திரியும் எம் கண்நுதல் உடையும் சீரை உறைவது காட்டிடை அடைவர் போல் அரங்கு ஆக ஆரூரரே மேல் #1126 துளை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் வளைக்கையாளை ஒர்பாகம் மகிழ்வு எய்தி திளைக்கும் திங்கள் சடையின் திசை முழுது அளக்கும் சிந்தையர் போலும் ஆரூரரே மேல் #1127 பண்ணின் இன்மொழியாளை ஒர்பாகமா விண்ணின் ஆர் விளங்கும் மதி சூடியே சுண்ண நீறு மெய் பூசி சுடலையின் அண்ணி ஆடுவர் போலும் ஆரூரரே மேல் #1128 மட்டு வார்குழலாளொடு மால் விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார் கட்டுவாங்கம் கனல் மழு மான்-தனோடு அட்டம் ஆம் புயம் ஆகும் ஆரூரரே மேல் #1129 தேய்ந்த திங்கள் கமழ் சடையன் கனல் ஏந்தி எல்லியுள் ஆடும் இறைவனார் காய்ந்து காமனை நோக்கின கண்ணினார் ஆய்ந்த நான்மறை ஓதும் ஆரூரரே மேல் #1130 உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு இண்டை செம் சடை வைத்த இயல்பினான் கொண்ட கோவண ஆடையன் கூர் எரி அண்டவாணர் அடையும் ஆரூரரே மேல் #1131 மாலும் நான்முகனும் அறிகிற்கிலார் காலன் ஆய அவனை கடந்திட்டு சூலம் மான் மறி ஏந்திய கையினார் ஆலம் உண்டு அழகு ஆய ஆரூரரே மேல் 7. திருஆரூர் - திருக்குறுந்தொகை #1132 கொக்கரை குழல் வீணை கொடுகொட்டி பக்கமே பகுவாயன பூதங்கள் ஒக்க ஆடல் உகந்து உடன் கூத்தராய் அக்கினோடு அரவு ஆர்ப்பர் ஆரூரரே மேல் #1133 எந்த மா தவம் செய்தனை நெஞ்சமே பந்தம் வீடு அவை ஆய பராபரன் அந்தம் இல் புகழ் ஆரூர் அரநெறி சிந்தையுள்ளும் சிரத்துள்ளும் தங்கவே மேல் #1134 வண்டு உலாம் மலர் கொண்டு வளர் சடைக்கு இண்டை மாலை புனைந்தும் இராப்பகல் தொண்டர் ஆகி தொடர்ந்து விடாதவர்க்கு அண்டம் ஆளவும் வைப்பர் ஆரூரரே மேல் #1135 துன்பு எலாம் அற நீங்கி சுபத்தராய் என்பு எலாம் நெக்கு இராப்பகல் ஏத்தி நின்று இன்பராய் நினைந்து என்றும் இடையறா அன்பர் ஆமவர்க்கு அன்பர் ஆரூரரே மேல் #1136 முருட்டு மெத்தையில் முன் கிடத்தா முனம் அரட்டர் ஐவரை ஆசு அறுத்திட்டு நீர் முரண் தடித்த அ தக்கன்-தன் வேள்வியை அரட்டு அடக்கி-தன் ஆரூர் அடை-மினே மேல் #1137 எம் ஐயார் இலை யானும் உளேன்அலேன் எம்மை யாரும் இது செய வல்லரே அம்மை யார் எனக்கு என்றுஎன்று அரற்றினேற்கு அம்மை ஆர தந்தார் ஆரூர் ஐயரே மேல் #1138 தண்ட ஆளியை தக்கன்-தன் வேள்வியை செண்டு அது ஆடிய தேவர்_அகண்டனை கண்டுகண்டு இவள் காதலித்து அன்பு அதுவாய் கொண்டி ஆயின ஆறு என்தன் கோதையே மேல் #1139 இவள் நமை பல பேச தொடங்கினாள் அவணம் அன்று எனில் ஆரூர் அரன் எனும் பவனி வீதிவிடங்கனை கண்டு இவள் தவனி ஆயின ஆறு என்தன் தையலே மேல் #1140 நீரை செம் சடை வைத்த நிமலனார் கார் ஒத்தம் மிடற்றர் கனல் வாய் அரா ஆரத்தர் உறையும் அணி ஆரூரை தூரத்தே தொழுவார் வினை தூளியே மேல் #1141 உள்ளமே ஒன்று உறுதி உரைப்பன நான் வெள்ளம் தாங்கும் விரி சடை வேதியன் அள்ளல் நீர் வயல் ஆரூர் அமர்ந்த எம் வள்ளல் சேவடி வாழ்த்தி வணங்கிடே மேல் #1142 விண்ட மா மலர் மேல் உறைவானொடும் கொண்டல்_வண்ணனும் கூடி அறிகிலா அண்டவாணன்-தன் ஆரூர் அடி தொழ பண்டை வல்வினை நில்லா பறையுமே மேல் #1143 மை உலாவிய கண்டத்தன் அண்டத்தன் கை உலாவிய சூலத்தன் கண்நுதல் ஐயன் ஆரூர் அடி தொழுவார்க்கு எலாம் உய்யல் ஆம் அல்லல் ஒன்று இலை காண்-மினே மேல் 8. திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை #1144 பாறு அலைத்த படு வெண் தலையினன் நீறு அலைத்த செம்மேனியன் நேர்_இழை கூறு அலைத்த மெய் கோள் அரவு ஆட்டிய ஆறு அலைத்த சடை அன்னியூரனே மேல் #1145 பண்டு ஒத்த மொழியாளை ஒர்பாகமாய் இண்டை செஞ்சடையன் இருள் சேர்ந்தது ஓர் கண்டத்தன் கரியின் உரி போர்த்தவன் அண்டத்து அப்புறத்தான் அன்னியூரனே மேல் #1146 பரவி நாளும் பணிந்தவர்-தம் வினை துரவை ஆக துடைப்பவர்-தம் இடம் குரவம் நாறும் குழல் உமை கூறராய் அரவம் ஆட்டுவர் போல் அன்னியூரரே மேல் #1147 வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர் சோதி வெண் பிறை துன்று சடைக்கு அணி நாதர் நீதியினால் அடியார்-தமக்கு ஆதி ஆகி நின்றார் அன்னியூரரே மேல் #1148 எம்பிரான் இமையோர்கள்-தமக்கு எலாம் இன்பர் ஆகி இருந்த எம் ஈசனார் துன்ப வல்வினை போக தொழுமவர்க்கு அன்பர் ஆகி நின்றார் அன்னியூரரே மேல் #1149 வெந்த நீறு மெய் பூசும் நல் மேனியர் கந்த மா மலர் சூடும் கருத்தினர் சிந்தை ஆர் சிவனார் செய்த தீ_வண்ணர் அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே மேல் #1150 ஊனை ஆர் தலையில் பலி கொண்டு உழல் வானை வானவர் தாங்கள் வணங்கவே தேனை ஆர் குழலாளை ஒர்பாகமா ஆனை ஈர் உரியார் அன்னியூரரே மேல் #1151 காலை போய் பலி தேர்வர் கண்ணார் நெற்றி மேலை வானவர் வந்து விரும்பிய சோலை சூழ் புறங்காடு அரங்கு ஆகவே ஆலின் கீழ் அறத்தார் அன்னியூரரே மேல் #1152 எரி கொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய் திரியும் மூஎயில் தீ எழ செற்றவர் கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு அரியர் ஆகி நின்றார் அன்னியூரரே மேல் #1153 வஞ்ச அரக்கன் கரமும் சிரத்தொடும் அஞ்சும் அஞ்சும் ஓர் ஆறும் நான்கும் இற பஞ்சின் மெல் விரலால் அடர்த்து ஆய்_இழை அஞ்சல்அஞ்சல் என்றார் அன்னியூரரே மேல் 9. திருமறைக்காடு - திருக்குறுந்தொகை #1154 ஓதம் மால் கடல் பரவி உலகு எலாம் மாதரார் வலம்கொள் மறைக்காடரை காதல்செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்த பறையும் நம் பாவமே மேல் #1155 பூக்கும் தாழை புறணி அருகு எலாம் ஆக்கம்தான் உடை மா மறைக்காடரோ ஆர்க்கும் காண்பு அரியீர் அடியார்-தம்மை நோக்கி காண்பது நும் பணி செய்யிலே மேல் #1156 புன்னை ஞாழல் புறணி அருகு எலாம் மன்னினார் வலம்கொள் மறைக்காடரோ அன்ன மென்நடையாளை ஒர்பாகமா சின்ன வேடம் உகப்பது செல்வமே மேல் #1157 அட்ட மா மலர் சூடி அடும்பொடு வட்ட புன் சடை மா மறைக்காடரோ நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் இட்டம் ஆக இருக்கும் இடம் இதே மேல் #1158 நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும் மெய்யினார் வலம்கொள் மறைக்காடரோ தையல் பாகம் கொண்டீர் கவர் புன் சடை பைதல் வெண் பிறை பாம்பு உடன் வைப்பதே மேல் #1159 துஞ்சும்போதும் துயில் இன்றி ஏத்துவார் வஞ்சு இன்றி வலம்கொள் மறைக்காடரோ பஞ்சின் மெல் அடி பாவை பலி கொணர்ந்து அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே மேல் #1160 திருவினார் செல்வம் மல்கு விழா அணி மருவினார் வலம்கொள் மறைக்காடரோ உருவினாள் உமை மங்கை ஒர்பாகமாய் மருவினாய் கங்கையை சென்னி-தன்னிலே மேல் #1161 சங்கு வந்து அலைக்கும் தடம் கானல்-வாய் வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ கங்கை செம் சடை வைப்பதும் அன்றியே அங்கையில் அனல் ஏந்தல் அழகிதே மேல் #1162 குறை காட்டான் விட்ட தேர் குத்த மா மலை இறை காட்டீ எடுத்தான் தலை ஈர்_ஐந்தும் மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான் இறை காட்டாய் எம்பிரான் உனை ஏத்தவே மேல் 10. திருமறைக்காடு - திருக்குறுந்தொகை #1163 பண்ணின் நேர் மொழியாள் உமை_பங்கரோ மண்ணினார் வலம்செய் மறைக்காடரோ கண்ணினால் உமை காண கதவினை திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே மேல் #1164 ஈண்டு செம் சடை ஆகத்துள் ஈசரோ மூண்ட கார் முகிலின் முறி_கண்டரோ ஆண்டுகொண்ட நீரே அருள்செய்திடும் நீண்ட மா கதவின் வலி நீக்குமே மேல் #1165 அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ பட்டம் கட்டிய சென்னி பரமரோ சட்ட இ கதவம் திறப்பிம்-மினே மேல் #1166 அரிய நான்மறை ஓதிய நாவரோ பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ விரி கொள் கோவண ஆடை விருத்தரோ பெரிய வான் கதவம் பிரிவிக்கவே மேல் #1167 மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ விலை இல் மா மணி_வண்ண உருவரோ தொலைவு இலா கதவம் துணை நீக்குமே மேல் #1168 பூக்கும் தாழை புறணி அருகு எலாம் ஆக்கும் தண் பொழில் சூழ் மறைக்காடரோ ஆர்க்கும் காண்பு அரியீர் அடிகேள் உமை நோக்கி காண கதவை திறவுமே மேல் #1169 வெந்த வெண் பொடி பூசும் விகிர்தரோ அந்தமில்லி அணி மறைக்காடரோ எந்தை நீ அடியார் வந்து இறைஞ்சிட இந்த மா கதவம் பிணை நீக்குமே மேல் #1170 ஆறு சூடும் அணி மறைக்காடரோ கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ ஏறு அது ஏறிய எம்பெருமான் இந்த மாறு இலா கதவம் வலி நீக்குமே மேல் #1171 சுண்ண வெண் பொடி பூசும் சுவண்டரோ பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ அண்ணல் ஆதி அணி மறைக்காடரோ திண்ணமா கதவம் திறப்பிம்-மினே மேல் #1172 விண் உளார் விரும்பி எதிர்கொள்ளவே மண் உளார் வணங்கும் மறைக்காடரோ கண்ணினால் உமை காண கதவினை திண்ணம் ஆக திறந்து அருள்செய்ம்-மினே மேல் #1173 அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர் இரக்கம் ஒன்று இலீர் எம்பெருமானிரே சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ சரக்க இ கதவம் திறப்பிம்-மினே மேல் 11. திருமீயச்சூர் - திருக்குறுந்தொகை #1174 தோற்றும் கோயிலும் தோன்றிய கோயிலும் வேற்று கோயில் பல உள மீயச்சூர் கூற்றம் பாய்ந்த குளிர் புன் சடை அரற்கு ஏற்றம் கோயில் கண்டீர் இளங்கோயிலே மேல் #1175 வந்தனை அடைக்கும் அடித்தொண்டர்கள் பந்தனை செய்து பாவிக்க நின்றவன் சிந்தனை திருத்தும் திரு மீயச்சூர் எம்தமை உடையார் இளங்கோயிலே மேல் #1176 பஞ்சமந்திரம் ஓதும் பரமனார் அஞ்ச ஆனை உரித்து அனல் ஆடுவார் நெஞ்சம் வாழி நினைந்து இரு மீயச்சூர் எம்தமை உடையார் இளங்கோயிலே மேல் #1177 நாறு மல்லிகை கூவிளம் செண்பகம் வேறுவேறு விரித்த சடையிடை ஆறு கொண்டு உகந்தான் திரு மீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே மேல் #1178 வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ண கனல் விரித்து ஆடுவர் செவ்வ வண்ணம் திகழ் திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரான் இளங்கோயிலே மேல் #1179 பொன் அம் கொன்றையும் பூ அணி மாலையும் பின்னும் செம் சடை மேல் பிறை சூடிற்று மின்னும் மேகலையாளொடு மீயச்சூர் இன்ன நாள் அகலார் இளங்கோயிலே மேல் #1180 படை கொள் புதத்தன் பைம் கொன்றைத்தாரினன் சடை கொள் வெள்ளத்தன் சாந்த வெண்நீற்றினன் விடை கொள் ஊர்தியினான் திரு மீயச்சூர் இடைகொண்டு ஏத்த நின்றார் இளங்கோயிலே மேல் #1181 ஆறு கொண்ட சடையினர் தாமும் ஓர் வேறு கொண்டது ஒர் வேடத்தராகிலும் கூறு கொண்டு உகந்தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டு உகந்தார் இளங்கோயிலே மேல் #1182 வேதத்தான் என்பர் வேள்வி உளான் என்பர் பூதத்தான் என்பர் புண்ணியன்-தன்னையே கீதத்தான் கிளரும் திரு மீயச்சூர் ஏதம் தீர்க்க நின்றார் இளங்கோயிலே மேல் #1183 கடு_கண்டன் கயிலாய மலை-தனை எடுக்கலுற்ற இராவணன் ஈடு அற விடுக்கண் இன்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்க நின்றார் இளங்கோயிலே மேல் 12. திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை #1184 கரைந்து கைதொழுவாரையும் காதலன் வரைந்து வைது எழுவாரையும் வாடலன் நிரந்த பாரிடத்தோடு அவர் நித்தலும் விரைந்து போவது வீழிமிழலைக்கே மேல் #1185 ஏற்று வெல் கொடி ஈசன் தன் ஆதிரை நாற்றம் சூடுவர் நன் நறும் திங்களார் நீற்று சந்தன வெள்ளை விரவலார் வேற்று கோலம் கொள் வீழிமிழலையே மேல் #1186 புனை பொன் சூலத்தன் போர் விடைஊர்தியான் வினை வெல் நாகத்தன் வெண் மழுவாளினான் நினைய நின்றவன் ஈசனையே எனா வினையிலார் தொழும் வீழிமிழலையே மேல் #1187 மாடத்து ஆடும் மனத்துடன் வைத்தவர் கோடத்தார் குருக்கேத்திரத்தார் பலர் பாடத்தார் பழிப்பார் பழிப்புஇல்லது ஓர் வேடத்தார் தொழும் வீழிமிழலையே மேல் #1188 எடுத்த வெல் கொடி ஏறு உடையான் தமர் உடுப்பர் கோவணம் உண்பது பிச்சையே கெடுப்பது ஆவது கீழ் நின்ற வல்வினை விடுத்து போவது வீழிமிழலைக்கே மேல் #1189 குழலை யாழ் மொழியார் இசை வேட்கையால் உழலை யாக்கையை ஊணும் உணர்விலீர் தழலை நீர் மடி கொள்ளன்-மின் சாற்றினோம் மிழலையான் அடி சார விண் ஆள்வரே மேல் #1190 தீரன் தீத்திரளன் சடை தங்கிய நீரன் ஆடிய நீற்றன் வண்டு ஆர் கொன்றை தாரன் மாலையன் தண் நறுங்கண்ணியன் வீரன் வீழிமிழலை விகிர்தனே மேல் #1191 எரியினார் இறையார் இடுகாட்டிடை நரியினார் பரியா மகிழ்கின்றது ஓர் பெரியனார் தம் பிறப்பொடு சாதலை விரியினார் தொழும் வீழிமிழலையே மேல் #1192 நீண்ட சூழ் சடை மேல் ஒர் நிலா மதி காண்டு சேவடி மேல் ஒர் கனை கழல் வேண்டுவார் அவர் வீதி புகுந்திலர் மீண்டும் போவது வீழிமிழலைக்கே மேல் #1193 பாலை யாழொடு செவ்வழி பண் கொள மாலை வானவர் வந்து வழிபடும் ஆலை ஆர் அழல் அந்தணர் ஆகுதி வேலையார் தொழும் வீழிமிழலையே மேல் #1194 மழலை ஏற்று மணாளன் திருமலை சுழல ஆர்த்து எடுத்தான் முடி தோள் இற கழல் கொள் காலில் திரு விரல் ஊன்றலும் மிழலையான் அடி வாழ்க என விட்டதே மேல் 13. திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை #1195 என் பொனே இமையோர் தொழு பைம் கழல் நன் பொனே நலம் தீங்கு அறிவு ஒன்று இலேன் செம்பொனே திரு வீழிமிழலையுள் அன்பனே அடியேனை குறிக்கொளே மேல் #1196 கண்ணினால் களி கூர கையால் தொழுது எண்ணும் ஆறு அறியாது இளைப்பேன்-தனை விண்உளார் தொழும் வீழிமிழலையுள் அண்ணலே அடியேனை குறிக்கொளே மேல் #1197 ஞாலமே விசும்பே நலம் தீமையே காலமே கருத்தே கருத்தால் தொழும் சீலமே திரு வீழிமிழலையுள் கோலமே அடியேனை குறிக்கொளே மேல் #1198 முத்தனே முதல்வா முகிழும் முளை ஒத்தனே ஒருவா உரு ஆகிய சித்தனே திரு வீழிமிழலையுள் அத்தனே அடியேனை குறிக்கோளே மேல் #1199 கருவனே கருவாய் தெளிவார்க்கு எலாம் ஒருவனே உயிர்ப்பாய் உணர்வாய் நின்ற திருவனே திரு வீழிமிழலையுள் குருவனே அடியேனை குறிக்கொளே மேல் #1200 காத்தனே பொழில் ஏழையும் காதலால் ஆத்தனே அமரர்க்கு அயன்-தன் தலை சேர்ந்தனே திரு வீழிமிழலையுள் கூத்தனே அடியேனை குறிக்கொளே மேல் #1201 நீதி வானவர் நித்தல் நியமம் செய்து ஓதி வானவரும் உணராதது ஓர் வேதியா விகிர்தா திரு வீழியுள் ஆதியே அடியேனை குறிக்கொளே மேல் #1202 பழகி நின் அடி சூடிய பாலனை கழகின் மேல் வைத்த காலனை சாடிய அழகனே அணி வீழிமிழலையுள் குழகனே அடியேனை குறிக்கொளே மேல் #1203 அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் விண்ட வான் பொழில் வீழிமிழலையுள் கொண்டனே அடியேனை குறிக்கொளே மேல் #1204 ஒருத்தன் ஓங்கலை தாங்கலுற்றான் உரம் வருத்தினாய் வஞ்சனேன் மனம் மன்னிய திருத்தனே திரு வீழிமிழலையுள் அருத்தனே அடியேனை குறிக்கொளே மேல் 14. திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை #1205 பாசம் ஒன்று இலராய் பல பத்தர்கள் வாசம் நாள் மலர் கொண்டு அடி வைகலும் ஈசன் எம்பெருமான் இடைமருதினில் பூசம் நாம் புகுதும் புனல் ஆடவே மேல் #1206 மறையின் நாள் மலர் கொண்டு அடி வானவர் முறையினால் முனிகள் வழிபாடுசெய் இறைவன் எம்பெருமான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே மேல் #1207 கொன்றை மாலையும் கூவிளம் மத்தமும் சென்று சேர திகழ் சடை வைத்தவன் என்றும் எந்தை பிரான் இடைமருதினை நன்று கைதொழுவார் வினை நாசமே மேல் #1208 இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மையே பிறவி துயர் நீத்திடும் எம்மை ஆளும் இடைமருதன் கழல் செம்மையே தொழுவார் வினை சிந்துமே மேல் #1209 வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும் கொண்டு அணிந்த சடை முடி கூத்தனார் எண் திசைக்கும் இடைமருதா என விண்டுபோய் அறும் மேலை வினைகளே மேல் #1210 ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார் கூறுவார் வினை தீர்க்கும் குழகனார் ஆறு செம் சடை வைத்த அழகனார்க்கு ஊறிஊறி உருகும் என் உள்ளமே மேல் #1211 விண்உளாரும் விரும்பப்படுபவர் மண்உளாரும் மதிக்கப்படுவர் எண்ணினார் பொழில் சூழ் இடைமருதினை நண்ணினாரை நண்ணா வினை நாசமே மேல் #1212 வெந்த வெண் பொடி பூசும் விகிர்தனார் கந்த மாலைகள் சூடும் கருத்தனார் எந்தை என் இடைமருதினில் ஈசனை சிந்தையால் நினைவார் வினை தேயுமே மேல் #1213 வேதம் ஓதும் விரி சடை அண்ணலார் பூதம் பாட நின்று ஆடும் புனிதனார் ஏதம் தீர்க்கும் இடைமருதா என்று பாதம் ஏத்த பறையும் நம் பாவமே மேல் #1214 கனியினும் கட்டி பட்ட கரும்பினும் பனி மலர் குழல் பாவை நல்லாரினும் தனி முடி கவித்து ஆளும் அரசினும் இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதனே மேல் #1215 முற்றிலா மதி சூடும் முதல்வனார் ஒற்றினார் மலையால் அரக்கன் முடி எற்றின் ஆர் கொடியார் இடைமருதினை பற்றினாரை பற்றா வினை பாவமே மேல் 15. திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை #1216 பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் வைகும் அயல் எலாம் இறைவன் எங்கள் பிரான் இடைமருதினில் உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே மேல் #1217 மனத்துள் மாயனை மாசறு சோதியை புனிற்று பிள்ளை வெள்ளை மதிசூடியை எனக்கு தாயை எம்மான் இடைமருதனை நினைத்திட்டு ஊறி நிறைந்தது என் உள்ளமே மேல் #1218 வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும் கொண்டு அணிந்த சடை முடி கூத்தனை எண் திசைக்கும் இடைமருதா என விண்டுபோய் அறும் மேலை வினைகளே மேல் #1219 துணை இலாமையில் தூங்கு இருள் பேய்களோடு அணையல் ஆவது எமக்கு அரிதே எனா இணை இலா இடைமாமருதில் எழு பணையில் ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே மேல் #1220 மண்ணை உண்ட மால் காணான் மலர் அடி விண்ணை விண்டு அயன் காணான் வியன் முடி மொண்ணை மா மருதா என்று என் மொய் குழல் பண்ணை ஆயமும் தானும் பயிலுமே மேல் #1221 மங்கை காண கொடார் மண மாலையை கங்கை காண கொடார் முடி கண்ணியை நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே மேல் 16. திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை #1222 மறையும் ஓதுவர் மான் மறி கையினர் கறை கொள் கண்டம் உடைய கபாலியார் துறையும் போகுவர் தூய வெண்நீற்றினர் பிறையும் சூடுவர் பேரெயிலாளரே மேல் #1223 கணக்குஇலாரையும் கற்று வல்லாரையும் வணக்கு இலா நெறி கண்டு கொண்டாரையும் தணக்குவார் தணிப்பார் எப்பொருளையும் பிணக்குவார் அவர் பேரெயிலாளரே மேல் #1224 சொரிவிப்பார் மழை சூழ் கதிர் திங்களை விரிவிப்பார் வெயில் பட்ட விளக்கு ஒளி எரிவிப்பார் தணிப்பார் எப்பொருளையும் பிரிவிப்பார் அவர் பேரெயிலாளரே மேல் #1225 செறுவிப்பார் சிலையால் மதில் தீர்த்தங்கள் உறுவிப்பார் பல பத்தர்கள் ஊழ்வினை அறுவிப்பார் அது அன்றியும் நல்வினை பெறுவிப்பார் அவர் பேரெயிலாளரே மேல் #1226 மற்றையார் அறியார் மழுவாளினார் பற்றி ஆட்டி ஓர் ஐந்தலை பாம்பு அரை சுற்றியார் அவர் தூ நெறியால் மிகு பெற்றியார் அவர் பேரெயிலாளரே மேல் #1227 திருக்கு வார் குழல் செல்வன சேவடி இருக்கு வாய்மொழியால் தனை ஏத்துவார் சுருக்குவார் துயர் தோற்றங்கள் ஆற்றற பெருக்குவார் அவர் பேரெயிலாளரே மேல் #1228 முன்னையார் மயில் ஊர்தி முருகவேள் தன் ஐயார் எனில் தான் ஓர் தலைமகன் என்னை ஆளும் இறையவன் எம்பிரான் பின்னையார் அவர் பேரெயிலாளரே மேல் #1229 உழைத்தும் துள்ளியும் உள்ளத்துளே உரு இழைத்தும் எந்தை பிரான் என்று இராப்பகல் அழைக்கும் அன்பினர் ஆய அடியவர் பிழைப்பு நீக்குவர் பேரெயிலாளரே மேல் #1230 நீர் உலாம் நிமிர் புன் சடையா எனா ஏர் உலாவு அநங்கன் திறல் வாட்டிய வார் உலாம் வன மென்முலையாளொடும் பேர் உளார் அவர் பேரெயிலாளரே மேல் #1231 பாணி ஆர் படுதம் பெயர்ந்து ஆடுவர் தூணி ஆர் விசயற்கு அருள்செய்தவர் மாணியாய் மண் அளந்தவன் நான்முகன் பேணியார் அவர் பேரெயிலாளரே மேல் #1232 மதத்த வாள் அரக்கன் மணி புட்பகம் சிதைக்கவே திரு மா மலை கீழ் புக்கு பதைத்து அங்கு ஆர்த்து எடுத்தான் பத்து நீள் முடி பிதக்க ஊன்றிய பேரெயிலாளரே மேல் 17. திருவெண்ணி - திருக்குறுந்தொகை #1233 முத்தினை பவளத்தை முளைத்த எம் தொத்தனை சுடரை சுடர் போல் ஒளி பித்தனை கொலும் நஞ்சினை வானவர் நித்தனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1234 வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் கண்ணி தொத்த சடையர் கபாலியார் எண்ணி தம்மை நினைந்திருந்தேனுக்கு அண்ணித்திட்டு அமுது ஊறும் என் நாவுக்கே மேல் #1235 காற்றினை கனலை கதிர் மா மணி நீற்றினை நினைப்பார் வினை நீக்கிடும் கூற்றினை உதைத்திட்ட குணம் உடை வீற்றினை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1236 நல்லனை திகழ் நான்மறைஓதியை சொல்லனை சுடரை சுடர் போல் ஒளிர் கல்லனை கடி மா மதில் மூன்று எய்த வில்லனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1237 சுடரை போல் ஒளிர் சுண்ண வெண்நீற்றனை அடரும் சென்னியில் வைத்த அமுதனை படரும் செம் சடை பால் மதிசூடியை இடரை நீக்கியை யான் கண்ட வெண்ணியே மேல் #1238 பூதநாதனை பூம் புகலூரனை தாது என தவழும் மதிசூடியை நாதனை நல்ல நான்மறைஓதியை வேதனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1239 ஒருத்தியை ஒருபாகத்து அடக்கியும் பொருத்திய புனிதன் புரி புன் சடை கருத்தனை கறை_கண்டனை கண்நுதல் நிருத்தனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1240 சடையனை சரி கோவண ஆடை கொண்டு உடையனை உணர்வார் வினை தீர்த்திடும் படையனை மழுவாளொடு பாய்தரும் விடையனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1241 பொருப்பனை புனலாளொடு புன் சடை அருப்பனை இளம் திங்கள்அம்கண்ணியான் பருப்பதம் பரவி தொழும் தொண்டர்கள் விருப்பனை நெருநல் கண்ட வெண்ணியே மேல் #1242 சூல வஞ்சனை வல்ல எம் சுந்தரன் கோலமா அருள்செய்தது ஓர் கொள்கையான் காலன் அஞ்ச உதைத்து இருள் கண்டம் ஆம் வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே மேல் #1243 இலையின் ஆர் கொன்றை சூடிய ஈசனார் மலையினால் அரக்கன் திறல் வாட்டினார் சிலையினால் மதில் எய்தவன் வெண்ணியை தலையினால் தொழுவார் வினை தாவுமே மேல் 18. திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை #1244 முற்றிலா முலையாள் இவளாகிலும் அற்றம் தீர்க்கும் அறிவு இலளாகிலும் கற்றை செஞ்சடையன் கடம்பந்துறை பெற்றம் ஊர்தி என்றான் எங்கள் பேதையே மேல் #1245 தனகு இருந்தது ஒர் தன்மையராகிலும் முனகு தீர தொழுது எழு-மின்களோ கனக புன்சடையான் கடம்பந்துறை நினைய வல்லார் நீள் விசும்பு ஆள்வரே மேல் #1246 ஆரியம் தமிழோடு இசை ஆனவன் கூரிய குணத்தார் குறி நின்றவன் காரிகை உடையான் கடம்பந்துறை சீர் இயல் பத்தர் சென்று அடை-மின்கள் மேல் #1247 பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நல் மலரான் பல தேவரும் கண்ணனும் அறியான் கடம்பந்துறை நண்ண நம் வினை ஆயின நாசமே மேல் #1248 