திருநாவுக்கரசர் (அப்பர்)
இயற்றிய
தேவாரம் (திருமுறை 4)
திருநாவுக்கரசர் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐💐🌹🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻 |
---|
திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் 4. நான்காம் திருமுறை 1. திரு அதிகை வீரட்டானம் : பண் - கொல்லி #1 கூற்று ஆயின ஆறு விலக்ககிலீர் கொடுமை பல செய்தன நான் அறியேன் ஏற்றாய் அடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங்குவன் எப்பொழுதும் தோற்றாது என் வயிற்றின் அகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #2 நெஞ்சம் உமக்கே இடம் ஆக வைத்தேன் நினையாது ஒருபோதும் இருந்து அறியேன் வஞ்சம் இது ஒப்பது கண்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலும் என்னீர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #3 பணிந்தாரான பாவங்கள் பாற்ற வல்லீர் படு வெண் தலையில் பலி கொண்டு உழல்வீர் துணிந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் பிணிந்தார் பொடிகொண்டு மெய் பூச வல்லீர் பெற்றம் ஏற்று உகந்தீர் சுற்றும் வெண் தலை கொண்டு அணிந்தீர் அடிகேள் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மனே மேல் #4 முன்னம் அடியேன் அறியாமையினான் முனிந்து என்னை நலிந்து முடக்கியிட பின்னை அடியேன் உமக்கு ஆளும்பட்டேன் சுடுகின்றது சூலை தவிர்த்து அருளீர் தன்னை அடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர்-தம் கடன் ஆவதுதான் அன்னநடையார் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #5 காத்து ஆள்பவர் காவல் இகழ்ந்தமையால் கரை நின்றவர் கண்டுகொள் என்று சொல்லி நீத்து ஆய கயம் புக நூக்கியிட நிலை கொள்ளும் வழித்துறை ஒன்று அறியேன் வார்த்தை இது ஒப்பது கேட்டு அறியேன் வயிற்றோடு துடக்கி முடக்கியிட ஆர்த்தார் புனல் ஆர் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #6 சலம் பூவொடு தூபம் மறந்து அறியேன் தமிழோடு இசை பாடல் மறந்து அறியேன் நலம் தீங்கிலும் உன்னை மறந்து அறியேன் உன் நாமம் என் நாவில் மறந்து அறியேன் உலந்தார் தலையில் பலி கொண்டு உழல்வாய் உடலுள் உறு சூலை தவிர்த்து அருளாய் அலந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #7 உயர்ந்தேன் மனைவாழ்க்கையும் ஒண் பொருளும் ஒருவர் தலை காவல் இலாமையினால் வயந்தே உமக்கு ஆட்செய்து வாழலுற்றால் வலிக்கின்றது சூலை தவிர்த்து அருளீர் பயந்தே என் வயிற்றின் அகம்படியே பறித்து புரட்டி அறுத்து ஈர்த்திட நான் அயர்ந்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #8 வலித்தேன் மனைவாழ்க்கை மகிழ்ந்து அடியேன் வஞ்சம் மனம் ஒன்றும் இலாமையினால் சலித்தால் ஒருவர் துணை யாரும் இல்லை சங்க வெண் குழை காது உடை எம்பெருமான் கலித்தே என் வயிற்றின் அகம்படியே கலக்கி மலக்கிட்டு கவர்ந்து தின்ன அலுத்தேன் அடியேன் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #9 பொன் போல மிளிர்வது ஒர் மேனியினீர் புரி புன் சடையீர் மெலியும் பிறையீர் துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் என்போலிகள் உம்மை இனி தெளியார் அடியார் படுவது இதுவே ஆகில் அன்பே அமையும் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் #10 போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் ஆர்த்தான் அரக்கன்-தனை மால் வரை கீழ் அடர்த்திட்டு அருள்செய்த அது கருதாய் வேர்த்தும் புரண்டும் விழுந்தும் எழுந்தால் என் வேதனை ஆன விலக்கியிடாய் ஆர்த்து ஆர் புனல் சூழ் அதிகை கெடில வீரட்டானத்து உறை அம்மானே மேல் 2. திரு அதிகை வீரட்டானம் : பண் - காந்தாரம் #11 சுண்ண வெண் சந்தன சாந்தும் சுடர் திங்கள் சூளாமணியும் வண்ண உரிவை உடையும் வளரும் பவள நிறமும் அண்ணல் அரண் முரண் ஏறும் அகலம் வளாய அரவும் திண்ணென் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #12 பூண்டது ஒர் கேழல் எயிறும் பொன் திகழ் ஆமை புரள நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலா கதிர் போல வெண் நூலும் காண்தகு புள்ளின் சிறகும் கலந்த கட்டங்க கொடியும் ஈண்டு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #13 ஒத்த வடத்து இள நாகம் உருத்திரபட்டம் இரண்டும் முத்து வட கண்டிகையும் முளைத்து எழு மூ இலை வேலும் சித்த வடமும் அதிகை சேண் உயர் வீரட்டம் சூழ்ந்து தத்தும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #14 மட மான் மறி பொன் கலையும் மழு பாம்பு ஒரு கையில் வீணை குட மால் வரைய திண் தோளும் குனி சிலை கூத்தின் பயில்வும் இடம் மால் தழுவிய பாகம் இரு நிலன் ஏற்ற சுவடும் தடம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #15 பலபல காமத்தர் ஆகி பதைத்து எழுவார் மனத்துள்ளே கலமலக்கிட்டு திரியும் கணபதி என்னும் களிறும் வலம் ஏந்து இரண்டு சுடரும் வான் கயிலாய மலையும் நலம் ஆர் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #16 கரந்தன கொள்ளி விளக்கும் கறங்கு துடியின் முழக்கும் பரந்த பதினெண் கணமும் பயின்று அறியாதன பாட்டும் அரங்கிடை நூல் அறிவாளர் அறியப்படாதது ஒர் கூத்தும் நிரந்த கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #17 கொலை வரி வேங்கை அதளும் குலவோடு இலங்கு பொன் தோடும் விலை பெறு சங்க குழையும் விலை இல் கபால கலனும் மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணி ஆர்ந்து இலங்கு மிடறும் உலவு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #18 ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும் பாடல் பயின்ற பல் பூதம் பல் ஆயிரம் கொள் கருவி நாடற்கு அரியது ஒர் கூத்தும் நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்து ஓடும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #19 சூழும் அரவ துகிலும் துகில் கிழி கோவண கீளும் யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அரு வரை போன்ற வேழம் உரித்த நிலையும் விரி பொழில் வீரட்டம் சூழ்ந்து தாழும் கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் #20 நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை உரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும்_ஒன்றும் அலற வரங்கள் கொடுத்து அருள்செய்வான் வளர் பொழில் வீரட்டம் சூழ்ந்து நிரம்பு கெடில புனலும் உடையார் ஒருவர் தமர் நாம் அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை மேல் 3. திருவையாறு : பண் - காந்தாரம் #21 மாதர் பிறைக்கண்ணியானை மலையான்மகளொடும் பாடி போதொடு நீர் சுமந்து ஏத்தி புகுவார் அவர் பின் புகுவேன் யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது காதல் மட பிடியோடும் களிறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டுஅறியாதன கண்டேன் மேல் #22 போழ்இளங்கண்ணியினானை பூந்துகிலாளொடும் பாடி வாழியம் போற்றி என்று ஏத்தி வட்டம்இட்டு ஆடா வருவேன் ஆழிவலவன் நின்று ஏத்தும் ஐயாறு அடைகின்றபோது கோழி பெடையொடும் கூடி குளிர்ந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #23 எரி பிறைக்கண்ணியினானை ஏந்து_இழையாளொடும் பாடி முரித்த இலயங்கள் இட்டு முகம் மலர்ந்து ஆடா வருவேன் அரித்து ஒழுகும் வெள் அருவி ஐயாறு அடைகின்றபோது வரி குயில் பேடையோடு ஆடி வைகி வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #24 பிறை இளங்கண்ணியினானை பெய் வளையாளொடும் பாடி துறை இளம் பல் மலர் தூவி தோளை குளிர தொழுவேன் அறை இளம் பூம் குயில் ஆலும் ஐயாறு அடைகின்றபோது சிறை இளம் பேடையொடு ஆடி சேவல் வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #25 ஏடு மதிக்கண்ணியானை ஏந்து_இழையாளொடும் பாடி காடொடு நாடும் மலையும் கைதொழுது ஆடா வருவேன் ஆடல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது பேடை மயிலொடும் கூடி பிணைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #26 தண் மணிக்கண்ணியினானை தையல் நல்லாளொடும் பாடி உள் மெலி சிந்தையன் ஆகி உணரா உருகா வருவேன் அண்ணல் அமர்ந்து உறைகின்ற ஐயாறு அடைகின்றபோது வண்ண பகன்றிலொடு ஆடி வைகி வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #27 கடி மதிக்கண்ணியினானை காரிகையாளொடும் பாடி வடிவொடு வண்ணம் இரண்டும் வாய் வேண்டுவ சொல்லி வாழ்வேன் அடி இணை ஆர்க்கும் கழலான் ஐயாறு அடைகின்றபோது இடி குரல் அன்னது ஒர் ஏனம் இசைந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #28 விரும்பு மதிக்கண்ணியானை மெல்லியலாளொடும் பாடி பெரும் புலர் காலை எழுந்து பெறு மலர் கொய்யா வருவேன் அரும் கலம் பொன் மணி உந்தும் ஐயாறு அடைகின்றபோது கரும் கலை பேடையொடு ஆடி கலந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #29 முற்பிறைக்கண்ணியினானை மொய் குழலாளொடும் பாடி பற்றி கயிறு அறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன் அற்று அருள் பெற்று நின்றாரோடு ஐயாறு அடைகின்றபோது நல் துணை பேடையொடு ஆடி நாரை வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #30 திங்கள் மதிக்கண்ணியானை தே_மொழியாளொடும் பாடி எங்கு அருள் நல்கும்-கொல் எந்தை எனக்கு இனி என்னா வருவேன் அங்கு இள மங்கையர் ஆடும் ஐயாறு அடைகின்றபோது பைம் கிளி பேடையொடு ஆடி பறந்து வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் #31 வளர் மதிக்கண்ணியினானை வார் குழலாளொடும் பாடி களவு படாதது ஒர் காலம் காண்பான் கடைக்கண் நின்கின்றேன் அளவு படாதது ஒர் அன்போடு ஐயாறு அடைகின்றபோது இள மண நாகு தழுவி ஏறு வருவன கண்டேன் கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன் மேல் 4. திருவாரூர் : பண் - காந்தாரம் #32 பாடு இளம் பூதத்தினானும் பவள செ வாய் வண்ணத்தானும் கூடு இள