திருஞானசம்பந்தர்
இயற்றிய
தேவாரம் (திருமுறை 3) திரு சிவஞான சம்பந்தர் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌻🌷🌷🌷🌺🌺🌺🌸🌸🌸🌹🌹🌹🪷🪷🪷💐💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐💐💐🌹💐❤️🙏🪷🪷🪷🌹🌹🌹🌸🌸🌸🌺🌺🌺🌷🌷🌷🌻🌻🌻 |
---|
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை 1. கோயில் : பண் - காந்தாரபஞ்சமம் #2801 ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர் அந்தணர் பிரியாத சிற்றம்பலம் நாடினாய் இடமா நறும் கொன்றை நயந்தவனே பாடினாய் மறையோடு பல் கீதமும் பல் சடை பனி கால் கதிர் வெண் திங்கள் சூடினாய் அருளாய் சுருங்க எம தொல்வினையே மேல் #2802 கொட்டமே கமழும் குழலாளொடு கூடினாய் எருது ஏறினாய் நுதல் பட்டமே புனைவாய் இசை பாடுவ பாரிடமா நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் இட்டமா உறைவாய் இவை மேவியது என்னை-கொலோ மேல் #2803 நீலத்து ஆர் கரிய மிடற்றார் நல்ல நெற்றி மேல் உற்ற கண்ணினார் பற்று சூலத்தார் சுடலை பொடி நீறு அணிவார் சடையார் சீலத்தார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ கோலத்தாய் அருளாய் உன காரணம் கூறுதுமே மேல் #2804 கொம்பு அலைத்து அழகு எய்திய நுண் இடை கோல வாள் மதி போலும் முகத்து இரண்டு அம்பு அலைத்த கண்ணாள் முலை மேவிய வார் சடையான் கம்பலைத்து எழு காமுறு காளையர் காதலால் கழல் சேவடி கைதொழ அம்பலத்து உறைவான் அடியார்க்கு அடையா வினையே மேல் #2805 தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் பல்லை ஆர் தலையில் பலி ஏற்று உழல் பண்டரங்கா தில்லையார் தொழுது ஏத்து சிற்றம்பலம் சேர்தலால் கழல் சேவடி கைதொழ இல்லை ஆம் வினைதான் எரிய மதில் எய்தவனே மேல் #2806 ஆகம் தோய் அணி கொன்றையாய் அனல் அங்கையாய் அமரர்க்கு அமரா உமை பாகம் தோய் பகவா பலி ஏற்று உழல் பண்டரங்கா மாகம் தோய் பொழில் மல்கு சிற்றம்பலம் மன்னினாய் மழுவாளினாய் அழல் நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே மேல் #2807 சாதி ஆர் பளிங்கின்னொடு வெள்ளிய சங்க வார் குழையாய் திகழப்படும் வேதியா விகிர்தா விழவு ஆர் அணி தில்லை-தன்னுள் ஆதியாய்க்கு இடம் ஆய சிற்றம்பலம் அம் கையால் தொழ வல் அடியார்களை வாதியாது அகலும் நலியா மலி தீவினையே மேல் #2808 வேயின் ஆர் பணை_தோளியொடு ஆடலை வேண்டினாய் விகிர்தா உயிர்கட்கு அமுது ஆயினாய் இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே தீயின் ஆர் கணையால் புரம் மூன்று எய்த செம்மையாய் திகழ்கின்ற சிற்றம்பலம் மேயினாய் கழலே தொழுது எய்துதுமே மேல்_உலகே மேல் #2809 தாரின் ஆர் விரி கொன்றையாய் மதி தாங்கு நீள் சடையாய் தலைவா நல்ல தேரின் ஆர் மறுகின் திரு ஆர் அணி தில்லை-தன்னுள் சீரினால் வழிபாடு ஒழியாதது ஓர் செம்மையால் அழகு ஆய சிற்றம்பலம் ஏரினால் அமர்ந்தாய் உன சீர் அடி ஏத்துதுமே மேல் #2810 வெற்று அரை உழல்வார் துவர் ஆடைய வேடத்தார் அவர்கள் உரை கொள்ளன்-மின் மற்று அவர் உலகின் அவலம் அவை மாற்றகில்லார் கற்றவர் தொழுது ஏத்து சிற்றம்பலம் காதலால் கழல் சேவடி கைதொழ உற்றவர் உலகின் உறுதி கொள வல்லவரே மேல் #2811 நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் ஊறும் இன் தமிழால் உயர்ந்தார் உறை தில்லை-தன்னுள் ஏறு தொல் புகழ் ஏந்து சிற்றம்பலத்து ஈசனை இசையால் சொன்ன பத்து இவை கூறும் ஆறு வல்லார் உயர்ந்தாரொடும் கூடுவாரே மேல் 2. திருப்பூந்தராய் : பண் - காந்தாரபஞ்சமம் #2812 பந்து சேர் விரலாள் பவள துவர்வாயினாள் பனி மா மதி போல் முகத்து அந்தம் இல் புகழாள் மலைமாதொடும் ஆதிப்பிரான் வந்து சேர்விடம் வானவர் எ திசையும் நிறைந்து வலம்செய்து மா மலர் புந்திசெய்து இறைஞ்சி பொழி பூந்தராய் போற்றதுமே மேல் #2813 காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் தேவியும் திரு மேனி ஓர்பாகமாய் ஒன்று இரண்டு ஒருமூன்றொடு சேர் பதி பூவில் அந்தணன் ஒப்பவர் பூந்தராய் போற்றுதுமே மேல் #2814 பை அரா வரும் அல்குல் மெல் இயல் பஞ்சின் நேர் அடி வஞ்சி கொள் நுண் இடை தையலாள் ஒருபால் உடை எம் இறை சாரும் இடம் செய் எலாம் கழுநீர் கமலம் மலர் தேறல் ஊறலின் சேறு உலராத நல் பொய் இலா மறையோர் பயில் பூந்தராய் போற்றுதுமே மேல் #2815 முள்ளி நாள் முகை மொட்டு இயல் கோங்கின் அரும்பு தென் கொள் குரும்பை மூவா மருந்து உள் இயன்ற பைம்பொன் கலசத்து இயல் ஒத்த முலை வெள்ளி மால் வரை அன்னது ஓர் மேனியில் மேவினார் பதி வீ மரு தண் பொழில் புள் இனம் துயில் மல்கிய பூந்தராய் போற்றுதுமே மேல் #2816 பண் இயன்று எழு மென்மொழியாள் பகர் கோதை ஏர் திகழ் பைம் தளிர் மேனி ஓர் பெண் இயன்ற மொய்ம்பின் பெருமாற்கு இடம் பெய் வளையார் கண் இயன்று எழு காவி செழும் கருநீலம் மல்கிய காமரு வாவி நல் புண்ணியர் உறையும் பதி பூந்தராய் போற்றுதுமே மேல் #2817 வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் சேண் நிலா திகழ் செம் சடை எம் அண்ணல் சேர்வது சிகர பெருங்கோயில் சூழ் போழ்நிலா நுழையும் பொழில் பூந்தராய் போற்றுதுமே மேல் #2818 கார் உலாவிய வார் குழலாள் கயல் கண்ணினாள் புயல் கால் ஒளி மின் இடை வார் உலாவிய மென்முலையாள் மலைமாது உடனாய் நீர் உலாவிய சென்னியன் மன்னி நிகரும் நாமம் மு_நான்கும் நிகழ் பதி போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய் போற்றுதுமே மேல் #2819 காசை சேர் குழலாள் கயல் ஏர் தடம் கண்ணி காம்பு அன தோள் கதிர் மென் முலை தேசு சேர் மலைமாது அமரும் திரு மார்பு அகலத்து ஈசன் மேவும் இரும் கயிலை எடுத்தானை அன்று அடர்த்தான் இணை சேவடி பூசை செய்பவர் சேர் பொழில் பூந்தராய் போற்றுதுமே மேல் #2820 கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை பங்கு சேர் திரு மார்பு உடையார் படர் தீ உருவாய் மங்குல்_வண்ணனும் மா மலரோனும் மயங்க நீண்டவர் வான் மிசை வந்து எழு பொங்கு நீரில் மிதந்த நன் பூந்தராய் போற்றுதுமே மேல் #2821 கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் குலவு பூம் குழலாள் உமை_கூறனை வேறு உரையால் அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் புலவர்தாம் புகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதுமே மேல் #2822 தேம்பல் நுண்_இடையாள் செழும் சேல் அன கண்ணியோடு அண்ணல் சேர்விடம் தேன் அமர் பூம் பொழில் திகழ் பொன் பதி பூந்தராய் போற்றுதும் என்று ஓம்பு தன்மையன் முத்தமிழ் நான்மறை ஞானசம்பந்தன் ஒண் தமிழ் மாலை கொண்டு ஆம் படி இவை ஏத்த வல்லார்க்கு அடையா வினையே மேல் 3. திருப்புகலி : நாலடிமேல்வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம் #2823 இயல் இசை எனும் பொருளின் திறம் ஆம் புயல் அன மிடறு உடை புண்ணியனே கயல் அன வரி நெடும் கண்ணியொடும் அயல் உலகு அடி தொழ அமர்ந்தவனே கலன் ஆவது வெண் தலை கடி பொழில் புகலி-தன்னுள் நிலன் நாள்-தொறும் இன்புற நிறை மதி அருளினனே மேல் #2824 நிலையுறும் இடர் நிலையாத வண்ணம் இலை உறு மலர்கள் கொண்டு ஏத்துதும் யாம் மலையினில் அரிவையை வெருவ வன் தோல் அலைவரு மத கரி உரித்தவனே இமையோர்கள் நின் தாள் தொழ எழில் திகழ் பொழில் புகலி உமையாளொடு மன்னினை உயர் திருவடி இணையே மேல் #2825 பாடினை அரு மறை வரல்முறையால் ஆடினை காண முன் அரு வனத்தில் சாடினை காலனை தயங்கு ஒளி சேர் நீடு வெண் பிறை முடி நின்மலனே நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்- தனையே இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே மேல் #2826 நிழல் திகழ் மழுவினை யானையின் தோல் அழல் திகழ் மேனியில் அணிந்தவனே கழல் திகழ் சிலம்பு ஒலி அலம்ப நல்ல முழவொடும் அரு நடம் முயற்றினனே முடி மேல் மதி சூடினை முருகு அமர் பொழில் புகலி அடியாரவர் ஏத்துற அழகொடும் இருந்தவனே மேல் #2827 கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட உரிமையின் உலகு உயிர் அளித்த நின்-தன் பெருமையை நிலத்தவர் பேசின்அல்லால் அருமையில் அளப்பு அரிது ஆயவனே அரவு ஏர் இடையாளொடும் அலை கடல் மலி புகலி பொருள் சேர்தர நாள்-தொறும் புவி மிசை பொலிந்தவனே மேல் #2828 அடை அரிமாவொடு வேங்கையின் தோல் புடை பட அரை மிசை புனைந்தவனே படை உடை நெடு மதில் பரிசு அழித்த விடை உடை கொடி மல்கு வேதியனே விகிர்தா பரமா நின்னை விண்ணவர் தொழ புகலி தகுவாய் மட மாதொடும் தாள் பணிந்தவர்-தமக்கே மேல் #2829 அடியவர் தொழுது எழ அமரர் ஏத்த செடிய வல்வினை பல தீர்ப்பவனே துடி இடை அகல் அல்குல் தூ_மொழியை பொடி அணி மார்புற புல்கினனே புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர் நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே மேல் #2830 இரவொடு பகல் அது ஆம் எம்மான் உன்னை பரவுதல் ஒழிகிலேன் வழி அடியேன் குர விரி நறும் கொன்றை கொண்டு அணிந்த அர விரி சடைமுடி ஆண்டகையே அன மென்நடையாளொடும் அதிர் கடல் இலங்கை_மன்னை இனம் ஆர்தரு தோள் அடர்த்து இருந்தனை புகலியுளே மேல் #2831 உருகிட உவகை தந்து உடலினுள்ளால் பருகிடும் அமுது அன பண்பினனே பொரு கடல்_வண்ணனும் பூஉளானும் பெருகிடும் மருள் என பிறங்கு எரியாய் உயர்ந்தாய் இனி நீ எனை ஒண் மலர் அடி இணை கீழ் வயந்து ஆங்கு உற நல்கிடு வளர் மதில் புகலி மனே மேல் #2832 கையினில் உண்பவர் கணிக நோன்பர் செய்வன தவம் அலா செது மதியார் பொய்யவர் உரைகளை பொருள் எனாத மெய்யவர் அடி தொழ விரும்பினனே வியந்தாய் வெள் ஏற்றினை விண்ணவர் தொழு புகலி உயர்ந்து ஆர் பெருங்கோயிலுள் ஒருங்குடன் இருந்தவனே மேல் #2833 புண்ணியர் தொழுது எழு புகலி நகர் விண்ணவர் அடி தொழ விளங்கினானை நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை பண்ணிய அரும் தமிழ் பத்தும் வல்லார் நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் இடர் ஆயின இன்றி தாம் எய்துவர் தவநெறியே மேல் 4. திருவாவடுதுறை : நாலடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம் #2834 இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உன கழல் தொழுது எழுவேன் கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2835 வாழினும் சாவினும் வருந்தினும் போய் வீழினும் உன கழல் விடுவேனல்லேன் தாழ் இளம் தடம் புனல் தயங்கு சென்னி போழ் இள மதி வைத்த புண்ணியனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2836 நனவினும் கனவினும் நம்பா உன்னை மனவினும் வழிபடல் மறவேன் அம்மான் புனல் விரி நறும் கொன்றை போது அணிந்து கனல் எரி அனல் புல்கு கையவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2837 தும்மலொடு அரும் துயர் தோன்றிடினும் அம் மலரடியலால் அரற்றாது என் நா கைம் மல்கு வரி சிலை கணை ஒன்றினால் மும்மதில் எரி எழ முனிந்தவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2838 கையது வீழினும் கழிவுறினும் செய் கழல் அடியலால் சிந்தைசெய்யேன் கொய் அணி நறு மலர் குலாய சென்னி மை அணி மிடறு உடை மறையவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2839 வெம் துயர் தோன்றி ஓர் வெருவுறினும் எந்தாய் உன் அடியலால் ஏத்தாது என் நா ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த சந்த வெண்பொடி அணி சங்கரனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2840 வெப்பொடு விரவி ஓர் வினை வரினும் அப்பா உன் அடியலால் அரற்றாது என் நா ஒப்பு உடை ஒருவனை உரு அழிய அப்படி அழல் எழ விழித்தவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2841 பேர் இடர் பெருகி ஓர் பிணி வரினும் சீர் உடை கழலலால் சிந்தைசெய்யேன் ஏர் உடை மணி முடி இராவணனை ஆர் இடர் பட வரை அடர்த்தவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2842 உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின் ஒண் மலர் அடியலால் உரையாது என் நா கண்ணனும் கடி கமழ் தாமரை மேல் அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2843 பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும் அத்தா உன் அடியலால் அரற்றாது என் நா புத்தரும் சமணரும் புறன் உரைக்க பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே இதுவோ எமை ஆளும் ஆறு ஈவது ஒன்று எமக்கு இல்லையேல் அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே மேல் #2844 அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த இலை நுனை வேல் படை எம் இறையை நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன விலை உடை அரும் தமிழ் மாலை வல்லார் வினை ஆயின நீங்கி போய் விண்ணவர் வியன்_உலகம் நிலை ஆக முன் ஏறுவர் நிலம் மிசை நிலை இலரே மேல் 5. திருப்பூந்தராய் : ஈரடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம் #2845 தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன் கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்று அது ஆகிய நம்பன்தானே மேல் #2846 புள் இனம் புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளம் தாங்கு விகிர்தன் அடி தொழ ஞாலத்தில் உயர்வார் உள்கும் நன்நெறி மூலம் ஆய முதலவன்தானே மேல் #2847 வேந்தராய் உலகு ஆள விருப்புறின் பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் நீதியால் நினைந்து ஏத்தி உள்கிட சாதியா வினை ஆனதானே மேல் #2848 பூசுரர் தொழுது ஏத்திய பூந்தராய் ஈசன் சேவடி ஏத்தி இறைஞ்சிட சிந்தை நோய் அவை தீர நல்கிடும் இந்து வார் சடை எம் இறையே மேல் #2849 பொலிந்த என்பு அணி மேனியன் பூந்தராய் மலிந்த புந்தியர் ஆகி வணங்கிட நும்-தம் மேல்வினை ஓட வீடுசெய் எந்தை ஆய எம் ஈசன்தானே மேல் #2850 பூதம் சூழ பொலிந்தவன் பூந்தராய் நாதன் சேவடி நாளும் நவின்றிட நல்கும் நாள்-தொறும் இன்பம் நளிர் புனல் பில்கு வார் சடை பிஞ்ஞகனே மேல் #2851 புற்றின் நாகம் அணிந்தவன் பூந்தராய் பற்றி வாழும் பரமனை பாடிட பாவம் ஆயின தீர பணித்திடும் சே அது ஏறிய செல்வன்தானே மேல் #2852 போதகத்து உரி போர்த்தவன் பூந்தராய் காதலித்தான் கழல் விரல் ஒன்றினால் அரக்கன் ஆற்றல் அழித்து அவனுக்கு அருள் பெருக்கி நின்ற எம் பிஞ்ஞகனே மேல் #2853 மத்தம் ஆன இருவர் மருவு ஒணா அத்தன் ஆனவன் மேவிய பூந்தராய் ஆள் அதுவாக அடைந்து உய்ம்-மின் நும் வினை மாளும் ஆறு அருள்செய்யும் தானே மேல் #2854 பொருத்தம் இல் சமண் சாக்கியர் பொய் கடிந்து இருத்தல்செய்த பிரான் இமையோர் தொழ பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை ஏந்தும் மான் மறி எம் இறையே மேல் #2855 புந்தியால் மிக நல்லவர் பூந்தராய் அந்தம் இல் எம் அடிகளை ஞானசம் பந்தன் மாலைகொண்டு ஏத்தி வாழும் நும் பந்தம் ஆர் வினை பாறிடுமே மேல் 6. திருக்கொள்ளம்பூதூர் : ஈரடிமேல் வைப்பு - பண் - காந்தாரபஞ்சமம் #2856 கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர் நட்டம் ஆடிய நம்பனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2857 கோட்டக கழனி கொள்ளம்பூதூர் நாட்டகத்து உறை நம்பனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2858 குலையின் ஆர் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர் விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2859 குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர் தவள நீறு அணி தலைவனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2860 கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர் நின்ற புன் சடை நிமலனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2861 ஓடம் வந்து அணையும் கொள்ளம்பூதூர் ஆடல் பேணிய அடிகளை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2862 ஆறு வந்து அணையும் கொள்ளம்பூதூர் ஏறு தாங்கிய இறைவனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2863 குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர் அரக்கனை செற்ற ஆதியை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2864 பரு வரால் உகளும் கொள்ளம்பூதூர் இருவர் காண்பு அரியான் கழல் உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2865 நீர் அக கழனி கொள்ளம்பூதூர் தேர் அமண் செற்ற செல்வனை உள்க செல்ல உந்துக சிந்தையார் தொழ நல்கும் ஆறு அருள் நம்பனே மேல் #2866 கொன்றை சேர் சடையான் கொள்ளம்பூதூர் நன்று காழியுள் ஞானசம்பந்தன் இன்று சொல் மாலைகொண்டு ஏத்த வல்லார் போய் என்றும் வானவரோடு இருப்பாரே மேல் 7. திருப்புகலி : பண் - காந்தாரபஞ்சமம் #2867 கண்நுதலானும் வெண்நீற்றினானும் கழல் ஆர்க்கவே பண் இசை பாட நின்று ஆடினானும் பரஞ்சோதியும் புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர் பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே மேல் #2868 சாம்பலோடும் தழல் ஆடினானும் சடையின் மிசை பாம்பினோடும் மதி சூடினானும் பசு ஏறியும் பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர் காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே மேல் #2869 கருப்பு நல் வார் சிலை காமன் வேவ கடைக்கண்டானும் மருப்பு நல் ஆனையின் ஈர் உரி போர்த்த மணாளனும் பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர் விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே மேல் #2870 அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே கங்கையை செம் சடை சூடினானும் கடலினிடை பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர் மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே மேல் #2871 சாமநல்வேதனும் தக்கன்-தன் வேள்வி தகர்த்தானும் நாமம் நூறு ஆயிரம் சொல்லி வானோர் தொழும் நாதனும் பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர் கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே மேல் #2872 இரவிடை ஒள் எரி ஆடினானும் இமையோர் தொழ செருவிடை முப்புரம் தீ எரித்த சிவலோகனும் பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர் அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே மேல் #2873 சேர்ப்பது திண் சிலை மேவினானும் திகழ் பாலன் மேல் வேர்ப்பதுசெய்த வெங்கூற்று உதைத்தானும் வேள்வி புகை போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர் பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே மேல் #2874 கல் நெடு மால் வரை கீழ் அரக்கன் இடர் கண்டானும் வில் நெடும் போர் விறல் வேடன் ஆகி விசயற்கு ஒரு பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர் அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே மேல் #2875 பொன் நிற நான்முகன் பச்சையான் என்று இவர் புக்குழி தன்னை இன்னான் என காண்பு அரிய தழல் சோதியும் புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர் மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே மேல் #2876 பிண்டியும் போதியும் பேணுவார் பேணை பேணாதது ஓர் தொண்டரும் காதல்செய் சோதி ஆய சுடர் சோதியான் புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர் வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே மேல் #2877 பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர் பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை ஆங்கு அமர்வு எய்திய ஆதி ஆக இசை வல்லவர் ஓங்கு அமராவதியோர் தொழ செல்வதும் உண்மையே மேல் 8. திருக்கடவூற்வீரட்டம் : பண் - காந்தாரபஞ்சமம் #2878 சடை உடையானும் நெய் ஆடலானும் சரி கோவண உடை உடையானும் மை ஆர்ந்த ஒண் கண் உமை_கேள்வனும் கடை உடை நன் நெடு மாடம் ஓங்கும் கடவூர்-தனுள் விடை உடை அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2879 எரிதரு வார் சடையானும் வெள்ளை எருது ஏறியும் புரிதரு மா மலர் கொன்றை மாலை புனைந்து ஏத்தவே கரிதரு காலனை சாடினானும் கடவூர்-தனுள் விரிதரு தொல் புகழ் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2880 நாதனும் நள்ளிருள் ஆடினானும் நளிர் போதின்-கண் பாதனும் பாய் புலி தோலினானும் பசு ஏறியும் காதலர் தண் கடவூரினானும் கலந்து ஏத்தவே வேதம் அது ஓதியும் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2881 மழு அமர் செல்வனும் மாசு இலாத பல பூதம் முன் முழவு ஒலி யாழ் குழல் மொந்தை கொட்ட முதுகாட்டிடை கழல் வளர் கால் குஞ்சித்து ஆடினானும் கடவூர்-தனுள் விழவு ஒலி மல்கிய வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2882 சுடர் மணி சுண்ண வெண் நீற்றினானும் சுழல் ஆயது ஓர் படம் மணி நாகம் அரைக்கு அசைத்த பரமேட்டியும் கடம் அணி மா உரி தோலினானும் கடவூர்-தனுள் விடம் அணி கண்டனும் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2883 பண் பொலி நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் உண் பலி கொண்டு உழல்வானும் வானின் ஒளி மல்கிய கண் பொலி நெற்றி வெண் திங்களானும் கடவூர்-தனுள் வெண்பொடி பூசியும் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2884 செ அழலாய் நிலன் ஆகி நின்ற சிவமூர்த்தியும் மு அழல் நான்மறை ஐந்தும் ஆய முனி கேள்வனும் கவ்வு அழல் வாய் கத நாகம் ஆர்த்தான் கடவூர்-தனுள் வெவ் அழல் ஏந்து கை வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2885 அடி இரண்டு ஓர் உடம்பு ஐஞ்ஞான்கு இருபது தோள் தச முடி உடை வேந்தனை மூர்க்கு அழித்த முதல் மூர்த்தியும் கடி கமழும் பொழில் சூழும் அம் தண் கடவூர்-தனுள் வெடி தலை ஏந்தியும் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2886 வரை குடையா மழை தாங்கினானும் வளர் போதின்-கண் புரை கடிந்து ஓங்கிய நான்முகத்தான் புரிந்து ஏத்தவே கரை கடல் சூழ் வையம் காக்கின்றானும் கடவூர்-தனுள் விரை கமழ் பூம் பொழில் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2887 தேரரும் மாசு கொள் மேனியாரும் தெளியாதது ஓர் ஆர் அரும் சொல்பொருள் ஆகி நின்ற எமது ஆதியான் கார் இளம் கொன்றை வெண் திங்களானும் கடவூர்-தனுள் வீரமும் சேர் கழல் வீரட்டானத்து அரன் அல்லனே மேல் #2888 வெந்த வெண் நீறு அணி வீரட்டானத்து உறை வேந்தனை அந்தணர்-தம் கடவூர் உளானை அணி காழியான் சந்தம் எல்லாம் அடி சாத்த வல்ல மறை ஞானசம் பந்தன செந்தமிழ் பாடி ஆட கெடும் பாவமே மேல் 9. திருவீழிமிழலை : பண் - காந்தாரபஞ்சமம் #2889 கேள்வியர் நாள்-தொறும் ஓது நல் வேதத்தர் கேடு இலா வேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார் வாழியர் தோற்றமும் கேடும் வைப்பார் உயிர்கட்கு எலாம் ஆழியர் தம் அடி போற்றி என்பார்கட்கு அணியரே மேல் #2890 கல்லின் நன் பாவை ஓர்பாகத்தார் காதலித்து ஏத்திய மெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார் நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து எழு ஞாயிற்றின் பல் அனைத்தும் தகர்த்தார் அடியார் பாவநாசரே மேல் #2891 நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற வெம் சின மூ இலை சூலத்தர் வீழிமிழலையார் அஞ்சன கண் உமை_பங்கினர் கங்கை அங்கு ஆடிய மஞ்சன செம் சடையார் என வல்வினை மாயுமே மேல் #2892 கலை இலங்கும் மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம் விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார் தலை இலங்கும் பிறை தாழ் வடம் சூலம் தமருகம் அலை இலங்கும் புனல் ஏற்றவர்க்கும் அடியார்க்குமே மேல் #2893 பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் முறைமுறையால் இசை பாடுவார் ஆடி முன் தொண்டர்கள் இறை உறை வாஞ்சியமல்லது எப்போதும் என் உள்ளமே மேல் #2894 வசை அறு மா தவம் கண்டு வரி சிலை வேடனாய் விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார் இசை வரவிட்டு இயல் கேட்பித்து கல்லவடம் இட்டு திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே மேல் #2895 சேடர் விண்ணோர்கட்கு தேவர் நல் மூ_இரு தொல் நூலர் வீடர் முத்தீயர் நால் வேதத்தர் வீழிமிழலையார் காடு அரங்கா உமை காண அண்டத்து இமையோர் தொழ நாடகமாடியை ஏத்த வல்லார் வினை நாசமே மேல் #2896 எடுத்த வல் மா மலை கீழ் இராவணன் வீழ்தர விடுத்து அருள்செய்து இசை கேட்டவர் வீழிமிழலையார் படுத்து வெம் காலனை பால் வழிபாடுசெய் பாலற்கு கொடுத்தனர் இன்பம் கொடுப்பர் தொழ குறைவு இல்லையே மேல் #2897 திக்கு அமர் நான்முகன் மால் அண்டம் மண்தலம் தேடிட மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார் சொக்கம் அது ஆடியும் பாடியும் பாரிடம் சூழ்தரும் நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே மேல் #2898 துற்று அரை ஆர் துவர் ஆடையர் துப்புரவு ஒன்று இலா வெற்று அரையார் அறியா நெறி வீழிமிழலையார் சொல் தெரியா பொருள் சோதிக்கு அப்பால் நின்ற சோதிதான் மற்று அறியா அடியார்கள்-தம் சிந்தையுள் மன்னுமே மேல் #2899 வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பிய ஆதியை வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து ஓதிய ஒண் தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர் மாது இயல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே மேல் 10. திருஇராமேச்சுரம் : பண் - காந்தாரபஞ்சமம் #2900 அலை வளர் தண் மதியோடு அயலே அடக்கி உமை முலை வளர் பாகம் முயங்க வல்ல முதல்வன் முனி இலை வளர் தாழைகள் விம்மு கானல் இராமேச்சுரம் தலை வளர் கோல நல் மாலையன்தான் இருந்து ஆட்சியே மேல் #2901 தேவியை வவ்விய தென்_இலங்கை தசமாமுகன் பூ இயலும் முடி பொன்றுவித்த பழி போய் அற ஏ இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் மேவிய சிந்தையினார்கள்-தம் மேல் வினை வீடுமே மேல் #2902 மான் அன நோக்கி வைதேவி-தன்னை ஒரு மாயையால் கான் அதில் வவ்விய கார் அரக்கன் உயிர் செற்றவன் ஈனம் இலா புகழ் அண்ணல் செய்த இராமேச்சுரம் ஞானமும் நன் பொருள் ஆகி நின்றது ஒரு நன்மையே மேல் #2903 உரை உணராதவன் காமம் என்னும் உறு வேட்கையான் வரை பொரு தோள் இற செற்ற வில்லி மகிழ்ந்து ஏத்திய விரை மருவும் கடல் ஓதம் மல்கும் இராமேச்சுரத்து அரை அரவு ஆட நின்று ஆடல் பேணும் அம்மான் அல்லனே மேல் #2904 ஊறு உடை வெண் தலை கையில் ஏந்தி பல ஊர்-தொறும் வீறு உடை மங்கையர் ஐயம் பெய்ய விறல் ஆர்ந்தது ஓர் ஏறு உடை வெல் கொடி எந்தை மேய இராமேச்சுரம் பேறு உடையான் பெயர் ஏத்தும் மாந்தர் பிணி பேருமே மேல் #2905 அணை அலை சூழ் கடல் அன்று அடைத்து வழி செய்தவன் பணை இலங்கும் முடி பத்து இறுத்த பழி போக்கிய இணையிலி என்றும் இருந்த கோயில் இராமேச்சுரம் துணையிலி தூ மலர் பாதம் ஏத்த துயர் நீங்குமே மேல் #2906 சனி புதன் ஞாயிறு வெள்ளி திங்கள் பல தீயன முனிவதுசெய்து உகந்தானை வென்று அ வினை மூடிட இனி அருள் நல்கிடு என்று அண்ணல் செய்த இராமேச்சுரம் பனி மதி சூடி நின்று ஆட வல்ல பரமேட்டியே மேல் #2907 பெரு வரை அன்று எடுத்து ஏந்தினான்-தன் பெயர் சாய் கெட அரு வரையால் அடர்த்து அன்று நல்கி அயன் மால் எனும் இருவரும் நாடி நின்று ஏத்து கோயில் இராமேச்சுரத்து ஒருவனுமே பல ஆகி நின்றது ஒரு வண்ணமே மேல் #2908 சாக்கியர் வன் சமண் கையர் மெய்யில் தடுமாற்றத்தார் வாக்கு இயலும் உரை பற்று விட்டு மதி ஒண்மையால் ஏக்கு இயலும் சிலை அண்ணல் செய்த இராமேச்சுரம் ஆக்கிய செல்வனை ஏத்தி வாழ்-மின் அருள் ஆகவே மேல் #2909 பகலவன் மீது இயங்காமை காத்த பதியோன்-தனை இகல் அழிவித்தவன் ஏத்து கோயில் இராமேச்சுரம் புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் புந்தியால் அகலிடம் எங்கும் நின்று ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே மேல் 11. திருப்புனவாயில் : பண் - காந்தாரபஞ்சமம் #2910 மின் இயல் செம் சடை வெண் பிறையன் விரி நூலினன் பன்னிய நான்மறை பாடி ஆடி பல ஊர்கள் போய் அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே மேல் #2911 விண்டவர்-தம் புரம் மூன்று எரித்து விடை ஏறி போய் வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம் கண்டலும் ஞாழலும் நின்று பெருங்கடல் கானல்-வாய் புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புனவாயிலே மேல் #2912 விடை உடை வெல் கொடி ஏந்தினானும் விறல் பாரிடம் புடை பட ஆடிய வேடத்தானும் புனவாயிலில் தொடை நவில் கொன்றை அம் தாரினானும் சுடர் வெண் மழு படை வலன் ஏந்திய பால் நெய் ஆடும் பரமன் அன்றே மேல் #2913 சங்க வெண் தோடு அணி காதினானும் சடை தாழவே அங்கை இலங்கு அழல் ஏந்தினானும் அழகு ஆகவே பொங்கு அரவம் அணி மார்பினானும் புனவாயிலில் பைம் கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே மேல் #2914 கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் புலி அதள் பாம்பு அரை சுற்றினானும் புனவாயிலில் ஒலிதரு தண் புனலோடு எருக்கும் மத மத்தமும் மெலிதரு வெண் பிறை சூடி நின்ற விடை ஊர்தியே மேல் #2915 வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் கார் உறு கொன்றை வெண் திங்களானும் கனல் வாயது ஓர் போர் உறு வெண் மழு ஏந்தினானும் புனவாயிலில் சீர் உறு செல்வம் மல்க இருந்த சிவலோகனே மேல் #2916 பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் பொருந்தலர்-தம் புரம் மூன்றும் எய்து புனவாயிலில் இருந்தவன்-தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே மேல் #2917 மனம் மிகு வேலன் அ வாள் அரக்கன் வலி ஒல்கிட வனம் மிகு மால் வரையால் அடர்த்தான் இடம் மன்னிய இனம் மிகு தொல் புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த புனவாயிலே மேல் #2918 திரு வளர் தாமரை மேவினானும் திகழ் பாற்கடல் கருநிற_வண்ணனும் காண்பு அரிய கடவுள் இடம் நரல் சுரி சங்கொடும் இப்பி உந்தி நலம் மல்கிய பொரு கடல் வெண் திரை வந்து எறியும் புனவாயிலே மேல் #2919 போதி என பெயர் ஆயினாரும் பொறி இல் சமண் சாதி உரைப்பன கொண்டு அயர்ந்து தளர்வு எய்தன்-மின் போது அவிழ் தண் பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில் வேதனை நாள்-தொறும் ஏத்துவார் மேல் வினை வீடுமே மேல் #2920 பொன் தொடியாள் உமை_பங்கன் மேவும் புனவாயிலை கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான் நல் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் நன்மையால் அற்றம் இல் பாடல் பத்து ஏத்த வல்லார் அருள் சேர்வரே மேல் 12. திருக்கோட்டாறு : பண் - காந்தாரபஞ்சமம் #2921 வேதியன் விண்ணவர் ஏத்த நின்றான் விளங்கும் மறை ஓதிய ஒண் பொருள் ஆகி நின்றான் ஒளி ஆர் கிளி கோதிய தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் ஆதியையே நினைந்து ஏத்த வல்லார்க்கு அல்லல் இல்லையே மேல் #2922 ஏல மலர் குழல் மங்கை நல்லாள் இமவான்மகள் பால் அமரும் திரு மேனி எங்கள் பரமேட்டியும் கோல மலர் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் ஆல நிழல் கீழ் இருந்து அறம் சொன்ன அழகனே மேல் #2923 இலை மல்கு சூலம் ஒன்று ஏந்தினானும் இமையோர் தொழ மலை மல்கு மங்கை ஓர்பங்கன் ஆய மணிகண்டனும் குலை மல்கு தண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் அலை மல்கு வார் சடை ஏற்று உகந்த அழகன் அன்றே மேல் #2924 ஊன் அமரும் உடலுள் இருந்த உமை_பங்கனும் வான் அமரும் மதி சென்னி வைத்த மறை ஓதியும் தேன் அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் தான் அமரும் விடையானும் எங்கள் தலைவன் அன்றே மேல் #2925 வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும் செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும் கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள் நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே மேல் #2926 பந்து அமரும் விரல் மங்கை நல்லாள் ஒருபாகமா வெந்து அமரும் பொடி பூச வல்ல விகிர்தன் மிகும் கொந்து அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் அந்தணனை நினைந்து ஏத்த வல்லார்க்கு இல்லை அல்லலே மேல் #2927 துண்டு அமரும் பிறை சூடி நீடு சுடர்_வண்ணனும் வண்டு அமரும் குழல் மங்கை நல்லாள் ஒருபங்கனும் தெண் திரை நீர் வயல் சூழ்ந்து அழகு ஆர் திரு கோட்டாற்றுள் அண்டமும் எண் திசை ஆகி நின்ற அழகன் அன்றே மேல் #2928 இரவு அமரும் நிறம் பெற்றுடைய இலங்கைக்கு இறை கரவு அமர கயிலை எடுத்தான் வலி செற்றவன் குரவு அமரும் மலர் சோலை சூழ்ந்த திரு கோட்டாற்றுள் அரவு அமரும் சடையான் அடியார்க்கு அருள்செய்யுமே மேல் #2929 ஓங்கிய நாரணன் நான்முகனும் உணரா வகை நீங்கிய தீ உரு ஆகி நின்ற நிமலன் நிழல் கோங்கு அமரும் பொழில் சூழ்ந்து எழில் ஆர் திரு கோட்டாற்றுள் ஆங்கு அமரும் பெருமான் அமரர்க்கு அமரன் அன்றே மேல் #2930 கடு கொடுத்த துவர் ஆடையர் காட்சி இல்லாதது ஓர் தடுக்கு இடுக்கி சமணே திரிவார்கட்கு தன் அருள் கொடுக்ககிலா குழகன் அமரும் திரு கோட்டாற்றுள் இடுக்கண் இன்றி தொழுவார் அமரர்க்கு இறை ஆவரே மேல் #2931 கொடி உயர் மால் விடை ஊர்தியினான் திரு கோட்டாற்றுள் அடி கழல் ஆர்க்க நின்று ஆட வல்ல அருளாளனை கடி கமழும் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் சொல் படி இவை பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை பாவமே மேல் 13. திருப்பூந்தராய் : பண் - காந்தாரபஞ்சமம் #2932 மின் அன எயிறு உடை விரவலோர்கள்-தம் துன்னிய புரம் உக சுளிந்த தொன்மையர் புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர் அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே மேல் #2933 மூது அணி முப்புரத்து எண்ணிலோர்களை வேது அணி சரத்தினால் வீட்டினாரவர் போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர் தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே மேல் #2934 தருக்கிய திரிபுரத்தவர்கள் தாம் உக பெருக்கிய சிலை-தனை பிடித்த பெற்றியர் பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர் கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே மேல் #2935 நாகமும் வரையுமே நாணும் வில்லுமா மாகம் ஆர் புரங்களை மறித்த மாண்பினர் பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர் பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே மேல் #2936 வெள் எயிறு உடைய அ விரவலார்கள் ஊர் ஒள் எரியூட்டிய ஒருவனார் ஒளிர் புள் அணி புறவினில் பூந்தராய் நகர் கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே மேல் #2937 துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர் அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர் அம் கயல் அன கணி அரிவை_பங்கரே மேல் #2938 அண்டர்கள் உய்ந்திட அவுணர் மாய்தர கண்டவர் கடல் விடம் உண்ட கண்டனார் புண்டரீக வயல் பூந்தராய் நகர் வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே மேல் #2939 மா சின அரக்கனை வரையின் வாட்டிய காய் சின எயில்களை கறுத்த கண்டனார் பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர் காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே மேல் #2940 தாம் முகம் ஆக்கிய அசுரர்-தம் பதி வேம் முகம் ஆக்கிய விகிர்தர் கண்ணனும் பூமகன் அறிகிலா பூந்தராய் நகர் கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே மேல் #2941 முத்தர அசுரர்கள் மொய்த்த முப்புரம் அ தகும் அழலிடை வீட்டினார் அமண் புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர் கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே மேல் #2942 புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை பரவிய பந்தன் மெய் பாடல் வல்லவர் சிரம் மலி சிவகதி சேர்தல் திண்ணமே மேல் 14. திருப்பைஞ்ஞீலி : பண் - காந்தாரபஞ்சமம் #2943 ஆரிடம் பாடலர் அடிகள் காடுஅலால் ஓர் இடம் குறைவு இலர் உடையர் கோவணம் நீர் இடம் சடை விடை ஊர்தி நித்தலும் பாரிடம் பணி செயும் பயில் பைஞ்ஞீலியே மேல் #2944 மருவு இலார் திரிபுரம் எரிய மால் வரை பரு விலா குனித்த பைஞ்ஞீலி மேவலான் உருஇலான் பெருமையை உளம் கொளாத அ திருஇலார் அவர்களை தெருட்டல் ஆகுமே மேல் #2945 அம் சுரும்பு அணி மலர் அமுதம் மாந்தி தேன் பஞ்சுரம் பயிற்று பைஞ்ஞீலி மேவலான் வெம் சுரம்-தனில் உமை வெருவ வந்தது ஓர் குஞ்சரம் பட உரி போர்த்த கொள்கையே மேல் #2946 கோடல்கள் புறவு அணி கொல்லை முல்லை மேல் பாடல் வண்டு இசை முரல் பயில் பைஞ்ஞீலியார் பேடு அலர் ஆண் அலர் பெண்ணும் அல்லது ஓர் ஆடலை உகந்த எம் அடிகள் அல்லரே மேல் #2947 விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை சுழியில் ஆர் வரு புனல் சூழல் தாங்கினான் பழியிலார் பரவு பைஞ்ஞீலி பாடலான் கிழியிலார் கேண்மையை கெடுக்கல் ஆகுமே மேல் #2948 விடை உடை கொடி வலன் ஏந்தி வெண் மழு படை உடை கடவுள் பைஞ்ஞீலி மேவலான் துடி இடை கலை அல்குலாள் ஓர்பாகமா சடையிடை புனல் வைத்த சதுரன் அல்லனே மேல் #2949 தூயவன் தூய வெண் நீறு மேனி மேல் பாயவன் பாய பைஞ்ஞீலி கோயிலா மேயவன் வேய் புரை தோளி பாகமா ஏயவன் எனை செயும் தன்மை என்-கொலோ மேல் #2950 தொத்தின தோள் முடி உடையவன் தலை பத்தினை நெரித்த பைஞ்ஞீலி மேவலான் முத்தினை முறுவல்செய்தாள் ஒர்பாகமா பொத்தினன் திருந்து அடி பொருந்தி வாழ்-மினே மேல் #2951 நீர் உடை போது உறைவானும் மாலுமாய் சீர் உடை கழல் அடி சென்னி காண்கிலர் பார் உடை கடவுள் பைஞ்ஞீலி மேவிய தார் உடை கொன்றை அம் தலைவர் தன்மையே மேல் #2952 பீலியார் பெருமையும் பிடகர் நூன்மையும் சாலியாதவர்களை