மறை கொண்ட மனத்தானை மனத்துளே நிறை கொண்ட நெஞ்சின் உள்ளுற வைம்-மினோ கறை_கண்டன் உறையும் கடம்பந்துறை சிறைகொண்ட வினை தீர தொழு-மினே மேல் #1249 நங்கை பாகம் வைத்த நறும் சோதியை பங்கம் இன்றி பணிந்து எழு-மின்களோ கங்கை செஞ்சடையான் கடம்பந்துறை அங்கம் ஓதி அரன் உறைகின்றதே மேல் #1250 அரிய நான்மறை ஆறு அங்கமாய் ஐந்து புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் கரிய கண்டத்தினான் கடம்பந்துறை உரிய ஆறு நினை மட நெஞ்சமே மேல் #1251 பூ மென் கோதை உமை ஒருபாகனை ஓமம் செய்தும் உணர்-மின்கள் உள்ளத்தால் காமன் காய்ந்த பிரான் கடம்பந்துறை நாமம் ஏத்த நம் தீவினை நாசமே மேல் #1252 பார் அணங்கி வணங்கி பணி செய நாரணன் பிரமன் அறியாதது ஓர் காரணன் கடம்பந்துறை மேவிய ஆர் அணங்கு ஒருபால் உடை மைந்தனே மேல் #1253 நூலால் நன்றா நினை-மின்கள் நோய் கெட பால் ஆன் ஐந்து உடன் ஆடும் பரமனார் காலால் ஊன்று உகந்தான் கடம்பந்துறை மேலால் நாம் செய்த வல்வினை வீடுமே மேல் 19. திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை #1254 தளரும் கோள் அரவத்தொடு தண் மதி வளரும் கோல வளர் சடையார்க்கு இடம் கிளரும் பேர் இசை கின்னரம் பாட்டு அறா களரும் கார் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1255 வெல வலான் புலன் ஐந்தொடு வேதமும் சொல வலான் சுழலும் தடுமாற்றமும் அல வலான் மனை ஆர்ந்த மென்தோளியை கல வலான் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1256 பொய் தொழாது புலி உரியோன் பணி செய்து எழா எழுவார் பணி செய்து எழா வைது எழாது எழுவார் அவர் எள்க நீர் கைதொழா எழு-மின் கரக்கோயிலே மேல் #1257 துண்ணெனா மனத்தால் தொழு நெஞ்சமே பண்ணினால் முனம் பாடல் அது செய்தே எண்இலார் எயில் மூன்றும் எரித்த முக் கண்ணினான் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1258 சுனையுள் நீல மலர் அன கண்டத்தன் புனையும் பொன் நிற கொன்றை புரி சடை கனையும் பைங்கழலான் கரக்கோயிலை நினையும் உள்ளத்தவர் வினை நீங்குமே மேல் #1259 குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவர் அன்புடையார் எலாம் வணங்கி வான் மலர் கொண்டு அடி வைகலும் கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே மேல் #1260 பண்ணின் ஆர் மறை பல்பல பூசனை மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும் விண்ணினார்கள் வியக்கப்படுமவன் கண்ணின் ஆர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1261 அங்கை ஆர் அழல் ஏந்தி நின்று ஆடலன் மங்கை பாட மகிழ்ந்து உடன் வார் சடை கங்கையான் உறையும் கரக்கோயிலை தம் கையால் தொழுவார் வினை சாயுமே மேல் #1262 நன் கடம்பனை பெற்றவள் பங்கினன் தென் கடம்பை திரு கரக்கோயிலான் தன் கடன் அடியேனையும் தாங்குதல் என் கடன் பணி செய்து கிடப்பதே மேல் #1263 பணம் கொள் பாற்கடல் பாம்புஅணையானொடும் மணம் கமழ் மலர் தாமரையான் அவன் பிணங்கும் பேர் அழல் எம்பெருமாற்கு இடம் கணங்கள் போற்றி இசைக்கும் கரக்கோயிலே மேல் #1264 வரை-கண் நால்_அஞ்சு தோள் உடையான் தலை அரைக்க ஊன்றி அருள்செய்த ஈசனார் திரைக்கும் தண் புனல் சூழ் கரக்கோயிலை உரைக்கும் உள்ளத்தவர் வினை ஓயுமே மேல் 20. திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை #1265 ஒருவராய் இரு மூவரும் ஆயவன் குரு அது ஆய குழகன் உறைவிடம் பரு வரால் குதிகொள்ளும் பழனம் சூழ் கரு அது ஆம் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1266 வன்னி மத்தம் வளர் இளம் திங்கள் ஓர் கன்னியாளை கதிர் முடி வைத்தவன் பொன்னின் மல்கு புணர் முலையாளொடும் மன்னினான் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1267 இல்ல கோலமும் இந்த இளமையும் அல்லல் கோலம் அறுத்து உய வல்லிரே ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர் செல்வ கோயில் திரு கரக்கோயிலே மேல் #1268 வேறு சிந்தை இலாதவர் தீவினை கூறு செய்த குழகன் உறைவிடம் ஏறு செல்வத்து இமையவர்தாம் தொழும் ஆறு சேர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1269 திங்கள் தங்கிய செம் சடை மேலும் ஓர் மங்கை தங்கும் மணாளன் இருப்பிடம் பொங்கு சேர் மணல் புன்னையும் ஞாழலும் தெங்கு சேர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1270 மல்லை ஞாலத்து வாழும் உயிர்க்கு எலாம் எல்லை ஆன பிரானர் இருப்பிடம் கொல்லை முல்லை கொழும் தகை மல்லிகை நல்ல சேர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1271 தளரும் வாள் அரவத்தொடு தண் மதி வளரும் பொன் சடையார்க்கு இடம் ஆவது கிளரும் பேர் ஒலி கின்னரம் பாட்டு அறா களரி ஆர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1272 உற்றாராய் உறவு ஆகி உயிர்க்கு எலாம் பெற்றார் ஆய பிரானார் உறைவிடம் முற்றார் மும்மதில் எய்த முதல்வனார் கற்றார் சேர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1273 வெள்ளை நீறு அணி மேனியவர்க்கு எலாம் உள்ளம் ஆய பிரானார் உறைவிடம் பிள்ளை வெண் பிறை சூடிய சென்னியான் கள்வன் சேர் கடம்பூர் கரக்கோயிலே மேல் #1274 பரப்பு நீர் இலங்கைக்கு இறைவன் அவன் உரத்தினால் அடுக்கல் எடுக்கலுற இரக்கம் இன்றி இறை விரலால் தலை அரக்கினான் கடம்பூர் கரக்கோயிலே மேல் 21. திருஇன்னம்பர் - திருக்குறுந்தொகை #1275 என்னில் ஆரும் எனக்கு இனியார் இல்லை என்னிலும் இனியான் ஒருவன் உளன் என் உளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்கு என் உளே நிற்கும் இன்னம்பர் ஈசனே மேல் #1276 மட்டு உண்பார்கள் மடந்தையர் வாள் கணால் கட்டுண்பார்கள் கருதுவது என்-கொலோ தட்டி முட்டி தள்ளாடி தழுக்குழி எட்டுமூர்த்தியர் இன்னம்பர் ஈசனே மேல் #1277 கனலும் கண்ணியும் தண் மதியோடு உடன் புனலும் கொன்றையும் சூடும் புரி சடை அனலும் சூலமும் மான் மறி கையினர் எனலும் என் மனத்து இன்னம்பர் ஈசனே மேல் #1278 மழை-கண் மா மயில் ஆலும் மகிழ்ச்சியான் அழைக்கும் தன் அடியார்கள்-தம் அன்பினை குழைக்கும் தன்னை குறிக்கொள வேண்டியே இழைக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே மேல் #1279 தென்னவன் எனை ஆளும் சிவன் அவன் மன்னவன் மதி அம் மறை ஓதியான் முன்னம் அன்னவன் சேரலன் பூழியான் இன்னம் இன்புற்ற இன்னம்பர் ஈசனே மேல் #1280 விளக்கும் வேறுபட பிறர் உள்ளத்தில் அளக்கும் தன் அடியார் மனத்து அன்பினை குளக்கும் என்னை குறிக்கொள வேண்டியே இளக்கும் என் மனத்து இன்னம்பர் ஈசனே மேல் #1281 சடைக்கணாள் புனலாள் அனல் கையது ஓர் கடைக்கணால் மங்கை நோக்க இமவான்மகள் படை கணால் பருகப்படுவான் நமக்கு இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே மேல் #1282 தொழுது தூ மலர் தூவி துதித்து நின்று அழுது காமுற்று அரற்றுகின்றாரையும் பொழுது போக்கி புறக்கணிப்பாரையும் எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே மேல் #1283 விரியும் தண் இளவேனிலின் வெண் பிறை புரியும் காமனை வேவ புருவமும் திரியும் எல்லையில் மும்மதில் தீ எழுந்து எரிய நோக்கிய இன்னம்பர் ஈசனே மேல் #1284 சனியும் வெள்ளியும் திங்களும் ஞாயிறும் முனிவனாய் முடி பத்து உடையான்-தனை கனிய ஊன்றிய காரணம் என்-கொலோ இனியனாய் நின்ற இன்னம்பர் ஈசனே மேல் 22. திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை #1285 பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு ஆவணத்து உடையான் அடியார்களை தீ வண திருநீறு மெய் பூசி ஓர் கோவணத்து உடையான் குடமூக்கிலே மேல் #1286 பூத்து ஆடி கழியாதே நீர் பூமியீர் தீத்து ஆடி திறம் சிந்தையுள் வைம்-மினோ வேர்த்து ஆடும் காளி-தன் விசை தீர்க என்று கூத்து ஆடி உறையும் குடமூக்கிலே மேல் #1287 நங்கையாள் உமையாள் உறை நாதனார் அம் கையாளொடு அறுபதம் தாழ் சடை கங்கையாள் அவள் கன்னி எனப்படும் கொங்கையாள் உறையும் குடமூக்கிலே மேல் #1288 ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல் ஏதானும் இனிது ஆகும் இயமுனை சேதா ஏறு உடையான் அமர்ந்த இடம் கோதாவிரி உறையும் குடமூக்கிலே மேல் #1289 நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே வக்கரை உறைவானை வணங்கு நீ அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன் கொக்கரை உடையான் குடமூக்கிலே மேல் #1290 துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள் பிறவி நீங்க பிதற்று-மின் பித்தராய் மறவனாய் பார்த்தன் மேல் கணை தொட்ட எம் குறவனார் உறையும் குடமூக்கிலே மேல் #1291 தொண்டர் ஆக தொழுது பணி-மினோ பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர் விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரை கொண்டவன் உறையும் குடமூக்கிலே மேல் #1292 காமியம் செய்து காலம் கழியாதே ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்-மினோ சாமியோடு சரச்சுவதி அவள் கோமியும் உறையும் குடமூக்கிலே மேல் #1293 சிரமம் செய்து சிவனுக்கு பத்தராய் பரமனை பல நாளும் பயிற்று-மின் பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம் குரவனார் உறையும் குடமூக்கிலே மேல் #1294 அன்றுதான் அரக்கன் கயிலாயத்தை சென்று தான் எடுக்க உமை அஞ்சலும் நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே மேல் 23. திருநின்றியூர் - திருக்குறுந்தொகை #1295 கொடும் கண் வெண் தலை கொண்டு குறை விலை படும் கண் ஒன்று இலாரய் பலி தேர்ந்து உண்பர் நெடும் கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர் கடும் கை கூற்று உதைத்திட்ட கருத்தரே மேல் #1296 வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள் வளை நீதியே கொள-பாலது நின்றியூர் வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய் காதில் வெண் குழை வைத்த எம் கள்வரே மேல் #1297 புற்றின் ஆர் அரவம் புலி தோல் மிசை சுற்றினார் சுண்ண போர்வை கொண்டார் சுடர் நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் பற்றினாரை பற்றா வினை பாவமே மேல் #1298 பறையின் ஓசையும் பாடலின் ஓசையும் மறையின் ஓசையும் மல்கி அயல் எலாம் நிறையும் பூம் பொழில் சூழ் திரு நின்றியூர் உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே மேல் #1299 சுனையுள் நீலம் சுளியும் நெடுங்கணாள் இனையன் என்று என்றும் ஏசுவது என்-கொலோ நினையும் தண் வயல் சூழ்தரு நின்றியூர் பனையின் ஈர் உரி போர்த்த பரமே மேல் #1300 உரைப்ப கேண்-மின் நும் உச்சி உளான்-தனை நிரை பொன் மா மதில் சூழ் திரு நின்றியூர் உரை பொன்கற்றையர் ஆர் இவரோ எனில் திரைத்து பாடி திரிதரும் செல்வரே மேல் #1301 கன்றி ஊர் முகில் போலும் கரும் களிறு இன்றி ஏறலனால் இது என்-கொலோ நின்றியூர் பதி ஆக நிலாயவன் வென்றி ஏறு உடை எங்கள் விகிர்தனே மேல் #1302 நிலை இலா வெள்ளைமாலையன் நீண்டது ஓர் கொலை விலால் எயில் எய்த கொடியவன் நிலையின் ஆர் வயல் சூழ் திரு நின்றியூர் உரையினால் தொழுவார் வினை ஓயுமே மேல் #1303 அஞ்சியாகிலும் அன்புபட்டாகிலும் நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ இஞ்சி மா மதில் எய்து இமையோர் தொழ குஞ்சி வான் பிறை சூடிய கூத்தனே மேல் #1304 எளியனா மொழியா இலங்கைக்கு இறை களியினால் கயிலாயம் எடுத்தவன் நெளிய ஊன்ற வலான் அமர் நின்றியூர் அளியினால் தொழுவார் வினை அல்குமே மேல் 24. திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை #1305 ஒற்றி ஊரும் ஒளி மதி பாம்பினை ஒற்றி ஊரும் அ பாம்பும் அதனையே ஒற்றி ஊர ஒரு சடை வைத்தவன் ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே மேல் #1306 வாட்டம் ஒன்று உரைக்கும் மலையான்மகள் ஈட்டவே இருள் ஆடி இடு பிணக் காட்டில் ஓரி கடிக்க வெடித்தது ஓர் ஓட்டை வெண் தலை கை ஒற்றியூரரே மேல் #1307 கூற்று தண்டத்தை அஞ்சி குறிக்கொண்-மின் ஆற்று தண்டத்து அடக்கும் அரன் அடி நீற்று தண்டத்தராய் நினைவார்க்கு எலாம் ஊற்றுத்தண்டு ஒப்பர் போல் ஒற்றியூரரே மேல் #1308 சுற்றும் பேய் சுழல சுடுகாட்டு எரி பற்றி ஆடுவர் பாய் புலித்தோலினர் மற்றை ஊர்கள் எல்லாம் பலி தேர்ந்து போய் ஒற்றியூர் புக்கு உறையும் ஒருவரே மேல் #1309 புற்றில் ஆடு அரவு ஆட்டி உமையொடு பெற்றம் ஏறு உகந்து ஏறும் பெருமையான் மற்றையாரொடு வானவரும் தொழ ஒற்றியூர் உறைவான் ஓர் கபாலியே மேல் #1310 போது தாழ்ந்து புது மலர் கொண்டு நீர் மாது தாழ் சடை வைத்த மணாளனார் ஓது வேதியனார் திரு ஒற்றியூர் பாதம் ஏத்த பறையும் நம் பாவமே மேல் #1311 பலவும் அன்னங்கள் பல் மலர் மேல் துஞ்சும் கலவ மஞ்ஞைகள் கார் என எள்குறும் உலவு பைம் பொழில் சூழ் திரு ஒற்றியூர் நிலவினான் அடியே அடை நெஞ்சமே மேல் #1312 ஒன்று போலும் உகந்து அவர் ஏறிற்று ஒன்று போலும் உதைத்து களைந்தது ஒன்று போல் ஒளி மா மதி சூடிற்று ஒன்று போல் உகந்தார் ஒற்றியூரரே மேல் #1313 படை கொள் பூதத்தார் வேதத்தர் கீதத்தர் சடை கொள் வெள்ளத்தர் சாந்த வெண்நீற்றினர் உடையும் தோல் உகந்தார் உறை ஒற்றியூர் அடையும் உள்ளத்தவர் வினை அல்குமே மேல் #1314 வரையின் ஆர் உயர் தோள் உடை மன்னனை வரையினால் வலி செற்றவர் வாழ்விடம் திரையின் ஆர் புடை சூழ் திரு ஒற்றியூர் உரையினால் பொலிந்தார் உயர்ந்தார்களே மேல் 25. திருப்பாசூர் - திருக்குறுந்தொகை #1315 முந்தி மூஎயில் எய்த முதல்வனார் சிந்திப்பார் வினை தீர்த்திடும் செல்வனார் அந்திக்கோன்-தனக்கே அருள்செய்தவர் பந்தி செம் சடை பாசூர் அடிகளே மேல் #1316 மடந்தை பாகம் மகிழ்ந்த மணாளனார் தொடர்ந்த வல்வினை போக்கிடும் சோதியார் கடந்த காலனை கால் கொடு பாய்ந்தவர் படர்ந்த நாகத்தர் பாசூர் அடிகளே மேல் #1317 நாறு கொன்றையும் நாகமும் திங்களும் ஆறும் செம் சடை வைத்த அழகனார் காறு கண்டத்தர் கையது ஓர் சூலத்தர் பாறின் ஓட்டினர் பாசூர் அடிகளே மேல் #1318 வெற்றியூர் உறை வேதியர் ஆவர் நல் ஒற்றி ஏறு உகந்து ஏறும் ஒருவனார் நெற்றிக்கண்ணினர் நீள் அரவம்-தனை பற்றி ஆட்டுவர் பாசூர் அடிகளே மேல் #1319 மட்டு அவிழ்ந்த மலர் நெடுங்கண்ணி-பால் இட்ட வேட்கையர் ஆகி இருப்பவர் துட்டரேல் அறியேன் இவர் சூழ்ச்சிமை பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே மேல் #1320 பல் இல் ஓடு கை ஏந்தி பகல் எலாம் எல்லி நின்று இடு பெய் பலி ஏற்பவர் சொல்லி போய் புகும் ஊர் அறியேன் சொல்லீர் பல்கும் நீற்றினர் பாசூர் அடிகளே மேல் #1321 கட்டிவிட்ட சடையர் கபாலியர் எட்டி நோக்கி வந்து இல் புகுந்து அவ்வவர் இட்டமா அறியேன் இவர் செய்வன பட்ட நெற்றியர் பாசூர் அடிகளே மேல் #1322 வேதம் ஓதி வந்து இல் புகுந்தார் அவர் காதில் வெண் குழை வைத்த கபாலியார் நீதி ஒன்று அறியார் நிறை கொண்டனர் பாதி வெண் பிறை பாசூர் அடிகளே மேல் #1323 சாம்பல் பூசூவர் தாழ் சடை கட்டுவர் ஓம்பல் மூது எருது ஏறும் ஒருவனார் தேம்பல் வெண் மதி சூடுவர் தீயது ஓர் பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே மேல் #1324 மாலினோடு மறையவன்-தானுமாய் மேலும் கீழும் அளப்பரிது ஆயவர் ஆலின் நீழல் அறம் பகர்ந்தார் மிக பால் வெண்நீற்றினர் பாசூர் அடிகளே மேல் #1325 திரியும் மூஎயில் செம் கணை ஒன்றினால் எரிய எய்தனரேனும் இலங்கை_கோன் நெரிய ஊன்றியிட்டார் விரல் ஒன்றினால் பரியர் நுண்ணியர் பாசூர் அடிகளே மேல் 26. திருவன்னியூர் - திருக்குறுந்தொகை #1326 காடு கொண்டு அரங்கா கங்குல்-வாய் கணம் பாட மா நடம் ஆடும் பரமனார் வாட மான் நிறம் கொள்வர் மணம் கமழ் மாட மா மதில் சூழ் வன்னியூரரே மேல் #1327 செம் கண் நாகம் அரையது தீ திரள் அங்கை ஏந்தி நின்றார் எரி ஆடுவர் கங்கை வார் சடை மேல் இடம் கொண்டவர் மங்கை பாகம் வைத்தார் வன்னியூரரே மேல் #1328 ஞானம் காட்டுவர் நன் நெறி காட்டுவர் தானம் காட்டுவர்-தம் அடைந்தார்க்கு எலாம் தானம் காட்டி தம் தாள் அடைந்தார்கட்கு வானம் காட்டுவர் போல் வன்னியூரரே மேல் #1329 இம்மை அம்மை என இரண்டும் இவை மெய்ம்மைதான் அறியாது விளம்புவர் மெய்ம்மையால் நினைவார்கள்-தம் வல்வினை வம்-மின் தீர்ப்பர் கண்டீர் வன்னியூரரே மேல் #1330 பிறை கொள் வாள் நுதல் பெய் வளை தோளியர் நிறையை கொள்பவர் நீறு அணி மேனியர் கறை கொள் கண்டத்தர் வெண் மழுவாளினர் மறை கொள் வாய்மொழியார் வன்னியூரரே மேல் #1331 திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர் துளை கை வேழத்தர் தோயலர் சுடர் மதி முளைக்கும் மூரல் கதிர் கண்டு நாகம் நா வளைக்கும் வார்சடையார் வன்னியூரரே மேல் #1332 குணம் கொள் தோள் எட்டு மூர்த்தி இணை அடி இணங்குவார்கட்கு இனியனுமாய் நின்றான் வணங்கி மா மலர் கொண்டவர் வைகலும் வணங்குவார் மனத்தார் வன்னியூரரே மேல் #1333 இயலும் மாலொடு நான்முகன் செய் தவம் முயலின் காண்பு அரிதாய் நின்ற மூர்த்திதான் அயல் எலாம் அன்னம் ஏயும் அம் தாமரை வயல் எலாம் கயல் பாய் வன்னியூரரே மேல் #1334 நலம் கொள் பாகனை நன்று முனிந்திடா விலங்கல் கோத்து எடுத்தான் அது மிக்கிட இலங்கை_மன்னன் இருபது தோளினை மலங்க ஊன்றி வைத்தார் வன்னியூரரே மேல் 27. திருவையாறு - திருக்குறுந்தொகை #1335 சிந்தை வாய்தல் உளான் வந்து சீரியன் பொந்து வார் புலால் வெண் தலை கையினன் முந்தி வாயது ஓர் மூ இலை வேல் பிடித்து அந்தி வாயது ஓர் பாம்பர் ஐயாறரே மேல் #1336 பாகம் மாலை மகிழ்ந்தனர் பால் மதி போக ஆனையின் ஈர் உரி போர்த்தவர் கோகம் மாலை குலாயது ஓர் கொன்றையும் ஆக ஆன் நெய் அஞ்சு ஆடும் ஐயாறரே மேல் #1337 நெஞ்சம் என்பது ஓர் நீள் கயம்-தன்னுளே வஞ்சம் என்பது ஓர் வான் சுழிப்பட்டு நான் துஞ்சும் போழ்து நின் நாம திரு எழுத்து அஞ்சும் தோன்ற அருளும் ஐயாறரே மேல் #1338 நினைக்கும் நெஞ்சின் உள்ளார் நெடு மா மதில் அனைத்தும் ஒள் அழல் வாய் எரியூட்டினார் பனை கை வேழத்து உரி உடல் போர்த்தவர் அனைத்து வாய்தலுள் ஆரும் ஐயாறரே மேல் #1339 பரியர் நுண்ணியர் பார்த்தற்கு அரியவர் அரிய பாடலர் ஆடலர் அன்றியும் கரிய கண்டத்தர் காட்சி பிறர்க்கு எலாம் அரியர் தொண்டர்க்கு எளியர் ஐயாறரே மேல் #1340 புலரும்போதும் இலா பட்ட பொன் சுடர் மலரும் போதுகளால் பணிய சிலர் இலரும் போதும் இலாததும் அன்றியும் அலரும் போதும் அணியும் ஐயாறரே மேல் #1341 பங்கு அம் மாலை குழலி ஒர் பால் நிற கங்கை மாலையர் காதன்மை செய்தவர் மங்கை மாலை மதியமும் கண்ணியும் அங்க மாலையும் சூடும் ஐயாறரே மேல் #1342 முன்னை ஆறு முயன்று எழுவீர் எலாம் பின்னை ஆறு பிரி எனும் பேதைகாள் மன் ஐ ஆறு மருவிய மாதவன் தன் ஐயாறு தொழ தவம் ஆகுமே மேல் #1343 ஆன் ஐ ஆறு என ஆடுகின்றான் முடி வான் ஐ ஆறு வளாயது காண்-மினோ நான் ஐயாறு புக்கேற்கு அவன் இன்னருள் தேனை ஆறு திறந்தாலே ஒக்குமே மேல் #1344 அரக்கின் மேனியன் அம் தளிர்மேனியன் அரக்கின் சேவடியாள் அஞ்ச அஞ்சல் என்று அரக்கன் ஈர்_ஐந்து வாயும் அலறவே அரக்கினான் அடியாலும் ஐயாறனே மேல் 28. திருவையாறு - திருக்குறுந்தொகை #1345 சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம் முந்தி வண்ணத்தராய் முழு நீறு அணி சந்தி வண்ணத்தராய் தழல் போல்வது ஓர் அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1346 மூல வண்ணத்தராய் முதல் ஆகிய கோல வண்ணத்தர் ஆகி கொழும் சுடர் நீல வண்ணத்தர் ஆகி நெடும் பளிங்கு ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே மேல் #1347 சிந்தை வண்ணமும் தீயது ஓர் வண்ணமும் அந்தி போது அழகு ஆகிய வண்ணமும் பந்தி காலனை பாய்ந்தது ஓர் வண்ணமும் அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1348 இருளின் வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும் மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும் அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1349 இழுக்கின் வண்ணங்கள் ஆகிய வெவ் அழல் குழைக்கும் வண்ணங்கள் ஆகியும் கூடியும் மழை கண் மா முகில் ஆகிய வண்ணமும் அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1350 இண்டை வண்ணமும் ஏழ் இசை வண்ணமும் தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும் கண்ட வண்ணங்களாய் கனல் மா மணி அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1351 விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும் கரும்பின் இன்மொழி காரிகை வண்ணமும் விரும்பினார் வினை தீர்த்திடும் வண்ணமும் அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1352 ஊழி வண்ணமும் ஒண் சுடர் வண்ணமும் வேழ ஈர் உரி போர்த்தது ஓர் வண்ணமும் வாழி தீ உரு ஆகிய வண்ணமும் ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1353 செய் தவன் திருநீறு அணி வண்ணமும் எய்த நோக்க அரிது ஆகிய வண்ணமும் கைது காட்சி அரியது ஓர் வண்ணமும் ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் #1354 எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும் இடர்க்கள் போல் பெரிது ஆகிய வண்ணமும் கடுத்த கை நரம்பால் இசை வண்ணமும் அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே மேல் 29. திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை #1355 நிறைக்க வாலியள் அல்லள் இ நேர்_இழை மறைக்க வாலியள் அல்லள் இ மாதராள் பிறைக்கு அவாவி பெரும் புனல் ஆவடு துறை கவாலியோடு ஆடிய சுண்ணமே மேல் #1356 தவள மா மதி சாயல் ஓர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞகன் எம் இறை அளவு கண்டிலள் ஆவடுதண்துறை களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே மேல் #1357 பாதி பெண் ஒருபாகத்தன் பல் மறை ஓதி என் உளம் கொண்டவன் ஒண் பொருள் ஆதி ஆவடுதண்துறை மேவிய சோதியே சுடரே என்று சொல்லுமே மேல் #1358 கார் கொள் மா முகில் போல்வது ஓர் கண்டத்தன் வார் கொள் மென் முலை சேர்ந்து இறுமாந்து இவள் ஆர் கொள் கொன்றையன் ஆவடுதண்துறை தார்க்கு நின்று இவள் தாழுமா காண்-மினே மேல் #1359 கருகு_கண்டத்தன் காய் கதிர் சோதியன் பருகு பால் அமுதே எனும் பண்பினன் அருகு சென்று இவள் ஆவடுதண்துறை ஒருவன் என்னை உடைய கோ என்னுமே மேல் #1360 குழலும் கொன்றையும் கூவிளம் மத்தமும் தழலும் தையல் ஓர்பாகமா தாங்கினான் அழகன் ஆவடுதண்துறையா என கழலும் கை வளை காரிகையாளுக்கே மேல் #1361 பஞ்சின் மெல் அடி பாவை ஓர்பங்கனை தஞ்சம் என்று இறுமாந்து இவள் ஆரையும் அஞ்சுவாளல்லள் ஆவடுதண்துறை மஞ்சனோடு இவள் ஆடிய மையலே மேல் #1362 பிறையும் சூடி நல் பெண்ணொடு ஆண் ஆகி என் நிறையும் நெஞ்சமும் நீர்மையும் கொண்டவன் அறையும் பூம் பொழில் ஆவடுதண்துறை இறைவன் என்னை உடையவன் என்னுமே மேல் #1363 வையம்தான் அளந்தானும் அயனுமாய் மெய்யை காணலுற்றார்க்கு அழல் ஆயினன் ஐயன் ஆவடுதண்துறையா என கையில் வெள் வளையும் கழல்கின்றதே மேல் #1364 பக்கம் பூதங்கள் பாட பலி கொள்வான் மிக்க வாள் அரக்கன் வலி வீட்டினான் அக்கு அணிந்தவன் ஆவடுதண்துறை நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே மேல் 30. திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை #1365 கரப்பர் காலம் அடைந்தவர்-தம் வினை சுருக்கும் ஆறு வல்லார் கங்கை செம் சடை பரப்பு நீர் வரு காவிரி தென் கரை திரு பராய்த்துறை மேவிய செல்வரே மேல் #1366 மூடினார் களி யானையின் ஈர் உரி பாடினார் மறை நான்கினோடு ஆறு அங்கம் சேடனார் தென் பராய்த்துறை செல்வரை தேடிக்கொண்டு அடியேன் சென்று காண்பனே மேல் #1367 பட்ட நெற்றியர் பால் மதிக்கீற்றினர் நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் சிட்டனார் தென் பராய்த்துறை செல்வனார் இட்டமாய் இருப்பாரை அறிவரே மேல் #1368 முன்பு எலாம் சில மோழைமை பேசுவர் என்பு எலாம் பல பூண்டு அங்கு உழிதர்வர் தென் பராய்த்துறை மேவிய செல்வனார் அன்பராய் இருப்பாரை அறிவரே மேல் #1369 போது தாதொடு கொண்டு புனைந்து உடன் தாது அவிழ் சடை சங்கரன் பாதத்துள் வாதை தீர்க்க என்று ஏத்தி பராய்த்துறை சோதியானை தொழுது எழுந்து உய்ம்-மினே மேல் #1370 நல்ல நான்மறை ஓதிய நம்பனை பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை தில்லையான் தென் பராய்த்துறை செல்வனை வல்லையாய் வணங்கி தொழு வாய்மையே மேல் #1371 நெருப்பினால் குவித்தால் ஒக்கும் நீள் சடை பருப்பதம் மத யானை உரித்தவன் திரு பராய்த்துறையார் திரு மார்பின் நூல் பொருப்பு அராவி இழி புனல் போன்றதே மேல் #1372 எட்ட இட்ட இடு மணல் எக்கர் மேல் பட்ட நுண் துளி பாயும் பராய்த்துறை சிட்டன் சேவடி சென்று அடைகிற்றிரேல் விட்டு நம் வினை உள்ளன வீடுமே மேல் #1373 நெருப்பு அராய் நிமிர்ந்தால் ஒக்கும் நீள் சடை மருப்பு அராய் வளைத்தால் ஒக்கும் வாள் மதி திரு பராய்த்துறை மேவிய செல்வனார் விருப்பராய் இருப்பாரை அறிவரே மேல் #1374 தொண்டு பாடியும் தூ மலர் தூவியும் இண்டை கட்டி இணை அடி ஏத்தியும் பண்டரங்கர் பராய்த்துறை பாங்கரை கண்டுகொண்டு அடியேன் உய்ந்து போவனே மேல் #1375 அரக்கன் ஆற்றல் அழித்த அழகனை பரக்கும் நீர் பொன்னி மன்னு பராய்த்துறை இருக்கை மேவிய ஈசனை ஏத்து-மின் பொருக்க நும் வினை போய் அறும் காண்-மினே மேல் 31. திருவானைக்கா - திருக்குறுந்தொகை #1376 கோனை காவி குளிர்ந்த மனத்தராய் தேனை காவி உண்ணார் சில தெண்ணர்கள் ஆனைக்காவில் எம்மானை அணைகிலார் ஊனை காவி உழிதர்வர் ஊமரே மேல் #1377 திருகு சிந்தையை தீர்த்து செம்மை செய்து பருகி ஊறலை பற்றி பதம் அறிந்து உருகி நைபவர்க்கு ஊனம் ஒன்று இன்றியே அருகு நின்றிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1378 துன்பம் இன்றி துயர் இன்றி என்றும் நீர் இன்பம் வேண்டில் இராப்பகல் ஏத்து-மின் என் பொன் ஈசன் இறைவன் என்று உள்குவார்க்கு அன்பன் ஆயிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1379 நாவால் நன்று நறு மலர் சேவடி ஓவாது ஏத்தி உளத்து அடைத்தார் வினை காவாய் என்று தம் கைதொழுவார்க்கு எலாம் ஆவா என்றிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1380 வஞ்சம் இன்றி வணங்கு-மின் வைகலும் வெம் சொல் இன்றி விலகு-மின் வீடு உற நைஞ்சுநைஞ்சு நின்று உள் குளிர்வார்க்கு எலாம் அஞ்சல் என்றிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1381 நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே படைகள் போல் வரும் பஞ்சமாபூதங்கள் தடை ஒன்று இன்றியே தன் அடைந்தார்க்கு எலாம் அடைய நின்றிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1382 ஒழுகு மாடத்துள் ஒன்பது வாய்தலும் கழுகு அரிப்பதன் முன்னம் கழல் அடி தொழுது கைகளால் தூ மலர் தூவி நின்று அழுமவர்கள் அன்பன் ஆனைக்கா அண்ணலே மேல் #1383 உருளும்போது அறிவு ஒண்ணா உலகத்தீர் தெருளும் சிக்கென தீவினை சேராதே இருள் அறுத்து நின்று ஈசன் என்பார்க்கு எலாம் அருள் கொடுத்திடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1384 நேசம் ஆகி நினை மட நெஞ்சமே நாசம் ஆய குல நலம் சுற்றங்கள் பாசம் அற்று பராபர ஆனந்த ஆசை உற்றிடும் ஆனைக்கா அண்ணலே மேல் #1385 ஓதம் மா கடல் சூழ் இலங்கைக்கு இறை கீதம் கின்னரம் பாட கெழுவினான் பாதம் வாங்கி பரிந்து அருள்செய்து அங்கு ஓர் ஆதி ஆயிடும் ஆனைக்கா அண்ணலே மேல் 32. திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை #1386 கொடி கொள் செல்வ விழா குணலை அறா கடி கொள் பூம் பொழில் கச்சி ஏகம்பனார் பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர் அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1387 ஆர்த்த தோல் உடை கட்டி ஓர் வேடனாய் பார்த்தனோடு படை தொடுமாகிலும் பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர் தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1388 மாதினை மதித்தான் ஒருபாகமா காதலால் கரந்தான் சடை கங்கையை பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1389 மூவனாய் முதலாய் இ உலகு எலாம் காவனாய் கடும் காலனை காய்ந்தவன் பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர் தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1390 செம்பொனே ஒக்கும் மேனியன் தேசத்தில் உம்பரார் அவரோடு அங்கு இருக்கிலும் பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர் நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1391 வல்லம் பேசி வலி செய் மூன்று ஊரினை கொல்லம் பேசி கொடும் சரம் நூறினான் புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர் செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1392 ஒருத்தனாய் உலகு ஏழும் தொழ நின்று பருத்த பாம்பொடு பால் மதி கங்கையும் பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர் திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1393 அதிரர் தேவர் இயக்கர் விச்சாதரர் கருத நின்றவர் காண்பு அரிது ஆயினான் பொருத நீர் வரு பூந்துருத்தி நகர் சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1394 செதுகு அறா மனத்தார் புறம்கூறினும் கொதுகு அறா கண்ணின் நோன்பிகள் கூறினும் பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் #1395 துடித்த தோள் வலி வாள் அரக்கன்-தனை பிடித்த கை ஞெரிந்துற்றன கண் எலாம் பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர் படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே மேல் 33. திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை #1396 கொல்லை ஏற்றினர் கோள் அரவத்தினர் தில்லை சிற்றம்பலத்து உறை செல்வனார் தொல்லை ஊழியர் சோற்றுத்துறையர்க்கே வல்லையாய் பணி செய் மட நெஞ்சமே மேல் #1397 முத்தி ஆக ஒரு தவம் செய்திலை அத்தியால் அடியார்க்கு ஒன்று அளித்திலை தொத்து நின்று அலர் சோற்றுத்துறையர்க்கே பத்தியாய் பணி செய் மட நெஞ்சமே மேல் #1398 ஒட்டி நின்ற உடல் உறு நோய்வினை கட்டி நின்ற கழிந்து அவை போய் அற தொட்டு நின்றும் அ சோற்றுத்துறையர்க்கே பட்டியாய் பணி செய் மட நெஞ்சமே மேல் #1399 ஆதியான் அண்டவாணர்க்கு அருள் நல்கும் நீதியான் என்றும் நின்மலனே என்றும் சோதியான் என்றும் சோற்றுத்துறையர்க்கே வாதியாய் பணி செய் மட நெஞ்சமே மேல் #1400 ஆட்டினாய் அடியேன் வினை ஆயின ஓட்டினாய் ஒரு காதில் இலங்கு வெண் தோட்டினாய் என்று சோற்றுத்துறையர்க்கே நீட்டி நீ பணி செய் மட நெஞ்சமே மேல் #1401 பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் தொங்கி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கு தங்கி நீ பணி செய் மட நெஞ்சமே மேல் #1402 ஆணி போல நீ ஆற்ற வலியைகாண் ஏணி போல் இழிந்து ஏறியும் ஏங்கியும் தோணி ஆகிய சோற்றுத்துறையர்க்கே பூணியாய் பணி செய் மட நெஞ்சமே மேல் #1403 பெற்றம் ஏறில் என் பேய் படை ஆகில் என் புற்றில் ஆடு அரவே அது பூணில் என் சுற்றி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே பற்றி நீ பணி செய் மட நெஞ்சமே மேல் #1404 அல்லியான் அரவு ஐந்தலை நாகஅணை பள்ளியான் அறியாத பரிசு எலாம் சொல்லி நீ என்றும் சோற்றுத்துறையர்க்கே புல்லி நீ பணி செய் மட நெஞ்சமே மேல் #1405 மிண்டரோடு விரவியும் வீறு இலா குண்டர்-தம்மை கழிந்து உய்ய போந்து நீ தொண்டு செய்து என்றும் சோற்றுத்துறையர்க்கே உண்டு நீ பணி செய் மட நெஞ்சமே மேல் #1406 வாழ்ந்தவன் வலி வாள் அரக்கன்-தனை ஆழ்ந்து போய் அலற விரல் ஊன்றினான் சூழ்ந்த பாரிடம் சோற்றுத்துறையர்க்கே தாழ்ந்து நீ பணி செய் மட நெஞ்சமே மேல் 34. திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை #1407 கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலந்தான் புல்லியார் புரம் மூன்று எரிசெய்தவன் நெல்லியான் நிலையான நெய்த்தானனை சொல்லி மெய் தொழுவார் சுடர்வாணரே மேல் #1408 இரவனை இடு வெண் தலை ஏந்தியை பரவனை படையார் மதில் மூன்றையும் நிரவனை நிலையான நெய்த்தானனை குரவனை தொழுவார் கொடிவாணரே மேல் #1409 ஆனிடை ஐந்தும் ஆடுவர் ஆரிருள் கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ தேன் இடை மலர் பாயும் நெய்த்தானனை வானிடை தொழுவார் வலிவாணரே மேல் #1410 விண்டவர் புரம் மூன்றும் வெண் நீறு எழ கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை தொண்டராய் தொழுவார் சுடர்வாணரே மேல் #1411 முன்கை நோவ கடைந்தவர் நிற்கவே சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் நங்கையோடு நவின்ற நெய்த்தானனை தம் கையால் தொழுவார் தலைவாணரே மேல் #1412 சுட்ட நீறு மெய் பூசி சுடலையுள் நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே சிட்டர் வானவர் தேரும் நெய்த்தானனை இட்டமாய் தொழுவார் இன்பவாணரே மேல் #1413 கொள்ளி தீ எரி வீசி கொடியது ஓர் கள்ளிக்காட்டிடை ஆடுவர் காண்-மினோ தெள்ளி தேறி தெளிந்து நெய்த்தானனை உள்ளத்தால் தொழுவார் உம்பர்வாணரே மேல் #1414 உச்சி மேல் விளங்கும் இள வெண் பிறை பற்றி ஆடு அரவோடும் சடை பெய்தான் நெற்றி ஆர் அழல் கண்ட நெய்த்தானனை சுற்றி மெய் தொழுவார் சுடர்வாணரே மேல் #1415 மாலொடும் மறை ஓதிய நான்முகன் காலொடும் முடி காண்பு அரிது ஆயினான் சேலொடும் செரு செய்யும் நெய்த்தானனை மாலொடும் தொழுவார் வினை வாடுமே மேல் #1416 வலிந்த தோள் வலி வாள் அரக்கன்-தனை நெருங்க நீள் வரை ஊன்று நெய்த்தானனார் புரிந்து கை நரம்போடு இசை பாடலும் பரிந்தனை பணிவார் வினை பாறுமே மேல் 35. திருப்பழனம் - திருக்குறுந்தொகை #1417 அருவனாய் அத்தி ஈர் உரி போர்த்து உமை உருவனாய் ஒற்றியூர் பதியாகிலும் பரு வரால் வயல் சூழ்ந்த பழனத்தான் திருவினால் திரு வேண்டும் இ தேவர்க்கே மேல் #1418 வையம் வந்து வணங்கி வலம்கொளும் ஐயனை அறியார் சிலர் ஆதர்கள் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பழனம்-பால் பொய்யர் காலங்கள் போக்கிடுவார்களே மேல் #1419 வண்ணம் ஆக முறுக்கிய வாசிகை திண்ணம் ஆக திரு சடை சேர்த்தியே பண்ணும் ஆகவே பாடும் பழனத்தான் எண்ணும் நீர் அவன் ஆயிரம் நாமமே மேல் #1420 மூர்க்க பாம்பு பிடித்தது மூச்சிட வாக்கு அ பாம்பினை கண்ட துணி மதி பாக்க பாம்பினை பற்றும் பழனத்தான் தார் கொள் மாலை சடை கரந்திட்டதே மேல் #1421 நீலம் உண்ட மிடற்றினன் நேர்ந்தது ஓர் கோலம் உண்ட குணத்தான் நிறைந்தது ஓர் பாலும் உண்டு பழனம்-பால் என்னிடை மாலும் உண்டு இறை என்தன் மனத்துளே மேல் #1422 மந்தம் ஆக வளர் பிறை சூடி ஓர் சந்தம் ஆக திரு சடை சாத்துவான் பந்தம் ஆயின தீர்க்கும் பழனத்தான் எந்தை தாய் தந்தை எம்பெருமானுமே மேல் #1423 மார்க்கம் ஒன்று அறியார் மதியில்லிகள் பூ கரத்தின் புரிகிலர் மூடர்கள் பார்க்க நின்று பரவும் பழனத்தான் தாள்-கண் நின்று தலை வணங்கார்களே மேல் #1424 ஏறினார் இமையோர்கள் பணி கண்டு தேறுவாரலர் தீவினையாளர்கள் பாறினார் பணி வேண்டும் பழனத்தான் கூறினான் உமையாளொடும் கூடவே மேல் #1425 சுற்றுவார் தொழுவார் சுடர்_வண்ணன் மேல் தெற்றினார் திரியும் புரம் மூன்று எய்தான் பற்றினார் வினை தீர்க்கும் பழனனை எற்றினான் மறக்கேன் எம்பிரானையே மேல் #1426 பொங்கு மா கடல் சூழ் இலங்கைக்கு இறை அங்கம் ஆன இறுத்து அருள்செய்தவன் பங்கன் என்றும் பழனன் உமையொடும் தங்கன் தாள் அடியேன் உடை உச்சியே மேல் 36. திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை #1427 கான் அறாத கடி பொழில் வண்டு இனம் தேன் அறாத திரு செம்பொன்பள்ளியான் ஊன் அறாதது ஓர் வெண் தலையில் பலி தான் அறாதது ஓர் கொள்கையன் காண்-மினே மேல் #1428 என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு அன்பும் ஆயிடும் ஆய்_இழையீர் இனி செம்பொன்பள்ளி உளான் சிவலோகனை நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே மேல் #1429 வேறு கோலத்தர் ஆண் அலர் பெண் அலர் கீறு கோவண ஐ துகில் ஆடையர் தேறல் ஆவது ஒன்று அன்று செம்பொன்பள்ளி ஆறு சூடிய அண்ணல் அவனையே மேல் #1430 அருவராதது ஓர் வெண் தலை ஏந்தி வந்து இருவராய் இடுவார் கடை தேடுவார் தெரு எலாம் உழல்வார் செம்பொன்பள்ளியார் ஒருவர்தாம் பல பேர் உளர் காண்-மினே மேல் #1431 பூ உலாம் சடை மேல் புனல் சூடினான் ஏவலால் எயில் மூன்றும் எரித்தவன் தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான் மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே மேல் #1432 சலவராய் ஒரு பாம்பொடு தண் மதி கலவர் ஆவதன் காரணம் என்-கொலோ திலக நீள் முடியார் செம்பொன்பள்ளியார் குலவிலால் எயில் மூன்று எய்த கூத்தரே மேல் #1433 கை கொள் சூலத்தர் கட்டுவாங்கத்தினர் மை கொள் கண்டத்தர் ஆகி இரு சுடர் செய்ய மேனி வெண்நீற்றர் செம்பொன்பள்ளி ஐயர் கையது ஓர் ஐந்தலை நாகமே மேல் #1434 வெம் கண் நாகம் வெருவுற ஆர்த்தவர் பைம் கண் ஆனையின் ஈர் உரி போத்தவர் செங்கண்மால் விடையார் செம்பொன்பள்ளியார் அங்கணாய் அடைந்தார் வினை தீர்ப்பரே மேல் #1435 நன்றி நாரணன் நான்முகன் என்று இவர் நின்ற நீள் முடியோடு அடி காண்புற்று சென்று காண்பு அரியான் செம்பொன்பள்ளியான் நின்ற சூழலில் நீள் எரி ஆகியே மேல் #1436 திரியும் மும்மதில் செம் கணை ஒன்றினால் எரிய எய்து அனல் ஓட்டி இலங்கை_கோன் நெரிய ஊன்றியிட்டார் செம்பொன்பள்ளியார் அரிய வானம் அவர் அருள்செய்வரே மேல் 37. திருக்கடவூர் வீரட்டம் - திருக்குறுந்தொகை #1437 மலை கொள் ஆனை மயக்கிய வல்வினை நிலைக்கொள் ஆனை நினைப்புறு நெஞ்சமே கொலை கை யானையும் கொன்றிடும் ஆதலால் கலை கையானை கண்டீர் கடவூரரே மேல் #1438 வெள்ளி மால் வரை போல்வது ஓர் ஆனையார் உள்ள ஆறு எனை உள் புகும் ஆனையார் கொள்ளம் ஆகிய கோயிலுள் ஆனையார் கள்ள ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1439 ஞானம் ஆகிய நன்கு உணர் ஆனையார் ஊனை வேவ உருக்கிய ஆனையார் வேனல் ஆனை உரித்து உமை அஞ்சவே கான ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1440 ஆலம் உண்டு அழகு ஆயது ஓர் ஆனையார் நீல மேனி நெடும் பளிங்கு ஆனையார் கோலம் ஆய கொழும் சுடர் ஆனையார் கான ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1441 அளித்த ஆன் அஞ்சும் ஆடிய ஆனையார் வெளுத்த நீள் கொடி ஏறு உடை ஆனையார் எளித்த வேழத்தை எள்குவித்த ஆனையார் களித்த ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1442 விடுத்த மால் வரை விண்ணுற ஆனையார் தொடுத்த மால் வரை தூயது ஓர் ஆனையார் கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் கடுத்த ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1443 மண்உளாரை மயக்குறும் ஆனையார் எண்உளார் பலர் ஏத்திடும் ஆனையார் விண்உளார் பலரும் அறி ஆனையார் கண்ணுள் ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1444 சினக்கும் செம்பவள திரள் ஆனையார் மனக்கும் வல்வினை தீர்த்திடும் ஆனையார் அனைக்கும் அன்புடையார் மனத்து ஆனையார் கனைக்கும் ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1445 வேதம் ஆகிய வெம் சுடர் ஆனையார் நீதியால் நிலன் ஆகிய ஆனையார் ஓதி ஊழி தெரிந்து உணர் ஆனையார் காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1446 நீண்ட மாலொடு நான்முகன்தானுமாய் காண்டும் என்று புக்கார்கள் இருவரும் ஆண்ட ஆர் அழல் ஆகிய ஆனையார் காண்டல் ஆனை கண்டீர் கடவூரரே மேல் #1447 அடுத்து வந்த இலங்கையர்_மன்னனை எடுத்த தோள்கள் இற நெரித்த ஆனையார் கடுத்த காலனை காய்ந்தது ஓர் ஆனையார் கடுக்கை ஆனை கண்டீர் கடவூரரே மேல் 38. திருக்கடவூர் மயானம் - திருக்குறுந்தொகை #1448 குழை கொள் காதினர் கோவண ஆடையர் உழையர்தாம் கடவூரின் மயானத்தார் பழைய தம் அடியார் செய்யும் பாவமும் பிழையும் தீர்ப்பர் பெருமான் அடிகளே மேல் #1449 உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல் தேன் கடவூரின் மயானத்தார் தன்னை நோக்கி தொழுது எழுவார்க்கு எலாம் பின்னை என்னார் பெருமான் அடிகளே மேல் #1450 சூலம் ஏந்துவர் தோல்உடைஆடையர் ஆலம் உண்டு அமுதே மிக தேக்குவர் காலகாலர் கடவூர் மயானத்தார் மாலை மார்பர் பெருமான் அடிகளே மேல் #1451 இறைவனார் இமையோர் தொழு பைம் கழல் மறவனார் கடவூரின் மயானத்தார் அறவனார் அடியார்அடியார்-தங்கள் பிறவி தீர்ப்பர் பெருமான் அடிகளே மேல் #1452 கத்து காளி கதம் தணிவித்தவர் மத்தர்தாம் கடவூரின் மயானத்தார் ஒத்து ஒவ்வாதன செய்து உழல்வார் ஒரு பித்தர் காணும் பெருமான் அடிகளே மேல் #1453 எரி கொள் மேனி இளம் பிறை வைத்தவர் கரியர்தாம் கடவூரின் மயானத்தார் அரியர் அண்டத்துஉளோர் அயன் மாலுக்கும் பெரியர் காணும் பெருமான் அடிகளே மேல் #1454 அணங்கு பாகத்தர் ஆரண நான்மறை கணங்கள் கடவூரின் மயானத்தார் வணங்குவார் இடர் தீர்ப்பர் மயக்குறும் பிணம் கொள் காடர் பெருமாள் அடிகளே மேல் #1455 அரவு கையினர் ஆதிபுராணனார் மரவு சேர் கடவூரின் மயானத்தார் பரவுவார் இடர் தீர்ப்பர் பணி கொள்வர் பிரமன் மாற்கும் பெருமான் அடிகளே மேல் 39. திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை #1456 கொள்ளும் காதன்மை பெய்துறும் கோல் வளை உள்ளம் உள்கி உரைக்கும் திரு பெயர் வள்ளல் மா மயிலாடுதுறை உறை வெள்ளம் தாங்கு சடையனை வேண்டியே மேல் #1457 சித்தம் தேறும் செறி வளை சிக்கெனும் பச்சை தீரும் என் பைம் கொடி பால் மதி வைத்த மா மயிலாடுதுறை அரன் கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே மேல் #1458 அண்டர் வாழ்வும் அமரர் இருக்கையும் கண்டு வீற்றிருக்கும் கருத்து ஒன்று இலோம் வண்டு சேர் மயிலாடுதுறை அரன் தொண்டர் பாதங்கள் சூடி துதையிலே மேல் #1459 வெம் சின கடும் காலன் விரைகிலான் அஞ்சு இறப்பும் பிறப்பும் அறுக்கல் ஆம் மஞ்சன் மா மயிலாடுதுறை உறை அஞ்சலாள் உமை_பங்கன் அருளிலே மேல் #1460 குறைவு இலோம் கொடு மானுட வாழ்க்கையால் கறை நிலாவிய கண்டன் எண் தோளினன் மறைவலான் மயிலாடுதுறை உறை இறைவன் நீள் கழல் ஏத்தி இருக்கிலே மேல் #1461 நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என் செய்தாய் கலைகள் ஆய வல்லான் கயிலாய நல் மலையன் மா மயிலாடுதுறையன் நம் தலையின் மேலும் மனத்துளும் தங்கவே மேல் #1462 நீற்றினான் நிமிர் புன்சடையான் விடை ஏற்றினான் நமை ஆள்உடையான் புலன் மாற்றினான் மயிலாடுதுறை என்று போற்றுவார்க்கும் உண்டோ புவி வாழ்க்கையே மேல் #1463 கோலும் புல்லும் ஒரு கையில் கூர்ச்சமும் தோலும் பூண்டு துயரம் உற்று என் பயன் நீல மா மயில் ஆடு துறையனே நூலும் வேண்டுமோ நுண் உணர்ந்தோர்கட்கே மேல் #1464 பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி மணம் கொள சடை வைத்த மறையவன் வணங்கும் மா மயிலாடுதுறை அரன் அணங்கு ஒர்பால் கொண்ட கோலம் அழகிதே மேல் #1465 நீள் நிலா அரவ சடை நேசனை பேணிலாதவர் பேதுறவு ஓட்டினோம் வாள் நிலா மயிலாடுதுறைதனை காணில் ஆர்க்கும் கடும் துயர் இல்லையே மேல் #1466 பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான் அவன் இன்னிசை கேட்டலும் வரத்தினான் மயிலாடுதுறை தொழும் கரத்தினார் வினைக்கட்கு அறும் காண்-மினே மேல் 40. திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை #1467 வண்ணமும் வடிவும் சென்று கண்டிலள் எண்ணி நாமங்கள் ஏத்தி நிறைந்திலள் கண் உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் அண்ணலே அறிவான் இவள் தன்மையே மேல் #1468 மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து இருந்தவன் கழிப்பாலையுள் எம்பிரான் திருந்து சேவடி சிந்தையுள் வைத்து இவள் பரிந்து உரைக்கிலும் என் சொல் பழிக்குமே மேல் #1469 மழலைதான் வர சொல் தெரிகின்றிலள் குழலின் நேர் மொழி கூறிய கேண்-மினோ அழகனே கழிப்பாலை எம் அண்ணலே இகழ்வதோ எனை ஏன்றுகொள் என்னுமே மேல் #1470 செய்ய மேனி வெண் நீறு அணிவான்-தனை மையல் ஆகி மதிக்கிலள் ஆரையும் கை கொள் வெண்மழுவன் கழிப்பாலை எம் ஐயனே அறிவான் இவள் தன்மையே மேல் #1471 கருத்தனை கழிப்பாலையுள் மேவிய ஒருத்தனை உமையாள் ஒருபங்கனை அருத்தியால் சென்று கண்டிட வேண்டும் என்று ஒருத்தியார் உளம் ஊசல் அது ஆகுமே மேல் #1472 கங்கையை சடை வைத்து மலைமகள் நங்கையை உடனே வைத்த நாதனார் திங்கள் சூடி திரு கழிப்பாலையான் இங்கு வந்திடும் என்று இறுமாக்குமே மேல் #1473 ஐயனே அழகே அனல் ஏந்திய கையனே கறை சேர்தரு கண்டனே மை உலாம் பொழில் சூழ் கழிப்பாலை எம் ஐயனே விதியே அருள் என்னுமே மேல் #1474 பத்தர்கட்கு அமுது ஆய பரத்தினை முத்தனை முடிவு ஒன்று இலா மூர்த்தியை அத்தனை அணி ஆர் கழிப்பாலை எம் சித்தனை சென்று சேருமா செப்புமே மேல் #1475 பொன் செய் மா முடி வாள் அரக்கன் தலை அஞ்சும் நான்கும் ஒன்றும் இறுத்தான் அவன் என் செயான் கழிப்பாலையுள் எம்பிரான் துஞ்சும்போதும் துணை எனல் ஆகுமே மேல் 41. திருப்பைஞ்ஞீலி - திருக்குறுந்தொகை #1476 உடையர் கோவணம் ஒன்றும் குறைவு இலர் படை கொள் பாரிடம் சூழ்ந்த பைஞ்ஞீலியார் சடையின் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க்கு இல்லை அவலமே மேல் #1477 மத்த மா மலர் சூடிய மைந்தனார் சித்தராய் திரிவார் வினை தீர்ப்பரால் பத்தர்தாம் தொழுது ஏத்து பைஞ்ஞீலி எம் அத்தனை தொழ வல்லவர் நல்லரே மேல் #1478 விழுது சூலத்தன் வெண் மழுவாள் படை கழுது துஞ்சு இருள் காட்டகத்து ஆடலான் பழுது ஒன்று இன்றி பைஞ்ஞீலி பரமனை தொழுது செல்பவர்-தம் வினை தூளியே மேல் #1479 ஒன்றி மாலும் பிரமனும் தம்மிலே நின்ற சூழல் அறிவு அரியான் இடம் சென்று பார் இடம் ஏத்து பைஞ்ஞீலியுள் என்றும் மேவி இருந்த அடிகளே மேல் #1480 வேழத்தின் உரி போர்த்த விகிர்தனார் தாழ செம் சடை மேல் பிறை வைத்தவர் தாழை தண் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியார் யாழின் பாட்டை உகந்த அடிகளே மேல் #1481 குண்டுபட்டு குறி அறியா சமண் மிண்டரோடு படுத்து உய்ய போந்து நான் கண்டம் கார் வயல் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் அண்டவாணன் அடி