மென்முலையாளை கூடிய கோலத்தினானும் ஓடு இள வெண் பிறையானும் ஒளி திகழ் சூலத்தினானும் ஆடு இளம் பாம்பு அசைத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #33 நரியை குதிரை செய்வானும் நரகரை தேவு செய்வானும் விரதம் கொண்டு ஆட வல்லானும் விச்சு இன்றி நாறு செய்வானும் முரசு அதிர்ந்து ஆனை முன் ஓட முன் பணிந்து அன்பர்கள் ஏத்த அரவு அரை சாத்தி நின்றானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #34 நீறு மெய் பூச வல்லானும் நினைப்பவர் நெஞ்சத்து உளானும் ஏறு உகந்து ஏற வல்லானும் எரி புரை மேனியினானும் நாறு கரந்தையினானும் நான்மறை கண்டத்தினானும் ஆறு சடை கரத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #35 கொம்பு நல் வேனிலவனை குழைய முறுவல்செய்தானும் செம்பு நல் கொண்ட எயில் மூன்றும் தீ எழ கண் சிவந்தானும் வம்பு நல் கொன்றையினானும் வாள் கண்ணி வாட்டம் அது எய்த அம்பர ஈர் உரியானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #36 ஊழி அளக்க வல்லானும் உகப்பவர் உச்சி உள்ளானும் தாழ் இளம் செஞ்சடையானும் தண்ணம் ஆர் திண் கொடியானும் தோழியர் தூது இடையாட தொழுது அடியார்கள் வணங்க ஆழி வளை கையினானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #37 ஊர் திரை வேலை உள்ளானும் உலகு இறந்த ஒண் பொருளானும் சீர் தரு பாடல் உள்ளானும் செம் கண் விடை கொடியானும் வார் தரு பூங்குழலாளை மருவி உடன்வைத்தவனும் ஆர்திரை நாள் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #38 தொழற்கு அம் கை துன்னி நின்றார்க்கு தோன்றி அருள வல்லானும் கழற்கு அங்கை பல் மலர் கொண்டு காதல் கனற்ற நின்றானும் குழல் கங்கையாளை உள் வைத்து கோல சடை கரந்தானும் அழல் கம் கை ஏந்த வல்லானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #39 ஆயிரம் தாமரை போலும் ஆயிரம் சேவடியானும் ஆயிரம் பொன் வரைபோலும் ஆயிரம் தோள் உடையானும் ஆயிரம் ஞாயிறு போலும் ஆயிரம் நீள் முடியானும் ஆயிரம் பேர் உகந்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #40 வீடு அரங்கா நிறுப்பானும் விசும்பினை வேதி தொடர ஓடு அரங்கு ஆக வைத்தானும் ஓங்கி ஒர் ஊழி உள்ளானும் காடு அரங்கா மகிழ்ந்தானும் காரிகையார்கள் மனத்துள் ஆடு அரங்கத்திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் #41 பை அம் சுடர் விடு நாக பள்ளி கொள்வான் உள்ளத்தானும் கை அஞ்சு நான்கு உடையானை கால்விரலால் அடர்த்தானும் பொய் அஞ்சி வாய்மைகள் பேசி புகழ் புரிந்தார்க்கு அருள்செய்யும் ஐ அஞ்சின் அ புறத்தானும் ஆரூர் அமர்ந்த அம்மானே மேல் 5. திருவாரூர் : பழமொழி. பண் - காந்தாரம் #42 மெய் எலாம் வெண் நீறு சண்ணித்த மேனியான் தாள் தொழாதே உய்யலாம் என்று எண்ணி உறி தூக்கி உழிதந்தேன் உள்ளம் விட்டு கொய் உலா மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் ஆரூரரை கையினால் தொழாது ஒழிந்து கனி இருக்க காய் கவர்ந்த கள்வனேனே மேல் #43 என்பு இருத்தி நரம்பு தோல் புக பெய்திட்டு என்னை ஓர் உருவம் ஆக்கி இன்பு இருத்தி முன்பு இருந்த வினை தீர்த்திட்டு என் உள்ளம் கோயில் ஆக்கி அன்பு இருத்தி அடியேனை கூழ் ஆட்கொண்டு அருள்செய்த ஆரூரர்-தம் முன்பு இருக்கும் விதி இன்றி முயல் விட்டு காக்கை பின் போன ஆறே மேல் #44 பெருகுவித்து என் பாவத்தை பண்டு எலாம் குண்டர்கள்-தம் சொல்லே கேட்டு உருகுவித்து என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தை தள்ளி போக்கி அருகுவித்து பிணி காட்டி ஆட்கொண்டு பிணி தீர்த்த ஆரூரர்-தம் அருகு இருக்கும் விதி இன்றி அறம் இருக்க மறம் விலைக்கு கொண்ட ஆறே மேல் #45 குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை பண்டமா படுத்து என்னை பால் தலையில் தெளித்து தன் பாதம் காட்டி தொண்டு எலாம் இசை பாட தூ முறுவல் அருள்செய்யும் ஆரூரை பண்டு எலாம் அறியாதே பனி நீரால் பரவை செய பாவித்தேனே மேல் #46 துன் நாகத்தேன் ஆகி துர்ச்சனவர் சொல் கேட்டு துவர் வாய்க்கொண்டு என் ஆகத் திரிதந்து ஈங்கு இரு கை ஏற்றிட உண்டேன் ஏழையேன் நான் பொன் ஆகத்து அடியேனை புகப் பெய்து பொருட்படுத்த ஆரூரரை என்னகத்து இருத்தாதே ஏதன் போர்க்கு ஆதனாய் அகப்பட்டேனே மேல் #47 பப்பு ஓதி பவணனாய் பறித்தது ஒரு தலையோடே திரிதர்வேனை ஒப்பு ஓட ஓதுவித்து என் உள்ளத்தினுள் இருந்து அங்கு உறுதி காட்டி அப்போதைக்கு அப்போதும் அடியவர்கட்கு ஆரமுது ஆம் ஆரூரரை எப்போதும் நினையாதே இருட்டு அறையில் மலடு கறந்து எய்த்த ஆறே மேல் #48 கதி ஒன்றும் அறியாதே கண் அழல தலை பறித்து கையில் உண்டு பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு மதி தந்த ஆரூரில் வார் தேனை வாய்மடுத்து பருகி உய்யும் விதி இன்றி மதியிலியேன் விளக்கு இருக்க மின்மினி தீ காய்ந்த ஆறே மேல் #49 பூவையாய் தலை பறித்து பொறி அற்ற சமண் நீசர் சொல்லே கேட்டு காவி சேர் கண் மடவார் கண்டு ஓடி கதவு அடைக்கும் கள்வனேன்-தன் ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்ட ஆரூரரை பாவியேன் அறியாதே பாழ் ஊரில் பயிக்கம் புக்கு எய்த்த ஆறே மேல் #50 ஒட்டாத வாள் அவுணர் புரம் மூன்றும் ஓர் அம்பின்-வாயின் வீழ கட்டானை காமனையும் காலனையும் கண்ணினொடு காலின் வீழ அட்டானை ஆரூரில் அம்மானை ஆர்வ செற்ற குரோதம் தட்டானை சாராதே தவம் இருக்க அவம் செய்து தருக்கினேனே மேல் #51 மறுத்தான் ஒர் வல் அரக்கன் ஈர்_ஐந்து முடியினொடு தோளும் தாளும் இறுத்தானை எழில் முளரி தவிசின் மிசை இருந்தான்-தன் தலையில் ஒன்றை அறுத்தானை ஆரூரில் அம்மானை ஆலாலம் உண்டு கண்டம் கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே மேல் 6. திருக்கழிப்பாலை : பண் - காந்தாரம் #52 வன பவள வாய் திறந்து வானவர்க்கும் தானவனே என்கின்றாளால் சின பவள திண் தோள் மேல சேர்ந்து இலங்கும் வெண்நீற்றன் என்கின்றாளால் அன பவள மேகலையோடு அப்பாலைக்கு அப்பாலான் என்கின்றாளால் கன பவளம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #53 வண்டு உலவு கொன்றை வளர் புன் சடையானே என்கின்றாளால் விண்டு அலர்ந்து நாறுவது ஒர் வெள் எருக்க நாள் மலர் உண்டு என்கின்றாளால் உண்டு அயலே தோன்றுவது ஒர் உத்தரியப்பட்டு உடையன் என்கின்றாளால் கண்டல் அயலே தோன்றும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #54 பிறந்து இளைய திங்கள் எம்பெருமான் முடி மேலது என்கின்றாளால் நிறம் கிளரும் குங்குமத்தின் மேனி அவன் நிறமே என்கின்றாளால் மறம் கிளர் வேல்கண்ணாள் மணி சேர் மிடற்றவனே என்கின்றாளால் கறங்கு ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #55 இரும்பு ஆர்ந்த சூலத்தன் ஏந்திய ஒர் வெண் மழுவன் என்கின்றாளால் சுரும்பு ஆர்ந்த மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் பெரும்பாலன் ஆகி ஒர் பிஞ்ஞக வேடத்தன் என்கின்றாளால் கரும்பானல் பூக்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #56 பழி இலான் புகழ் உடையன் பால்நீற்றன் ஆன்ஏற்றன் என்கின்றாளால் விழி உலாம் பெரும் தடம் கண் இரண்டு அல்ல மூன்று உளவே என்கின்றாளால் சுழி உலாம் வரு கங்கை தோய்ந்த சடையவனே என்கின்றாளால் கழி உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #57 பண் ஆர்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின்றாளால் எண்ணார் புரம் எரித்த எந்தை பெருமானே என்கின்றாளால் பண் ஆர் முழவு அதிர பாடலொடு ஆடலனே என்கின்றாளால் கண் ஆர் பூம் சோலை கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #58 முதிரும் சடை முடி மேல் மூழ்கும் இள நாகம் என்கின்றாளால் அது கண்டு அதன் அருகே தோன்றும் இள மதியம் என்கின்றாளால் சதுர் வெண் பளிக்கு குழை காதில் மின்னிடுமே என்கின்றாளால் கதிர் முத்தம் சிந்தும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #59 ஓர் ஓதம் ஓதி உலகம் பலி திரிவான் என்கின்றாளால் நீர் ஓதம் ஏற நிமிர் புன் சடையானே என்கின்றாளால் பார் ஓத மேனி பவளம் அவன் நிறமே என்கின்றாளால் கார் ஓதம் மல்கும் கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #60 வான் உலாம் திங்கள் வளர் புன் சடையானே என்கின்றாளால் ஊன் உலாம் வெண் தலை கொண்டு ஊர்ஊர் பலி திரிவான் என்கின்றாளால் தேன் உலாம் கொன்றை திளைக்கும் திருமார்பன் என்கின்றாளால் கான் உலாம் சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் #61 அடர்ப்பு அரிய இராவணனை அரு வரை கீழ் அடர்த்தவனே என்கின்றாளால் சுடர் பெரிய திரு மேனி சுண்ண வெண்நீற்றவனே என்கின்றாளால் மடல் பெரிய ஆலின் கீழ் அறம் நால்வர்க்கு அன்று உரைத்தான் என்கின்றாளால் கடல் கருவி சூழ்ந்த கழிப்பாலை சேர்வானை கண்டாள்-கொல்லோ மேல் 7. திருக்கச்சி ஏகம்பம் : பண் - காந்தாரம் #62 கரவு ஆடும் வன் நெஞ்சர்க்கு அரியானை கரவார்-பால் விரவாடும் பெருமானை விடை ஏறும் வித்தகனை அரவு ஆட சடை தாழ அங்கையினில் அனல் ஏந்தி இரவு ஆடும் பெருமானை என் மனத்தே வைத்தேனே மேல் #63 தேன் நோக்கும் கிளி மழலை உமை கேள்வன் செழும் பவளம் தான் நோக்கும் திரு மேனி தழல் உரு ஆம் சங்கரனை வான் நோக்கும் வளர் மதி சேர் சடையானை வானோர்க்கும் ஏனோர்க்கும் பெருமானை என் மனத்தே வைத்தேனே மேல் #64 கை போது மலர் தூவி காதலித்து வானோர்கள் முப்போதும் முடி சாய்த்து தொழ நின்ற முதல்வனை அப்போது மலர் தூவி ஐம்புலனும் அகத்து அடக்கி எப்போதும் இனியானை என் மனத்தே வைத்தேனே மேல் #65 அண்டமாய் ஆதியாய் அரு மறையோடு ஐம் பூத பிண்டமாய் உலகுக்கு ஒர் பெய்பொருளாம் பிஞ்ஞகனை தொண்டர்தாம் மலர் தூவி சொல் மாலை புனைகின்ற இண்டை சேர் சடையானை என் மனத்தே வைத்தேனே மேல் #66 ஆறு ஏறு சடையானை ஆயிரம் பேர் அம்மானை பாறு ஏறு படுதலையில் பலி கொள்ளும் பரம்பரனை நீறு ஏறு திரு மேனி நின்மலனை நெடும் தூவி ஏறு ஏறும் பெருமானை என் மனத்தே வைத்தேனே மேல் #67 