சாதியாதது ஓர் கோலியா அரு வரை கூட்டி எய்த பைஞ் ஞீலியான் கழல் அடி நினைந்து வாழ்-மினே மேல் #2953 கண் புனல் விளை வயல் காழி கற்பகம் நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் பண்பினர் பரவு பைஞ்ஞீலி பாடுவார் உண்பின உலகினில் ஓங்கி வாழ்வரே மேல் 15. திருவெண்காடு : பண் - காந்தாரபஞ்சமம் #2954 மந்திர மறையவர் வானவரொடும் இந்திரன் வழிபட நின்ற எம் இறை வெந்த வெண் நீற்றர் வெண்காடு மேவிய அந்தமும் முதல் உடை அடிகள் அல்லரே மேல் #2955 படை உடை மழுவினர் பாய் புலி தோலின் உடை விரி கோவணம் உகந்த கொள்கையர் விடை உடை கொடியர் வெண்காடு மேவிய சடையிடை புனல் வைத்த சதுரர் அல்லரே மேல் #2956 பாலொடு நெய் தயிர் பலவும் ஆடுவர் தோலொடு நூல் இழை துதைந்த மார்பினர் மேலவர் பரவு வெண்காடு மேவிய ஆலம் அது அமர்ந்த எம் அடிகள் அல்லரே மேல் #2957 ஞாழலும் செருந்தியும் நறு மலர் புன்னையும் தாழை வெண் குருகு அயல் தயங்கு கானலில் வேழம் அழு உரித்த வெண்காடு மேவிய யாழினது இசை உடை இறைவர் அல்லரே மேல் #2958 பூதங்கள் பல உடை புனிதர் புண்ணியர் ஏதங்கள் பல இடர் தீர்க்கும் எம் இறை வேதங்கள் முதல்வர் வெண்காடு மேவிய பாதங்கள் தொழ நின்ற பரமர் அல்லரே மேல் #2959 மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும் எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம் இறை விண் அமர் பொழில் கொள் வெண்காடு மேவிய அண்ணலை அடி தொழ அல்லல் இல்லையே மேல் #2960 நயந்தவர்க்கு அருள் பல நல்கி இந்திரன் கயந்திரம் வழிபட நின்ற கண்நுதல் வியந்தவர் பரவு வெண்காடு மேவிய பயம் தரு மழு உடை பரமர் அல்லரே மேல் #2961 மலையுடன் எடுத்த வல் அரக்கன் நீள் முடி தலையுடன் நெரித்து அருள்செய்த சங்கரர் விலை உடை நீற்றர் வெண்காடு மேவிய அலை உடை புனல் வைத்த அடிகள் அல்லரே மேல் #2962 ஏடு அவிழ் நறு மலர் அயனும் மாலுமாய் தேடவும் தெரிந்து அவர் தேரகிற்கிலார் வேதம் அது உடைய வெண்காடு மேவிய ஆடலை அமர்ந்த எம் அடிகள் அல்லரே மேல் #2963 போதியர் பிண்டியர் பொருத்தமில்லிகள் நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் வேதியர் பரவ வெண்காடு மேவிய ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே மேல் #2964 நல்லவர் புகலியுள் ஞானசம்பந்தன் செல்வன் எம் சிவன் உறை திரு வெண்காட்டின் மேல் சொல்லிய அரும் தமிழ் பத்தும் வல்லவர் அல்லலோடு அருவினை அறுதல் ஆணையே மேல் 16. திருக்கொள்ளிக்காடு : பண் - காந்தாரபஞ்சமம் #2965 நிணம் படு சுடலையில் நீறு பூசி நின்று இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம் உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே மேல் #2966 ஆற்ற நல் அடி இணை அலர் கொண்டு ஏத்துவான் சாற்றிய அந்தணன் தகுதி கண்ட நாள் மாற்றலன் ஆகி முன் அடர்த்து வந்து அணை கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடரே மேல் #2967 அத்தகு வானவர்க்கு ஆக மால் விடம் வைத்தவர் மணி புரை கண்டத்தினுளே மத்தமும் வன்னியும் மலிந்த சென்னி மேல் கொத்து அலர் கொன்றையர் கொள்ளிக்காடரே மேல் #2968 பா வணம் மேவு சொல் மாலையின் பல நா வணம் கொள்கையின் நவின்ற செய்கையர் ஆவணம் கொண்டு எமை ஆள்வராயினும் கோவணம் கொள்கையர் கொள்ளிக்காடரே மேல் #2969 வார் அணி வன முலை மங்கையாளொடும் சீர் அணி திரு உரு திகழ்ந்த சென்னியர் நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் கூர் எரி கொளுவினர் கொள்ளிக்காடரே மேல் #2970 பஞ்சு தோய் மெல் அடி பாவையாளொடும் மஞ்சு தோய் கயிலையுள் மகிழ்வர் நாள்-தொறும் வெம் சின மருப்பொடு விரைய வந்து அடை குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக்காடரே மேல் #2971 இறையுறு வரி வளை இசைகள் பாடிட அறையுறு கழல் அடி ஆர்க்க ஆடுவர் சிறையுறு விரி புனல் சென்னியின் மிசை குறையுறு மதியினர் கொள்ளிக்காடரே மேல் #2972 எடுத்தனன் கயிலையை இயல் வலியினால் அடர்த்தனர் திரு விரலால் அலறிட படுத்தனர் ஏன்று அவன் பாடல் பாடலும் கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக்காடரே மேல் #2973 தேடினார் அயன் முடி மாலும் சேவடி நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர் பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் கூடினார்க்கு அருள்செய்வர் கொள்ளிக்காடரே மேல் #2974 நாடி நின்று அறிவு இல் நாணிலிகள் சாக்கியர் ஓடி முன் ஓதிய உரைகள் மெய் அல பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும் கூடுவர் திரு உரு கொள்ளிக்காடரே மேல் #2975 நல் தவர் காழியுள் ஞானசம்பந்தன் குற்றம் இல் பெரும் புகழ் கொள்ளிக்காடரை சொல் தமிழ் இன்னிசை மாலை சோர்வு இன்றி கற்றவர் கழல் அடி காண வல்லரே மேல் 17. திருவிசயமங்கை : பண் - காந்தாரபஞ்சமம் #2976 மரு அமர் குழல் உமை_பங்கர் வார் சடை அரவு அமர் கொள்கை எம் அடிகள் கோயில் ஆம் குரவு அமர் சுரபுனை கோங்கு வேங்கைகள் விரவிய பொழில் அணி விசயமங்கையே மேல் #2977 கீதம் முன் இசைதர கிளரும் வீணையர் பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர் கோதனம் வழிபட குலவு நான்மறை வேதியர் தொழுது எழு விசயமங்கையே மேல் #2978 அக்கு அரவு அரையினர் அரிவை பாகமா தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர் தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் மிக்கவர் தொழுது ஏழு விசயமங்கையே மேல் #2979 தொடை மலி இதழியும் துன் எருக்கொடு புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர் படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் விடை மலி கொடி அணல் விசயமங்கையே மேல் #2980 தோடு அமர் காதினன் துதைந்த நீற்றினன் ஏடு அமர் கோதையோடு இனிது அமர்விடம் காடு அமர் மா கரி கதற போர்த்தது ஓர் வேடம் அது உடை அணல் விசயமங்கையே மேல் #2981 மை புரை கண் உமை_பங்கன் வண் தழல் ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர் அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் மெய்ப்பட அருள்புரி விசயமங்கையே மேல் #2982 இரும் பொனின் மலை விலின் எரி சரத்தினால் வரும் புரங்களை பொடிசெய்த மைந்தன் ஊர் சுரும்பு அமர் கொன்றையும் தூய மத்தமும் விரும்பிய சடை அணல் விசயமங்கையே மேல் #2983 உளங்கையில் இருபதோடு ஒன்பதும் கொடு ஆங்கு அளந்து அரும் வரை எடுத்திடும் அரக்கனை தளர்ந்து உடல் நெரிதர அடர்த்த தன்மையன் விளங்கு_இழையொடும் புகும் விசயமங்கையே மேல் #2984 மண்ணினை உண்டவன் மலரின் மேல் உறை அண்ணல்கள்-தமக்கு அளப்பு அரிய அத்தன் ஊர் தண் நறும் சாந்தமும் பூவும் நீர் கொடு விண்ணவர் தொழுது எழு விசயமங்கையே மேல் #2985 கஞ்சியும் கவளம் உண் கவணர் கட்டுரை நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார் செம் சடைமுடி உடை தேவன் நன் நகர் விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே மேல் #2986 விண்ணவர் தொழுது எழு விசயமங்கையை நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே மேல் 18. திருவைகல்மாடக்கோயில் : பண் - காந்தாரபஞ்சமம் #2987 துள மதி உடை மறி தோன்று கையினர் இள மதி அணி சடை எந்தையார் இடம் உளம் மதி உடையவர் வைகல் ஓங்கிய வள மதி தடவிய மாடக்கோயிலே மேல் #2988 மெய் அகம் மிளிரும் வெண்நூலர் வேதியர் மைய கண் மலைமகளோடும் வைகு இடம் வையகம் மகிழ்தர வைகல் மேல் திசை செய்ய கண் வளவன் முன் செய்த கோயிலே மேல் #2989 கணி அணி மலர் கொடு காலை மாலையும் பணி அணிபவர்க்கு அருள்செய்த பான்மையர் தணி அணி உமையொடு தாமும் தங்கு இடம் மணி அணி கிளர் வைகல் மாடக்கோயிலே மேல் #2990 கொம்பு இயல் கோதை முன் அஞ்ச குஞ்சர தும்பி அது உரிசெய்த துங்கர் தங்கு இடம் வம்பு இயல் சோலை சூழ் வைகல் மேல் திசை செம்பியன் கோச்செங்கணான் செய் கோயிலே மேல் #2991 விடம் அடை மிடற்றினர் வேத நாவினர் மட மொழி மலைமகளோடும் வைகு இடம் மட அனம் நடை பயில் வைகல் மா நகர் குட திசை நிலவிய மாடக்கோயிலே மேல் #2992 நிறை புனல் பிறையொடு நிலவு நீள் சடை இறையவர் உறைவிடம் இலங்கு மூ எரி மறையொடு வளர்வு செய்வாணர் வைகலில் திறை உடை நிறை செல்வன் செய்த கோயிலே மேல் #2993 எரி சரம் வரி சிலை வளைய ஏவி முன் திரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம் வரி வளையவர் பயில் வைகல் மேல் திசை வரு முகில் அணவிய மாடக்கோயிலே மேல் #2994 மலை அன இருபது தோளினான் வலி தொலைவு செய்து அருள்செய்த சோதியார் இடம் மலர் மலி பொழில் அணி வைகல் வாழ்வர்கள் வலம்வரு மலை அன மாடக்கோயிலே மேல் #2995 மாலவன் மலரவன் நேடி மால் கொள மால் எரி ஆகிய வரதர் வைகு இடம் மாலை கொடு அணி மறைவாணர் வைகலில் மால் அன மணி அணி மாடக்கோயிலே மேல் #2996 கடு உடை வாயினர் கஞ்சி வாயினர் பிடகு உரை பேணிலார் பேணு கோயில் ஆம் மடம் உடையவர் பயில் வைகல் மா நகர் வடமலை அனைய நல் மாடக்கோயிலே மேல் #2997 மைந்தனது இடம் வைகல் மாடக்கோயிலை சந்து அமர் பொழில் அணி சண்பை ஞானசம் பந்தன தமிழ் கெழு பாடல் பத்து இவை சிந்தைசெய்பவர் சிவலோகம் சேர்வரே மேல் 19. திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் : பண் - காந்தாரபஞ்சமம் #2998 எரிதர அனல் கையில் ஏந்தி எல்லியில் நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர் குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே மேல் #2999 மைய கண் மலைமகள் பாகமாய் இருள் கையது ஓர் கனல் எரி கனல் ஆடுவர் ஐய நன் பொரு புனல் அம்பர் செம்பியர் செய்ய கண் இறை செய்த கோயில் சேர்வரே மேல் #3000 மறை புனை பாடலர் சுடர் கை மல்க ஓர் பிறை புனை சடைமுடி பெயர ஆடுவர் அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர் இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே மேல் #3001 இரவு மல்கு இள மதி சூடி ஈடு உயர் பரவ மல்கு அரு மறை பாடி ஆடுவர் அரவமோடு உயர் செம்மல் அம்பர் கொம்பு அலர் மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே மேல் #3002 சங்கு அணி குழையினர் சாமம் பாடுவர் வெம் கனல் கனல்தர வீசி ஆடுவர் அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர் செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே மேல் #3003 கழல் வளர் காலினர் சுடர் கை மல்க ஓர் சுழல் வளர் குளிர் புனல் சூடி ஆடுவர் அழல் வளர் மறையவர் அம்பர் பைம் பொழில் நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே மேல் #3004 இகல் உறு சுடர் எரி இலங்க வீசியே பகல் இடம் பலி கொள பாடி ஆடுவர் அகலிடம் மலி புகழ் அம்பர் வம்பு அவிழ் புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே மேல் #3005 எரி அன மணி முடி இலங்கை_கோன்-தன கரி அன தட கைகள் அடர்த்த காலினர் அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு புரியவர் பிரிவு இலா பூதம் சூழவே மேல் #3006 வெறி கிளர் மலர்மிசையவனும் வெம் தொழில் பொறி கிளர் அரவு அணை புல்கு செல்வனும் அறிகில அரியவர் அம்பர் செம்பியர் செறி கழல் இறை செய்த கோயில் சேர்வரே மேல் #3007 வழி தலை பறி தலை அவர்கள் கட்டிய மொழிதலை பயன் என மொழியல் வம்-மினோ அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர் உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே மேல் #3008 அழகரை அடிகளை அம்பர் மேவிய நிழல் திகழ் சடைமுடி நீல_கண்டரை உமிழ் திரை உலகினில் ஓதுவீர் கொண்-மின் தமிழ் கெழு விரகினன் தமிழ் செய் மாலையே மேல் 20. திருப்பூவணம் : பண் - காந்தாரபஞ்சமம் #3009 மாது அமர் மேனியன் ஆகி வண்டொடு போது அமர் பொழில் அணி பூவணத்து உறை வேதனை விரவலர் அரணம் மூன்று எய்த நாதனை அடி தொழ நன்மை ஆகுமே மேல் #3010 வான் அணி மதி புல்கு சென்னி வண்டொடு தேன் அணி பொழில் திரு பூவணத்து உறை ஆன நல் அரு மறை அங்கம் ஓதிய ஞானனை அடி தொழ நன்மை ஆகுமே மேல் #3011 வெம் துயருறு பிணி வினைகள் தீர்வது ஓர் புந்தியர் தொழுது எழு பூவணத்து உறை அந்தி வெண் பிறையினோடு ஆறு சூடிய நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே மேல் #3012 வாச நல் மலர் மலி மார்பில் வெண்பொடி பூசனை பொழில் திகழ் பூவணத்து உறை ஈசனை மலர் புனைந்து ஏத்துவார் வினை நாசனை அடி தொழ நன்மை ஆகுமே மேல் #3013 குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை பொருந்திய பொழில் திரு பூவணத்து உறை அரும் திறல் அவுணர்-தம் அரணம் மூன்று எய்த பெருந்தகை அடி தொழ பீடை இல்லையே மேல் #3014 வெறி கமழ் புன்னை பொன் ஞாழல் விம்மிய பொறி அரவு அணி பொழில் பூவணத்து உறை கிறிபடும் உடையினன் கேடு இல் கொள்கையன் நறு மலர் அடி தொழ நன்மை ஆகுமே மேல் #3015 பறை மல்கு முழவொடு பாடல் ஆடலன் பொறை மல்கு பொழில் அணி பூவணத்து உறை மறை மல்கு பாடலன் மாது ஒர்கூறினன் அறை மல்கு கழல் தொழ அல்லல் இல்லையே மேல் #3016 வரை-தனை எடுத்த வல் அரக்கன் நீள் முடி விரல்-தனில் அடர்த்தவன் வெள்ளைநீற்றினன் பொரு புனல் புடை அணி பூவணம்-தனை பரவிய அடியவர்க்கு இல்லை பாவமே மேல் #3017 நீர் மல்கு மலர் உறைவானும் மாலுமாய் சீர் மல்கு திருந்து அடி சேரகிற்கிலர் போர் மல்கு மழுவினன் மேய பூவணம் ஏர் மல்கு மலர் புனைந்து ஏத்தல் இன்பமே மேல் #3018 மண்டை கொண்டு உழிதரு மதி இல் தேரரும் குண்டரும் குணம் அல பேசும் கோலத்தர் வண்டு அமர் வளர் பொழில் மல்கு பூவணம் கண்டவர் அடி தொழுது ஏத்தல் கன்மமே மேல் #3019 புண்ணியர் தொழுது எழு பூவணத்து உறை அண்ணலை அடி தொழுது அம் தண் காழியுள் நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் பண்ணிய தமிழ் சொல பறையும் பாவமே மேல் 21. திருக்கருக்குடி : பண் - காந்தாரபஞ்சமம் #3020 நனவிலும் கனவிலும் நாளும் தன் ஒளி நினைவிலும் எனக்கு வந்து எய்தும் நின்மலன் கனை கடல் வையகம் தொழு கருக்குடி அனல் எரி ஆடும் எம் அடிகள் காண்-மினே மேல் #3021 வேதியன் விடை உடை விமலன் ஒன்னலர் மூது எயில் எரி எழ முனிந்த முக்கணன் காது இயல் குழையினன் கருக்குடி அமர் ஆதியை அடி தொழ அல்லல் இல்லையே மேல் #3022 மஞ்சுறு பொழில் வளம் மலி கருக்குடி நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார் அம் சுரும்பு ஆர் குழல் அரிவை அஞ்சவே வெம் சுரம்-தனில் விளையாடல் என்-கொலோ மேல் #3023 ஊன் உடை பிறவியை அறுக்க உன்னுவீர் கானிடை ஆடலான் பயில் கருக்குடி கோன் உயர் கோயிலை வணங்கி வைகலும் வானவர் தொழு கழல் வாழ்த்தி வாழ்-மினே மேல் #3024 சூடுவர் சடையிடை கங்கை நங்கையை கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள் ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே மேல் #3025 இன்புடையார் இசை வீணை பூண் அரா என்பு உடையார் எழில் மேனி மேல் எரி முன்பு உடையார் முதல் ஏத்தும் அன்பருக்கு அன்புடையார் கருக்குடி எம் அண்ணலே மேல் #3026 காலமும் ஞாயிறும் தீயும் ஆயவர் கோலமும் முடி அரவு அணிந்த கொள்கையர் சீலமும் உடையவர் திரு கருக்குடி சாலவும் இனிது அவர் உடைய தன்மையே மேல் #3027 எறி கடல் புடை தழுவு இலங்கை_மன்னனை முறிபட வரையிடை அடர்த்த மூர்த்தியார் கறை படு பொழில் மதி தவழ் கருக்குடி அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே மேல் #3028 பூமனும் திசைமுகன்தானும் பொற்பு அமர் வாமனன் அறிகிலா வண்ணம் ஓங்கு எரி ஆம் என உயர்ந்தவன் அணி கருக்குடி நா மனனினில் வர நினைதல் நன்மையே மேல் #3029 சாக்கியர் சமண் படு கையர் பொய்ம்மொழி ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி பூ கமழ் கோயிலே புடைபட்டு உய்ம்-மினே மேல் #3030 கானலில் விரை மலர் விம்மு காழியான் வானவன் கருக்குடி மைந்தன்-தன் ஒளி ஆன மெய் ஞானசம்பந்தன் சொல்லிய ஊனம் இல் மொழி வலார்க்கு உயரும் இன்பமே மேல் 22. பொது : பண் - காந்தாரபஞ்சமம் - பஞ்சாக்கரத் திருப்பதிகம் #3031 துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் நெஞ்சகம் நைந்து நினை-மின் நாள்-தொறும் வஞ்சகம் அற்று அடி வாழ்த்த வந்த கூற்று அஞ்ச உதைத்தன அஞ்சுஎழுத்துமே மேல் #3032 மந்திர நான்மறை ஆகி வானவர் சிந்தையுள் நின்று அவர்-தம்மை ஆள்வன செம் தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு அந்தியுள் மந்திரம் அஞ்சுஎழுத்துமே மேல் #3033 ஊனில் உயிர்ப்பை ஒடுக்கி ஒண் சுடர் ஞான விளக்கினை ஏற்றி நன் புலத்து ஏனை வழி திறந்து ஏத்துவார்க்கு இடர் ஆன கெடுப்பன அஞ்சுஎழுத்துமே மேல் #3034 நல்லவர் தீயவர் எனாது நச்சினர் செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ கொல்ல நமன் தமர் கொண்டு போம் இடத்து அல்லல் கெடுப்பன அஞ்சுஎழுத்துமே மேல் #3035 கொங்கு அலர் மன்மதன் வாளி ஐந்து அகத்து அங்கு உள பூதமும் அஞ்ச ஐம் பொழில் தங்கு அரவின் படம் அஞ்சு தம்முடை அம் கையில் ஐ விரல் அஞ்சுஎழுத்துமே மேல் #3036 தும்மல் இருமல் தொடர்ந்த போழ்தினும் வெம்மை நரகம் விளைந்த போழ்தினும் இம்மை வினை அடர்த்து எய்தும் போழ்தினும் அம்மையினும் துணை அஞ்சுஎழுத்துமே மேல் #3037 வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பின்னை நாள்-தொறும் மாடு கொடுப்பன மன்னு மா நடம் ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே மேல் #3038 வண்டு அமர் ஓதி மடந்தை பேணின பண்டை இராவணன் பாடி உய்ந்தன தொண்டர்கள் கொண்டு துதித்த பின் அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சுஎழுத்துமே மேல் #3039 கார்_வணன் நான்முகன் காணுதற்கு ஒணா சீர் வண சேவடி செவ்வி நாள்-தொறும் பேர் வணம் பேசி பிதற்றும் பித்தர்கட்கு ஆர் வணம் ஆவன அஞ்சுஎழுத்துமே மேல் #3040 புத்தர் சமண் கழு கையர் பொய் கொளா சித்தத்தவர்கள் தெளிந்து தேறின வித்தக நீறு அணிவார் வினை பகைக்கு அத்திரம் ஆவன அஞ்சுஎழுத்துமே மேல் #3041 நல் தமிழ் ஞானசம்பந்தன் நான்மறை கற்றவன் காழியர்_மன்னன் உன்னிய அற்றம் இல் மாலை ஈர்_ஐந்தும் அஞ்சுஎழுத்து உற்றன வல்லவர் உம்பர் ஆவரே மேல் 23. திருவிற்கோலம் : பண் - காந்தாரபஞ்சமம் #3042 உருவின் ஆர் உமையொடும் ஒன்றி நின்றது ஓர் திருவினான் வளர் சடை திங்கள் கங்கையான் வெருவி வானவர் தொழ வெகுண்டு நோக்கிய செருவினான் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3043 சிற்றிடை உமை_ஒருபங்கன் அங்கையில் உற்றது ஓர் எரியினன் ஒரு சரத்தினால் வெற்றி கொள் அவுணர்கள் புரங்கள் வெந்து அற செற்றவன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3044 ஐயன் நல் அதிசயன் அயன் விண்ணோர் தொழும் மை அணி கண்டன் ஆர் வண்ணம் வண்ணவான் பை அரவு அல்குலாள் பாகம் ஆகவும் செய்யவன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3045 விதைத்தவன் முனிவருக்கு அறம் முன் காலனை உதைத்து அவன் உயிர் இழந்து உருண்டு வீழ்தர புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் சிதைத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3046 முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான் கொந்து உலாம் மலர் பொழில் கூகம் மேவினான் அந்தி வான் பிறையினான் அடியர் மேல் வினை சிந்துவான் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3047 தொகுத்தவன் அரு மறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர் பொழில் கூகம் மேவினான் மிகுத்தவன் மிகுத்தவர் புரங்கள் வெந்து அற செகுத்தவன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3048 விரித்தவன் அரு மறை விரி சடை வெள்ளம் தரித்தவன் தரியலர் புரங்கள் ஆசு அற எரித்தவன் இலங்கையர்_கோன் இடர் பட சிரித்தவன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3049 திரிதரு புரம் எரிசெய்த சேவகன் வரி அரவொடு மதி சடையில் வைத்தவன் அரியொடு பிரமனது ஆற்றலால் உரு தெரியலன் உறைவிடம் திரு விற்கோலமே மேல் #3050 சீர்மை இல் சமணொடு சீவர கையர் நீர்மை இல் உரைகள் கொள்ளாது நேசர்க்கு பார் மலி பெரும் செல்வம் பரிந்து நல்கிடும் சீர்மையினான் இடம் திரு விற்கோலமே மேல் #3051 கோடல் வெண் பிறையனை கூகம் மேவிய சேடன செழு மதில் திரு விற்கோலத்தை நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் வல்லார்களுக்கு இல்லை பாவமே மேல் 24. திருக்கழுமலம் : பண் - காந்தாரபஞ்சமம் #3052 மண்ணின் நல்ல வண்ணம் வாழல் ஆம் வைகலும் எண்ணின் நல்ல கதிக்கு யாதும் ஓர் குறைவு இலை கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர் பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3053 போதை ஆர் பொன் கிண்ணத்து அடிசில் பொல்லாது என தாதையார் முனிவுற தான் எனை ஆண்டவன் காதை ஆர் குழையினன் கழுமல வள நகர் பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3054 தொண்டு அணைசெய் தொழில் துயர் அறுத்து உய்யல் ஆம் வண்டு அணை கொன்றையான் மது மலர் சடைமுடி கண் துணை நெற்றியான் கழுமல வள நகர் பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே மேல் #3055 அயர்வு உளோம் என்று நீ அசைவு ஒழி நெஞ்சமே நியர் வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர் பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே மேல் #3056 அடைவு இலோம் என்று நீ அயர்வு ஒழி நெஞ்சமே விடை அமர் கொடியினான் விண்ணவர் தொழுது எழும் கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர் பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3057 மற்று ஒரு பற்று இலை நெஞ்சமே மறை பல கற்ற நல் வேதியர் கழுமல வள நகர் சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் பெற்று எனை ஆளுடை பெருந்தகை இருந்ததே மேல் #3058 குறை வளைவது மொழி குறைவு ஒழி நெஞ்சமே நிறை வளை முன்கையாள் நேர்_இழை அவளொடும் கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர் பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே மேல் #3059 அரக்கனார் அரு வரை எடுத்தவன் அலறிட நெருக்கினார் விரலினால் நீடு யாழ் பாடவே கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர் பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3060 நெடியவன் பிரமனும் நினைப்பு அரிதாய் அவர் அடியொடு முடி அறியா அழல் உருவினன் கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர் பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3061 தாருறு தட்டு உடை சமணர் சாக்கியர்கள்-தம் ஆருறு சொல் களைந்து அடி இணை அடைந்து உய்ம்-மின் காருறு பொழில் வளர் கழுமல வள நகர் பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே மேல் #3062 கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர் பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை அரும் தமிழ் ஞானசம்பந்தன செந்தமிழ் விரும்புவார் அவர்கள் போய் விண்ணுலகு ஆள்வரே மேல் 25. திருந்துதேவன்குடி : பண் - கொல்லி #3063 மருந்து வேண்டில் இவை மந்திரங்கள் இவை புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள் இவை திருந்து தேவன்குடி தேவர்தேவு எய்திய அரும் தவத்தோர் தொழும் அடிகள் வேடங்களே மேல் #3064 வீதி போக்கு ஆவன வினையை வீட்டுவன ஓதி ஓர்க்கப்படா பொருளை ஓர்விப்பன தீது இல் தேவன்குடி தேவர்தேவு எய்திய ஆதி அந்தம் இலா அடிகள் வேடங்களே மேல் #3065 மானம் ஆக்குவன மாசு நீக்குவன வானை உள்க செலும் வழிகள் காட்டுவன தேனும் வண்டும் இசை பாடும் தேவன்குடி ஆன் அஞ்சு ஆடும் முடி அடிகள் வேடங்களே மேல் #3066 செவிகள் ஆர்விப்பன சிந்தையுள் சேர்வன கவிகள் பாடுவன கண் குளிர்விப்பன புவிகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி அவிகள் உய்க்கப்படும் அடிகள் வேடங்களே மேல் #3067 விண் உலாவும் நெறி வீடு காட்டும் நெறி மண் உலாவும் நெறி மயக்கம் தீர்க்கும் நெறி தெண் நிலா வெண் மதி தீண்டு தேவன்குடி அண்ணல் ஆன் ஏறு உடை அடிகள் வேடங்களே மேல் #3068 பங்கம் என்ன படர் பழிகள் என்னப்படா புங்கம் என்ன படர் புகழ்கள் என்னப்படும் திங்கள் தோயும் பொழில் தீண்டு தேவன்குடி அங்கம் ஆறும் சொன்ன அடிகள் வேடங்களே மேல் #3069 கரைதல் ஒன்றும் இலை கருத வல்லார்-தமக்கு உரையில் ஊனம் இலை உலகினில் மன்னுவர் திரைகள் பொங்க புனல் பாயும் தேவன்குடி அரையில் வெண் கோவணத்து அடிகள் வேடங்களே மேல் #3070 உலகம் உட்கும் திறல் உடை அரக்கன் வலி விலகு பூத கணம் வெருட்டும் வேடத்தின திலகம் ஆரும் பொழில் சூழ்ந்த தேவன்குடி அலர் தயங்கும் முடி அடிகள் வேடங்களே மேல் #3071 துளக்கம் இல்லாதன தூய தோற்றத்தன விளக்கம் ஆக்குவன வெறி வண்டு ஆரும் பொழில் திளைக்கும் தேவன்குடி திசைமுகனோடு மால் அளக்க ஒண்ணா வண்ணத்து அடிகள் வேடங்களே மேல் #3072 செரு மருதம் துவர் தேர் அமண் ஆதர்கள் உரு மருவப்படா தொழும்பர்-தம் உரை கொளேல் திரு மருவும் பொய்கை சூழ்ந்த தேவன்குடி அரு மருந்து ஆவன அடிகள் வேடங்களே மேல் #3073 சேடர் தேவன்குடி தேவர்தேவன்-தனை மாடம் ஓங்கும் பொழில் மல்கு தண் காழியான் நாட வல்ல தமிழ் ஞானசம்பந்தன பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 26. திருக்கானப்பேர் : பண் - கொல்லி #3074 பிடி எலாம் பின் செல பெருங்கைமா மலர் தழீஇ விடியலே தடம் மூழ்கி விதியினால் வழிபடும் கடி உலாம் பூம் பொழில் கானப்பேர் அண்ணல் நின் அடியலால் அடை சரண் உடையரோ அடியரே மேல் #3075 நுண் இடை பேர் அல்குல் நூபுர மெல் அடி பெண்ணின் நல்லாளை ஓர்பாகமா பேணினான் கண் உடை நெற்றியான் கருதிய கானப்பேர் விண் இடை வேட்கையார் விரும்புதல் கருமமே மேல் #3076 வாவி-வாய் தங்கிய நுண் சிறை வண்டு இனம் காவி-வாய் பண்செயும் கானப்பேர் அண்ணலை நாவி-வாய் சாந்துளும் பூவுளும் ஞான நீர் தூவி வாய் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே மேல் #3077 நிறை உடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும் பறை உடை முழவுளும் பலியுளும் பாட்டுளும் கறை உடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர் குறை உடையவர்க்கு அலால் களைகிலார் குற்றமே மேல் #3078 ஏன பூண் மார்பின் மேல் என்பு பூண்டு ஈறு இலா ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் வான பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே மேல் #3079 பள்ளமே படர் சடை பால் பட பாய்ந்த நீர் வெள்ளமே தாங்கினான் வெண் மதி சூடினான் கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர் உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே மேல் #3080 மான மா மட பிடி வன் கையால் அலகு இட கானம் ஆர் கட கரி வழிபடும் கானப்பேர் ஊனம் ஆம் உடம்பினில் உறு பிணி கெட எணின் ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே மேல் #3081 வாளினான் வேலினான் மால் வரை எடுத்த திண் தோளினான் நெடு முடி தொலையவே ஊன்றிய தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் நாளும் நாள் உயர்வது ஓர் நன்மையை பெறுவரே மேல் #3082 சிலையினால் முப்புரம் தீ எழ செற்றவன் நிலை இலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான் கலையின் ஆர் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர் தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே மேல் #3083 உறித்தலை சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி பறித்தலும் போர்த்தலும் பயன் இலை பாவிகாள் மறி தலை மட பிடி வளர் இளம் கொழும் கொடி கறித்து எழு கானப்பேர் கைதொழல் கருமமே மேல் #3084 காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர் கோட்டகத்து இள வரால் குதிகொளும் காழியான் நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன பாட்டகத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 27. திருச்சக்கரப்பள்ளி : பண் - கொல்லி #3085 படையினார் வெண் மழு பாய் புலி தோல் அரை உடையினார் உமை_ஒருகூறனார் ஊர்வது ஓர் விடையினார் வெண்பொடி பூசியார் விரி புனல் சடையினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே மேல் #3086 பாடினார் அரு மறை பனி மதி சடை மிசை சூடினார் படுதலை துன் எருக்கு அதனொடும் நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே மேல் #3087 மின்னின் ஆர் சடை மிசை விரி கதிர் மதியமும் பொன்னின் ஆர் கொன்றையும் பொறி கிளர் அரவமும் துன்னினார் உலகு எலாம் தொழுது எழ நான்மறை தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே மேல் #3088 நலம் மலி கொள்கையார் நான்மறை பாடலார் வலம் மலி மழுவினார் மகிழும் ஊர் வண்டு அறை மலர் மலி சலமொடு வந்து இழி காவிரி சலசல மணி கொழி சக்கரப்பள்ளியே மேல் #3089 வெந்த வெண்பொடி அணி வேதியர் விரி புனல் அந்தம் இல் அணி மலைமங்கையோடு அமரும் ஊர் கந்தம் ஆர் மலரொடு கார் அகில் பல் மணி சந்தினோடு அணை புனல் சக்கரப்பள்ளியே மேல் #3090 பாங்கினால் முப்புரம் பாழ்பட வெம் சிலை வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட ஓங்கினார் உமை ஒருகூறொடும் ஒலி புனல் தாங்கினார் உறைவிடம் சக்கரப்பள்ளியே மேல் #3091 பாரினார் தொழுது எழு பரவு பல் ஆயிரம் பேரினார் பெண் ஒருகூறனார் பேர் ஒலி நீரினார் சடைமுடி நிரை மலர் கொன்றை அம் தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே மேல் #3092 முதிர் இலா வெண் பிறைசூடினார் முன்னநாள் எதிர் இலா முப்புரம் எரிசெய்தார் வரை-தனால் அதிர் இலா வல் அரக்கன் வலி வாட்டிய சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே மேல் #3093 துணி படு கோவணம் சுண்ண வெண்பொடியினர் பணி படு மார்பினர் பனி மதி சடையினர் மணி_வணன் அவனொடு மலர்மிசையானையும் தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே மேல் #3094 உடம்பு போர் சீவரர் ஊண் தொழில் சமணர்கள் விடம் படும் உரை அவை மெய் அல விரி புனல் வடம் படு மலர் கொடு வணங்கு-மின் வைகலும் தடம் புனல் சூழ்தரு சக்கரப்பள்ளியே மேல் #3095 தண் வயல் புடை அணி சக்கரப்பள்ளி எம் கண்நுதலவன் அடி கழுமல வள நகர் நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் பண்ணிய இவை சொல பறையும் மெய் பாவமே மேல் 28. திருமழபாடி : பண் - கொல்லி #3096 காலை ஆர் வண்டு இனம் கிண்டிய கார் உறும் சோலை ஆர் பைம் கிளி சொல் பொருள் பயிலவே வேலை ஆர் விடம் அணி வேதியன் விரும்பு இடம் மாலை ஆர் மதி தவழ் மா மழபாடியே மேல் #3097 கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் துறை அணி குருகு இனம் தூ மலர் துதையவே மறை அணி நாவினான் மா மழபாடியே மேல் #3098 அந்தணர் வேள்வியும் அரு மறை துழனியும் செந்தமிழ் கீதமும் சீரினால் வளர்தர பந்து அணை மெல்விரலாளொடும் பயில்விடம் மந்தம் வந்து உலவு சீர் மா மழபாடியே மேல் #3099 அத்தியின் உரி-தனை அழகுற போர்த்தவன் முத்தியாய் மூவரில் முதல்வனாய் நின்றவன் பத்தியால் பாடிட பரிந்து அவர்க்கு அருள்செயும் அத்தனார் உறைவிடம் அணி மழபாடியே மேல் #3100 கங்கை ஆர் சடையிடை கதிர் மதி அணிந்தவன் வெம் கண் வாள் அரவு உடை வேதியன் தீது இலா செங்கயல் கண் உமையாளொடும் சேர்விடம் மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே மேல் #3101 பாலனார் ஆருயிர் பாங்கினால் உண வரும் காலனார் உயிர் செக காலினால் சாடினான் சேலின் ஆர் கண்ணினாள்-தன்னொடும் சேர்விடம் மாலினார் வழிபடும் மா மழபாடியே மேல் #3102 விண்ணில் ஆர் இமையவர் மெய் மகிழ்ந்து ஏத்தவே எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார் கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் அண்ணலார் உறைவிடம் அணி மழபாடியே மேல் #3103 கரத்தினால் கயிலையை எடுத்த கார் அரக்கன சிரத்தினை ஊன்றலும் சிவன் அடி சரண் எனா இரத்தினால் கைந்நரம்பு எடுத்து இசை பாடலும் வரத்தினான் மருவு இடம் மா மழபாடியே மேல் #3104 ஏடு உலாம் மலர் மிசை அயன் எழில் மாலுமாய் நாடினார்க்கு அரிய சீர் நாதனார் உறைவிடம் பாடு எலாம் பெண்ணையின் பழம் விழ பைம் பொழில் மாடு எலாம் மல்கு சீர் மா மழபாடியே மேல் #3105 உறி பிடித்து ஊத்தை வாய் சமணொடு சாக்கியர் நெறி பிடித்து அறிவு இலா நீசர் சொல் கொள்ளன்-மின் பொறி பிடித்த அரவு இனம் பூண் என கொண்டு மான் மறி பிடித்தான் இடம் மா மழபாடியே மேல் #3106 ஞாலத்து ஆர் ஆதிரைநாளினான் நாள்-தொறும் சீலத்தான் மேவிய திரு மழபாடியை ஞாலத்தால் மிக்க சீர் ஞானசம்பந்தன் சொல் கோலத்தால் பாடுவார் குற்றம் அற்றார்களே மேல் 29. மேலைத்திருக்காட்டுப்பள்ளி : பண் - கொல்லி #3107 வாரு மன்னும் முலை மங்கை ஓர்பங்கினன் ஊரு மன்னும் பலி உண்பதும் வெண் தலை காரு மன்னும் பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி நீரு மன்னும் சடை நிமலர்-தம் நீர்மையே மேல் #3108 நிருத்தனார் நீள் சடை மதியொடு பாம்பு அணி கருத்தனார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி அருத்தனார் அழகு அமர் மங்கை ஓர்பாகமா பொருத்தனார் கழல் இணை போற்றுதல் பொருளதே மேல் #3109 பண்ணின் ஆர் அரு மறை பாடினார் நெற்றி ஓர் கண்ணினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி விண்ணின் ஆர் விரி புனல் மேவினார் சடைமுடி அண்ணலார் எம்மை ஆளுடைய எம் அடிகளே மேல் #3110 பணம் கொள் நாகம் அரைக்கு ஆர்ப்பது பல் பலி உணங்கல் ஓடு உண்கலன் உறைவது காட்டிடை கணங்கள் கூடி தொழுது ஏத்து காட்டுப்பள்ளி நிணம் கொள் சூல படை நிமலர்-தம் நீர்மையே மேல் #3111 வரை உலாம் சந்தொடு வந்து இழி காவிரி கரை உலாம் இடு மணல் சூழ்ந்த காட்டுப்பள்ளி திரை உலாம் கங்கையும் திங்களும் சூடி அங்கு அரை உலாம் கோவணத்து அடிகள் வேடங்களே மேல் #3112 வேதனார் வெண் மழு ஏந்தினார் அங்கம் முன் ஓதினார் உமை_ஒருகூறனார் ஒண் குழை காதினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி நாதனார் திருவடி நாளும் நின்று ஏத்துமே மேல் #3113 மையின் ஆர் மிடறனார் மான் மழு ஏந்திய கையினார் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி தையல் ஓர்பாகமா தண் மதி சூடிய ஐயனார் அடி தொழ அல்லல் ஒன்று இல்லையே மேல் #3114 சிலை-தனால் முப்புரம் செற்றவன் சீரின் ஆர் மலை-தனால் வல் அரக்கன் வலி வாட்டினான் கலை-தனால் புறவு அணி மல்கு காட்டுப்பள்ளி தலை-தனால் வணங்கிட தவம் அது ஆகுமே மேல் #3115 செங்கண்மால் திகழ்தரு மலர் உறை திசைமுகன் தம் கையால் தொழுது எழ தழல் உரு ஆயினான் கங்கை ஆர் சடையினான் கருது காட்டுப்பள்ளி அம் கையால் தொழுமவர்க்கு அல்லல் ஒன்று இல்லையே மேல் #3116 போதியார் பிண்டியார் என்ற அ பொய்யர்கள் வாதினால் உரை அவை மெய் அல வைகலும் காரின் ஆர் கடி பொழில் சூழ்ந்த காட்டுப்பள்ளி ஏரினால் தொழுது எழ இன்பம் வந்து எய்துமே மேல் #3117 பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் அரு மறை அவை வல அணி கொள் சம்பந்தன் சொல் கரு மணி மிடற்றினன் கருது காட்டுப்பள்ளி பரவிய தமிழ் சொல்ல பறையும் மெய் பாவமே மேல் 30. திருஅரதைப்பெரும்பாழி : பண் - கொல்லி #3118 பைத்த பாம்போடு அரை கோவணம் பாய் புலி மொய்த்த பேய்கள் முழக்கம் முதுகாட்டிடை நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி பித்தர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3119 கயல சேல கரும் கண்ணியர் நாள்-தொறும் பயலை கொள்ள பலி தேர்ந்து உழல் பான்மையார் இயலை வானோர் நினைந்தோர்களுக்கு எண்ணரும் பெயரர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3120 கோடல் சால உடையார் கொலை யானையின் மூடல் சால உடையார் முளி கானிடை ஆடல் சால உடையார் அழகு ஆகிய பீடர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3121 மண்ணர் நீரார் அழலார் மலி காலினார் விண்ணர் வேதம் விரித்து ஓதுவார் மெய்ப்பொருள் பண்ணர் பாடல் உடையார் ஒருபாகமும் பெண்ணர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3122 மறையர் வாயின் மொழி மானொடு வெண் மழு கறை கொள் சூலம் உடை கையர் கார் ஆர்தரும் நறை கொள் கொன்றை நயந்து ஆர்தரும் சென்னி மேல் பிறையர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3123 புற்று அரவம் புலி தோல் அரை கோவணம் தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு சுற்று அமர் பாரிடம் தொல் கொடியின் மிசை பெற்றர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3124 துணை இல் துத்தம் சுரி சங்கு அமர் வெண்பொடி இணை இல் ஏற்றை உகந்து ஏறுவரும் எரி கணையினால் முப்புரம் செற்றவர் கையினில் பிணையர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3125 சரிவு இலா வல் அரக்கன் தடம் தோள் தலை நெரிவில் ஆர அடர்த்தார் நெறி மென் குழல் அரிவை பாகம் அமர்ந்தார் அடியாரொடும் பிரிவு இல் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3126 வரி அரா என்பு அணி மார்பினர் நீர் மல்கும் எரி அராவும் சடை மேல் பிறை ஏற்றவர் கரிய மாலோடு அயன் காண்பு அரிது ஆகிய பெரியர் கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3127 நாண் இலாத சமண் சாக்கியர் நாள்-தொறும் ஏண் இலாத மொழிய எழில் ஆயவர் சேண் உலாம் மு மதில் தீ எழ செற்றவர் பேணு கோயில் அரதைப்பெரும்பாழியே மேல் #3128 நீரின் ஆர் புன் சடை நிமலனுக்கு இடம் என பாரினார் பரவு அரதைப்பெரும்பாழியை சீரின் ஆர் காழியுள் ஞானசம்பந்தன் செய் ஏரின் ஆர் தமிழ் வல்லார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 31. திருமயேந்திரப்பள்ளி : பண் - கொல்லி #3129 திரை தரு பவளமும் சீர் திகழ் வயிரமும் கரை தரும் அகிலொடு கன வளை புகுதரும் வரைவிலால் எயில் எய்த மயேந்திரப்பள்ளியுள் அரவு அரை அழகனை அடி இணை பணி-மினே மேல் #3130 