அடைந்து உய்ந்தனே மேல் #1482 வரி பை ஆடு அரவு ஆட்டி மத கரி உரிப்பை மூடிய உத்தமனார் உறை திரு பைஞ்ஞீலி திசை தொழுவார்கள் போய் இருப்பர் வானவரோடு இனிதாகவே மேல் #1483 கோடல் கோங்கம் புறவு அணி முல்லை மேல் பாடல் வண்டு இசை கேட்கும் பைஞ்ஞீலியார் பேடும் ஆணும் பிறர் அறியாதது ஓர் ஆடும் நாகம் அசைத்த அடிகளே மேல் #1484 கார் உலாம் மலர் கொன்றை அம் தாரினான் வார் உலாம் முலை மங்கை ஓர்பங்கினன் தேர் உலாம் பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி எம் ஆர்கிலா அமுதை அடைந்து உய்ம்-மினே மேல் #1485 தருக்கி சென்று தட வரை பற்றலும் நெருக்கி ஊன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளும் எம்மான் இடம் இருக்கை ஞீலி என்பார்க்கு இடர் இல்லையே மேல் 42. திருவேட்களம் - திருக்குறுந்தொகை #1486 நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் என்றும் இன்பம் தழைக்க இருக்கல் ஆம் சென்று நீர் திரு வேட்களத்துள் உறை துன்று பொன்சடையானை தொழு-மினே மேல் #1487 கருப்பு வெம் சிலை காமனை காய்ந்தவன் பொருப்பு வெம் சிலையால் புரம் செற்றவன் விருப்பன் மேவிய வேட்களம் கைதொழுது இருப்பனாகில் எனக்கு இடர் இல்லையே மேல் #1488 வேட்களத்து உறை வேதியன் எம் இறை ஆக்கள் ஏறுவர் ஆன் ஐஞ்சும் ஆடுவர் பூக்கள் கொண்டு அவன் பொன் அடி போற்றினால் காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே மேல் #1489 அல்லல் இல்லை அருவினைதான் இல்லை மல்கு வெண் பிறை சூடும் மணாளனார் செல்வனார் திரு வேட்களம் கைதொழ வல்லராகில் வழி அது காண்-மினே மேல் #1490 துன்பம் இல்லை துயர் இல்லை யாம் இனி நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் எம் பொனார் உறை வேட்களம் நல் நகர் இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே மேல் #1491 கட்டப்பட்டு கவலையில் வீழாதே பொட்ட வல் உயிர் போவதன் முன்னம் நீர் சிட்டனார் திரு வேட்களம் கைதொழ பட்ட வல்வினை ஆயன பாறுமே மேல் #1492 வட்ட மென்முலையாள் உமை_பங்கனார் எட்டும் ஒன்றும் இரண்டும் மூன்று ஆயினார் சிட்டர் சேர் திரு வேட்களம் கைதொழுது இட்டம் ஆகி இரு மட நெஞ்சமே மேல் #1493 நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் இட்டத்தால் இனிது ஆக நினை-மினோ வட்ட வார்முலையாள் உமை_பங்கனார் சிட்டனார் திரு வேட்களம்-தன்னையே மேல் #1494 வட்ட மா மதில் மூன்று உடை வல் அரண் சுட்ட கொள்கையாராயினும் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் சிட்டர் போல் திரு வேட்கள செல்வரே மேல் #1495 சேடனார் உறையும் செழு மா மலை ஓடி அங்கு எடுத்தான் முடிவத்து இற வாட ஊன்றி மலர் அடி வாங்கிய வேடனார் உறை வேட்களம் சேர்-மினே மேல் 43. திருநல்லம் - திருக்குறுந்தொகை #1496 கொல்லத்தான் நமனார் தமர் வந்த-கால் இல்லத்தார் செய்யல் ஆவது என் ஏழைகாள் நல்லத்தான் நமை ஆள்உடையான் கழல் சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே மேல் #1497 பொக்கம் பேசி பொழுது கழியாதே துக்கம் தீர் வகை சொல்லுவன் கேண்-மினோ தக்கன் வேள்வி தகர்த்த தழல்_வண்ணன் நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே மேல் #1498 பிணிகொள் வார் குழல் பேதையர் காதலால் பணிகள் மேவி பயன் இல்லை பாவிகாள் அணுக வேண்டில் அரன் நெறி ஆவது நணுகும் நாதன் நகர் திரு நல்லமே மேல் #1499 தமக்கு நல்லது தம் உயிர் போயினால் இமைக்கும்போதும் இராது இ குரம்பைதான் உமைக்கு நல்லவன்தான் உறையும் பதி நமக்கு நல்லது நல்லம் அடைவதே மேல் #1500 உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் நரை விடை உடையான் இடம் நல்லமே பரவு-மின் பணி-மின் பணிவாரொடே விரவு-மின் விரைவாரை விடு-மினே மேல் #1501 அல்லல் ஆக ஐம்பூதங்கள் ஆட்டினும் வல்ல ஆறு சிவாயநம என்று நல்லம் மேவிய நாதன் அடி தொழ வெல்ல வந்த வினை பகை வீடுமே மேல் #1502 மாதராரொடு மக்களும் சுற்றமும் பேதம் ஆகி பிரிவதன் முன்னமே நாதன் மேவிய நல்லம் நகர் தொழ போது-மின் எழு-மின் புகல் ஆகுமே மேல் #1503 வெம்மை ஆன வினை கடல் நீங்கி நீர் செம்மை ஆய சிவகதி சேரல் ஆம் சும்மை ஆர் மலர் தூவி தொழு-மினோ நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே மேல் #1504 காலம் ஆன கழிவதன் முன்னமே ஏலும் ஆறு வணங்கி நின்று ஏத்து-மின் மாலும் மா மலரானொடு மா மறை நாலும் வல்லவர் கோன் இடம் நல்லமே மேல் #1505 மல்லை மல்கிய தோள் அரக்கன் வலி ஒல்லையில் ஒழித்தான் உறையும் பதி நல்ல நல்லம் எனும் பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூ நெறி சேர்வரே மேல் 44. திருஆமாத்தூர் - திருக்குறுந்தொகை #1506 மா மாத்து ஆகிய மால் அயன் மால் கொடு தாமா தேடியும் காண்கிலர் தாள் முடி ஆமாத்தூர் அரனே அருளாய் என்றுஎன்று ஏமாப்பு எய்தி கண்டார் இறையானையே மேல் #1507 சந்தியானை சமாதி செய்வார்-தங்கள் புந்தியானை புத்தேளிர் தொழப்படும் அந்தியானை ஆமாத்தூர் அழகனை சிந்தியாதவர் தீவினையாளரே மேல் #1508 காமாத்தம் எனும் கார் வலை பட்டு நான் போம் ஆத்தை அறியாது புலம்புவேன் ஆமாத்தூர் அரனே என்று அழைத்தலும் தேமா தீம் கனி போல தித்திக்குமே மேல் #1509 பஞ்சபூத வலையில் படுவதற்கு அஞ்சி நானும் ஆமாத்தூர் அழகனை நெஞ்சினால் நினைந்தேன் நினைவு எய்தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்-மினே மேல் #1510 குரா மன்னும் குழலாள் ஒருகூறனார் அரா மன்னும் சடையான் திரு ஆமாத்தூர் இராமனும் வழிபாடுசெய் ஈசனை நிராமயன்-தனை நாளும் நினை-மினே மேல் #1511 பித்தனை பெரும் தேவர் தொழப்படும் அத்தனை அணி ஆமாத்தூர் மேவிய முத்தினை அடியேன் உள் முயறலும் பத்தி வெள்ளம் பரந்தது காண்-மினே மேல் #1512 நீற்றின் ஆர் திரு மேனியன் நேர்_இழை கூற்றினான் குழல் கோல சடையில் ஓர் ஆற்றினான் அணி ஆமாத்தூர் மேவிய ஏற்றினான் எமை ஆள் உடை ஈசனே மேல் #1513 பண்ணில் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்கு அண்ணித்து ஆகும் அமுதினை ஆமாத்தூர் சண்ணிப்பானை தமர்க்கு அணித்து ஆயது ஓர் கண்ணில் பாவை அன்னான் அவன் காண்-மினே மேல் #1514 குண்டர் பீலிகள் கொள்ளும் குணம் இலா மிண்டரோடு எனை வேறுபடுத்து உய கொண்ட நாதன் குளிர் புனல் வீரட்டத்து அண்டனார் இடம் ஆமாத்தூர் காண்-மினே மேல் #1515 வானம் சாடும் மதி அரவத்தொடு தான் அஞ்சாது உடன்வைத்த சடையிடை தேன் அஞ்சு ஆடிய தெங்கு இளநீரொடும் ஆன் அஞ்சு ஆடிய ஆமாத்தூர் ஐயனே மேல் #1516 விடலையாய் விலங்கல் எடுத்தான் முடி அடர ஓர் விரல் ஊன்றிய ஆமாத்தூர் இடம் அதா கொண்ட ஈசனுக்கு என் உளம் இடம் அதாக கொண்டு இன்புற்று இருப்பனே மேல் 45. திருத்தோணிபுரம் - திருக்குறுந்தொகை #1517 மாது இயன்று மனைக்கு இரு என்ற-கால் நீதிதான் சொல நீ எனக்கு ஆர் எனும் சோதி ஆர்தரு தோணிபுரவர்க்கு தாதி ஆவன் நான் என்னும் என் தையலே மேல் #1518 நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் மிக்க தையலை வெள் வளை கொள்வது தொக்க நீர் வயல் தோணிபுரவர்க்கு தக்கது அன்று தமது பெருமைக்கே மேல் #1519 கெண்டை போல் நயனத்து இமவான்மகள் வண்டு வார் குழலாள் உடன் ஆகவே துண்ட வான் பிறை தோணிபுரவரை கண்டு காமுறுகின்றனள் கன்னியே மேல் #1520 பாலையாழ்மொழியாள் அவள் தாழ் சடை மேலள் ஆவது கண்டனள் விண்ணுற சோலை ஆர்தரு தோணிபுரவர்க்கு சால நல்லள் ஆகின்றனள் தையலே மேல் #1521 பண்ணின் நேர்மொழியாள் பலி இட்ட இ பெண்ணை மால்கொடு பெய் வளை கொள்வது சுண்ணம் ஆடிய தோணிபுரத்து உறை அண்ணலாருக்கு சால அழகிதே மேல் #1522 முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு அல்லன் ஆவது அறிந்திலை நீ கனி தொல்லை ஆர் பொழில் தோணிபுரவர்க்கே நல்லை ஆயிடுகின்றனை நங்கையே மேல் #1523 ஒன்றுதான் அறியார் உலகத்தவர் நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பு இலர் துன்று வார் பொழில் தோணிபுரவர்-தம் கொன்றை சூடும் குறிப்பு அது ஆகுமே மேல் #1524 உறவு பேய் கணம் உண்பது வெண் தலை உறைவது ஈமம் உடலில் ஓர் பெண்_கொடி துறைகள் ஆர் கடல் தோணிபுரத்து உறை இறைவனார்க்கு இவள் என் கண்டு அன்பு ஆவதே மேல் #1525 மாக யானை மருப்பு ஏர் முலையினர் போக யானும் அவள் புக்கதே புக தோகை சேர்தரு தோணிபுரவர்க்கே ஆக யானும் அவர்க்கு இனி ஆள் அதே மேல் #1526 இட்டம் ஆயின செய்வாள் என் பெண்_கொடி கட்டம் பேசிய கார் அரக்கன்-தனை துட்டு அடக்கிய தோணிபுரத்து உறை அட்டமூர்த்திக்கு அன்பு அது ஆகியே மேல் 46. திருப்புகலூர் - திருக்குறுந்தொகை #1527 துன்ன கோவண சுண்ண வெண் நீறு அணி பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் என்னுக்கோ உடன்வைத்திட்டு இருப்பதே மேல் #1528 இரைக்கும் பாம்பும் எறிதரு திங்களும் நுரைக்கும் கங்கையும் நுண்ணிய செம் சடை புரைப்பு இலாத பொழில் புகலூரரை உரைக்குமா சொல்லி ஒள் வளை சோருமே மேல் #1529 ஊசல் ஆம் அரவு அல்குல் என் சோர் குழல் ஏசல் ஆம் பழி தந்து எழில் கொண்டனர் ஓ சொலாய் மகளே முறையோ என்று பூசல் நாம் இடுதும் புகலூர்க்கே மேல் #1530 மின்னின்நேர்இடையாள் உமை_பங்கனை தன்னை நேர் ஒப்பு இலாத தலைவனை புன்னை காவல் பொழில் புகலூரனை என்னுள் ஆக வைத்து இன்புற்று இருப்பனே மேல் #1531 விண்ணின் ஆர் மதி சூடிய வேந்தனை எண்ணி நாமங்கள் ஓதி எழுத்து அஞ்சும் கண்ணினால் கழல் காண்பு இடம் ஏது எனில் புண்ணியன் புகலூரும் என் நெஞ்சுமே மேல் #1532 அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு பண்டு நான்மறை ஓதிய பாடலன் தொண்டர் ஆகி தொழுது மதிப்பவர் புண்டரீகத்து உளார் புகலூரரே மேல் #1533 தத்துவம் தலை கண்டு அறிவார் இலை தத்துவம் தலை கண்டவர் கண்டிலர் தத்துவம் தலைநின்றவர்க்கு அல்லது தத்துவன்அலன் தண் புகலூரனே மேல் #1534 பெரும் கை ஆகி பிளிறி வருவது ஓர் கரும் கை யானை களிற்று உரி போர்த்தவர் வரும் கை யானை மத களிறு அஞ்சினை பொரும் கை யானை கண்டீர் புகலூரரே மேல் #1535 பொன் ஒத்தம் நிறத்தானும் பொரு கடல் தன் ஒத்தம் நிறத்தானும் அறிகிலா புன்னை தாது பொழில் புகலூரரை என் அத்தா என என் இடர் தீருமே மேல் #1536 மத்தனாய் மதியாது மலை-தனை எத்தினான் திரள் தோள் முடி பத்து இற ஒத்தினான் விரலால் ஒருங்கு ஏத்தலும் பொத்தினான் புகலூரை தொழு-மினே மேல் 47. திருவேகம்பம் - திருக்குறுந்தொகை #1537 பண்டு செய்த பழவினையின் பயன் கண்டும்கண்டும் களித்தி காண் நெஞ்சமே வண்டு உலாம் மலர் செம் சடை ஏகம்பன் தொண்டனாய் திரியாய் துயர் தீரவே மேல் #1538 நச்சி நாளும் நயந்து அடியார் தொழ இச்சையால் உமை நங்கை வழிபட கொச்சையார் குறுகார் செறி தீம் பொழில் கச்சி ஏகம்பமே கைதொழு-மினே மேல் #1539 ஊன் நிலாவி இயங்கி உலகு எலாம் தான் உலாவிய தன்மையராகிலும் வான் உலாவிய பாணி பிறங்க வெம் கானில் ஆடுவர் கச்சி ஏகம்பரே மேல் #1540 இமையா முக்கணர் என் நெஞ்சத்து உள்ளவர் தமை யாரும் அறிவு ஒண்ணா தகைமையர் இமையோர் ஏத்த இருந்தவன் ஏகம்பன் நமை ஆளும் அவனை தொழு-மின்களே மேல் #1541 மருத்தினோடு நல் சுற்றமும் மக்களும் பொருந்தி நின்று எனக்கு ஆய எம் புண்ணியன் கருந்தடங்கண்ணினாள் உமை கைதொழ இருந்தவன் கச்சி ஏகம்பத்து எந்தையே மேல் #1542 பொருளினோடு நல் சுற்றமும் பற்று இலர்க்கு அருளும் நன்மை தந்து ஆய அரும் பொருள் சுருள் கொள் செஞ்சடையான் கச்சி ஏகம்பம் இருள் கெட சென்று கைதொழுது ஏத்துமே மேல் #1543 மூக்கு வாய் செவி கண் உடல் ஆகி வந்து ஆக்கும் ஐவர்-தம் ஆப்பை அவிழ்த்து அருள் நோக்குவான் நமை நோய் வினை வாராமே காக்கும் நாயகன் கச்சி ஏகம்பனே மேல் #1544 பண்ணில் ஓசை பழத்தினில் இன் சுவை பெண்ணொடு ஆண் என்று பேசற்கு அரியவன் வண்ணமில்லி வடிவு வேறு ஆயவன் கண்ணில் உள் மணி கச்சி ஏகம்பனே மேல் #1545 திருவின்_நாயகன் செம் மலர் மேல் அயன் வெருவ நீண்ட விளங்கு ஒளி சோதியான் ஒருவனாய் உணர்வாய் உணர்வு அல்லது ஓர் கருவுள்_நாயகன் கச்சி ஏகம்பனே மேல் #1546 இடுகு நுண் இடை ஏந்து இள மென் முலை வடிவின் மாதர் திறம் மனம் வையன்-மின் பொடி கொள் மேனியன் பூம் பொழில் கச்சியுள் அடிகள் எம்மை அரும் துயர் தீர்ப்பரே மேல் #1547 இலங்கை வேந்தன் இராவணன் சென்று தன் விலங்கலை எடுக்க விரல் ஊன்றலும் கலங்கி கச்சி ஏகம்பவோ என்றலும் நலம் கொள் செலவு அளித்தான் எங்கள் நாதனே மேல் 48. திருவேகம்பம் - திருக்குறுந்தொகை #1548 பூமேலானும் பூமகள்_கேள்வனும் நாமே தேவர் எனாமை நடுக்குற தீ மேவும் உருவா திரு ஏகம்பா ஆமோ அல்லல்பட அடியோங்களே மேல் #1549 அரும் திறல் அமரர் அயன் மாலொடு திருந்த நின்று வழிபட தேவியோடு இருந்தவன் எழில் ஆர் கச்சி ஏகம்பம் பொருந்த சென்று புடைபட்டு எழுதுமே மேல் #1550 கறை கொள் கண்டத்து எண் தோள் இறை முக்கணன் மறை கொள் நாவினன் வானவர்க்கு ஆதியான் உறையும் பூம் பொழில் சூழ் கச்சி ஏகம்பம் முறைமையால் சென்று முந்தி தொழுதுமே மேல் #1551 பொறி புலன்களை போக்கு அறுத்து உள்ளத்தை நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்புறும் அமுது ஆயவன் ஏகம்பம் குறிப்பினால் சென்று கூடி தொழுதுமே மேல் #1552 சிந்தையுள் சிவமாய் நின்ற செம்மையோடு அந்தியாய் அனலாய் புனல் வானமாய் புந்தியாய் புகுந்து உள்ளம் நிறைந்த எம் எந்தை ஏகம்பம் ஏத்தி தொழு-மினே மேல் #1553 சாக்கியத்தொடு மற்றும் சமண் படும் பாக்கியம் இலார் பாடு செலாது உற பூ கொள் சேவடியான் கச்சி ஏகம்பம் நாக்கொடு ஏத்தி நயந்து தொழுதுமே மேல் #1554 மூப்பினோடு முனிவு உறுத்து எம்தமை ஆர்ப்பதன் முன் அணி அமரர்க்கு இறை காப்பது ஆய கடி பொழில் ஏகம்பம் சேர்ப்பு அது ஆக நாம் சென்று அடைந்து உய்துமே மேல் #1555 ஆலும் மா மயில் சாயல் நல்லாரொடும் சால நீ உறு மால் தவிர் நெஞ்சமே நீல மா மிடற்று அண்ணல் ஏகம்பனார் கோல மா மலர் பாதமே கும்பிடே மேல் #1556 பொய் அனைத்தையும் விட்டவர் புந்தியுள் மெய்யனை சுடர் வெண் மழு ஏந்திய கையனை கச்சி ஏகம்பம் மேவிய ஐயனை தொழுவார்க்கு இல்லை அல்லலே மேல் #1557 அரக்கன் தன் வலி உன்னி கயிலையை நெருக்கி சென்று எடுத்தான் முடி தோள் நெரித்து இரக்க இன்னிசை கேட்டவன் ஏகம்பம் தருக்கு அது ஆக நாம் சார்ந்து தொழுதுமே மேல் 49. திருவெண்காடு - திருக்குறுந்தொகை #1558 பண் காட்டி படி ஆய தன் பத்தர்க்கு கண் காட்டி கண்ணில் நின்ற மணி ஒக்கும் பெண் காட்டி பிறை சென்னி வைத்தான் திரு வெண்காட்டை அடைந்து உய் மட நெஞ்சமே மேல் #1559 கொள்ளி வெம் தழல் வீசி நின்று ஆடுவார் ஒள்ளிய கணம் சூழ் உமை_பங்கனார் வெள்ளியன் கரியன் பசு ஏறிய தெள்ளியன் திரு வெண்காடு அடை நெஞ்சே மேல் #1560 ஊன் நோக்கும் இன்பம் வேண்டி உழலாதே வான் நோக்கும் வழி ஆவது நின்-மினோ தான் நோக்கும் தன் அடியவர் நாவினில் தேன் நோக்கும் திரு வெண்காடு அடை நெஞ்சே மேல் #1561 பரு வெண் கோட்டு பைம் கண் மத வேழத்தின் உருவம் காட்டி நின்றான் உமை அஞ்சவே பெரு வெண் காட்டு இறைவன் உறையும் இடம் திரு வெண்காடு அடைந்து உய் மட நெஞ்சமே மேல் #1562 பற்று அவன் கங்கை பாம்பு மதியுடன் உற்ற வன் சடையான் உயர் ஞானங்கள் கற்றவன் கயவர் புரம் ஓர் அம்பால் செற்றவன் திரு வெண்காடு அடை நெஞ்சே மேல் #1563 கூடினான் உமையாள் ஒருபாகமாய் வேடனாய் விசயற்கு அருள்செய்தவன் சேடனார் சிவனார் சிந்தை மேய வெண் காடனார் அடியே அடை நெஞ்சமே மேல் #1564 தரித்தவன் கங்கை பாம்பு மதியுடன் புரித்த புன்சடையான் கயவர் புரம் எரித்தவன் மறை நான்கினோடு ஆறு அங்கம் விரித்தவன் உறை வெண்காடு அடை நெஞ்சே மேல் #1565 பட்டம் இண்டை அவை கொடு பத்தர்கள் சிட்டன் ஆதி என்று சிந்தைசெய்யவே நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற அட்டமூர்த்தி-தன் வெண்காடு அடை நெஞ்சே மேல் #1566 ஏன வேடத்தினானும் பிரமனும் தான் அ வேடம் முன் தாழ்ந்து அறிகின்றிலா ஞான வேடன் விசயற்கு அருள்செய்யும் கான வேடன்-தன் வெண்காடு அடை நெஞ்சே மேல் #1567 பாலை ஆடுவர் பல் மறை ஓதுவர் சேலை ஆடிய கண் உமை பங்கனார் வேலை ஆர் விடம் உண்ட வெண்காடர்க்கு மாலை ஆவது மாண்டவர் அங்கமே மேல் #1568 இரா வணம் செய மா மதி பற்று அ ஐ யிராவணம் உடையான்-தனை உள்கு-மின் இராவணன்-தனை ஊன்றி அருள்செய்த இரா_வணன் திரு வெண்காடு அடை-மினே மேல் 50. திருவாய்மூர் - திருக்குறுந்தொகை #1569 எங்கே என்ன இருந்த இடம் தேடிக்கொண்டு அங்கே வந்து அடையாளம் அருளினார் தெங்கே தோன்றும் திரு வாய்மூர் செல்வனார் அங்கே வா என்று போனார் அது என்-கொலோ மேல் #1570 மன்னு மா மறைக்காட்டு மணாளனார் உன்னிஉன்னி உறங்குகின்றேனுக்கு தன்னை வாய்மூர் தலைவன் ஆமா சொல்லி என்னை வா என்று போனார் அது என்-கொலோ மேல் #1571 தஞ்சே கண்டேன் தரிக்கிலாது ஆர் என்றேன் அஞ்சேல் உன்னை அழைக்க வந்தேன் என்றார் உஞ்சேன் என்று உகந்தே எழுந்து ஓட்டந்தேன் வஞ்சே வல்லரே வாய்மூர் அடிகளே மேல் #1572 கழிய கண்டிலேன் கண் எதிரே கண்டேன் ஒழிய போந்திலேன் ஒக்கவே ஓட்டந்தேன் வழியில் கண்டிலேன் வாய்மூர் அடிகள்-தம் சுழியில் பட்டு சுழல்கின்றது என்-கொலோ மேல் #1573 ஒள்ளியார் இவர் அன்றி மற்று இல்லை என்று உள்கிஉள்கி உகந்து இருந்தேனுக்கு தெள்ளியார் இவர் போல திரு வாய்மூர் கள்ளியார் அவர் போல கரந்ததே மேல் #1574 யாதே செய்தும் யாம் அலோம் நீ என்னில் ஆதே ஏயும் அளவு இல் பெருமையான் மா தேவு ஆகிய வாய்மூர் மருவினார் போதே என்றும் புகுந்ததும் பொய்-கொலோ மேல் #1575 பாடி பெற்ற பரிசில் பழம் காசு வாடி வாட்டம் தவிர்ப்பார் அவரை போல் தேடிக்கொண்டு திரு வாய்மூர்க்கே எனா ஓடி போந்து இங்கு ஒளித்த ஆறு என்-கொலோ மேல் #1576 திறக்க பாடிய என்னினும் செந்தமிழ் உறைப்பு பாடி அடைப்பித்தார் உ நின்றார் மறைக்க வல்லரோ தம்மை திரு வாய்மூர் பிறை கொள் செஞ்சடையார் இவர் பித்தரே மேல் #1577 தனக்கு எறாமை தவிர்க்க என்று வேண்டினும் நினைத்தேன் பொய்க்கு அருள்செய்திடும் நின்மலன் எனக்கே வந்து எதிர் வாய்மூருக்கே எனா புனற்கே பொன் கோயில் புக்கதும் பொய்-கொலோ மேல் #1578 தீண்டற்கு அரிய திருவடி ஒன்றினால் மீண்டற்கும் மிதித்தார் அரக்கன்-தனை வேண்டிக்கொண்டேன் திரு வாய்மூர் விளக்கினை தூண்டிக்கொள்வன் நான் என்றலும் தோன்றுமே மேல் 51. திருப்பாலைத்துறை - திருக்குறுந்தொகை #1579 நீல மா மணி_கண்டத்தர் நீள் சடை கோல மா மதி கங்கையும் கூட்டினார் சூலம் மான் மழு ஏந்தி சுடர் முடி பால் நெய் ஆடுவர் பாலைத்துறையரே மேல் #1580 கவள மா களிற்றின் உரி போர்த்தவர் தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் திவள வானவர் போற்றி திசை தொழும் பவள மேனியர் பாலைத்துறையரே மேல் #1581 மின்னின் நுண் இடை கன்னியர் மிக்கு எங்கும் பொன்னி நீர் மூழ்கி போற்றி அடி தொழ மன்னி நான்மறையோடு பல் கீதமும் பன்னினார் அவர் பாலைத்துறையரே மேல் #1582 நீடு காடு இடமாய் நின்ற பேய் கணம் கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே ஆடினார் அழகு ஆகிய நான்மறை பாடினார் அவர் பாலைத்துறையரே மேல் #1583 சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர் பித்தர் நான்மறை வேதியர் பேணிய அத்தனே நமை ஆள்உடையாய் எனும் பத்தர்கட்கு அன்பர் பாலைத்துறையரே மேல் #1584 விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் மண்ணினார் மறவாது சிவாய என்று எண்ணினார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் அவர் பாலைத்துறையரே மேல் #1585 குரவனார் கொடுகொட்டியும் கொக்கரை விரவினார் பண் கெழுமிய வீணையும் மருவு நாள் மலர் மல்லிகை செண்பகம் பரவு நீர் பொன்னி பாலைத்துறையரே மேல் #1586 தொடரும் தொண்டரை துக்கம் தொடர்ந்து வந்து அடரும்போது அரனாய் அருள்செய்பவர் கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் படரும் செம் சடை பாலைத்துறையரே மேல் #1587 மேகம் தோய் பிறை சூடுவர் மேகலை நாகம் தோய்ந்த அரையினர் நல் இயல் போகம் தோய்ந்த புணர் முலை மங்கை ஓர் பாகம் தோய்ந்தவர் பாலைத்துறையரே மேல் #1588 வெம் கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர் அம் கணார் அடியார்க்கு அருள் நல்குவர் செங்கண்மால் அயன் தேடற்கு அரியவர் பைம் கண் ஏற்றினர் பாலைத்துறையரே மேல் #1589 உரத்தினால் அரக்கன் உயர் மா மலை நெருக்கினானை நெரித்து அவன் பாடலும் இரக்கமா அருள்செய்த பாலைத்துறை கரத்தினால் தொழுவார் வினை ஓயுமே மேல் 52. திருநாகேச்சரம் - திருக்குறுந்தொகை #1590 நல்லர் நல்லது ஓர் நாகம் கொண்டு ஆட்டுவர் வல்லர் வல்வினை தீர்க்கும் மருந்துகள் பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரி செல்வர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1591 நாவலம்பெருந்தீவினில் வாழ்பவர் மேவி வந்து வணங்கி வினையொடு பாவமாயின பற்று அறுவித்திடும் தேவர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1592 ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவர் ஆதியார் அயனோடு அமரர்க்கு எலாம் மாது ஒர்கூறர் மழு வலன் ஏந்திய நாதர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1593 சந்திரன்னொடு சூரியர்தாம் உடன் வந்து சீர் வழிபாடுகள் செய்த பின் ஐந்தலை அரவின் பணி கொண்டு அருள் மைந்தர் போல் மணி நாகேச்சுரவரே மேல் #1594 பண்டு ஓர் நாள் இகழ் வான் பழி தக்கனார் கொண்ட வேள்விக்கு மண்டை அது கெட தண்டமா விதாதாவின் தலை கொண்ட செண்டர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1595 வம்பு பூம் குழல் மாது மறுக ஓர் கம்ப யானை உரித்த கரத்தினர் செம்பொன் ஆர் இதழி மலர் செம் சடை நம்பர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1596 மானை ஏந்திய கையினர் மை அறு ஞான சோதியர் ஆதியர் நாமம்தான் ஆன அஞ்சுஎழுத்து ஓத வந்து அண்ணிக்கும் தேனர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1597 கழல் கொள் காலினர் காலனை காய்ந்தவர் தழல் கொள் மேனியர் சாந்த வெண் நீறு அணி அழகர் ஆல் நிழல் கீழ் அறம் ஓதிய குழகர் போல் குளிர் நாகேச்சுரவரே மேல் #1598 வட்ட மா மதில் மூன்றுடன் வல் அரண் சுட்ட செய்கையர் ஆகிலும் சூழ்ந்தவர் குட்ட வல்வினை தீர்த்து குளிர்விக்கும் சிட்டர் போல் திரு நாகேச்சுரவரே மேல் #1599 தூர்த்தன் தோள் முடி தாளும் தொலையவே சேர்த்தினார் திரு பாதத்து ஒரு விரல் ஆர்த்து வந்து உலகத்தவர் ஆடிடும் தீர்த்தர் போல் திரு நாகேச்சுரவரே மேல் 53. திருஅதிகை வீரட்டம் - திருக்குறுந்தொகை #1600 கோணல் மா மதி சூடி ஓர் கோவண நாண் இல் வாழ்க்கை நயந்தும் பயன் இலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டம் காணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1601 பண்ணினை பவள திரள் மா மணி அண்ணலை அமரர் தொழும் ஆதியை சுண்ண வெண்பொடியான் திரு வீரட்டம் நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1602 உற்றவர்-தம் உறு நோய் களைபவர் பெற்றம் ஏறும் பிறங்கு