தேசனை தேசங்கள் தொழ நின்ற திருமாலால் பூசனை பூசனைகள் உகப்பானை பூவின்-கண் வாசனை மலை நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆம் ஈசனை எம்மானை என் மனத்தே வைத்தேனே மேல் #68 நல்லானை நல் ஆன நான்மறையோடு ஆறு அங்கம் வல்லானை வல்லார்கள் மனத்து உறையும் மைந்தனை சொல்லானை சொல் ஆர்ந்த பொருளானை துகள் ஏதும் இல்லானை எம்மானை என் மனத்தே வைத்தானே மேல் #69 விரித்தானை நால்வர்க்கு வெவ்வேறு வேதங்கள் புரித்தானை பதம் சந்தி பொருள் உரு ஆம் புண்ணியனை தரித்தானை கங்கை நீர் தாழ் சடைமேல் மதில் மூன்றும் எரித்தானை எம்மானை என் மனத்தே வைத்தேனே மேல் #70 ஆகம் பத்து அரவுஅணையான் அயன் அறிதற்கு அரியானை பாகம் பெண் ஆண் பாகமாய் நின்ற பசுபதியை மா கம்பம் மறை ஓதும் இறையானை மதில் கச்சி ஏகம்பம் மேயானை என் மனத்தே வைத்தேனே மேல் #71 அடுத்த ஆனை உரித்தானை அருச்சுனற்கு பாசுபதம் கொடுத்தானை குல வரையே சிலைஆக கூர் அம்பு தொடுத்தானை புரம் எரிய சுனை மல்கு கயிலாயம் எடுத்தானை தடுத்தானை எனை மனத்தே வைத்தேனே மேல் 8. பொது - சிவன் எனும் ஓசை : பண் - பியந்தைக்காந்தாரம் #72 சிவன் எனும் ஓசை அல்லது அறையோ உலகில் திரு நின்ற செம்மை உளதே அவனும் ஓர் ஐயம் உண்ணி அதள் ஆடை ஆவது அதன் மேல் ஒர் ஆடல் அரவம் கவண் அளவு உள்ள உள்கு கரி காடு கோயில் கலன் ஆவது ஓடு கருதில் அவனது பெற்றி கண்டும் அவன் நீர்மை கண்டும் அகம் தேர்வர் தேவர் அவரே மேல் #73 விரி கதிர் ஞாயிறு அல்லர் மதி அல்லர் வேதவிதி அல்லர் விண்ணும் நிலனும் திரிதரு வாயு அல்லர் செறு தீயும் அல்லர் தெளி நீரும் அல்லர் தெரியில் அரி தரு கண்ணியாளை ஒருபாகம் ஆக அருள் காரணத்தில் வருவார் எரி அரவு ஆரம் மார்பர் இமையாரும் அல்லர் இமைப்பாரும் அல்லர் இவரே மேல் #74 தேய் பொடி வெள்ளை பூசி அதன் மேல் ஒர் திங்கள் திலகம் பதித்த நுதலர் காய் கதிர் வேலை நீல ஒளி மா மிடற்றர் கரி காடர் கால் ஒர் கழலர் வேயுடன் நாடு தோளி அவள் விம்ம வெய்ய மழு வீசி வேழ உரி போர்த்து ஏ இவர் ஆடும் ஆறும் இவள் காணும் ஆறும் இதுதான் இவர்க்கு ஒர் இயல்பே மேல் #75 வளர் பொறி ஆமை புல்கி வளர் கோதை வைகி வடி தோலும் நூலும் வளர கிளர் பொறி நாகம் ஒன்று மிளிர்கின்ற மார்பர் கிளர் காடும் நாடும் மகிழ்வர் நளிர் பொறி மஞ்ஞை அன்ன தளிர் போன்ற சாயலவள் தோன்று வாய்மை பெருகி குளிர் பொறி வண்டு பாடு குழலாள் ஒருத்தி உளள் போல் குலாவி உடனே மேல் #76 உறைவது காடு போலும் உரி தோல் உடுப்பர் விடை ஊர்வது ஓடு கலனா இறை இவர் வாழும் வண்ணம் இது ஏலும் ஈசர் ஒருபால் இசைந்தது ஒருபால் பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் அறை கழல் வண்டு பாடும் அடி நீழல் ஆணை கடவாது அமரர்_உலகே மேல் #77 கணி வளர் வேங்கையோடு கடி திங்கள் கண்ணி கழல் கால் சிலம்ப அழகு ஆர் அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணம் இயலார் ஒருவர் இருவர் மணி கிளர் மஞ்ஞை ஆல மழை ஆடு சோலை மலையான்மகட்கும் இறைவர் அணி கிளர் அன்ன வண்ணம் அவள் வண்ண வண்ணம் அவர் வண்ண வண்ணம் அழலே மேல் #78 நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் முகை வளர் கோதை மாதர் முனி பாடும் ஆறும் எரி ஆடும் ஆறும் இவர் கை பகை வளர் நாகம் வீசி மதி அங்கு மாறும் இது போலும் ஈசர் இயல்பே மேல் #79 ஒளி வளர் கங்கை தங்கும் ஒளி மால் அயன்-தன் உடல் வெந்து வீய சுடர் நீறு அணி கிளர் ஆர வெள்ளை தவழ் சுண்ண வண்ணர் தமியார் ஒருவர் இருவர் களி கிளர் வேடம் உண்டு ஒர் கடமா உரித்து உடை தோல் தொடுத்த கலனார் அணி கிளர் அன்ன தொல்லையவள் பாகம் ஆக எழில் வேதம் ஓதுமவரே மேல் #80 மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் தலை கலன் ஆக உண்டு தனியே திரிந்து தவவாணர் ஆகி முயல்வர் விலையிலி சாந்தம் என்று வெறி நீறு பூசி விளையாடும் வேட விகிர்தர் அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே மேல் #81 புது விரி பொன் செய் ஓலை ஒரு காது ஒர் காது சுரி சங்கம் நின்று புரள விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் இது இவர் வண்ண வண்ணம் இவள் வண்ண வண்ணம் எழில் வண்ண வண்ணம் இயல்பே மேல் 9. திருஅங்கமாலை : பண் - சாதாரி #82 தலையே நீ வணங்காய் தலை மாலை தலைக்கு அணிந்து தலையாலே பலி தேரும் தலைவனை தலையே நீ வணங்காய் மேல் #83 கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை எண் தோள் வீசி நின்று ஆடும் பிரான்-தன்னை கண்காள் காண்-மின்களோ மேல் #84 செவிகாள் கேண்-மின்களோ சிவன் எம் இறை செம்பவள எரி போல் மேனி பிரான் திறம் எப்போதும் செவிகாள் கேண்-மினேகளோ மேல் #85 மூக்கே நீ முரலாய் முதுகாடு உறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கைமணாளனை மூக்கே நீ முரலாய் மேல் #86 வாயே வாழ்த்துகண்டாய் மத யானை உரி போர்த்து பேய் வாழ் காட்டகத்து ஆடும் பிரான்-தன்னை வாயே வாழ்த்துகண்டாய் மேல் #87 நெஞ்சே நீ நினையாய் நிமிர் புன் சடை நின்மலனை மஞ்சு ஆடும் மலை மங்கை மணாளனை நெஞ்சே நீ நினையாய் மேல் #88 கைகாள் கூப்பி தொழீர் கடி மா மலர் தூவி நின்று பை வாய் பாம்பு அரை ஆர்த்த பரமனை கைகாள் கூப்பி தொழீர் மேல் #89 ஆக்கையால் பயன் என் அரன் கோயில் வலம்வந்து பூ கையால் அட்டி போற்றி என்னாத இ ஆக்கையால் பயன் என் மேல் #90 கால்களால் பயன் என் உயிர் கொண்டு போம்பொழுது கோல கோபுர கோகரணம் சூழா கால்களால் பயன் என் மேல் #91 உற்றார் ஆர் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ மேல் #92 இறுமாந்து இருப்பன்-கொலோ ஈசன் பல் கணத்து எண்ணப்பட்டு சிறு மான் ஏந்தி தன் சேவடி கீழ் சென்று அங்கு இறுமாந்து இருப்பன்-கொலோ மேல் #93 தேடி கண்டுகொண்டேன் திருமாலொடு நான்முகனும் தேடி தேட ஒணா தேவனை என் உளே தேடி கண்டுகொண்டேன் மேல் 10. திரு அதிகை வீரட்டானம் திருக்கெடிலவாணர் : பண் - காந்தார பஞ்சமம் #94 முளை கதிர் இளம் பிறை மூழ்க வெள்ள நீர் வளைத்து எழு சடையினர் மழலை வீணையர் திளைத்தது ஓர் மான் மறி கையர் செய்ய பொன் கிளைத்துழி தோன்றிடும் கெடிலவாணரே மேல் #95 ஏறினர் ஏறினை ஏழை தன் ஒரு கூறினர் கூறினர் வேதம் அங்கமும் ஆறினர் ஆறு இடு சடையர் பக்கமும் கீறின் உடையினர் கெடிலவாணரே மேல் #96 விடம் திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளை நீறு உடம்பு அழகு எழுதுவர் முழுதும் வெண் நிலா படர்ந்து அழகு எழுதரு சடையில் பாய் புனல் கிடந்து அழகு எழுதிய கெடிலவாணரே மேல் #97 விழும் மணி அயில் எயிற்று அம்பு வெய்யது ஓர் கொழு மணி நெடு வரை கொளுவி கோட்டினார் செழு மணி_மிடற்றினர் செய்யர் வெய்யது ஓர் கெழு மணி அரவினர் கெடிலவாணரே மேல் #98 குழுவினர் தொழுது எழும் அடியர் மேல் வினை தழுவின கழுவுவர் பவளமேனியர் மழுவினர் மான் மறி கையர் மங்கையை கெழுவின யோகினர் கெடிலவாணரே மேல் #99 அங்கையில் அனல் எரி ஏந்தி ஆறு எனும் மங்கையை சடையிடை மணப்பர் மால் வரை நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை கெங்கை அது எனப்படும் கெடிலவாணரே மேல் #100 கழிந்தவர் தலை கலன் ஏந்தி காடு உறைந்து இழிந்தவர் ஒருவர் என்று எள்க வாழ்பவர் வழிந்து இழி மதுகரம் மிழற்ற மந்திகள் கிழிந்த தேன் நுகர்தரும் கெடிலவாணரே மேல் #101 கிடந்த பாம்பு அருகு கண்டு அரிவை பேதுற கிடந்த பாம்பு அவளை ஓர் மயில் என்று ஐயுற கிடந்த நீர் சடை மிசை பிறையும் ஏங்கவே கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே மேல் #102 வெறியுறு விரி சடை புரள வீசி ஓர் பொறியுறு புலி உரி அரையது ஆகவும் நெறியுறு குழல் உமை பாகம் ஆகவும் கிறிபட உழிதர்வர் கெடிலவாணரே மேல் #103 பூண்ட தேர் அரக்கனை பொரு இல் மால் வரை தூண்டு தோள் அவை பட அடர்த்த தாளினார் ஈண்டு நீர் கமல வாய் மேதி பாய்தர கீண்டு தேன் சொரிதரும் கெடிலவாணரே மேல் 11. பொது : நமச்சிவாயப்பதிகம் : பண் - காந்தார பஞ்சமம் #104 சொல் துணை வேதியன் சோதி வானவன் பொன் துணை திருந்து அடி பொருந்த கைதொழ கல் துணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நல் துணை ஆவது நமச்சிவாயவே மேல் #105 பூவினுக்கு அரும் கலம் பொங்கு தாமரை ஆவினுக்கு அரும் கலம் அரன் அஞ்சு ஆடுதல் கோவினுக்கு அரும் கலம் கோட்டம் இல்லது நாவினுக்கு அரும் கலம் நமச்சிவாயவே மேல் #106 விண் உற அடுக்கிய விறகின் வெவ் அழல் உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லை ஆம் பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே மேல் #107 இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும் விடுக்கிற்பிரால் என்று வினவுவோமல்லோம் அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே மேல் #108 வெந்த நீறு அரும் கலம் விரதிகட்கு எலாம் அந்தணர்க்கு அரும் கலம் அரு மறை ஆறு அங்கம் திங்களுக்கு அரும் கலம் திகழும் நீள் முடி நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே மேல் #109 சலம் இலன் சங்கரன் சாந்தவர்க்கு அலால் நலம் இலன் நாள்-தொறும் நல்குவான் நலன் குலம் இலர் ஆகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர் நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே மேல் #110 வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அ நெறி கூடி சென்றலும் ஓடினேன் ஓடி சென்று உருவம் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே மேல் #111 இல் அக விளக்கு அது இருள் கெடுப்பது சொல் அக விளக்கு அது சோதி உள்ளது பல் அக விளக்கு அது பலரும் காண்பது நல் அக விளக்கு அது நமச்சிவாயவே மேல் #112 முன்நெறி ஆகிய முதல்வன் முக்கணன் தன் நெறியே சரண் ஆதல் திண்ணமே அ நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம் நன் நெறி ஆவது நமச்சிவாயவே மேல் #113 மா பிணை தழுவிய மாது ஓர்பாகத்தன் பூ பிணை திருந்து அடி பொருந்த கைதொழ நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து