கொண்டல் சேர் கோபுரம் கோலம் ஆர் மாளிகை கண்டலும் கைதையும் கமலம் ஆர் வாவியும் வண்டு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் செண்டு சேர் விடையினான் திருந்து அடி பணி-மினே மேல் #3131 கோங்கு இள வேங்கையும் கொழு மலர் புன்னையும் தாங்கு தேன் கொன்றையும் தகு மலர் குரவமும் மாம் கரும்பும் வயல் மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு இருந்தவன் கழல் அடி இணை பணி-மினே மேல் #3132 வங்கம் ஆர் சேண் உயர் வரு குறியால் மிகு சங்கம் ஆர் ஒலி அகில் தரு புகை கமழ்தரும் மங்கை ஓர்பங்கினன் மயேந்திரப்பள்ளியுள் எங்கள் நாயகன்-தனது இணையடி பணி-மினே மேல் #3133 நித்தில தொகை பல நிரை தரு மலர் என சித்திர புணரி சேர்த்திட திகழ்ந்து இருந்தவன் மை திகழ் கண்டன் நல் மயேந்திரப்பள்ளியுள் கைத்தலம் மழுவனை கண்டு அடி பணி-மினே மேல் #3134 சந்திரன் கதிரவன் தகு புகழ் அயனொடும் இந்திரன் வழிபட இருந்த எம் இறையவன் மந்திர மறை வளர் மயேந்திரப்பள்ளியுள் அந்தம் இல் அழகனை அடி பணிந்து உய்ம்-மினே மேல் #3135 சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு படர் சடை மதியினன் மயேந்திரப்பள்ளியுள் அடல் விடை உடையவன் அடி பணிந்து உய்ம்-மினே மேல் #3136 சிரம் ஒரு பதும் உடை செரு வலி அரக்கனை கரம் இருபதும் இற கன வரை அடர்த்தவன் மரவு அமர் பூம் பொழில் மயேந்திரப்பள்ளியுள் அரவு அமர் சடையனை அடி பணிந்து உய்ம்-மினே மேல் #3137 நாக_அணை_துயில்பவன் நலம் மிகு மலரவன் ஆக அணைந்து அவர் கழல் அணையவும் பெறுகிலர் மாகு அணைந்து அலர் பொழில் மயேந்திரப்பள்ளியுள் யோகு அணைந்தவன் கழல் உணர்ந்து இருந்து உய்ம்-மினே மேல் #3138 உடை துறந்தவர்களும் உடை துவர் உடையரும் படு பழி உடையவர் பகர்வன விடு-மின் நீர் மடை வளர் வயல் அணி மயேந்திரப்பள்ளியுள் இடம் உடை ஈசனை இணையடி பணி-மினே மேல் #3139 வம்பு உலாம் பொழில் அணி மயேந்திரப்பள்ளியுள் நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் நம் பரம் இது என நாவினால் நவில்பவர் உம்பரார் எதிர்கொள உயர் பதி அணைவரே மேல் 32. திருஏடகம் : பண் - கொல்லி #3140 வன்னியும் மத்தமும் மதி பொதி சடையினன் பொன் இயல் திருவடி புது மலர் அவை கொடு மன்னிய மறையவர் வழிபட அடியவர் இன்னிசை பாடல் ஆர் ஏடகத்து ஒருவனே மேல் #3141 கொடி நெடு மாளிகை கோபுரம் குளிர் மதி வடிவுற அமைதர மருவிய ஏடகத்து அடிகளை அடி பணிந்து அரற்று-மின் அன்பினால் இடிபடும் வினைகள் போய் இல்லை அது ஆகுமே மேல் #3142 குண்டலம் திகழ்தரு காது உடை குழகனை வண்டு அலம்பும் மலர் கொன்றை வான் மதி அணி செண்டு அலம்பும் விடை சேடன் ஊர் ஏடகம் கண்டு கைதொழுதலும் கவலை நோய் கழலுமே மேல் #3143 ஏலம் ஆர்தரு குழல் ஏழையோடு எழில் பெறும் கோலம் ஆர்தரு விடை குழகனார் உறைவிடம் சால மாதவிகளும் சந்தனம் சண்பகம் சீலம் ஆர் ஏடகம் சேர்தல் ஆம் செல்வமே மேல் #3144 வரி அணி நயனி நல் மலைமகள் மறுகிட கரியினை உரிசெய்த கறை அணி மிடறினன் பெரியவன் பெண்ணினோடு ஆண் அலி ஆகிய எரியவன் உறைவிடம் ஏடக கோயிலே மேல் #3145 பொய்கையின் பொழில் உறு புது மலர் தென்றல் ஆர் வைகையின் வடகரை மருவிய ஏடகத்து ஐயனை அடி பணிந்து அரற்று-மின் அடர்தரும் வெய்ய வன் பிணி கெட வீடு எளிது ஆகுமே மேல் #3146 தட வரை எடுத்தவன் தருக்கு இற தோள் அடர் பட விரல் ஊன்றியே பரிந்து அவற்கு அருள்செய்தான் மடவரல் எருக்கொடு வன்னியும் மத்தமும் இடம் உடை சடையினன் ஏடகத்து இறைவனே மேல் #3147 பொன்னும் மா மணிகளும் பொரு திரை சந்து அகில் தன்னுள் ஆர் வைகையின் கரைதனில் சமைவுற அன்னம் ஆம் அயனும் மால் அடி முடி தேடியும் இன்ன ஆறு என ஒணான் ஏடகத்து ஒருவனே மேல் #3148 குண்டிகை கையினர் குணம் இலா தேரர்கள் பண்டியை பெருக்கிடும் பளகர்கள் பணிகிலர் வண்டு இரைக்கும் மலர் கொன்றையும் வன்னியும் இண்டை சேர்க்கும் சடை ஏடகத்து எந்தையே மேல் #3149 கோடு சந்தனம் அகில் கொண்டு இழி வைகை நீர் ஏடு சென்று அணைதரும் ஏடகத்து ஒருவனை நாடு தென் புகலியுள் ஞானசம்பந்தன பாடல் பத்து இவை வலார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 33. திருவுசாத்தானம் : பண் - கொல்லி #3150 நீரிடை துயின்றவன் தம்பி நீள் சாம்புவான் போர் உடை சுக்கிரீவன் அனுமான் தொழ கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் சீர் உடை சேடர் வாழ் திரு உசாத்தானமே மேல் #3151 கொல்லை ஏறு உடையவன் கோவண ஆடையன் பல்லை ஆர் படுதலை பலி கொளும் பரமனார் முல்லை ஆர் புறவு அணி முது பதி நறை கமழ் தில்லையான் உறைவிடம் திரு உசாத்தானமே மேல் #3152 தாம் அலார் போலவே தக்கனார் வேள்வியை ஊமனார்-தம் கனா ஆக்கினான் ஒரு நொடி காமனார் உடல் கெட காய்ந்த எம் கண்நுதல் சேமமா உறைவிடம் திரு உசாத்தானமே மேல் #3153 மறி தரு கரத்தினான் மால் விடை ஏறியான் குறி தரு கோல நல் குணத்தினார் அடி தொழ நெறி தரு வேதியர் நித்தலும் நியமம் செய் செறி தரு பொழில் அணி திரு உசாத்தானமே மேல் #3154 பண்டு இரைத்து அயனும் மாலும் பல பத்தர்கள் தொண்டு இரைத்தும் மலர் தூவி தோத்திரம் சொல கொண்டு இரை கொடியொடும் குருகினின் நல் இனம் தெண் திரை கழனி சூழ் திரு உசாத்தானமே மேல் #3155 மடவரல் பங்கினன் மலை-தனை மதியாது சடசட எடுத்தவன் தலை பத்தும் நெரிதர அடர்தர ஊன்றி அங்கே அவற்கு அருள்செய்தான் திடம் என உறைவிடம் திரு உசாத்தானமே மேல் #3156 ஆண் அலார் பெண் அலார் அயனொடு மாலுக்கும் காண ஒணா வண்ணத்தான் கருதுவார் மனத்து உளான் பேணுவார் பிணியொடும் பிறப்பு அறுப்பான் இடம் சேண் உலாம் மாளிகை திரு உசாத்தானமே மேல் #3157 கானம் ஆர் வாழ்க்கையான் கார் அமண் தேரர் சொல் ஊனமா கொண்டு நீர் உரை-மின் உய்ய எனில் வானம் ஆர் மதில் அணி மாளிகை வளர் பொழில் தேன மா மதியம் தோய் திரு உசாத்தானமே மேல் #3158 வரை திரிந்து இழியும் நீர் வள வயல் புகலி மன் திரை திரிந்து எறி கடல் திரு உசாத்தானரை உரை தெரிந்து உணரும் சம்பந்தன் ஒண் தமிழ் வல்லார் நரை திரை இன்றியே நன்நெறி சேர்வரே மேல் 34. திருமுதுகுன்றம் : பண் - கொல்லி #3159 வண்ண மா மலர் கொடு வானவர் வழிபட அண்ணலார் ஆய்_இழையாளொடும் அமர்விடம் விண்ணின் மா மழை பொழிந்து இழிய வெள் அருவி சேர் திண்ணில் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே மேல் #3160 வெறி உலாம் கொன்றை அம் தாரினான் மேதகு பொறி உலாம் அரவு அசைத்து ஆடி ஓர் புண்ணியன் மறி உலாம் கையினான் மங்கையோடு அமர்விடம் செறியுள் ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே மேல் #3161 ஏறனார் விடை மிசை இமையவர் தொழ உமை கூறனார் கொல் புலி தோலினார் மேனி மேல் நீறனார் நிறை புனல் சடையனார் நிகழ்விடம் தேறல் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே மேல் #3162 உரையின் ஆர் உறு பொருள் ஆயினான் உமையொடும் விரையின் ஆர் கொன்றை சேர் சடையினார் மேவிடம் உரையின் ஆர் ஒலி என ஓங்கு முத்தாறு மெய் திரையின் ஆர் எறி புனல் திரு முதுகுன்றமே மேல் #3163 கடிய ஆயின குரல் களிற்றினை பிளிற ஓர் இடிய வெம் குரலினோடு ஆளி சென்றிடு நெறி வடிய வாய் மழுவினன் மங்கையோடு அமர்விடம் செடி அது ஆர் புறவு அணி திரு முதுகுன்றமே மேல் #3164 கானம் ஆர் கரியின் ஈர் உரிவையார் பெரியது ஓர் வானம் ஆர் மதியினோடு அரவர் தாம் மருவிடம் ஊனம் ஆயின பிணி அவை கெடுத்து உமையொடும் தேன் அம் ஆர் பொழில் அணி திரு முதுகுன்றமே மேல் #3165 மஞ்சர்தாம் மலர் கொடு வானவர் வணங்கிட வெம் சொலார் வேடரோடு ஆடவர் விரும்பவே அம் சொலாள் உமையொடும் அமர்விடம் அணி கலை செம் சொலார் பயில்தரும் திரு முதுகுன்றமே மேல் #3166 காரினார் அமர்தரும் கயிலை நல் மலையினை ஏரின் ஆர் முடி இராவணன் எடுத்தான் இற வாரின் ஆர் முலையொடும் மன்னினார் மருவிடம் சீரினார் திகழ்தரும் திரு முதுகுன்றமே மேல் #3167 ஆடினார் கானகத்து அரு மறையின் பொருள் பாடினார் பல புகழ் பரமனார் இணையடி ஏடின் ஆர் மலர் மிசை அயனும் மால் இருவரும் தேடினார் அறிவு ஒணார் திரு முதுகுன்றமே மேல் #3168 மாசு மெய் தூசு கொண்டு உழல் சமண் சாக்கியர் பேசு மெய் உள அல பேணுவீர் காணு-மின் வாசம் ஆர்தரு பொழில் வண்டு இனம் இசைசெய தேசம் ஆர் புகழ் மிகும் திரு முதுகுன்றமே மேல் #3169 திண்ணின் ஆர் புறவு அணி திரு முதுகுன்றரை நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல் எண்ணினார் ஈர்_ஐந்து மாலையும் இயலுமா பண்ணினால் பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 35. திருத்தென்குடித்திட்டை : பண் - கொல்லி #3170 முன்னை நான்மறை அவை முறைமுறை குறையொடும் தன்ன தாள் தொழுது எழ நின்றவன்-தன் இடம் மன்னு மா காவிரி வந்து அடி வருட நல் செந்நெல் ஆர் வள வயல் தென்குடித்திட்டையே மேல் #3171 மகரம் ஆடும் கொடி மன்மதவேள்-தனை நிகரல் ஆகா நெருப்பு எழ விழித்தான் இடம் பகர வாள் நித்திலம் பல் மகரத்தொடும் சிகர மாளிகை தொகும் தென்குடித்திட்டையே மேல் #3172 கருவினால் அன்றியே கரு எலாம் ஆயவன் உருவினால் அன்றியே உருவுசெய்தான் இடம் பருவ நாள் விழவொடும் பாடலோடு ஆடலும் திருவினால் மிகு புகழ் தென்குடித்திட்டையே மேல் #3173 உள் நிலாவு ஆவியாய் ஓங்கு தன் தன்மையை விண்ணிலார் அறிகிலா வேதவேதாந்தன் ஊர் எண் இல் ஆர் எழில் மணி கனக மாளிகை இளம் தெண் நிலா விரிதரும் தென்குடித்திட்டையே மேல் #3174 வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் அருந்தி ஆரமுது அவர்க்கு அருள்செய்தான் அமரும் ஊர் செருந்தி பூ மாதவி பந்தர் வண் செண்பகம் திருந்து நீள் வளர் பொழில் தென்குடித்திட்டையே மேல் #3175 ஊறினார் ஓசையுள் ஒன்றினார் ஒன்றி மால் கூறினார் அமர்தரும் குமரவேள் தாதை ஊர் ஆறினார் பொய் அகத்து ஐஉணர்வு எய்தி மெய் தேறினார் வழிபடும் தென்குடித்திட்டையே மேல் #3176 கான் அலைக்கும் அவன் கண் இடந்து அப்ப நீள் வான் அலைக்கும் தவ தேவு வைத்தான் இடம் தான் அலை தெள் அம் ஊர் தாமரை தண் துறை தேன் அலைக்கும் வயல் தென்குடித்திட்டையே மேல் #3177 மாலொடும் பொரு திறல் வாள் அரக்கன் நெரிந்து ஓலிடும்படி விரல் ஒன்று வைத்தான் இடம் காலொடும் கனக மூக்கு உடன்வர கயல் வரால் சேலொடும் பாய் வயல் தென்குடித்திட்டையே மேல் #3178 நாரணன்-தன்னொடு நான்முகன்தானுமாய் காரணன் அடி முடி காண ஒண்ணான் இடம் ஆரணம் கொண்டு பூசுரர்கள் வந்து அடி தொழ சீர் அணங்கும் புகழ் தென்குடித்திட்டையே மேல் #3179 குண்டிகை கை உடை குண்டரும் புத்தரும் பண்டு உரைத்து ஏயிடும் பற்று விட்டீர் தொழும் வண்டு இரைக்கும் பொழில் தண்டலை கொண்டல் ஆர் தெண் திரை தண் புனல் தென்குடித்திட்டையே மேல் #3180 தேன் நல் ஆர் சோலை சூழ் தென்குடித்திட்டையை கானல் ஆர் கடி பொழில் சூழ்தரும் காழியுள் ஞானம் ஆர் ஞானசம்பந்தன செந்தமிழ் பால் நல் ஆர் மொழி வலார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 36. திருக்காளத்தி : பண் - கொல்லி #3181 சந்தம் ஆர் அகிலொடு சாதி தேக்க மரம் உந்தும் மா முகலியின் கரையினில் உமையொடும் மந்தம் ஆர் பொழில் வளர் மல்கு வண் காளத்தி எந்தையார் இணையடி என் மனத்து உள்ளவே மேல் #3182 ஆலம் மா மரவமோடு அமைந்த சீர் சந்தனம் சாலம் மா பீலியும் சண்பகம் உந்தியே காலம் ஆர் முகலி வந்து அணைதரு காளத்தி நீலம் ஆர் கண்டனை நினையுமா நினைவதே மேல் #3183 கோங்கமே குரவமே கொன்றை அம் பாதிரி மூங்கில் வந்து அணைதரு முகலியின் கரையினில் ஆங்கு அமர் காளத்தி அடிகளை அடி தொழ வீங்கு வெம் துயர் கெடும் வீடு எளிது ஆகுமே மேல் #3184 கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் அரும்பு நீர் முகலியின் கரையினில் அணி மதி ஒருங்கு வார் சடையினன் காளத்தி ஒருவனை விரும்புவார் அவர்கள்தாம் விண்ணுலகு ஆள்வரே மேல் #3185 வரை தரும் அகிலொடு மா முத்தம் உந்தியே திரை தரு முகலியின் கரையினில் தே மலர் விரை தரு சடைமுடி காளத்தி விண்ணவன் நிரைதரு கழல் இணை நித்தலும் நினை-மினே மேல் #3186 முத்தும் மா மணிகளும் முழு மலர் திரள்களும் எத்து மா முகலியின் கரையினில் எழில் பெற கத்திட அரக்கனை கால்விரல் ஊன்றிய அத்தன்-தன் காளத்தி அணைவது கருமமே மேல் #3187 மண்ணும் மா வேங்கையும் மருதுகள் பீழ்ந்து உந்தி நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் வண்ண மா மலரவன் மால் அவன் காண்கிலா அண்ணலார் காளத்தி ஆங்கு அணைந்து உய்ம்-மினே மேல் #3188 வீங்கிய உடலினர் விரிதரு துவர் உடை பாங்கு இலார் சொலை விடும் பரன் அடி பணியு-மின் ஓங்கு வண் காளத்தி உள்ளமோடு உணர்தர வாங்கிடும் வினைகளை வானவர்க்கு ஒருவனே மேல் #3189 அட்டமாசித்திகள் அணைதரு காளத்தி வட்ட வார் சடையனை வயல் அணி காழியான் சிட்ட நான்மறை வல ஞானசம்பந்தன் சொல் இட்டமா பாடுவார்க்கு இல்லை ஆம் பாவமே மேல் 37. திருப்பிரமம் : பண் - கொல்லி #3190 கரம் முனம் மலரால் புனல் மலர் தூவியே கலந்து ஏத்து-மின் பரமன் ஊர் பல பேரினால் பொலி பத்தர் சித்தர்கள்தாம் பயில் வரம் முன்ன அருள்செய்ய வல்ல எம் ஐயன் நாள்-தொறும் மேய சீர் பிரமனூர் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் அருள் பேணியே மேல் #3191 விண்ணில் ஆர் மதி சூடினான் விரும்பும் மறையவன்-தன் தலை உண்ண நன் பலி பேணினான் உலகத்துள் ஊன் உயிரான் மலை பெண்ணின் ஆர் திரு மேனியான் பிரமாபுரத்து உறை கோயிலுள் அண்ணல் ஆர் அருளாளனாய் அமர்கின்ற எம்முடை ஆதியே மேல் #3192 எல்லை இல் புகழாளனும் இமையோர் கணத்துடன் கூடியும் பல்லை ஆர் தலையில் பலி அது கொண்டு உகந்த படிறனும் தொல்லை வையகத்து ஏறு தொண்டர்கள் தூ மலர் சொரிந்து ஏத்தவே மல்லை அம் பொழில் தேன் பில்கும் பிரமாபுரத்து உறை மைந்தனே மேல் #3193 அடையலார் புரம் சீறி அந்தணர் ஏத்த மா மட மாதொடும் பெடை எலாம் கடல் கானல் புல்கும் பிரமாபுரத்து உறை கோயிலான் தொடையல் ஆர் நறும் கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் இடை இலார் சிவலோகம் எய்துதற்கு ஈது காரணம் காண்-மினே மேல் #3194 வாயிடை மறை ஓதி மங்கையர் வந்து இட பலி கொண்டு போய் போய் இடம் எரிகானிடை புரி நாடகம் இனிது ஆடினான் பேயொடும் குடி வாழ்வினான் பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் தாயிடை பொருள் தந்தை ஆகும் என்று ஓதுவார்க்கு அருள் தன்மையே மேல் #3195 ஊடினால் இனி யாவது என் உயர் நெஞ்சமே உறு வல்வினைக்கு ஓடி நீ உழல்கின்றது என் அழல் அன்று தன் கையில் ஏந்தினான் பீடு நேர்ந்தது கொள்கையான் பிரமாபுரத்து உறை வேதியன் ஏடு நேர் மதியோடு அரா அணி எந்தை என்று நின்று ஏத்திடே மேல் #3196 செய்யன் வெள்ளியன் ஒள்ளியார் சிலர் என்றும் ஏத்தி நினைந்திட ஐயன் ஆண்டகை அந்தணன் அரு மா மறைப்பொருள் ஆயினான் பெய்யும் மா மழை ஆனவன் பிரமாபுரம் இடம் பேணிய வெய்ய வெண் மழு ஏந்தியை நினைந்து ஏத்து-மின் வினை வீடவே மேல் #3197 கன்று ஒரு கையில் ஏந்தி நல் விளவின் கனி பட நூறியும் சென்று ஒருக்கிய மா மறைப்பொருள் தேர்ந்த செம்மலரோனுமாய் அன்று அரக்கனை செற்றவன் அடியும் முடி அவை காண்கிலார் பின் தருக்கிய தண் பொழில் பிரமாபுரத்து அரன் பெற்றியே மேல் #3198 உண்டு உடுக்கை விட்டார்களும் உயர் கஞ்சி மண்டை கொள் தேரரும் பண்டு அடக்கு சொல் பேசும் அ பரிவு ஒன்று இலார்கள் சொல் கொள்ளன்-மின் தண்டொடு அக்கு வன் சூலமும் தழல் மா மழு படை தன் கையில் கொண்டு ஒடுக்கிய மைந்தன் என் பிரமாபுரத்து உறை கூத்தனே மேல் #3199 பித்தனை பிரமாபுரத்து உறை பிஞ்ஞகன் கழல் பேணியே மெய் தவத்து நின்றோர்களுக்கு உரைசெய்து நன் பொருள் மேவிட வைத்த சிந்தையுள் ஞானசம்பந்தன் வாய் நவின்று எழு மாலைகள் பொய் தவம் பொறி நீங்க இன்னிசை போற்றிசெய்யும் மெய் மாந்தரே மேல் 38. திருக்கண்டியூர்வீரட்டம் : பண் - கொல்லி #3200 வினவினேன் அறியாமையில் உரைசெய்ம்-மின் நீர் அருள் வேண்டுவீர் கனைவில் ஆர் புனல் காவிரி கரை மேய கண்டியூர்வீரட்டன் தனம் முனே தனக்கு இன்மையோ தமர் ஆயினார் அண்டம் ஆள தான் வனனில் வாழ்க்கை கொண்டு ஆடி பாடி இ வையம் மா பலி தேர்ந்ததே மேல் #3201 உள்ள ஆறு எனக்கு உரைசெய்ம்-மின் உயர்வு ஆய மா தவம் பேணுவீர் கள் அவிழ் பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை காதலான் பிள்ளை வான் பிறை செம் சடை மிசை வைத்ததும் பெரு நீர் ஒலி வெள்ளம் தாங்கியது என்-கொலோ மிகு மங்கையாள் உடன் ஆகவே மேல் #3202 அடியர் ஆயினீர் சொல்லு-மின் அறிகின்றிலேன் அரன் செய்கையை படி எலாம் தொழுது ஏத்து கண்டியூர்வீரட்டத்து உறை பான்மையான் முடிவுமாய் முதலாய் இ வையம் முழுதுமாய் அழகு ஆயது ஓர் பொடி அது ஆர் திரு மார்பினில் புரி நூலும் பூண்டு எழு பொற்பு அதே மேல் #3203 பழைய தொண்டர்கள் பகரு-மின் பல ஆய வேதியன் பான்மையை கழை உலாம் புனல் மல்கு காவிரி மன்னு கண்டியூர்வீரட்டன் குழை ஒர் காதினில் பெய்து உகந்து ஒரு குன்றின் மங்கை வெருவுற புழை நெடுங்கைநன்மா உரித்து அது போர்த்து உகந்த பொலிவு அதே மேல் #3204 விரவு இலாது உமை கேட்கின்றேன் அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்பு-மின் கரவு எலாம் திரை மண்டு காவிரி கண்டியூர் உறை வீரட்டன் முரவம் மொந்தை முழா ஒலிக்க முழங்கு பேயொடும் கூடி போய் பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே மேல் #3205 இயலும் ஆறு எனக்கு இயம்பு-மின் இறைவன்னுமாய் நிறை செய்கையை கயல் நெடும் கண்ணினார்கள்தாம் பொலி கண்டியூர் உறை வீரட்டன் புயல் பொழிந்து இழி வானுளோர்களுக்காக அன்று அயன் பொய் சிரம் அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே மேல் #3206 திருந்து தொண்டர்கள் செப்பு-மின் மிக செல்வன்-தன்னது திறம் எலாம் கரும் தடம் கண்ணினார்கள்தாம் தொழு கண்டியூர் உறை வீரட்டன் இருந்து நால்வரொடு ஆல் நிழல் அறம் உரைத்ததும் மிகு வெம்மையார் வருந்த வன் சிலையால் அ மா மதில் மூன்றும் மாட்டிய வண்ணமே மேல் #3207 நா விரித்து அரன் தொல் புகழ் பல பேணுவீர் இறை நல்கு-மின் காவிரி தடம் புனல் செய் கண்டியூர்வீரட்டத்து உறை கண்நுதல் கோ விரி பயன் ஆன் அஞ்சு ஆடிய கொள்கையும் கொடி வரை பெற மா வரைத்தலத்தால் அரக்கனை வலியை வாட்டிய மாண்பு அதே மேல் #3208 பெருமையே சரண் ஆக வாழ்வுறு மாந்தர்காள் இறை பேசு-மின் கருமை ஆர் பொழில் சூழும் தண் வயல் கண்டியூர் உறை வீரட்டன் ஒருமையால் உயர் மாலும் மற்றை மலரவன் உணர்ந்து ஏத்தவே அருமையால் அவருக்கு உயர்ந்து எரி ஆகி நின்ற அ தன்மையே மேல் #3209 நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள் நவிலு-மின் உமை கேட்கின்றேன் கமர் அழி வயல் சூழும் தண் புனல் கண்டியூர் உறை வீரட்டன் தமர் அழிந்து எழு சாக்கிய சமண் ஆதர் ஓதுமது கொளாது அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்-தன்னை சூலத்தில் ஆய்ந்ததே மேல் #3210 கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்வீரட்டத்து உறை கள்வனை அருத்தனை திறம் அடியர்-பால் மிக கேட்டு உகந்த வினா உரை திருத்தம் ஆம் திகழ் காழி ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழ் ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே மேல் 39. திருஆலவாய் : பண் - கொல்லி #3211 மானின் நேர் விழி மாதராய் வழுதிக்கு மா பெருந்தேவி கேள் பால் நல் வாய் ஒரு பாலன் ஈங்கு இவன் என்று நீ பரிவு எய்திடேல் ஆனை மா மலை ஆதி ஆய இடங்களில் பல அல்லல் சேர் ஈனர்கட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3212 ஆகமத்தொடு மந்திரங்கள் அமைந்த சங்கத பங்கமா பாகதத்தொடு இரைத்து உரைத்த சனங்கள் வெட்குறு பக்கமா மா கத கரி போல் திரிந்து புரிந்து நின்று உணும் மாசு சேர் ஆகதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3213 அ தகு பொருள் உண்டும் இல்லையும் என்று நின்றவர்க்கு அச்சமா ஒத்து ஒவ்வாமை மொழிந்து வாதில் அழிந்து எழுந்த கவி பெயர் சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் சித்திரர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3214 சந்துசேனனும் இந்துசேனனும் தருமசேனனும் கருமை சேர் கந்துசேனனும் கனகசேனனும் முதல் அது ஆகிய பெயர் கொளா மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா அந்தகர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3215 கூட்டின் ஆர் கிளியின் விருத்தம் உரைத்தது ஓர் எலியின் தொழில் பாட்டு மெய் சொலி பக்கமே செலும் எக்கர்-தங்களை பல் அறம் காட்டியே வரு மாடு எலாம் கவர் கையரை கசிவு ஒன்று இலா சேட்டைகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3216 கனகநந்தியும் புட்பநந்தியும் பவணநந்தியும் குமண மா சுனகநந்தியும் குனகநந்தியும் திவணநந்தியும் மொழி கொளா அனகநந்தியர் மது ஒழிந்து அவமே தவம் புரிவோம் எனும் சினகருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3217 பந்தணம் அவை ஒன்று இலம் பரிவு ஒன்று இலம் என வாசகம் மந்தணம் பல பேசி மாசு அறு சீர்மை இன்றி அநாயமே அந்தணம் அருகந்தணம் அது புத்தணம் அது சித்தண சிந்தணர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3218 மேல் எனக்கு எதிர் இல்லை என்ற அரக்கனார் மிகை செற்ற தீ போலியை பணியக்கிலாது ஒரு பொய்த்தவம் கொடு குண்டிகை பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் சீலிகட்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3219 பூமகற்கும் அரிக்கும் ஓர்வு அரு புண்ணியன் அடி போற்றிலார் சாம் அவத்தையினார்கள் போல் தலையை பறித்து ஒரு பொய்த்தவம் வேம் அவத்தை செலுத்தி மெய் பொடி அட்டி வாய் சகதிக்கு நேர் ஆம் அவர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3220 தங்களுக்கும் அ சாக்கியர்க்கும் தரிப்பு ஒணாத நல் சேவடி எங்கள் நாயகன் ஏத்து ஒழிந்து இடுக்கே மடுத்து ஒரு பொய் தவம் பொங்கு நூல் வழி அன்றியே புலவோர்களை பழிக்கும் பொலா அங்கதர்க்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் அரன் நிற்கவே மேல் #3221 எக்கர் ஆம் அமண் கையருக்கு எளியேன்அலேன் திரு ஆலவாய் சொக்கன் என் உள் இருக்கவே துளங்கும் முடி தென்னன் முன் இவை தக்க சீர் புகலிக்கு மன் தமிழ் நாதன் ஞானசம்பந்தன் வாய் ஒக்கவே உரைசெய்த பத்தும் உரைப்பவர்க்கு இடர் இல்லையே மேல் 40. பொது : பண் - கொல்லி - தனித்திருவிருக்குக்குறள் #3222 கல்லால் நீழல் அல்லா தேவை நல்லார் பேணார் அல்லோம் நாமே மேல் #3223 கொன்றை சூடி நின்ற தேவை அன்றி ஒன்றும் நன்று இலோமே மேல் #3224 கல்லா நெஞ்சின் நில்லான் ஈசன் சொல்லாதாரோடு அல்லோம் நாமே மேல் #3225 கூற்று உதைத்த நீற்றினானை போற்றுவார்கள் தோற்றினாரே மேல் #3226 காட்டுள் ஆடும் பாட்டுளானை நாட்டுளாரும் தேட்டுளாரே மேல் #3227 தக்கன் வேள்வி பொக்கம் தீர்த்த மிக்க தேவர் பக்கத்தோமே மேல் #3228 பெண்ஆண் ஆய விண்ணோர்_கோவை நண்ணாதாரை எண்ணோம் நாமே மேல் #3229 தூர்த்தன் வீரம் தீர்த்த கோவை ஆத்தம் ஆக ஏத்தினோமே மேல் #3230 பூவினானும் தாவினானும் நாவினாலும் ஓவினாரே மேல் #3231 மொட்டு அமணர் கட்டர் தேரர் பிட்டர் சொல்லை விட்டு உளோமே மேல் #3232 அம் தண் காழி பந்தன் சொல்லை சிந்தைசெய்வோர் உய்ந்து உளோரே மேல் 41. திருக்கச்சியேகம்பம் : பண் - கொல்லி - திருவிருக்குக்குறள் #3233 கரு ஆர் கச்சி திரு ஏகம்பத்து ஒருவா என்ன மருவா வினையே மேல் #3234 மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் விதியால் ஏத்த பதி ஆவாரே மேல் #3235 கலி ஆர் கச்சி மலி ஏகம்பம் பலியால் போற்ற நலியா வினையே மேல் #3236 வரம் ஆர் கச்சி புரம் ஏகம்பம் பரவா ஏத்த விரவா வினையே மேல் #3237 படம் ஆர் கச்சி இடம் ஏகம்பத்து உடையாய் என்ன அடையா வினையே மேல் #3238 நலம் ஆர் கச்சி நிலவு ஏகம்பம் குலவா ஏத்த கலவா வினையே மேல் #3239 கரியின் உரியன் திரு ஏகம்பன் பெரிய புரம் மூன்று எரிசெய்தானே மேல் #3240 இலங்கை அரசை துலங்க ஊன்றும் நலம் கொள் கம்பன் இலங்கு சரணே மேல் #3241 மறையோன் அரியும் அறியா அனலன் நெறி ஏகம்பம் குறியால் தொழுமே மேல் #3242 பறியா தேரர் நெறி இல் கச்சி செறி கொள் கம்பன் குறுகுவோமே மேல் #3243 கொச்சை வேந்தன் கச்சி கம்பம் மெச்சும் சொல்லை நச்சும் புகழே மேல் 42. திருசிற்றேமம் : பண் - கொல்லிக்கௌவாணம் #3244 நிறை வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை குறை வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் சிறை வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் இறைவன் என்றே உலகு எலாம் ஏத்த நின்ற பெருமானே மேல் #3245 மாக திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை பாக திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பண்டங்கன் மேகத்து ஆடு சோலை சூழ் மிடை சிற்றேமம் மேவினான் ஆகத்து ஏர் கொள் ஆமையை பூண்ட அண்ணல் அல்லனே மேல் #3246 நெடு வெண் திங்கள் வாள் முக மாதர் பாட நீள் சடை கொடு வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் படு வண்டு யாழ்செய் பைம் பொழில் பழனம் சூழ் சிற்றேமத்தான் கடு வெம் கூற்றை காலினால் காய்ந்த கடவுள் அல்லனே மேல் #3247 கதிர் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட கண்நுதல் முதிர் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய முக்கணன் எதிர் ஆர் புனல் ஆம் புன் சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் அதிர் ஆர் பைம் கண் ஏறு உடை ஆதிமூர்த்தி அல்லனே மேல் #3248 வான் ஆர் திங்கள் வாள் முக மாதர் பாட வார் சடை கூன் ஆர் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் தேன் ஆர் வண்டு பண்செயும் திரு ஆரும் சிற்றேமத்தான் மான் ஆர் விழி நல் மாதொடும் மகிழ்ந்த மைந்தன் அல்லனே மேல் #3249 பனி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட பல் சடை குனி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய கொள்கையான் தனி வெள் விடையன் புள் இன தாமம் சூழ் சிற்றேமத்தான் முனிவும் மூப்பும் நீங்கிய முக்கண் மூர்த்தி அல்லனே மேல் #3250 கிளரும் திங்கள் வாள் முக மாதர் பாட கேடு இலா வளரும் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய மா தவன் தளிரும் கொம்பும் மதுவும் ஆர் தாமம் சூழ் சிற்றேமத்தான் ஒளிரும் வெண் நூல் மார்பன் என் உள்ளத்து உள்ளான் அல்லனே மேல் #3251 சூழ்ந்த திங்கள் வாள் முக மாதர் பாட சூழ் சடை போழ்ந்த திங்கள் சூடி ஓர் ஆடல் மேய புண்ணியன் தாழ்ந்த வயல் சிற்றேமத்தான் தட வரையை தன் தாளினால் ஆழ்ந்த அரக்கன் ஒல்க அன்று அடர்த்த அண்ணல் அல்லனே மேல் #3252 தணி வெண் திங்கள் வாள் முக மாதர் பாட தாழ் சடை துணி வெண் திங்கள் சூடி ஓர் ஆடல் மேய தொன்மையான் அணி வண்ண சிற்றேமத்தான் அலர் மேல் அந்தணாளனும் மணி_வண்ணனும் முன் காண்கிலா மழுவாள்_செல்வன் அல்லனே மேல் #3253 வெள்ளை திங்கள் வாள் முக மாதர் பாட வீழ் சடை பிள்ளை திங்கள் சூடி ஓர் ஆடல் மேய பிஞ்ஞகன் உள்ளத்து ஆர் சிற்றேமத்தான் உரு ஆர் புத்தர் ஒப்பு இலா கள்ளத்தாரை தான் ஆக்கி உள் கரந்து வைத்தான் அல்லனே மேல் #3254 கல்லில் ஓதம் மல்கு தண் கானல் சூழ்ந்த காழியான் நல்ல ஆய இன் தமிழ் நவிலும் ஞானசம்பந்தன் செல்வன் ஊர் சிற்றேமத்தை பாடல் சீர் ஆர் நாவினால் வல்லார் ஆகி வாழ்த்துவார் அல்லல் இன்றி வாழ்வரே மேல் 43. சீகாழி : பண் - கௌசிகம் #3255 சந்தம் ஆர் முலையாள் தன கூறனார் வெந்த வெண்பொடி ஆடிய மெய்யனார் கந்தம் ஆர் பொழில் சூழ்தரு காழியுள் எந்தையார் அடி என் மனத்து உள்ளவே மேல் #3256 மான் இடம் உடையார் வளர் செம் சடை தேன் இடம் கொளும் கொன்றை அம் தாரினார் கான் இடம் கொளும் தண் வயல் காழியார் ஊன் இடம் கொண்டு என் உச்சியில் நிற்பரே மேல் #3257 மை கொள் கண்டத்தர் வான் மதி சென்னியர் பை கொள் வாள் அரவு ஆட்டும் படிறனார் கை கொள் மான் மறியார் கடல் காழியுள் ஐயன் அந்தணர் போற்ற இருக்கமே மேல் #3258 புற்றின் நாகமும் பூளையும் வன்னியும் கற்றை வார் சடை வைத்தவர் காழியுள் பொற்றொடியோடு இருந்தவர் பொன் கழல் உற்றபோது உடன் ஏத்தி உணருமே மேல் #3259 நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை மெலியும் ஆறு அது வேண்டுதிரேல் வெய்ய கலி கடிந்த கையார் கடல் காழியுள் அலை கொள் செம் சடையார் அடி போற்றுமே மேல் #3260 பெண் ஒர்கூறினர் பேயுடன் ஆடுவர் பண்ணும் ஏத்து இசை பாடிய வேடத்தர் கண்ணும் மூன்று உடையார் கடல் காழியுள் அண்ணல் ஆய அடிகள் சரிதையே மேல் #3261 பற்றும் மானும் மழுவும் அழகுற முற்றும் ஊர் திரிந்து பலி முன்னுவர் கற்ற மா நல் மறையவர் காழியுள் பெற்றம் ஏறு அது உகந்தார் பெருமையே மேல் #3262 எடுத்த வல் அரக்கன் முடி தோள் இற அடர்த்து உகந்து அருள்செய்தவர் காழியுள் கொடி தயங்கு நன் கோயிலுள் இன்புற இடத்து மாதொடு தாமும் இருப்பரே மேல் #3263 காலன்-தன் உயிர் வீட்டு கழல் அடி மாலும் நான்முகன்தானும் வனப்புற ஓலம் இட்டு முன் தேடி உணர்கிலா சீலம் கொண்டவன் ஊர் திகழ் காழியே மேல் #3264 உருவம் நீத்தவர்தாமும் உறு துவர் தரு வல் ஆடையினாரும் தகவு இலர் கருமம் வேண்டுதிரேல் கடல் காழியுள் ஒருவன் சேவடியே அடைந்து உய்ம்-மினே மேல் #3265 கானல் வந்து உலவும் கடல் காழியுள் ஈனமில்லி இணையடி ஏத்திடும் ஞானசம்பந்தன் சொல்லிய நல் தமிழ் மானம் ஆக்கும் மகிழ்ந்து உரைசெய்யவே மேல் 44. திருக்கழிப்பாலை : பண் - கௌசிகம் #3266 வெந்த குங்கிலிய புகை விம்மவே கந்தம் நின்று உலவும் கழிப்பாலையார் அந்தமும் அளவும் அறியாதது ஓர் சந்தமால் அவர் மேவிய சந்தமே மேல் #3267 வான் இலங்க விளங்கும் இளம் பிறை தான் அலங்கல் உகந்த தலைவனார் கான் இலங்க வரும் கழிப்பாலையார் மான் நலம் மட நோக்கு உடையாளொடே மேல் #3268 கொடி கொள் ஏற்றினர் கூற்றை உதைத்தனர் பொடி கொள் மார்பினில் பூண்டது ஓர் ஆமையர் கடி கொள் பூம் பொழில் சூழ் கழிப்பாலையுள் அடிகள் செய்வன ஆர்க்கு அறிவு ஒண்ணுமே மேல் #3269 பண் நலம் பட வண்டு அறை கொன்றையின் தண் அலங்கல் உகந்த தலைவனார் கண் நலம் கவரும் கழிப்பாலையுள் அண்ணல் எம் கடவுள் அவன் அல்லனே மேல் #3270 ஏரின் ஆர் உலகத்து இமையோரொடும் பாரினார் உடனே பரவப்படும் காரின் ஆர் பொழில் சூழ் கழிப்பாலை எம் சீரினார் கழலே சிந்தைசெய்ம்-மினே மேல் #3271 துள்ளும் மான் மறி அம் கையில் ஏந்தி ஊர் கொள்வனார் இடு வெண் தலையில் பலி கள்வனார் உறையும் கழிப்பாலையை உள்ளுவார் வினை ஆயின ஓயுமே மேல் #3272 மண்ணின் ஆர் மலி செல்வமும் வானமும் எண்ணி நீர் இனிது ஏத்து-மின் பாகமும் பெண்ணினார் பிறை நெற்றியொடு உற்ற முக் கண்ணினார் உறையும் கழிப்பாலையே மேல் #3273 இலங்கை_மன்னனை ஈர்_ஐந்து இரட்டி தோள் துலங்க ஊன்றிய தூ மழுவாளினார் கலங்கள் வந்து உலவும் கழிப்பாலையை வலம்கொள்வார் வினை ஆயின மாயுமே மேல் #3274 ஆட்சியால் அலரானொடு மாலுமாய் தாட்சியால் அறியாது தளர்ந்தனர் காட்சியால் அறியான் கழிப்பாலையை மாட்சியால் தொழுவார் வினை மாயுமே மேல் #3275 செய்ய நுண் துவர் ஆடையினாரொடு மெய்யின் மாசு பிறக்கிய வீறு இலா கையர் கேண்மை எனோ கழிப்பாலை எம் ஐயன் சேவடியே அடைந்து உய்ம்-மினே மேல் #3276 அம் தண் காழி அரு மறை ஞானசம் பந்தன் பாய் புனல் சூழ் கழிப்பாலையை சிந்தையால் சொன்ன செந்தமிழ் வல்லவர் முந்தி வான்_உலகு ஆடல் முறைமையே மேல் 45. திருஆரூர் : பண் - கௌசிகம் #3277 அந்தமாய் உலகு ஆதியும் ஆயினான் வெந்த வெண்பொடி பூசிய வேதியன் சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம் எந்தைதான் எனை ஏன்றுகொளும்-கொலோ மேல் #3278 கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த ஒருத்தனே உமையாள் ஒருகூறனே திருத்தனே திரு ஆரூர் எம் தீ வண்ண அருத்த என் எனை அஞ்சல் என்னாததே மேல் #3279 மறையன் மா முனிவன் மருவார் புரம் இறையின் மாத்திரையில் எரியூட்டினான் சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் எம் இறைவன்தான் எனை ஏன்றுகொளும்-கொலோ மேல் #3280 பல் இல் ஓடு கை ஏந்தி பலி திரிந்து எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான் செல்வம் மல்கிய தென் திரு ஆரூரான் அல்லல் தீர்த்து எனை அஞ்சல் எனும்-கொலோ மேல் #3281 குருந்தம் ஏறி கொடிவிடு மாதவி விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான் வருந்தும்போது எனை வாடல் எனும்-கொலோ மேல் #3282 வார் கொள் மென்முலையாள் ஒருபாகமா ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன் சீர் கொள் மாடங்கள் சூழ் திரு ஆரூரான் ஆர் கணா எனை அஞ்சல் எனாததே மேல் #3283 வளை கை மங்கை நல்லாளை ஓர்பாகமா துளை கை யானை துயர் பட போர்த்தவன் திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான் இளைக்கும்போது எனை ஏன்றுகொளும்-கொலோ மேல் #3284 இலங்கை_மன்னன் இருபது தோள் இற கலங்க கால்விரலால் கடை கண்டவன் வலம்கொள் மா மதில் சூழ் திரு ஆரூரான் அலங்கல் தந்து எனை அஞ்சல் எனும்-கொலோ மேல் #3285 நெடிய மாலும் பிரமனும் நேர்கிலா படியவன் பனி மா மதி சென்னியான் செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம் அடிகள்தான் எனை அஞ்சல் எனும்-கொலோ மேல் #3286 மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள் காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல் தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம் ஈசன்தான் எனை ஏன்று கொளும்-கொலோ மேல் #3287 வன்னி கொன்றை மதியொடு கூவிளம் சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய் பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே மேல் 46. திருக்கருகாவூர் : பண் - கௌசிகம் #3288 முத்து இலங்கு முறுவல் உமை அஞ்சவே மத்த யானை மறுக உரி வாங்கி அ கத்தை போர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3289 விமுத வல்ல சடையான் வினை உள்குவார்க்கு அமுத நீழல் அகலாதது ஓர் செல்வம் ஆம் கம் முதம் முல்லை கமழ்கின்ற கருகாவூர் அமுதர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3290 பழக வல்ல சிறுத்தொண்டர் பா இன்னிசை குழகர் என்று குழையா அழையா வரும் கழல் கொள் பாடல் உடையார் கருகாவூர் எம் அழகர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3291 பொடி மெய் பூசி மலர் கொய்து புணர்ந்து உடன் செடியர் அல்லா உள்ளம் நல்கிய செல்வத்தர் கடி கொள் முல்லை கமழும் கருகாவூர் எம் அடிகள் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3292 மையல் இன்றி மலர் கொய்து வணங்கிட செய்ய உள்ளம் மிக நல்கிய செல்வத்தர் கைதல் முல்லை கமழும் கருகாவூர் எம் ஐயர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3293 மாசு இல் தொண்டர் மலர் கொண்டு வணங்கிட ஆசை ஆர அருள் நல்கிய செல்வத்தர் காய் சினத்த விடையார் கருகாவூர் எம் ஈசர் வண்ணம் எரியும் எரி வண்ணமே மேல் #3294 வெந்த நீறு மெய் பூசிய வேதியன் சிந்தை நின்று அருள் நல்கிய செல்வத்தன் கந்தம் மௌவல் கமழும் கருகாவூர் எம் எந்தை வண்ணம் எரியும் எரி வண்ணமே மேல் #3295 பண்ணின் நேர் மொழியாளை ஓர்பாகனார் மண்ணு கோலம் உடைய மலரானொடும் கண்ணன் நேட அரியார் கருகாவூர் எம் அண்ணல் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3296 போர்த்த மெய்யினர் போது உழல்வார்கள் சொல் தீர்த்தம் என்று தெளிவீர் தெளியேன்-மின் கார் தண் முல்லை கமழும் கருகாவூர் எம் ஆத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே மேல் #3297 கலவ மஞ்ஞை உலவும் கருகாவூர் நிலவு பாடல் உடையான்-தன நீள் கழல் குலவு ஞானசம்பந்தன செந்தமிழ் சொல வலார் அவர் தொல்வினை தீருமே மேல் 47. திருஆலவாய் : பண் - கௌசிகம் #3298 காட்டு மா அது உரித்து உரி போர்த்து உடல் நாட்டம் மூன்று உடையாய் உரைசெய்வன் நான் வேட்டு வேள்வி செய்யா அமண் கையரை ஓட்டி வாதுசெய திருவுள்ளமே மேல் #3299 மத்த யானையின் ஈர் உரி மூடிய அத்தனே அணி ஆலவாயாய் பணி பொய்த்த வன் தவ வேடத்தர் ஆம் சமண் சித்தரை அழிக்க திருவுள்ளமே மேல் #3300 மண்ணகத்திலும் வானிலும் எங்கும் ஆம் திண்ணக திரு ஆலவாயாய் அருள் பெண் அகத்து எழில் சாக்கிய பேய் அமண் தெண்ணர் கற்பு அழிக்க திருவுள்ளமே மேல் #3301 ஓதி ஓத்து அறியா அமண் ஆதரை வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே ஆதியே திரு ஆலவாய் அண்ணலே நீதி ஆக நினைந்து அருள்செய்திடே மேல் #3302 வையம் ஆர் புகழாய் அடியார் தொழும் செய்கை ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் கையில் உண்டு உழலும் அமண் கையரை பைய வாதுசெய திருவுள்ளமே மேல் #3303 நாறு சேர் வயல் தண்டலை மிண்டிய தேறல் ஆர் திரு ஆலவாயாய் செப்பாய் வீறு இலா தவ மோட்டு அமண் வேடரை சீறி வாதுசெய திருவுள்ளமே மேல் #3304 பண்டு அடி தவத்தார் பயில்வால் தொழும் தொண்டருக்கு எளியாய் திரு ஆலவாய் அண்டனே அமண் கையரை வாதினில் செண்டு அடித்து உளற திருவுள்ளமே மேல் #3305 அரக்கன்தான் கிரி ஏற்றவன்-தன் முடி செருக்கினை தவிர்த்தாய் திரு ஆலவாய் பரக்கும் மாண்பு உடையாய் அமண் பாவரை கரக்க வாதுசெய திருவுள்ளமே மேல் #3306 மாலும் நான்முகனும் அறியா நெறி ஆலவாய் உறையும் அண்ணலே பணி மேலை_வீடு உணரா வெற்று அரையரை சால வாதுசெய திருவுள்ளமே மேல் #3307 கழி கரை படு மீன் கவர்வார் அமண் அழிப்பரை அழிக்க திருவுள்ளமே தெழிக்கும் பூம் புனல் சூழ் திரு ஆலவாய் மழு படை உடை மைந்தனே நல்கிடே மேல் #3308 செந்து எனா முரலும் திரு ஆலவாய் மைந்தனே என்று வல் அமண் ஆசு அற சந்தம் ஆர் தமிழ் கேட்ட மெய் ஞானசம் பந்தன் சொல் பகரும் பழி நீங்கவே மேல் 48. திருமழபாடி : பண் - கௌசிகம் #3309 அங்கை ஆர் அழலன் அழகு ஆர் சடை கங்கையான் கடவுள் இடம் மேவிய மங்கையான் உறையும் மழபாடியை