சடையினர் சுற்றும் பாய் புனல் சூழ் திரு வீரட்டம் கற்கில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1603 முற்றா வெண் மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழும் திரிபுரம் தீ எழ வில் தான் கொண்டு எயில் எய்தவர் வீரட்டம் கற்றால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1604 பல்லாரும் பல தேவர் பணிபவர் நல்லாரும் நயந்து ஏத்தப்படுபவன் வில்லால் மூஎயில் எய்தவன் வீரட்டம் கல்லேனாகில் என் கண் துயில் கொள்ளுமே மேல் #1605 வண்டு ஆர் கொன்றையும் மத்தம் வளர் சடை கொண்டான் கோல மதியோடு அரவமும் விண்டார் மும்மதில் எய்தவன் வீரட்டம் கண்டால் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1606 அரை ஆர் கோவண ஆடையன் ஆறு எலாம் திரை ஆர் ஒண் புனல் பாய் கெடில கரை விரை ஆர் நீற்றன் விளங்கு வீரட்டன்-பால் கரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே மேல் #1607 நீறு உடை தடம் தோள் உடை நின்மலன் ஆறு உடை புனல் பாய் கெடில கரை ஏறு உடை கொடியான் திரு வீரட்டம் கூறில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே மேல் #1608 செங்கண்மால் விடை ஏறிய செல்வனார் பைம் கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர் அம் கண் ஞாலம் அது ஆகிய வீரட்டம் கங்குல் ஆக என் கண் துயில் கொள்ளுமே மேல் #1609 பூண் நாண் ஆரம் பொருந்த உடையவர் நாண் ஆக வரை வில்லிடை அம்பினால் பேணார் மும்மதில் எய்தவன் வீரட்டம் காணேனாகில் என் கண் துயில் கொள்ளுமே மேல் #1610 வரை ஆர்ந்த வயிர திரள் மாணிக்கம் திரை ஆர்ந்த புனல் பாய் கெடில கரை விரை ஆர் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையேனாகில் என் கண் துயில் கொள்ளுமே மேல் #1611 உலந்தார் வெண் தலை உண்கலன் ஆகவே வலம்தான் மிக்க அ வாள் அரக்கன்-தனை சிலம்பு ஆர் சேவடி ஊன்றினான் வீரட்டம் புலம்பேனாகில் என் கண் துயில் கொள்ளுமே மேல் 54. திருஅதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை #1612 எட்டு நாள் மலர் கொண்டு அவன் சேவடி மட்டு அலர் இடுவார் வினை மாயுமால் கட்டி தேன் கலந்து அன்ன கெடில வீ ரட்டனார் அடி சேருமவருக்கே மேல் #1613 நீளமா நினைந்து எண் மலர் இட்டவர் கோள வல்வினையும் குறிவிப்பரால் வாளமா இழியும் கெடில கரை வேளி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே மேல் #1614 கள்ளின் நாள் மலர் ஓர் இரு_நான்கு கொண்டு உள்குவார் அவர் வல்வினை ஓட்டுவார் தெள்ளு நீர் வயல் பாய் கெடில கரை வெள்ளை நீறு அணி மேனி வீரட்டரே மேல் #1615 பூங்கொத்து ஆயின மூன்றொடு ஓர் ஐந்து இட்டு வாங்கி நின்றவர் வல்வினை ஓட்டுவார் வீங்கு தண் புனல் பாய் கெடில கரை வேங்கை தோல் உடை ஆடை வீரட்டரே மேல் #1616 தேன போதுகள் மூன்றொடு ஓர் ஐந்து உடன் தான் அப்போது இடுவார் வினை தீர்ப்பவர் மீன தண் புனல் பாய் கெடில கரை வேனல் ஆனை உரித்த வீரட்டரே மேல் #1617 ஏழி தொல் மலர் கொண்டு பணிந்தவர் ஊழி தொல்வினை ஓட அகற்றுவார் பாழி தண் புனல் பாய் கெடில கரை வேழத்தின் உரி போர்த்த வீரட்டரே மேல் #1618 உரைசெய் நூல் வழி ஒண் மலர் எட்டு இட திரைகள் போல் வரு வல்வினை தீர்ப்பரால் வரைகள் வந்து இழியும் கெடில கரை விரைகள் சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே மேல் #1619 ஓலி வண்டு அறை ஒண் மலர் எட்டினால் காலை ஏத்த வினையை கழிப்பரால் ஆலி வந்து இழியும் கெடில கரை வேலி சூழ்ந்து அழகு ஆய வீரட்டரே மேல் #1620 தாரித்து உள்ளி தட மலர் எட்டினால் பாரித்து ஏத்த வல்லார் வினை பாற்றுவார் மூரி தெண் திரை பாய் கெடில கரை வேரி செம் சடை வேய்ந்த வீரட்டரே மேல் #1621 அட்ட புட்பம் அவை கொளும் ஆறு கொண்டு அட்டமூர்த்தி அநாதிதன்-பால் அணைந்து அட்டும் ஆறு செய்கிற்ப அதிகை வீ ரட்டனார் அடி சேருமவர்களே மேல் 55. திருநாரையூர் - திருக்குறுந்தொகை #1622 வீறு தான் உடை வெற்பன்மடந்தை ஓர் கூறன் ஆகிலும் கூன் பிறை சூடிலும் நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறு சூடலும் அம்ம அழகிதே மேல் #1623 புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் வெள்ளி கொண்ட வெண் பூதி மெய் ஆடலும் நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை அள்ளி உண்டலும் அம்ம அழகிதே மேல் #1624 வேடு தங்கிய வேடமும் வெண் தலை ஓடு தங்கிய உண் பலி கொள்கையும் நாடு தங்கிய நாரையூரான் நடம் ஆடு பைம் கழல் அம்ம அழகிதே மேல் #1625 கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும் மிக்க வெண் தலை மாலை விரி சடை நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு அக்கின் ஆரமும் அம்ம அழகிதே மேல் #1626 வடி கொள் வெண் மழு மான் அமர் கைகளும் பொடி கொள் செம்பவளம் புரை மேனியும் நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் அடிகள்-தம் வடிவு அம்ம அழகிதே மேல் #1627 சூலம் மல்கிய கையும் சுடரொடு பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும் ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு ஆல நீழலும் அம்ம அழகிதே மேல் #1628 பண்ணின் நான்மறை பாடலொடு ஆடலும் எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும் நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் அண்ணலார் செய்கை அம்ம அழகிதே மேல் #1629 என்பு பூண்டு எருது ஏறி இளம் பிறை மின் புரிந்த சடை மேல் விளங்கவே நன் பகல் பலி தேரினும் நாரையூர் அன்பனுக்கு அது அம்ம அழகிதே மேல் #1630 முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு அரவும் பூணுதல் அம்ம அழகிதே மேல் #1631 கடுக்கை அம் சடையன் கயிலை மலை எடுத்த வாள் அரக்கன் தலை ஈர்_அஞ்சும் நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் அடுத்த தன்மையும் அம்ம அழகிதே மேல் 56. திருக்கோளிலி - திருக்குறுந்தொகை #1632 மை கொள் கண் உமை_பங்கினன் மான் மழு தொக்க கையினன் செய்யது ஓர் சோதியன் கொக்கு அமர் பொழில் சூழ்தரு கோளிலி நக்கனை தொழ நம் வினை நாசமே மேல் #1633 முத்தினை முதல் ஆகிய மூர்த்தியை வித்தினை விளைவு ஆய விகிர்தனை கொத்து அலர் பொழில் சூழ்தரு கோளிலி அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே மேல் #1634 வெண் திரை பரவை விடம் உண்டது ஓர் கண்டனை கலந்தார்-தமக்கு அன்பனை கொண்டல் அம் பொழில் கோளிலி மேவிய அண்டனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே மேல் #1635 பலவும் வல்வினை பாறும் பரிசினால் உலவும் கங்கையும் திங்களும் ஒண் சடை குலவினான் குளிரும் பொழில் கோளிலி நிலவினான்-தனை நித்தல் நினை-மினே மேல் #1636 அல்லல் ஆயின தீரும் அழகிய முல்லை வெண் முறுவல் உமை அஞ்சவே கொல்லை யானை உரத்தவன் கோளிலி செல்வன் சேவடி சென்று தொழு-மினே மேல் #1637 ஆவின் பால் கண்டு அளவு இல் அரும் தவ பாலன் வேண்டலும் செல் என்று பாற்கடல் கூவினான் குளிரும் பொழில் கோளிலி மேவினானை தொழ வினை வீடுமே மேல் #1638 சீர்த்த நல் மனையாளும் சிறுவரும் ஆர்த்த சுற்றமும் பற்று இலை ஆதலால் கூத்தனார் உறையும் திரு கோளிலி ஏத்தி நீர் தொழு-மின் இடர் தீருமே மேல் #1639 மால் அது ஆகி மயங்கும் மனிதர்காள் காலம் வந்து கடை முடியா முனம் கோல வார் பொழில் கோளிலி மேவிய நீல_கண்டனை நின்று நினை-மினே மேல் #1640 கேடு மூடி கிடந்து உண்ணும் நாடு அது தேடி நீர் திரியாதே சிவகதி கூடல் ஆம் திரு கோளிலி ஈசனை பாடு-மின் இரவோடு பகலுமே மேல் #1641 மடுத்து மா மலை ஏந்தலுற்றான்-தனை அடர்த்து பின்னும் இரங்கி அவற்கு அருள் கொடுத்தவன் உறை கோளிலியே தொழ விடுத்து நீங்கிடும் மேலை வினைகளே மேல் 57. திருக்கோளிலி - திருக்குறுந்தொகை #1642 முன்னமே நினையாது ஒழிந்தேன் உனை இன்னம் நான் உன சேவடி ஏத்திலேன் செந்நெல் ஆர் வயல் சூழ் திரு கோளிலி மன்னனே அடியேனை மறவலே மேல் #1643 விண்உளார் தொழுது ஏத்தும் விளக்கினை மண்உளார் வினை தீர்க்கும் மருந்தினை பண்உளார் பயிலும் திரு கோளிலி அண்ணலார் அடியே தொழுது உய்ம்-மினே மேல் #1644 நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் ஆளும் நோய்கள் ஓர் ஐம்பதோடு ஆறு எட்டும் ஏழைமைப்பட்டு இருந்து நீர் நையாதே கோளிலி அரன் பாதமே கூறுமே மேல் #1645 விழவின் ஓசை ஒலி அறா தண் பொழில் பழகினார் வினை தீர்க்கும் பழம் பதி அழல் கையான் அமரும் திரு கோளிலி குழகனார் திரு பாதமே கூறுமே மேல் #1646 மூலம் ஆகிய மூவர்க்கும் மூர்த்தியை காலன் ஆகிய காலற்கும் காலனை கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி சூலபாணி-தன் பாதம் தொழு-மினே மேல் #1647 காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் நீற்றனை நிமிர் புன் சடை அண்ணலை ஆற்றனை அமரும் திரு கோளிலி ஏற்றனார் அடியே தொழுது ஏத்துமே மேல் #1648 வேதம் ஆய விண்ணோர்கள் தலைவனை ஓதி மன் உயிர் ஏத்தும் ஒருவனை கோதி வண்டு அறையும் திரு கோளிலி வேத_நாயகன் பாதம் விரும்புமே மேல் #1649 நீதியால் தொழுவார்கள் தலைவனை வாதை ஆன விடுக்கும் மணியினை கேதி வண்டு அறையும் திரு கோளிலி வேத_நாயகன் நித்தல் நினை-மினே மேல் #1650 மாலும் நான்முகனாலும் அறிவு ஒணா பாலின் மென்மொழியாள் ஒருபங்கனை கோலம் ஆம் பொழில் சூழ் திரு கோளிலி நீல_கண்டனை நித்தல் நினை-மினே மேல் #1651 அரக்கன் ஆய இலங்கையர்_மன்னனை நெருக்கி அம் முடி பத்து இறுத்தான் அவற்கு இரக்கம் ஆகியவன் திரு கோளிலி அருத்தியாய் அடியே தொழுது உய்ம்-மினே மேல் 58. திருப்பழையாறைவடதளி - திருக்குறுந்தொகை #1652 தலை எலாம் பறிக்கும் சமண் கையர் உள் நிலையினால் மறைத்தால் மறைக்க ஒண்ணுமே அலையின் ஆர் பொழில் ஆறை வடதளி நிலையினான் அடியே நினைந்து உய்ம்-மினே மேல் #1653 மூக்கினால் முரன்று ஓதி அ குண்டிகை தூக்கினார் குலம் தூர் அறுத்தே தனக்கு ஆக்கினான் அணி ஆறை வடதளி நோக்கினார்க்கு இல்லையால் அரு நோய்களே மேல் #1654 குண்டரை குணமில்லரை கூறை இல் மிண்டரை துரந்த விமலன்-தனை அண்டரை பழையாறை வடதளி கண்டரை தொழுது உய்ந்தன கைகளே மேல் #1655 முடையரை தலை முண்டிக்கும் மொட்டரை கடையரை கடிந்தார் கனல் வெண் மழு படையரை பழையாறை வடதளி உடையரை குளிர்ந்து உள்கும் என் உள்ளமே மேல் #1656 ஒள் அரி கணார் முன் அமண் நின்று உணும் கள்ளரை கடிந்த கருப்பூறலை அள்ளல் அம் புனல் ஆறை வடதளி வள்ளலை புகழ துயர் வாடுமே மேல் #1657 நீதியை கெட நின்று அமணே உணும் சாதியை கெடுமா செய்த சங்கரன் ஆதியை பழையாறை வடதளி சோதியை தொழுவார் துயர் தீருமே மேல் #1658 திரட்டு இரை கவளம் திணிக்கும் சமண் பிரட்டரை பிரித்த பெருமான்-தனை அருள் திறத்து அணி ஆறை வடதளி தெருட்டரை தொழ தீவினை தீருமே மேல் #1659 ஓது இனத்து எழுத்து அஞ்சு உணரா சமண் வேதனைப்படுத்தானை வெம் கூற்று உதை பாதனை பழையாறை வடதளி நாதனை தொழ நம் வினை நாசமே மேல் #1660 வாய் இரும் தமிழே படித்து ஆள் உறா ஆயிரம் சமணும் அழிவு ஆக்கினான் பாய் இரும் புனல் ஆறை வடதளி மேயவன் என வல்வினை வீடுமே மேல் #1661 செருத்தனை செயும் சேண் அரக்கன் உடல் எருத்து இற விரலால் இறை ஊன்றிய அருத்தனை பழையாறை வடதளி திருத்தனை தொழுவார் வினை தேயுமே மேல் 59. திருமாற்பேறு - திருக்குறுந்தொகை #1662 பொரும் ஆற்றின் படை வேண்டி நல் பூம் புனல் வரும் ஆற்றின் மலர் கொண்டு வழிபடும் கருமாற்கு இன் அருள் செய்தவன் காண்தகு திரு மாற்பேறு தொழ வினை தேயுமே மேல் #1663 ஆலத்து ஆர் நிழலில் அறம் நால்வர்க்கு கோலத்தால் உரைசெய்தவன் குற்றம் இல் மாலுக்கு ஆர் அருள் செய்தவன் மாற்பேறு ஏலத்தான் தொழுவார்க்கு இடர் இல்லையே மேல் #1664 துணி வண்ண சுடர் ஆழி கொள்வான் எண்ணி அணி வண்ணத்து அலர்கொண்டு அடி அர்ச்சித்த மணி_வண்ணற்கு அருள் செய்தவன் மாற்பேறு பணி வண்ணத்தவர்க்கு இல்லை ஆம் பாவமே மேல் #1665 தீது அவை செய்து தீவினை வீழாதே காதல் செய்து கருத்தினில் நின்ற நல் மா தவர் பயில் மாற்பேறு கைதொழ போது-மின் வினை ஆயின போகுமே மேல் #1666 வார் கொள் மென் முலை மங்கை ஓர்பங்கினன் வார் கொள் நல் முரசம் அறைய அறை வார் கொள் பைம் பொழில் மாற்பேறு கைதொழு வார்கள் மன்னுவர் பொன்_உலகத்திலே மேல் #1667 பண்டை வல்வினை பற்று அறுக்கும் வகை உண்டு சொல்லுவன் கேண்-மின் ஒளி கிளர் வண்டு சேர் பொழில் சூழ் திரு மாற்பேறு கண்டு கைதொழ தீரும் கவலையே மேல் #1668 மழுவலான் திரு நாமம் மகிழ்ந்து உரைத்து அழ வலார்களுக்கு அன்புசெய்து இன்பொடும் வழு இலா அருள்செய்தவன் மாற்பேறு தொழ வலார்-தமக்கு இல்லை துயரமே மேல் #1669 முன்னவன் உலகுக்கு முழு மணி பொன் அவன் திகழ் முத்தொடு போகம் ஆம் மன்னவன் திரு மாற்பேறு கைதொழும் அன்னவர் எமை ஆள்உடையார்களே மேல் #1670 வேடனாய் விசயன்னொடும் எய்து வெம் காடு நீடு உகந்து ஆடிய கண்நுதல் மாடம் நீடு உயரும் திரு மாற்பேறு பாடுவார் பெறுவார் பரலோகமே மேல் #1671 கருத்தனாய் கயிலாய மலை-தனை தருக்கினால் எடுத்தானை தகரவே வருத்தி ஆர் அருள் செய்தவன் மாற்பேறு அருத்தியால் தொழுவார்க்கு இல்லை அல்லலே மேல் 60. திருமாற்பேறு - திருக்குறுந்தொகை #1672 ஏதும் ஒன்றும் அறிவிலராயினும் ஓதி அஞ்சுஎழுத்தும் உணர்வார்கட்கு பேதம் இன்றி அவரவர் உள்ளத்தே மாதும் தாமும் மகிழ்வர் மாற்பேறரே மேல் #1673 அச்சம் இல்லை நெஞ்சே அரன் நாமங்கள் நிச்சலும் நினையாய் வினை போய் அற கச்ச மா விடம் உண்ட கண்டா என வைச்ச மா நிதி ஆவர் மாற்பேறரே மேல் #1674 சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் கோத்திரமும் குலமும் கொண்டு என் செய்வீர் பாத்திரம் சிவன் என்று பணிதிரேல் மாத்திரைக்குள் அருளும் மாற்பேறரே மேல் #1675 இருந்து சொல்லுவன் கேண்-மின்கள் ஏழைகாள் அரும் தவம் தரும் அஞ்சுஎழுத்து ஓதினால் பொருந்து நோய் பிணி போக துரப்பது ஓர் மருந்தும் ஆகுவர் மன்னும் மாற்பேறரே மேல் #1676 சாற்றி சொல்லுவன் கேண்-மின் தரணியீர் ஏற்றின் மேல் வருவான் கழல் ஏத்தினால் கூற்றை நீக்கி குறைவு அறுத்து ஆள்வது ஓர் மாற்று இலா செம்பொன் ஆவர் மாற்பேறரே மேல் #1677 ஈட்டும் மா நிதி சால இழக்கினும் வீட்டும் காலன் விரைய அழைக்கினும் காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் வாட்டம் தீர்க்கவும் வல்லார் மாற்பேறரே மேல் #1678 ஐயனே அரனே என்று அரற்றினால் உய்யல் ஆம் உலகத்தவர் பேணுவர் செய்ய பாதம் இரண்டும் நினையவே வையம் ஆளவும் வைப்பர் மாற்பேறரே மேல் #1679 உந்தி சென்று மலையை எடுத்தவன் சந்து தோளொடு தாள் இற ஊன்றினான் மந்தி பாய் பொழில் சூழும் மாற்பேறு என அந்தம் இல்லது ஓர் இன்பம் அணுகுமே மேல் 61. திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை #1680 முத்து ஊரும் புனல் மொய் அரிசிற்கரை புத்தூரன் அடி போற்றி என்பார் எலாம் பொய்த்து ஊரும் புலன் ஐந்தொடு புல்கிய மைத்து ஊரும் வினை மாற்றவும் வல்லரே மேல் #1681 பிறை கணி சடை எம்பெருமான் என்று கறை கணித்தவர் கண்ட வணக்கத்தாய் உற கணித்து உருகா மனத்தார்களை புறக்கணித்திடும் புத்தூர் புனிதனே மேல் #1682 அரிசிலின் கரை மேல் அணி ஆர்தரு புரிசை நம் திரு புத்தூர் புனிதனை பரிசொடும் பரவி பணிவார்க்கு எலாம் துரிசு இல் நல் நெறி தோன்றிடும் காண்-மினே மேல் #1683 வேதனை மிகு வீணையில் மேவிய கீதனை கிளரும் நறும் கொன்றை அம் போதனை புனல் சூழ்ந்த புத்தூரனை நாதனை நினைந்து என் மனம் நையுமே மேல் #1684 அருப்பு போல் முலையார் அல்லல் வாழ்க்கை மேல் விருப்பு சேர் நிலை விட்டு நல் இட்டமாய் திரு புத்தூரனை சிந்தைசெயச்செய கருப்பு சாற்றிலும் அண்ணிக்கும் காண்-மினே மேல் #1685 பாம்பொடும் மதியும் படர் புன் சடை பூம் புனலும் பொதிந்த புத்தூர் உளான் நாம் பணிந்து அடி போற்றிட நாள்-தொறும் சாம்பல் என்பு தனக்கு அணி ஆகுமே மேல் #1686 கனல் அங்கை-தனில் ஏந்தி வெம் காட்டிடை அனல் அங்கு எய்தி நின்று ஆடுவர் பாடுவர் பினல் அம் செம் சடை மேல் பிலயம் தரு புனலும் சூடுவர் போலும் புத்தூரரே மேல் #1687 காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் ஏற்றினும் இசைந்து ஏறுவர் என்பொடு நீற்றினை அணிவர் நினைவாய் தமை போற்றி என்பவர்க்கு அன்பர் புத்தூரரே மேல் #1688 முன்னும் முப்புரம் செற்றனராயினும் அன்னம் ஒப்பர் அலந்து அடைந்தார்க்கு எலாம் மின்னும் ஒப்பர் விரி சடை மேனி செம் பொன்னும் ஒப்பர் புத்தூர் எம் புனிதரே மேல் #1689 செருத்தனால் தன தேர் செல உய்த்திடும் கருத்தனாய் கயிலை எடுத்தான் உடல் பருத்த தோள் கெட பாதத்து ஒரு விரல் பொருத்தினார் பொழில் ஆர்ந்த புத்தூரரே மேல் 62. கடுவாய்க்கரைத் திருப்புத்தூர் - திருக்குறுந்தொகை #1690 ஒருத்தனை மூஉலகொடு தேவர்க்கும் அருத்தனை அடியேன் மனத்துள் அமர் கருத்தனை கடுவாய் புனல் ஆடிய திருத்தனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே மேல் #1691 யாவரும் அறிதற்கு அரியான்-தனை மூவரின் முதல் ஆகிய மூர்த்தியை நாவின் நல் உரை ஆகிய நாதனை தேவனை புத்தூர் சென்று கண்டு உய்ந்தெனே மேல் #1692 அன்பனை அடியார் இடர்நீக்கியை செம்பொனை திகழும் திருக்கச்சி ஏ கம்பனை கடுவாய்க்கரை தென் புத்தூர் நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே மேல் #1693 மா தனத்தை மா தேவனை மாறு இலா கோதனத்தில் ஐந்து ஆடியை வெண் குழை காதனை கடுவாய்க்கரை தென் புத்தூர் நாதனை கண்டு நான் உய்யப்பெற்றெனே மேல் #1694 குண்டுபட்ட குற்றம் தவிர்த்து என்னை ஆட் கொண்டு நல் திறம் காட்டிய கூத்தனை கண்டனை கடுவாய்க்கரை தென் புத்தூர் அண்டனை கண்டு அருவினை அற்றெனே மேல் #1695 பந்தபாசம் அறுத்து எனை ஆட்கொண்ட மைந்தனை மணவாளனை மா மலர் கந்த நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் எந்தை ஈசனை கண்டு இனிது ஆயிற்றே மேல் #1696 உம்பரானை உருத்திரமூர்த்தியை அம்பரானை அமலனை ஆதியை கம்பு நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் எம்பிரானை கண்டு இன்பம் அது ஆயிற்றே மேல் #1697 மாசு ஆர் பாச மயக்கு அறுவித்து எனுள் நேசம் ஆகிய நித்த மணாளனை பூசம் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் ஈசனே என இன்பம் அது ஆயிற்றே மேல் #1698 இடுவார் இட்ட கவளம் கவர்ந்து இரு கடு வாய் இட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய் தென் கரை புத்தூர் அடிகட்கு ஆட் படவே பெற்று நான் பாக்கியம் செய்தெனே மேல் #1699 அரக்கன் ஆற்றல் அழித்து அவன் பாடல் கேட்டு இரக்கம் ஆகி அருள்புரி ஈசனை திரை கொள் நீர் கடுவாய்க்கரை தென் புத்தூர் இருக்கும் நாதனை காணப்பெற்று உய்ந்தெனே மேல் 63. திருதென்குரங்காடுதுறை - திருக்குறுந்தொகை #1700 இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப் புரம் காவல் அழிய பொடி ஆக்கினான் தரங்கு ஆடும் தட நீர் பொன்னி தென் கரை குரங்காடுதுறை கோல கபாலியே மேல் #1701 முத்தினை மணியை பவளத்து ஒளிர் தொத்தினை சுடர் சோதியை சோலை சூழ் கொத்து அலர் குரங்காடுதுறை உறை அத்தன் என்ன அண்ணித்திட்டு இருந்ததே மேல் #1702 குளிர் புனல் குரங்காடுதுறையனை தளிர் நிற தையல்_பங்கனை தண் மதி ஒளியனை நினைந்தேனுக்கு என் உள்ளமும் தெளிவினை தெளிய தெளிந்திட்டதே மேல் #1703 மணவன் காண் மலையாள் நெடு மங்கல கணவன் காண் கலை ஞானிகள் காதல் எண் குணவன் காண் குரங்காடுதுறைதனில் அணவன் காண் அன்புசெய்யும் அடியர்க்கே மேல் #1704 ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன் காலத்தான் உயிர் போக்கிய காலினன் நீலத்து ஆர் மிடற்றான் வெள்ளை நீறு அணி கோலத்தான் குரங்காடுதுறையனே மேல் #1705 ஆட்டினான் முன் அமணரோடு என்தனை பாட்டினான் தன பொன் அடிக்கு இன்னிசை வீட்டினான் வினை மெய் அடியாரொடும் கூட்டினான் குரங்காடுதுறையனே மேல் #1706 மாத்தன்தான் மறையார் முறையால் மறை ஓத்தன் தாருகன்-தன் உயிர் உண்ட பெண் போத்தன்தான் அவள் பொங்கு சினம் தணி கூத்தன்தான் குரங்காடுதுறையனே மேல் #1707 நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் ஆடு-மின் அழு-மின் தொழு-மின் அடி பாடு-மின் பரமன் பயிலும் இடம் கூடு-மின் குரங்காடுதுறையையே மேல் #1708 தென்றல் நல் நெடும் தேர் உடையான் உடல் போன்ற வெம் கனல் பொங்க விழித்தவன் அன்று அ அந்தகனை அயில் சூலத்தால் கொன்றவன் குரங்காடுதுறையனே மேல் #1709 நல் தவம் செய்த நால்வர்க்கும் நல் அறம் உற்ற நல் மொழியால் அருள்செய்த நல் கொற்றவன் குரங்காடுதுறை தொழ பற்றும் தீவினை ஆயின பாறுமே மேல் #1710 கடுத்த தேர் அரக்கன் கயிலை மலை எடுத்த தோள் தலை இற்று அலற விரல் அடுத்தலும் அவன் இன்னிசை கேட்டு அருள் கொடுத்தவன் குரங்காடுதுறையனே மேல் 64. திருக்கோழம்பம் - திருக்குறுந்தொகை #1711 வேழம்பத்து ஐவர் வேண்டிற்று வேண்டி போய் ஆழம் பற்றி வீழ்வார் பல ஆதர்கள் கோழம் பத்து உறை கூத்தன் குரை கழல் தாழும் பத்தர்கள் சால சதுரரே மேல் #1712 கயிலை நல் மலை ஆளும் கபாலியை மயில் இயல் மலைமாதின் மணாளனை குயில் பயில் பொழில் கோழம்பம் மேய என் உயிரினை நினைந்து உள்ளம் உருகுமே மேல் #1713 வாழும் பான்மையர் ஆகிய வான் செல்வம் தாழும் பான்மையர் ஆகி தம் வாயினால் தாழம்பூ மணம் நாறிய தாழ் பொழில் கோழம்பா என கூடிய செல்வமே மேல் #1714 பாடல் ஆக்கிடும் பண்ணொடு பெண் இவள் கூடல் ஆக்கிடும் குன்றின் மணல் கொடு கோடல் பூத்து அலர் கோழம்பத்துள் மகிழ்ந்து ஆடும் கூத்தனுக்கு அன்புபட்டாள் அன்றே மேல் #1715 தளிர் கொள் மேனியள்தான் மிக அஞ்ச ஓர் பிளிறு வாரணத்து ஈர் உரி போர்த்தவன் குளிர் கொள் நீள் வயல் கோழம்பம் மேவினான் நளிர் கொள் நீர் சடை மேலும் நயந்ததே மேல் #1716 நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் வேத நாவர் விடை கொடியார் வெற்பில் கோதை மாதொடும் கோழம்பம் கோயில்கொண்ட ஆதி பாதம் அடைய வல்லார்களே மேல் #1717 முன்னை நான் செய்த பாவம் முதல் அற பின்னை நான் பெரிதும் அருள் பெற்றது அன்னம் ஆர் வயல் கோழம்பத்துள் அமர் பின்னல் வார்சடையானை பிதற்றியே மேல் #1718 ஏழைமாரிடம் நின்று இரு கை கொடு உண் கோழைமாரொடும் கூடிய குற்றம் ஆம் கூழை பாய் வயல் கோழம்பத்தான் அடி ஏழையேன் முன் மறந்து அங்கு இருந்ததே மேல் #1719 அரவு அணை பயில் மால் அயன் வந்து அடி பரவனை பரம் ஆம் பரஞ்சோதியை குரவனை குரவு ஆர் பொழில் கோழம்பத்து உரவனை ஒருவர்க்கு உணர்வு ஒண்ணுமே மேல் #1720 சமர சூரபன்மாவை தடிந்த வேல் குமரன் தாதை நன் கோழம்பம் மேவிய அமரர்_கோவினுக்கு அன்பு உடை தொண்டர்கள் அமரலோகம் அது ஆள்உடையார்களே மேல் #1721 துட்டன் ஆகி மலை எடுத்து அஃதின் கீழ் பட்டு வீழ்ந்து படர்ந்து உய்யப்போயினான் கொட்டம் நாறிய கோழம்பத்து ஈசன் என்று இட்ட கீதம் இசைத்த அரக்கனே மேல் 65. திருப்பூவனூர் - திருக்குறுந்தொகை #1722 பூவனூர் புனிதன் திருநாமம்தான் நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார் பாவம் ஆயின பாறி பறையவே தேவர்_கோவினும் செல்வர்கள் ஆவரே மேல் #1723 என்னன் என் மனை எந்தை