ஏத்த வல்லார்-தமக்கு இடுக்கண் இல்லையே மேல் 12. திருப்பழனம் : பண் - பழந்தக்கராகம் #114 சொல் மாலை பயில்கின்ற குயில் இனங்காள் சொல்லீரே பல் மாலை வரி வண்டு பண் மிழற்றும் பழனத்தான் முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி பொன் மாலை மார்பன் என் புது நலம் உண்டு இகழ்வானோ மேல் #115 கண்டகங்காள் முண்டகங்காள் கைதைகாள் நெய்தல்காள் பண்டரங்க வேடத்தான் பாட்டு ஓவா பழனத்தான் வண்டு உலாஅம் தடம் மூழ்கி மற்று அவன் என் தளிர் வண்ணம் கொண்டம் நாள் தான் அறிவான் குறிக்கொள்ளாது ஒழிவானோ மேல் #116 மனை காஞ்சி இளம் குருகே மறந்தாயோ மத முகத்த பனைக்கைமா உரி போர்த்தான் பலர் பாடும் பழனத்தான் நினைக்கின்ற நினைப்பு எல்லாம் உரையாயோ நிகழ் வண்டே சுனைக்கு வளை மலர்க்கண்ணாள் சொல் தூதாய் சோர்வாளோ மேல் #117 புதியையாய் இனியை ஆம் பூம் தென்றால் புறங்காடு பதி ஆவது இது என்று பலர் பாடும் பழனத்தான் மதியாதார் வேள்வி-தனை மதித்திட்ட மதி கங்கை விதியாளன் என் உயிர் மேல் விளையாடல் விடுத்தானோ மேல் #118 மண் பொருந்தி வாழ்பவர்க்கும் மா தீர்த்த வேதியர்க்கும் விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை பண் பொருந்த இசை பாடும் பழனம் சேர் அப்பனை என் கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ மேல் #119 பொங்கு ஓத மால் கடலில் புறம்புறம் போய் இரை தேரும் செம் கால் வெண் மட நாராய் செயல்படுவது அறியேன் நான் அம் கோல வளை கவர்ந்தான் அணி பொழில் சூழ் பழனத்தான் தம் கோல நறும் கொன்றை தார் அருளாது ஒழிவானோ மேல் #120 துணை ஆர முயங்கி போய் துறை சேரும் மட நாராய் பணை அருவாரத்தான் பாட்டு ஓவா பழனத்தான் கணை ஆர இரு விசும்பில் கடி அரணம் பொடிசெய்த இணை ஆர மார்பன் என் எழில் நலம் உண்டு இகழ்வானோ மேல் #121 கூவை-வாய் மணி வரன்றி கொழித்து ஓடும் காவிரி பூம் பாவை-வாய் முத்து இலங்க பாய்ந்து ஆடும் பழனத்தான் கோவை வாய் மலைமகள் கோன் கொல் ஏற்றின் கொடி ஆடை பூவைகாள் மழலைகாள் போகாத பொழுது உளதே மேல் #122 புள்ளிமான் பொறி அரவம் புள் உயர்த்தான் மணி நாக பள்ளியான் தொழுது ஏத்த இருக்கின்ற பழனத்தான் உள்ளுவார் வினை தீர்க்கும் என்று உரைப்பர் உலகு எல்லாம் கள்ளியேன் நான் இவற்கு என் கன வளையும் கடவேனோ மேல் #123 வஞ்சித்து என் வளை கவர்ந்தான் வாரானே ஆயிடினும் பஞ்சி கால் சிறகு அன்னம் பரந்து ஆர்க்கும் பழனத்தான் அஞ்சி போய் கலி மெலிய அழல் ஓம்பும் அப்பூதி குஞ்சி பூவாய் நின்ற சேவடியாய் கோடி இயையே மேல் 13. திருவையாறு : பண் - பழந்தக்கராகம் #124 விடகிலேன் அடி நாயேன் வேண்டிய-கால் யாதொன்றும் இடகிலேன் அமணர்கள்-தம் அறவுரை கேட்டு அலமந்தேன் தொடர்கின்றேன் உன்னுடைய தூ மலர் சேவடி காண்பான் அடைகின்றேன் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #125 செம்பவள திரு உருவர் திகழ் சோதி குழை காதர் கொம்பு அமரும் கொடி மருங்குல் கோல் வளையாள் ஒருபாகர் வம்பு அவிழும் மலர் கொன்றை வளர் சடை மேல் வைத்து உகந்த அம் பவள ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #126 நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் துணியானே தோலானே சுண்ண வெண் நீற்றானே மணியானே வானவர்க்கு மருந்து ஆகி பிணி தீர்க்கும் அணியானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #127 ஊழித்தீயாய் நின்றாய் உள்குவார் உள்ளத்தாய் வாழி தீயாய் நின்றாய் வாழ்த்துவார் வாயானே பாழி தீயாய் நின்றாய் படர் சடை மேல் பனி மதியம் ஆழி தீ ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #128 சடையானே சடையிடையே தவழும் தண் மதியானே விடையானே விடை ஏறி புரம் எரித்த வித்தகனே உடையானே உடைதலை கொண்டு ஊர்ஊர் உண் பலிக்கு உழலும் அடையானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #129 நீரானே தீயானே நெதியானே கதியானே ஊரானே உலகானே உடலானே உயிரானே பேரானே பிறை சூடி பிணி தீர்க்கும் பெருமான் என்று ஆராத ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #130 கண் ஆனாய் மணி ஆனாய் கருத்து ஆனாய் அருத்து ஆனாய் எண் ஆனாய் எழுத்து ஆனாய் எழுத்தினுக்கு ஓர் இயல்பு ஆனாய் விண் ஆனாய் விண்ணிடையே புரம் எரித்த வேதியனே அண் ஆன ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #131 மின் ஆனாய் உரும் ஆனாய் வேதத்தின் பொருள் ஆனாய் பொன் ஆனாய் மணி ஆனாய் பொரு கடல்-வாய் முத்து ஆனாய் நின் ஆனார் இருவர்க்கும் காண்பு அரிய நிமிர் சோதி அன்னானே ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #132 முத்து இசையும் புனல் பொன்னி மொய் பவளம் கொழித்து உந்த பத்தர் பலர் நீர் மூழ்கி பலகாலும் பணிந்து ஏத்த எத்திசையும் வானவர்கள் எம்பெருமான் என இறைஞ்சும் அ திசை ஆம் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் #133 கரு வரை சூழ் கடல் இலங்கை_கோமானை கருத்து அழிய திரு விரலால் உதகரணம்செய்து உகந்த சிவமூர்த்தி பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் அரு வரை சூழ் ஐயாறர்க்கு ஆளாய் நான் உய்ந்தேனே மேல் 14. பொது : தசபுராணம் : பண் - பழம்பஞ்சுரம் #134 பரு வரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர இரிந்து பயமாய் திரு நெடு மால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய் பெருகிட மற்று இதற்கு ஒர் பிதிகாரம் ஒன்றை அருளாய் பிரானே எனலும் அருள் கொடு மா விடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர்_அண்டர் அரசே மேல் #135 நிரவு ஒலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அது அ பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணிய பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன் பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #136 காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உரு ஆகி மூவர் உருவில் சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உரு ஆகி நின்ற தழலோன் ஞாலமும் மேலை விண்ணொடு உலகு ஏழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல் பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #137 நீடு உயர் விண்ணும் மண்ணும் நெடு வேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலிய சூடிய கையர் ஆகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும் ஓடிய தாருகன்-தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #138 நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம்செய்து ஓடு புரம் மூன்று அலை நலிவு அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால் கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரம் ஆம் மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #139 நீல நல் மேனி செம் கண் வளை வெள் எயிற்றின் எரிகேசன் நேடி வரும் நாள் காலை நல் மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின்-கண் வந்து குறுகி பாலனை ஓடஓட பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அ காலனை வீடுசெய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே மேல் #140 உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி-தன்னில் அவி உண்ண வந்த இமையோர் பயம் உறும் எச்சன் அங்கு மதியோனும் உற்றபடி கண்டு நின்று பயமாய் அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகல சயம் உறு தன்மை கண்ட தழல்_வண்ணன் எந்தை கழல் கண்டுகொள்கை கடனே மேல் #141 நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா உலகினை ஏழும் முற்றும் இருள் மூடமூட இருள் ஓட நெற்றி ஒரு கண் அலர்தர அஞ்சி மற்றை நயனம் கைவிட்டு மடவாள் இறைஞ்ச மதி போல் அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #142 கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சுகணையோன் அணைந்து புகலும் மழைவடி_வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலர் ஆன தொட்ட மதனன் எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகல தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல்_வண்ணன் எந்தை சரணே மேல் #143 தட மலர் ஆயிரங்கள் குறைவு ஒன்று அது ஆக நிறைவு என்று தன் கண் அதனால் உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும் சுடர் அடியான் முயன்று சுழல்வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே மேல் #144 கடுகிய தேர் செலாது கயிலாயம் மீது கருதேல் உன் வீரம் ஒழி நீ முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா விடுவிடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள் நெடுநெடு இற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவுற்றது என்தன் மனனே மேல் 15. பொது : பாவநாசத்திருப்பதிகம் : பண் - பழம்பஞ்சுரம் #145 பற்று அற்றார் சேர் பழம் பதியை பாசூர் நிலாய பவளத்தை சிற்றம்பலத்து எம் திகழ் கனியை தீண்டற்கு அரிய திரு உருவை வெற்றியூரில் விரி சுடரை விமலர்_கோனை திரை சூழ்ந்த ஒற்றியூர் எம் உத்தமனை உள்ளத்துள்ளே வைத்தேனே மேல் #146 ஆனைக்காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானை கானப்பேரூர் கட்டியை கானூர் முளைத்த கரும்பினை வான பேரார் வந்து ஏத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை மான கயிலை மழ களிற்றை மதியை சுடரை மறவேனே மேல் #147 மதி அம் கண்ணி ஞாயிற்றை மயக்கம் தீர்க்கும் மருந்தினை அதிகை மூதூர் அரசினை ஐயாறு அமர்ந்த ஐயனை விதியை புகழை வானோர்கள் வேண்டி தேடும் விளக்கினை நெதியை ஞான கொழுந்தினை நினைந்தேற்கு உள்ளம் நிறைந்ததே மேல் #148 புறம்பயத்து எம் முத்தினை புகலூர் இலங்கு பொன்னினை உறந்தை ஓங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கும் ஞாயிற்றை கறங்கும் அருவி