தம் கையால் தொழுவார் தகவாளரே மேல் #3310 விதியும் ஆம் விளைவு ஆம் ஒளி ஆர்ந்தது ஓர் கதியும் ஆம் கசிவு ஆம் வசி ஆற்றம் ஆம் மதியும் ஆம் வலி ஆம் மழபாடியுள் நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே மேல் #3311 முழவினான் முதுகாடு உறை பேய் கண குழுவினான் குலவும் கையில் ஏந்திய மழுவினான் உறையும் மழபாடியை தொழு-மின் நும் துயர் ஆனவை தீரவே மேல் #3312 கலையினான் மறையான் கதி ஆகிய மலையினான் மருவார் புரம் மூன்று எய்த சிலையினான் சேர் திரு மழபாடியை தலையினால் வணங்க தவம் ஆகுமே மேல் #3313 நல்வினை பயன் நான்மறையின் பொருள் கல்வி ஆய கருத்தன் உருத்திரன் செல்வன் மேய திரு மழபாடியை புல்கி ஏத்துமது புகழ் ஆகுமே மேல் #3314 நீடினார் உலகுக்கு உயிராய் நின்றான் ஆடினான் எரிகானிடை மா நடம் பாடினார் இசை மா மழபாடியை நாடினார்க்கு இல்லை நல்குரவு ஆனவே மேல் #3315 மின்னின் ஆர் இடையாள் ஒரு பாகமாய் மன்னினான் உறை மா மழபாடியை பன்னினார் இசையால் வழிபாடுசெய்து உன்னினார் வினை ஆயின ஓயுமே மேல் #3316 தென்_இலங்கையர்_மன்னன் செழு வரை தன்னில் அங்க அடர்த்து அருள்செய்தவன் மன் இலங்கிய மா மழபாடியை உன்னில் அங்க உறு பிணி இல்லையே மேல் #3317 திருவின் நாயகனும் செழும் தாமரை மருவினானும் தொழ தழல் மாண்பு அமர் உருவினான் உறையும் மழபாடியை பரவினார் வினைப்பற்று அறுப்பார்களே மேல் #3318 நலியும் நன்று அறியா சமண் சாக்கியர் வலிய சொல்லினும் மா மழபாடியுள் ஒலிசெய் வார் கழலான் திறம் உள்கவே மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே மேல் #3319 மந்தம் உந்து பொழில் மழபாடியுள் எந்தை சந்தம் இனிது உகந்து ஏத்துவான் கந்தம் ஆர் கடல் காழியுள் ஞானசம் பந்தன் மாலை வல்லார்க்கு இல்லை பாவமே மேல் 49. பொது : பண் - கௌசிகம் - நமச்சிவாயத் திருப்பதிகம் #3320 காதல் ஆகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார்-தமை நன்நெறிக்கு உய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே மேல் #3321 நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் வம்பு நாள் மலர் வார் மது ஒப்பது செம்பொன் ஆர் திலகம் உலகுக்கு எலாம் நம்பன் நாமம் நமச்சிவாயவே மேல் #3322 நெக்கு உள் ஆர்வம் மிக பெருகி நினைந்து அக்கு மாலை கொடு அங்கையில் எண்ணுவார் தக்க வானவரா தகுவிப்பது நக்கன் நாமம் நமச்சிவாயவே மேல் #3323 இயமன் தூதரும் அஞ்சுவர் இன்சொலால் நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால் நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி நயனன் நாமம் நமச்சிவாயவே மேல் #3324 கொல்வாரேனும் குணம் பல நன்மைகள் இல்லாரேனும் இயம்புவராயிடின் எல்லா தீங்கையும் நீங்குவர் என்பரால் நல்லான் நாமம் நமச்சிவாயவே மேல் #3325 மந்தரம் அன பாவங்கள் மேவிய பந்தனையவர் தாமும் பகர்வரேல் சிந்தும் வல்வினை செல்வமும் மல்குமால் நந்தி நாமம் நமச்சிவாயவே மேல் #3326 நரகம் ஏழ் புக நாடினராயினும் உரைசெய் வாயினராயின் உருத்திரர் விரவியே புகுவித்திடும் என்பரால் வரதன் நாமம் நமச்சிவாயவே மேல் #3327 இலங்கை_மன்னன் எடுத்த அடுக்கல் மேல் தலம் கொள் கால் விரல் சங்கரன் ஊன்றலும் மலங்கி வாய்மொழி செய்தவன் உய் வகை நலம் கொள் நாமம் நமச்சிவாயவே மேல் #3328 போதன் போது அன கண்ணனும் அண்ணல்-தன் பாதம்தான் முடி நேடிய பண்பராய் ஆதும் காண்பு அரிது ஆகி அலந்தவர் ஓதும் நாமம் நமச்சிவாயவே மேல் #3329 கஞ்சி மண்டையர் கையில் உண் கையர்கள் வெம் சொல் மிண்டர் விரவிலர் என்பரால் விஞ்சை அண்டர்கள் வேண்ட அமுதுசெய் நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே மேல் #3330 நந்தி நாமம் நமச்சிவாய எனும் சந்தையால் தமிழ் ஞானசம்பந்தன் சொல் சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லார் எலாம் பந்தபாசம் அறுக்க வல்லார்களே மேல் 50. திருத்தண்டலைநீணெறி : பண் - கௌசிகம் #3331 விரும்பும் திங்களும் கங்கையும் விம்மவே சுரும்பும் தும்பியும் சூழ் சடையார்க்கு இடம் கரும்பும் செந்நெலும் காய் கமுகின் வளம் நெருங்கும் தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3332 இகழும் காலன் இதயத்தும் என்னுளும் திகழும் சேவடியான் திருந்தும் இடம் புகழும் பூமகளும் புணர் பூசுரர் நிகழும் தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3333 பரந்த நீல படர் எரி வல் விடம் கரந்த கண்டத்தினான் கருதும் இடம் சுரந்த மேதி துறை படிந்து ஓடையில் நிரந்த தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3334 தவந்த என்பும் தவள பொடியுமே உவந்த மேனியினான் உறையும் இடம் சிவந்த பொன்னும் செழும் தரளங்களும் நிவந்த தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3335 இலங்கை_வேந்தன் இருபது தோள் இற விலங்கலில் அடர்த்தான் விரும்பும் இடம் சலம் கொள் இப்பி தரளமும் சங்கமும் நிலம் கொள் தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3336 கரு வரு உந்தியின் நான்முகன் கண்ணன் என்று இருவரும் தெரியா ஒருவன் இடம் செரு வருந்திய செம்பியன் கோச்செங்கண் நிருபர் தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3337 கலவு சீவரத்தார் கையில் உண்பவர் குலவமாட்டா குழகன் உறைவிடம் சுலவு மா மதிலும் சுதை மாடமும் நிலவு தண்டலைநீணெறி காண்-மினே மேல் #3338 நீற்றர் தண்டலைநீணெறி நாதனை தோற்றும் மேன்மையர் தோணிபுரத்து இறை சாற்று ஞானசம்பந்தன் தமிழ் வலார் மாற்று இல் செல்வர் மறப்பர் பிறப்பையே மேல் 51. திருஆலவாய் : பண் - கௌசிகம் #3339 செய்யனே திரு ஆலவாய் மேவிய ஐயனே அஞ்சல் என்று அருள்செய் எனை பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பையவே சென்று பாண்டியற்கு ஆகவே மேல் #3340 சித்தனே திரு ஆலவாய் மேவிய அத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை எத்தர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பத்தி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3341 தக்கன் வேள்வி தகர்த்து அருள் ஆலவாய் சொக்கனே அஞ்சல் என்று அருள்செய் எனை எக்கர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பக்கமே சென்று பாண்டியற்கு ஆகவே மேல் #3342 சிட்டனே திரு ஆலவாய் மேவிய அட்டமூர்த்தியனே அஞ்சல் என்று அருள் துட்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பட்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3343 நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் அண்ணலே அஞ்சல் என்று அருள்செய் எனை எண் இலா அமணர் கொளுவும் சுடர் பண் இயல் தமிழ் பாண்டியற்கு ஆகவே மேல் #3344 தஞ்சம் என்று உன் சரண் புகுந்தேனையும் அஞ்சல் என்று அருள் ஆலவாய் அண்ணலே வஞ்சம் செய்து அமணர் கொளுவும் சுடர் பஞ்சவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3345 செம் கண் வெள் விடையாய் திரு ஆலவாய் அங்கணா அஞ்சல் என்று அருள்செய் எனை கங்குலார் அமண் கையர் இடும் கனல் பங்கம் இல் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3346 தூர்த்தன் வீரம் தொலைந்து அருள் ஆலவாய் ஆத்தனே அஞ்சல் என்று அருள்செய் எனை ஏத்து இலா அமணர் கொளுவும் சுடர் பார்த்திவன் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3347 தாவினான் அயன்தான் அறியா வகை மேவினாய் திரு ஆலவாயாய் அருள் தூ இலா அமணர் கொளுவும் சுடர் பாவினான் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3348 எண் திசைக்கு எழில் ஆலவாய் மேவிய அண்டனே அஞ்சல் என்று அருள்செய் எனை குண்டர் ஆம் அமணர் கொளுவும் சுடர் பண்டி மன் தென்னன் பாண்டியற்கு ஆகவே மேல் #3349 அப்பன் ஆலவாய் ஆதி அருளினால் வெப்பம் தென்னவன் மேல் உற மேதினிக்கு ஒப்ப ஞானசம்பந்தன் உரை பத்தும் செப்ப வல்லவர் தீது இலா செல்வரே மேல் 52. திருஆலவாய் - திருவிராகம் : பண் - கௌசிகம் #3350 வீடு அலால் அவாய்இலாஅய் விழுமியார்கள் நின் கழல் பாடல் ஆலவாய் இலாய் பரவ நின்ற பண்பனே காடு அலால் அவாய்இலாய் கபாலி நீள் கடி மதில் கூடல் ஆலவாயிலாய் குலாயது என்ன கொள்கையே மேல் #3351 பட்டு இசைந்த அல்குலாள் பாவையாள் ஒர்பாகமா ஒட்டு இசைந்தது அன்றியும் உச்சியாள் ஒருத்தியா கொட்டு இசைந்த ஆடலாய் கூடல் ஆலவாயிலாய் எட்டு இசைந்த மூர்த்தியாய் இருந்த ஆறு இது என்னையே மேல் #3352 குற்றம் நீ குணங்கள் நீ கூடல் ஆலவாயிலாய் சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்து இலங்கு சோதி நீ கற்ற நூல் கருத்தும் நீ அருத்தம் இன்பம் என்று இவை முற்றும் நீ புகழ்ந்து முன் உரைப்பது என் முகம்மனே மேல் #3353 முதிரும் நீர் சடைமுடி முதல்வ நீ முழங்கு அழல் அதிர வீசி ஆடுவாய் அழகன் நீ புயங்கன் நீ மதுரன் நீ மணாளன் நீ மதுரை ஆலவாயிலாய் சதுரன் நீ சதுர்முகன் கபாலம் ஏந்து சம்புவே மேல் #3354 கோலம் ஆய நீள் மதிள் கூடல் ஆலவாயிலாய் பாலன் ஆய தொண்டு செய்து பண்டும் இன்றும் உன்னையே நீலம் ஆய கண்டனே நின்னை அன்றி நித்தலும் சீலம் ஆய சிந்தையில் தேர்வது இல்லை தேவரே மேல் #3355 பொன் தயங்கு இலங்கு ஒளி நலம் குளிர்ந்த புன் சடை பின் தயங்க ஆடுவாய் பிஞ்ஞகா பிறப்பிலீ கொன்றை அம் முடியினாய் கூடல் ஆலவாயிலாய் நின்று இயங்கி ஆடலே நினைப்பதே நியமமே மேல் #3356 ஆதி அந்தம் ஆயினாய் ஆலவாயில் அண்ணலே சோதி அந்தம் ஆயினாய் சோதியுள் ஒர் சோதியாய் கீதம் வந்த வாய்மையால் கிளர் தருக்கினார்க்கு அல்லால் ஓதி வந்த வாய்மையால் உணர்ந்து உரைக்கல் ஆகுமே மேல் #3357 கறை இலங்கு கண்டனே கருத்து இலா கரும் கடல் துறை இலங்கை மன்னனை தோள் அடர ஊன்றினாய் மறை இலங்கு பாடலாய் மதுரை ஆலவாயிலாய் நிறை இலங்கு நெஞ்சினால் நினைப்பதே நியமமே மேல் #3358 தா வண விடையினாய் தலைமை ஆக நாள்-தொறும் கோவண உடையினாய் கூடல் ஆலவாயிலாய் தீ வணம் மலர் மிசை திசைமுகனும் மாலும் நின் தூ வணம் அளக்கிலார் துளக்கம் எய்துவார்களே மேல் #3359 தேற்றம் இல் வினை தொழில் தேரரும் சமணரும் போற்று இசைத்து நின் கழல் புகழ்ந்து புண்ணியம் கொளார் கூற்று உதைத்த தாளினாய் கூடல் ஆலவாயிலாய் நால் திசைக்கும் மூர்த்தி ஆகி நின்றது என்ன நன்மையே மேல் #3360 போய நீர் வளம் கொளும் பொரு புனல் புகலியான் பாய கேள்வி ஞானசம்பந்தன் நல்ல பண்பினால் ஆய சொல்லின் மாலை கொண்டு ஆலவாயில் அண்ணலை தீய தீர எண்ணுவார்கள் சிந்தை ஆவர் தேவரே மேல் 53. திருஆனைக்கா : திருவிராகம் : பண் - கௌசிகம் #3361 வானை காவல் வெண் மதி மல்கு புல்கு வார் சடை தேனை காவில் இன்மொழி தேவி பாகம் ஆயினான் ஆனைக்காவில் அண்ணலை அபயம் ஆக வாழ்பவர் ஏனை காவல் வேண்டுவார் ஏதும் ஏதம் இல்லையே மேல் #3362 சேறு பட்ட தண் வயல் சென்றுசென்று சேண் உலாவு ஆறு பட்ட நுண் துறை ஆனைக்காவில் அண்ணலார் நீறு பட்ட மேனியார் நிகர் இல் பாதம் ஏத்துவார் வேறுபட்ட சிந்தையார் விண்ணில் எண்ண வல்லரே மேல் #3363 தாரம் ஆய மாதராள் தான் ஒர்பாகம் ஆயினான் ஈரம் ஆய புன் சடை ஏற்ற திங்கள் சூடினான் ஆரம் ஆய மார்பு உடை ஆனைக்காவில் அண்ணலை வாரமாய் வணங்குவார் வல்வினைகள் மாயுமே மேல் #3364 விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை சுண்ண வெண் நீறு ஆடினான் சூலம் ஏந்து கையினான் அண்ணல் கண் ஓர் மூன்றினான் ஆனைக்காவு கைதொழ எண்ணும் வண்ணம் வல்லவர்க்கு ஏதம் ஒன்றும் இல்லையே மேல் #3365 வெய்ய பாவம் கைவிட வேண்டுவீர்கள் ஆண்ட சீர் மை கொள் கண்டன் வெய்ய தீ மாலை ஆடு காதலான் கொய்ய விண்ட நாள் மலர் கொன்றை துன்று சென்னி எம் ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே மேல் #3366 நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் பேணுறாத செல்வமும் பேச நின்ற பெற்றியான் ஆணும் பெண்ணும் ஆகிய ஆனைக்காவில் அண்ணலார் காணும் கண்ணு மூன்று உடை கறை கொள் மிடறன் அல்லனே மேல் #3367 கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் பேரும் ஊரும் செல்வமும் பேச நின்ற பெற்றியான் பாரும் விண்ணும் கைதொழ பாயும் கங்கை செம் சடை ஆரம் நீரொடு ஏந்தினான் ஆனைக்காவு சேர்-மினே மேல் #3368 பொன் அம் மல்கு தாமரை போது தாது வண்டு இனம் அன்னம் மல்கு தண் துறை ஆனைக்காவில் அண்ணலை பன்ன வல்ல நான்மறை பாட வல்ல தன்மையோர் முன்ன வல்லர் மொய் கழல் துன்ன வல்லர் விண்ணையே மேல் #3369 ஊனொடு உண்டல் நன்று என ஊனொடு உண்டல் தீது என ஆன தொண்டர் அன்பினால் பேச நின்ற தன்மையான் வானொடு ஒன்று சூடினான் வாய்மை ஆக மன்னி நின்று ஆனொடு அஞ்சும் ஆடினான் ஆனைக்காவு சேர்-மினே மேல் #3370 கையில் உண்ணும் கையரும் கடுக்கள் தின் கழுக்களும் மெய்யை போர்க்கும் பொய்யரும் வேதநெறியை அறிகிலார் தையல் பாகம் ஆயினான் தழல் அது உருவத்தான் எங்கள் ஐயன் மேய பொய்கை சூழ் ஆனைக்காவு சேர்-மினே மேல் #3371 ஊழிஊழி வையகத்து உயிர்கள் தோற்றுவானொடும் ஆழியானும் காண்கிலா ஆனைக்காவில் அண்ணலை காழி ஞானசம்பந்தன் கருதி சொன்ன பத்து இவை வாழி ஆக கற்பவர் வல்வினைகள் மாயுமே மேல் 54. பொது : பண் - கௌசிகம் - திருப்பாசுரம் #3372 வாழ்க அந்தணர் வானவர் ஆன் இனம் வீழ்க தண் புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயது எல்லாம் அரன் நாமமே சூழ்க வையகமும் துயர் தீர்கவே மேல் #3373 அரிய காட்சியராய் தமது அங்கை சேர் எரியர் ஏறு உகந்து ஏறுவர் கண்டமும் கரியர் காடு உறை வாழ்க்கையராயினும் பெரியர் ஆர் அறிவார் அவர் பெற்றியே மேல் #3374 வெந்த சாம்பல் விரை என பூசியே தந்தையாரொடு தாய் இலர் தம்மையே சிந்தியா எழுவார் வினை தீர்ப்பரால் எந்தையார் அவர் எவ்வகையார்-கொலோ மேல் #3375 ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணமும் ஆதி மாண்பும் கேட்பான் புகில் அளவு இல்லை கிளக்க வேண்டா கோள்பாலனவும் வினையும் குறுகாமை எந்தை தாள்-பால் வணங்கி தலைநின்று இவை கேட்க தக்கார் மேல் #3376 ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதிக்க வேண்டா சுடர்விட்டு உளன் எங்கள் சோதி மா துக்கம் நீங்கலுறுவீர் மனம்பற்றி வாழ்-மின் சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சார்-மின்களே மேல் #3377 ஆடும் எனவும் அரும் கூற்றம் உதைத்து வேதம் பாடும் எனவும் புகழல்லது பாவம் நீங்க கேடும் பிறப்பும் அறுக்கும் என கேட்டிராகில் நாடும் திறத்தார்க்கு அருளல்லது நாட்டல் ஆமே மேல் #3378 கடி சேர்ந்த போது மலர் ஆன கை கொண்டு நல்ல படி சேர்ந்த பால் கொண்டு அங்கு ஆட்டிட தாதை பண்டு முடி சேர்ந்த காலை அற வெட்டிட முக்கண் மூர்த்தி அடி சேர்ந்த வண்ணம் அறிவார் சொல கேட்டும் அன்றே மேல் #3379 வேதமுதல்வன் முதல் ஆக விளங்கி வையம் ஏதப்படாமை உலகத்தவர் ஏத்தல்செய்ய பூத_முதல்வன் முதலே முதலா பொலிந்த சூதன் ஒலி மாலை என்றே கலிக்கோவை சொல்லே மேல் #3380 பார் ஆழிவட்டம் பகையால் நலிந்து ஆட்ட வாடி பேர் ஆழியானது இடர் கண்டு அருள்செய்தல் பேணி நீர் ஆழி விட்டு ஏறி நெஞ்சு இடம் கொண்டவர்க்கு போர் ஆழி ஈந்த புகழும் புகழ் உற்றது அன்றே மேல் #3381 மால் ஆயவனும் மறை வல்லவன் நான்முகனும் பால் ஆய தேவர் பகரில் அமுது ஊட்டல் பேணி கால் ஆய முந்நீர் கடைந்தார்க்கு அரிதாய் எழுந்த ஆலாலம் உண்டு அங்கு அமரர்க்கு அருள் செய்தது ஆமே மேல் #3382 அற்று அன்றி அம் தண் மதுரை தொகை ஆக்கினானும் தெற்று என்ற தெய்வம் தெளியார் கரைக்கு ஓலை தெண் நீர் பற்று இன்றி பாங்கு எதிர்வின் ஊரவும் பண்பு நோக்கில் பெற்றொன்று உயர்த்த பெருமான் பெருமானும் அன்றே மேல் #3383 நல்லார்கள் சேர் புகலி ஞானசம்பந்தன் நல்ல எல்லார்களும் பரவும் ஈசனை ஏத்து பாடல் பல்லார்களும் மதிக்க பாசுரம் சொன்ன பத்தும் வல்லார்கள் வானோர்_உலகு ஆளவும் வல்லர் அன்றே மேல் 55. திருவான்மியூர் : பண் - கௌசிகம் #3384 விரை ஆர் கொன்றையினாய் விடம் உண்ட மிடற்றினனே உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் திரை ஆர் தெண் கடல் சூழ் திரு வான்மியூர் உறையும் அரையா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3385 இடி ஆர் ஏறு உடையாய் இமையோர்-தம் மணி முடியாய் கொடி ஆர் மா மதியோடு அரவம் மலர் கொன்றையினாய் செடி ஆர் மாதவி சூழ் திரு வான்மியூர் உறையும் அடிகேள் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3386 கை ஆர் வெண் மழுவா கனல் போல் திரு மேனியனே மை ஆர் ஒண் கண் நல்லாள் உமையாள் வளர் மார்பினனே செய் ஆர் செங்கயல் பாய் திரு வான்மியூர் உறையும் ஐயா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3387 பொன் போலும் சடை மேல் புனல் தாங்கிய புண்ணியனே மின் போலும் புரி நூல் விடை ஏறிய வேதியனே தென்-பால் வையம் எலாம் திகழும் திரு வான்மி-தன்னில் அன்பா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3388 கண் ஆரும் நுதலாய் கதிர் சூழ் ஒளி மேனியின்-மேல் எண் ஆர் வெண்பொடி நீறு அணிவாய் எழில் ஆர் பொழில் சூழ் திண் ஆர் வண் புரிசை திரு வான்மியூர் உறையும் அண்ணா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3389 நீதி நின்னை அல்லால் நெறியாதும் நினைந்து அறியேன் ஓதி நான்மறைகள் மறையோன் தலை ஒன்றினையும் சேதீ சேதம் இல்லா திரு வான்மியூர் உறையும் ஆதீ உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3390 வான் ஆர் மா மதி சேர் சடையாய் வரை போல வரும் கான் ஆர் ஆனையின் தோல் உரித்தாய் கறை மா மிடற்றாய் தேன் ஆர் சோலைகள் சூழ் திரு வான்மியூர் உறையும் ஆனாய் உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3391 பொறி வாய் நாக_அணையானொடு பூ மிசை மேயவனும் நெறி ஆர் நீள் கழல் மேல் முடி காண்பு அரிது ஆயவனே செறிவு ஆர் மா மதில் சூழ் திரு வான்மியூர் உறையும் அறிவே உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3392 குண்டாடும் சமணர் கொடும் சாக்கியர் என்று இவர்கள் கண்டார் காரணங்கள் கருதாதவர் பேச நின்றாய் திண் தேர் வீதி அது ஆர் திரு வான்மியூர் உறையும் அண்டா உன்னை அல்லால் அடையாது எனது ஆதரவே மேல் #3393 கன்று ஆரும் கமுகின் வயல் சூழ்தரு காழிதனில் நன்று ஆன புகழான் மிகு ஞானசம்பந்தன் உரை சென்றார்-தம் இடர் தீர் திரு வான்மியூர் அதன் மேல் குன்றாது ஏத்த வல்லார் கொடு வல்வினை போய் அறுமே மேல் 56. திருப்பிரமபுரம் : பண் - பஞ்சமம் #3394 இறையவன் ஈசன் எந்தை இமையோர் தொழுது ஏத்த நின்ற கறை அணி கண்டன் வெண் தோடு அணி காதினன் காலத்து அன்று மறைமொழி வாய்மையினான் மலையாளொடு மன்னு சென்னி பிறை அணி செம் சடையான் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3395 சடையினன் சாமவேதன் சரி கோவணவன் மழுவாள் படையினன் பாய் புலி தோல் உடையான் மறை பல் கலை நூல் உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் பெடையொடும் பேணும் இடம் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3396 மாணியை நாடு காலன் உயிர் மாய்தர செற்று காளி காணிய ஆடல் கொண்டான் கலந்து ஊர்வழி சென்று பிச்சை ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும் பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3397 பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட பேர் இடர் தேவர் கணம் பெருமான் இது கா எனலும் ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே பேர் இடம் ஆக கொண்ட பிரமாபுரம் பேணு-மினே மேல் #3398 நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு அச்சம் எழ விடை மேல் அழகு ஆர் மழு ஏந்தி நல்ல இச்சை பகர்ந்து மிக இடு-மின் பலி என்று நாளும் பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3399 பெற்றவன் முப்புரங்கள் பிழையா வண்ணம் வாளியினால் செற்றவன் செம் சடையில் திகழ் கங்கை-தனை தரித்திட்டு ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே பெற்றிமையால் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3400 வேதம் மலிந்த ஒலி விழவின் ஒலி வீணை ஒலி கீதம் மலிந்து உடனே கிளர திகழ் பௌவம் அறை ஓதம் மலிந்து உயர் வான் முகடு ஏற ஒண் மால் வரையான் பேதையொடும் இருந்தான் பிரமாபுரம் பேணு-மினே மேல் #3401 இமையவர் அஞ்சி ஓட எதிர்வார் அவர் தம்மை இன்றி அமைதரு வல் அரக்கன் அடர்த்து மலை அன்று எடுப்ப குமை அது செய்து பாட கொற்ற வாளொடு நாள் கொடுத்திட்டு உமையொடு இருந்த பிரான் பிரமாபுரம் உன்னு-மினே மேல் #3402 ஞாலம் அளித்தவனும் அரியும் அடியோடு முடி காலம் பல செலவும் கண்டிலாமையினால் கதறி ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் ஏல இருந்த பிரான் பிரமாபுரம் ஏத்து-மினே மேல் #3403 துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் அவரவர் தன்மைகள் கண்டு அணுகேன்-மின் அருள் பெறுவீர் கவருறு சிந்தை ஒன்றி கழி காலம் எல்லாம் படைத்த இவர் அவர் என்று இறைஞ்சி பிரமாபுரம் ஏத்து-மினே மேல் #3404 உரைதரு நான்மறையோர் புகழ்ந்து ஏத்த ஒண் மாதினொடும் வரை என வீற்றிருந்தான் மலிகின்ற பிரமபுரத்து அரசினை ஏத்த வல்ல அணி சம்பந்தன் பத்தும் வல்லார் விரைதரு விண்ணுலகம் எதிர் கொள்ள விரும்புவரே மேல் 57. திருவொற்றியூர் : பண் - பஞ்சமம் #3405 விடையவன் விண்ணும் மண்ணும் தொழ நின்றவன் வெண் மழுவாள் படையவன் பாய் புலி தோல் உடை கோவணம் பல் கரந்தை சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்க வெண் தோடு உடையவன் ஊனமில்லி உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3406 பாரிடம் பாணிசெய்ய பறை கண் செறு பல் கண பேய் சீரொடும் பாடல் ஆடல் இலயம் சிதையாத கொள்கை தார் இடும் போர் விடையவன் தலைவன் தலையே கலனா ஊர் இடும் பிச்சை கொள்வான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3407 விளிதரு நீரும் மண்ணும் விசும்போடு அனல் காலும் ஆகி அளி தரு பேரருளான் அரன் ஆகிய ஆதிமூர்த்தி களி தரு வண்டு பண்செய் கமழ் கொன்றையினோடு அணிந்த ஒளி தரு வெண் பிறையான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3408 அரவமே கச்சு அது ஆக அசைத்தான் அலர் கொன்றை அம் தார் விரவி வெண் நூல் கிடந்த விரை ஆர் வரை மார்பன் எந்தை பரவுவார் பாவம் எல்லாம் பறைத்து படர் புன் சடை மேல் உரவு நீர் ஏற்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3409 விலகினார் வெய்ய பாவம் விதியால் அருள்செய்து நல்ல பலகின் ஆர் மொந்தை தாளம் தகுணிச்சமும் பாணியாலே அலகினால் வீசி நீர் கொண்டு அடி மேல் அலர் இட்டு முட்டாது உலகினார் ஏத்த நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3410 கமையொடு நின்ற சீரான் கழலும் சிலம்பும் ஒலிப்ப சுமையொடு மேலும் வைத்தான் விரி கொன்றையும் சோமனையும் அமையொடு நீண்ட திண் தோள் அழகு ஆய பொன் தோடு இலங்க உமையொடும் கூடி நின்றான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3411 நன்றியால் வாழ்வது உள்ளம் உலகுக்கு ஒரு நன்மையாலே கன்றினார் மும்மதிலும் கரு மால் வரையே சிலையா பொன்றினார் வார் சுடலை பொடி நீறு அணிந்தார் அழல் அம்பு ஒன்றினால் எய்த பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3412 பெற்றியால் பித்தன் ஒப்பான் பெருமான் கருமான் உரி தோல் சுற்றியான் சுத்தி சூலம் சுடர் கண் நுதல் மேல் விளங்க தெற்றியான் செற்று அரக்கன் உடலை செழு மால் வரை கீழ் ஒற்றியான் முற்றும் ஆள்வான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3413 திருவின் ஆர் போதினாலும் திருமாலும் ஒர் தெய்வம் முன்னி தெரிவினால் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து பரவினார் பாவம் எல்லாம் பறைய படர் பேரொளியோடு ஒருவனாய் நின்ற பெம்மான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3414 தோகை அம் பீலி கொள்வார் துவர் கூறைகள் போர்த்து உழல்வார் ஆகம செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா கூகை அம் மாக்கள் சொல்லை குறிக்கொள்ளன்-மின் ஏழ் உலகும் ஓகை தந்து ஆள வல்லான் உறையும் இடம் ஒற்றியூரே மேல் #3415 ஒண் பிறை மல்கு சென்னி இறைவன் உறை ஒற்றியூரை சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன பண் புனை பாடல் பத்தும் பரவி பணிந்து ஏத்த வல்லார் விண் புனை மேல்_உலகம் விருப்பு எய்துவர் வீடு எளிதே மேல் 58. திருச்சாத்தமங்கை : பண் - பஞ்சமம் #3416 திரு மலர் கொன்றை மாலை திளைக்கும் மதி சென்னி வைத்தீர் இரு மலர் கண்ணி-தன்னோடு உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே பெரு மலர் சோலை மேகம் உரிஞ்சும் பெரும் சாத்தமங்கை அரு மலர் ஆதிமூர்த்தி அயவந்தி அமர்ந்தவனே மேல் #3417 பொடி-தனை பூசு மார்பில் புரி நூல் ஒரு பால் பொருந்த கொடி அன சாயலாளோடு உடன் ஆவதும் கூடுவதே கடி மணம் மல்கி நாளும் கமழும் பொழில் சாத்தமங்கை அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே மேல் #3418 நூல் நலம் தங்கு மார்பில் நுகர் நீறு அணிந்து ஏறு அது ஏறி மான் அன நோக்கி-தன்னோடு உடன் ஆவதும் மாண்பதுவே தான் நலம் கொண்டு மேகம் தவழும் பொழில் சாத்தமங்கை ஆன் நலம் தோய்ந்த எம்மான் அயவந்தி அமர்ந்தவனே மேல் #3419 மற்ற வில் மால்வரையா மதில் எய்து வெண் நீறு பூசி புற்று அரவு அல்குலாளோடு உடன்ஆவதும் பொற்பதுவே கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் அற்றவர் நாளும் ஏத்த அயவந்தி அமர்ந்தவனே மேல் #3420 வெந்த வெண் நீறு பூசி விடை ஏறிய வேதகீதன் பந்து அணவும் விரலாள் உடன் ஆவதும் பாங்கதுவே சந்தம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை அந்தம் ஆம் ஆதி ஆகி அயவந்தி அமர்ந்தவனே மேல் #3421 வேதமாய் வேள்வி ஆகி விளங்கும் பொருள் வீடு அது ஆகி சோதியாய் மங்கை பாகம் நிலைதான் சொல்லல் ஆவது ஒன்றே சாதியால் மிக்க சீரால் தகுவார் தொழும் சாத்தமங்கை ஆதியாய் நின்ற பெம்மான் அயவந்தி அமர்ந்தவனே மேல் #3422 இமயம் எல்லாம் இரிய மதில் எய்து வெண் நீறு பூசி உமையை ஒர்பாகம் வைத்த நிலைதான் உன்னல் ஆவது ஒன்றே சமயம் ஆறு அங்கம் வேதம் தரித்தார் தொழும் சாத்தமங்கை அமைய வேறு ஓங்கு சீரான் அயவந்தி அமர்ந்தவனே மேல் #3423 பண் உலாம் பாடல் வீணை பயில்வான் ஓர் பரமயோகி விண் உலாம் மால் வரையான்மகள் பாகமும் வேண்டினையே தண் நிலா வெண் மதியம் தவழும் பொழில் சாத்தமங்கை அண்ணலாய் நின்ற எம்மான் அயவந்தி அமர்ந்தவனே மேல் #3424 பேர் எழில் தோள் அரக்கன் வலி செற்றதும் பெண் ஒர்பாகம் ஈர் எழில் கோலம் ஆகி உடன் ஆவதும் ஏற்பது ஒன்றே கார் எழில்_வண்ணனோடு கனகம் அனையானும் காணா ஆர் அழல்_வண்ண மங்கை அயவந்தி அமர்ந்தவனே மேல் #3425 கங்கை ஓர் வார் சடை மேல் அடைய புடையே கமழும் மங்கையோடு ஒன்றி நின்ற மதிதான் சொல்லல் ஆவது ஒன்றே சங்கை இல்லா மறையோர் அவர் தாம் தொழு சாத்தமங்கை அங்கையில் சென்னி வைத்தாய் அயவந்தி அமர்ந்தவனே மேல் #3426 மறையினார் மல்கு காழி தமிழ் ஞானசம்பந்தன் மன்னும் நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் அறையும் ஊர் சாத்தமங்கை அயவந்தி மேல் ஆய்ந்த பத்தும் முறைமையால் ஏத்த வல்லார் இமையோரிலும் முந்துவரே மேல் 59. திருக்குடமூக்கு : பண் - பஞ்சமம் #3427 அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே மர விரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும் குர விரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா இர விரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே மேல் #3428 ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே மேல் #3429 மயில் பெடை புல்கி ஆல மணல் மேல் மட அன்னம் மல்கும் பயில் பெடை வண்டு பண்செய் பழம் காவிரி பைம் பொழில்-வாய் குயில் பெடையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே மேல் #3430 மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ அக்கு அரவு ஆமை ஏன மருப்போடு அவை பூண்டு அழகு ஆர் கொக்கரையோடு பாடல் உடையான் குடமூக்கு இடமா எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே மேல் #3431 வடிவு உடை வாள் தடம் கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தை பொடி அணி மேனி மூட உரி கொண்டவன் புன்சடையான் கொடி நெடு மாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா இடி படு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே மேல் #3432 கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும் குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே மேல் #3433 மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்ய சிலை மலி வெம் கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும் குலை மலி தண் பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா இலை மலி சூலம் இருந்தான் அவன் எம் இறையே மேல் #3434 நெடு முடி பத்து உடைய நிகழ் வாள் அரக்கன் உடலை படும் இடர் கண்டு அயர பரு மால் வரை கீழ் அடர்த்தான் கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே மேல் #3435 ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய நீர் இரி புன் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல கூர் எரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா ஈர் உரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே மேல் #3436 மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர் நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்நலத்தான் கூடிய குன்றம் எல்லாம் உடையான் குடமூக்கு இடமா ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே மேல் #3437 வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான் நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார் விண் புடை மேல்_உலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே மேல் 60. திருவக்கரை : பண் - பஞ்சமம் #3438 கறை அணி மா மிடற்றான் கரி காடு அரங்கா உடையான் பிறை அணி கொன்றையினான் ஒருபாகமும் பெண் அமர்ந்தான் மறையவன்-தன் தலையில் பலி கொள்பவன் வக்கரையில் உறைபவன் எங்கள் பிரான் ஒலி ஆர் கழல் உள்குதுமே மேல் #3439 பாய்ந்தவன் காலனை முன் பணை_தோளி ஒர்பாகம் அதா ஏய்ந்தவன் எண் இறந்த இமையோர்கள் தொழுது இறைஞ்ச வாய்ந்தவன் முப்புரங்கள் எரிசெய்தவன் வக்கரையில் தேய்ந்த இள வெண் பிறை சேர் சடையான் அடி செப்புதுமே மேல் #3440 சந்திரசேகரனே அருளாய் என்று தண் விசும்பில் இந்திரனும் முதலா இமையோர்கள் தொழுது இறைஞ்ச அந்தர மூ எயிலும் அனலாய் விழ ஓர் அம்பினால் மந்தர மேரு வில்லா வளைத்தான் இடம் வக்கரையே மேல் #3441 நெய் அணி சூலமோடு நிறை வெண் மழுவும் அரவும் கை அணி கொள்கையினான் கனல் மேவிய ஆடலினான் மெய் அணி வெண்பொடியான் விரி கோவண ஆடையின் மேல் மை அணி மா மிடற்றான் உறையும் இடம் வக்கரையே மேல் #3442 ஏன வெண் கொம்பினொடும் இள ஆமையும் பூண்டு உகந்து கூன் இள வெண் பிறையும் குளிர் மத்தமும் சூடி நல்ல மான் அன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே மேல் #3443 கார் மலி கொன்றையொடும் கதிர் மத்தமும் வாள் அரவும் நீர் மலியும் சடை மேல் நிரம்பா மதி சூடி நல்ல வார் மலி மென்முலையாளொடும் வக்கரை மேவியவன் பார் மலி வெண் தலையில் பலி கொண்டு உழல் பான்மையனே மேல் #3444 கான் அணவும் மறி மான் ஒரு கையது ஒர் கை மழுவாள் தேன் அணவும் குழலாள் உமை சேர் திரு மேனியினான் வான் அணவும் பொழில் சூழ் திருவக்கரை மேவியவன் ஊன் அணவும் தலையில் பலி கொண்டு உழல் உத்தமனே மேல் #3445 இலங்கையர்_மன்னர் ஆகி எழில் பெற்ற இராவணனை கலங்க ஒர் கால்விரலால் கதிர் போல் முடி பத்து அலற நலம் கெழு சிந்தையனாய் அருள் போற்றலும் நன்கு அளித்த வலம் கெழு மூ இலை வேல் உடையான் இடம் வக்கரையே மேல் #3446 காமனை ஈடு அழித்திட்டு அவன் காதலி சென்று இரப்ப சேமமே உன்றனக்கு என்று அருள்செய்தவன் தேவர்பிரான் சாம வெண் தாமரை மேல் அயனும் தரணி அளந்த வாமனனும் அறியா வகையான் இடம் வக்கரையே மேல் #3447 மூடிய சீவரத்தர் முதிர் பிண்டியர் என்று இவர்கள் தேடிய தேவர்-தம்மால் இறைஞ்சப்படும் தேவர்பிரான் பாடிய நான்மறையன் பலிக்கு என்று பல் வீதி-தொறும் வாடிய வெண் தலை கொண்டு உழல்வான் இடம் வக்கரையே மேல் #3448 தண் புனலும் அரவும் சடை மேல் உடையான் பிறை தோய் வண் பொழில் சூழ்ந்து அழகு ஆர் இறைவன் உறை வக்கரையை சண்பையர்-தம் தலைவன் தமிழ் ஞானசம்பந்தன் சொன்ன பண் புனை பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே மேல் 61. திருவெண்டுறை : பண் - பஞ்சமம் #3449 ஆதியன் ஆதிரையன் அனல் ஆடிய ஆர் அழகன் பாதி ஒர் மாதினொடும் பயிலும் பரமாபரமன் போது இயலும் முடி மேல் புனலோடு அரவம் புனைந்த வேதியன் மாதிமையால் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3450 காலனை ஓர் உதையில் உயிர் வீடுசெய் வார் கழலான் பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடிய பண்டரங்கன் மாலை மதியொடு நீர் அரவம் புனை வார் சடையான் வேல் அன கண்ணியொடும் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3451 படை நவில் வெண் மழுவான் பல பூத படை உடையான் கடை நவில் மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் உடை நவிலும் புலி தோல் உடை ஆடையினான் கடிய விடை நவிலும் கொடியான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3452 பண் அமர் வீணையினான் பரவி பணி தொண்டர்கள்-தம் எண் அமர் சிந்தையினான் இமையோர்க்கும் அறிவு அரியான் பெண் அமர் கூறு உடையான் பிரமன் தலையில் பலியான் விண்ணவர்-தம் பெருமான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3453 பார் இயலும் பலியான் படி யார்க்கும் அறிவு அரியான் சீர் இயலும் மலையாள் ஒருபாகமும் சேர வைத்தான் போர் இயலும் புரம் மூன்று உடன் பொன் மலையே சிலையா வீரியம் நின்று செய்தான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3454 ஊழிகளாய் உலகாய் ஒருவர்க்கும் உணர்வு அரியான் போழ் இள வெண் மதியும் புனலும் அணி புன் சடையான் யாழின் மொழி உமையாள் வெருவ எழில் வெண் மருப்பின் வேழம் உரித்த பிரான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3455 கன்றிய காலனையும் உருள கனல் வாய் அலறி பொன்ற முனிந்த பிரான் பொடி ஆடிய மேனியினான் சென்று இமையோர் பரவும் திகழ் சேவடியான் புலன்கள் வென்றவன் எம் இறைவன் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3456 கரம் இருபத்தினாலும் கடு வெம் சினமாய் எடுத்த சிரம் ஒரு பத்தும் உடை அரக்கன் வலி செற்று உகந்தான் பரவ வல்லார் வினைகள் அறுப்பான் ஒருபாகமும் பெண் விரவிய வேடத்தினான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3457 கோல மலர் அயனும் குளிர் கொண்டல் நிறத்தவனும் சீலம் அறிவு அரிதாய் திகழ்ந்து ஓங்கிய செம் தழலான் மூலம் அது ஆகி நின்றான் முதிர் புன் சடை வெண் பிறையான் வேலை விட மிடற்றான் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3458 நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் பொக்கர்கள் தம் உரைகள் அவை பொய் என எம் இறைவன் திக்கு நிறை புகழ் ஆர்தரு தேவர்பிரான் கனகம் மிக்கு உயர் சோதி அவன் விரும்பும் இடம் வெண்டுறையே மேல் #3459 திண் அமரும் புரிசை திரு வெண்டுறை மேயவனை தண் அமரும் பொழில் சூழ்தரு சண்பையர்-தம் தலைவன் எண் அமர் பல் கலையான் இசை ஞானசம்பந்தன் சொன்ன பண் அமர் பாடல் வல்லார் வினை ஆயின பற்று அறுமே மேல் 62. திருப்பனந்தாள் : பண் - பஞ்சமம் #3460 கண் பொலி நெற்றியினான் திகழ் கையில் ஓர் வெண் மழுவான் பெண் புணர் கூறு உடையான் மிகு பீடு உடை மால் விடையான் விண் பொலி மா மதி சேர்தரு செம் சடை வேதியன் ஊர் தண் பொழில் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3461 விரித்தவன் நான்மறையை மிக்க விண்ணவர் வந்து இறைஞ்ச எரித்தவன் முப்புரங்கள் இயல் ஏழ் உலகில் உயிரும் பிரித்தவன் செம் சடை மேல் நிறை பேர் ஒலி வெள்ளம்-தன்னை தரித்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3462 உடுத்தவன் மான் உரி தோல் கழல் உள்க வல்லார் வினைகள் கெடுத்து அருள்செய்ய வல்லான் கிளர் கீதம் ஓர் நான்மறையான் மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் தடுத்தவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3463 சூழ்தரு வல்வினையும் உடல் தோன்றிய பல் பிணியும் பாழ்பட வேண்டுதிரேல் மிக ஏத்து-மின் பாய் புனலும் போழ் இள வெண் மதியும் அனல் பொங்கு அரவும் புனைந்த தாழ் சடையான் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3464 விடம் படு கண்டத்தினான் இருள் வெள் வளை மங்கையொடும் நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் படம் புரி நாகமொடு திரை பல் மணியும் கொணரும் தடம் புனல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3465 விடை உயர் வெல் கொடியான் அடி விண்ணொடு மண்ணும் எல்லாம் புடைபட ஆட வல்லான் மிகு பூதம் ஆர் பல் படையான் தொடை நவில் கொன்றையொடு வன்னி துன் எருக்கும் அணிந்த சடையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3466 மலையவன் முன் பயந்த மட மாதை ஓர்கூறு உடையான் சிலை மலி வெம் கணையால் புரம் மூன்று அவை செற்று உகந்தான் அலை மலி தண் புனலும் மதி ஆடு அரவும் அணிந்த தலையவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3467 செற்று அரக்கன் வலியை திரு மெல் விரலால் அடர்த்து முற்றும் வெண் நீறு அணிந்த திரு மேனியன் மும்மையினான் புற்று அரவம் புலியின் உரி தோலொடு கோவணமும் தற்றவன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3468 