என் ஆருயிர் தன்னன் தன் அடியேன் தனம் ஆகிய பொன்னன் பூவனூர் மேவிய புண்ணியன் இன்னன் என்று அறிவு ஒண்ணான் இயற்கையே மேல் #1724 குற்றம் கூடி குணம் பல கூடாதீர் மற்றும் தீவினை செய்தன மாய்க்கல் ஆம் புற்று அராவினன் பூவனூர் ஈசன் பேர் கற்று வாழ்த்தும் கழிவதன் முன்னமே மேல் #1725 ஆவில் மேவிய ஐந்து அமர்ந்து ஆடுவான் தூ வெண் நீறு துதைந்த செம்மேனியான் மேவ நூல் விரி வெண்ணியின் தென் கரை பூவனூர் புகுவார் வினை போகுமே மேல் #1726 புல்லம் ஊர்தியூர் பூவனூர் பூம் புனல் நல்லம் மூர்த்தி நல்லூர் நனிபள்ளியூர் தில்லையூர் திரு ஆரூர் சீகாழி நல் வல்லம் ஊர் என வல்வினை மாயுமே மேல் #1727 அனுசயப்பட்டு அது இது என்னாதே கனி மனத்தொடு கண்களும் நீர் மல்கி புனிதனை பூவனூரனை போற்றுவார் மனிதரில் தலையான மனிதரே மேல் #1728 ஆதிநாதன் அமரர்கள் அர்ச்சிதன் வேதநாவன் வெற்பின் மட பாவை ஓர் பாதி ஆனான் பரந்த பெரும் படை பூதநாதன் தென் பூவனூர் நாதனே மேல் #1729 பூவனூர் தண் புறம் பயம் பூம் பொழில் நாவலூர் நள்ளாறொடு நன்னிலம் கோவலூர் குடவாயில் கொடுமுடி மூவலூரும் முக்கண்ணன் ஊர் காண்-மினே மேல் #1730 ஏவம் ஏதும் இலா அமண் ஏதலர் பாவகாரிகள் சொல்வலைப்பட்டு நான் தேவதேவன் திரு நெறி ஆகிய பூவனூர் புகுதப்பெற்ற நாள் இன்றே மேல் #1731 நாரணன்னொடு நான்முகன் இந்திரன் வாரணன் குமரன் வணங்கும் கழல் பூரணன் திரு பூவனூர் மேவிய காரணன் எனை ஆள் உடை காளையே மேல் #1732 மை கடுத்த நிறத்து அரக்கன் வரை புக்கு எடுத்தலும் பூவனூரன் அடி மிக்கு அடுத்த விரல் சிறிது ஊன்றலும் பக்கு அடுத்த பின் பாடி உய்ந்தான் அன்றே மேல் 66. திருவலஞ்சுழி - திருக்குறுந்தொகை #1733 ஓதம் ஆர் கடலின் விடம் உண்டவன் பூத_நாயகன் பொன் கயிலைக்கு இறை மாது ஒர்பாகன் வலஞ்சுழி ஈசனை பாதம் ஏத்த பறையும் நம் பாவமே மேல் #1734 கயிலைநாதன் கறுத்தவர் முப்புரம் எயில்கள் தீ எழ ஏ வல வித்தகன் மயில்கள் ஆலும் வலஞ்சுழி ஈசனை பயில்கிலார் சிலர் பாவி தொழும்பரே மேல் #1735 இளைய காலம் எம்மானை அடைகிலா துளை இலா செவி தொண்டர்காள் நும் உடல் வளையும் காலம் வலஞ்சுழி ஈசனை களைகண் ஆக கருதி நீர் உய்ம்-மினே மேல் #1736 நறை கொள் பூம் புனல் கொண்டு எழு மாணிக்காய் குறைவு இலா கொடும் கூற்று உதைத்திட்டவன் மறை கொள் நாவன் வலஞ்சுழி மேவிய இறைவனை இனி என்று-கொல் காண்பதே மேல் #1737 விண்ட புரம் மூன்றும் எரி கொள திண் திறல் சிலையால் எரிசெய்தவன் வண்டு பண் முரல் தண் வலஞ்சுழி அண்டனுக்கு அடிமைத்திறத்து ஆவனே மேல் #1738 படம் கொள் பாம்பொடு பால் மதியம் சடை அடங்க ஆள வல்லான் உம்பர் தம்பிரான் மடந்தை_பாகன் வலஞ்சுழியான் அடி அடைந்தவர்க்கு அடிமைத்திறத்து ஆவனே மேல் #1739 நாக்கொண்டு பரவும் அடியார் வினை போக்க வல்ல புரி சடை புண்ணியன் மா கொள் சோலை வலஞ்சுழி ஈசன்-தன் ஏ கொள புரம் மூன்று எரி ஆனவே மேல் #1740 தேடுவார் பிரமன் திருமால் அவர் ஆடு பாதம் அவரும் அறிகிலார் மாட வீதி வலஞ்சுழி ஈசனை தேடுவான் உறுகின்றது என் சிந்தையே மேல் #1741 கண் பனிக்கும் கை கூப்பும் கண் மூன்று உடை நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் வண் பொன்னி தென் வலஞ்சுழி மேவிய பண்பன் இ பொனை செய்த பரிச இதே மேல் #1742 இலங்கை_வேந்தன் இருபது தோள் இற நலம் கொள் பாதத்து ஒரு விரல் ஊன்றினான் மலங்கு பாய் வயல் சூழ்ந்த வலஞ்சுழி வலம்கொள்வார் அடி என் தலை மேலவே மேல் 67. திருவாஞ்சியம் - திருக்குறுந்தொகை #1743 படையும் பூதமும் பாம்பும் புல்வாய் அதள் உடையும் தாங்கிய உத்தமனார்க்கு இடம் புடை நிலாவிய பூம் பொழில் வாஞ்சியம் அடைய வல்லவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே மேல் #1744 பறப்பையும் பசுவும் படுத்து பல திறக்கவும் உடையோர் திகழும் பதி கறை பிறை சடை கண்நுதல் சேர்தரு சிறப்பு உடை திரு வாஞ்சியம் சேர்-மினே மேல் #1745 புற்றில் ஆடு அரவோடு புனல் மதி தெற்று செம் சடை தேவர் பிரான் பதி சுற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் பற்றி பாடுவார்க்கு பாவம் இல்லையே மேல் #1746 அங்கம் ஆறும் அரு மறை நான்குடன் தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர் செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் தங்குவார் நம் அமரர்க்கு அமரரே மேல் #1747 நீறு பூசி நிமிர் சடை மேல் பிறை ஆறு சூடும் அடிகள் உறை பதி மாறுதான் ஒருங்கும் வயல் வாஞ்சியம் தேறி வாழ்பவர்க்கு செல்வம் ஆகுமே மேல் #1748 அற்று பற்று இன்றி ஆரையும் இல்லவர்க்கு உற்ற நல் துணை ஆவான் உறை பதி தெற்று மாடங்கள் சூழ் திரு வாஞ்சியம் கற்று சேர்பவர்க்கு கருத்து ஆவதே மேல் #1749 அருக்கன் அங்கி யமனொடு தேவர்கள் திருத்தும் சேவடியான் திகழும் நகர் ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் அருத்தியால் அடைவார்க்கு இல்லை அல்லலே மேல் 68. திருநள்ளாறு - திருக்குறுந்தொகை #1750 உள் ஆறாதது ஓர் புண்டரிக திரள் தெள் ஆறா சிவசோதி திரளினை கள் ஆறாத பொன் கொன்றை கமழ் சடை நள்ளாறு என நம் வினை நாசமே மேல் #1751 ஆரண பொருள் ஆம் அருளாளனார் வாரணத்து உரி போர்த்த மணாளனார் நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் காரண கலை ஞான கடவுளே மேல் #1752 மேகம் பூண்டது ஓர் மேருவில் கொண்டு எயில் சோகம் பூண்டு அழல் சோர தொட்டான் அவன் பாகம் பூண்ட மால் பங்கயத்தானொடு நாகம் பூண்டு கூத்து ஆடும் நள்ளாறனே மேல் #1753 மலியும் செம் சடை வாள் அரவம்மொடு பொலியும் பூம் புனல் வைத்த புனிதனார் நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர்-தம் வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே மேல் #1754 உறவனாய் நிறைந்து உள்ளம் குளிர்ப்பவன் இறைவன் ஆகி நின்று எண் நிறைந்தான் அவன் நறவம் நாறும் பொழில் திரு நள்ளாறன் மறவனாய் பன்றி பின் சென்ற மாயமே மேல் #1755 செக்கர் அங்கு அழி செம் சுடர் சோதியார் நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார் வக்கரன் உயிர் வவ்விய மாயற்கு சக்கரம் அருள்செய்த சதுரரே மேல் #1756 வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர் விஞ்சையின் செல்வ பாவைக்கு வேந்தனார் வஞ்ச நெஞ்சத்தவர்க்கு வழி கொடார் நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே மேல் #1757 அல்லன் என்றும் அலர்க்கு அருள் ஆயின சொல்லன் என்று சொல்லா மறை சோதியான் வல்லன் என்றும் வல்லார் வளம் மிக்கவர் நல்லன் என்றும் நல்லார்க்கு நள்ளாறனே மேல் #1758 பாம்புஅணை பள்ளி கொண்ட பரமனும் பூம் பணை பொலிகின்ற புராணனும் தாம் பணிந்து அளப்ப ஒண்ணா தனி தழல் நாம் பணிந்து அடி போற்றும் நள்ளாறனே மேல் #1759 இலங்கை_மன்னன் இருபது தோள் இற மலங்க மால் வரை மேல் விரல் வைத்தவர் நலம் கொள் நீற்றர் நள்ளாறரை நாள்-தொறும் வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே மேல் 69. திருக்கருவிலிக்கொட்டிட்டை - திருக்குறுந்தொகை #1760 மட்டு இட்ட குழலார் சுழலில் வலை பட்டிட்டும் மயங்கி பரியாது நீர் கட்டிட்ட வினை போக கருவிலி கொட்டிட்டை உறைவான் கழல் கூடுமே மேல் #1761 ஞாலம் மல்கு மனிதர்காள் நாள்-தொறும் ஏல மா மலரோடு இலை கொண்டு நீர் காலனார் வருதல் முன் கருவிலி கோல வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1762 பங்கம் ஆயின பேச பறைந்து நீர் மங்குமா நினையாதே மலர் கொடு கங்கை சேர் சடையான்-தன் கருவிலி கொங்கு வார் பொழில் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1763 வாடி நீர் வருந்தாதே மனிதர்காள் வேடனாய் விசயற்கு அருள்செய்த வெண் காடனார் உறைகின்ற கருவிலி கோடு நீள் பொழில் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1764 உய்யும் ஆறு இது கேண்-மின் உலகத்தீர் பை கொள் பாம்பு அரையான் படை ஆர் மழு கையினான் உறைகின்ற கருவிலி கொய் கொள் பூம் பொழில் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1765 ஆற்றவும் அவலத்து அழுந்தாது நீர் தோற்றும் தீயொடு நீர் நிலம் தூ வெளி காற்றும் ஆகி நின்றான்-தன் கருவிலி கூற்றம் காய்ந்தவன் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1766 நில்லா வாழ்வு நிலைபெறும் என்று எண்ணி பொல்லா ஆறு செய புரியாது நீர் கல் ஆரும் மதில் சூழ் தண் கருவிலி கொல் ஏறு ஊர்பவன் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1767 பிணிந்த நோய் பிறவி பிரிவு எய்தும் ஆறு உணர்த்தல் ஆம் இது கேண்-மின் உருத்திர கணத்தினார் தொழுது ஏத்தும் கருவிலி குணத்தினான் உறை கொட்டிட்டை சேர்-மினே மேல் #1768 நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் எம்பிரான் என்று இமையவர் ஏத்தும் ஏ கம்பனார் உறைகின்ற கருவிலி கொம்பு அனார் பயில் கொட்டிட்டை சேர்-மினே மேல் #1769 பார்உளீர் இது கேண்-மின் பரு வரை பேரும் ஆறு எடுத்தானை அடர்த்தவன் கார் கொள் நீர் வயல் சூழ் தண் கருவிலி கூர் கொள் வேலினன் கொட்டிட்டை சேர்-மினே மேல் 70. திருக்கொண்டீச்சரம் - திருக்குறுந்தொகை #1770 கண்ட பேச்சினில் காளையர்-தங்கள்-பால் மண்டி ஏச்சுணும் மாதரை சேராதே சண்டியீச்சுரவர்க்கு அருள்செய்த அ கொண்டியீச்சுரவன் கழல் கூறுமே மேல் #1771 சுற்றமும் துணை நல் மடவாளொடு பெற்ற மக்களும் பேணல் ஒழிந்தனர் குற்றம் இல் புகழ் கொண்டீச்சுரவனார் பற்று அலால் ஒரு பற்று மற்று இல்லையே மேல் #1772 மாடுதான் அது இல் எனின் மானுடர் பாடுதான் செல்வார் இல்லை பல் மாலையால் கூட நீர் சென்று கொண்டீச்சுரவனை பாடு-மின் பரலோகத்து இருத்துமே மேல் #1773 தந்தை தாயொடு தாரம் எனும் தளை பந்தம் ஆங்கு அறுத்து பயில்வு எய்திய கொந்து அவிழ் பொழில் கொண்டீச்சுரவனை சிந்தைசெய்ம்-மின்கள் சேவடி சேரவே மேல் #1774 கேளு-மின் இளமை அது கேடு வந்து ஈளையோடு இருமல் அது எய்தல் முன் கோள் அரா அணி கொண்டீச்சுரவனை நாளும் ஏத்தி தொழு-மின் நன்கு ஆகுமே மேல் #1775 வெம்பு நோயும் இடரும் வெறுமையும் துன்பமும் துயரும் எனும் சூழ் வினை கொம்பனார் பயில் கொண்டீச்சுரவனை எம்பிரான் என வல்லவர்க்கு இல்லையே மேல் #1776 அல்லலோடு அரு நோயில் அழுந்தி நீர் செல்லுமா நினையாதே கனை குரல் கொல்லை ஏறு உடை கொண்டீச்சுரவனை வல்ல ஆறு தொழ வினை மாயுமே மேல் #1777 நாறு சாந்து அணி நல் முலை மென் மொழி மாறு இலா மலைமங்கை ஒர்பாகமா கூறனார் உறை கொண்டீச்சுரம் நினைந்து ஊறுவார்-தமக்கு ஊனம் ஒன்று இல்லையே மேல் #1778 அயில் ஆர் அம்பு எரி மேரு வில் ஆகவே எயிலாரும் பொடியாய் விழ எய்தவன் குயில் ஆரும் பொழில் கொண்டீச்சுரவனை பயில்வாரும் பெருமை பெறும் பாலரே மேல் #1779 நிலையின் ஆர் வரை நின்று எடுத்தான்-தனை மலையினால் அடர்த்து விறல் வாட்டினான் குலையின் ஆர பொழில் கொண்டீச்சுரவனை தலையினால் வணங்க தவம் ஆகுமே மேல் 71. திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை #1780 குசையும் அங்கையில் கோசமும் கொண்ட அ வசை இல் மங்கலவாசகர் வாழ்த்தவே இசைய மங்கையும் தானும் ஒன்று ஆயினான் விசையமங்கையுள் வேதியன் காண்-மினே மேல் #1781 ஆதிநாதன் அடல் விடை மேல் அமர் பூதநாதன் புலி அதள் ஆடையன் வேதநாதன் விசயமங்கை உளான் பாதம் ஓத வல்லார்க்கு இல்லை பாவமே மேல் #1782 கொள்ளிட கரை கோவந்தபுத்தூரில் வெள் விடைக்கு அருள்செய் விசயமங்கை உள்ளிடத்து உறைகின்ற உருத்திரன் கிள்ளிட தலை அற்றது அயனுக்கே மேல் #1783 திசையும் எங்கும் குலுங்க திரிபுரம் அசைய அங்கு எய்திட்டு ஆர் அழல் ஊட்டினான் விசையமங்கை விருத்தன் புறத்து அடி விசையின் மங்கி விழுந்தனன் காலனே மேல் #1784 பொள்ளல் ஆக்கை அகத்தில் ஐம்பூதங்கள் கள்ளம் ஆக்கி கலக்கிய காரிருள் விள்ளல் ஆக்கி விசயமங்கை பிரான் உள்ளல் நோக்கி என் உள்ளுள் உறையுமே மேல் #1785 கொல்லை ஏற்று கொடியொடு பொன் மலை வில்லை ஏற்று உடையான் விசயமங்கை செல்வ போற்றி என்பாருக்கு தென் திசை எல்லை ஏற்றலும் இன்சொலும் ஆகுமே மேல் #1786 கண் பல் உக்க கபாலம் அங்கை கொண்டு உண் பலிக்கு உழல் உத்தமன் உள் ஒளி வெண்பிறைக்கண்ணியான் விசயமங்கை நண்பனை தொழப்பெற்றது நன்மையே மேல் #1787 பாண்டுவின் மகன் பார்த்தன் பணி செய்து வேண்டும் நல் வரம் கொள் விசயமங்கை ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால் காண்டலே கருத்து ஆகி இருப்பனே மேல் #1788 வந்து கேண்-மின் மயல் தீர் மனிதர்காள் வெந்தநீற்றன் விசயமங்கை பிரான் சிந்தையால் நினைவார்களை சிக்கென பந்து ஆக்கி உயக்கொளும் காண்-மினே மேல் #1789 இலங்கை_வேந்தன் இருபது தோள் இற விலங்கல் சேர் விரலான் விசயமங்கை வலம்செய்வார்களும் வாழ்த்து இசைப்பார்களும் நலம் செய்வார் அவர் நல் நெறி நாடியே மேல் 72. திருநீலக்குடி - திருக்குறுந்தொகை #1790 வைத்த மாடும் மனைவியும் மக்கள் நீர் செத்தபோது செறியார் பிரிவதே நித்தம் நீலக்குடி அரனை நினை சித்தம் ஆகில் சிவகதி சேர்திரே மேல் #1791 செய்யமேனியன் தேனொடு பால் தயிர் நெய் அது ஆடிய நீலக்குடி அரன் மையலாய் மறவா மனத்தார்க்கு எலாம் கையில் ஆமலகக்கனி ஒக்குமே மேல் #1792 ஆற்ற நீள் சடை ஆய்_இழையாள் ஒரு கூற்றன் மேனியில் கோலம் அது ஆகிய நீற்றன் நீலக்குடி உடையான் அடி போற்றினார் இடர் போக்கும் புனிதனே மேல் #1793 நாலு வேதியர்க்கு இன்னருள் நன் நிழல் ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் நீலன் நீலக்குடி உறை நின்மலன் காலனார் உயிர் போக்கிய காலனே மேல் #1794 நேச நீலக்குடி அரனே எனா நீசராய் நெடு மால் செய்த மாயத்தால் ஈசன் ஓர் சரம் எய்ய எரிந்துபோய் நாசம் ஆனார் திரிபுரநாதரே மேல் #1795 கொன்றைசூடியை குன்றமகளொடும் நின்ற நீலக்குடி அரனே எனீர் என்றும் வாழ்வு உகந்தே இறுமாக்கும் நீர் பொன்றும்போது நுமக்கு அறிவு ஒண்ணுமே மேல் #1796 கல்லினோடு எனை பூட்டி அமண் கையர் ஒல்லை நீர் புக நூக்க என் வாக்கினால் நெல்லு நீள் வயல் நீலக்குடி அரன் நல்ல நாமம் நவிற்றி உய்ந்தேன் அன்றே மேல் #1797 அழகியோம் இளையோம் எனும் ஆசையால் ஒழுகி ஆவி உடல் விடும் முன்னமே நிழல் அது ஆர் பொழில் நீலக்குடி அரன் கழல் கொள் சேவடி கைதொழுது உய்ம்-மினே மேல் #1798 கற்றை செம் சடை காய் கதிர் வெண் திங்கள் பற்றி பாம்புடன் வைத்த பராபரன் நெற்றிக்கண் உடை நீலக்குடி அரன் சுற்றி தேவர் தொழும் கழல் சோதியே மேல் #1799 தருக்கி வெற்பு அது தாங்கிய வீங்கு தோள் அரக்கனார் உடல் ஆங்கு ஒர் விரலினால் நெரித்து நீலக்குடி அரன் பின்னையும் இரக்கமாய் அருள்செய்தனன் என்பரே மேல் 73. திருமங்கலக்குடி - திருக்குறுந்தொகை #1800 தங்கு அலப்பிய தக்கன் பெரு வேள்வி அங்கு அலக்கழித்து ஆர் அருள் செய்தவன் கொங்கு அலர் குழல் கொம்பு அனையாளொடு மங்கலக்குடி மேய மணாளனே மேல் #1801 காவிரியின் வட கரை காண்தகு மா விரியும் பொழில் மங்கலக்குடி தே அரியும் பிரமனும் தேட ஒணா தூ எரி சுடர் சோதியுள் சோதியே மேல் #1802 மங்கலக்குடி ஈசனை மாகாளி வெம் கதிர் செல்வன் விண்ணொடு மண்உளோர் சங்குசக்கரதாரி சதுமுகன் அங்கு ஆலயமா கொண்டு நின்றதே மேல் #1803 மஞ்சன் வார் கடல் சூழ் மங்கலக்குடி நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு அஞ்சும் ஆடல் அமர்ந்து அடியேன் உடை நெஞ்சம் ஆலயமா கொண்டு நின்றதே மேல் #1804 செல்வம் மல்கு திரு மங்கலக்குடி செல்வம் மல்கு சிவநியமத்தராய் செல்வம் மல்கு செழு மறையோர் தொழ செல்வன் தேவியொடும் திகழ் கோயிலே மேல் #1805 மன்னு சீர் மங்கலக்குடி மன்னிய பின்னு வார் சடை பிஞ்ஞகன்-தன் பெயர் உன்னுவாரும் உரைக்க வல்லார்களும் துன்னுவார் நல் நெறி தொடர்வு எய்தவே மேல் #1806 மாதரார் மருவும் மங்கலக்குடி ஆதி_நாயகன் அண்டர்கள்_நாயகன் வேத_நாயகன் வேதியர்_நாயகன் பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே மேல் #1807 வண்டு சேர் பொழில் சூழ் மங்கலக்குடி விண்ட தாதையை தாள் அற வீசிய சண்டநாயகனுக்கு அருள்செய்தவன் துண்ட மா மதி சூடிய சோதியே மேல் #1808 கூசுவார் அலர் குண்டர் குணம் இலர் நேசம் ஏதும் இலாதவர் நீசர்கள் மாசர்-பால் மங்கலக்குடி மேவிய ஈசன் வேறுபடுக்க உய்ந்தேன் அன்றே மேல் #1809 மங்கலக்குடியான் கயிலை மலை அங்கு அலைத்து எடுக்குற்ற அரக்கர்_கோன் தன் தரத்தொடு தாள் தலை தோள் தகர்ந்து அங்கு அலைத்து அழுது உய்ந்தனன் தான் அன்றே மேல் 74. திருஎறும்பியூர் - திருக்குறுந்தொகை #1810 விரும்பி ஊறு விடேல் மட நெஞ்சமே கரும்பின் ஊறல் கண்டாய் கலந்தார்க்கு அவன் இரும்பின் ஊறல் அறாதது ஓர் வெண் தலை எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே மேல் #1811 பிறங்கு செம் சடை பிஞ்ஞகன் பேணு சீர் கறங்கு பூத கணம் உடை கண்நுதல் நறும் குழல் மடவாளொடு நாள்-தொறும் எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே மேல் #1812 மருந்து வானவர் தானவர்க்கு இன் சுவை புரிந்த புன் சடை புண்ணியன் கண்நுதல் பொருந்து பூண் முலை மங்கை நல்லாளொடும் எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே மேல் #1813 நிறம் கொள் கண்டத்து நின்மலன் எம் இறை மறம் கொள் வேல்கண்ணி வாள்_நுதல் பாகமாய் அறம் புரிந்து அருள்செய்த எம் அங்கணன் எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே மேல் #1814 நறும் பொன் நாள் மலர் கொன்றையும் நாகமும் துறும்பு செம் சடை தூ மதி வைத்து வான் உறும் பொன் மால் வரை பேதையோடு ஊர்-தொறும் எறும்பியூர்மலையான் எங்கள் ஈசனே மேல் #1815 கறும்பி ஊர்வன ஐந்து உள காயத்தில் திறம்பி ஊர்வன மற்றும் பல உள குறும்பி ஊர்வது ஓர் கூட்டகத்து இட்டு எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே மேல் #1816 மறந்தும் மற்று இது பேரிடர் நாள்-தொறும் திறம்பி நீ நினையேல் மட நெஞ்சமே புறம் செய் கோல குரம்பையில் இட்டு எனை எறும்பியூர் அரன் செய்த இயற்கையே மேல் #1817 இன்பமும் பிறப்பும் இறப்பின்னொடு துன்பமும் உடனே வைத்த சோதியான் அன்பனே அரனே என்று அரற்றுவார்க்கு இன்பன் ஆகும் எறும்பியூர் ஈசனே மேல் #1818 கண் நிறைந்த கன பவள திரள் விண் நிறைந்த விரி சுடர் சோதியான் உள் நிறைந்து உருவாய் உயிர் ஆயவன் எண் நிறைந்த எறும்பியூர் ஈசனே மேல் #1819 நிறம் கொள் மால் வரை ஊன்றி எடுத்தலும் நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட மறம் கொள் வாள் அரக்கன் வலி வாட்டினான் எறும்பியூர் மலை எம் இறை காண்-மினே மேல் 75. திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை #1820 மர கொக்கு ஆம் என வாய்விட்டு அலறி நீர் சரக்கு காவி திரிந்து அயராது கால் பரக்கும் காவிரி நீர் அலைக்கும் கரை குரக்குக்கா அடைய கெடும் குற்றமே மேல் #1821 கட்டு ஆறே கழி காவிரி பாய் வயல் கொட்டாறே புனல் ஊறு குரக்குக்கா முட்டு ஆறா அடி ஏத்த முயல்பவர்க்கு இட்டு ஆறா இடர் ஓட எடுக்குமே மேல் #1822 கை அனைத்தும் கலந்து எழு காவிரி செய் அனைத்திலும் சென்றிடும் செம் புனல் கொய் அனைத்தும் கொணரும் குரக்குக்கா ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே மேல் #1823 மிக்கு அனைத்து திசையும் அருவிகள் புக்கு காவிரி போந்த புனல் கரை கொக்கு இனம் பயில் சோலை குரக்குக்கா நக்கனை நவில்வார் வினை நாசமே மேல் #1824 விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி இட்ட நீர் வயல் எங்கும் பரந்திட கொட்ட மா முழவு ஓங்கு குரக்குக்கா இட்டமாய் இருப்பார்க்கு இடர் இல்லையே மேல் #1825 மேலை வானவரோடு விரி கடல் மாலும் நான்முகனாலும் அளப்பு ஒணா கோல மாளிகை கோயில் குரக்குக்கா பாலராய் திரிவார்க்கு இல்லை பாவமே மேல் #1826 ஆல நீழல் அமர்ந்த அழகனார் காலனை உதைகொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்கா பாலருக்கு அருள்செய்வர் பரிவொடே மேல் #1827 செக்கர் அங்கு எழு செம் சுடர் சோதியார் அக்கு அரையர் எம் ஆதிபுராணனார் கொக்கு இனம் வயல் சேரும் குரக்குக்கா நக்கனை தொழ நம் வினை நாசமே மேல் #1828 உருகி ஊன் குழைந்து ஏத்தி எழு-மின் நீர் கரிய கண்டன் கழல் அடி-தன்னையே குர வனம் செழும் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தி தொழு-மினே மேல் #1829 இரக்கம் இன்றி மலை எடுத்தான் முடி உரத்தை ஒல்க அடர்த்தான் உறைவிடம் குரக்கு இனம் குதிகொள்ளும் குரக்குக்கா வரத்தனை பெற வான்_உலகு ஆள்வரே மேல் 76. திருக்கானூர் - திருக்குறுந்தொகை #1830 திருவின் நாதனும் செம் மலர் மேல் உறை உருவனாய் உலகத்தின் உயிர்க்கு எலாம் கருவன் ஆகி முளைத்தவன் கானூரில் பரமன் ஆய பரஞ்சுடர் காண்-மினே மேல் #1831 பெண்டிர் மக்கள் பெரும் துணை நல் நிதி உண்டின்றே என்று உகவன்-மின் ஏழைகாள் கண்டுகொண்-மின் நீர் கானூர் முளையினை புண்டரீக பொதும்பில் ஒதுங்கியே மேல் #1832 தாயத்தார் தமர் நல் நிதி என்னும் இ மாயத்தே கிடந்திட்டு மயங்கிடேல் காயத்தே உளன் கானூர் முளையினை வாய்அத்தால் வணங்கீர் வினை மாயவே மேல் #1833 குறியில் நின்று உண்டு கூறை இலா சமண் நெறியை விட்டு நிறை கழல் பற்றினேன் அறியலுற்றிரேல் கானூர் முளை அவன் செறிவு செய்திட்டு இருப்பது என் சிந்தையே மேல் #1834 பொத்தல் மண் சுவர் பொல்லா குரம்பையை மெய்த்தன் என்று வியந்திடல் ஏழைகாள் சித்தர் பத்தர்கள் சேர் திரு கானூரில் அத்தன் பாதம் அடைதல் கருமமே மேல் #1835 கல்வி ஞான கலை பொருள் ஆயவன் செல்வம் மல்கு திரு கானூர் ஈசனை எல்லியும் பகலும் இசைவு ஆனவா சொல்லிடீர் நும் துயரங்கள் தீரவே மேல் #1836 நீரும் பாரும் நெருப்பும் அருக்கனும் காரும் மாருதம் கானூர் முளைத்தவன் சேர்வும் ஒன்று அறியாது திசைதிசை ஓர்வும் ஒன்று இலர் ஓடி திரிவரே மேல் #1837 ஓமத்தோடு அயன் மால் அறியா வணம் வீம பேர் ஒளி ஆய விழுப்பொருள் காமன் காய்ந்தவன் கானூர் முளைத்தவன் சேமத்தால் இருப்பு ஆவது என் சிந்தையே மேல் #1838 வன்னி கொன்றை எருக்கு அணிந்தான் மலை உன்னியே சென்று எடுத்தவன் ஒண் திறல் தன்னை வீழ தனி விரல் வைத்தவன் கன்னி மா மதில் கானூர் கருத்தனே மேல் 77. திருச்சேறை - திருக்குறுந்தொகை #1839 பூரியா வரும் புண்ணியம் பொய் கெடும் கூரிது ஆய அறிவு கைகூடிடும் சீரியார் பயில் சேறையுள் செந்நெறி நாரி_பாகன்-தன் நாமம் நவிலவே மேல் #1840 என்ன மா தவம் செய்தனை நெஞ்சமே மின்னு வார் சடை வேத விழுப்பொருள் செந்நெல் ஆர் வயல் சேறையுள் செந்நெறி மன்னு சோதி நம்பால் வந்து வைகவே மேல் #1841 பிறப்பு மூப்பு பெரும் பசி வான் பிணி இறப்பு நீங்கிடும் இன்பம் வந்து எய்திடும் சிறப்பர் சேறையுள் செந்நெறியாயன் கழல் மறப்பது இன்றி மனத்துள் வைக்கவே மேல் #1842 மாடு தேடி மயக்கினில் வீழ்ந்து நீர் ஓடி எய்த்தும் பயன் இலை ஊமர்காள் சேடர் வாழ் சேறை செந்நெறி மேவிய ஆடலான்-தன் அடி அடைந்து உய்ம்-மினே மேல் #1843 எண்ணி நாளும் எரி அயில் கூற்றுவன் துண்ணென்று ஒன்றில் துரக்கும் வழி கண்டேன் திண் நன் சேறை திரு செந்நெறி உறை அண்ணலார் உளர் அஞ்சுவது என்னுக்கே மேல் #1844 தப்பி வானம் தரணி