கழுக்குன்றில் காண்பார் காணும் கண்ணானை அறம் சூழ் அதிகைவீரட்டத்து அரிமான் ஏற்றை அடைந்தேனே மேல் #149 கோலக்காவில் குருமணியை குடமூக்கு உறையும் விடம்உணியை ஆலங்காட்டில் அம் தேனை அமரர் சென்னி ஆய் மலரை பாலில் திகழும் பைம் கனியை பராய்த்துறை எம் பசும்பொன்னை சூலத்தானை துணையிலியை தோளை குளிர தொழுதேனே மேல் #150 மருகல் உறை மாணிக்கத்தை வலஞ்சுழியின் மாலையை கருகாவூரில் கற்பகத்தை காண்டற்கு அரிய கதிர் ஒளியை பெருவேளூர் எம் பிறப்பிலியை பேணுவார்கள் பிரிவு அரிய திரு வாஞ்சியத்து எம் செல்வனை சிந்தையுள்ளே வைத்தேனே மேல் #151 எழில் ஆர் இராசசிங்கத்தை இராமேச்சுரத்து எம் எழில் ஏற்றை குழல் ஆர் கோதை வரை மார்பில் குற்றாலத்து எம் கூத்தனை நிழல் ஆர் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை அழல் ஆர் வண்ணத்து அம்மானை அன்பில் அணைத்து வைத்தேனே மேல் #152 மாலை தோன்றும் வளர் மதியை மறைக்காட்டு உறையும் மணாளனை ஆலை கரும்பின் இன் சாற்றை அண்ணாமலை எம் அண்ணலை சோலை தருத்திநகர் மேய சுடரில் திகழும் துளக்கிலியை மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கியிட்டேனே மேல் #153 சோற்றுத்துறை எம் சோதியை துருத்தி மேய தூ மணியை ஆற்றில் பழனத்து அம்மானை ஆலவாய் எம் அரு மணியை நீரில் பொலிந்த நிமிர் திண் தோள் நெய்த்தானத்து எம் நிலா சுடரை தோற்ற கடலை அடல் ஏற்றை தோளை குளிர தொழுதேனே மேல் #154 புத்தூர் உறையும் புனிதனை பூவணத்து எம் போர் ஏற்றை வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக்குடி எம் வேதியனை பொய்த்தார் புரம் மூன்று எரித்தானை பொதியில் மேய புராணனை வைத்தேன் என்தன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே மேல் #155 முந்தி தானே முளைத்தானை மூரி வெள் ஏறு ஊர்ந்தானை அந்தி செவ்வான் படியானை அரக்கன் ஆற்றல் அழித்தானை சிந்தை வெள்ள புனல் ஆட்டி செம் சொல் மாலை அடி சேர்த்தி எந்தை பெம்மான் என் எம்மான் என்பார் பாவம் நாசமே மேல் 16. திருப்புகலூர் : பண் - இந்தளம் #156 செய்யர் வெண்நூலர் கரு மான் மறி துள்ளும் கையர் கனை கழல் கட்டிய காலினர் மெய்யர் மெய்ந்நின்றவர்க்கு அல்லாதவர்க்கு என்றும் பொய்யர் புகலூர் புரி சடையாரே மேல் #157 மேக நல் ஊர்தியர் மின் போல் மிளிர் சடை பாக மதிநுதலாளை ஒர்பாகத்தர் நாக வளையினர் நாக உடையினர் போகர் புகலூர் புரி சடையாரே மேல் #158 பெரும் தாழ் சடை முடி மேல் பிறை சூடி கரும் தாழ்குழலியும் தாமும் கலந்து திருந்தா மனம் உடையார் திறத்து என்றும் பொருந்தார் புகலூர் புரி சடையாரே மேல் #159 அக்கு ஆர் அணி வடம் ஆகத்தர் நாகத்தர் நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் உக்கார் தலை பிடித்து உண் பலிக்கு ஊர்-தொறும் புக்கார் புகலூர் புரி சடையாரே மேல் #160 ஆர்த்து ஆருயிர் அடும் அந்தகன்-தன் உடல் பேர்த்தார் பிறை நுதல் பெண்ணின் நல்லாள் உட்க கூர்த்து ஆர் மருப்பின் கொலை களிற்ற ஈர் உரி போர்த்தார் புகலூர் புரி சடையாரே மேல் #161 உதைத்தார் மறலி உருள ஓர் காலால் சிதைத்தார் திகழ் தக்கன் செய்த நல் வேள்வி பதைத்தார் சிரம் கரம் கொண்டு வெய்யோன் கண் புதைத்தார் புகலூர் புரி சடையாரே மேல் #162 தூ மன் சுறவம் துதைந்த கொடி உடை காமன் கணை வலம் காய்ந்த முக்கண்ணினர் சேம நெறியினர் சீரை உடையவர் பூ மன் புகலூர் புரி சடையாரே மேல் #163 கரிந்தார் தலையர் கடி மதில் மூன்றும் தெரிந்தார் கணைகள் செழும் தழல் உண்ண விரிந்து ஆர் சடைமேல் விரி புனல் கங்கை புரிந்தார் புகலூர் புரி சடையாரே மேல் #164 ஈண்டு ஆர் அழலின் இருவரும் கைதொழ நீண்டார் நெடும் தடுமாற்ற நிலை அஞ்ச மாண்டார்-தம் என்பும் மலர் கொன்றை மாலையும் பூண்டார் புகலூர் புரி சடையாரே மேல் #165 கறுத்தார் மணி கண்டம் கால்விரல் ஊன்றி இறுத்தார் இலங்கையர்_கோன் முடி பத்தும் அறுத்தார் புலன் ஐந்தும் ஆய்_இழை பாகம் பொறுத்தார் புகலூர் புரி சடையாரே மேல் 17. திருவாரூர் அரநெறி : பண் - இந்தளம் #166 எ தீ புகினும் எமக்கு ஒரு தீது இலை தெத்தே என முரன்று எம் உள் உழிதர்வர் முத்தீ அனையது ஒர் மூ இலை வேல் பிடித்து அ தீநிறத்தார் அரநெறியாரே மேல் #167 வீரமும் பூண்பர் விசயனொடு ஆயது ஒர் தாரமும் பூண்பர் தமக்கு அன்புபட்டவர் பாரமும் பூண்பர் நன் பைம் கண் மிளிர் அரவு ஆரமும் பூண்பர் அரநெறியாரே மேல் #168 தஞ்ச வண்ணத்தர் சடையினர் தாமும் ஒர் வஞ்ச வண்ணத்தர் வண்டு ஆர் குழலாளொடும் துஞ்ச வண்ணத்தர் துஞ்சாத கண்ணார் தொழும் அஞ்ச வண்ணத்தர் அரநெறியாரே மேல் #169 விழித்தனர் காமனை வீழ்தர விண் நின்று இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல் சூழ் கடி அரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறியாரே மேல் #170 துற்றவர் வெண் தலையில் சுருள் கோவணம் தற்றவர் தம் வினை ஆன எலாம் அற அற்றவர் ஆரூர் அரநெறி கைதொழ உற்றவர்தாம் ஒளி பெற்றனர்தாமே மேல் #171 கூடு அரவத்தர் குரல் கிண்கிணி அடி நீடு அரவத்தர் முன் மாலையிடை இருள் பாடு அரவத்தர் பணம் அஞ்சு பை விரித்து ஆடு அரவத்தர் அரநெறியாரே மேல் #172 கூட வல்லார் குறிப்பில் உமையாளொடும் பாட வல்லார் பயின்று அந்தியும் சந்தியும் ஆட வல்லார் திரு ஆரூர் அரநெறி நாட வல்லார் வினை வீட வல்லாரே மேல் #173 பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை மாலையும் கண்ணியும் ஆவன சேவடி காலையும் மாலையும் கைதொழுவார் மனம் ஆலயம் ஆரூர் அரநெறியார்க்கே மேல் #174 முடி வண்ணம் வான மின் வண்ணம் தம் மார்பின் பொடி வண்ணம் தம் புகழ் ஊர்தியின் வண்ணம் படி வண்ணம் பாற்கடல் வண்ணம் செம் ஞாயிறு அடி வண்ணம் ஆரூர் அரநெறியார்க்கே மேல் #175 பொன் நவில் புன் சடையான் அடியின் நிழல் இன்னருள் சூடி எள்காதும் இராப்பகல் மன்னவர் கின்னரர் வானவர்தாம் தொழும் அன்னவர் ஆரூர் அரநெறியாரே மேல் #176 பொருள் மன்னனை பற்றி புட்பகம் கொண்ட மருள் மன்னனை எற்றி வாளுடன் ஈந்து கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட அருள் மன்னர் ஆரூர் அரநெறியாரே மேல் 18. பொது : விடந்தீர்த்த திருப்பதிகம் : பண் - இந்தளம் #177 ஒன்று-கொல் ஆம் அவர் சிந்தை உயர் வரை ஒன்று-கொல் ஆம் உயரும் மதி சூடுவர் ஒன்று-கொல் ஆம் இடு வெண் தலை கையது ஒன்று-கொல் ஆம் அவர் ஊர்வதுதானே மேல் #178 இரண்டு-கொல் ஆம் இமையோர் தொழு பாதம் இரண்டு-கொல் ஆம் இலங்கும் குழை பெண் ஆண் இரண்டு-கொல் ஆம் உருவம் சிறு மான் மழு இரண்டு-கொல் ஆம் அவர் ஏந்தினதாமே மேல் #179 மூன்று-கொல் ஆம் அவர் கண் நுதல் ஆவன மூன்று-கொல் ஆம் அவர் சூலத்தின் மொய் இலை மூன்று-கொல் ஆம் கணை கையது வில் நாண் மூன்று-கொல் ஆம் புரம் எய்தனதாமே மேல் #180 நாலு-கொல் ஆம் அவர்-தம் முகம் ஆவன நாலு-கொல் ஆம் சனனம் முதல் தோற்றமும் நாலு-கொல் ஆம் அவர் ஊர்தியின் பாதங்கள் நாலு-கொல் ஆம் மறை பாடினதாமே மேல் #181 அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடு அரவின் படம் அஞ்சு-கொல் ஆம் அவர் வெல் புலன் ஆவன அஞ்சு-கொல் ஆம் அவர் காயப்பட்டான் கணை அஞ்சு-கொல் ஆம் அவர் ஆடினதாமே மேல் #182 ஆறு-கொல் ஆம் அவர் அங்கம் படைத்தன ஆறு-கொல் ஆம் அவர்-தம் மகனார் முகம் ஆறு-கொல் ஆம் அவர் தார் மிசை வண்டின் கால் ஆறு-கொல் ஆம் சுவை ஆக்கினதாமே மேல் #183 ஏழு-கொல் ஆம் அவர் ஊழி படைத்தன ஏழு-கொல் ஆம் அவர் கண்ட இரும் கடல் ஏழு-கொல் ஆம் அவர் ஆளும் உலகங்கள் ஏழு-கொல் ஆம் இசை ஆக்கினதாமே மேல் #184 எட்டு-கொல் ஆம் அவர் ஈறு இல் பெரும் குணம் எட்டு-கொல் ஆம் அவர் சூடும் இன மலர் எட்டு-கொல் ஆம் அவர் தோள் இணை ஆவன எட்டு-கொல் ஆம் திசை ஆக்கினதாமே மேல் #185 ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன ஒன்பது போல் அவர் மார்பினில் நூல் இழை ஒன்பது போல் அவர் கோல குழல் சடை ஒன்பது போல் அவர் பாரிடம்தானே மேல் #186 பத்து-கொல் ஆம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல் பத்து-கொல் ஆம் எயிறும் நெரிந்து உக்கன பத்து-கொல் ஆம் அவர் காயப்பட்டான் தலை பத்து-கொல் ஆம் அடியார் செய்கைதானே மேல் 19. திருவாரூர் : பண் - சீகாமரம் #187 சூல படையானை சூழ் ஆக வீழ் அருவி கோல தோள் குங்குமம் சேர் குன்று எட்டு உடையானை பால் ஒத்த மென்மொழியாள் பங்கனை பாங்கு ஆய ஆலத்தின்கீழானை நான் கண்டது ஆரூரே மேல் #188 பக்கமே பாரிடங்கள் சூழ படுதலையில் புக்க ஊர் பிச்சை ஏற்று உண்டு பொலிவு உடைத்தாய் கொக்கு இறகின் தூவல் கொடி எடுத்த கோவணத்தோடு அக்கு அணிந்த அம்மானை நான் கண்டது ஆரூரே மேல் #189 சேய உலகமும் செல் சார்வும் ஆனானை மாய போர் வல்லானை மாலை தாழ் மார்பானை வேய் ஒத்த தோளியர்-தம் மென் முலை மேல் தண் சாந்தின் ஆயத்திடையானை நான் கண்டது ஆரூரே மேல் #190 ஏறு ஏற்றமா ஏறி எண் கணமும் பின் படர மாறு ஏற்றார் வல் அரணம் சீறி மயானத்தின் நீறு ஏற்ற மேனியனாய் நீள் சடை மேல் நீர் ததும்ப ஆறு ஏற்ற அந்தணனை நான் கண்டது ஆரூரே மேல் #191 தாம் கோல வெள் எலும்பு பூண்டு தம் ஏறு ஏறி பாங்கு ஆன ஊர்க்கு எல்லாம் செல்லும் பரமனார் தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில் பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே மேல் #192 எம் பட்டம் பட்டம் உடையானை ஏர் மதியின் நும் பட்டம் சேர்ந்த நுதலானை அந்தி-வாய் செம் பட்டு உடுத்து சிறு மான் உரி ஆடை அம் பட்டு அசைத்தானை நான் கண்டது ஆரூரே மேல் #193 போழ் ஒத்த வெண் மதியம் சூடி பொலிந்து இலங்கு வேழத்து உரி போர்த்தான் வெள்வளையாள்தான் வெருவ ஊழித்தீ அன்னானை ஓங்கு ஒலி மா பூண்டது ஓர் ஆழி தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே மேல் #194 வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை தன் தொண்டர் நெஞ்சின் இருள் கூரும் பொழுது நிலா பாரித்து அம் சுடராய் நின்றானை நான் கண்டது ஆரூரே மேல் #195 கார முது கொன்றை கடி நாறு தண்ணென்ன நீர முது கோதையோடு