வில் மலை நாண் அரவம் மிகு வெம் கனல் அம்பு அதனால் புன்மை செய் தானவர்-தம் புரம் பொன்றுவித்தான் புனிதன் நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா தன்மையன் ஊர் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3469 ஆதர் சமணரொடும் அடை ஐ துகில் போர்த்து உழலும் நீதர் உரைக்கும் மொழி அவை கொள்ளன்-மின் நின்மலன் ஊர் போது அவிழ் பொய்கை-தனுள் திகழ் புள் இரிய பொழில்-வாய் தாது அவிழும் பனந்தாள் திரு தாடகையீச்சுரமே மேல் #3470 தண் வயல் சூழ் பனந்தாள் திரு தாடகையீச்சுரத்து கண் அயலே பிறையான் அவன்-தன்னை முன் காழியர்_கோன் நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல பண் இயல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே மேல் 63. திருச்செங்காட்டங்குடி : பண் - பஞ்சமம் #3471 பைம் கோட்டு மலர் புன்னை பறவைகாள் பயப்பு ஊர சங்கு ஆட்டம் தவிர்த்து என்னை தவிரா நோய் தந்தானே செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டன் பணி செய்ய வெம் காட்டுள் அனல் ஏந்தி விளையாடும் பெருமானே மேல் #3472 பொன் அம் பூம் கழி கானல் புணர் துணையோடு உடன் வாழும் அன்னங்காள் அன்றில்காள் அகன்றும் போய் வருவீர்காள் கல் நவில் தோள் சிறுத்தொண்டன் கணபதீச்சுரம் மேய இன் அமுதன் இணையடி கீழ் எனது அல்லல் உரையீரே மேல் #3473 குட்டத்தும் குழி கரையும் குளிர் பொய்கை தடத்தகத்தும் இட்டத்தால் இசை தேரும் இரும் சிறகின் மட நாராய் சிட்டன் சீர் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய வட்ட வார் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே மேல் #3474 கான் அருகும் வயல் அருகும் கழி அருகும் கடல் அருகும் மீன் இரிய வரு புனலில் இரை தேர் வண் மட நாராய் தேன் அமர் தார் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்று உரையாயே மேல் #3475 ஆரல் ஆம் சுறவம் மேய்ந்து அகன் கழனி சிறகு உலர்த்தும் பாரல் வாய் சிறு குருகே பயில் தூவி மட நாராய் சீர் உலாம் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய நீர் உலாம் சடையார்க்கு என் நிலைமை சென்று உரையீரே மேல் #3476 குறை கொண்டார் இடர் தீர்த்தல் கடன் அன்றே குளிர் பொய்கை துறை கெண்டை கவர் குருகே துணை பிரியா மட நாராய் கறை_கண்டன் பிறை சென்னி கணபதீச்சுரம் மேய சிறுத்தொண்டன் பெருமான் சீர் அருள் ஒரு நாள் பெறல் ஆமே மேல் #3477 கரு அடிய பசும் கால் வெண் குருகே ஒண் கழி நாராய் ஒரு அடியாள் இரந்தாள் என்று ஒரு நாள் சென்று உரையீரே செரு வடி தோள் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய திருவடி-தன் திருவருளே பெறல் ஆமோ திறத்தவர்க்கே மேல் #3478 கூர் ஆரல் இரை தேர்ந்து குளம் உலவி வயல் வாழும் தாராவே மட நாராய் தமியேற்கு ஒன்று உரையீரே சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பேராளன் பெருமான்-தன் அருள் ஒரு நாள் பெறல் ஆமே மேல் #3479 நற பொலி பூம் கழி கானல் நவில் குருகே உலகு எல்லாம் அற பலி தேர்ந்து உழல்வார்க்கு என் அலர் கோடல் அழகியதே சிறப்பு உலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங்குடி மேய பிறப்பிலி பேர் பிதற்றி நின்று இழக்கோ என் பெரு நலமே மேல் #3480 செம் தண் பூம் புனல் பரந்த செங்காட்டங்குடி மேய வெந்த நீறு அணி மார்பன் சிறுத்தொண்டன் அவன் வேண்ட அம் தண் பூம் கலி காழி அடிகளையே அடி பரவும் சந்தம் கொள் சம்பந்தன் தமிழ் உரைப்போர் தக்கோரே மேல் 64. திருப்பெருவேளூர் : பண் - பஞ்சமம் #3481 அண்ணாவும் கழுக்குன்றும் ஆய மலை அவை வாழ்வார் விண்ணோரும் மண்ணோரும் வியந்து ஏத்த அருள்செய்வார் கண் ஆவார் உலகுக்கு கருத்து ஆனார் புரம் எரித்த பெண் ஆண் ஆம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3482 கரு மானின் உரி உடையர் கரி காடர் இமவானார் மருமானார் இவர் என்றும் மடவாளோடு உடன் ஆவர் பொரு மான விடை ஊர்வது உடையார் வெண்பொடி பூசும் பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே மேல் #3483 குணக்கும் தென் திசை-கண்ணும் குட-பாலும் வடபாலும் கணக்கு என்ன அருள்செய்வார் கழிந்தோர்க்கும் ஒழிந்தோர்க்கும் வணக்கம்செய் மனத்தாராய் வணங்காதார்-தமக்கு என்றும் பிணக்கம்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3484 இறை கண்ட வளையாளோடு இரு கூறாய் ஒருகூறு மறை கண்டத்து இறை நாவர் மதில் எய்த சிலை வலவர் கறை கொண்ட மிடறு உடையர் கனல் கிளரும் சடைமுடி மேல் பிறை கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3485 விழையாதார் விழைவார் போல் விகிர்தங்கள் பல பேசி குழையாதார் குழைவார் போல் குணம் நல்ல பல கூறி அழையாவும் அரற்றாவும் அடி வீழ்வார்-தமக்கு என்றும் பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3486 விரித்தார் நான்மறை பொருளை உமை அஞ்ச விறல் வேழம் உரித்தார் ஆம் உரி போர்த்து மதில் மூன்றும் ஒரு கணையால் எரித்தார் ஆம் இமைப்பு அளவில் இமையோர்கள் தொழுது இறைஞ்ச பெருத்தார் எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3487 மறப்பு இலா அடிமை-கண் மனம் வைப்பார் தமக்கு எல்லாம் சிறப்பு இலார் மதில் எய்த சிலை வல்லார் ஒரு கணையால் இறப்பு இலார் பிணி இல்லார் தமக்கு என்றும் கேடு இலார் பிறப்பு இலா பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3488 எரி ஆர் வேல் கடல் தானை இலங்கை_கோன்-தனை வீழ முரி ஆர்ந்த தடம் தோள்கள் அடர்த்து உகந்த முதலாளர் வரி ஆர் வெம் சிலை பிடித்து மடவாளை ஒருபாகம் பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3489 சேண் இயலும் நெடு மாலும் திசைமுகனும் செரு எய்தி காண் இயல்பை அறிவு இலராய் கனல்_வண்ணர் அடி இணை கீழ் நாணி அவர் தொழுது ஏத்த நாணாமே அருள்செய்து பேணிய எம்பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3490 புற்று ஏறி உணங்குவார் புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் சொல் தேற வேண்டா நீர் தொழு-மின்கள் சுடர் வண்ணம் மல் தேரும் பரிமாவும் மத களிறும் இவை ஒழிய பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே மேல் #3491 பைம்பொன் சீர் மணி வாரி பலவும் சேர் கனி உந்தி அம் பொன் செய் மடவரலார் அணி மல்கு பெருவேளூர் நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான சம்பந்தன் தமிழ் வல்லார்க்கு அருவினை நோய் சாராவே மேல் 65. திருக்கச்சிநெறிக்காரைக்காடு : பண் - பஞ்சமம் #3492 வார் அணவு முலை மங்கை பங்கினராய் அம் கையினில் போர் அணவு மழு ஒன்று அங்கு ஏந்தி வெண்பொடி அணிவர் கார் அணவு மணி மாடம் கடை நவின்ற கலி கச்சி நீர் அணவு மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே மேல் #3493 கார் ஊரும் மணி மிடற்றார் கரி காடர் உடை தலை கொண்டு ஊரூரன் பலிக்கு உழல்வார் உழை மானின் உரி அதளர் தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய் நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே மேல் #3494 கூறு அணிந்தார் கொடி_இடையை குளிர் சடை மேல் இள மதியோடு ஆறு அணிந்தார் ஆடு அரவம் பூண்டு உகந்தார் ஆள் வெள்ளை ஏறு அணிந்தார் கொடி அதன் மேல் என்பு அணிந்தார் வரை மார்பில் நீறு அணிந்தார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3495 பிறை நவின்ற செம் சடைகள் பின் தாழ பூதங்கள் மறை நவின்ற பாடலோடு ஆடலராய் மழு ஏந்தி சிறை நவின்ற வண்டு இனங்கள் தீம் கனி-வாய் தேன் கதுவும் நிறை நவின்ற கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3496 அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் உரைத்த அருளாளர் குன்றாத வெம் சிலையில் கோள் அரவம் நாண் கொளுவி ஒன்றாதார் புரம் மூன்றும் ஓங்கு எரியில் வெந்து அவிய நின்றாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3497 பல் மலர்கள் கொண்டு அடி கீழ் வானோர்கள் பணிந்து இறைஞ்ச நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் வில் மலையில் நாண் கொளுவி வெம் கணையால் எய்து அழித்த நின்மலனார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3498 புற்றிடை வாள் அரவினொடு புனை கொன்றை மத மத்தம் எற்று ஒழியா அலை புனலோடு இள மதியம் ஏந்து சடை பெற்று உடையார் ஒருபாகம் பெண் உடையார் கண் அமரும் நெற்றியினார் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3499 ஏழ்கடல் சூழ் தென்_இலங்கை_கோமானை எழில் வரைவாய் தாழ் விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் நன்மையினார் ஆழ் கிடங்கும் சூழ் வயலும் மதில் புல்கி அழகு அமரும் நீள் மறுகின் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3500 ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் மாண்டார்-தம் எலும்பு அணிவர் வரி அரவோடு எழில் ஆமை பூண்டாரும் ஓர் இருவர் அறியாமை பொங்கு எரியாய் நீண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3501 குண்டாடி சமண்படுவார் கூறைதனை மெய் போர்த்து மிண்டாடி திரிதருவார் உரைப்பனகள் மெய் அல்ல வண்டு ஆரும் குழலாளை வரை ஆகத்து ஒருபாகம் கண்டாரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டாரே மேல் #3502 கண் ஆரும் கலி கச்சி நெறிக்காரைக்காட்டு உறையும் பெண் ஆரும் திரு மேனி பெருமானது அடி வாழ்த்தி தண் ஆரும் பொழில் காழி தமிழ் ஞானசம்பந்தன் பண் ஆரும் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே மேல் 66. திருவேட்டக்குடி : பண் - பஞ்சமம் #3503 வண்டு இரைக்கும் மலர் கொன்றை விரி சடை மேல் வரி அரவம் கண்டு இரைக்கும் பிறை சென்னி காபாலி கனை கழல்கள் தொண்டு இரைத்து தொழுது இறைஞ்ச துளங்கு ஒளி நீர் சுடர் பவளம் தெண் திரைக்கள் கொணர்ந்து எறியும் திரு வேட்டக்குடியாரே மேல் #3504 பாய் திமிலர் வலையோடு மீன் வாரி பயின்று எங்கும் காசினியில் கொணர்ந்து அட்டும் கைதல் சூழ் கழி கானல் போய் இரவில் பேயோடும் புறங்காட்டில் புரிந்து அழகு ஆர் தீ எரி கை மகிழ்ந்தாரும் திரு வேட்டக்குடியாரே மேல் #3505 தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய ஆன் நிரையின் பால் பாத்திரமா ஆட்டுதலும் பரஞ்சோதி பரிந்து அருளி ஆத்தம் என மறை நால்வர்க்கு அறம் புரி நூல் அன்று உரைத்த தீர்த்தம் மல்கு சடையாரும் திரு வேட்டக்குடியாரே மேல் #3506 கலவம் சேர் கழி கானல் கதிர் முத்தம் கலந்து எங்கும் அலவன் சேர் அணை வாரி கொணர்ந்து எறியும் அகன் துறைவாய் நிலவு அம் சேர் நுண் இடைய நேர்_இழையாள் அவளோடும் திலகம் சேர் நெற்றியினார் திரு வேட்டங்குடியாரே மேல் #3507 பங்கம் ஆர் கடல் அலற பருவரையோடு அரவு உழல செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி அங்க நான்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே மேல் #3508 நாவாய பிறை சென்னி நலம் திகழும் இலங்கு இப்பி கோவாத நித்திலங்கள் கொணர்ந்து எறியும் குளிர் கானல் ஏ ஆரும் வெம் சிலையால் எயில் மூன்றும் எரிசெய்த தேவாதிதேவனார் திரு வேட்டக்குடியாரே மேல் #3509 பால் நிலவும் பங்கயத்து பைம் கானல் வெண் குருகு கான் நிலவு மலர் பொய்கை கைதல் சூழ் கழி கானல் மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் தேன் நிலவு மலர் சோலை திரு வேட்டக்குடியாரே மேல் #3510 துறை உலவு கடல் ஓதம் சுரி சங்கம் இடறி போய் நறை உலவும் பொழில் புன்னை நன் நீழல் கீழ் அமரும் இறை பயிலும் இராவணன்-தன் தலை பத்தும் இருபது தோள் திறல் அழிய அடர்த்தாரும் திரு வேட்டக்குடியாரே மேல் #3511 அரு மறை நான்முகத்தானும் அகலிடம் நீர் ஏற்றானும் இருவருமாய் அளப்பு அரிய எரி உருவாய் நீண்ட பிரான் வரு புனலின் மணி உந்தி மறி திரை ஆர் சுடர் பவள திரு உருவில் வெண் நீற்றார் திரு வேட்டக்குடியாரே மேல் #3512 இகழ்ந்து உரைக்கும் சமணர்களும் இடும் போர்வை சாக்கியரும் புகழ்ந்து உரையா பாவிகள் சொல் கொள்ளேன்-மின் பொருள் என்ன நிகழ்ந்து இலங்கு வெண் மணலின் நிறை துண்ட பிறை கற்றை திகழ்ந்து இலங்கு செம் சடையார் திரு வேட்டக்குடியாரே மேல் #3513 தெண் திரை சேர் வயல் உடுத்த திரு வேட்டக்குடியாரை தண்டலை சூழ் கலி காழி தமிழ் ஞானசம்பந்தன் ஒண் தமிழ் நூல் இவை பத்தும் உணர்ந்து ஏத்த வல்லார் போய் உண்டு உடுப்பு இல் வானவரோடு உயர் வானத்து இருப்பாரே மேல் 67. திருப்பிரமபுரம் : வழிமொழித்திருவிராகம் : பண் - சாதாரி #3514 சுரர்_உலகு நரர்கள் பயில் தரணிதலம் முரண் அழிய அரண மதில் முப் புரம் எரிய விரவு வகை சர விசை கொள் கரம் உடைய பரமன் இடம் ஆம் வரம் அருள வரல்முறையின் நிரை நிறைகொள் வரு சுருதி சிர உரையினால் பிரமன் உயர் அரன் எழில் கொள் சரண இணை பரவ வளர் பிரமபுரமே மேல் #3515 தாணு மிகு ஆண் இசை கொடு ஆணு வியர் பேணுமது காணும் அளவில் கோணும் நுதல் நீள் நயனி கோண் இல் பிடி மாணி மது நாணும் வகையே ஏணு கரி பூண் அழிய ஆண் இயல் கொள் மாணி பதி சேண் அமரர்_கோன் வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே மேல் #3516 பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு அகலம் மலி சகல கலை மிக உரைசெய் முகம் உடைய பகவன் இடம் ஆம் பகை களையும் வகையில் அறுமுகஇறையை மிக அருள நிகர் இல் இமையோர் புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே மேல் #3517 அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி துங்க மலர் தங்கு சடை அங்கி நிகர் எங்கள் இறை தங்கும் இடம் ஆம் வெம் கதிர் விளங்கு உலகம் எங்கும் எதிர் பொங்கு எரி புலன்கள் களைவோர் வெம் குரு விளங்கி உமை_பங்கர் சரணங்கள் பணி வெங்குரு அதே மேல் #3518 ஆண் இயல்பு காண வன வாண இயல் பேணி எதிர் பாண மழை சேர் தூணி அற நாணி அற வேணு சிலை பேணி அற நாணி விசயன் பாணி அமர் பூண அருள் மாணு பிரமாணி இடம் ஏணி முறையில் பாணி உலகு ஆள மிக ஆணின் மலி தோணி நிகர் தோணிபுரமே மேல் #3519 நிராமய பராபர புராதன பராவு சிவராக அருள் என்று இராவும் எதிராயது பராய் நினை புராணன் அமராதி பதி ஆம் அரா மிசை இராத எழில் தரு ஆய அர பராயண வராக உரு வா தராயனை விராய் எரி பராய் மிகு தராய் மொழி விராய பதியே மேல் #3520 அரணையுறு முரணர் பலர் மரணம் வர இரணம் மதில் அரம் மலி படை கரம் விசிறு விரகன் அமர் கரணன் உயர் பரன் நெறி கொள் கரனது இடம் ஆம் பரவு அமுது விரவ விடல் புரளமுறும் அரவை அரி சிரம் அரிய அ சிரம் அரன சரணம் அவை பரவ இரு கிரகம் அமர் சிரபுரம் அதே மேல் #3521 அறம் அழிவு பெற உலகு தெறு புயவன் விறல் அழிய நிறுவி விரல் மா மறையின் ஒலி முறை முரல்செய் பிறை எயிறன் உற அருளும் இறைவன் இடம் ஆம் குறைவு இல் மிக நிறைதை உழி மறை அமரர் நிறை அருள முறையொடு வரும் புறவன் எதிர் நிறை நிலவு பொறையன் உடல் பெற அருளு புறவம் அதுவே மேல் #3522 விண் பயில மண் பகிரி வண் பிரமன் எண் பெரிய பண் படை கொள் மால் கண் பரியும் ஒண்பு ஒழிய நுண் பொருள்கள் தண் புகழ் கொள் கண்டன் இடம் ஆம் மண் பரியும் ஒண்பு ஒழிய நுண்பு சகர் புண் பயில விண் படர அ சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே மேல் #3523 பாழி உறை வேழம் நிகர் பாழ் அமணர் சூழும் உடலாளர் உணரா ஏழின் இசை யாழின் மொழி ஏழை அவள் வாழும் இறை தாழும் இடம் ஆம் கீழ் இசை கொள் மேல்_உலகில் வாழ் அரசு சூழ் அரசு வாழ அரனுக்கு ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே மேல் #3524 நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் மெய் சிரம் அணைச்சு உலகில் நிச்சம் இடு பிச்சை அமர் பிச்சன் இடம் ஆம் மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே மேல் #3525 ஒழுகல் அரிது அழி கலியில் உழி உலகு பழி பெருகு வழியை நினையா முழுது உடலில் எழும் மயிர்கள் தழுவும் முனி குழுவினொடு கெழுவு சிவனை தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர் பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே மேல் 68. திருக்கயிலாயம் : திருவிராகம்: பண் - சாதாரி #3526 வாள வரி கோள புலி கீள் அது உரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் ஆளுமவர் வேள் அநகர் போள் அயில கோள களிறு ஆளி வர இல் தோள் அமரர் தாளம் மதர் கூளி எழ மீளி மிளிர் தூளி வளர் பொன் காள முகில் மூளும் இருள் கீள விரி தாள கயிலாய மலையே மேல் #3527 புற்று அரவு பற்றிய கை நெற்றியது மற்று ஒரு கண் ஒற்றை விடையன் செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான் சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே மேல் #3528 சிங்க அரை மங்கையர்கள் தங்களன செங்கை நிறை கொங்கு மலர் தூய் எங்கள் வினை சங்கை அவை இங்கு அகல அங்கம் மொழி எங்கும் உளவாய் திங்கள் இருள் நொங்க ஒளி விங்கி மிளிர் தொங்கலொடு தங்க அயலே கங்கையொடு பொங்கு சடை எங்கள் இறை தங்கு கயிலாய மலையே மேல் #3529 முடிய சடை பிடியது ஒரு வடிய மழு உடையர் செடி உடைய தலையில் வெடிய வினை கொடியர் கெட இடு சில் பலி நொடிய மகிழ் அடிகள் இடம் ஆம் கொடிய குரல் உடைய விடை கடிய துடியடியினொடும் இடியின் அதிர கடிய குரல் நெடிய முகில் மடிய அதர் அடி கொள் கயிலாய மலையே மேல் #3530 குடங்கையின் நுடங்கு எரி தொடர்ந்து எழ விடம் கிளர் படம் கொள் அரவம் மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் தடம் கடல் தொடர்ந்து உடன் நுடங்குவ இடம் கொள மிடைந்த குரலால் கடும் கலின் முடங்கு அளை நுடங்கு அரவு ஒடுங்கு கயிலாய மலையே மேல் #3531 ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன் கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான் தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய காதல் மிகு சோதி கிளர் மாது மயில் கோது கயிலாய மலையே மேல் #3532 சென்று பல வென்று உலவு புன் தலையர் துன்றலொடும் ஒன்றி உடனே நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான் துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ கன்று பிடி துன்று களிறு என்று இவை முன் நின்ற கயிலாய மலையே மேல் #3533 மருப்பிடை நெருப்பு எழு தருக்கொடு செரு செய்த பருத்த களிறின் பொருப்பிடை விருப்புற இருக்கையை ஒருக்குடன் அரக்கன் உணராது ஒருத்தியை வெருக்குற வெருட்டலும் நெருக்கு என நிருத்த விரலால் கருத்து இல ஒருத்தனை எருத்து இற நெரித்த கயிலாய மலையே மேல் #3534 பரிய திரை பெரிய புனல் வரிய புலி உரி அது உடை பரிசை உடையன் வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான் பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் கரியவனும் அரிய மறை புரியவனும் மருவு கயிலாய மலையே மேல் #3535 அண்டர் தொழு சண்டி பணி கண்டு அடிமை கொண்ட இறை துண்ட மதியோடு இண்டை புனைவுண்ட சடை முண்டதர சண்ட இருள் கண்டர் இடம் ஆம் குண்டு அமண வண்டர் அவர் மண்டை கையில் உண்டு உளறி மிண்டு சமயம் கண்டவர்கள் கொண்டவர்கள் பண்டும் அறியாத கயிலாய மலையே மேல் #3536 அம் தண் வரை வந்த புனல் தந்த திரை சந்தனமொடு உந்தி அகிலும் கந்த மலர் கொந்தினொடு மந்தி பல சிந்து கயிலாய மலை மேல் எந்தை அடி வந்து அணுகு சந்தமொடு செந்தமிழ் இசைந்த புகலி பந்தன் உரை சிந்தைசெய வந்த வினை நைந்து பரலோகம் எளிதே மேல் 69. திருக்காளத்தி : திருவிராகம்: பண் - சாதாரி #3537 வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்தது ஒரு மா கடல் விடம் தான் அமுதுசெய்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை-தன்னை வினவில் ஏனம் இட மானினொடு கிள்ளை தினை கொள்ள எழில் ஆர் கவணினால் கானவர்-தம் மா மகளிர் கனகம் மணி விலகு காளத்தி மலையே மேல் #3538 முது சின வில் அவுணர் புரம் மூன்றும் ஒரு நொடி வரையின் மூள எரிசெய் சதுரர் மதி பொதி சடையர் சங்கரர் விரும்பும் மலை-தன்னை வினவில் எதிர் எதிர வெதிர் பிணைய எழு பொறிகள் சிதற எழில் ஏனம் உழுத கதிர் மணியின் வளர் ஒளிகள் இருள் அகல நிலவு காளத்தி மலையே மேல் #3539 வல்லை வரு காளியை வகுத்து வலி ஆகி மிகு தாருகனை நீ கொல் என விடுத்து அருள்புரிந்த சிவன் மேவும் மலை கூறி வினவில் பல்பல இரும் கனி பருங்கி மிக உண்டவை நெருங்கி இனமாய் கல் அதிர நின்று கரு மந்தி விளையாடு காளத்தி மலையே மேல் #3540 வேய் அனைய தோள் உமை ஒர்பாகம் அது ஆக விடை ஏறி சடை மேல் தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் வாய் கலசம் ஆக வழிபாடு செயும் வேடன் மலர் ஆகும் நயனம் காய் கணையினால் இடந்து ஈசன் அடி கூடு காளத்தி மலையே மேல் #3541 மலையின் மிசை-தனில் முகில் போல் வருவது ஒரு மத கரியை மழை போல் அலற கொலைசெய்து உமை அஞ்ச உரி போர்த்த சிவன் மேவும் மலை கூறி வினவில் அலை கொள் புனல் அருவி பல சுனைகள் வழி இழிய அயல் நிலவு முது வேய் கலகலென ஒளி கொள் கதிர் முத்தம் அவை சிந்து காளத்தி மலையே மேல் #3542 பாரகம் விளங்கிய பகீரதன் அரும் தவம் முயன்ற பணி கண்டு ஆர் அருள் புரிந்து அலை கொள் கங்கை சடை ஏற்ற அரன் மலையை வினவில் வார் அதர் இரும் குறவர் சேவலில் மடுத்து அவர் எரித்த விறகில் கார் அகில் இரும் புகை விசும்பு கமழ்கின்ற காளத்தி மலையே மேல் #3543 ஆரும் எதிராத வலி ஆகிய சலந்தரனை ஆழி அதனால் ஈரும் வகை செய்து அருள்புரிந்தவன் இருந்த மலை-தன்னை வினவில் ஊரும் அரவம் ஒளி கொள் மா மணி உமிழ்ந்தவை உலாவி வரலால் காரிருள் கடிந்து கனகம் என விளங்கு காளத்தி மலையே மேல் #3544 எரி அனைய சுரி மயிர் இராவணனை ஈடு அழிய எழில் கொள் விரலால் பெரிய வரை ஊன்றி அருள்செய்த சிவன் மேவும் மலை பெற்றி வினவில் வரிய சிலை வேடுவர்கள் ஆடவர்கள் நீடு வரை ஊடு வரலால் கரியினொடு வரி உழுவை அரி இனமும் வெருவு காளத்தி மலையே மேல் #3545 இனது அளவில் இவனது அடி இணையும் முடி அறிதும் என இகலும் இருவர் தனது உருவம் அறிவு அரிய சகல சிவன் மேவும் மலை-தன்னை வினவில் புனவர் புன மயில் அனைய மாதரொடு மைந்தரும் மணம் புணரும் நாள் கனகம் என மலர்கள் அணி வேங்கைகள் நிலாவு காளத்தி மலையே மேல் #3546 நின்று கவளம் பல கொள் கையரொடு மெய்யில் இடு போர்வையவரும் நன்றி அறியாத வகை நின்ற சிவன் மேவும் மலை நாடி வினவில் குன்றில் மலி துன்று பொழில் நின்ற குளிர் சந்தின் முறி தின்று குலவி கன்றினொடு சென்று பிடி நின்று விளையாடு காளத்தி மலையே மேல் #3547 காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை மாடமொடு மாளிகைகள் நீடு வளர் கொச்சைவயம் மன்னு தலைவன் நாடு பல நீடு புகழ் ஞானசம்பந்தன் உரை நல்ல தமிழின் பாடலொடு பாடும் இசை வல்லவர்கள் நல்லர் பரலோகம் எளிதே மேல் 70. திருமயிலாடுதுறை : திருவிராகம்: பண் - சாதாரி #3548 ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய் கான வரி நீடு உழுவை அதள் உடைய படர் சடையர் காணி எனல் ஆம் ஆன புகழ் வேதியர்கள் ஆகுதியின் மீது புகை போகி அழகு ஆர் வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே மேல் #3549 அம் தண் மதி செம் சடையர் அம் கண் எழில் கொன்றையொடு அணிந்து அழகர் ஆம் எம்தம் அடிகட்கு இனிய தானம் அது வேண்டில் எழில் ஆர் பதி அது ஆம் கந்தம் மலி சந்தினொடு கார் அகிலும் வாரி வரு காவிரியுளால் வந்த திரை உந்தி எதிர் மந்தி மலர் சிந்தும் மயிலாடுதுறையே மேல் #3550 தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் மூளை படு வெண் தலையில் உண்டு முதுகாடு உறையும் முதல்வர் இடம் ஆம் பாளை படு பைம் கமுகு செங்கனி உதிர்த்திட நிரந்து கமழ் பூ வாளை குதிகொள்ள மடல் விரிய மணம் நாறும் மயிலாடுதுறையே மேல் #3551 ஏதம் இலர் அரிய மறை மலையர்மகள் ஆகிய இலங்கு நுதல் ஒண் பேதை தட மார்பு அது இடம் ஆக உறைகின்ற பெருமானது இடம் ஆம் காதல் மிகு கவ்வையொடு மவ்வல் அவை கூடி வரு காவிரியுளால் மாதர் மறி திரைகள் புக வெறிய வெறி கமழும் மயிலாடுதுறையே மேல் #3552 பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் பா விரி இசைக்கு உரிய பாடல் பயிலும் பரமர் பழமை எனல் ஆம் காவிரி நுரைத்து இரு கரைக்கும் மணி சிந்த வரி வண்டு கவர மா விரி மது கிழிய மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறையே மேல் #3553 கடம் திகழ் கரும் களிறு உரித்து உமையும் அஞ்ச மிக நோக்கு அரியராய் விடம் திகழும் மூ இலை நல் வேல் உடைய வேதியர் விரும்பும் இடம் ஆம் தொடர்ந்து ஒளிர் கிடந்தது ஒரு சோதி மிகு தொண்டை எழில் கொண்ட துவர் வாய் மடந்தையர் குடைந்த புனல் வாசம் மிக நாறும் மயிலாடுதுறையே மேல் #3554 அவ்வ திசையாரும் அடியாரும் உளர் ஆக அருள்செய்து அவர்கள் மேல் எவ்வம் அற வைகலும் இரங்கி எரி ஆடும் எமது ஈசன் இடம் ஆம் கவ்வையொடு காவிரி கலந்து வரு தென்கரை நிரந்து கமழ் பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறையே மேல் #3555 இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் விலங்கலில் அடர்த்து அருள்புரிந்தவர் இருந்த இடம் வினவுதிர்களேல் கலங்கல் நுரை உந்தி எதிர் வந்த கயம் மூழ்கி மலர் கொண்டு மகிழா மலங்கி வரு காவிரி நிரந்து பொழிகின்ற மயிலாடுதுறையே மேல் #3556 ஒண் திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி உணராத வகையால் அண்டமுற அங்கி உரு ஆகி மிக நீண்ட அரனாரது இடம் ஆம் கெண்டை இரை கொண்டு கெளிறு ஆர் உடனிருந்து கிளர் வாய் அறுதல்சேர் வண்டல் மணல் கெண்டி மட நாரை விளையாடும் மயிலாடுதுறையே மேல் #3557 மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும் அலர் தூற்ற மிக்க திறலோன் இண்டை குடிகொண்ட சடை எங்கள் பெருமானது இடம் என்பர் எழில் ஆர் தெண் திரை பரந்து ஒழுகு காவிரிய தென்கரை நிரந்து கமழ் பூ வண்டு அவை கிளைக்க மது வந்து ஒழுகு சோலை மயிலாடுதுறையே மேல் #3558 நிணம் தரு மயானம் நிலம் வானம் மதியாதது ஒரு சூலமொடு பேய் கணம் தொழு கபாலி கழல் ஏத்தி மிக வாய்த்தது ஒரு காதன்மையினால் மணம் தண் மலி காழி மறை ஞானசம்பந்தன் மயிலாடுதுறையை புணர்ந்த தமிழ் பத்தும் இசையால் உரைசெய்வார் பெறுவர் பொன்_உலகமே மேல் 71. திருவைகாவூர் : திருவிராகம்: பண் - சாதாரி #3559 கோழை மிடறு ஆக கவி கோளும் இல ஆக இசை கூடும் வகையால் ஏழை அடியார் அவர்கள் யாவை சொன சொல் மகிழும் ஈசன் இடம் ஆம் தாழை இள நீர் முதிய காய் கமுகின் வீழ நிரை தாறு சிதறி வாழை உதிர் வீழ் கனிகள் ஊறி வயல் சேறுசெயும் வைகாவிலே மேல் #3560 அண்டமுறு மேரு வரை அங்கி கணை நாண் அரவு அது ஆக எழில் ஆர் விண்டவர்-தம் முப்புரம் எரித்த விகிர்தன் அவன் விரும்பும் இடம் ஆம் புண்டரிக மா மலர்கள் புக்கு விளையாடு வயல் சூழ் தடம் எலாம் வண்டின் இசை பாட அழகு ஆர் குயில் மிழற்று பொழில் வைகாவிலே மேல் #3561 ஊனம் இலர் ஆகி உயர் நல் தவம் மெய் கற்று அவை உணர்ந்த அடியார் ஞானம் மிக நின்று தொழ நாளும் அருள்செய்ய வல நாதன் இடம் ஆம் ஆன வயல் சூழ்தரும் மல் சூழி அருகே பொழில்கள்-தோறும் அழகு ஆர் வான மதியோடு மழை நீள் முகில்கள் வந்து அணவும் வைகாவிலே மேல் #3562 இன்ன உரு இன்ன நிறம் என்று அறிவதேல் அரிது நீதி பலவும் தன்ன உரு ஆம் என மிகுத்த தவன் நீதியொடு தான் அமர்விடம் முன்னை வினை போம் வகையினால் முழுது உணர்ந்து முயல்கின்ற முனிவர் மன்ன இருபோதும் மருவி தொழுது சேரும் வயல் வைகாவிலே மேல் #3563 வேதமொடு வேள்வி பல ஆயின மிகுந்து விதி ஆறு சமயம் ஓதியும் உணர்ந்தும் உள தேவர் தொழ நின்று அருள்செய் ஒருவன் இடம் ஆம் மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழல் அவை மிக்க அழகால் மாதவி மணம் கமழ வண்டு பல பாடு பொழில் வைகாவிலே மேல் #3564 நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் செம் சடையிடை புனல் கரந்த சிவலோகன் அமர்கின்ற இடம் ஆம் அம் சுடரொடு ஆறு பதம் ஏழின் இசை எண் அரிய வண்ணம் உளவாய் மஞ்சரொடு மாதர் பலரும் தொழுது சேரும் வயல் வைகாவிலே மேல் #3565 நாளும் மிகு பாடலொடு ஞானம் மிகு நல்ல மலர் வல்ல வகையால் தோளினொடு கை குளிரவே தொழுமவர்க்கு அருள்செய் சோதி இடம் ஆம் நீளி வளர் சோலை-தொறும் நாளி பல துன்று கனி நின்றது உதிர வாளை குதிகொள்ள மது நாற மலர் விரியும் வயல் வைகாவிலே மேல் #3566 கை இருபதோடு மெய் கலங்கிட விலங்கலை எடுத்த கடியோன் ஐ_இரு சிரங்களை ஒருங்குடன் நெரித்த அழகன்-தன் இடம் ஆம் கையின் மலர் கொண்டு நல காலையொடு மாலை கருதி பலவிதம் வையகம் எலாம் மருவி நின்று தொழுது ஏத்தும் எழில் வைகாவிலே மேல் #3567 அந்தம் முதல் ஆதி பெருமான் அமரர்_கோனை அயன் மாலும் இவர்கள் எந்தை பெருமான் இறைவன் என்று தொழ நின்று அருள்செய் ஈசன் இடம் ஆம் சிந்தைசெய்து பாடும் அடியார் பொடி மெய் பூசி எழு தொண்டர் அவர்கள் வந்து பல சந்த மலர் முந்தி அணையும் பதி நல் வைகாவிலே மேல் #3568 ஈசன் எமை ஆளுடைய எந்தை பெருமான் இறைவன் என்று தனையே பேசுதல்செயா அமணர் புத்தர் அவர் சித்தம் அணையா அவன் இடம் தேசம் அது எலாம் மருவி நின்று பரவி திகழ நின்ற புகழோன் வாச மலர் ஆன பல தூவி அணையும் பதி நல் வைகாவிலே மேல் #3569 முற்றும் நமை ஆளுடைய முக்கண் முதல்வன் திரு வைகாவில் அதனை செற்ற மலின் ஆர் சிரபுர தலைவன் ஞானசம்பந்தன் உரைசெய் உற்ற தமிழ் மாலை ஈர்_ஐந்தும் இவை வல்லவர் உருத்திரர் என பெற்று அமரலோகம் மிக வாழ்வர் பிரியார் அவர் பெரும் புகழொடே மேல் 72. திருமாகறல் : திருவிராகம்: பண் - சாதாரி #3570 விங்கு விளை கழனி மிகு கடைசியர்கள் பாடல் விளையாடல் அரவம் மங்குலொடு நீள் கொடிகள் மாடம் மலி நீடு பொழில் மாகறல் உளான் கொங்கு விரி கொன்றையொடு கங்கை வளர் திங்கள் அணி செம் சடையினான் செம் கண் விடை அண்ணல் அடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும் உடனே மேல் #3571 கலையின் ஒலி மங்கையர்கள் பாடல் ஒலி ஆடல் கவின் எய்தி அழகு ஆர் மலையின் நிகர் மாடம் உயர் நீள் கொடிகள் வீசும் மலி மாகறல் உளான் இலையின் மலி வேல் நுனைய சூலம் வலன் ஏந்தி எரி புன் சடையினுள் அலை கொள் புனல் ஏந்து பெருமான் அடியை ஏத்த வினை அகலும் மிகவே மேல் #3572 காலையொடு துந்துபிகள் சங்கு குழல் யாழ் முழவு காமருவு சீர் மாலை வழிபாடு செய்து மா தவர்கள் ஏத்தி மகிழ் மாகறல் உளான் தோலை உடை பேணி அதன் மேல் ஒர் சுடர் நாகம் அசையா அழகிதா பாலை அன நீறு புனைவான் அடியை ஏத்த வினை பறையும் உடனே மேல் #3573 இங்கு கதிர் முத்தினொடு பொன் மணிகள் உந்தி எழில் மெய்யுள் உடனே மங்கையரும் மைந்தர்களும் மன்னு புனல் ஆடி மகிழ் மாகறல் உளான் கொங்கு வளர் கொன்றை குளிர் திங்கள் அணி செம் சடையினான் அடியையே நுங்கள் வினை தீர மிக ஏத்தி வழிபாடு நுகரா எழு-மினே மேல் #3574 துஞ்சு நறு நீலம் இருள் நீங்க ஒளி தோன்றும் மது வார் கழனி-வாய் மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் வஞ்ச மத யானை உரி போர்த்து மகிழ்வான் ஒர் மழுவாளன் வளரும் நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே மேல் #3575 மன்னும் மறையோர்களொடு பல் படிம மா தவர்கள் கூடி உடனாய் இன்ன வகையால் இனிது இறைஞ்சி இமையோரில் எழு மாகறல் உளான் மின்னை விரி புன் சடையின் மேல் மலர்கள் கங்கையொடு திங்கள் எனவே உன்னும் அவர் தொல்வினைகள் ஒல்க உயர் வான்_உலகம் ஏறல் எளிதே மேல் #3576 வெய்ய வினை நெறிகள் செல வந்து அணையும் மேல் வினைகள் வீட்டலுறுவீர் மை கொள் விரி கானல் மது வார் கழனி மாகறல் உளான் எழில் அது ஆர் கைய கரி கால் வரையில் மேலது உரி தோல் உடைய மேனி அழகு ஆர் ஐயன் அடி சேர்பவரை அஞ்சி அடையா வினைகள் அகலும் மிகவே மேல் #3577 தூசு துகில் நீள் கொடிகள் மேகமொடு தோய்வன பொன் மாட மிசையே மாசு படு செய்கை மிக மாதவர்கள் ஓதி மலி மாகறல் உளான் பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் பூசு பொடி ஈசன் என ஏத்த வினை நிற்றல் இல போகும் உடனே மேல் #3578 தூய விரி தாமரைகள் நெய்தல் கழுநீர் குவளை தோன்ற மது உண் பாய வரி வண்டு பல பண் முரலும் ஓசை பயில் மாகறல் உளான் சாய விரல் ஊன்றிய இராவணன தன்மை கெட நின்ற பெருமான் ஆய புகழ் ஏத்தும் அடியார்கள் வினை ஆயினவும் அகல்வது எளிதே மேல் #3579 காலின் நல பைம் கழல்கள் நீள் முடியின் மேல் உணர்வு காமுறவினார் மாலும் மலரானும் அறியாமை எரி ஆகி உயர் மாகறல் உளான் நாலும் எரி தோலும் உரி மா மணிய நாகமொடு கூடி உடனாய் ஆலும் விடை ஊர்தி உடை அடிகள் அடியாரை அடையா வினைகளே மேல் #3580 கடை கொள் நெடு மாடம் மிக ஓங்கு கமழ் வீதி மலி காழியவர்_கோன் அடையும் வகையால் பரவி அரனை அடி கூடு சம்பந்தன் உரையால் மடை கொள் புனலோடு வயல் கூடு பொழில் மாகறல் உளான் அடியையே உடைய தமிழ் பத்தும் உணர்வார் அவர்கள் தொல்வினைகள் ஒல்கும் உடனே மேல் 73. திருப்பட்டீச்சரம் : திருவிராகம்: பண் - சாதாரி #3581 பாடல் மறை சூடல் மதி பல்_வளை ஒர்பாகம் மதில் மூன்று ஒர் கணையால் கூட எரியூட்டி எழில் காட்டி நிழல் கூட்டு பொழில் சூழ் பழைசையுள் மாட மழபாடி உறை பட்டிசுரம் மேய கடி கட்டு அரவினார் வேடம் நிலை கொண்டவரை வீடு நெறி காட்டி வினை வீடுமவரே மேல் #3582 நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் கூரின் மலி சூலம் அது ஏந்தி உடை கோவணமும் மானின் உரி தோல் காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான் பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே மேல் #3583 காலை மடவார்கள் புனல் ஆடுவது கௌவை கடி ஆர் மறுகு எலாம் மாலை மணம் நாறு பழையாறை மழபாடி அழகு ஆய மலி சீர் பாலை அன நீறு புனை மார்பன் உறை பட்டிசுரமே பரவுவார் மேலை ஒரு மால் கடல்கள் போல் பெருகி விண்_உலகம் ஆளுமவரே மேல் #3584 கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் பண்ணின் மிசை நின்று பல பாணி பட ஆட வல பால் மதியினான் மண்ணின் மிசை நேர் இல் மழபாடி மலி பட்டிசுரமே மருவுவார் விண்ணின் மிசை வாழும் இமையோரொடு உடன் ஆதல் அது மேவல் எளிதே மேல் #3585 மருவ முழவு அதிர மழபாடி மலி மத்த விழவு ஆர்க்க வரை ஆர் பருவ மழை பண் கவர்செய் பட்டிசுரம் மேய படர் புன் சடையினான் வெருவ மத யானை உரி போர்த்து உமையை அஞ்ச வரு வெள் விடையினான் உருவம் எரி கழல்கள் தொழ உள்ளம் உடையாரை அடையா வினைகளே மேல் #3586 மறையின் ஒலி கீதமொடு பாடுவன பூதம் அடி மருவி விரவு ஆர் பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் பிறையினொடு மருவியது ஒர் சடையினிடை ஏற்ற புனல் தோற்றம் நிலை ஆம் இறைவன் அடி முறைமுறையின் ஏத்துமவர் தீ தொழில்கள் இல்லர் மிகவே மேல் #3587 பிறவி பிணி மூப்பினொடு நீங்கி இமையோர்_உலகு பேணலுறுவார் துறவி எனும் உள்ளம் உடையார்கள் கொடி வீதி அழகு ஆய தொகு சீர் இறைவன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் நறவ விரையாலும் மொழியாலும் வழிபாடு மறவாத அவரே மேல் #3588 நேசம் மிகு தோள் வலவன் ஆகி இறைவன் மலையை நீக்கியிடலும் நீசன் விறல் வாட்டி வரை உற்றது உணராத நிரம்பா மதியினான் ஈசன் உறை பட்டிசுரம் ஏத்தி எழுவார்கள் வினை ஏதும் இலவாய் நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே மேல் #3589 தூய மலரானும் நெடியானும் அறியார் அவன் தோற்றம் நிலையின் ஏய வகையான் அதனை யார் அது அறிவார் அணி கொள் மார்பின் அகலம் பாய நல நீறு அது அணிவான் உமை-தனோடும் உறை பட்டிசுரமே மேயவனது ஈர் அடியும் ஏத்த எளிது ஆகும் நல மேல்_உலகமே மேல் #3590 தடுக்கினை இடுக்கி மடவார்கள் இடு பிண்டம் அது உண்டு உழல்தரும் கடுப்பொடி உடல்_கவசர் கத்து மொழி காதல் செய்திடாது கமழ் சேர் மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் படைக்கு ஒரு கரத்தன் மிகு பட்டிசுரம் ஏத்த வினை பற்று அறுதலே மேல் #3591 மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் பந்தம் உயர் வீடு நல பட்டிசுரம் மேய படர் புன் சடையனை அம் தண் மறையோர் இனிது வாழ் புகலி ஞானசம்பந்தன் அணி ஆர் செந்தமிழ்கள் கொண்டு இனிது செப்ப வல தொண்டர் வினை நிற்பது இலவே மேல் 74. திருத்தேவூர் : திருவிராகம்: பண் - சாதாரி #3592 காடு பயில் வீடு முடை ஓடு கலன் மூடும் உடை ஆடை புலி தோல் தேடு பலி ஊண் அது உடை வேடம் மிகு வேதியர் திருந்து பதிதான் நாடகம் அது ஆட மஞை பாட அரி கோடல் கை மறிப்ப நலம் ஆர் சேடு மிகு பேடை அனம் ஊடி மகிழ் மாடம் மிடை தேவூர் அதுவே மேல் #3593 கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் வாள் அரவு தண் சலமகள் குலவு செம் சடை வரத்து இறைவன் ஊர் வேள் அரவு கொங்கை இள மங்கையர்கள் குங்குமம் விரைக்கும் மணம் ஆர் தேள் அரவு தென்றல் தெரு எங்கும் நிறைவு ஒன்றி வரு தேவூர் அதுவே மேல் #3594 பண் தடவு சொல்லின் மலைவல்லி உமை_பங்கன் எமை ஆளும் இறைவன் எண் தடவு வானவர் இறைஞ்சு கழலோன் இனிது இருந்த இடம் ஆம் விண் தடவு வார் பொழில் உகுத்த நறவு ஆடி மலர் சூடி விரை ஆர் செண் தடவும் மாளிகை செறிந்து திரு ஒன்றி வளர் தேவூர் அதுவே மேல் #3595 மாசு இல் மனம் நேசர்-தமது ஆசை வளர் சூலதரன் மேலை இமையோர் ஈசன் மறை_ஓதி எரி ஆடி மிகு பாசுபதன் மேவு பதிதான் வாச மலர் கோது குயில் வாசகமும் மாதர் அவர் பூவை மொழியும் தேச ஒலி வீணையொடு கீதம் அது வீதி நிறை தேவூர் அதுவே மேல் #3596 கானமுறு மான் மறியன் ஆனை உரி போர்வை கனல் ஆடல் புரிவோன் ஏன எயிறு ஆமை இள நாகம் வளர் மார்பின் இமையோர்_தலைவன் ஊர் வான் அணவு சூதம் இள வாழை மகிழ் மாதவி பலா நிலவி வார் தேன் அமுது உண்டு வரி வண்டு மருள் பாடி வரு தேவூர் அதுவே மேல் #3597 ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான் சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் வீறு மலர் ஊறும் மது ஏறி வளர்வு ஆய விளைகின்ற கழனி சேறு படு செங்கயல் விளிப்ப இள வாளை வரு தேவூர் அதுவே மேல் #3598 கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய் என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் சென்று இசைய நின்று துளி ஒன்ற விளையாடி வளர் தேவூர் அதுவே மேல் #3599 ஓதம் மலிகின்ற தென்_இலங்கை_அரையன் மலி புயங்கள் நெரிய பாதம் மலிகின்ற விரல் ஒன்றினில் அடர்த்த பரமன்-தனது இடம் போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் சேதம் மலிகின்ற கரம் வென்றி தொழிலாளர் புரி தேவூர் அதுவே மேல் #3600 வண்ணம் முகில் அன்ன எழில் அண்ணலொடு சுண்ணம் மலி வண்ணம் மலர் மேல் நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் திண்ண வண மாளிகை செறிந்த இசை யாழ் மருவு தேவூர் அதுவே மேல் #3601 பொச்சம் அமர் பிச்சை பயில் அ சமணும் எச்சம் அறு போதியரும் ஆம் மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் மை சில் முகில் வைச்ச பொழில் மேல் #3602 துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் பைம் கமலம் அங்கு அணி கொள் திண் புகலி ஞானசம்பந்தன் உரைசெய் சங்கம் மலி செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்கள் சங்கை இலரே மேல் 75. திருச்சண்பைநகர் : திருவிராகம்: பண் - சாதாரி #3603 எம்தமது சிந்தை பிரியாத பெருமான் என இறைஞ்சி இமையோர் வந்து துதிசெய்ய வளர் தூபமொடு தீபம் மலி வாய்மை அதனால் அந்தி அமர் சந்தி பல அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அழகன் சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே மேல் #3604 அங்கம் விரி துத்தி அரவு ஆமை விரவு ஆரம் அமர் மார்பில் அழகன் பங்கய முகத்து அரிவையோடு பிரியாது பயில்கின்ற பதிதான் பொங்கு பரவை திரை கொணர்ந்து பவள திரள் பொலிந்த அயலே சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே மேல் #3605 போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் யாழ் இன்மொழி மாழை விழி ஏழை இள மாதினொடு இருந்த பதிதான் வாழை வளர் ஞாழல் மகிழ் மன்னு புனை துன்னு பொழில் மாடு மடல் ஆர் தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே மேல் #3606 கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் பட்டம் நுதல் கட்டு மலர் மட்டு மலி பாவையொடு மேவு பதிதான் வட்ட மதி தட்டு பொழிலுள் தமது வாய்மை வழுவாத மொழியார் சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே மேல் #3607 பண் அங்கு எழுவு பாடலினொடு ஆடல் பிரியாத பரமேட்டி பகவன் அணங்கு எழுவு பாகம் உடை ஆகம் உடை அன்பர் பெருமானது இடம் ஆம் இணங்கு எழுவி ஆடு கொடி மாடம் மதில் நீடு விரை ஆர் புறவு எலாம் தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே மேல் #3608 பாலன் உயிர் மேல் அணவு காலன் உயிர் பாற உதைசெய்த பரமன் ஆலும் மயில் போல் இயலி ஆய்_இழை-தனோடும் அமர்வு எய்தும் இடம் ஆம் ஏலம் மலி சோலை இன வண்டு மலர் கெண்டி நறவு உண்டு இசைசெய சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே மேல் #3609 விண் பொய்யதனால் மழை விழாது ஒழியினும் விளைவுதான் மிக உடை மண் பொய்யதனால் வளம் இலாது ஒழியினும் தமது வண்மை வழுவார் உண்ப கரவார் உலகின் ஊழி பல-தோறும் நிலை ஆன பதிதான் சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே மேல் #3610 வரை குலமகட்கு ஒரு மறுக்கம் வருவித்த மதி இல் வலி உடை அரக்கனது உர கர சிரத்து உற அடர்த்து அருள்புரிந்த அழகன் இருக்கை அது அருக்கன் முதலான இமையோர் குழுமி ஏழ் விழவினில் தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே மேல் #3611 நீல வரை போல நிகழ் கேழல் உரு நீள் பறவை நேர் உருவம் ஆம் மாலும் மலரானும் அறியாமை வளர் தீ உருவம் ஆன வரதன் சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே மேல் #3612 போதியர்கள் பிண்டியர்கள் போது வழுவாத வகை உண்டு பல பொய் ஓதி அவர் கொண்டு செய்வது ஒன்றும் இலை நன்று அது உணர்வீர் உரை-மினோ ஆதி எமை ஆளுடைய அரிவையொடு பிரிவிலி அமர்ந்த பதிதான் சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே மேல் #3613 வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் பாரின் மலிகின்ற புகழ் நின்ற தமிழ் ஞானசம்பந்தன் உரைசெய் சீரின் மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர் சிவலோக நெறியே மேல் 76. திருவேதனம் : திருவிராகம்: பண் - சாதாரி #3614 கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் இல் பலி கொள புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவி மேல் மல் பொலி கலி கடல் மலை குவடு என திரை கொழித்த மணியை வில் பொலி நுதல் கொடி இடை கணிகைமார் கவரும் வேதவனமே மேல் #3615 பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை கொண்டு கயிறின் கடைய வந்த விடம் உண்ட குழகன்-தன் இடம் ஆம் வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு தென்றல் வெறி ஆர் வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே மேல் #3616 கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம் ஒண் படகம் நாளும் இசையால் வேரி மலி வார் குழல் நல் மாதர் இசை பாடல் ஒலி வேதவனமே மேல் #3617 நீறு திரு மேனியின் மிசைத்து ஒளி பெற தடவி வந்து இடபமே ஏறி உலகங்கள்-தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம் ஊறு பொருள் இன் தமிழ் இயல் கிளவி தேரும் மட மாதருடன் ஆர் வேறு திசை ஆடவர்கள் கூற இசை தேரும் எழில் வேதவனமே மேல் #3618 கத்திரிகை துத்திரி கறங்கு துடி தக்கையொடு இடக்கை படகம் எத்தனை உலப்பு இல் கருவி திரள் அலம்ப இமையோர்கள் பரச ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் மெய் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே மேல் #3619 மாலை மதி வாள் அரவு கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க அனல் ஆடும் அரன் ஊர் சோலையின் மரங்கள்-தொறும் மிண்டி இன வண்டு மது உண்டு இசைசெய வேலை ஒலி சங்கு திரை வங்க சுறவம் கொணரும் வேதவனமே மேல் #3620 வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து அம் சகம் அவித்த அமரர்க்குஅமரன் ஆதிபெருமானது இடம் ஆம் கிஞ்சுக இதழ் கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில விஞ்சு அக இயக்கர் முனிவ கணம் நிறைந்து மிடை வேதவனமே மேல் #3621 முடி தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை நெருக்கி விரலால் அடித்தலம் முன் வைத்து அலமர கருணை வைத்தவன் இடம் பல துயர் கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதல் கிளர்ந்து புலவாணர் வறுமை விடுத்தலை மதித்து நிதி நல்குமவர் மல்கு பதி வேதவனமே மேல் #3622 வாச மலர் மேவி உறைவானும் நெடு மாலும் அறியாத நெறியை கூசுதல்செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத அரன் ஊர் காசு மணி வார் கனகம் நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல் வீசு வலைவாணர் அவை வாரி விலை பேசும் எழில் வேதவனமே மேல் #3623 மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழி பதி மன்னு கவுணி வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன்னருளினால் சந்தம் இவை தண் தமிழின் இன்னிசை என பரவு பாடல் உலகில் பந்தன் உரைகொண்டு மொழிவார்கள் பயில்வார்கள் உயர் வான்_உலகமே மேல் 77. திருமாணிகுழி : திருவிராகம்: பண் - சாதாரி #3624 பொன் இயல் பொருப்பு அரையன் மங்கை ஒருபங்கர் புனல் தங்கு சடை மேல் வன்னியொடு மத்த மலர் வைத்த விறல் வித்தகர் மகிழ்ந்து உறைவிடம் கன்னி இள வாளை குதிகொள்ள இள வள்ளை படர் அள்ளல் வயல்-வாய் மன்னி இள மேதிகள் படிந்து மனை சேர் உதவி மாணிகுழியே மேல் #3625 சோதி மிகு நீறு அது மெய் பூசி ஒரு தோல் உடை புனைந்து தெருவே மாதர் மனை-தோறும் இசை பாடி வசி பேசும் அரனார் மகிழ்விடம் தாது மலி தாமரை மணம் கமழ வண்டு முரல் தண் பழனம் மிக்கு ஓதம் மலி வேலை புடை சூழ் உலகில் நீடு உதவி மாணிகுழியே மேல் #3626 அம்பு அனைய கண் உமை மடந்தை அவள் அஞ்சி வெருவ சினம் உடை கம்ப மத யானை உரிசெய்த அரனார் கருதி மேய இடம் ஆம் வம்பு மலி சோலை புடை சூழ மணி மாடம் அது நீடி அழகு ஆர் உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே மேல் #3627 நித்தம் நியம தொழிலன் ஆகி நெடு மால் குறளன் ஆகி மிகவும் சித்தம் அது ஒருக்கி வழிபாடு செய நின்ற சிவலோகன் இடம் ஆம் கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு ஒத்த வரி வண்டுகள் உலாவி இசை பாடு உதவி மாணிகுழியே மேல் #3628 மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் வாசம் மலி மென் குழல் மடந்தையர்கள் மாளிகையில் மன்னி அழகு ஆர் ஊசல் மிசை ஏறி இனிதாக இசை பாடு உதவி மாணிகுழியே மேல் #3629 மந்த மலர் கொண்டு வழிபாடு செயும் மாணி உயிர் வவ்வ மனமாய் வந்த ஒரு காலன் உயிர் மாள உதைசெய்த மணி_கண்டன் இடம் ஆம் சந்தினொடு கார் அகில் சுமந்து தட மா மலர்கள் கொண்டு கெடிலம் உந்து புனல் வந்து வயல் பாயும் மணம் ஆர் உதவி மாணிகுழியே மேல் #3630 எண் பெரிய வானவர்கள் நின்று துதிசெய்ய இறையே கருணையாய் உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் பண் பயிலும் வண்டு பல கெண்டி மது உண்டு நிறை பைம் பொழிலின்-வாய் ஒண் பலவின் இன் கனி சொரிந்து மணம் நாறு உதவி மாணிகுழியே மேல் #3631 எண்ணம் அது இன்றி எழில் ஆர் கைலை மா மலை எடுத்த திறல் ஆர் திண்ணிய அரக்கனை நெரித்து அருள்புரிந்த சிவலோகன் இடம் ஆம் பண் அமரும் மென்மொழியினார் பணை முலை பவள வாய் அழகு அது ஆர் ஒண் நுதல் மடந்தையர் குடைந்து புனல் ஆடு உதவி மாணிகுழியே மேல் #3632 நேடும் அயனோடு திருமாலும் உணரா வகை நிமிர்ந்து முடி மேல் ஏடு உலவு திங்கள் மத மத்தம் இதழி சடை எம் ஈசன் இடம் ஆம் மாடு உலவு மல்லிகை குருந்து கொடி மாதவி செருந்தி குரவின் ஊடு உலவு புன்னை விரி தாது மலி சேர் உதவி மாணிகுழியே மேல் #3633 மொட்டை அமண் ஆதர் முது தேரர் மதியில்லிகள் முயன்றன படும் முட்டைகள் மொழிந்த மொழிகொண்டு அருள்செய்யாத முதல்வன்-தன் இடமாம் மட்டை மலி தாழை இள நீர் முதிய வாழையில் விழுந்த அதரில் ஒட்ட மலி பூகம் நிரை தாறு உதிர ஏறு உதவி மாணிகுழியே மேல் #3634 உந்தி வரு தண் கெடிலம் ஓடு புனல் சூழ் உதவி மாணிகுழி மேல் அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான் சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் முந்தி இசைசெய்து மொழிவார்கள் உடையார்கள் நெடு வான_நிலனே மேல் 78. திருவேதிகுடி : திருவிராகம்: பண் - சாதாரி #3635 நீறு வரி ஆடு அரவொடு ஆமை மனவு என்பு நிரை பூண்பர் இடபம் ஏறுவர் யாவரும் இறைஞ்சு கழல் ஆதியர் இருந்த இடம் ஆம் தாறு விரி பூகம் மலி வாழை விரை நாற இணை வாளை மடுவில் வேறு பிரியாது விளையாட வளம் ஆரும் வயல் வேதிகுடியே மேல் #3636 சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை மல் புரி புயத்து இனிது மேவுவர் எந்நாளும் வளர் வானவர் தொழ துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே மேல் #3637 போழும் மதி பூண் அரவு கொன்றை மலர் துன்று சடை வென்றி புக மேல் வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் சூழும் இரவாளர் திரு மார்பில் விரி நூலர் வரி தோலர் உடை மேல் வேழ உரி போர்வையினர் மேவு பதி என்பர் திரு வேதிகுடியே மேல் #3638 காடர் கரி காலர் கனல் கையர் அனல் மெய்யர் உடல் செய்யர் செவியில் தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான் பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் வேடம் ஒளி ஆன பொடி பூசி இசை மேவு திரு வேதிகுடியே மேல் #3639 சொக்கர் துணை மிக்க எயில் உக்கு அற முனிந்து தொழும் மூவர் மகிழ தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான் கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா மிக்கு அமரர் மெச்சி இனிது அச்சம் இடர் போக நல்கு வேதிகுடியே மேல் #3640 செய்ய திரு மேனி மிசை வெண்பொடி அணிந்து கரு மான் உரிவை போர்த்து ஐயம் இடும் என்று மட மங்கையொடு அகம் திரியும் அண்ணல் இடம் ஆம் வையம் விலை மாறிடினும் ஏறு புகழ் மிக்கு இழிவு இலாத வகையார் வெய்ய மொழி தண் புலவருக்கு உரைசெயாத அவர் வேதிகுடியே மேல் #3641 உன்னி இருபோதும் அடி பேணும் அடியார்-தம் இடர் ஒல்க அருளி துன்னி ஒரு நால்வருடன் ஆல் நிழல் இருந்த துணைவன்-தன் இடம் ஆம் கன்னியரொடு ஆடவர்கள் மா மணம் விரும்பி அரு மங்கலம் மிக மின் இயலும் நுண் இடை நல் மங்கையர் இயற்று பதி வேதிகுடியே மேல் #3642 உர கரம் நெருப்பு எழ நெருக்கி வரை பற்றிய ஒருத்தன் முடி தோள் அரக்கனை அடர்த்தவன் இசைக்கு இனிது நல்கி அருள் அங்கணன் இடம் முருக்கு இதழ் மட கொடி மடந்தையரும் ஆடவரும் மொய்த்த கலவை விரை குழல் மிக கமழ விண் இசை உலாவு திரு வேதிகுடியே மேல் #3643 பூவின் மிசை அந்தணனொடு ஆழி பொலி அங்கையனும் நேட எரியாய் தேவும் இவர் அல்லர் இனி யாவர் என நின்று திகழ்கின்றவர் இடம் பாவலர்கள் ஓசை இயல் கேள்வி அது அறாத கொடையாளர் பயில்வு ஆம் மேவு அரிய செல்வம் நெடு மாடம் வளர் வீதி நிகழ் வேதிகுடியே மேல் #3644 வஞ்ச அமணர் தேரர் மதிகேடர் தம் மனத்து அறிவிலாதவர் மொழி தஞ்சம் என என்றும் உணராத அடியார் கருது சைவன் இடம் ஆம் அஞ்சுபுலன் வென்று அறு வகை பொருள் தெரிந்து எழு இசை கிளவியால் வெம் சினம் ஒழித்தவர்கள் மேவி நிகழ்கின்ற திரு வேதிகுடியே மேல் #3645 கந்தம் மலி தண் பொழில் நல் மாடம் மிடை காழி வளர் ஞானம் உணர் சம் பந்தன் மலி செந்தமிழின் மாலை கொடு வேதிகுடி ஆதி கழலே சிந்தைசெய வல்லவர்கள் நல்லவர்கள் என்ன நிகழ்வு எய்தி இமையோர் அந்த உலகு எய்தி அரசு ஆளுமதுவே சரதம் ஆணை நமதே மேல் 79. திருக்கோகரணம் : திருவிராகம்: பண் - சாதாரி #3646 என்றும் அரியான் அயலவர்க்கு இயல் இசை பொருள்கள் ஆகி எனது உள் நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் ஒன்றிய மனத்து அடியர் கூடி இமையோர் பரவும் நீடு அரவம் ஆர் குன்றுகள் நெருங்கி விரி தண்டலை மிடைந்து வளர் கோகரணமே மேல் #3647 பேதை மட மங்கை ஒருபங்கு இடம் மிகுத்து இடபம் ஏறி அமரர் வாதைபட வண் கடல் எழுந்த விடம் உண்ட சிவன் வாழும் இடம் ஆம் மாதரொடும் ஆடவர்கள் வந்து அடி இறைஞ்சி நிறை மா மலர்கள் தூய் கோதை வரி வண்டு இசை கொள் கீதம் முரல்கின்ற வளர் கோகரணமே மேல் #3648 முறைத்திறமுற பொருள் தெரிந்து முனிவர்க்கு அருளி ஆல நிழல்-வாய் மறைத்திறம் அறத்தொகுதி கண்டு சமயங்களை வகுத்தவன் இடம் துறைத்துறை மிகுத்து அருவி தூ மலர் சுமந்து வரை உந்தி மதகை குறைத்து அறையிட கரி புரிந்து இடறு சாரல் மலி கோகரணமே மேல் #3649 இலை தலை மிகுத்த படை எண் கரம் விளங்க எரி வீசி முடி மேல் அலைத்து அலை தொகுத்த புனல் செம் சடையில் வைத்த அழகன்-தன் இடம் ஆம் மலை தலை வகுத்த முழை-தோறும் உழை வாள் அரிகள் கேழல் களிறு கொலை தலை மட பிடிகள் கூடி விளையாடி நிகழ் கோகரணமே மேல் #3650 தொடைத்தலை மலைத்து இதழி துன்னிய எருக்கு அலரி வன்னி முடியின் சடை தலை மிலைச்சிய தபோதனன் எம் ஆதி பயில்கின்ற பதி ஆம் படை தலை பிடித்து மற வாளரொடு வேடர்கள் பயின்று குழுமி குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே மேல் #3651 நீறு திரு மேனி மிசை ஆடி நிறை வார் கழல் சிலம்பு ஒலிசெய ஏறு விளையாட விசைகொண்டு இடு பலிக்கு வரும் ஈசன் இடம் ஆம் ஆறு சமயங்களும் விரும்பி அடி பேணி அரன் ஆகமம் மிக கூறு வனம் ஏறு இரதி வந்து அடியர் கம்பம் வரு கோகரணமே மேல் #3652 கல்லவடம் மொந்தை குழல் தாளம் மலி கொக்கரையர் அக்கு அரை மிசை பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே நல்ல மட மாதர் அரன் நாமமும் நவிற்றிய திருத்தம் முழுக கொல்ல விட நோய் அகல்தர புகல் கொடுத்து அருளு கோகரணமே மேல் #3653 வரைத்தலம் நெருக்கிய முருட்டு இருள் நிறத்தவன வாய்கள் அலற விரல் தலை உகிர் சிறிது வைத்த பெருமான் இனிது மேவும் இடம் ஆம் புரை தலை கெடுத்த முனிவாணர் பொலிவு ஆகி வினை தீர அதன் மேல் குரைத்து அலை கழல் பணிய ஓமம் விலகும் புகைசெய் கோகரணமே மேல் #3654 வில்லிமையினால் விறல் அரக்கன் உயிர் செற்றவனும் வேதமுதலோன் இல்லை உளது என்று இகலி நேட எரி ஆகி உயர்கின்ற பரன் ஊர் எல்லை இல் வரைத்த கடல் வட்டமும் இறைஞ்சி நிறை வாசம் உருவ கொல்லையில் இரும் குறவர் தம் மயிர் புலர்த்தி வளர் கோகரணமே மேல் #3655 நேசம் இல் மன சமணர் தேரர்கள் நிரந்த மொழி பொய்கள் அகல்வித்து ஆசை கொள் மனத்தை அடியார் அவர்-தமக்கு அருளும் அங்கணன் இடம் பாசம் அது அறுத்து அவனியில் பெயர்கள் பத்து உடைய மன்னன் அவனை கூச வகை கண்டு பின் அவற்கு அருள்கள் நல்க வல கோகரணமே மேல் #3656 கோடல் அரவு ஈனும் விரி சாரல் முன் நெருங்கி வளர் கோகரணமே ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான் நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் பாட வல பத்தர் அவர் எத்திசையும் ஆள்வர் பரலோகம் எளிதே மேல் 80. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் - சாதாரி #3657 சீர் மருவு தேசினொடு தேசம் மலி செல்வ மறையோர்கள் பணிய தார் மருவு கொன்றை அணி தாழ் சடையினான் அமர் சயம் கொள் பதிதான் பார் மருவு பங்கயம் உயர்ந்த வயல் சூழ் பழனம் நீட அருகே கார் மருவு வெண் கனக மாளிகை கவின் பெருகு வீழிநகரே மேல் #3658 பட்ட முழவு இட்ட பணிலத்தினொடு பல் மறைகள் ஓது பணி நல் சிட்டர்கள் சயத்துதிகள் செய்ய அருள்செய் தழல் கொன் மேனியவன் ஊர் மட்டு உலவு செங்கமல வேலி வயல் செந்நெல் வளர் மன்னு பொழில்-வாய் விட்டு உலவு தென்றல் விரை நாறு பதி வேதியர்கள் வீழிநகரே மேல் #3659 மண் இழி சுரர்க்கு வளம் மிக்க பதி மற்றும் உள மன்னுயிர்களுக்கு எண் இழிவு இல் இன்பம் நிகழ்வு எய்த எழில் ஆர் பொழில் இலங்கு அறுபதம் பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் விண் இழி விமானம் உடை விண்ணவர்பிரான் மருவு வீழிநகரே மேல் #3660 செந்தமிழர் தெய்வ மறை நாவர் செழு நன் கலை தெரிந்தவரோடு அந்தம் இல் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்ய அமர்கின்ற அரன் ஊர் கொந்து அலர் பொழில் பழன வேலி குளிர் தண் புனல் வளம் பெருகவே வெம் திறல் விளங்கி வளர் வேதியர் விரும்பு பதி வீழிநகரே மேல் #3661 பூத பதி ஆகிய புராண முனி புண்ணிய நல் மாதை மருவி பேதம் அது இலாத வகை பாகம் மிக வைத்த பெருமானது இடம் ஆம் மாதவர்கள் அன்ன மறையாளர்கள் வளர்த்த மலி வேள்வி அதனால் ஏதம் அது இலாத வகை இன்பம் அமர்கின்ற எழில் வீழிநகரே மேல் #3662 மண்ணில் மறையோர் மருவு வைதிகமும் மா தவமும் மற்றும் உலகத்து எண் இல் பொருள் ஆயவை படைத்த இமையோர்கள் பெருமானது இடம் ஆம் நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் விண் உலவு மாளிகை நெருங்கி வளர் நீள் புரிசை வீழிநகரே மேல் #3663 மந்திர நல் மா மறையினோடு வளர் வேள்வி மிசை மிக்க புகை போய் அந்தர விசும்பு அணவி அற்புதம் என படரும் ஆழி இருள் வாய் மந்தர நல் மாளிகை நிலாவு மணி நீடு கதிர்விட்ட ஒளி போய் வெம் தழல் விளக்கு என விரும்பினர் திருந்து பதி வீழிநகரே மேல் #3664 ஆன வலியின் தசமுகன் தலை அரங்க அணி ஆழி விரலால் ஊன் அமர் உயர்ந்த குருதி புனலில் வீழ்தர உணர்ந்த பரன் ஊர் தேன் அமர் திருந்து பொழில் செங்கனக மாளிகை திகழ்ந்த மதிலோடு ஆன திரு உற்று வளர் அந்தணர் நிறைந்த அணி வீழிநகரே மேல் #3665 ஏன உரு ஆகி மண் இடந்த இமையோனும் எழில் அன்ன உருவம் ஆனவனும் ஆதியினொடு அந்தம் அறியாத அழல் மேனியவன் ஊர் வான் அணவும் மா மதில் மருங்கு அலர் நெருங்கிய வளம் கொள் பொழில்-வாய் வேனல் அமர்வு எய்திட விளங்கு ஒளியின் மிக்க புகழ் வீழிநகரே மேல் #3666 குண்டு அமணர் ஆகி ஒரு கோலம் மிகு பீலியொடு குண்டிகை பிடித்து எண் திசையும் இல்லது ஒரு தெய்வம் உளது என்பர் அது என்ன பொருள் ஆம் பண்டை அயன் அன்னவர்கள் பாவனை விரும்பு பரன் மேவு பதி சீர் வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே மேல் #3667 மத்தம் மலி கொன்றை வளர் வார் சடையில் வைத்த பரன் வீழிநகர் சேர் வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்பு தமிழ் மாலைகள் வலார் சித்திர விமானம் அமர் செல்வம் மலிகின்ற சிவலோகம் மருவி அத்தகு குணத்தவர்கள் ஆகி அனுபோகமொடு யோகம் அவரதே மேல் 81. திருத்தோணிபுரம் : திருவிராகம்: பண் - சாதாரி #3668 சங்கு அமரும் முன்கை மட மாதை ஒருபால் உடன் விரும்பி அங்கம் உடல் மேல் உற அணிந்து பிணி தீர அருள்செய்யும் எங்கள் பெருமான் இடம் என தகும் முனை கடலின் முத்தம் துங்க மணி இப்பிகள் கரைக்கு வரு தோணிபுரம் ஆமே மேல் #3669 சல்லரி யாழ் முழவம் மொந்தை குழல் தாளம் அது இயம்ப கல் அரிய மா மலையர்பாவை ஒருபாகம் நிலைசெய்து அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் சொல்ல அரிய தொண்டர் துதிசெய்ய வளர் தோணிபுரம் ஆமே மேல் #3670 வண்டு அரவு கொன்றை வளர் புன் சடையின் மேல் மதியம் வைத்து பண்டு அரவு தன் அரையில் ஆர்த்த பரமேட்டி பழி தீர கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் தொண்டர் அவர் மிண்டி வழிபாடு மல்கு தோணிபுரம் ஆமே மேல் #3671 கொல்லை விடை ஏறு உடைய கோவணவன் நா அணவும் மாலை ஒல்லை உடையான் அடையலார் அரணம் ஒள் அழல் விளைத்த வில்லை உடையான் மிக விரும்பு பதி மேவி வளர் தொண்டர் சொல்லை அடைவு ஆக இடர் தீர்த்து அருள்செய் தோணிபுரம் ஆமே மேல் #3672 தேயும் மதியம் சடை இலங்கிட விலங்கல் மலி கானில் காயும் அடு திண் கரியின் ஈர் உரிவை போர்த்தவன் நினைப்பார் தாய் என நிறைந்தது ஒரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு தூய மறையாளர் முறை ஓதி நிறை தோணிபுரம் ஆமே மேல் #3673 பற்றலர்-தம் முப்புரம் எரித்து அடி பணிந்தவர்கள் மேலை குற்றம் அது ஒழித்து அருளு கொள்கையினன் வெள்ளில் முதுகானில் பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் துற்ற சடை அத்தன் உறைகின்ற பதி தோணிபுரம் ஆமே மேல் #3674 பண் அமரும் நான்மறையர் நூல் முறை பயின்ற திரு மார்பில் பெண் அமரும் மேனியினர் தம் பெருமை பேசும் அடியார் மெய் திண் அமரும் வல்வினைகள் தீர அருள்செய்தல் உடையான் ஊர் துண்ணென விரும்பு சரியை தொழிலர் தோணிபுரம் ஆமே மேல் #3675 தென் திசை இலங்கை அரையன் திசைகள் வீரம் விளைவித்து வென்றி செய் புயங்களை அடர்த்து அருளும் வித்தகன் இடம் சீர் ஒன்று இசை இயல் கிளவி பாட மயில் ஆட வளர் சோலை துன்றுசெய வண்டு மலி தும்பி முரல் தோணிபுரம் ஆமே மேல் #3676 நாற்றம் மிகு மா மலரின் மேல் அயனும் நாரணனும் நாடி ஆற்றல் அதனால் மிக அளப்பு அரிய வண்ணம் எரி ஆகி ஊற்றம் மிகு கீழ்_உலகும் மேல்_உலகும் ஓங்கி எழு தன்மை தோற்றம் மிக நாளும் அரியான் உறைவு தோணிபுரம் ஆமே மேல் #3677 மூடு துவர் ஆடையினர் வேடம் நிலை காட்டும் அமண் ஆதர் கேடு பல சொல்லிடுவர் அம் மொழி கெடுத்து அடைவினான் அ காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் தோடு குழை பெய்தவர்-தமக்கு உறைவு தோணிபுரம் ஆமே மேல் #3678 துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய மஞ்சனை வணங்கு திரு ஞானசம்பந்தன சொல் மாலை தஞ்சம் என நின்று இசை மொழிந்த அடியார்கள் தடுமாற்றம் வஞ்சம் இலர் நெஞ்சு இருளும் நீங்கி அருள் பெற்று வளர்வாரே மேல் 82. திருஅவளிவணல்லூர் : திருவிராகம்: பண் - சாதாரி #3679 கொம்பு இரிய வண்டு உலவு கொன்றை புரி நூலொடு குலாவி தம் பரிசினோடு சுடு நீறு தடவந்து இடபம் ஏறி கம்பு அரிய செம்பொன் நெடு மாட மதில கல் வரை வில் ஆக அம்பு எரிய எய்த பெருமான் உறைவது அவளிவணலூரே மேல் #3680 ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி தூய்மை உடை அக்கொடு அரவம் விரவி மிக்கு ஒளி துளங்க ஆமையொடு பூணும் அடிகள் உறைவது அவளிவணலூரே மேல் #3681 நீறு உடைய மார்பில் இமவான்மகள் ஒர்பாகம் நிலைசெய்து கூறு உடைய வேடமொடு கூடி அழகு ஆயது ஒரு கோலம் ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் ஆறு உடைய வார் சடையினான் உறைவது அவளிவணலூரே மேல் #3682 பிணியும் இலர் கேடும் இலர் தோற்றம் இலர் என்று உலகு பேணி பணியும் அடியார்களன பாவம் அற இன்னருள் பயந்து துணி உடைய தோலும் உடை கோவணமும் நாகம் உடல் தொங்க அணியும் அழகு ஆக உடையான் உறைவது அவளிவணலூரே மேல் #3683 குழலின் வரி வண்டு முரல் மெல்லியன பொன் மலர்கள் கொண்டு கழலின் மிசை இண்டை புனைவார் கடவுள் என்று அமரர் கூடி தொழலும் வழிபாடும் உடையார் துயரும் நோயும் இலர் ஆவர் அழலும் மழு ஏந்து கையினான் உறைவது அவளிவணலூரே மேல் #3684 துஞ்சல் இலராய் அமரர் நின்று தொழுது ஏத்த அருள்செய்து நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி அஞ்ச மத வேழ உரியான் உறைவது அவளிவணலூரே மேல் #3685 கூடு அரவம் மொந்தை குழல் யாழ் முழவினோடும் இசைசெய்ய பீடு அரவம் ஆகு படர் அம்பு செய்து பேர் இடபமோடும் காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி ஆடு அரவம் ஆர்த்த பெருமான் உறைவது அவளிவணலூரே மேல் #3686 ஒருவரையும் மேல் வலி கொடேன் என எழுந்த விறலோன் இ பெரு வரையின் மேல் ஒர் பெருமானும் உளனோ என வெகுண்ட கரு வரையும் ஆழ் கடலும் அன்ன திறல் கைகள் உடையோனை அரு வரையில் ஊன்றி அடர்த்தான் உறைவது அவளிவணலூரே மேல் #3687 பொறி வரிய நாகம் உயர் பொங்கு அணை அணைந்த புகழோனும் வெறி வரிய வண்டு அறைய விண்ட மலர் மேல் விழுமியோனும் செறிவு அரிய தோற்றமொடு ஆற்றல் மிக நின்று சிறிதேயும் அறிவு அரியன் ஆய பெருமான் உறைவது அவளிவணலூரே மேல் #3688 கழி அருகு பள்ளி இடம் ஆக அடும் மீன்கள் கவர்வாரும் வழி அருகு சார வெயில் நின்று அடிசில் உள்கி வருவாரும் பழி அருகினார் ஒழிக பான்மையொடு நின்று தொழுது ஏத்தும் அழி அருவி தோய்ந்த பெருமான் உறைவது அவளிவணலூரே மேல் #3689 ஆன மொழி ஆன திறலோர் பரவும் அவளிவணலூர் மேல் போன மொழி நல் மொழிகள் ஆய புகழ் தோணிபுர ஊரன் ஞானமொழி மாலை பல நாடு புகழ் ஞானசம்பந்தன் தேன மொழி மாலை புகழ்வார் துயர்கள் தீயது இலர் தாமே மேல் 83. திருநல்லூர் : திருவிராகம்: பண் - சாதாரி #3690 வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ விடை ஏறி பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலே நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் தெண் திரைகள் மோத விரி போது கமழும் திரு நலூரே மேல் #3691 பல் வளரும் நாகம் அரை யாத்து வரைமங்கை ஒருபாகம் மல் வளர் புயத்தில் அணைவித்து மகிழும் பரமன் இடம் ஆம் சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட செல்வ மறையோர்கள் முறை ஏத்த வளரும் திரு நலூரே மேல் #3692 நீடு வரை மேரு வில் அது ஆக நிகழ் நாகம் அழல் அம்பால் கூடலர்கள் மூஎயில் எரித்த குழகன் குலவு சடை மேல் ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன் இடம் ஆம் சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே மேல் #3693 கருகு புரி மிடறர் கரி காடர் எரி கை அதனில் ஏந்தி அருகு வரு கரியின் உரி அதளர் பட அரவர் இடம் வினவில் முருகு விரி பொழிலின் மணம் நாற மயில் ஆல மரம் ஏறி திருகு சின மந்தி கனி சிந்த மது வார் திரு நலூரே மேல் #3694 பொடி கொள் திருமார்பர் புரி நூலர் புனல் பொங்கு அரவு தங்கும் முடி கொள் சடை தாழ விடை ஏறு முதலாளர் அவர் இடம் ஆம் இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய் தொழிலாளர் விழ மல்க செடி கொள் வினை அகல மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே மேல் #3695 புற்று அரவர் நெற்றி ஒர் கண் ஒற்றை விடை ஊர்வர் அடையாளம் சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள செற்றவர் இருப்பிடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே மேல் #3696 பொங்கு அரவர் அங்கம் உடல் மேல் அணிவர் ஞாலம் இடு பிச்சை தம் கரவம் ஆக உழிதந்து மெய் துலங்கிய வெண் நீற்றர் கங்கை அரவம் விரவு திங்கள் சடை அடிகள் இடம் வினவில் செங்கயல் வதி குதிகொளும் புனல் அது ஆர் திரு நலூரே மேல் #3697 ஏறு புகழ் பெற்ற தென்_இலங்கையவர்_கோனை அரு வரையில் சீறி அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும் கூறும் அடியார்கள் இசை பாடி வலம்வந்து அயரும் அருவி சேறு கமர் ஆன அழிய திகழ்தரும் திரு நலூரே மேல் #3698 மாலும் மலர் மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆய கோலம் உடையான் உணர்வு கோது இல் புகழான் இடம் அது ஆகும் நாலுமறை அங்கம் முதல் ஆறும் எரி மூன்று தழல் ஓம்பும் சீலம் உடையார்கள் நெடு மாடம் வளரும் திரு நலூரே மேல் #3699 கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர் பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள் வேடம் அவை பாரேல் ஏறு மடவாளொடு இனிது ஏறி முன் இருந்த இடம் என்பர் தேறும் மன வாரம் உடையார் குடிசெயும் திரு நலூரே மேல் #3700 திரைகள் இரு கரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர் மேல் பரசு தரு பாணியை நலம் திகழ்செய் தோணிபுர நாதன் உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன் இசை மாலை மொழிவார் போய் விரை செய் மலர் தூவ விதி பேணு கதி பேறு பெறுவாரே மேல் 84. திருப்புறவம் : திருவிராகம்: பண் - சாதாரி #3701 பெண் இயல் உருவினர் பெருகிய புனல் விரவிய பிறை கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி புண்ணிய மறையவர் நிறை புகழ் ஒலி மலி புறவமே மேல் #3702 கொக்குடை இறகொடு பிறையொடு குளிர் சடைமுடியினர் அக்குடை வடமும் ஒர் அரவமும் அலர் அரை மிசையினில் திக்குடை மருவிய உருவினர் திகழ் மலைமகளொடும் புக்கு உடன் உறைவது புது மலர் விரை கமழ் புறவமே மேல் #3703 கொங்கு இயல் சுரி குழல் வரி வளை இள முலை உமை ஒரு பங்கு இயல் திரு உரு உடையவர் பரசுவொடு இரலை மெய் தங்கிய கரதலம் உடையவர் விடையவர் உறை பதி பொங்கிய பொரு கடல் கொள அதன் மிசை உயர் புறவமே மேல் #3704 மா தவம் உடை மறையவன் உயிர் கொள வரு மறலியை மேதகு திருவடி இறை உற உயிர் அது விலகினார் சாதக உரு இயல் சுரனிடை உமை வெருவுற வரு போதக உரி அதள் மருவினர் உறை பதி புறவமே மேல் #3705 காமனை அழல் கொள விழிசெய்து கருதலர் கடி மதில் தூமம் அது உற விறல் சுடர் கொளுவிய இறை தொகு பதி ஓமமொடு உயர் மறை பிற இய வகை-தனொடு ஒளி கெழு பூமகன் அலரொடு புனல் கொடு வழிபடு புறவமே மேல் #3706 சொல் நயம் உடையவர் சுருதிகள் கருதிய தொழிலினர் பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட முன்னைய முதல் வினை அற அருளினர் உறை முது பதி புன்னையின் முகை நெதி பொதி அவிழ் பொழில் அணி புறவமே மேல் #3707 வரி தரு புலி அதள் உடையினர் மழு எறி படையினர் பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் எரிதரும் உருவினர் இமையவர் தொழுவது ஒர் இயல்பினர் புரிதரு குழல் உமையொடும் இனிது உறை பதி புறவமே மேல் #3708 வசி தரும் உருவொடு மலர் தலை உலகினை வலிசெயும் நிசிசரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிவுற ஒசிதர ஒரு விரல் நிறுவினர் ஒளி வளர் வெளி பொடி பொசிதரு திரு உரு உடையவர் உறை பதி புறவமே மேல் #3709 தேன் அகம் மருவிய செறிதரு முளரி செய் தவிசினில் ஊன் அகம் மருவிய புலன் நுகர்வு உணர்வுடை ஒருவனும் வானகம் வரையகம் மறி கடல் நிலன் எனும் எழு வகை போனகம் மருவினன் அறிவு அரியவர் பதி புறவமே மேல் #3710 கோசரம் நுகர்பவர் கொழுகிய துவர் அன துகிலினர் பாசுர வினை தரு பளகர்கள் பழி தரு மொழியினர் நீசரை விடும் இனி நினைவுறும் நிமலர்-தம் உறை பதி பூசுரர் மறை பயில் நிறை புகழ் ஒலி மலி புறவமே மேல் #3711 போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை வேதியர்_அதிபதி மிகு தலை தமிழ் கெழு விரகினன் ஓதிய ஒரு பதும் உரியது ஒர் இசை கொள உரைசெயும் நீதியர் அவர் இரு நிலனிடை நிகழ்தரு பிறவியே மேல் 85. திருவீழிமிழலை : திருவிராகம்: பண் - சாதாரி #3712 மட்டு ஒளி விரிதரு மலர் நிறை சுரி குழல் மடவரல் பட்டு ஒளி மணி அல்குல் உமை அமை உரு ஒருபாகமா கட்டு ஒளிர் புனலொடு கடி அரவு உடன் உறை முடி மிசை விட்டு ஒளி உதிர் பிதிர் மதியவர் பதி விழிமிழலையே மேல் #3713 எண் நிற வரி வளை நெறி குழல் எழில் மொழி இள முலை பெண் உறும் உடலினர் பெருகிய கடல் விடம் மிடறினர் கண் உறு நுதலினர் கடியது ஒர் விடையினர் கனலினர் விண் உறு பிறை அணி சடையினர் பதி விழிமிழலையே மேல் #3714 மை தகு மதர் விழி மலைமகள் உரு ஒருபாகமா வைத்தவர் மத கரி உரிவை செய்தவர் தமை மருவினார் தெத்தென இசை முரல் சரிதையர் திகழ்தரும் அரவினர் வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே மேல் #3715 செ அழல் என நனி பெருகிய உருவினர் செறிதரு கவ்வு அழல் அரவினர் கதிர் முதிர் மழுவினர் தொழு இலா மு அழல் நிசிசரர் விறல் அவை அழிதர முது மதில் வெவ் அழல் கொள நனி முனிபவர் பதி விழிமிழலையே மேல் #3716 பைம் கணது ஒரு பெரு மழலை வெள் ஏற்றினர் பலி எனா எங்கணும் உழிதர்வர் இமையவர் தொழுது எழும் இயல்பினர் அங்கணர் அமரர்கள் அடி இணை தொழுது எழ ஆரமா வெம் கண அரவினர் உறைதரு பதி விழிமிழலையே மேல் #3717 பொன் அன புரிதரு சடையினர் பொடி அணி வடிவினர் உன்னினர் வினை அவை களைதலை மருவிய ஒருவனார் தென்னென இசை முரல் சரிதையர் திகழ்தரும் மார்பினில் மின் என மிளிர்வது ஒர் அரவினர் பதி விழிமிழலையே மேல் #3718 அக்கினொடு அரவு அரை அணி திகழ் ஒளியது ஒர் ஆமை பூண்டு இக்கு உக மலி தலை கலன் என இடு பலி ஏகுவர் கொக்கரை குழல் முழ விழவொடும் இசைவது ஒர் சரிதையர் மிக்கவர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே மேல் #3719 பாதம் ஒர் விரல் உற மலை அடர் பல தலை நெரிதர பூதமொடு அடியவர் புனை கழல் தொழுது எழு புகழினர் ஓதமொடு ஒலி திரை படு கடல் விடம் உடை மிடறினர் வேதமொடு உறு தொழில் மதியவர் பதி விழிமிழலையே மேல் #3720 நீர் அணி மலர் மிசை உறைபவன் நிறை கடல் உறு துயில் நாரணன் என இவர் இருவரும் நறு மலர் அடி முடி ஓர் உணர்வினர் செலலுறல் அரும் உருவினொடு ஒளி திகழ் வீர அணர் உறைவது வெறி கமழ் பொழில் விழிமிழலையே மேல் #3721 இச்சையர் இனிது என இடு பலி படுதலை மகிழ்வது ஒர் பிச்சையர் பெருமையை இறைபொழுது அறிவு என உணர்வு இலர் மொச்சைய அமணரும் முடை படு துகிலரும் அழிவது ஒர் விச்சையர் உறைவது விரை கமழ் பொழில் விழிமிழலையே மேல் #3722 உன்னிய அரு மறை ஒலியினை முறை மிகு பாடல்செய் இன்னிசையவர் உறை எழில் திகழ் பொழில் விழிமிழலையை மன்னிய புகலியுள் ஞானசம்பந்தன வண் தமிழ் சொன்னவர் துயர் இலர் வியன்_உலகு உறு கதி பெறுவரே மேல் 86. திருச்சேறை : திருவிராகம்: பண் - சாதாரி #3723 முறி உறு நிறம் மல்கு முகிழ் முலை மலைமகள் வெருவ முன் வெறி உறு மத கரி அதள்பட உரிசெய்த விறலினர் நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே மேல் #3724 புனம் உடை நறு மலர் பல கொடு தொழுவது ஒர் புரிவினர் மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர் இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர் சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே மேல் #3725 புரிதரு சடையினர் புலி அதள் அரையினர் பொடி புல்கும் எரி தரும் உருவினர் இடபம் அது ஏறுவர் ஈடு உலா வரி தரு வளையினர் அவரவர் மகிழ்தர மனை-தொறும் திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே மேல் #3726 துடி படும் இடை உடை மடவரலுடன் ஒரு பாகமா இடிபடு குரல் உடை விடையினர் படம் உடை அரவினர் பொடி படும் உருவினர் புலி உரி பொலிதரும் அரையினர் செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே மேல் #3727 அந்தரம் உழிதரு திரிபுரம் ஒரு நொடி அளவினில் மந்தர வரி சிலை அதனிடை அரவு அரி வாளியால் வெந்து அழிதர எய்த விடலையர் விடம் அணி மிடறினர் செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே மேல் #3728 மந்தரம் உறு திறல் மறவர்-தம் வடிவு கொடு உருவு உடை பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால் அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே மேல் #3729 பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம் ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய வாடினர் படு தலை இடு பலி அது கொடு மகிழ்தரும் சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே மேல் #3730 கட்டு உரம் அது கொடு கயிலை நல் மலை நலி கரம் உடை நிட்டுரன் உடலொடு நெடு முடி ஒரு பதும் நெரிசெய்தார் மட்டு உரம் மலரடி அடியவர் தொழுது எழ அருள்செயும் சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே மேல் #3731 பன்றியர் பறவையர் பரிசு உடை வடிவொடு படர்தர அன்றிய அவரவர் அடியொடு முடி அவை அறிகிலார் நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே மேல் #3732 துகள் துறு விரி துகில் உடையவர் அமண் எனும் வடிவினர் விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல வினவிடல் முகிழ்தரும் இள மதி அரவொடும் அழகுற முதுநதி திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே மேல் #3733 கற்ற நல் மறை பயில் அடியவர் அடி தொழு கவினுறு சிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறை மேல் குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தன சொல் தகவுற மொழிபவர் அழிவு இலர் துயர் தீருமே மேல் 87. திருநள்ளாறு : திருவிராகம்: பண் - சாதாரி #3734 தளிர் இள வளர் ஒளி தனது எழில் தரு திகழ் மலைமகள் குளிர் இள வளர் ஒளி வன முலை இணை அவை குலவலின் நளிர் இள வளர் ஒளி மருவும் நள்ளாறர்-தம் நாமமே