கம்பிக்கில் என் ஒப்பு இல் வேந்தர் ஒருங்கு உடன் சீறில் என் செப்பம் ஆம் சேறை செந்நெறி மேவிய அப்பனார் உளர் அஞ்சுவது என்னுக்கே மேல் #1845 வைத்த மாடும் மடந்தை நல்லார்களும் ஒத்து ஒவ்வாத உற்றார்களும் என் செய்வார் சித்தர் சேறை திரு செந்நெறி உறை அத்தர்தாம் உளர் அஞ்சுவது என்னுக்கே மேல் #1846 குலன்கள் என் செய்வ குற்றங்கள் என் செய்வ துலங்கி நீ நின்று சோர்ந்திடல் நெஞ்சமே இலங்கு சேறையில் செந்நெறி மேவிய அலங்கனார் உளர் அஞ்சுவது என்னுக்கே மேல் #1847 பழகினால் வரும் பண்டு உள சுற்றமும் விழவிடாவிடில் வேண்டிய எய்த ஒணா திகழ் கொள் சேறையில் செந்நெறி மேவிய அழகனார் உளர் அஞ்சுவது என்னுக்கே மேல் #1848 பொருந்து நீள் மலையை பிடித்து ஏந்தினான் வருந்த ஊன்றி மலர் அடி வாங்கினான் திருந்து சேறையில் செந்நெறி மேவி அங்கு இருந்த சோதி என்பார்க்கு இடர் இல்லையே மேல் 78. திருக்கோடிகா - திருக்குறுந்தொகை #1849 சங்கு உலாம் முன்கை தையல் ஓர்பாகத்தன் வெம் குலாம் மத வேழம் வெகுண்டவன் கொங்கு உலாம் பொழில் கோடிகாவா என எங்கு இலாதது ஓர் இன்பம் வந்து எய்துமே மேல் #1850 வாடி வாழ்வது என் ஆவது மாதர்-பால் ஓடி வாழ்வினை உள்கி நீர் நாள்-தொறும் கோடிகாவனை கூறிரேல் கூறினேன் பாடி காவலில் பட்டு கழிதிரே மேல் #1851 முல்லை நல் முறுவல் உமை_பங்கனார் தில்லை அம்பலத்தில் உறை செல்வனார் கொல்லை ஏற்றினர் கோடிகாவா என்று அங்கு ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே மேல் #1852 நா வளம் பெறும் ஆறு மன் நல்_நுதல் ஆமளம் சொலி அன்பு செயின்அலால் கோமளம் சடை கோடிகாவா என ஏவள் என்று எனை ஏசும் அ ஏழையே மேல் #1853 வீறுதான் பெறுவார் சிலராகிலும் நாறு பூம் கொன்றைதான் மிக நல்கானேல் கூறுவேன் கோடிகா உளாய் என்று மால் ஏறுவேன் நும்மால் ஏசப்படுவனோ மேல் #1854 நாடி நாரணன் நான்முகன் வானவர் தேடி ஏசறவும் தெரியாதது ஓர் கோடிகாவனை கூறாத நாள் எலாம் பாடி காவலில் பட்டு கழியுமே மேல் #1855 வரங்களால் வரையை எடுத்தான்-தனை அரங்க ஊன்றி அருள்செய்த அப்பன் ஊர் குரங்கு சேர் பொழில் கோடிகாவா என இரங்குவேன் மனத்து ஏதங்கள் தீரவே மேல் 79. திருப்புள்ளிருக்குவேளூர் - திருக்குறுந்தொகை #1856 வெள் எருக்கு அரவம் விரவும் சடை புள்ளிருக்குவேளூர் அரன் பொன் கழல் உள் இருக்கும் உணர்ச்சி இலாதவர் நள் இருப்பர் நரக குழியிலே மேல் #1857 மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய் கூற்றம் வந்து உமை கொள்வதன் முன்னமே போற்ற வல்லிரேல் புள்ளிருக்குவேளூர் சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்-மினே மேல் #1858 அருமறையனை ஆணொடு பெண்ணனை கரு விடம் மிக உண்ட எம் கண்டனை புரி வெண்நூலனை புள்ளிருக்குவேளூர் உருகி நைபவர் உள்ளம் குளிருமே மேல் #1859 தன் உருவை ஒருவருக்கு அறிவு ஒணா மின்உருவனை மேனி வெண்நீற்றனை பொன்உருவனை புள்ளிருக்குவேளூர் என்ன வல்லவர்க்கு இல்லை இடர்களே மேல் #1860 செங்கண்மால் பிரமற்கும் அறிவு ஒணா அங்கியின் உரு ஆகி அழல்வது ஓர் பொங்கு அரவனை புள்ளிருக்குவேளூர் மங்கை_பாகனை வாழ்த்த வரும் இன்பே மேல் #1861 குற்றமில்லியை கோல சிலையினால் செற்றவர் புரம் செம் தழல் ஆக்கியை புற்று அரவனை புள்ளிருக்குவேளூர் பற்ற வல்லவர் பாவம் பறையுமே மேல் #1862 கையினோடு கால் கட்டி உமர் எலாம் ஐயன் வீடினன் என்பதன் முன்னம் நீர் பொய் இலா அரன் புள்ளிருக்குவேளூர் மை உலாவிய கண்டனை வாழ்த்துமே மேல் #1863 உள்ளம் உள்கி உகந்து சிவன் என்று மெள்ள உள்க வினை கெடும் மெய்ம்மையே புள்ளினார் பணி புள்ளிருக்குவேளூர் வள்ளல் பாதம் வணங்கி தொழு-மினே மேல் #1864 அரக்கனார் தலை பத்தும் அழிதர நெருக்கி மா மலர் பாதம் நிறுவிய பொருப்பனார் உறை புள்ளிருக்குவேளூர் விருப்பினால் தொழுவார் வினை வீடுமே மேல் 80. திருஅன்பிலாலந்துறை - திருக்குறுந்தொகை #1865 வானம் சேர் மதி சூடிய மைந்தனை நீ நெஞ்சே கெடுவாய் நினைகிற்கிலை ஆன் அஞ்சு ஆடியை அன்பில் ஆலந்துறை கோன் எம் செல்வனை கூறிடகிற்றியே மேல் #1866 காரணத்தர் கருத்தர் கபாலியார் வாரணத்த உரி போர்த்த மணாளனார் ஆரண பொருள் அன்பில் ஆலந்துறை நாரணற்கு அரியா ஒரு நம்பியே மேல் #1867 அன்பின் ஆன் அஞ்சு அமைந்து உடன் ஆடிய என்பின் ஆனை உரித்து களைத்தவன் அன்பிலானை அம்மானை அள் ஊறிய அன்பினால் நினைந்தார் அறிந்தார்களே மேல் #1868 சங்கை உள்ளதும் சாவதும் மெய் உமை பங்கனார் அடி பாவியேன் நான் உய அங்கணன் எந்தை அன்பில் ஆலந்துறை செங்கணார் அடி சேரவும் வல்லனே மேல் #1869 கொக்குஇறகர் குளிர் மதி சென்னியர் மிக்க அரக்கர் புரம் எரிசெய்தவர் அக்கு அரையினர் அன்பில் ஆலந்துறை நக்க உருவரும் நம்மை அறிவரே மேல் #1870 வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் அள்ளல் ஆர் வயல் அன்பில் ஆலந்துறை உள்ள ஆறு அறியார் சிலர் ஊமரே மேல் #1871 பிறவி மாய பிணக்கில் அழுந்தினும் உறவு எலாம் சிந்தித்து உன்னி உகவாதே அறவம் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மறவாதே தொழுது ஏத்தி வணங்குமே மேல் #1872 நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் பிணங்கி எங்கும் திரிந்து எய்த்தும் காண்கிலா அணங்கன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை வணங்கும் நும் வினை மாய்ந்து அறும் வண்ணமே மேல் #1873 பொய் எலாம் உரைக்கும் சமண் சாக்கிய கையன்மார் உரை கேளாது எழு-மினோ ஐயன் எம்பிரான் அன்பில் ஆலந்துறை மெய்யன் சேவடி ஏத்துவார் மெய்யரே மேல் #1874 இலங்கை_வேந்தன் இருபது தோள் இற்று மலங்க மா மலை மேல் விரல் வைத்தவன் அலங்கல் எம்பிரான் அன்பில் ஆலந்துறை வலம்கொள்வாரை வானோர் வலம்கொள்வரே மேல் 81. திருப்பாண்டிக்கொடுமுடி - திருக்குறுந்தொகை #1875 சிட்டனை சிவனை செழும் சோதியை அட்டமூர்த்தியை ஆல நிழல் அமர் பட்டனை திரு பாண்டிக்கொடுமுடி நட்டனை தொழ நம் வினை நாசமே மேல் #1876 பிரமன் மால் அறியாத பெருமையன் தருமம் ஆகிய தத்துவன் எம்பிரான் பரமனார் உறை பாண்டிக்கொடுமுடி கருமம் ஆக தொழு மட நெஞ்சமே மேல் #1877 ஊசலாள் அல்லள் ஒண் கழலாள் அல்லள் தேசம் ஆம் திரு பாண்டிக்கொடுமுடி ஈசனே எனும் இத்தனை அல்லது பேசும் ஆறு அறியாள் ஒரு பேதையே மேல் #1878 தூண்டிய சுடர் போல் ஒக்கும் சோதியான் காண்டலும் எளியான் அடியார்கட்கு பாண்டிக்கொடுமுடி மேய பரமனை காண்டும் என்பவர்க்கு எய்தும் கருத்து ஒணான் மேல் #1879 நெருக்கி அம் முடி நின்று இசை வானவர் இருக்கொடும் பணிந்து ஏத்த இருந்தவன் திரு கொடுமுடி என்றலும் தீவினை கரு கெடும் இது கைகண்ட யோகமே மேல் 82. திருவான்மியூர் - திருக்குறுந்தொகை #1880 விண்ட மா மலர் கொண்டு விரைந்து நீர் அண்ட_நாயகன்-தன் அடி சூழ்-மின்கள் பண்டு நீர் செய்த பாவம் பறைத்திடும் வண்டு சேர் பொழில் வான்மியூர் ஈசனே மேல் #1881 பொருளும் சுற்றமும் பொய்ம்மையும் விட்டு நீர் மருளும் மாந்தரை மாற்றி மயக்கு அறுத்து அருளுமா வல்ல ஆதியாய் என்றலும் மருள் அறுத்திடும் வான்மியூர் ஈசனே மேல் #1882 மந்தம் ஆகிய சிந்தை மயக்கு அறுத்து அந்தம் இல் குணத்தானை அடைந்து நின்று எந்தை ஈசன் என்று ஏத்திட வல்லிரேல் வந்து நின்றிடும் வான்மியூர் ஈசனே மேல் #1883 உள்ளம் உள் கலந்து ஏத்த வல்லார்க்கு அலால் கள்ளம் உள்ளவழி கசிவான்அலன் வெள்ளமும் அரவும் விரவும் சடை வள்ளல் ஆகிய வான்மியூர் ஈசனே மேல் #1884 படம் கொள் பாம்பரை பால் மதிசூடியை வடம் கொள் மென் முலை மாது ஒருகூறனை தொடர்ந்து நின்று தொழுது எழுவார் வினை மடங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே மேல் #1885 நெஞ்சில் ஐவர் நினைக்க நினைக்குறார் பஞ்சின் மெல்லடியாள் உமை_பங்க என்று அஞ்சி நாள் மலர் தூவி அழுதிரேல் வஞ்சம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே மேல் #1886 நுணங்கு நூல் அயன் மாலும் அறிகிலா குணங்கள்தாம் பரவி குறைந்து உக்கவர் சுணங்கு பூண் முலை தூமொழியார் அவர் வணங்க நின்றிடும் வான்மியூர் ஈசனே மேல் #1887 ஆதியும் அரனாய் அயன் மாலுமாய் பாதி பெண்உரு ஆய பரமன் என்று ஓதி உள் குழைந்து ஏத்த வல்லார் அவர் வாதை தீர்த்திடும் வான்மியூர் ஈசனே மேல் #1888 ஓட்டை மாடத்தில் ஒன்பது வாசலும் காட்டில் வேவதன் முன்னம் கழல் அடி நாட்டி நாள் மலர் தூவி வலம்செயில் வாட்டம் தீர்த்திடும் வான்மியூர் ஈசனே மேல் #1889 பாரம் ஆக மலை எடுத்தான்-தனை சீரம் ஆக திரு விரல் ஊன்றினான் ஆர்வம் ஆக அழைத்து அவன் ஏத்தலும் வாரம் ஆயினன் வான்மியூர் ஈசனே மேல் 83. திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை #1890 பாணத்தால் மதில் மூன்றும் எரித்தவன் பூண தான் அரவு ஆமை பொறுத்தவன் காண தான் இனியான் கடல் நாகைக்கா ரோணத்தான் என நம் வினை ஓயுமே மேல் #1891 வண்டு அலம்பிய வார் சடை ஈசனை விண்தலம் பணிந்து ஏத்தும் விகிர்தனை கண்டல் அம் கமழ் நாகைக்காரோணனை கண்டலும் வினை ஆன கழலுமே மேல் #1892 புனையும் மா மலர் கொண்டு புரி சடை நனையும் மா மலர் சூடிய நம்பனை கனையும் வார் கடல் நாகைக்காரோணனை நினையவே வினை ஆயின நீங்குமே மேல் #1893 கொல்லை மால் விடை ஏறிய கோவினை எல்லி மா நடம் ஆடும் இறைவனை கல்லின் ஆர் மதில் நாகைக்காரோணனை சொல்லவே வினை ஆனவை சோருமே மேல் #1894 மெய்யனை விடைஊர்தியை வெண் மழு கையனை கடல் நாகைக்காரோணனை மை அனுக்கிய கண்டனை வானவர் ஐயனை தொழுவார்க்கு அல்லல் இல்லையே மேல் #1895 அலங்கல் சேர் சடை ஆதிபுராணனை விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனை கலங்கள் சேர் கடல் நாகைக்காரோணனை வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே மேல் #1896 சினம் கொள் மால் கரி சீறிய ஏறினை இனம் கொள் வானவர் ஏத்திய ஈசனை கனம் கொள் மா மதில் நாகைக்காரோணனை மனம்கொள்வார் வினை ஆயின மாயுமே மேல் #1897 அந்தம் இல் புகழ் ஆய்_இழையார் பணிந்து எந்தை ஈசன் என்று ஏத்தும் இறைவனை கந்த வார் பொழில் நாகைக்காரோணனை சிந்தைசெய்ய கெடும் துயர் திண்ணமே மேல் #1898 கருவனை கடல் நாகைக்காரோணனை இருவருக்கு அறிவு ஒண்ணா இறைவனை ஒருவனை உணரார் புரம் மூன்று எய்த செருவனை தொழ தீவினை தீருமே மேல் #1899 கடல் கழி தழி நாகைக்காரோணன்-தன் வட வரை எடுத்து ஆர்த்த அரக்கனை அடர ஊன்றிய பாதம் அணைதர தொடர அஞ்சும் துயக்கு அறும் காலனே மேல் 84. திருக்காட்டுப்பள்ளி - திருக்குறுந்தொகை #1900 மாட்டு பள்ளி மகிழ்ந்து உறைவீர்க்கு எலாம் கேட்டு பள்ளி கண்டீர் கெடுவீர் இது ஓட்டு பள்ளி விட்டு ஓடல் உறா முனம் காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே மேல் #1901 மாட்டை தேடி மகிழ்ந்து நீர் நும்முளே நாட்டு பொய் எலாம் பேசிடும் நாணிலீர் கூட்டை விட்டு உயிர் போவதன் முன்னமே காட்டுப்பள்ளி உளான் கழல் சேர்-மினே மேல் #1902 தேனை வென்ற சொல்லாளொடு செல்வமும் ஊனை விட்டு உயிர் போவதன் முன்னமே கான வேடர் கருதும் காட்டுப்பள்ளி ஞானநாயகனை சென்று நண்ணுமே மேல் #1903 அருத்தமும் மனையாளொடு மக்களும் பொருத்தம் இல்லை பொல்லாதது போக்கிடும் கருத்தன் கண்நுதல் அண்ணல் காட்டுப்பள்ளி திருத்தன் சேவடியை சென்று சேர்-மினே மேல் #1904 சுற்றமும் துணையும் மனை வாழ்க்கையும் அற்றபோது அணையார் அவர் என்றுஎன்றே கற்றவர்கள் கருதும் காட்டுப்பள்ளி பெற்றம் ஏறும் பிரான் அடி சேர்-மினே மேல் #1905 அடும்பும் கொன்றையும் வன்னியும் மத்தமும் துடும்பல்செய் சடை தூ மணி சோதியான் கடம்பன்_தாதை கருதும் காட்டுப்பள்ளி உடம்பினார்க்கு ஓர் உறுதுணை ஆகுமே மேல் #1906 மெய்யில் மாசு உடையார் உடல் மூடுவார் பொய்யை மெய் என்று புக்கு உடன்வீழன்-மின் கையில் மான் உடையான் காட்டுப்பள்ளி எம் ஐயன்-தன் அடியே அடைந்து உய்-மினே மேல் #1907 வேலை வென்ற கண்ணாரை விரும்பி நீர் சீலம் கெட்டு திகையன்-மின் பேதைகாள் காலையே தொழும் காட்டுப்பள்ளி உறை நீல_கண்டனை நித்தல் நினை-மினே மேல் #1908 இன்று உளார் நாளை இல்லை எனும் பொருள் ஒன்றும் ஓராது உழிதரும் ஊமர்காள் அன்று வானவர்க்காக விடம் உண்ட கண்டனார் காட்டுப்பள்ளி கண்டு உய்ம்-மினே மேல் #1909 எண் இலா அரக்கன் மலை ஏந்திட எண்ணி நீள் முடி பத்தும் இறுத்தவன் கண்உளார் கருதும் காட்டுப்பள்ளியை நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே மேல் 85. திருச்சிராப்பள்ளி - திருக்குறுந்தொகை #1910 மட்டு வார்குழலாளொடு மால் விடை இட்டமா உகந்து ஏறும் இறைவனார் கட்டு நீத்தவர்க்கு இன்னருளே செயும் சிட்டர் போலும் சிராப்பள்ளி செல்வரே மேல் #1911 அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார் அரி அயன் தொழுது ஏத்தும் அரும் பொருள் பெரியவன் சிராப்பள்ளியை பேணுவார் அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே மேல் #1912 அரிச்சு இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு சுரிச்சு இராது நெஞ்சே ஒன்று சொல்ல கேள் திரி சிராப்பள்ளி என்றலும் தீவினை நரிச்சு இராது நடக்கும் நடக்குமே மேல் #1913 தாயுமாய் எனக்கே தலை கண்ணுமாய் பேயனேனையும் ஆண்ட பெருந்தகை தேய நாதன் சிராப்பள்ளி மேவிய நாயனார் என நம் வினை நாசமே மேல் 86. திருவாட்போக்கி - திருக்குறுந்தொகை #1914 காலபாசம் பிடித்து எழு தூதுவர் பாலகர் விருத்தர் பழையார் எனார் ஆல நீழல் அமர்ந்த வாட்போக்கியார் சீலம் ஆர்ந்தவர் செம்மையுள் நிற்பரே மேல் #1915 விடுத்த தூதுவர் வந்து வினை குழி படுத்தபோது பயன் இலை பாவிகாள் அடுத்த கின்னரம் கேட்கும் வாட்போக்கியை எடுத்தும் ஏத்தியும் இன்புறு-மின்களே மேல் #1916 வந்து இவ்வாறு வளைத்து எழு தூதுவர் உந்தி ஓடி நரகத்து இடா முனம் அந்தியின் ஒளி தங்கும் வாட்போக்கியார் சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரே மேல் #1917 கூற்றம் வந்து குமைத்திடும்போதினால் தேற்றம் வந்து தெளிவுறல் ஆகுமே ஆற்றவும் அருள்செய்யும் வாட்போக்கி-பால் ஏற்று-மின் விளக்கை இருள் நீங்கவே மேல் #1918 மாறுகொண்டு வளைத்து எழு தூதுவர் வேறுவேறு படுப்பதன் முன்னமே ஆறு செம் சடை வைத்த வாட்போக்கியார்க்கு ஊறிஊறி உருகும் என் உள்ளமே மேல் #1919 கானம் ஓடி கடிது எழு தூதுவர் தானமோடு தலை பிடியா முனம் ஆன் அஞ்சு ஆடி உகந்த வாட்போக்கியார் ஊனம் இல்லவர்க்கு உண்மையில் நிற்பரே மேல் #1920 பார்த்து பாசம் பிடித்து எழு தூதுவர் கூர்த்த வேலால் குமைப்பதன் முன்னமே ஆர்த்த கங்கை அடக்கும் வாட்போக்கியார் கீர்த்திமைகள் கிளர்ந்து உரை-மின்களே மேல் #1921 நாடி வந்து நமன் தமர் நல் இருள் கூடி வந்து குமைப்பதன் முன்னமே ஆடல் பாடல் உகந்த வாட்போக்கியை வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே மேல் #1922 கட்டு அறுத்து கடிது எழு தூதுவர் பொட்ட நூக்கி புறப்படா முன்னமே அட்ட மா மலர் சூடும் வாட்போக்கியார்க்கு இட்டம் ஆகி இணை அடி ஏத்துமே மேல் #1923 இரக்கம் முன் அறியாது எழு தூதுவர் பரக்கழித்து அவர் பற்றுதல் முன்னமே அரக்கனுக்கு அருள்செய்த வாட்போக்கியார் கரப்பதும் கரப்பார் அவர்-தங்கட்கே மேல் 87. திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை #1924 பட்டம் நெற்றியர் பாய் புலித்தோலினர் நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் சிட்டர் வாழ் திரு ஆர் மணஞ்சேரி எம் வட்ட வார்சடையார் வண்ணம் வாழ்த்துமே மேல் #1925 துன்னு வார்குழலாள் உமையாளொடும் பின்னு வார் சடை மேல் பிறை வைத்தவர் மன்னு வார் மணஞ்சேரி மருந்தினை உன்னுவார் வினை ஆயின ஓயுமே மேல் #1926 புற்றில் ஆடு அரவு ஆட்டும் புனிதனார் தெற்றினார் புரம் தீ எழ செற்றவர் சுற்றின் ஆர் மதில் சூழ் மணஞ்சேரியார் பற்றினார் அவர் பற்று அவர் காண்-மினே மேல் #1927 மத்தமும் மதியும் வளர் செம் சடை முத்தர் முக்குணர் மூசு அரவம் அணி சித்தர் தீ_வணர் சீர் மணஞ்சேரி எம் வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே மேல் #1928 துள்ளு மான் மறி தூ மழுவாளினர் வெள்ள நீர் கரந்தார் சடை மேல் அவர் அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம் வள்ளலார் கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே மேல் #1929 நீர் பரந்த நிமிர் புன் சடையின் மேல் ஊர் பரந்த உரகம் அணிபவர் சீர் பரந்த திரு மணஞ்சேரியார் ஏர் பரந்து அங்கு இலங்கு சூலத்தரே மேல் #1930 சுண்ணத்தர் சுடு நீறு உகந்து ஆடலார் விண்ணத்து அம் மதி சூடிய வேதியர் மண்ணத்து அம் முழவு ஆர் மணஞ்சேரியார் வண்ணத்து அம் முலையாள் உமை வண்ணரே மேல் #1931 துன்ன ஆடையர் தூ மழுவாளினர் பின்னும் செம் சடை மேல் பிறை வைத்தவர் மன்னு வார் பொழில் சூழ் மணஞ்சேரி எம் மன்னனார் கழலே தொழ வாய்க்குமே மேல் #1932 சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் புத்தர் சேர் அமண் கையர் புகழவே மத்தர்தாம் அறியார் மணஞ்சேரி எம் அத்தனார் அடியார்க்கு அல்லல் இல்லையே மேல் #1933 கடுத்த மேனி அரக்கன் கயிலையை எடுத்தவன் நெடு நீள் முடி பத்து இற படுத்தலும் மணஞ்சேரி அருள் என கொடுத்தனன் கொற்றவாளொடு நாமமே மேல் 88. திருமருகல் - திருக்குறுந்தொகை #1934 பெருகல் ஆம் தவம் பேதைமை தீரல் ஆம் திருகல் ஆகிய சிந்தை திருத்தல் ஆம் பருகல் ஆம் பரம் ஆயது ஓர் ஆனந்தம் மருகலான் அடி வாழ்த்தி வணங்கவே மேல் #1935 பாடம் கொள் பனுவல் திறம் கற்று போய் நாடு அங்கு உள்ளன தட்டிய நாணிலீர் மாடம் சூழ் மருகல் பெருமான் திரு வேடம் கைதொழ வீடு எளிது ஆகுமே மேல் #1936 சினத்தினால் வரும் செய் தொழில் ஆம் அவை அனைத்தும் நீங்கி நின்று ஆதரவாய் மிக மனத்தினால் மருகல் பெருமான் திறம் நினைப்பினார்க்கு இல்லை நீள் நில வாழ்க்கையே மேல் #1937 ஓது பைம் கிளிக்கு ஒண் பால் அமுது ஊட்டி பாதுகாத்து பலபல கற்பித்து மாதுதான் மருகல் பெருமானுக்கு தூது சொல்ல விடத்தான் தொடங்குமே மேல் #1938 இன்ன ஆறு என்பது உண்டு அறியேன் இன்று துன்னு கை வளை சோர கண் நீர் மல்கும் மன்னு தென் மருகல் பெருமான் திறம் உன்னி ஒண்_கொடி உள்ளம் உருகுமே மேல் #1939 சங்கு சோர கலையும் சரியவே மங்கைதான் மருகல் பெருமான் வரும் அங்கவீதி அருகு அணையாநிற்கும் நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே மேல் #1940 காட்சி பெற்றிலளாகிலும் காதலே மீட்சி ஒன்று அறியாது மிகுவதே மாட்சி ஆர் மருகல் பெருமானுக்கு தாட்சி சால உண்டாகும் என் தையலே மேல் #1941 நீடு நெஞ்சுள் நினைந்து கண் நீர் மல்கும் ஓடும் மாலினோடு ஒண் கொடி மாதராள் மாடம் நீள் மருகல் பெருமான் வரில் கூடு நீ என்று கூடல் இழைக்குமே மேல் #1942 கந்த வார் குழல் கட்டிலள் காரிகை அந்தி மால் விடையோடும் அன்பாய் மிக வந்திடாய் மருகல் பெருமான் என்று சிந்தைசெய்து திகைத்திடும் காண்-மினே மேல் #1943 ஆதி மா மலை அன்று எடுத்தான் இற்று சோதி என்றலும் தொல் அருள் செய்திடும் ஆதியான் மருகல் பெருமான் திறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே மேல் 89. தனித் திருக்குறுந்தொகை #1944 ஒன்று வெண்பிறைக்கண்ணி ஓர் கோவணம் ஒன்று கீள் உமையோடும் உடுத்தது ஒன்று வெண் தலை ஏந்தி எம் உள்ளத்தே ஒன்றி நின்று அங்கு உறையும் ஒருவனே மேல் #1945 இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன செய் தொழில் இரண்டும் ஆம் அவர்க்கு உள்ளன கோலங்கள் இரண்டும் இல் இள_மான் எமை ஆள் உகந்து இரண்டுபோதும் என் சிந்தையுள் வைகுமே மேல் #1946 மூன்று மூர்த்தியுள் நின்று இயலும் தொழில் மூன்றம் ஆயின மூ இலை சூலத்தன் மூன்று கண்ணினன் தீ தொழில் மூன்றினன் மூன்றுபோதும் என் சிந்தையுள் மூழ்குமே மேல் #1947 நாலின் மேல் முகம் செற்றதும் மன் நிழல் நாலு நன்கு உணர்ந்திட்டதும் இன்பமாம் நாலு வேதம் சரித்ததும் நல் நெறி நாலு போல் எம் அகத்து உறை நாதனே மேல் #1948 அஞ்சும் அஞ்சும் ஓர் ஆடி அரை மிசை அஞ்சு போல் அரவு ஆர்த்தது இன் தத்துவம் அஞ்சும் அஞ்சும் ஓர்ஓர் அஞ்சும் ஆயவன் அஞ்சும் ஆம் எம் அகத்து உறை ஆதியே மேல் #1949 ஆறு கால் வண்டு மூசிய கொன்றையான் ஆறு சூடிய அண்ட முதல்வனார் ஆறு கூர்மையர்க்கு அ சமய பொருள் ஆறு போல் எம் அகத்து உறை ஆதியே மேல் #1950 ஏழு மா மலை ஏழ்பொழில் சூழ் கடல் ஏழு போற்றும் இராவணன் கை நரம்பு ஏழு கேட்டு அருள்செய்தவன் பொன் கழல் ஏழும் சூழ் அடியேன் மனத்து உள்ளவே மேல் #1951 எட்டு மூர்த்தியாய் நின்று இயலும் தொழில் எட்டு வான் குணத்து ஈசன் எம்மான்-தனை எட்டு மூர்த்தியும் எம் இறை எம் உளே எட்டு மூர்த்தியும் எம் உள் ஒடுங்குமே மேல் #1952 ஒன்பதுஒன்பது யானை ஒளி களிறு ஒன்பதுஒன்பது பல் கணம் சூழவே ஒன்பது ஆம் அவை தீ தொழிலின் உரை ஒன்பது ஒத்து நின் என் உள் ஒடுங்குமே மேல் #1953 பத்து நூறவன் வெம் கண் வெள் ஏற்று அண்ணல் பத்து நூறு அவன் பல் சடை தோள் மிசை பத்து யாம் இலம் ஆதலின் ஞானத்தால் பத்தியான் இடம் கொண்டது பள்ளியே மேல் 90. தனித் திருக்குறுந்தொகை #1954 மாசு இல் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கு இளவேனிலும் மூசு வண்டு அறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணை அடி நீழலே மேல் #1955 நமச்சிவாயவே ஞானமும் கல்வியும் நமச்சிவாயவே நான் அறி விச்சையும் நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே நமச்சிவாயவே நல் நெறி காட்டுமே மேல் #1956 ஆள் ஆகார் ஆள் ஆனாரை அடைந்து உய்யார் மீளா ஆட்செய்து மெய்ம்மையுள் நிற்கிலார் தோளாத சுரையோ தொழும்பர் செவி வாளா மாய்ந்து மண் ஆகி கழிவரே மேல் #1957 நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் சுடலை சேர்வது சொல் பிரமாணமே கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் உடலினார் கிடந்து ஊர் முனி பண்டமே மேல் #1958 பூ கை கொண்டு அரன் பொன் அடி போற்றிலார் நாக்கைக்கொண்டு அரன் நாமம் நவில்கிலார் ஆக்கைக்கே இரை தேடி அலமந்து காக்கைக்கே இரை ஆகி கழிவரே மேல் #1959 குறிகளும் அடையாளமும் கோயிலும் நெறிகளும் அவர் நின்றது ஓர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஓதிலும் பொறியிலீர் மனம் என்-கொல் புகாததே மேல் #1960 வாழ்த்த வாயும் நினைக்க மட நெஞ்சும் தாழ்த்த சென்னியும் தந்த தலைவனை சூழ்த்த மா மலர் தூவி துதியாதே வீழ்த்தவா வினையேன் நெடும் காலமே மேல் #1961 எழுது பாவை நல்லார் திறம் விட்டு நான் தொழுது போற்றி நின்றேனையும் சூழ்ந்துகொண்டு உழுத சால் வழியே உழுவான்-பொருட்டு இழுதை நெஞ்சம் இது என் படுகின்றதே மேல் #1962 நெக்குநெக்கு நினைபவர் நெஞ்சுளே புக்கு நிற்கும் பொன் ஆர் சடை புண்ணியன் பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே மேல் #1963 விறகில் தீயினன் பாலில் படு நெய் போல் மறைய நின்றுளன் மா மணி சோதியான் உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக வாங்கி கடைய முன் நிற்குமே மேல் 91. தனித் திருக்குறுந்தொகை #1964 ஏஇலானை என் இச்சை அகம்படி கோயிலானை குணப்பெருங்குன்றினை வாயிலானை மனோன்மணியை