மிளிர் இள வளர் எரி இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3735 போது அமர்தரு புரி குழல் எழில் மலைமகள் பூண் அணி சீதம் அது அணிதரு முகிழ் இள வன முலை செறிதலின் நாதம் அது எழில் உரு அனைய நள்ளாறர்-தம் நாமமே மீ தமது எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3736 இட்டு உறும் மணி அணி இணர் புணர் வளர் ஒளி எழில் வடம் கட்டுறு கதிர் இள வன முலை இணையொடு கலவலின் நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே இட்டு உறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3737 மைச்சு அணி வரி அரி நயனி தொல் மலைமகள் பயன் உறு கச்சு அணி கதிர் இள வன முலை அவையொடு கலவலின் நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே மெச்சு அணி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3738 பண் இயல் மலைமகள் கதிர்விடு பரு மணி அணி நிற கண் இயல் கலசம் அது அன முலை இணையொடு கலவலின் நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே விண் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3739 போதுறு புரி குழல் மலைமகள் இள வளர் பொன் அணி சூதுறு தளிர் நிற வன முலை அவையொடு துதைதலின் தாதுறு நிறம் உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே மீதுறும் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3740 கார் மலி நெறி புரி சுரி குழல் மலைமகள் கவினுறு சீர் மலிதரும் மணி அணி முலை திகழ்வொடு செறிதலின் தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே ஏர் மலி எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3741 மன்னிய வளர் ஒளி மலைமகள் தளிர் நிறம் மதம் மிகு பொன் இயல் மணி அணி கலசம் அது அன முலை புணர்தலின் தன் இயல் தசமுகன் நெறிய நள்ளாறர்-தம் நாமமே மின் இயல் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3742 கான் முக மயில் இயல் மலைமகள் கதிர்விடு கனம் மிகு பால் முகம் அயல் பணை இணை முலை துணையொடு பயிறலின் நான்முகன் அரி அறிவு அரிய நள்ளாறர்-தம் நாமமே மேல் முக எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3743 அத்திர நயனி தொல் மலைமகள் பயன் உறும் அதிசய சித்திர மணி அணி திகழ் முலை இணையொடு செறிதலின் புத்தரொடு அமணர் பொய் பெயரும் நள்ளாறர்-தம் நாமமே மெய் திரள் எரியினில் இடில் இவை பழுது இலை மெய்ம்மையே மேல் #3744 சிற்றிடை அரிவை-தன் வன முலை இணையொடு செறிதரும் நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன கொற்றவன் எதிரிடை எரியினில் இட இவை கூறிய சொல் தெரி ஒரு பதும் அறிபவர் துயர் இலர் தூயரே மேல் 88. திருவிளமர் : திருவிராகம்: பண் - சாதாரி #3745 மத்தகம் அணி பெற மலர்வது ஒர் மதி புரை நுதல் கரம் ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் அ தகவு அடி தொழ அருள் பெறு கண்ணொடும் உமையவள் வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே மேல் #3746 பட்டு இலகிய முலை அரிவையர் உலகினில் இடு பலி ஒட்டு இலகு இணை மர அடியினர் உமை உறு வடிவினர் சிட்டு இலகு அழகிய பொடியினர் விடை மிசை சேர்வது ஒர் விட்டு இலகு அழகு ஒளி பெயரவர் உறைவது விளமரே மேல் #3747 அம் கதிர் ஒளியினர் அரை இடை மிளிர்வது ஒர் அரவொடு செம் கதிர் அன நிறம் அனையது ஒர் செழு மணி மார்பினர் சங்கு அதிர் பறை குழல் முழவினொடு இசைதரு சரிதையர் வெம் கதிர் உறும் மழு உடையவர் இடம் எனில் விளமரே மேல் #3748 மாடம் அது என வளர் மதில் அவை எரிசெய்வர் விரவு சீர் பீடு என அரு மறை உரைசெய்வர் பெரிய பல் சரிதைகள் பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே மேல் #3749 பண் தலை மழலைசெய் யாழ் என மொழி உமை பாகமா கொண்டு அலை குரை கழல் அடி தொழுமவர் வினை குறுகிலர் விண் தலை அமரர்கள் துதிசெய அருள்புரி விறலினர் வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே மேல் #3750 மனைகள்-தொறு இடு பலி அது கொள்வர் மதி பொதி சடையினர் கனை கடல் அடு விடம் அமுதுசெய் கறை அணி மிடறினர் முனை கெட வரு மதில் எரிசெய்த அவர் கழல் பரவுவார் வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே மேல் #3751 நெறி கமழ்தரும் உரை உணர்வினர் புணர்வுறு மடவரல் செறி கமழ்தரு உரு உடையவர் படை பல பயில்பவர் பொறி கமழ்தரு படஅரவினர் விரவிய சடை மிசை வெறி கமழ்தரு மலர் அடைபவர் இடம் எனில் விளமரே மேல் #3752 தெண் கடல் புடை அணி நெடு மதில் இலங்கையர்_தலைவனை பண் பட வரை-தனில் அடர்செய்த பைம் கழல் வடிவினர் திண் கடல் அடை புனல் திகழ் சடை புகுவது ஒர் சேர்வினார் விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே மேல் #3753 தொண்டு அசைவுற வரு துயர் உறு காலனை மாள்வுற அண்டல்செய்து இருவரை வெருவுற ஆர் அழல் ஆயினார் கொண்டல் செய்தரு திரு மிடறினர் இடம் எனில் அளி இனம் விண்டு இசையுறு மலர் நறு மது விரி பொழில் விளமரே மேல் #3754 ஒள்ளியர் தொழுது எழ உலகினில் உரைசெயும் மொழி பல கொள்ளிய களவினர் குண்டிகையவர் தவம் அறிகிலார் பள்ளியை மெய் என கருதன்-மின் பரிவொடு பேணுவீர் வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே மேல் #3755 வெந்த வெண்பொடி அணி அடிகளை விளமருள் விகிர்தரை சிந்தையுள் இடைபெற உரைசெய்த தமிழ் இவை செழுவிய அந்தணர் புகலியுள் அழகு அமர் அரு மறை ஞானசம் பந்தன மொழி இவை உரைசெயுமவர் வினை பறையுமே மேல் 89. திருக்கொச்சைவயம் : பண் - சாதாரி #3756 திருந்து மா களிற்று இள மருப்பொடு திரள் மணி சந்தம் உந்தி குருந்து மா குரவமும் குடசமும் பீலியும் சுமந்து கொண்டு நிரந்து மா வயல் புகு நீடு கோட்டாறு சூழ் கொச்சை மேவி பொருந்தினார் திருந்து அடி போற்றி வாழ் நெஞ்சமே புகல் அது ஆமே மேல் #3757 ஏலம் ஆர் இலவமோடு இன மலர் தொகுதியாய் எங்கும் நுந்தி கோல மா மிளகொடு கொழும் கனி கொன்றையும் கொண்டு கோட்டாறு ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் நீலம் ஆர் கண்டனை நினை மட நெஞ்சமே அஞ்சல் நீயே மேல் #3758 பொன்னும் மா மணி கொழித்து எறி புனல் கரைகள்-வாய் நுரைகள் உந்தி கன்னிமார் முலை நலம் கவர வந்து ஏறு கோட்டாறு சூழ மன்னினார் மாதொடும் மருவு இடம் கொச்சையே மருவின் நாளும் முன்னை நோய் தொடரும் ஆறு இல்லை காண் நெஞ்சமே அஞ்சல் நீயே மேல் #3759 கந்தம் ஆர் கேதகை சந்தன காடு சூழ் கதலி மாடே வந்து மா வள்ளையின் பவர் அளி குவளையை சாடி ஓட கொந்து வார் குழலினார் குதிகொள் கோட்டாறு சூழ் கொச்சை மேய எந்தையார் அடி நினைந்து உய்யல் ஆம் நெஞ்சமே அஞ்சல் நீயே மேல் #3760 மறை கொளும் திறலினார் ஆகுதி புகைகள் வான் அண்ட மிண்டி சிறைகொளும் புனல் அணி செழு மதி திகழ் மதில் கொச்சை-தன்-பால் உறைவிடம் என மனம் அது கொளும் பிரமனார் சிரம் அறுத்த இறைவனது அடி இணை இறைஞ்சி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே மேல் #3761 சுற்றமும் மக்களும் தொக்க அ தக்கனை சாடி அன்றே உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் குற்றம் இல் அடியவர் குழுமிய வீதி சூழ் கொச்சை மேவி நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே மேல் #3762 கொண்டலார் வந்திட கோல வார் பொழில்களில் கூடி மந்தி கண்ட வார் கழை பிடித்து ஏறி மா முகில்-தனை கதுவு கொச்சை அண்ட வானவர்களும் அமரரும் முனிவரும் பணிய ஆலம் உண்ட மா கண்டனார்-தம்மையே உள்கு நீ அஞ்சல் நெஞ்சே மேல் #3763 அடல் எயிற்று அரக்கனார் நெருக்கி மா மலை எடுத்து ஆர்த்த வாய்கள் உடல் கெட திரு விரல் ஊன்றினார் உறைவிடம் ஒளி கொள் வெள்ளி மடலிடை பவளமும் முத்தமும் தொத்து வண் புன்னை மாடே பெடையொடும் குருகு இனம் பெருகு தண் கொச்சையே பேணு நெஞ்சே மேல் #3764 அரவினில் துயில்தரும் அரியும் நல் பிரமனும் அன்று அயர்ந்து குரை கழல் திரு முடி அளவு இட அரியவர் கோங்கு செம்பொன் விரி பொழிலிடை மிகு மலைமகள் மகிழ்தர வீற்றிருந்த கரிய நல் மிடறு உடை கடவுளார் கொச்சையே கருது நெஞ்சே மேல் #3765 கடு மலி உடல் உடை அமணரும் கஞ்சி உண் சாக்கியரும் இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் உடையவன் கொச்சையே உள்கி வாழ் நெஞ்சமே அஞ்சல் நீயே மேல் #3766 காய்ந்து தம் காலினால் காலனை செற்றவர் கடி கொள் கொச்சை ஆய்ந்து கொண்டு இடம் என இருந்த நல் அடிகளை ஆதரித்தே ஏய்த்த தொல் புகழ் மிகும் எழில் மறை ஞானசம்பந்தன் சொன்ன வாய்ந்த இ மாலைகள் வல்லவர் நல்லர் வான்_உலகின் மேலே மேல் 90. திருத்துருத்தியும், திருவேள்விக்குடியும் : பண் - சாதாரி #3767 ஓங்கி மேல் உழிதரும் ஒலி புனல் கங்கையை ஒரு சடை மேல் தாங்கினார் இடு பலி தலை கலனா கொண்ட தம் அடிகள் பாங்கினால் உமையொடும் பகலிடம் புகலிடம் பைம் பொழில் சூழ் வீங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3768 தூறு சேர் சுடலையில் சுடர் எரி ஆடுவர் துளங்கு ஒளி சேர் நீறு சாந்து என உகந்து அணிவர் வெண் பிறை மல்கு சடைமுடியார் நாறு சாந்து இள முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் வீறு சேர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3769 மழை வளர் இள மதி மலரொடு தலை புல்கு வார் சடை மேல் கழை வளர் புனல் புக கண்ட எம் கண்நுதல் கபாலியார்தாம் இழை வளர் துகில் அல்குல் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் விழை வளர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3770 கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த சுரும்பொடு தேன் மல்கு தூ மலர் கொன்றை அம் சுடர் சடையார் அரும்பு அன வன முலை அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் விரும்பு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3771 வளம் கிளர் மதியமும் பொன் மலர் கொன்றையும் வாள் அரவும் களம் கொள சடையிடை வைத்த எம் கண்நுதல் கபாலியார்தாம் துளங்கு நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் விளங்கு நீர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3772 பொறி உலாம் அடு புலி உரிவையர் வரி அரா பூண்டு இலங்கும் நெறி உலாம் பலி கொளும் நீர்மையர் சீர்மையை நினைப்பு அரியார் மறி உலாம் கையினர் மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் வெறி உலாம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3773 புரிதரு சடையினர் புலி உரி அரையினர் பொடி அணிந்து திரிதரும் இயல்பினர் திரிபுரம் மூன்றையும் தீ வளைத்தார் வரி தரு வன முலை மங்கையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் விரிதரு துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3774 நீண்டு இலங்கு அவிர் ஒளி நெடு முடி அரக்கன் இ நீள் வரையை கீண்டு இடந்திடுவன் என்று எழுந்தவன் ஆள்வினை கீழ்ப்படுத்தார் பூண்ட நூல் மார்பினர் அரிவையோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் வேண்டு இடம் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3775 கரை கடல் அரவு அணை கடவுளும் தாமரை நான்முகனும் குரை கழல் அடி தொழ கூர் எரி என நிறம் கொண்ட பிரான் வரை கெழு மகளொடும் பகலிடம் புகலிடம் வண் பொழில் சூழ் விரை கமழ் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3776 அயம் முகம் வெயில் நிலை அமணரும் குண்டரும் சாக்கியரும் நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் கயல் உம வரி நெடும் கண்ணியோடு ஒரு பகல் அமர்ந்த பிரான் வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே மேல் #3777 விண் உலாம் விரி பொழில் விரை மணல் துருத்தி வேள்விக்குடியும் ஒண் உலாம் ஒலி கழல் ஆடுவார் அரிவையோடு உறை பதியை நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன பண் உலாம் அரும் தமிழ் பாடுவார் ஆடுவார் பழி இலரே மேல் 91. திருவடகுரங்காடுதுறை : பண் - சாதாரி #3778 கோங்கமே குரவமே கொழு மலர் புன்னையே கொகுடி முல்லை வேங்கையே ஞாழலே விம்மு பாதிரிகளே விரவி எங்கும் ஓங்கு மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை வீங்கு நீர் சடைமுடி அடிகளார் இடம் என விரும்பினாரே மேல் #3779 மந்தமாய் இழி மத களிற்று இள மருப்பொடு பொருப்பின் நல்ல சந்தம் ஆர் அகிலொடு சாதியின் பலங்களும் தகைய மோதி உந்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை எந்தையார் இணை அடி இமையவர் தொழுது எழும் இயல்பினாரே மேல் #3780 முத்தும் மா மணியொடு முழை வளர் ஆரமும் முகந்து நுந்தி எத்து மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை மத்த மா மலரொடு மதி பொதி சடைமுடி அடிகள்-தம் மேல் சித்தம் ஆம் அடியவர் சிவகதி பெறுவது திண்ணம் அன்றே மேல் #3781 கறியும் மா மிளகொடு கதலியின் பலங்களும் கலந்து நுந்தி எறியும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை மறி உலாம் கையினர் மலரடி தொழுது எழ மருவும் உள்ள குறியினார் அவர் மிக கூடுவார் நீடு வான்_உலகினூடே மேல் #3782 கோடிடை சொரிந்த தேன் அதனொடும் கொண்டல் வாய்விண்ட முன்நீர் காடு உடை பீலியும் கடறு உடை பண்டமும் கலந்து நுந்தி ஓடு உடை காவிரி வடகரை அடை குரங்காடுதுறை பீடு உடை சடைமுடி அடிகளார் இடம் என பேணினாரே மேல் #3783 கோல மா மலரொடு தூபமும் சாந்தமும் கொண்டு போற்றி வாலியார் வழிபட பொருந்தினார் திருந்து மாங்கனிகள் உந்தி ஆலும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை நீல மா மணி மிடற்று அடிகளை நினைய வல்வினைகள் வீடே மேல் #3784 நீல மா மணி நிறத்து அரக்கனை இருபது கரத்தொடு ஒல்க வாலினால் கட்டிய வாலியார் வழிபட மன்னு கோயில் ஏலமோடு இலை இலவங்கமே இஞ்சியே மஞ்சள் உந்தி ஆலியா வரு புனல் வடகரை அடை குரங்காடுதுறையே மேல் #3785 பொரும் திறல் பெருங்கைமா உரித்து உமை அஞ்சவே ஒருங்கி நோக்கி பெரும் திறத்து அநங்கனை அநங்கமா விழித்ததும் பெருமை போலும் வரும் திறல் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை அரும் திறத்து இருவரை அல்லல் கண்டு ஓங்கிய அடிகளாரே மேல் #3786 கட்டு அமண் தேரரும் கடுக்கள் தின் கழுக்களும் கசிவு ஒன்று இல்லா பிட்டர்-தம் அறவுரை கொள்ளலும் பெரு வரை பண்டம் உந்தி எட்டும் மா காவிரி வடகரை அடை குரங்காடுதுறை சிட்டனார் அடி தொழ சிவகதி பெறுவது திண்ணம் ஆமே மேல் #3787 தாழ் இளம் காவிரி வடகரை அடை குரங்காடுதுறை போழ் இள மதி பொதி புரிதரு சடைமுடி புண்ணியனை காழியான் அரு மறை ஞானசம்பந்தன கருது பாடல் கோழையா அழைப்பினும் கூடுவார் நீடு வான்_உலகினூடே மேல் 92. திருநெல்வேலி : பண் - சாதாரி #3788 மருந்து அவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றும் எல்லாம் அரும் துயர் கெடும் அவர் நாமமே சிந்தைசெய் நன் நெஞ்சமே பொருந்து தண் புறவினில் கொன்றை பொன் சொரிதர துன்று பைம் பூம் செருத்தி செம்பொன் மலர் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3789 என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறி சென்று தாம் செடிச்சியர் மனை-தொறும் பலிகொளும் இயல்பு அதுவே துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகை போது அளைந்து தென்றல் வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3790 பொறி கிளர் அரவமும் போழ் இள மதியமும் கங்கை என்னும் நெறி படு குழலியை சடை மிசை சுலவி வெண் நீறு பூசி கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் செறி பொழில் தழுவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3791 காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல்செய்து அருளவேயும் பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி ஈண்டு மா மாடங்கள் மாளிகை மீது எழு கொடி மதியம் தீண்டி வந்து உலவிய திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3792 ஏன வெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இள அரவும் கூனல் வெண் பிறை தவழ் சடையினர் கொல் புலி தோல் உடையார் ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அரு மறைகள் தேனில் வண்டு அமர் பொழில் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3793 வெடி தரு தலையினர் வேனல் வெள் ஏற்றினர் விரி சடையர் பொடி அணி மார்பினர் புலி அதள் ஆடையர் பொங்கு அரவர் வடிவு உடை மங்கை ஓர்பங்கினர் மாதரை மையல் செய்வார் செடி படு பொழில் அணி திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3794 அக்கு உலாம் அரையினர் திரை உலாம் முடியினர் அடிகள் அன்று தக்கனார் வேள்வியை சாடிய சதுரனார் கதிர் கொள் செம்மை புக்கது ஓர் புரிவினர் வரி தரு வண்டு பண் முரலும் சோலை திக்கு எலாம் புகழ் உறும் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3795 முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரிதரவே உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார் கந்தம் ஆர்தரு பொழில் மந்திகள் பாய்தர மது திவலை சிந்து பூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3796 பைம் கண் வாள் அரவு_அணையவனொடு பனி மலரோனும் காணாது அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார் சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேண திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3797 துவர் உறு விரி துகில் ஆடையர் வேடம் இல் சமணர் என்னும் அவர் உறு சிறுசொலை அவம் என நினையும் எம் அண்ணலார்தாம் கவர் உறு கொடி மல்கு மாளிகை சூளிகை மயில்கள் ஆல திவர் உறு மதி தவழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே மேல் #3798 பெரும் தண் மா மலர் மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வி திருந்து மா மறையவர் திரு நெல்வேலி உறை செல்வர்-தம்மை பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன அரும் தமிழ் மாலைகள் பாடி ஆட கெடும் அருவினையே மேல் 93. திருஅம்பர்மாகாளம் : பண் - சாதாரி #3799 படியுள் ஆர் விடையினர் பாய் புலி தோலினர் பாவநாசர் பொடி கொள் மா மேனியர் பூதம் ஆர் படையினர் பூண நூலர் கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் அடிகளார் அருள்புரிந்து இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3800 கையில் மான் மழுவினர் கடு விடம் உண்ட எம் காள கண்டர் செய்ய மா மேனியர் ஊன் அமர் உடை தலை பலி திரிவார் வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் ஐயன் மா தேவியோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3801 பரவின அடியவர் படு துயர் கெடுப்பவர் பரிவு இலார்-பால் கரவினர் கனல் அன உருவினர் படுதலை பலிகொடு ஏகும் இரவினர் பகல் எரிகானிடை ஆடிய வேடர் பூணும் அரவினர் அரிவையோடு இருப்பிஇடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3802 நீற்றினர் நீண்ட வார் சடையினர் படையினர் நிமலர் வெள்ளை ஏற்றினர் எரி புரி கரத்தினர் புரத்துளார் உயிரை வவ்வும் கூற்றினர் கொடியிடை முனிவுற நனி வரும் குலவு கங்கை ஆற்றினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3803 புறத்தினர் அகத்து உளர் போற்றி நின்று அழுது எழும் அன்பர் சிந்தை திறத்தினர் அறிவு இலா செது மதி தக்கன்-தன் வேள்வி செற்ற மறத்தினர் மா தவர் நால்வருக்கு ஆலின் கீழ் அருள்புரிந்த அறத்தினர் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3804 பழக மா மலர் பறித்து இண்டை கொண்டு இறைஞ்சுவார்-பால் செறிந்த குழகனார் குணம் புகழ்ந்து ஏத்துவார் அவர் பலர் கூட நின்ற கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் அழகனார் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3805 சங்க வார் குழையினர் தழல் அன உருவினர் தமது அருளே எங்குமாய் இருந்தவர் அரும் தவ முனிவருக்கு அளித்து உகந்தார் பொங்கு மா புனல் பரந்து அரிசிலின் வடகரை திருத்தம் பேணி அங்கம் ஆறு ஓதுவார் இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3806 பொரு சிலை மதனனை பொடிபட விழித்தவர் பொழில் இலங்கை குரிசிலை குல வரை கீழ் உற அடர்த்தவர் கோயில் கூறில் பெரு சிலை நல மணி பீலியோடு ஏலமும் பெருக நுந்தும் அரசிலின் வடகரை அழகு அமர் அம்பர்மாகாளம்தானே மேல் #3807 வரி அரா அதன் மிசை துயின்றவன்தானும் மா மலருளானும் எரியரா அணி கழல் ஏத்த ஒண்ணா வகை உயர்ந்து பின்னும் பிரியர் ஆம் அடியவர்க்கு அணியராய் பணிவு இலாதவருக்கு என்றும் அரியராய் அரிவையோடு இருப்பிடம் அம்பர்மாகாளம்தானே மேல் #3808 சாக்கிய கயவர் வன் தலை பறிக்கையரும் பொய்யினால் நூல் ஆக்கிய மொழி அவை பிழையவை ஆதலில் வழிபடுவீர் வீக்கிய அரவு உடை கச்சையான் இச்சை ஆனவர்கட்கு எல்லாம் ஆக்கிய அரன் உறை அம்பர்மாகாளமே அடை-மின் நீரே மேல் #3809 செம்பொன் மா மணி கொழித்து எழு திரை வரு புனல் அரிசில் சூழ்ந்த அம்பர்மாகாளமே கோயிலா அணங்கினோடு இருந்த கோனை கம்பின் ஆர் நெடு மதில் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே மேல் 94. திருவெங்குரு : திருமுக்கால் : பண் - சாதாரி #3810 விண்ணவர் தொழுது எழு வெங்குரு மேவிய சுண்ண வெண்பொடி அணிவீரே சுண்ண வெண்பொடி அணிவீர் உம தொழு கழல் எண்ண வல்லார் இடர் இலரே மேல் #3811 வேதியர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆதிய அரு மறையீரே ஆதிய அரு மறையீர் உமை அலர் கொடு ஓதியர் உணர்வு உடையோரே மேல் #3812 விளங்கு தண் பொழில் அணி வெங்குரு மேவிய இளம் பிறை அணி சடையீரே இளம் பிறை அணி சடையீர் உமது இணையடி உளம் கொள உறு பிணி இலரே மேல் #3813 விண்டு அலர் பொழில் அணி வெங்குரு மேவிய வண்டு அமர் வளர் சடையீரே வண்டு அமர் வளர் சடையீர் உமை வாழ்த்தும் அ தொண்டர்கள் துயர் பிணி இலரே மேல் #3814 மிக்கவர் தொழுது எழு வெங்குரு மேவிய அக்கினொடு அரவு அசைத்தீரே அக்கினொடு அரவு அசைத்தீர் உமது அடி இணை தக்கவர் உறுவது தவமே மேல் #3815 வெந்த வெண்பொடி அணி வெங்குரு மேவிய அந்தம் இல் பெருமையினீரே அந்தம் இல் பெருமையினீர் உமை அலர் கொடு சிந்தைசெய்வோர் வினை சிதைவே மேல் #3816 விழ மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அழல் மல்கும் அங்கையினீரே அழல் மல்கும் அங்கையினீர் உமை அலர் கொடு தொழ அல்லல் கெடுவது துணிவே மேல் #3817 வித்தக மறையவர் வெங்குரு மேவிய மத்த நல் மலர் புனைவீரே மத்த நல் மலர் புனைவீர் உமது அடி தொழும் சித்தம் அது உடையவர் திருவே மேல் #3818 மேலவர் தொழுது எழு வெங்குரு மேவிய ஆல நல் மணி மிடற்றீரே ஆல நல் மணி மிடற்றீர் உமது அடி தொழும் சீலம் அது உடையவர் திருவே மேல் #3819 விரை மல்கு பொழில் அணி வெங்குரு மேவிய அரை மல்கு புலிஅதளீரே அரை மல்கு புலிஅதளீர் உமது அடி இணை உரை மல்கு புகழவர் உயர்வே மேல் 95. திருஇன்னம்பர் : திருமுக்கால் : பண் - சாதாரி #3820 எண் திசைக்கும் புகழ் இன்னம்பர் மேவிய வண்டு இசைக்கும் சடையீரே வண்டு இசைக்கும் சடையீர் உமை வாழ்த்துவார் தொண்டு இசைக்கும் தொழிலாரே மேல் #3821 யாழ் நரம்பின் இசை இன்னம்பர் மேவிய தாழ்தரு சடைமுடியீரே தாழ்தரு சடைமுடியீர் உமை சார்பவர் ஆழ் துயர் அருவினை இலரே மேல் #3822 இள மதி நுதலியொடு இன்னம்பர் மேவிய வள மதி வளர் சடையீரே வள மதி வளர் சடையீர் உமை வாழ்த்துவார் உளம் மதி மிக உடையாரே மேல் #3823 இடி குரல் இசை முரல் இன்னம்பர் மேவிய கடி கமழ் சடைமுடியீரே கடி கமழ் சடைமுடியீர் உம் கழல் தொழும் அடியவர் அருவினை இலரே மேல் #3824 இமையவர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய உமை ஒருகூறு உடையீரே உமை ஒருகூறு உடையீர் உமை உள்குவார் அமைகிலர் ஆகிலர் அன்பே மேல் #3825 எண் அரும் புகழ் உடை இன்னம்பர் மேவிய தண் அரும் சடைமுடியீரே தண் அரும் சடைமுடியீர் உமை சார்பவர் விண்ணவர் அடைவு உடையோரே மேல் #3826 எழில் திகழும் பொழில் இன்னம்பர் மேவிய நிழல் திகழ் மேனியினீரே நிழல் திகழ் மேனியியீர் உமை நினைபவர் குழறிய கொடுவினை இலரே மேல் #3827 ஏத்த அரும் புகழ் அணி இன்னம்பர் மேவிய தூர்த்தனை தொலைவு செய்தீரே தூர்த்தனை தொலைவு செய்தீர் உமை தொழுபவர் கூர்த்த நல் குணம் உடையோரே மேல் #3828 இயல் உளோர் தொழுது எழும் இன்னம்பர் மேவிய அயனும் மால் அறிவு அரியீரே அயனும் மால் அறிவு அரியீர் உமது அடி தொழும் இயல் உளார் மறுபிறப்பு இலரே மேல் #3829 ஏர் அமர் பொழில் அணி இன்னம்பர் மேவிய தேர் அமண் சிதைவு செய்தீரே தேர் அமண் சிதைவு செய்தீர் உமை சேர்பவர் ஆர் துயர் அருவினை இலரே மேல் #3830 ஏடு அமர் பொழில் அணி இன்னம்பர் ஈசனை நாடு அமர் ஞானசம்பந்தன் நாடு அமர் ஞானசம்பந்தன நல் தமிழ் பாட வல்லார் பழி இலரே மேல் 94. திருநெல்வெண்ணெய் : திருமுக்கால் : பண் - சாதாரி #3831 நல் வெணெய் விழுது பெய்து ஆடுதிர் நாள்-தொறும் நெல்வெணெய் மேவிய நீரே நெல்வெணெய் மேவிய நீர் உமை நாள்-தொறும் சொல் வணம் இடுவது சொல்லே மேல் #3832 நிச்சலும் அடியவர் தொழுது எழு நெல்வெணெய் கச்சு இள அரவு அசைத்தீரே கச்சு இள அரவு அசைத்தீர் உமை காண்பவர் அச்சமொடு அருவினை இலரே மேல் #3833 நிரை விரி தொல் புகழ் நெல்வெணெய் மேவிய அரை விரி கோவணத்தீரே அரை விரி கோவணத்தீர் உமை அலர் கொடு உரை விரிப்போர் உயர்ந்தோரே மேல் #3834 நீர் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் மேவிய ஊர் மல்கி உறைய வல்லீரே ஊர் மல்கி உறைய வல்லீர் உமை உள்குதல் பார் மல்கு புகழவர் பண்பே மேல் #3835 நீடு இளம் பொழில் அணி நெல்வெணெய் மேவிய ஆடு இளம் பாப்பு அசைத்தீரே ஆடு இளம் பாப்பு அசைத்தீர் உமை அன்பொடு பாடு உளம் உடையவர் பண்பே மேல் #3836 நெற்றி ஒர் கண் உடை நெல்வெணெய் மேவிய பெற்றி கொள் பிறைநுதலீரே பெற்றி கொள் பிறைநுதலீர் உமை பேணுதல் கற்று அறிவோர்கள்-தம் கடனே மேல் #3837 நிறையவர் தொழுது எழு நெல்வெணெய் மேவிய கறை அணி மிடறு உடையீரே கறை அணி மிடறு உடையீர் உமை காண்பவர் உறைவதும் உம் அடி கீழே மேல் #3838 நெருக்கிய பொழில் அணி நெல்வெணெய் மேவி அன்று அரக்கனை அசைவு செய்தீரே அரக்கனை அசைவு செய்தீர் உமை அன்புசெய்து இருக்க வல்லார் இடர் இலரே மேல் #3839 நிரை விரி சடைமுடி நெல்வெணெய் மேவி அன்று இருவரை இடர்கள் செய்தீரே இருவரை இடர்கள் செய்தீர் உமை இசைவொடு பரவ வல்லார் பழி இலரே மேல் #3840 நீக்கிய புனல் அணி நெல்வெணெய் மேவிய சாக்கிய சமண் கெடுத்தீரே சாக்கிய சமண் கெடுத்தீர் உமை சார்வது பாக்கியம் உடையவர் பண்பே மேல் #3841 நிலம் மல்கு தொல் புகழ் நெல்வெணெய் ஈசனை நலம் மல்கு ஞானசம்பந்தன் நலம் மல்கு ஞானசம்பந்தன செந்தமிழ் சொல மல்குவார் துயர் இலரே மேல் 97. திருச்சிறுகுடி : திருமுக்கால் : பண் - சாதாரி #3842 திடம் மலி மதில் அணி சிறுகுடி மேவிய படம் மலி அரவு உடையீரே படம் மலி அரவு உடையீர் உமை பணிபவர் அடைவதும் அமருலகு அதுவே மேல் #3843 சிற்றிடையுடன் மகிழ் சிறுகுடி மேவிய சுற்றிய சடைமுடியீரே சுற்றிய சடைமுடியீர் உம தொழு கழல் உற்றவர் உறு பிணி இலரே மேல் #3844 தெள்ளிய புனல் அணி சிறுகுடி மேவிய துள்ளிய மான் உடையீரே துள்ளிய மான் உடையீர் உம தொழு கழல் உள்ளுதல்செய நலம் உறுமே மேல் #3845 செந்நெல வயல் அணி சிறுகுடி மேவிய ஒன்னலர் புரம் எரித்தீரே ஒன்னலர் புரம் எரித்தீர் உமை உள்குவார் சொல் நலம் உடையவர் தொண்டே மேல் #3846 செற்றினில் மலி புனல் சிறுகுடி மேவிய பெற்றி கொள் பிறை முடியீரே பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு அற்றவர் அரு வினை இலரே மேல் #3847 செங்கயல் புனல் அணி சிறுகுடி மேவிய மங்கையை இடம் உடையீரே மங்கையை இடம் உடையீர் உமை வாழ்த்துவார் சங்கை அது இலர் நலர் தவமே மேல் #3848 செறி பொழில் தழுவிய சிறுகுடி மேவிய வெறி கமழ் சடைமுடியீரே வெறி கமழ் சடைமுடியீர் உமை விரும்பி மெய்ந் நெறி உணர்வோர் உயர்ந்தோரே மேல் #3849 திசையவர் தொழுது எழு சிறுகுடி மேவிய தசமுகன் உரம் நெரித்தீரே தசமுகன் உரம் நெரித்தீர் உமை சார்பவர் வசை அறுமது வழிபாடே மேல் #3850 செரு வரை வயல் அமர் சிறுகுடி மேவிய இருவரை அசைவு செய்தீரே இருவரை அசைவு செய்தீர் உமை ஏத்துவார் அருவினையொடு துயர் இலரே மேல் #3851 செய்த்தலை புனல் அணி சிறுகுடி மேவிய புத்தரொடு அமண் புறத்தீரே புத்தரொடு அமண் புறத்தீர் உமை போற்றுதல் பத்தர்கள்-தம்முடை பரிசே மேல் #3852 தேன் அமர் பொழில் அணி சிறுகுடி மேவிய மான் அமர் கரம் உடையீரே மான் அமர் கரம் உடையீர் உமை வாழ்த்திய ஞானசம்பந்தன தமிழே மேல் 98. திருவீழிமிழலை : திருமுக்கால் : பண் - சாதாரி #3853 வெண் மதி தவழ் மதில் மிழலை உளீர் சடை ஒண் மதி அணி உடையீரே ஒண் மதி அணி உடையீர் உமை உணர்பவர் கண் மதி மிகுவது கடனே மேல் #3854 விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம் சதி வழி வருவது ஒர் சதிரே சதி வழி வருவது ஒர் சதிர் உடையீர் உமை அதி குணர் புகழ்வதும் அழகே மேல் #3855 விரை மலி பொழில் அணி மிழலை உளீர் ஒரு வரை மிசை உறைவதும் வலதே வரை மிசை உறைவது ஒர் வலது உடையீர் உமை உரைசெயும் அவை மறை ஒலியே மேல் #3856 விட்டு எழில் பெறு புகழ் மிழலை உளீர் கையில் இட்டு எழில் பெறுகிறது எரியே இட்டு எழில் பெறுகிறது எரி உடையீர் புரம் அட்டது வரை சிலையாலே மேல் #3857 வேல் நிகர் கண்ணியர் மிழலை உளீர் நல பால் நிகர் உரு உடையீரே பால் நிகர் உரு உடையீர் உமதுடன் உமை தான் மிக உறைவது தவமே மேல் #3858 விரை மலி பொழில் அணி மிழலை உளீர் செனி நிரையுற அணிவது நெறியே நிரையுற அணிவது ஒர் நெறி உடையீர் உமது அரையுற அணிவன அரவே மேல் #3859 விசையுறு புனல் வயல் மிழலை உளீர் அரவு அசைவுற அணிவு உடையீரே அசைவுற அணிவு உடையீர் உமை அறிபவர் நசையுறும் நாவினர்தாமே மேல் #3860 விலங்கல் ஒண் மதில் அணி மிழலை உளீர் அன்று இலங்கை மன் இடர் கெடுத்தீரே இலங்கை மன் இடர் கெடுத்தீர் உமை ஏத்துவார் புலன்களை முனிவது பொருளே மேல் #3861 வெற்பு அமர் பொழில் அணி மிழலை உளீர் உமை அற்புதன் அயன் அறியானே அற்புதன் அயன் அறியா வகை நின்றவன் நல் பதம் அறிவது நயமே மேல் #3862 வித்தக மறையவர் மிழலை உளீர் அன்று புத்தரொடு அமண் அழித்தீரே புத்தரொடு அமண் அழித்தீர் உமை போற்றுவார் பத்திசெய் மனம் உடையவரே மேல் #3863 விண் பயில் பொழில் அணி மிழலையுள் ஈசனை சண்பையுள் ஞானசம்பந்தன் சண்பையுள் ஞானசம்பந்தன தமிழ் இவை ஒண் பொருள் உணர்வதும் உணர்வே மேல் 99. திருமுதுகுன்றம் : திருமுக்கால் : பண் - சாதாரி #3864 முரசு அதிர்ந்து எழுதரு முதுகுன்றம் மேவிய பரசு அமர் படை உடையீரே பரசு அமர் படை உடையீர் உமை பரவுவார் அரசர்கள் உலகில் ஆவாரே மேல் #3865 மொய்குழலாளொடு முதுகுன்றம் மேவிய பை அரவம் அசைத்தீரே பை அரவம் அசைத்தீர் உமை பாடுவார் நைவு இலர் நாள்-தொறும் நலமே மேல் #3866 முழவு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய மழ விடை அது உடையீரே மழ விடை அது உடையீர் உமை வாழ்த்துவார் பழியொடு பகை இலர்தாமே மேல் #3867 முருகு அமர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய உரு அமர் சடைமுடியீரே உரு அமர் சடைமுடியீர் உமை ஓதுவார் திருவொடு தேசினர்தாமே மேல் #3868 முத்தி தரும் உயர் முதுகுன்றம் மேவிய பத்து முடி அடர்த்தீரே பத்து முடி அடர்த்தீர் உமை பாடுவார் சித்தம் நல்ல அடியாரே மேல் #3869 முயன்றவர் அருள் பெறு முதுகுன்றம் மேவி அன்று இயன்றவர் அறிவு அரியீரே இயன்றவர் அறிவு அரியீர் உமை ஏத்துவார் பயன்தலை நிற்பவர்தாமே மேல் #3870 மொட்டு அலர் பொழில் அணி முதுகுன்றம் மேவிய கட்டு அமண் தேரை காய்ந்தீரே கட்டு அமண் தேரை காய்ந்தீர் உமை கருதுவார் சிட்டர்கள் சீர் பெறுவாரே மேல் #3871 மூடிய சோலை சூழ் முதுகுன்றத்து ஈசனை நாடிய ஞானசம்பந்தன் நாடிய ஞானசம்பந்தன செந்தமிழ் பாடிய அவர் பழி இலரே மேல் 100. திருத்தோணிபுரம் : பண் - பழம்பஞ்சுரம் #3872 கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி அரும்பு அமர் கொங்கை ஓர்பால் மகிழ்ந்த அற்புதம் செப்ப அரிதால் பெரும் பகலே வந்து என் பெண்மை கொண்டு பேர்ந்தவர் சேர்ந்த இடம் சுரும்பு அமர் சோலைகள் சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே மேல் #3873 கொங்கு இயல் பூம் குழல் கொவ்வை செவ்வாய் கோமள மாது உமையாள் பங்கு இயலும் திரு மேனி எங்கும் பால் வெள்ளை நீறு அணிந்து சங்கு இயல் வெள் வளை சோர வந்து என் சாயல் கொண்டார்-தமது ஊர் துங்கு இயல் மாளிகை சூழ்ந்த செம்மை தோணிபுரம்தானே மேல் #3874 மத்த களிற்று உரி போர்க்க கண்டு மாது உமை பேதுறலும் சித்தம் தெளிய நின்று ஆடி ஏறு ஊர் தீ_வண்ணர் சில் பலிக்கு என்று ஒத்தபடி வந்து என் உள்ளம் கொண்ட ஒருவருக்கு இடம் போலும் துத்தம் நல் இன்னிசை வண்டு பாடும் தோணிபுரம்தானே மேல் #3875 வள்ளல் இருந்த மலை அதனை வலம்செய்தல் வாய்மை என உள்ளம் கொள்ளாது கொதித்து எழுந்து அன்று எடுத்தோன் உரம் நெரிய மெள்ள விரல் வைத்து என் உள்ளம் கொண்டார் மேவும் இடம் போலும் துள் ஒலி வெள்ளத்தின் மேல் மிதந்த தோணிபுரம்தானே மேல் #3876 வெல் பறவை கொடி மாலும் மற்றை விரை மலர் மேல் அயனும் பல் பறவைப்படியாய் உயர்ந்தும் பன்றி அதுவாய் பணிந்தும் செல்வு அற நீண்டு எம் சிந்தை கொண்ட செல்வர் இடம் போலும் தொல் பறவை சுமந்து ஓங்கு செம்மை தோணிபுரம்தானே மேல் #3877 குண்டிகை பீலி தட்டோடு நின்று கோசரம் கொள்ளியரும் மண்டை கை ஏந்தி மனம் கொள் கஞ்சி ஊணரும் வாய் மடிய இண்டை புனைந்து எருது ஏறி வந்து என் எழில் கவர்ந்தார் இடம் ஆம் தொண்டு இசை பாடல் அறாத தொன்மை தோணிபுரம்தானே மேல் #3878 தூ மரு மாளிகை மாடம் நீடு தோணிபுரத்து இறையை மா மறை நான்கினொடு அங்கம் ஆறும் வல்லவன் வாய்மையினால் நா மரு கேள்வி நலம் திகழும் ஞானசம்பந்தன் சொன்ன பா மரு பாடல்கள் பத்தும் வல்லார் பார் முழுது ஆள்பவரே மேல் 101. திருஇராமேச்சுரம் : பண் - பழம்பஞ்சுரம் #3879 திரிதரு மா மணி நாகம் ஆட திளைத்து ஒரு தீ அழல்-வாய் நரி கதிக்க எரி ஏந்தி ஆடும் நலமே தெரிந்து உணர்வார் எரி கதிர் முத்தம் இலங்கு கானல் இராமேச்சுரம் மேய விரி கதிர் வெண் பிறை மல்கு சென்னி விமலர் செயும் செயலே மேல் #3880 பொறி கிளர் பாம்பு அரை ஆர்த்து அயலே புரிவோடு உமை பாட தெறி கிளர பெயர்ந்து எல்லி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் எறி கிளர் வெண் திரை வந்து பேரும் இராமேச்சுரம் மேய மறி கிளர் மான் மழு புல்கு கை எம் மணாளர் செயும் செயலே மேல் #3881 அலை வளர் தண் புனல் வார் சடை மேல் அடக்கி ஒருபாகம் மலை வளர் காதலி பாட ஆடி மயக்கா வரு மாட்சி இலை வளர் தாழை முகிழ் விரியும் இராமேச்சுரம் மேயார் தலை வளர் கோல நல் மாலை சூடும் தலைவர் செயும் செயலே மேல் #3882 மா தன நேர் இழை ஏர் தடம் கண் மலையான்மகள் பாட தேது எரி அங்கையில் ஏந்தி ஆடும் திறமே தெரிந்து உணர்வார் ஏதம் இலார் தொழுது ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேயார் போது வெண் திங்கள் பைம் கொன்றை சூடும் புனிதர் செயும் செயலே மேல் #3883 சூலமோடு ஒண் மழு நின்று இலங்க சுடுகாடு இடம் ஆக கோல நல் மாது உடன்பாட ஆடும் குணமே குறித்து உணர்வார் ஏல நறும் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய நீலம் ஆர் கண்டம் உடைய எங்கள் நிமலர் செயும் செயலே மேல் #3884 கணை பிணை வெம் சிலை கையில் ஏந்தி காமனை காய்ந்தவர்தாம் இணை பிணை நோக்கி நல்லாளொடு ஆடும் இயல்பினர் ஆகி நல்ல இணை மலர் மேல் அனம் வைகு கானல் இராமேச்சுரம் மேயார் அணை பிணை புல்கு கரந்தை சூடும் அடிகள் செயும் செயலே மேல் #3885 நீரின் ஆர் புன் சடை பின்பு தாழ நெடு வெண் மதி சூடி ஊரினார் துஞ்சு இருள் பாடி ஆடும் உவகை தெரிந்து உணர்வார் ஏரின் ஆர் பைம் பொழில் வண்டு பாடும் இராமேச்சுரம் மேய காரின் ஆர் கொன்றை வெண் திங்கள் சூடும் கடவுள் செயும் செயலே மேல் #3886 பொன் திகழ் சுண்ண வெண் நீறு பூசி புலி தோல் உடை ஆக மின் திகழ் சோதியர் பாடல் ஆடல் மிக்கார் வரு மாட்சி என்றும் நல்லோர்கள் பரவி ஏத்தும் இராமேச்சுரம் மேயார் குன்றினால் அன்று அரக்கன் தடம் தோள் அடர்த்தார் கொளும் கொள்கையே மேல் #3887 கோவலன் நான்முகன் நோக்க ஒணாத குழகன் அழகு ஆய மேவலன் ஒள் எரி ஏந்தி ஆடும் இமையோர்_இறை மெய்ம்மை ஏ வலனார் புகழ்ந்து ஏத்தி வாழ்த்தும் இராமேச்சுரம் மேய சே வல வெல் கொடி ஏந்து கொள்கை எம் இறைவர் செயும் செயலே மேல் #3888 பின்னொடு முன் இடு தட்டை சாத்தி பிரட்டே திரிவாரும் பொன் நெடும் சீவர போர்வையார்கள் புறம்கூறல் கேளாதே இன் நெடும் சோலை வண்டு யாழ் முரலும் இராமேச்சுரம் மேய பல் நெடு வெண் தலை கொண்டு உழலும் பரமர் செயும் செயலே மேல் #3889 தேவியை வவ்விய தென்_இலங்கை_அரையன் திறல் வாட்டி ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை நா இயல் ஞானசம்பந்தன் நல்ல மொழியால் நவின்று ஏத்தும் பா இயல் மாலை வல்லார் அவர்-தம் வினை ஆயின பற்று அறுமே மேல் 102. திருநாரையூர் : பண் - பழம்பஞ்சுரம் #3890 காம்பினை வென்ற மென் தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு தேம் புனல் சூழ் திகழ் மா மடுவின் திரு நாரையூர் மேய பூம் புனல் சேர் புரி புன் சடையான் புலியின் உரி தோல் மேல் பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே மேல் #3891 தீவினை ஆயின தீர்க்க நின்றான் திரு நாரையூர் மேயான் பூவினை மேவு சடைமுடியான் புடை சூழ பல பூதம் ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும் ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே மேல் #3892 மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மை மிடற்றன் ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம் தீ அவன் நீர் அவன் பூமி அவன் திரு நாரையூர்-தன்னில் மேயவனை தொழுவார் அவர் மேல் வினை ஆயின வீடுமே மேல் #3893 துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய் அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழி-கண் நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே மேல் #3894 பொங்கு இளம் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள் தங்களை ஆர் இடர் தீர நின்ற தலைவர் சடை மேல் ஓர் திங்களை வைத்து அனல் ஆடலினார் திரு நாரையூர் மேய வெம் கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே மேல் #3895 பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைம் கொன்றை தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளை சீர் உறும் மா மறுகின் சிறை வண்டு அறையும் திரு நாரை யூர் உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே மேல் #3896 கள்ளி இடு தலை ஏந்து கையர் கரி காடர் கண்நுதலார் வெள்ளிய கோவண ஆடை-தன் மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் உள்ளிய போழ்தில் எம் மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே மேல் #3897 நாமம் எனை பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர் தாம் ஒம்மென பறை யாழ் குழல் தாள் ஆர் கழல் பயில ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில் சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே மேல் #3898 ஊன் உடை வெண் தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன் சடை மேல் ஓர் வானிடை வெண் மதி வைத்து உகந்தான் வரி வண்டு யாழ் முரல தேன் உடை மா மலர் அன்னம் வைகும் திரு நாரையூர் மேய ஆனிடை ஐந்து உகந்தான் அடியே பரவா அடைவோமே மேல் #3899 தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினில் உள் மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே தேசு உடையீர்கள் தெளிந்து அடை-மின் திரு நாரையூர்-தன்னில் பூசு பொடி தலைவர் அடியார் அடியே பொருத்தமே மேல் #3900 தண் மதி தாழ் பொழில் சூழ் புகலி தமிழ் ஞானசம்பந்தன் ஒண் மதி சேர் சடையான் உறையும் திரு நாரையூர்-தன் மேல் பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினை போகி மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே மேல் 103. திருவலம்புரம் : பண் - பழம்பஞ்சுரம் #3901 கொடி உடை மு மதில் ஊடுருவ குனி வெம் சிலை தாங்கி இடிபட எய்த அமரர்பிரான் அடியார் இசைந்து ஏத்த துடி_இடையாளை ஒர்பாகம் ஆக துதைந்தார் இடம் போலும் வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே மேல் #3902 கோத்த கல்லாடையும் கோவணமும் கொடுகொட்டி கொண்டு ஒரு கை தேய்த்து அன்று அநங்கனை தேசு அழித்து திசையார் தொழுது ஏத்த காய்த்த கல்லால் அதன் கீழ் இருந்த கடவுள் இடம் போலும் வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே மேல் #3903 நொய்யது ஒர் மான் மறி கை விரலின் நுனை மேல் நிலை ஆக்கி மெய் எரி மேனி வெண் நீறு பூசி விரி புன் சடை தாழ மை இரும் சோலை மணம் கமழ இருந்தார் இடம் போலும் வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே மேல் #3904 ஊன் அமர் ஆக்கை உடம்பு-தன்னை உணரின் பொருள் அன்று தேன் அமர் கொன்றையினான் அடிக்கே சிறுகாலை ஏத்து-மினோ ஆன் அமர் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்த அடிகள் இடம் போலும் வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே மேல் #3905 செற்று எறியும் திரை ஆர் கலுழி செழு நீர் கிளர் செம் சடை மேல் அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி பெற்று அறிவார் எருது ஏற வல்ல பெருமான் இடம் போலும் வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே மேல் #3906 உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி சுண்ண வண்ண பொடி மேனி பூசி சுடர் சோதி நின்று இலங்க பண்ண வண்ணத்தன பாணிசெய்ய பயின்றார் இடம் போலும் வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே மேல் #3907 புரிதரு புன் சடை பொன் தயங்க புரி நூல் புரண்டு இலங்க விரைதரு வேழத்தின் ஈர் உரி தோல் மேல் மூடி வேய் புரை தோள் அரை தரு பூம் துகில் ஆரணங்கை அமர்ந்தார் இடம் போலும் வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே மேல் #3908 தண்டு அணை தோள் இருபத்தினொடும் தலை பத்து உடையானை ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி மிண்டு அது தீர்த்து அருள்செய்ய வல்ல விகிர்தர்க்கு இடம் போலும் வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே மேல் #3909 தாருறு தாமரை மேல் அயனும் தரணி அளந்தானும் தேர்வு அறியா வகையால் இகலி திகைத்து திரிந்து ஏத்த பேர்வு அறியா வகையால் நிமிர்ந்த பெருமான் இடம் போலும் வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே மேல் #3910 காவிய நல் துவர் ஆடையினார் கடு நோன்பு மேற்கொள்ளும் பாவிகள் சொல்லை பயின்று அறியா பழம் தொண்டர் உள் உருக ஆவியுள் நின்று அருள்செய்ய வல்ல அழகர் இடம் போலும் வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே மேல் #3911 நல் இயல் நான்மறையோர் புகலி தமிழ் ஞானசம்பந்தன் வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் செல்வன சேவடி சென்று அணுகி சிவலோகம் சேர்வாரே மேல் 100. திருப்பரிதிநியமம் : பண் - பழம்பஞ்சுரம் #3912 விண் கொண்ட தூ மதி சூடி நீடு விரி புன் சடை தாழ பெண் கொண்ட மார்பில் வெண் நீறு பூசி பேண் ஆர் பலி தேர்ந்து கண் கொண்ட சாயலொடு ஏர் கவர்ந்த கள்வர்க்கு இடம் போலும் பண் கொண்ட வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே மேல் #3913 அரவு ஒலி வில் ஒலி அம்பின் ஒலி அடங்கார் புரம் மூன்றும் நிரவ வல்லார் நிமிர் புன் சடை மேல் நிரம்பா மதி சூடி இரவு இல் புகுந்து என் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பரவ வல்லார் வினை பாழ்படுக்கும் பரிதிநியமமே மேல் #3914 வாள் முக வார் குழல் வாள் நெடும் கண் வளை தோள் மாது அஞ்ச நீள் முகம் ஆகிய பைம் களிற்றின் உரி மேல் நிகழ்வித்து நாண் முகம் காட்டி நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் பாண் முக வண்டு இனம் பாடி ஆடும் பரிதிநியமமே மேல் #3915 வெம் சுரம் சேர் விளையாடல் பேணி விரி புன் சடை தாழ துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து அம் சுரும்பு ஆர் குழல் சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் பஞ்சுரம் பாடி வண்டு யாழ் முரலும் பரிதிநியமமே மேல் #3916 நீர் புல்கு புன் சடை நின்று இலங்க நெடு வெண் மதி சூடி தார் புல்கு மார்பில் வெண் நீறு அணிந்து தலை ஆர் பலி தேர்வார் ஏர் புல்கு சாயல் எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பார் புல்கு தொல் புகழால் விளங்கும் பரிதிநியமமே மேல் #3917 வெம் கடும் காட்டகத்து ஆடல் பேணி விரி புன் சடை தாழ திங்கள் திரு முடி மேல் விளங்க திசை ஆர் பலி தேர்வார் சங்கொடு சாயல் எழில் கவர்ந்த சைவர்க்கு இடம் போலும் பைம் கொடி முல்லை படர் புறவின் பரிதிநியமமே மேல் #3918 பிறை வளர் செம் சடை பின் தயங்க பெரிய மழு ஏந்தி மறை ஒலி பாடி வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் இறை வளை சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பறை ஒலி சங்கு ஒலியால் விளங்கும் பரிதிநியமமே மேல் #3919 ஆசு அடை வானவர் தானவரோடு அடியார் அமர்ந்து ஏத்த மாசு அடையாத வெண் நீறு பூசி மனைகள் பலி தேர்வார் காசு அடை மேகலை சோர உள்ளம் கவர்ந்தார்க்கு இடம் போலும் பாசடை தாமரை வைகு பொய்கை பரிதிநியமமே மேல் #3920 நாடினர் காண்கிலர் நான்முகனும் திருமால் நயந்து ஏத்த கூடலர் ஆடலர் ஆகி நாளும் குழகர் பலி தேர்வார் ஏடு அலர் சோர எழில் கவர்ந்த இறைவர்க்கு இடம் போலும் பாடலர் ஆடலராய் வணங்கும் பரிதிநியமமே மேல் #3921 கல் வளர் ஆடையர் கையில் உண்ணும் கழுக்கள் இழுக்கு ஆன சொல் வளம் ஆக நினைக்க வேண்டா சுடு நீறு அது ஆடி நல் வளை சோர நலம் கவர்ந்த நாதர்க்கு இடம் போலும் பல் வளர் முல்லை அம் கொல்லை வேலி பரிதிநியமமே மேல் #3922 பை அரவம் விரி காந்தள் விம்மு பரிதிநியமத்து தையல் ஒர்பாகம் அமர்ந்தவனை தமிழ் ஞானசம்பந்தன் பொய்யிலி மாலை புனைந்த பத்தும் பரவி புகழ்ந்து ஏத்த ஐயுறவு இல்லை பிறப்பு அறுத்தல் அவலம் அடையாவே மேல் 105. திருக்கலிக்காமூர் : பண் - பழம்பஞ்சுரம் #3923 மடல் வரை இல் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகு ஆரும் கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் உடல் வரையின் உயிர் வாழ்க்கை ஆய ஒருவன் கழல் ஏத்த இடர் தொடரா வினை ஆன சிந்தும் இறைவன் அருள் ஆமே மேல் #3924 மை வரை போல் திரையோடு கூடி புடையே மலிந்து ஓதம் கை வரையால் வளர் சங்கம் எங்கும் மிகுக்கும் கலிக்காமூர் மெய் வரையான்மகள் பாகன்-தன்னை விரும்ப உடல் வாழும் ஐவரை ஆசு அறுத்து ஆளும் என்பர் அதுவும் சரதமே மேல் #3925 தூவிய நீர் மலர் ஏந்தி வையத்தவர்கள் தொழுது ஏத்த காவியின் நேர் விழி மாதர் என்றும் கவின் ஆர் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர்_பெருமானே மேல் #3926 குன்றுகள் போல் திரை உந்தி அம் தண் மணி ஆர்தர மேதி கன்றுடன் புல்கி ஆயம் மனை சூழ் கவின் ஆர் கலிக்காமூர் என்று உணர் ஊழியும் வாழும் எந்தை பெருமான் அடி ஏத்தி நின்று உணர்வாரை நினையகில்லார் நீசர் நமன் தமரே மேல் #3927 வானிடை வாள் மதி மாடம் தீண்ட மருங்கே கடல் ஓதம் கானிடை நீழலில் கண்டல் வாழும் கழி சூழ் கலிக்காமூர் ஆனிடை ஐந்து உகந்து ஆடினானை அமரர் தொழுது ஏத்த நான் அடைவு ஆம் வணம் அன்பு தந்த நலமே நினைவோமே மேல் #3928 துறை வளர் கேதகை மீது வாசம் சூழ்வான் மலி தென்றல் கறை வளரும் கடல் ஓதம் என்றும் கலிக்கும் கலிக்காமூர் மறை வளரும் பொருள் ஆயினானை மனத்தால் நினைந்து ஏத்த நிறை வளரும் புகழ் எய்தும் வாதை நினையா வினை போமே மேல் #3929 கோல நல் மேனியின் மாதர் மைந்தர் கொணர் மங்கலியத்தில் காலமும் பொய்க்கினும் தாம் வழுவாது இயற்றும் கலிக்காமூர் ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி ஓலம் இடாதவர் ஊழி என்றும் உணர்வை துறந்தாரே மேல் #3930 ஊர் அரவம் தலை நீள் முடியான் ஒலி நீர் உலகு ஆண்டு கார் அரவ கடல் சூழ வாழும் பதி ஆம் கலிக்காமூர் தேர் அரவு அல்குல் அம் பேதை அஞ்ச திருந்து வரை பேர்த்தான் ஆர் அரவம்பட வைத்த பாதம் உடையான் இடம் ஆமே மேல் #3931 அரு வரை ஏந்திய மாலும் மற்றை அலர் மேல் உறைவானும் இருவரும் அஞ்ச எரி உருவாய் எழுந்தான் கலிக்காமூர் ஒரு வரையான்மகள் பாகன்-தன்னை உணர்வால் தொழுது ஏத்த திரு மருவும் சிதைவு இல்லை செம்மை தேசு உண்டு அவர்-பாலே மேல் #3932 மாசு பிறக்கிய மேனியாரும் மருவும் துவர் ஆடை மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர் தோற்றம் காசினி நீர்த்திரள் மண்டி எங்கும் வளம் ஆர் கலிக்காமூர் ஈசனை எந்தை பிரானை ஏத்தி நினைவார் வினை போமே மேல் #3933 ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண ஊழி-தொறும் உளரா அளித்தான் உலகத்து உயர்கின்ற காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன தமிழால் கலிக்காமூர் வாழி எம்மானை வணங்கி ஏத்த மருவா பிணிதானே மேல் 106. திருவலஞ்சுழி : பண் - பழம்பஞ்சுரம் #3934 பள்ளம் அது ஆய படர் சடை மேல் பயிலும் திரை கங்கை வெள்ளம் அது ஆர விரும்பி நின்ற விகிர்தன் விடை ஏறும் வள்ளல் வலஞ்சுழிவாணன் என்று மருவி நினைந்து ஏத்தி உள்ளம் உருக உணரு-மின்கள் உறு நோய் அடையாவே மேல் #3935 கார் அணி வெள்ளை மதியம் சூடி கமழ் புன் சடை-தன் மேல் தார் அணி கொன்றையும் தண் எருக்கும் தழையும் நுழைவித்து வார் அணி கொங்கை நல்லாள்-தனோடும் வலஞ்சுழி மேவியவர் ஊர் அணி பெய் பலி கொண்டு உகந்த உவகை அறியோமே மேல் #3936 பொன் இயலும் திரு மேனி-தன் மேல் புரி நூல் பொலிவித்து மின் இயலும் சடை தாழ வேழ உரி போர்த்து அரவு ஆட மன்னிய மா மறையோர்கள் போற்றும் வலஞ்சுழிவாணர்-தம் மேல் உன்னிய சிந்தையில் நீங்ககில்லார்க்கு உயர்வு ஆம் பிணி போமே மேல் #3937 விடை ஒரு-பால் ஒரு-பால் விரும்பு மெல்லியல் புல்கியது ஓர் சடை ஒரு-பால் ஒரு-பால் இடம் கொள் தாழ் குழல் போற்று இசைப்ப நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் அடை ஒரு-பால் அடையாத செய்யும் செய்கை அறியோமே மேல் #3938 கை அமரும் மழு நாகம் வீணை கலைமான் மறி ஏந்தி மெய் அமரும் பொடி பூசி வீசும் குழை ஆர்தரு தோடும் பை அமரும் அரவு ஆட ஆடும் படர் சடையார்க்கு இடம் ஆம் மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே மேல் #3939 தண்டொடு சூலம் தழைய ஏந்தி தையல் ஒருபாகம் கண்டு இடு பெய் பலி பேணி நாணார் கரியின் உரி தோலர் வண்டு இடு மொய் பொழில் சூழ்ந்த மாட வலஞ்சுழி மன்னியவர் தொண்டொடு கூடி துதைந்து நின்ற தொடர்பை தொடர்வோமே மேல் #3940 கல் இயலும் மலை அம் கை நீங்க வளைத்து வளையாதார் சொல் இயலும் மதில் மூன்றும் செற்ற சுடரான் இடர் நீங்க மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே மேல் #3941 வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள் அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே மேல் #3942 ஏடு இயல் நான்முகன் சீர் நெடு மால் என நின்றவர் காணார் கூடிய கூர் எரியாய் நிமிர்ந்த குழகர் உலகு ஏத்த வாடிய வெண் தலை கையில் ஏந்தி வலஞ்சுழி மேய எம்மான் பாடிய நான்மறையாளர் செய்யும் சரிதை பலபலவே மேல் #3943 குண்டரும் புத்தரும் கூறை இன்றி குழுவார் உரை நீத்து தொண்டரும் தன் தொழில் பேண நின்ற கழலான் அழல் ஆடி வண்டு அமரும் பொழில் மல்கு பொன்னி வலஞ்சுழிவாணன் எம்மான் பண்டு ஒரு வேள்வி முனிந்து செற்ற பரிசே பகர்வோமே மேல் #3944 வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் காழியுள் ஞானசம்பந்தன் சொன்ன கருத்தின் தமிழ் மாலை ஆழி இ வையகத்து ஏத்த வல்லார் அவர்க்கும் தமருக்கும் ஊழி ஒரு பெரும் இன்பம் ஓர்க்கும் உருவும் உயர்வு ஆமே மேல் 107. திருநாரையூர் : பண் - பழம்பஞ்சுரம் #3945 கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி உடலிடையின் பொடி பூச வல்லான் உமையோடு ஒருபாகன் அடலிடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல் நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே மேல் #3946 விண்ணின் மின் நேர் மதி துத்தி நாகம் விரி பூ மலர் கொன்றை பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று எண்ணு-மின் நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும் நிறைவு ஆமே மேல் #3947 தோடு ஒரு காது ஒரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும் பீடு ஒரு கால் பிரியாது நின்ற பிறையான் மறை ஓதி நாடு ஒரு காலமும் சேர நின்ற திரு நாரையூரானை பாடு-மின் நீர் பழி போகும் வண்ணம் பயிலும் உயர்வு ஆமே மேல் #3948 வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலை ஏந்தி பெண்ணில் அமர்ந்து ஒருகூறு அது ஆய பெருமான் அருள் ஆர்ந்த அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர்-தன்னை நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே மேல் #3949 வான் அமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழி ஆகும் ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிது இன்றி நான் அமரும் பொருள் ஆகி நின்றான் திரு நாரையூர் எந்தை கோன் அவனை குறுக குறுகா கொடு வல்வினைதானே மேல் #3950 கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகு ஆக நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி புக்கு அமரும் மனத்தோர்கள்-தம்மை புணரும் புகல்தானே மேல் #3951 ஊழியும் இன்பமும் காலம் ஆகி உயரும் தவம் ஆகி ஏழிசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பு ஆகி நாழிகையும் பல ஞாயிறு ஆகி நளிர் நாரையூர்-தன்னில் வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவு ஆமே மேல் #3952 கூசம் இலாது அரக்கன் வரையை குலுங்க எடுத்தான் தோள் நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார் பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம் போலும் தேசம் உற புகழ் செம்மை பெற்ற திரு நாரையூர்தானே மேல் #3953 பூமகனும் அவனை பயந்த புயல் ஆர் நிறத்தானும் ஆம் அளவும் திரிந்து ஏத்தி காண்டல் அறிதற்கு அரியான் ஊர் பா மருவும் குணத்தோர்கள் ஈண்டி பலவும் பணி செய்யும் தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திரு நாரையூர்தானே மேல் #3954 வெற்று அரை ஆகிய வேடம் காட்டி திரிவார் துவர் ஆடை உற்ற அரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராது எழு-மின்கள் குற்றம் இலாதது ஓர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆர பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திரு நாரையூர் சேரவே மேல் #3955 பாடு இயலும் திரை சூழ் புகலி திரு ஞானசம்பந்தன் சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மை திரு நாரையூரான் மேல் பாடிய தண் தமிழ் மாலை பத்தும் பரவி திரிந்து ஆக ஆடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவல கடல்தானே மேல் 108. திருஆலவாய் : பண் - பழம்பஞ்சுரம் - நாலடி மேல்வைப்பு #3956 வேத வேள்வியை நிந்தனை செய்து உழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்க திருவுள்ளமே பாதி மாது உடன் ஆய பரமனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3957 வைதிகத்தின் வழி ஒழுகாத அ கைதவம் உடை கார் அமண் தேரரை எய்தி வாதுசெய திருவுள்ளமே மை திகழ்தரு மா மணி கண்டனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3958 மறை வழக்கம் இலாத மா பாவிகள் பறி தலை கையர் பாய் உடுப்பார்களை முறிய வாதுசெய திருவுள்ளமே மறி உலாம் கையில் மா மழுவாளனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3959 அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையை கறுத்து வாழ் அமண் கையர்கள்-தம்மொடும் செறுத்து வாதுசெய திருவுள்ளமே முறித்த வாள் மதி கண்ணி முதல்வனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3960 அந்தணாளர் புரியும் அரு மறை சிந்தை செய்யா அருகர் திறங்களை சிந்த வாதுசெய திருவுள்ளமே வெந்த நீறு அது அணியும் விகிர்தனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3961 வேட்டு வேள்வி செயும் பொருளை விளி மூட்டு சிந்தை முருட்டு அமண் குண்டரை ஓட்டி வாதுசெய திருவுள்ளமே காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3962 அழல் அது ஓம்பும் அரு மறையோர் திறம் விழல் அது என்னும் அருகர் திறத்திறம் கழல வாதுசெய திருவுள்ளமே தழல் இலங்கு திரு உரு சைவனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3963 நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற காற்று கொள்ளவும் நில்லா அமணரை தேற்றி வாதுசெய திருவுள்ளமே ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய் ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3964 நீல மேனி அமணர் திறத்து நின் சீலம் வாதுசெய திருவுள்ளமே மாலும் நான்முகனும் காண்பு அரியது ஓர் கோலம் மேனி அது ஆகிய குன்றமே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3965 அன்று முப்புரம் செற்ற அழக நின் துன்று பொன் கழல் பேணா அருகரை தென்ற வாதுசெய திருவுள்ளமே கன்று சாக்கியர் காணா தலைவனே ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே மேல் #3966 கூடல் ஆலவாய்_கோனை விடை கொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட மாட காழி சம்பந்தன் மதித்த இ பாடல் வல்லவர் பாக்கியவாளரே மேல் 109. திருக்கயிலாயம், திருவானைக்கா, திருமயேந்திரம், திருவாரூர் : பண் - பழம்பஞ்சுரம் - கூடற்சதுக்கம் #3967 மண் அது உண்ட அரி மலரோன் காணா வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் கண்ணது ஓங்கிய கயிலையாரும் அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3968 வந்து மால் அயன் அவர் காண்பு அரியார் வெந்த வெண் நீறு அணி மயேந்திரரும் கந்த வார் சடை உடை கயிலையாரும் அம் தண் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3969 மால் அயன் தேடிய மயேந்திரரும் காலனை உயிர்கொண்ட கயிலையாரும் வேலை அது ஓங்கும் வெண் நாவலாரும் ஆலை ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3970 கருடனை ஏறு அரி அயனார் காணார் வெருள் விடை ஏறிய மயேந்திரரும் கருள்தரு கண்டத்து எம் கயிலையாரும் அருளன் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3971 மதுசூதனன் நான்முகன் வணங்க அரியார் மதி அது சொல்லிய மயேந்திரரும் கதிர் முலை புல்கிய கயிலையாரும் அதியன் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3972 சக்கரம் வேண்டும் மால் பிரமன் காணா மிக்கவர் கயிலை மயேந்திரரும் தக்கனை தலை அரி தழல் உருவர் அக்கு அணியவர் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3973 கண்ணனும் நான்முகன் காண்பு அரியார் வெண் நாவல் விரும்பு மயேந்திரரும் கண்ணப்பர்க்கு அருள்செய்த கயிலை எங்கள் அண்ணல் ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3974 கடல்_வண்ணன் நான்முகன் காண்பு அரியார் தட வரை அரக்கனை தலை நெரித்தார் விடம் அது உண்ட எம் மயேந்திரரும் அடல் விடை ஆரூர் ஆதி ஆனைக்காவே மேல் #3975 ஆதி மால் அயன் அவர் காண்பு அரியார் வேதங்கள் துதிசெயும் மயேந்திரரும் காதில் ஒர் குழை உடை கயிலையாரும் ஆதி ஆரூர் எந்தை ஆனைக்காவே மேல் #3976 அறிவில் அமண் புத்தர் அறிவு கொள்ளேல் வெறிய மான் கரத்து ஆரூர் மயேந்திரரும் மறி கடலோன் அயன் தேட தானும் அறிவு அரு கயிலையோன் ஆனைக்காவே மேல் #3977 ஏனம் மால் அயன் அவர் காண்பு அரியார் கானம் ஆர் கயிலை நல் மயேந்திரரும் ஆன ஆரூர் ஆதி ஆனைக்காவை ஞானசம்பந்தன் தமிழ் சொல்லுமே மேல் 110. திருப்பிரமபுரம் : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி #3978 வரம் அதே கொளா உரம் அதே செயும் புரம் எரித்தவன் பிரமநல்புரத்து அரன் நன் நாமமே பரவுவார்கள் சீர் விரவும் நீள் புவியே மேல் #3979 சேண் உலாம் மதில் வேணு மண்ணுளோர் காண மன்றில் ஆர் வேணுநல்புர தாணுவின் கழல் பேணுகின்றவர் ஆணி ஒத்தவரே மேல் #3980 அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர் பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே மேல் #3981 துங்க மா கரி பங்கமா அடும் செம் கையான் நிகழ் வெங்குரு திகழ் அங்கணான் அடி தம் கையால் தொழ தங்குமோ வினையே மேல் #3982 காணி ஒண் பொருள் கற்றவர்க்கு ஈகை உடைமையோர் அவர் காதல் செய்யும் நல் தோணிவண்புரத்து ஆணி என்பவர் தூ மதியினரே மேல் #3983 ஏந்து அரா எதிர் வாய்ந்த நுண் இடை பூம் தண் ஓதியாள் சேர்ந்த பங்கினன் பூந்தராய் தொழும் மாந்தர் மேனி மேல் சேர்ந்து இரா வினையே மேல் #3984 சுரபுரத்தினை துயர்செய் தாருகன் துஞ்ச வெம் சின காளியை தரும் சிரபுரத்து உளான் என்ன வல்லவர் சித்தி பெற்றவரே மேல் #3985 உறவும் ஆகி அற்றவர்களுக்கு மா நெதி கொடுத்து நீள் புவி இலங்கு சீர் புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே மேல் #3986 பண்பு சேர் இலங்கைக்கு நாதன் நல் முடிகள் பத்தையும் கெட நெரித்தவன் சண்பை ஆதியை தொழுமவர்களை சாதியா வினையே மேல் #3987 ஆழி அங்கையில் கொண்ட மால் அயன் அறிவு ஒணாதது ஓர் வடிவு கொண்டவன் காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே மேல் #3988 விச்சை ஒன்று இலா சமணர் சாக்கிய பிச்சர்-தங்களை கரிசு அறுத்தவன் கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே மேல் #3989 கழுமலத்தினுள் கடவுள் பாதமே கருது ஞானசம்பந்தன் இன் தமிழ் முழுதும் வல்லவர்க்கு இன்பமே தரும் முக்கண் எம் இறையே மேல் 111. திருவீழிமிழலை : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி #3990 வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர் ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே மேல் #3991 விளங்கும் நான்மறை வல்ல வேதியர் மல்கு சீர் வளர் மிழலையான் அடி உளம்கொள்வார்-தமை உளம்கொள்வார் வினை ஒல்லை ஆசு அறுமே மேல் #3992 விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே மேல் #3993 வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் நின்ற ஆதி-தன் அடி நினைப்பவர் துன்பம் ஒன்று இலரே மேல் #3994 போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர் ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே மேல் #3995 தக்கன் வேள்வியை சாடினார் மணி தொக்க மாளிகை மிழலை மேவிய நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே மேல் #3996 போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர் சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே மேல் #3997 இரக்கம் இல் தொழில் அரக்கனார் உடல் நெருக்கினான் மிகு மிழலையான் அடி சிர கொள் பூ என ஒருக்கினார் புகழ் பரக்கும் நீள் புவியே மேல் #3998 துன்று பூமகன் பன்றி ஆனவன் ஒன்றும் ஓர்கிலா மிழலையான் அடி சென்று பூம் புனல் நின்று தூவினார் நன்று சேர்பவரே மேல் #3999 புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர் சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே மேல் #4000 சந்தம் ஆர் பொழில் மிழலை ஈசனை சண்பை ஞானசம்பந்தன் வாய் நவில் பந்தம் ஆர் தமிழ் பத்தும் வல்லவர் பத்தர் ஆகுவரே மேல் 112. திருப்பல்லவனீச்சரம் : பண் - பழம்பஞ்சுரம் - ஈரடி #4001 பரசு பாணியர் பாடல் வீணையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அரசு பேணி நின்றார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4002 பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4003 பவள மேனியர் திகழும் நீற்றினர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4004 பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4005 பல் இல் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து எல்லி ஆட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4006 பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4007 பைம் கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4008 பாதம் கைதொழ வேதம் ஓதுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4009 படி கொள் மேனியர் கடி கொள் கொன்றையர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4010 பறை கொள் பாணியர் பிறை கொள் சென்னியர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் ஆர் மேல் #4011 வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் பல்லவனீச்சுரத்தானை ஞானசம்பந்தன் நல் தமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே மேல் 113. திருக்கழுமலம் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம் #4012 உற்று உமை சேர்வது மெய்யினையே உணர்வதும் நின் அருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே கனல் விழி காய்வது காமனையே அற்றம் மறைப்பதும் உன் பணியே அமரர்கள் செய்வதும் உன் பணியே பெற்று முகந்தது கந்தனையே பிரமபுரத்தை உகந்தனையே மேல் #4013 சதி மிக வந்த சலந்தரனே தடி சிரம் நேர் கொள் சலம் தரனே அதிர் ஒளி சேர் திகிரி படையால் அமர்ந்தனர் உம்பர் துதிப்பு அடையால் மதி தவழ் வெற்பு அது கை சிலையே மரு விடம் ஏற்பது கைச்சிலையே விதியினில் இட்டு அவிரும் பரனே வேணுபுரத்தை விரும்பு அரனே மேல் #4014 காது அமர திகழ் தோடினனே கானவனாய் கடிது ஓடினனே பாதம் அதால் கூத்து உதைத்தனனே பார்த்தன் உடல் அம்பு தைத்தனனே தாது அவிழ் கொன்றை தரித்தனனே சார்ந்த வினை அது அரித்தனனே போதம் அமரும் உரை பொருளே புகலி அமர்ந்த பரம்பொருளே மேல் #4015 மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே மெய்த்து உடல் பூசுவர் மேல் மதியே வேதம் அது ஓதுவர் மேல் மதியே பொய் தலைஓடு உறும் அத்தம் அதே புரி சடை வைத்தது மத்தம் அதே வித்தகர் ஆகிய எம் குருவே விரும்பி அமர்ந்தனர் வெங்குருவே மேல் #4016 உடன் பயில்கின்றனன் மாதவனே உறு பொறி காய்ந்து இசை மா தவனே திடம் பட மா மறை கண்டனனே திரிகுணம் மேவிய கண்டனனே படம் கொள் அரவு அரை செய்தனனே பகடு உரிகொண்டு அரைசெய்தனனே தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே மேல் #4017 திகழ் கையதும் புகை தங்கு அழலே தேவர் தொழுவதும் தம் கழலே இகழ்பவர்தாம் ஒரு மான் இடமே இரும் தனுவோடு எழில் மானிடமே மிக வரும் நீர் கொளும் மஞ்சு அடையே மின் நிகர்கின்றதும் அம் சடையே தக இரதம் கொள் வசுந்தரரே தக்க தராய் உறை சுந்தரரே மேல் #4018 ஓர்வு அரு கண்கள் இணைக்க அயலே உமையவள் கண்கள் இணை கயலே ஏர் மருவும் கழல் நாகம் அதே எழில் கொள் உதாசனன் ஆகம் அதே நீர் வரு கொந்து அளகம் கையதே நெடும் சடை மேவிய கங்கையதே சேர்வு அரு யோக தியம்பகனே சிரபுரம் மேய தி அம்பு அகனே மேல் #4019 ஈண்டு துயில் அமர் அப்பினனே இரும் கண் இடந்து அடி அப்பினனே தீண்டல் அரும் பரிசு அ கரமே திகழ்ந்து ஒளி சேர்வது சக்கரமே வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே மேல் #4020 நின் மணி வாயது நீழலையே நேசம் அது ஆனவர் நீழலையே உன்னி மனத்து எழு சங்கம் அதே ஒளி அதனோடு உறு சங்கம் அதே கன்னியரை கவரும் களனே கடல் விடம் உண்ட கரும் களனே மன்னி வரை பதி சண்பு ஐயதே வாரி வயல் மலி சண்பை அதே மேல் #4021 இலங்கை அரக்கர்-தமக்கு இறையே இடந்து கயிலை எடுக்க இறையே புலன்கள் கெட உடன் பாடினனே பொறிகள் கெட உடன்பாடினனே இலங்கிய மேனி இரா வணனே எய்து பெயரும் இராவணனே கலந்து அருள் பெற்றதும் மா வசியே காழி அரன் அடி மா வசியே மேல் #4022 கண் நிகழ் புண்டரிகத்தினனே கலந்து இரி புண் தரி கத்தினனே மண் நிகழும் பரிசு ஏனம் அதே வானகம் ஏய் வகை சேனம் அதே நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே பண் இயல் கொச்சை பசுபதியே பசு மிக ஊர்வர் பசு பதியே மேல் #4023 பரு மதில் மதுரை மன் அவை எதிரே பதிகம் அது எழுது இலை அவை எதிரே வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே கருதல் இல் இசை முரல்தரும் மருளே கழுமலம் அமர் இறை தரும் அருளே மருவிய தமிழ் விரகன மொழியே வல்லவர்-தம் இடர் திடம் ஒழியே மேல் 114. திருக்கச்சியேகம்பம் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம் #4024 பாயும் மால் விடை மேல் ஒரு பாகனே பாவை தன்உரு மேல் ஒருபாகனே தூய வானவர் வேத துவனியே சோதி மால் எரி வேதத்து வனியே ஆயும் நன் பொருள் நுண் பொருள் ஆதியே ஆல நீழல் அரும் பொருள் ஆதியே காய வில் மதன் பட்டது கம்பமே கண் நுதல் பரமற்கு இடம் கம்பமே மேல் #4025 சடை அணிந்ததும் வெண்டு அலை மாலையே தம் உடம்பிலும் வெண் தலைமாலையே படையில் அம் கையில் சூல் அம் அது என்பதே பரந்து இலங்கு ஐயில் சூலம் அது என்பதே புடை பரப்பன பூத கணங்களே போற்று இசைப்பன பூத கணங்களே கடைகள்-தோறும் இரப்பதும் மிச்சையே கம்பம் மேவி இருப்பதும் இச்சையே மேல் #4026 வெள் எருக்கொடு தும்பை மிலைச்சியே ஏறு முன் செல தும்பை மிலைச்சியே அள்ளி நீறு அது பூசுவ தாகமே ஆன மாசுணம் மூசுவது ஆகமே புள்ளி ஆடை உடுப்பது கத்துமே போன ஊழி உடுப்பது உகத்துமே கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே மேல் #4027 முற்றல் ஆமை அணிந்த முதல்வரே மூரி ஆமை அணிந்த முதல்வரே பற்றி வாள் அரவு ஆட்டும் பரிசரே பாலும் நெய் உகந்து ஆட்டும் பரிசரே வற்றல் ஓடு கலம் பலி தேர்வதே வானினோடு கலம் பலி தேர்வதே கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே மேல் #4028 வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே ஆடு பாம்பு அரை ஆர்த்தது உடை அதே அஞ்சு பூதமும் ஆர்த்தது உடையதே கோடு வான் மதி கண்ணி அழகிதே குற்றம் இல் மதி கண்ணி அழகிதே காடு வாழ் பதி ஆவதும் உமது ஏகம்பம் மா பதி ஆவதும் உம்மதே மேல் #4029 இரும் புகை கொடி தங்கு அழல் கையதே இமயமாமகள் தம் கழல் கையதே அரும்பு மொய்த்த மலர் பொறை தாங்கியே ஆழியான்-தன் மலர் பொறை தாங்கியே பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே மேல் #4030 முதிரம் மங்கை தவம் செய்த காலமே முன்பும் அம் கைதவம் செய்த காலமே வெதிர்களோடு அகில் சந்தம் முருட்டியே வேழம் ஓடகில்சந்தம் உருட்டியே அதிர ஆறு வரத்து அழுவத்தொடே ஆன் ஐ ஆடுவர தழுவத்தொடே கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே மேல் #4031 பண்டு அரக்கன் எடுத்த பலத்தையே பாய்ந்து அரக்கல் நெடுத்த அபலத்தையே கொண்டு அரக்கியதும் கால்விரலையே கோள் அரக்கியதும் கால்வு இரலையே உண்டு உழன்றதும் முண்ட தலையிலே உடுபதிக்கு இடம் உண்டு அ தலையிலே கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே மேல் #4032 தூணி ஆன சுடர்விடு சோதியே சுத்தமான சுடர்விடு சோதியே பேணி ஓடு பிரம பிரம பறவையே பித்தன் ஆன பிரம பறவையே சேணினோடு கீழ் ஊழி திரிந்துமே சித்தமோடு கீழ் ஊழி திரிந்துமே காண நின்றனர் உற்றது கம்பமே கடவுள் நீ இடம் உற்றது கம்பமே மேல் #4033 ஓர் உடம்பினை ஈர் உரு ஆகவே உன் பொருள் திறம் ஈர் உரு ஆகவே ஆரும் மெய்தன் கரிது பெரிதுமே ஆற்ற எய்தற்கு அரிது பெரிதுமே தேரரும் அறியாது திகைப்பரே சித்தமும் மறியா துதி கைப்பரே கார் நிறத்து அமணர்க்கு ஒரு கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே மேல் #4034 கந்தம் ஆர் பொழில் சூழ்தரு கம்பமே காதல் செய்பவர் தீர்த்திடு உகு அம்பமே புந்திசெய்வது விரும்பி புகலியே பூசுரன்-தன் விரும்பி புகலியே அந்தம் இல் பொருள் ஆயின கொண்டுமே அண்ணலின் பொருள் ஆயின கொண்டுமே பந்தன் இன்னியல் பாடிய பத்துமே பாட வல்லவர் ஆயின பத்துமே மேல் 115. திருஆலவாய் : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம் #4035 ஆல நீழல் உகந்தது இருக்கையே ஆன பாடல் உகந்தது இருக்கையே பாலின் நேர் மொழியாள் ஒருபங்கனே பாதம் ஓதலர் சேர் புர பங்கனே கோலம் நீறு அணி மே தகு பூதனே கோது இலார் மனம் மேவிய பூதனே ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே மேல் #4036 பாதியாய் உடன்கொண்டது மாலையே பாம்பு தார் மலர் கொன்றை நல் மாலையே கோது இல் நீறு அது பூசிடும் ஆகனே கொண்ட நன் கையில் மான் இடம் ஆகனே நாதன் நாள்-தொறும் ஆடுவது ஆன் ஐயே நாடி அன்று உரிசெய்ததும் ஆனையே வேதநூல் பயில்கின்றது வாயிலே விகிர்தன் ஊர் திரு ஆலநல்வாயிலே மேல் #4037 காடு நீடது உற பல கத்தனே காதலால் நினைவார்-தம் அகத்தனே பாடு பேயொடு பூதம் மசிக்கவே பல் பிண தசை நாடி அசிக்கவே நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே ஆடல் நீள் சடை மேவிய அப்பனே ஆலவாயினில் மேவிய அப்பனே மேல் #4038 பண்டு அயன் தலை ஒன்றும் அறுத்தியே பாதம் ஓதினர் பாவம் மறுத்தியே துண்ட வெண் பிறை சென்னி இருத்தியே தூய வெள் எருது ஏறி இருத்தியே கண்டு காமனை வேவ விழித்தியே காதல் இல்லவர்-தம்மை இழித்தியே அண்ட_நாயகனே மிகு கண்டனே ஆலவாயினில் மேவிய அகண்டனே மேல் #4039 சென்று தாதை உகுத்தனன் பாலையே சீறி அன்பு செகுத்தனன்-பால் ஐயே வென்றி சேர் மழுக்கொண்டு முன்காலையே வீட வெட்டிட கண்டு முன்காலையே நின்ற மாணியை ஓடின கங்கையால் நிலவ மல்கி உதித்து அனகம் கையால் அன்று நின் உரு ஆக தடவியே ஆலவாய் அரன் நாகத்து அடவியே மேல் #4040 நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே தக்க பூ மனை சுற்ற கருளொடே தாரம் உய்த்தது பாணற்கு அருளொடே மிக்க தென்னவன்_தேவிக்கு அணியையே மெல்ல நல்கிய தொண்டர்க்கு அணியையே அக்கினார் அமுது உண்கலன் ஓடுமே ஆலவாய் அரனார் உமையோடுமே மேல் #4041 வெய்யவன் பல் உகுத்தது குட்டியே வெம் கண் மாசுணம் கையது குட்டியே ஐயனே அனல் ஆடிய மெய்யனே அன்பினால் நினைவார்க்கு அருள் மெய்யனே வையம் உய்ய அன்று உண்டது காளமே வள்ளல் கையது மேவு கங்காளமே ஐயம் ஏற்பது உரைப்பது வீண் ஐயே ஆலவாய் அரன் கையது வீணையே மேல் #4042 தோள்கள் பத்தொடு பத்தும் அயக்கியே தொக்க தேவர் செருக்கை மயக்கியே வாள் அரக்கன் நிலத்து களித்துமே வந்து அ மால் வரை கண்டு உகளித்துமே நீள் பொருப்பை எடுத்த உன்மத்தனே நின் விரல் தலையால் மதம் மத்தனே ஆளும் ஆதி முறித்தது மெய்-கொலோ ஆலவாய் அரன் உய்த்ததும் மெய்-கொலோ மேல் #4043 பங்கயத்து உள நான்முகன் மாலொடே பாதம் நீள் முடி நேடிட மாலொடே துங்க நல் தழலின் உருவாயுமே தூய பாடல் பயின்றது வாயுமே செங்கயல் கணினார் இடு பிச்சையே சென்று கொண்டு உரைசெய்வது பிச்சு ஐயே அங்கியை திகழ்விப்பது இடக்கையே ஆலவாய் அரனாரது இட கையே மேல் #4044 தேரரோடு அமணர்க்கு நல்கானையே தேவர் நாள்-தொறும் சேர்வது கானையே கோரம் அட்டது புண்டரிகத்தையே கொண்ட நீள் கழல் புண்டரிகத்தையே நேர் இல் ஊர்கள் அழித்தது நாகமே நீள் சடை திகழ்கின்றது நாகமே ஆரம் ஆக உகந்ததும் என்பு அதே ஆலவாய் அரனார் இடம் என்பதே மேல் #4045 ஈன ஞானிகள்-தம்மொடு விரகனே ஏறு பல் பொருள் முத்தமிழ் விரகனே ஆன காழியுள் ஞானசம்பந்தனே ஆலவாயினில் மேய சம்பந்தனே ஆன வானவர் வாயின் உளத்தனே அன்பர் ஆனவர் வாயினுள் அத்தனே நான் உரைத்தன செந்தமிழ் பத்துமே வல்லவர்க்கு இவை நற்று அமிழ் பத்துமே மேல் 116. திருவீழிமிழலை : திருவியமகம் : பண் - பழம்பஞ்சுரம் |