பெற்ற தாய்இலானை தழுவும் என் ஆவியே மேல் #1965 முன்னை ஞான முதல் தனி வித்தினை பின்னை ஞான பிறங்கு சடையனை என்னை ஞானத்து இருள் அறுத்து ஆண்டவன் தன்னை ஞான தளை இட்டு வைப்பனே மேல் #1966 ஞானத்தால் தொழுவார் சில ஞானிகள் ஞானத்தால் தொழுவேன் உனை நான் அலேன் ஞானத்தால் தொழுவார்கள் தொழ கண்டு ஞானத்தால் உனை நானும் தொழுவனே மேல் #1967 புழுவுக்கும் குணம் நான்கு எனக்கும் அதே புழுவுக்கு இங்கு எனக்கு உள்ள பொல்லாங்கு இல்லை புழுவினும் கடையேன் புனிதன் தமர் குழுவுக்கு எவ்விடத்தேன் சென்று கூடவே மேல் #1968 மலையே வந்து விழினும் மனிதர்காள் நிலையில் நின்று கலங்கப்பெறுதிரே தலைவன் ஆகிய ஈசன் தமர்களை கொலை செய் யானைதான் கொன்றிடுகிற்குமே மேல் #1969 கற்று கொள்வன வாய் உள நா உள இட்டு கொள்வன பூ உள நீர் உள கற்றை செஞ்சடையான் உளன் நாம் உளோம் எற்றுக்கோ நமனால் முனிவுண்பதே மேல் #1970 மனிதர்காள் இங்கே வம் ஒன்று சொல்லுகேன் கனி தந்தால் கனி உண்ணவும் வல்லிரே புனிதன் பொன் கழல் ஈசன் எனும் கனி இனிது சாலவும் ஏசற்றவர்கட்கே மேல் #1971 என்னை ஏதும் அறிந்திலன் எம்பிரான் தன்னை நானும் முன் ஏதும் அறிந்திலேன் என்னை தன் அடியான் என்று அறிதலும் தன்னை நானும் பிரான் என்று அறிந்தெனே மேல் #1972 தெள்ள தேறி தெளிந்து தித்திப்பது ஓர் உள்ள தேறல் அமுத ஒளி வெளி கள்ளத்தேன் கடியேன் கவலை கடல் வெள்ளத்தேனுக்கு எவ்வாறு விளைந்ததே மேல் 92. காலபாசத் திருக்குறுந்தொகை #1973 கண்டுகொள்ள அரியானை கனிவித்து பண்டு நான் செய்த பாழிமை கேட்டிரேல் கொண்ட பாணி கொடுகொட்டி தாளம் கை கொண்ட தொண்டரை துன்னினும் சூழலே மேல் #1974 நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு கொடுக்க கொள்க என உரைப்பார்களை இடுக்கண் செய்யப்பெறீர் இங்கு நீங்குமே மேல் #1975 கார் கொள் கொன்றை கடி மலர்க்கண்ணியான் சீர் கொள் நாமம் சிவன் என்று அரற்றுவார் ஆர்களாகினும் ஆக அவர்களை நீர்கள் சாரப்பெறீர் இங்கு நீங்குமே மேல் #1976 சாற்றினேன் சடை நீள் முடி சங்கரன் சீற்றம் காமன்-கண் வைத்தவன் சேவடி ஆற்றவும் களிப்பட்ட மனத்தராய் போற்றி என்று உரைப்பார் புடை போகலே மேல் #1977 இறை என் சொல் மறவேல் நமன் தூதுவீர் பிறையும் பாம்பும் உடை பெருமான் தமர் நறவம் நாறிய நன் நறும் சாந்திலும் நிறைய நீறு அணிவார் எதிர் செல்லலே மேல் #1978 வாமதேவன் வள நகர் வைகலும் காமம் ஒன்று இலராய் கை விளக்கொடு தாமம் தூபமும் தண் நறும் சாந்தமும் ஏமமும் புனைவார் எதிர் செல்லலே மேல் #1979 படையும் பாசமும் பற்றிய கையினீர் அடையன்-மின் நமது ஈசன் அடியரை விடை கொள் ஊர்தியினான் அடியார் குழாம் புடை புகாது நீர் போற்றியே போ-மினே மேல் #1980 விச்சை ஆவதும் வேட்கைமை ஆவதும் நிச்சல் நீறு அணிவாரை நினைப்பதே அச்சம் எய்தி அருகு அணையாது நீர் பிச்சை புக்கவன் அன்பரை பேணுமே மேல் #1981 இன்னம் கேண்-மின் இளம் பிறை சூடிய மன்னன் பாதம் மனத்துடன் ஏத்துவார் மன்னும் அஞ்சுஎழுத்து ஆகிய மந்திரம் தன்னில் ஒன்று வல்லாரையும் சாரலே மேல் #1982 மற்றும் கேண்-மின் மன பரிப்பு ஒன்று இன்றி சுற்றும் பூசிய நீற்றொடு கோவணம் ஒற்றை ஏறு உடையான் அடியே அலால் பற்றுஒன்றுஇல்லிகள் மேல் படைபோகலே மேல் #1983 அரக்கன் ஈர்_ஐம்_தலையும் ஓர் தாளினால் நெருக்கி ஊன்றியிட்டான் தமர் நிற்கிலும் சுருக்கெனாது அங்கு பேர்-மின்கள் மற்று நீர் சுருக்கெனில் சுடரான் கழல் சூடுமே மேல் 93. மறக்கிற்பனே என்னும் திருக்குறுந்தொகை #1984 காசனை கனலை கதிர் மா மணி தேசனை புகழார் சிலர் தெண்ணர்கள் மாசினை கழித்து ஆட்கொள வல்ல எம் ஈசனை இனி நான் மறக்கிற்பனே மேல் #1985 புந்திக்கு விளக்கு ஆய புராணனை சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை அந்தி_வண்ணனை ஆர் அழல் மூர்த்தியை வந்து என் உள்ளம் கொண்டானை மறப்பனே மேல் #1986 ஈசன் ஈசன் என்று என்றும் அரற்றுவன் ஈசன்தான் என் மனத்தில் பிரிவு இலன் ஈசன்-தன்னையும் என் மனத்து கொண்டு ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே மேல் #1987 ஈசன் என்னை அறிந்தது அறிந்தனன் ஈசன் சேவடி எற்றப்பெறுதலால் ஈசன் சேவடி ஏத்தப்பெற்றேன் இனி ஈசன்-தன்னையும் யான் மறக்கிற்பனே மேல் #1988 தேனை பாலினை திங்களை ஞாயிற்றை வான வெண் மதி சூடிய மைந்தனை வேனிலானை மெலிவு செய் தீ அழல் ஞானமூர்த்தியை நான் மறக்கிற்பனே மேல் #1989 கன்னலை கரும்பு ஊறிய தேறலை மின்னனை மின் அனைய உருவனை பொன்னனை மணி குன்று பிறங்கிய என்னனை இனி யான் மறக்கிற்பனே மேல் #1990 கரும்பினை கட்டியை கந்த மா மலர் சுரும்பினை சுடர் சோதியுள் சோதியை அரும்பினில் பெரும்போது கொண்டு ஆய் மலர் விரும்பும் ஈசனை நான் மறக்கிற்பனே மேல் #1991 துஞ்சும்போதும் சுடர்விடு சோதியை நெஞ்சுள் நின்று நினைப்பிக்கும் நீதியை நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே மேல் #1992 புதிய பூவினை புண்ணியநாதனை நிதியை நீதியை நித்தில குன்றினை கதியை கண்டம் கறுத்த கடவுளை மதியை மைந்தனை நான் மறக்கிற்பனே மேல் #1993 கருகு கார் முகில் போல்வது ஒர் கண்டனை உருவம் நோக்கியை ஊழி_முதல்வனை பருகு பாலனை பால் மதிசூடியை மருவும் மைந்தனை நான் மறக்கிற்பனே மேல் 94. தொழற்பாலதே என்னும் திருக்குறுந்தொகை #1994 அண்டத்தானை அமரர் தொழப்படும் பண்டத்தானை பவித்திரம் ஆம் திரு முண்டத்தானை முற்றாத இளம் பிறை துண்டத்தானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #1995 முத்து ஒப்பானை முளைத்து எழு கற்பக வித்து ஒப்பானை விளக்கிடை நேர் ஒளி ஒத்து ஒப்பானை ஒளிர் பவள திரள் தொத்து ஒப்பானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #1996 பண் ஒத்தானை பவளம் திரண்டது ஓர் வண்ணத்தானை வகை உணர்வான்-தனை எண்ணத்தானை இளம் பிறை போல் வெள்ளை சுண்ணத்தானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #1997 விடலையானை விரை கமழ் தேன் கொன்றை படலையானை பலி திரிவான் செலும் நடலையானை நரி பிரியாதது ஓர் சுடலையானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #1998 பரிதியானை பல்வேறு சமயங்கள் கருதியானை கண்டார் மனம் மேவிய பிரிதியானை பிறர் அறியாதது ஓர் சுருதியானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #1999 ஆதியானை அமரர் தொழப்படும் நீதியானை நியம நெறிகளை ஓதியானை உணர்தற்கு அரியது ஓர் சோதியானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #2000 ஞாலத்தானை நல்லானை வல்லார் தொழும் கோலத்தானை குணப்பெருங்குன்றினை மூலத்தானை முதல்வனை மூ இலை சூலத்தானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #2001 ஆதி-பால் அட்டமூர்த்தியை ஆன் அஞ்சும் வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற சாதிப்பானை தவத்திடை மாற்றங்கள் சோதிப்பானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #2002 நீற்றினானை நிகர் இல் வெண் கோவண கீற்றினானை கிளர் ஒளி செம் சடை ஆற்றினானை அமரர்-தம் ஆருயிர் தோற்றினானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #2003 விட்டிட்டானை மெய்ஞ்ஞானத்து மெய்ப்பொருள் கட்டிட்டானை கனம்_குழை-பால் அன்பு பட்டிட்டானை பகைத்தவர் முப்புரம் சுட்டிட்டானை கண்டீர் தொழல்-பாலதே மேல் #2004 முற்றினானை இராவணன் நீள் முடி ஒற்றினானை ஒரு விரலால் உற பற்றினானை ஓர் வெண் தலை பாம்பு அரை சுற்றினானை கண்டீர் தொழல்-பாலதே மேல் 95. இலிங்கபுராணத் திருக்குறுந்தொகை #2005 புக்கு அணைந்து புரிந்து அலர் இட்டிலர் நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் சொக்கு அணைந்த சுடர்ஒளி_வண்ணனை மிக்கு காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2006 அலரும் நீரும் கொண்டு ஆட்டி தெளிந்திலர் திலகம் மண்டலம் தீட்டி திரிந்திலர் உலகமூர்த்தி ஒளிநிற_வண்ணனை செலவு காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2007 ஆப்பி நீரோடு அலகு கை கொண்டிலர் பூ பெய் கூடை புனைந்து சுமந்திலர் காப்புக்கொள்ளி கபாலி-தன் வேடத்தை ஓப்பி காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2008 நெய்யும் பாலும் கொண்டு ஆட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கி புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற_வண்ணனை மெய்யை காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2009 எருக்கம் கண்ணி கொண்டு இண்டை புனைந்திலர் பெருக்க கோவணம் பீறி உடுத்திலர் தருக்கினால் சென்று தாழ் சடை அண்ணலை நெருக்கி காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2010 மரங்கள் ஏறி மலர் பறித்து இட்டிலர் நிரம்ப நீர் சுமந்து ஆட்டி நினைந்திலர் உரம் பொருந்தி ஒளிநிற_வண்ணனை நிரம்ப காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2011 கட்டுவாங்கம் கபாலம் கைக்கொண்டிலர் அட்டமாங்கம் கிடந்து அடி வீழ்ந்திலர் சிட்டன் சேவடி சென்று எய்தி காணிய பட்ட கட்டம் உற்றார் அங்கு இருவரே மேல் #2012 வெந்த நீறு விளங்க அணிந்திலர் கந்த மா மலர் இண்டை புனைந்திலர் எந்தை ஏறு உகந்து ஏறு எரி_வண்ணனை அந்தம் காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2013 இள எழுந்த இரும் குவளை மலர் பிளவு செய்து பிணைத்து அடி இட்டிலர் களவுசெய் தொழில் காமனை காய்ந்தவன் அளவு காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2014 கண்டி பூண்டு கபாலம் கை கொண்டிலர் விண்ட வான் சங்கம் விம்ம வாய்வைத்திலர் அண்டமூர்த்தி அழல்நிற_வண்ணனை கெண்டி காணலுற்றார் அங்கு இருவரே மேல் #2015 செங்கணானும் பிரமனும் தம்முளே எங்கும் தேடி திரிந்தவர் காண்கிலார் இங்கு உற்றேன் என்று இலிங்கத்தே தோன்றினான் பொங்கு செம் சடை புண்ணியமூர்த்தியே மேல் 96. மனத்தொகைத் திருக்குறுந்தொகை #2016 பொன் உள்ள திரள் புன் சடையின் புறம் மின் உள்ள திரள் வெண்பிறையாய் இறை நின் உள்ளத்து அருள் கொண்டு இருள் நீங்குதல் என் உள்ளத்து உளது எந்தை பிரானிரே மேல் #2017 முக்கணும் உடையாய் முனிகள் பலர் தொக்கு எணும் கழலாய் ஒரு தோலினோடு அக்கு அணும் அரையாய் அருளே அலாது எக்கணும் இலன் எந்தை பிரானிரே மேல் #2018 பனியாய் வெண் கதிர் பாய் படர் புன் சடை முனியாய் நீ உலகம் முழுது ஆளினும் தனியாய் நீ சரண் நீ சலமே பெரிது இனியாய் நீ எனக்கு எந்தை பிரானிரே மேல் #2019 மறையும் பாடுதிர் மா தவர் மாலினுக்கு உறையும் ஆயினை கோள் அரவோடு ஒரு பிறையும் சூடினை என்பது அலால் பிறிது இறையும் சொல் இலை எந்தை பிரானிரே மேல் #2020 பூத்து ஆர் கொன்றையினாய் புலியின் அதள் ஆர்த்தாய் ஆடு அரவோடு அனல் ஆடிய கூத்தா நின் குரை ஆர் கழலே அலது ஏத்தா நா எனக்கு எந்தை பிரானிரே மேல் #2021 பைம் மாலும் அரவா பரமா பசு மைம் மால் கண்ணியோடு ஏறும் மைந்தா எனும் அம் மால் அல்லது மற்று அடி நாயினேன் எம்மாலும் இலன் எந்தை பிரானிரே மேல் #2022 வெப்பத்தின் மன மாசு விளக்கிய செப்பத்தால் சிவன் என்பவர் தீவினை ஒப்ப தீர்த்திடும் ஒண் கழலாற்கு அல்லது எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே மேல் #2023 திகழும் சூழ் சுடர் வானொடு வைகலும் நிகழும் ஒண் பொருள் ஆயின நீதி என் புகழும் ஆறும் அலால் நுன பொன் அடி இகழும் ஆறு இலன் எந்தை பிரானிரே மேல் #2024 கைப்பற்றி திருமால் பிரமன் உனை எய் பற்றி அறிதற்கு அரியாய் அருள் அ பற்று அல்லது மற்று அடி நாயினேன் எப்பற்றும் இலன் எந்தை பிரானிரே மேல் #2025 எந்தை எம்பிரான் என்றவர் மேல் மனம் எந்தை எம்பிரான் என்று இறைஞ்சி தொழுது எந்தை எம்பிரான் என்று அடி ஏத்துவார் எந்தை எம்பிரான் என்று அடி சேர்வரே மேல் 97. சித்தத்தொகைத் திருக்குறுந்தொகை #2026 சிந்திப்பார் மனத்தான் சிவன் செம் சுடர் அந்தி வான் நிறத்தான் அணி ஆர் மதி முந்தி சூடிய முக்கண்ணினான் அடி வந்திருப்பார் அவர் வான்_உலகு ஆள்வரே மேல் #2027 அண்டம் ஆர் இருளூடு கடந்து உம்பர் உண்டு போலும் ஓர் ஒண் சுடர் அ சுடர் கண்டு இங்கு ஆர் அறிவார் அறிவார் எலாம் வெண் திங்கள்கண்ணி வேதியன் என்பரே மேல் #2028 ஆதி ஆயவன் ஆரும் இலாதவன் போது சேர் புனை நீள் முடி புண்ணியன் பாதி பெண் உரு ஆகி பரஞ்சுடர் சோதியுள் சோதியாய் நின்ற சோதியே மேல் #2029 இட்டது இட்டது ஓர் ஏறு உகந்து ஏறி ஊர் பட்டி துட்டங்கனாய் பலி தேர்வது ஓர் கட்ட வாழ்க்கையன் ஆகிலும் வானவர் அட்டமூர்த்தி அருள் என்று அடைவரே மேல் #2030 ஈறு இல் கூறையன் ஆகி எரிந்த வெண் நீறு பூசி நிலா மதி சூடிலும் வீறு இலாதன செய்யினும் விண்ணவர் ஊறலாய் அருளாய் என்று உரைப்பரே மேல் #2031 உச்சி வெண் மதி சூடிலும் ஊன் அறா பச்சை வெண் தலை ஏந்தி பல இலம் பிச்சையே புகுமாகிலும் வானவர் அச்சம் தீர்த்து அருளாய் என்று அடைவரே மேல் #2032 ஊர் இலாய் என்று ஒன்று ஆக உரைப்பது ஓர் பேர் இலாய் பிறை சூடிய பிஞ்ஞகா கார் உலாம் கண்டனே உன் கழல் அடி சேர்விலார்கட்கு தீயவை தீயவே மேல் #2033 எந்தையே எம்பிரானே என உள்கி சிந்திப்பார் அவர் தீவினை திருமால் வெந்த நீறு மெய் பூசிய வேதியன் அந்தமா அளப்பார் அடைந்தார்களே மேல் #2034 ஏன வெண் மருப்போடு என்பு பூண்டு எழில் ஆனை ஈர் உரி போர்த்து அனல் ஆடிலும் தான் அ வண்ணத்தனாகிலும் தன்னையே வானநாடர் வணங்குவர் வைகலே மேல் #2035 ஐயன் அந்தணன் ஆணொடு பெண்ணும் ஆம் மெய்யன் மேதகு வெண் பொடி பூசிய மை கொள் கண்டத்தன் மான் மறி கையினான் பை கொள் பாம்பு அரை ஆர்த்த பரமனே மேல் #2036 ஒருவன் ஆகி நின்றான் இ உலகு எலாம் இருவர் ஆகி நின்றார்கட்கு அறிகிலான் அரு அரா அரை ஆர்த்தவன் ஆர் கழல் பரவுவார் அவர் பாவம் பறையுமே மேல் #2037 ஓத_வண்ணனும் ஒண் மலர் செல்வனும் நாதனே அருளாய் என்று நாள்-தொறும் காதல் செய்து கருதப்படுமவர் பாதம் ஏத்த பறையும் நம் பாவமே மேல் #2038 கவ தன்மை அவரவர் ஆக்கையான் வெவ்வ தன்மையன் என்பது ஒழி-மினோ மௌவல் நீள் மலர் மேல் உறைவானொடு பௌவ_வண்ணனுமாய் பணிவார்களே மேல் #2039 அக்கும் ஆமையும் பூண்டு அனல் ஏந்தி இல் புக்கு பல் பலி தேரும் புராணனை நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ தொக்க வானவரால் தொழுவானையே மேல் #2040 கங்கை தங்கிய செம் சடை மேல் இளம் திங்கள் சூடிய தீநிற_வண்ணனார் இங்கணார் எழில் வானம் வணங்கவே அங்கணாற்கு அதுவால் அவன் தன்மையே மேல் #2041 ஙகர வெல் கொடியானொடு நன் நெஞ்சே நுகர நீ உனை கொண்டு உய போக்குறில் மகர வெல் கொடி மைந்தனை காய்ந்தவன் புகர் இல் சேவடியே புகல் ஆகுமே மேல் #2042 சரணம் ஆம் படியார் பிறர் யாவரோ கரணம் தீர்த்து உயிர் கையில் இகழ்ந்த பின் மரணம் எய்திய பின் நவை நீக்குவான் அரணம் மூஎயில் எய்தவன் அல்லனே மேல் #2043 ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் சிவன் என்பான் செழு மான் மறி கையினான் கவனம் செய்யும் கன விடைஊர்தியான் தமர் என்றாலும் கெடும் தடுமாற்றமே மேல் #2044 இடபம் எறியும் இல் பலி ஏற்பவர் அடவி காதலித்து ஆடுவர் ஐந்தலை பட அம் பாம்பு அரை ஆர்த்த பரமனை கடவிராய் சென்று கைதொழுது உய்ம்-மினே மேல் #2045 இணர்ந்து கொன்றை பொன் தாது சொரிந்திடும் புணர்ந்த வாள் அரவம் மதியோடு உடன் அணைந்த அம் சடையான் அவன் பாதமே உணர்ந்த உள்ளத்தவர் உணர்வார்களே மேல் #2046 தருமம் தான் தவம் தான் தவத்தால் வரும் கருமம் தான் கரு மான் மறி கையினான் அருமந்தன்ன அதிர் கழல் சேர்-மினோ சிரமம் சேர் அழல் தீவினையாளரே மேல் #2047 நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்சம் நீங்க தவ நெறி சார்தலால் அமைத்து கொண்டது ஓர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே மேல் #2048 பல்பல் காலம் பயிற்றி பரமனை சொல் பல் காலம் நின்று ஏத்து-மின் தொல்வினை வெற்பில் தோன்றிய வெம் கதிர் கண்ட அ புல் பனி கெடும் ஆறு அது போலுமே மேல் #2049 மணி செய் கண்டத்து மான் மறி கையினான் கணிசெய் வேடத்தர் ஆயவர் காப்பினால் பணிகள்தாம் செய வல்லவர் யாவர் தம் பிணி செய் ஆக்கையை நீக்குவர் பேயரே மேல் #2050 இயக்கர் கின்னரர் இந்திரன் தானவர் நயக்க நின்றவன் நான்முகன் ஆழியான் மயக்கம் எய்த வல் மால் எரி ஆயினான் வியக்கும் தன்மையினான் எம் விகிர்தனே மேல் #2051 அரவம் ஆர்த்து அனல் ஆடிய அண்ணலை பரவுவார் அவர் பாவம் பறைதற்கு குரவை கோத்தவனும் குளிர் போதின் மேல் கரவு இல் நான்முகனும் கரி அல்லரே மேல் #2052 அழல் அங்கையினன் அந்தரத்து ஓங்கி நின்று உழலும் மூஎயில் ஒள் அழல் ஊட்டினான் தழலும் தாமரையானொடு தாவினான் கழலும் சென்னியும் காண்டற்கு அரியனே மேல் #2053 இளமை கைவிட்டு அகறலும் மூப்பினார் வளமை போய் பிணியோடு வருதலால் உளம் எலாம் ஒளியாய் மதி ஆயினான் கிளமையே கிளை ஆக நினைப்பனே மேல் #2054 தன்னில் தன்னை அறியும் தலைமகன் தன்னில் தன்னை அறியில் தலைப்படும் தன்னில் தன்னை அறிவிலனாயிடில் தன்னில் தன்னையும் சார்தற்கு அரியனே மேல் #2055 இலங்கை_மன்னனை ஈர் ஐந்து பத்தும் அன்று அலங்கலோடு உடனே செல ஊன்றிய நலம் கொள் சேவடி நாள்-தொறும் நாள்-தொறும் வலம்கொண்டு ஏத்துவார் வான்_உலகு ஆள்வரே மேல் 98. உள்ளத் திருக்குறுந்தொகை #2056 நீறு அலைத்தது ஓர் மேனி நிமிர் சடை ஆறு அலைக்க நின்று ஆடும் அமுதினை தேறலை தெளியை தெளி வாய்த்தது ஓர் ஊறலை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2057 பொந்தையை புக்கு நீக்க புகுந்திடும் தந்தையை தழல் போல்வது ஓர் மேனியை சிந்தையை தெளிவை தெளி வாய்த்தது ஓர் எந்தையை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2058 வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தை சடை வைத்த விகிர்தனார் கள்ளத்தை கழியம் மனம் ஒன்றி நின்று உள்ளத்தில் ஒளியை கண்டது என் உள்ளமே மேல் #2059 அம்மானை அமுதின் அமுதே என்று தம்மானை தத்துவத்து அடியார் தொழும் செம்மான நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2060 கூறு ஏறும் உமை பாகம் ஓர்பாலராய் ஆறு ஏறும் சடை மேல் பிறை சூடுவர் பாறு ஏறும் தலை ஏந்தி பல இலம் ஏறு ஏறும் எந்தையை கண்டது என் உள்ளமே மேல் #2061 முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய் சாகின்றார் தம் நெஞ்சம் தமக்கு தாம் இலாதவர் வன் நெஞ்சம் அது நீங்குதல் வல்லிரே என் நெஞ்சில் ஈசனை கண்டது என் உள்ளமே மேல் #2062 வென்றானை புலன் ஐந்தும் என் தீவினை கொன்றானை குணத்தாலே வணங்கிட நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் ஒன்றானை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2063 மருவினை மட நெஞ்சம் மனம் புகும் குருவினை குணத்தாலே வணங்கிடும் திருவினை சிந்தையுள் சிவனாய் நின்ற உருவினை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2064 தேசனை திருமால் பிரமன் செயும் பூசனை புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை நெஞ்சினுள் நிறைவாய் நின்ற ஈசனை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் #2065 வெறுத்தான் ஐம்புலனும் பிரமன் தலை அறுத்தானை அரக்கன் கயிலாயத்தை கறுத்தானை காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை கண்டுகொண்டது என் உள்ளமே மேல் 99. பாவநாசத் திருக்குறுந்தொகை #2066 பாவமும் பழி பற்று அற வேண்டுவீர் ஆவில் அஞ்சு உகந்து ஆடுமவன் கழல் மேவராய் மிகவும் மகிழ்ந்து உள்கு-மின் காவலாளன் கலந்து அருள்செய்யுமே மேல் #2067 கங்கை ஆடில் என் காவிரி ஆடில் என் கொங்கு தண் குமரி துறை ஆடில் என் ஒங்கு மா கடல் ஓதம் நீராடில் என் எங்கும் ஈசன் எனாதவர்க்கு இல்லையே மேல் #2068 பட்டர் ஆகில் என் சாத்திரம் கேட்கில் என் இட்டும் அட்டியும் ஈ தொழில் பூணின் என் எட்டும் ஒன்றும் இரண்டும் அறியில் என் இட்டம் ஈசன் எனாதவர்க்கு இல்லையே மேல் #2069 வேதம் ஓதில் என் வேள்விகள் செய்கில் என் நீதிநூல் பல நித்தல் பயிற்றில் என் ஓதி அங்கம் ஒர் ஆறும் உணரில் என் ஈசனை உள்குவார்க்கு அன்றி இல்லையே மேல் #2070 காலை சென்று கலந்து நீர் மூழ்கில் என் வேலை-தோறும் விதிவழி நிற்கில் என் ஆலை வேள்வி அடைந்து அது வேட்கில் என் ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே மேல் #2071 கானம் நாடு கலந்து திரியில் என் ஈனம் இன்றி இரும் தவம் செய்யில் என் ஊனை உண்டல் ஒழிந்து வான் நோக்கில் என் ஞானம் என்பவர்க்கு அன்றி நன்கு இல்லையே மேல் #2072 கூட வேடத்தர் ஆகி குழுவில் என் வாடி ஊனை வருத்தி திரியில் என் ஆடல் வேடத்தன் அம்பலக்கூத்தனை பாடலாளர்க்கு அல்லால் பயன் இல்லையே மேல் #2073 நன்று நோற்கில் என் பட்டினி ஆகில் என் குன்றம் ஏறி இரும் தவம் செய்யில் என் சென்று நீரில் குளித்து திரியில் என் என்றும் ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே மேல் #2074 கோடி தீர்த்தம் கலந்து குளித்து அவை ஆடினாலும் அரனுக்கு அன்பு இல்லையேல் ஓடும் நீரினை ஓட்டை குடத்து அட்டி மூடி வைத்திட்ட மூர்க்கனொடு ஒக்குமே மேல் #2075 மற்று நல் தவம் செய்து வருந்தில் என் பொற்றை உற்று எடுத்தான் உடல் புக்கு இற குற்ற நல் குரை ஆர் கழல் சேவடி பற்று இலாதவர்க்கு பயன் இல்லையே மேல் 100. ஆதிபுராணத் திருக்குறுந்தொகை #2076 வேத_நாயகன் வேதியர்_நாயகன் மாதின்_நாயகன் மாதவர்_நாயகன் ஆதி_நாயகன் ஆதிரை_நாயகன் பூத_நாயகன் புண்ணியமூர்த்தியே மேல் #2077 செத்து செத்து பிறப்பதே தேவு என்று பத்திசெய் மனப்பாறைகட்கு ஏறுமோ அத்தன் என்று அரியோடு பிரமனும் துத்தியம்செய நின்ற நல் சோதியே மேல் #2078 நூறு கோடி பிரமர்கள் நொந்தினார் ஆறு கோடி நாராயணர் அங்ஙனே ஏறு கங்கை மணல் எண் இல் இந்திரர் ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே மேல் #2079 வாதுசெய்து மயங்கும் மனத்தராய் ஏது சொல்லுவீராகிலும் ஏழைகாள் யாது ஓர் தேவர் எனப்படுவார்க்கு எலாம் மா தேவன் அலால் தேவர் மற்று இல்லையே மேல் #2080 கூவல் ஆமை குரை கடல் ஆமையை கூவலோடு ஒக்குமோ கடல் என்றல் போல் பாவகாரிகள் பார்ப்பு அரிது என்பரால் தேவதேவன் சிவன் பெருந்தன்மையே மேல் #2081 பேய் வனத்து அமர்வானை பிரார்த்தித்தார்க்கு ஈவனை இமையோர் முடி தன் அடி சாய்வனை சலவார்கள் தமக்கு உடல் சீவனை சிவனை சிந்தியார்களே மேல் #2082 எரி பெருக்குவர் அ எரி ஈசனது உரு வருக்கம் அது ஆவது உணர்கிலர் அரி அயற்கு அரியானை அயர்த்து போய் நரிவிருத்தம் அது ஆகுவர் நாடரே மேல் #2083 அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன் உரு அல்லனோ இருக்கு நான்மறை ஈசனையே தொழும் கருத்தினை நினையார் கல்மனவரே மேல் #2084 தாயினும் நல்ல சங்கரனுக்கு அன்பர் ஆய உள்ளத்து அமுது அருந்தப்பெறார் பேயர் பேய் முலை உண்டு உயிர் போக்கிய மாயன் மாயத்து பட்ட மனத்தரே மேல் #2085 அரக்கன் வல் அரட்டு ஆங்கு ஒழித்து ஆர் அருள் பெருக்க செய்த பிரான் பெருந்தன்மையை அருத்தி செய்து அறியப்பெறுகின்றிலர் கருத்து இலா கயவ கணத்தோர்களே மேல் |
No comments:
Post a Comment