ஆடிய நீள் மார்பன் பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே மேல் #196 தாள் தழுவு கையன் தாமரை பூம் சேவடியன் கோள் தால வேடத்தன் கொண்டது ஓர் வீணையினான் ஆடு அரவ கிண்கிணி கால் அன்னான் ஓர் சேடனை ஆடும் தீ கூத்தனை நான் கண்டது ஆரூரே மேல் #197 மஞ்சு ஆடு குன்று அடர ஊன்றி மணி விரலால் துஞ்சா போர் வாள் அரக்கன் தோள் நெரிய கண் குருதி செஞ்சாந்து அணிவித்து தன் மார்பில் பால் வெண் நீற்று அம் சாந்து அணிந்தானை நான் கண்டது ஆரூரே மேல் 20. திருவாரூர் : பண் - சீகாமரம் #198 காண்டலே கருத்தாய் நினைந்திருந்தேன் மனம் புகுந்தாய் கழல் அடி பூண்டுகொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வான் இளம் மதி தீண்டி வந்து உலவும் திரு ஆரூர் அம்மானே மேல் #199 கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி ஒடுங்கி வந்து அடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம் முடங்கு இறா முது நீர் மலங்கு இள வாளை செங்கயல் சேல் வரால் களிறு அடைந்த தண் கழனி அணி ஆரூர் அம்மானே மேல் #200 அரு மணி தடம் பூண் முலை அரம்பையரொடு அருளி பாடியர் உரிமையில் தொழுவார் உருத்திர பல் கணத்தார் விரி சடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள் தெருவினில் பொலியும் திரு ஆரூர் அம்மானே மேல் #201 பூம் கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொன் கழல் ஈங்கு இருக்கப்பெற்றேன் என்ன குறை உடையேன் ஓங்கு தெங்கு இலை ஆர் கமுகு இள வாழை மாவொடு மாதுளம் பல தீம் கனி சிதறும் திரு ஆரூர் அம்மானே மேல் #202 நீறு சேர் செழு மார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்து ஒழிந்தேன் ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி தேறல் பாய்ந்து ஒழுகும் திரு ஆரூர் அம்மானே மேல் #203 அளித்து வந்து அடி கைதொழுமவர் மேல் வினை கெடும் என்று இ வையகம் களித்து வந்து உடனே கலந்து ஆட காதலாய் குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்து ஆடு கோதையர் குஞ்சியுள் புக தெளிக்கும் தீர்த்தம் அறா திரு ஆரூர் அம்மானே மேல் #204 திரியும் மூஎயில் தீ எழ சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள் பிரியும் ஆறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன் பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவை அகத்து அரியும் தண் கழனி அணி ஆரூர் அம்மானே மேல் #205 பிறத்தலும் பிறந்தால் பிணி பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று இறக்கும் ஆறு உளதே இழித்தேன் பிறப்பினை நான் அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வ செற்ற குரோதம் நீக்கி உன் திறத்தனாய் ஒழிந்தேன் திரு ஆரூர் அம்மானே மேல் #206 முளைத்த வெண் பிறை மொய் சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம்கொள்ள வளைத்துக்கொண்டிருந்தேன் வலிசெய்து போகல் ஒட்டேன் அளை பிரிந்த அலவன் போய் புகுதந்த காலமும் கண்டு தன் பெடை திளைக்கும் தண் கழனி திரு ஆரூர் அம்மானே மேல் #207 நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன் நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு தேடி கண்டுகொண்டேன் திரு ஆரூர் அம்மானே மேல் 21. திருவாரூர் : திருவாதிரைத் திருப்பதிகம். பண் - குறிஞ்சி #208 முத்து விதானம் மணி பொன் கவரி முறையாலே பத்தர்களோடு பாவையர் சூழ பலி பின்னே வித்தக கோல வெண் தலை மாலை விரதிகள் அத்தன் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #209 நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் பிணிதான் தீரும் என்று பிறங்கி கிடப்பாரும் மணியே பொன்னே மைந்தா என்பார்கட்கு அணியான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #210 வீதிகள்-தோறும் வெண் கொடியோடு விதானங்கள் சோதிகள் விட்டு சுடர் மா மணிகள் ஒளி தோன்ற சாதிகள் ஆய பவளமும் முத்து தாமங்கள் ஆதி ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #211 குணங்கள் பேசி கூடி பாடி தொண்டர்கள் பிணங்கி தம்மில் பித்தரை போல பிதற்றுவார் வணங்கி நின்று வானவர் வந்து வைகலும் அணங்கன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #212 நில வெண் சங்கம் பறையும் ஆர்ப்ப நிற்கில்லா பலரும் இட்ட கல்லவடங்கன் பரந்து எங்கும் கலவ மஞ்ஞை கார் என்று எண்ணி களித்து வந்து அலமரு ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #213 விம்மா வெருவா விழியா தெழியா வெருட்டுவார் தம் மாண்பு இலராய் தரியார் தலையான் முட்டுவார் எம்மான் ஈசன் எந்தை என் அப்பன் என்பார்கட்கு அம்மான் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #214 செம் துவர் வாயார் செல்வன சேவடி சிந்திப்பார் மைந்தர்களோடு மங்கையர் கூடி மயங்குவார் இந்திரன் ஆதி வானவர் சித்தர் எடுத்து ஏத்தும் அந்திரன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #215 முடிகள் வணங்கி மூவாதார்கள் முன் செல்ல வடி கொள் வேய் தோள் வான்_அரமங்கையர் பின் செல்ல பொடிகள் பூசி பாடும் தொண்டர் புடை சூழ அடிகள் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #216 துன்பம் நும்மை தொழாத நாள்கள் என்பாரும் இன்பம் நும்மை ஏத்தும் நாள்கள் என்பாரும் நுன்பின் எம்மை நுழைய பணியே என்பாரும் அன்பன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் #217 பார் ஊர் பௌவத்தானை பத்தர் பணிந்து ஏத்த சீர் ஊர் பாடல் ஆடல் அறாத செம்மாப்பு ஆர்ந்து ஓர் ஊர் ஒழியாது உலகம் எங்கும் எடுத்து ஏத்தும் ஆரூரன்-தன் ஆதிரை நாளால் அது வண்ணம் மேல் 22. கோயில் - திருநேரிசை : பண் - கொல்லி #218 செம் சடை கற்றை முற்றத்து இள நிலா எறிக்கும் சென்னி நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே துஞ்சு அடை இருள் கிழிய துளங்கு எரி ஆடும் ஆறே மேல் #219 ஏறனார் ஏறு தம்பால் இள நிலா எறிக்கும் சென்னி ஆறனால் ஆறு சூடி ஆய்_இழையாள் ஓர்பாகம் நாறு பூம் சோலை தில்லை நவின்ற சிற்றம்பலத்தே நீறு மெய் பூசி நின்று நீண்டு எரி ஆடும் ஆறே மேல் #220 சடையனார் சாந்தநீற்றர் தனி நிலா எறிக்கும் சென்னி உடையனார் உடை தலையில் உண்பதும் பிச்சை ஏற்று கடி கொள் பூம் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே அடி கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே மேல் #221 பை அரவு அசைத்த அல்குல் பனி நிலா எறிக்கும் சென்னி மை அரிக்கண்ணினாளும் மாலும் ஓர்பாகம் ஆகி செய் எரி தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே கை எரி வீசி நின்று கனல் எரி ஆடும் ஆறே மேல் #222 ஓதினார் வேதம் வாயால் ஒளி நிலா எறிக்கும் சென்னி பூதனார் பூதம் சூழ புலி உரி அதளனார் தாம் நாதனார் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே காதில் வெண் குழைகள் தாழ கனல் எரி ஆடும் ஆறே மேல் #223 ஓர் உடம்பு இருவர் ஆகி ஒளி நிலா எறிக்கும் சென்னி பாரிடம் பாணிசெய்ய பயின்ற எம் பரமமூர்த்தி கார் இடம் தில்லை தன்னுள் கருது சிற்றம்பலத்தே பேர் இடம் பெருக நின்று பிறங்கு எரி ஆடும் ஆறே மேல் #224 முதல் தனி சடையை மூழ்க முகிழ் நிலா எறிக்கும் சென்னி மத களிற்று உரிவை போர்த்த மைந்தரை காணல் ஆகும் மதத்து வண்டு அறையும் சோலை மல்கு சிற்றம்பலத்தே கதத்தது ஓர் அரவம் ஆட கனல் எரி ஆடும் ஆறே மேல் #225 மறையனார் மழு ஒன்று ஏந்தி மணி நிலா எறிக்கும் சென்னி இறைவனார் எம்பிரானார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் சிறை கொள் நீர் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே அறை கழல் ஆர்க்க நின்று அனல் எரி ஆடும் ஆறே மேல் #226 விருத்தனாய் பாலன் ஆகி விரி நிலா எறிக்கும் சென்னி நிருத்தனார் நிருத்தம் செய்ய நீண்ட புன் சடைகள் தாழ கருத்தனார் தில்லை-தன்னுள் கருது சிற்றம்பலத்தே அருத்தமாமேனி-தன்னோடு அனல் எரி ஆடும் ஆறே மேல் #227 பாலனாய் விருத்தன் ஆகி பனி நிலா எறிக்கும் சென்னி காலனை காலால் காய்ந்த கடவுளார் விடை ஒன்று ஏறி ஞாலம் ஆம் தில்லை-தன்னுள் நவின்ற சிற்றம்பலத்தே நீலம் சேர் கண்டனார்தாம் நீண்டு எரி ஆடும் ஆறே மேல் #228 மதி இலா அரக்கன் ஓடி மா மலை எடுக்க நோக்கி நெதியன் தோள் நெரிய ஊன்றி நீடு இரும் பொழில்கள் சூழ்ந்த மதியம் தோய் தில்லை-தன்னுள் மல்கு சிற்றம்பலத்தே அதிசயம் போல நின்று அனல் எரி ஆடும் ஆறே மேல் 23. கோயில் - திருநேரிசை : பண் - கொல்லி #229 பத்தனாய் பாடமாட்டேன் பரமனே பரமயோகீ எத்தினால் பத்தி செய்கேன் என்னை நீ இகழவேண்டா முத்தனே முதல்வா தில்லை அம்பலத்து ஆடுகின்ற அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த ஆறே மேல் #230 கருத்தனாய் பாடமாட்டேன் காம்பு அன தோளி பங்கா ஒருத்தரால் அறிய ஒண்ணா திரு உரு உடைய சோதீ திருத்தம் ஆம் தில்லை-தன்னுள் திகழ்ந்த சிற்றம்பலத்தே நிருத்தம் நான் காண வேண்டி நேர்பட வந்த ஆறே மேல் #231 கேட்டிலேன் கிளைபிரியேன் கேட்குமா கேட்டியாகில் நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே மாட்டில் நீர் வாளை பாய மல்கு சிற்றம்பலத்தே கூட்டம் ஆம் குவிமுலையாள் கூட நீ ஆடும் ஆறே மேல் #232 சிந்தையை திகைப்பியாதே செறிவு உடை அடிமை செய்ய எந்தை நீ அருளிச்செய்யாய் யாது நான் செய்வது என்னே செந்தியார் வேள்வி ஓவா தில்லை சிற்றம்பலத்தே அந்தியும் பகலும் ஆட அடி இணை அலசும்-கொல்லோ மேல் #233 கண்டவா திரிந்து நாளும் கருத்தினால் நின்தன் பாதம் கொண்டிருந்து ஆடி பாடி கூடுவன் குறிப்பினாலே வண்டு பண் பாடும் சோலை மல்கு சிற்றம்பலத்தே எண்திசையோரும் ஏத்த இறைவ நீ ஆடும் ஆறே மேல் #234 பார்த்திருந்து அடியனேன் நான் பரவுவன் பாடி ஆடி மூர்த்தியே என்பன் உன்னை மூவரில் முதல்வன் என்பன் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பாய் தில்லை சிற்றம்பலத்து கூத்தா உன் கூத்து காண்பான் கூட நான் வந்த ஆறே மேல் #235 பொய்யினை தவிர விட்டு புறம் அலா அடிமை செய்ய ஐய நீ அருளிச்செய்யாய் ஆதியே ஆதிமூர்த்தி வையகம்-தன்னில் மிக்க மல்கு சிற்றம்பலத்தே பைய நின் ஆடல் காண்பான் பரம நான் வந்த ஆறே மேல் #236 மனத்தினார் திகைத்து நாளும் மாண்பு அலா நெறிகள் மேலே கனைப்பாரால் என் செய்கேனோ கறை அணி கண்டத்தானே தினைத்தனை வேதம் குன்றா தில்லை சிற்றம்பலத்தே அனைத்தும் நின் இலயம் காண்பான் அடியனேன் வந்த ஆறே மேல் #237 நெஞ்சினை தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே வஞ்சமே செய்தியாலோ வானவர்_தலைவனே நீ மஞ்சு அடை சோலை தில்லை மல்கு சிற்றம்பலத்தே அம் சொலாள் காண நின்று அழக நீ ஆடும் ஆறே மேல் #238 மண் உண்ட மாலவனும் மலர் மிசை மன்னினானும் விண் உண்ட திரு உருவம் விரும்பினார் காணமாட்டார் திண்ணுண்ட திருவே மிக்க தில்லை சிற்றம்பலத்தே பண்ணுண்ட பாடலோடும் பரம நீ ஆடும் ஆறே மேல் 24. திருவதிகை வீரட்டானம் - கொப்பளித்த நேரிசை #239 இரும்பு கொப்பளித்த யானை ஈர் உரி போர்த்த ஈசன் கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக சுரும்பு கொப்பளித்த கங்கை துவலை நீர் சடையில் ஏற்ற அரும்பு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே மேல் #240 கொம்பு கொப்பளித்த திங்கள் கோணல் வெண் பிறையும் சூடி வம்பு கொப்பளித்த கொன்றை வளர் சடை மேலும் வைத்து செம்பு கொப்பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி அம்பு கொப்பளிக்க எய்தார் அதிகைவீரட்டனாரே மேல் #241 விடையும் கொப்பளித்த பாதம் விண்ணவர் பரவி ஏத்த சடையும் கொப்பளித்த திங்கள் சாந்தம் வெண் நீறு பூசி உடையும் கொப்பளித்த நாகம் உள்குவார் உள்ளத்து என்றும் அடையும் கொப்பளித்த சீரார் அதிகைவீரட்டனாரே மேல் #242 கறையும் கொப்பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க இறையும் கொப்பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் மறையும் கொப்பளித்த நாவர் வண்டு பண் பாடும் கொன்றை அறையும் கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே மேல் #243 நீறு கொப்பளித்த மார்பர் நிழல் திகழ் மழு ஒன்று ஏந்தி கூறு கொப்பளித்த கோதை கோல் வளை மாது ஓர்பாகம் ஏறு கொப்பளித்த பாதம் இமையவர் பரவி ஏத்த ஆறு கொப்பளித்த சென்னி அதிகைவீரட்டனாரே மேல் #244 வணங்கு கொப்பளித்த பாதம் வானவர் மருவி ஏத்த பிணங்கு கொப்பளித்த சென்னி சடை உடை பெருமை அண்ணல் சுணங்கு கொப்பளித்த கொங்கை சுரி குழல் பாகம் ஆக அணங்கு கொப்பளித்த மேனி அதிகைவீரட்டனாரே மேல் #245 சூலம் கொப்பளித்த கையர் சுடர் விடு மழுவாள் வீசி நூலும் கொப்பளித்த மார்பில் நுண் பொறி அரவம் சேர்த்தி மாலும் கொப்பளித்த பாகர் வண்டு பண் பாடும் கொன்றை ஆலம் கொப்பளித்த கண்டத்து அதிகைவீரட்டனாரே மேல் #246 நாகம் கொப்பளித்த கையர் நான்மறை ஆய பாடி மேகம் கொப்பளித்த திங்கள் விரி சடை மேலும் வைத்து பாகம் கொப்பளித்த மாதர் பண்ணுடன் பாடி ஆட ஆகம் கொப்பளித்த தோளார் அதிகைவீரட்டனாரே மேல் #247 பரவு கொப்பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த விரவு கொப்பளித்த கங்கை விரி சடை மேவ வைத்து இரவு கொப்பளித்த கண்டர் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் அரவு கொப்பளித்த கையர் அதிகைவீரட்டனாரே மேல் #248 தொண்டை கொப்பளித்த செ வாய் துடி இடை பரவை அல்குல் கொண்டை கொப்பளித்த கோதை கோல் வளை பாகம் ஆக வண்டு கொப்பளித்த தீம் தேன் வரி கயல் பருகி மாந்த கெண்டை கொப்பளித்த தெண் நீர் கெடில வீரட்டனாரே மேல் 25. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை #249 வெண் நிலா மதியம்-தன்னை விரி சடை மேவ வைத்து உள் நிலா புகுந்து நின்று அங்கு உணர்வினுக்கு உணர கூறி விண் இலார் மீயச்சூரார் வேண்டுவார் வேண்டுவார்க்கே அண்ணியார் பெரிதும் சேயார் அதிகைவீரட்டனாரே மேல் #250 பாடினார் மறைகள் நான்கும் பாய் இருள் புகுந்து என் உள்ளம் கூடினார் கூடல் ஆலவாயிலார் நல்ல கொன்றை சூடினார் சூடல் மேவி சூழ் சுடர் சுடலை வெண் நீறு ஆடினார் ஆடல் மேவி அதிகைவீரட்டனாரே மேல் #251 ஊனையே கழிக்க வேண்டில் உணர்-மின்கள் உள்ளத்துள்ளே தேன் ஐய மலர்கள் கொண்டு சிந்தையுள் சிந்திக்கின்ற ஏனைய பலவும் ஆகி இமையவர் ஏத்த நின்று ஆனையின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே மேல் #252 துருத்தி ஆம் குரம்பை-தன்னில் தொண்ணூற்று அங்கு அறுவர் நின்று விருத்திதான் தருக என்று வேதனை பலவும் செய்ய வருத்தியால் வல்ல ஆறு வந்துவந்து அடைய நின்ற அருத்தியார்க்கு அன்பர் போலும் அதிகைவீரட்டனாரே மேல் #253 பத்தியால் ஏத்தி நின்று பணிபவர் நெஞ்சத்து உள்ளார் துத்தி ஐந்தலைய நாகம் சூழ் சடை முடி மேல் வைத்து உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று அத்தியின் உரிவை போர்த்தார் அதிகைவீரட்டனாரே மேல் #254 வரி முரி பாடி என்றும் வல்ல ஆறு அடைதும் நெஞ்சே கரி உரி மூட வல்ல கடவுளை காலத்தாலே சுரி புரி விரிகுழலாள் துடி இடை பரவை அல்குல் அரிவை ஒர்பாகர் போலும் அதிகைவீரட்டனாரே மேல் #255 நீதியால் நினைசெய் நெஞ்சே நிமலனை நித்தம் ஆக பாதி ஆம் உமை-தன்னோடும் பாகமாய் நின்ற எந்தை சோதியா சுடர் விளக்காய் சுண்ண வெண் நீறு அது ஆடி ஆதியும் ஈறும் ஆனார் அதிகைவீரட்டனாரே மேல் #256 எல்லியும் பகலும் எல்லாம் துஞ்சுவேற்கு ஒருவர் வந்து புல்லிய மனத்து கோயில் புக்கனர் காமன் என்னும் வில்லி ஐங்கணையினானை வெந்து உக நோக்கியிட்டார் அல்லி அம் பழன வேலி அதிகைவீரட்டனாரே மேல் #257 ஒன்றவே உணர்திராகில் ஓங்காரத்து ஒருவன் ஆகும் வென்ற ஐம்புலன்கள்-தம்மை விலக்கதற்கு உரியீர் எல்லாம் நன் தவ நாரணனும் நான்முகன் நாடி காண்குற்று அன்று அவர்க்கு அரியர் போலும் அதிகைவீரட்டனாரே மேல் #258 தட கையால் எடுத்து வைத்து தட வரை குலுங்க ஆர்த்து கிடக்கையால் இடர்கள் ஓங்க கிளர் மணி முடிகள் சாய முடக்கினார் திரு விரல்தான் முருகு அமர் கோதை பாகத்து அடக்கினார் என்னை ஆளும் அதிகைவீரட்டனாரே மேல் 26. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை #259 நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி பங்கனே பரமயோகி என்றுஎன்றே பரவி நாளும் செம்பொனே பவள குன்றே திகழ் மலர் பாதம் காண்பான் அன்பனே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே மேல் #260 பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ மெய்யனாய் வாழமாட்டேன் வேண்டிற்று ஒன்று ஐவர் வேண்டார் செய்ய தாமரைகள் அன்ன சேவடி இரண்டும் காண்பான் ஐய நான் அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே மேல் #261 நீதியால் வாழமாட்டேன் நித்தலும் தூயேனல்லேன் ஓதியும் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் சோதியே சுடரே உன்தன் தூ மலர் பாதம் காண்பான் ஆதியே அலந்துபோனேன் அதிகைவீரட்டனீரே மேல் #262 தெருளுமா தெருளமாட்டேன் தீவினை சுற்றம் என்னும் பொருளுளே அழுந்தி நாளும் போவது ஓர் நெறியும் காணேன் இருளும் மா மணி_கண்டா நின் இணை அடி இரண்டும் காண்பான் அருளும் ஆறு அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே மேல் #263 அஞ்சினால் இயற்றப்பட்ட ஆக்கை பெற்று அதனுள் வாழும் அஞ்சினால் அடர்க்கப்பட்டு இங்கு உழிதரும் ஆதனேனை அஞ்சினால் உய்க்கும் வண்ணம் காட்டினாய்க்கு அச்சம் தீர்த்தேன் அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீரட்டனீரே மேல் #264 உறு கயிறு ஊசல் போல ஒன்று விட்டு ஒன்று பற்றி மறு கயிறு ஊசல் போல வந்துவந்து உலவும் நெஞ்சம் பெறு கயிறு ஊசல் போல பிறை புல்கு சடையாய் பாதத்து அறு கயிறு ஊசல் ஆனேன் அதிகைவீரட்டனீரே மேல் #265 கழித்திலேன் காம வெம் நோய் காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன் ஊன் கண் நோக்கி உணர்வு எனும் இமை திறந்து விழித்திலேன் வெளிற தோன்ற வினை எனும் சரக்கு கொண்டேன் அழித்திலேன் அயர்த்துப்போனேன் அதிகைவீரட்டனீரே மேல் #266 மன்றத்து புன்னை போல மரம் படு துயரம் எய்தி ஒன்றினால் உணரமாட்டேன் உன்னை உள் வைக்கமாட்டேன் கன்றிய காலன் வந்து கருங்குழி விழுப்பதற்கே அன்றினான் அலமந்திட்டேன் அதிகைவீரட்டனீரே மேல் #267 பிணி விடா ஆக்கை பெற்றேன் பெற்றம் ஒன்று ஏறுவானே பணி விடா இடும்பை என்னும் பாசனத்து அழுந்துகின்றேன் துணிவு இலேன் தூயனல்லேன் தூ மலர் பாதம் காண்பான் அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீரட்டனீரே மேல் #268 திருவினாள்_கொழுநனாரும் திசைமுகம் உடைய கோவும் இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணை அடி காணமாட்டா ஒருவனே எம்பிரானே உன் திரு பாதம் கண்பான் அருவனே அருளவேண்டும் அதிகைவீரட்டனீரே மேல் 27. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை #269 மடக்கினார் புலியின் தோலை மா மணி நாகம் கச்சா முடக்கினார் முகிழ் வெண் திங்கள் மொய் சடை கற்றை-தன் மேல் தொடக்கினார் தொண்டை செ வாய் துடி இடை பரவை அல்குல் அடக்கினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே மேல் #270 சூடினார் கங்கையாளை சூடிய துழனி கேட்டு அங்கு ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி பாடினார் சாமவேதம் பாடிய பாணியாலே ஆடினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே மேல் #271 கொம்பினார் குழைத்த வேனல் கோமகன் கோல நீர்மை நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார் கெடில வேலி அதிகைவீரட்டனாரே மேல் #272 மறி பட கிடந்த கையர் வளர் இள மங்கை பாகம் செறிபட கிடந்த செக்கர் செழு மதி கொழுந்து சூடி பொறி பட கிடந்த நாகம் புகை உமிழ்ந்து அழல வீக்கி கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே மேல் #273 நரி வரால் கவ்வ சென்று நல் தசை இழந்தது ஒத்த தெரிவரால் மால் கொள் சிந்தை தீர்ப்பது ஓர் சிந்தைசெய்வார் வரி வரால் உகளும் தெண் நீர் கழனி சூழ் பழன வேலி அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீரட்டனாரே மேல் #274 புள் அலைத்து உண்ட ஓட்டில் உண்டு போய் பலாசம் கொம்பின் சுள்ளலை சுடலை வெண் நீறு அணிந்தவர் மணி வெள் ஏற்று துள்ளலை பாகன்-தன்னை தொடர்ந்து இங்கே கிடக்கின்றேனை அள்ளலை கடப்பித்து ஆளும் அதிகைவீரட்டனாரே மேல் #275 நீறு இட்ட நுதலர் வேலை நீலம் சேர் கண்டர் மாதர் கூறிட்ட மெய்யர் ஆகி கூறினார் ஆறும் நான்கும் கீறிட்ட திங்கள் சூடி கிளர்தரு சடையினுள்ளால் ஆறு இட்டு முடிப்பர் போலும் அதிகைவீரட்டனாரே மேல் #276 காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்தல் ஆகார் ஏண் இலார் இறப்பும் இல்லார் பிறப்பு இலார் துறக்கல் ஆகார் நாண் இலார் ஐவரோடும் இட்டு எனை விரவி வைத்தார் ஆண் அலார் பெண்ணும் அல்லார் அதிகைவீரட்டனாரே மேல் #277 தீர்த்தம் ஆம் மலையை நோக்கி செரு வலி அரக்கன் சென்று பேர்த்தலும் பேதை அஞ்ச பெருவிரல்-அதனை ஊன்றி சீர்த்த மா முடிகள் பத்தும் சிதறுவித்து அவனை அன்று ஆர்த்த வாய் அலற வைத்தார் அதிகைவீரட்டனாரே மேல் 28. திருவதிகை வீரட்டானம் - திருநேரிசை #278 முன்பு எலாம் இளைய காலம் மூர்த்தியை நினையாது ஓடி கண்கண இருமி நாளும் கருத்து அழிந்து அருத்தம் இன்றி பின்பகல் உணங்கல் அட்டும் பேதைமார் போன்றேன் உள்ளம் அன்பனாய் வாழமாட்டேன் அதிகைவீரட்டனீரே மேல் #279 கறை பெரும் கண்டத்தானே காய் கதிர் நமனை அஞ்சி நிறை பெரும் கடலை கண்டேன் நீள் வரை உச்சி கண்டேன் பிறை பெரும் சென்னியானே பிஞ்ஞகா இவை அனைத்தும் அறுப்பது ஓர் உபாயம் காணேன் அதிகைவீரட்டனீரே மேல் #280 நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் ஏதங்கள் அறியமாட்டார் இணை அடி தொழுதோம் என்பார் ஆதன் ஆனவன் என்று எள்கி அதிகைவீரட்டனே நின் பாதம் நான் பரவாது உய்க்கும் பழவினை பரிசு இலேனே மேல் #281 சுடலை சேர் சுண்ண மெய்யர் சுரும்பு உண விரிந்த கொன்றை படலை சேர் அலங்கல் மார்பர் பழனம் சேர் கழனி தெங்கின் மடலை நீர் கிழிய ஓடி அதனிடை மணிகள் சிந்தும் கெடில வீரட்டம் மேய கிளர் சடை முடியனாரே மேல் #282 மந்திரம் உள்ளது ஆக மறி கடல் எழு நெய் ஆக இந்திரன் வேள்வி தீயில் எழுந்தது ஓர் கொழுந்தின் வண்ணம் சிந்திரம் ஆக நோக்கி தெருட்டுவார் தெருட்ட வந்து கந்திரம் முரலும் சோலை கானல் அம் கெடிலத்தாரே மேல் #283 மை ஞலம் அனைய கண்ணாள் பங்கன் மா மலையை ஓடி மெய் ஞரம்பு உதிரம் பில்க விசை தணிந்து அரக்கன் வீழ்ந்து கை ஞரம்பு எழுவிக்கொண்டு காதலால் இனிது சொன்ன கிஞ்ஞரம் கேட்டு உகந்தார் கெடில வீரட்டனாரே மேல் 29. திருச்செம்பொன்பள்ளி - திருநேரிசை #284 ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர் ஆகி வானினுள் வானவர்க்கும் அறியர் ஆகாத வஞ்சர் நான் எனில் தானே என்னும் ஞானத்தார் பத்தர் நெஞ்சுள் தேனும் இன்னமுதும் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #285 நொய்யவர் விழுமியாரும் நூலின் நுண் நெறியை காட்டும் மெய்யவர் பொய்யும் இல்லார் உடல் எனும் இடிஞ்சில்-தன்னில் நெய் அமர் திரியும் ஆகி நெஞ்சத்துள் விளக்கும் ஆகி செய்யவர் கரிய கண்டர் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #286 வெள்ளியர் கரியர் செய்யர் விண்ணவர் அவர்கள் நெஞ்சுள் ஒள்ளியர் ஊழிஊழி உலகம் அது ஏத்த நின்ற பள்ளியர் நெஞ்சத்து உள்ளார் பஞ்சமம் பாடி ஆடும் தெள்ளியர் கள்ளம் தீர்ப்பார் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #287 தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்கு சொல்லி எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்த சிந்தையுள் சிவம் அது ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #288 ஆறு உடை சடையர் போலும் அன்பருக்கு அன்பர் போலும் கூறு உடை மெய்யர் போலும் கோள் அரவு அரையர் போலும் நீறு உடை அழகர் போலும் நெய்தலே கமழும் நீர்மை சேறு உடை கமல வேலி திரு செம்பொன்பள்ளியாரே மேல் #289 ஞாலமும் அறிய வேண்டின் நன்று என வாழலுற்றீர் காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழியகில்லீர் கோலமும் வேண்டா ஆர்வ செற்றங்கள் குரோதம் நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #290 புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும் எரி காலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும் தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலம் கண்ட எந்தை திரு செம்பொன்பள்ளியாரே மேல் #291 கார் உடை கொன்றை மாலை கதிர் மதி அரவினோடும் நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி உள்ளார் பாரொடு விண்ணும் மண்ணும் பதினெட்டு கணங்கள் ஏத்த சீரொடு பாடல் ஆனார் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #292 ஓவாத மறை வல்லானும் ஓத நீர்_வண்ணன் காணா மூவாத பிறப்பு இலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும் பூ ஆன மூன்றுமுந்நூற்றுஅறுபதும் ஆகும் எந்தை தேவாதிதேவர் என்றும் திரு செம்பொன்பள்ளியாரே மேல் #293 அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்செய்து சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும் செம் கண் வெள் ஏறு அது ஏறும் திரு செம்பொன்பள்ளியாரே மேல் 30. திருக்கழிப்பாலை - திருநேரிசை #294 நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் தம் கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் கங்கையை சடையுள் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #295 விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினை பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினை தாவ நீண்ட மாலினுக்கு அருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #296 வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் சோமனை சடை மேல் வைத்தார் சோதியுள் சோதி வைத்தார் ஆ மன் நெய் ஆட வைத்தார் அன்பு எனும் பாசம் வைத்தார் காமனை காய்ந்த கண்ணார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #297 அரியன அங்கம் வேதம் அந்தணர்க்கு அருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேர் அழல் உண்ண வைத்தார் பரிய தீ_வண்ணர் ஆகி பவளம் போல் நிறத்தை வைத்தார் கரியது ஓர் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #298 கூர் இருள் கிழிய நின்ற கொடு மழு கையில் வைத்தார் பேர் இருள் கழிய மல்கு பிறை புனல் சடையுள் வைத்தார் ஆர் இருள் அண்டம் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் கார் இருள் கண்டம் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #299 உள் தங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க்கு உள்ளம் வைத்தார் விண் தங்கு வேள்வி வைத்தார் வெம் துயர் தீர வைத்தார் நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் கட்டங்கம் தோள் மேல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #300 ஊன பேர் ஒழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் வான பேர் ஆறும் வைத்தார் வைகுந்தற்கு ஆழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #301 கொங்கினும் அரும்பி வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #302 சதுர்முகன்தானும் மாலும் தம்மிலே இகல கண்டு எதிர்முகம் இன்றி நின்ற எரி உரு அதனை வைத்தார் பிதிர்முகன் காலன்-தன்னை கால்-தனில் பிதிர வைத்தார் கதிர் முகம் சடையில் வைத்தார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் #303 மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ காலினால் ஊன்றியிட்டார் கழிப்பாலை சேர்ப்பனாரே மேல் 31. திருக்கடவூர் வீரட்டம் - திருநேரிசை #304 பொள்ளத்த காயம் ஆய பொருளினை போக மாதர் வெள்ளத்தை கழிக்க வேண்டில் விரும்பு-மின் விளக்கு தூபம் உள்ளத்த திரி ஒன்று ஏத்தி உணரும் ஆறு உணர வல்லார் கள்ளத்தை கழிப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே மேல் #305 மண்ணிடை குரம்பை-தன்னை மதித்து நீர் மையல் எய்தில் விண்ணிடை தருமராசன் வேண்டினால் விலக்குவார் ஆர் பண்ணிடை சுவைகள் பாடி ஆடிடும் பத்தர்க்கு என்றும் கண்ணிடை மணியர் போலும் கடவூர்வீரட்டனாரே மேல் #306 பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் ஒருத்தனை உணரமாட்டீர் உள்ளத்தில் கொடுமை நீக்கீர் வருத்தின களிறு-தன்னை வருத்துமா வருத்த வல்லார் கருத்தினில் இருப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே மேல் #307 பெரும் புலர் காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி அரும்பொடு மலர்கள் கொண்டு ஆங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பி நல் விளக்கு தூபம் விதியினால் இட வல்லார்க்கு கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்டனாரே மேல் #308 தலக்கமே செய்து வாழ்ந்து தக்க ஆறு ஒன்றும் இன்றி விலக்குவார் இலாமையாலே விளக்கத்தில் கோழி போன்றேன் மலக்குவார் மனத்தினுள்ளே காலனார் தமர்கள் வந்து கலக்க நான் கலங்குகின்றேன் கடவூர்வீரட்டனீரே மேல் #309 பழி உடை யாக்கை-தன்னில் பாழுக்கே நீர் இறைத்து வழியிடை வாழமாட்டேன் மாயமும் தெளியகில்லேன் அழிவு உடைத்து ஆய வாழ்க்கை ஐவரால் அலைக்கப்பட்டு கழியிடை தோணி போன்றேன் கடவூர்வீரட்டனீரே மேல் #310 மாயத்தை அறியமாட்டேன் மையல் கொள் மனத்தன் ஆகி பேய் ஒத்து கூகை ஆனேன் பிஞ்ஞகா பிறப்பு ஒன்று இல்லீ நேயத்தால் நினையமாட்டேன் நீதனே நீசனேன் நான் காயத்தை கழிக்கமாட்டேன் கடவூர்வீரட்டனீரே மேல் #311 பற்று இலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீர் இறைத்தேன் உற்றலால் கயவர் தேறார் என்னும் கட்டுரையோடு ஒத்தேன் எற்று உளேன் என் செய்கேன் நான் இடும்பையால் ஞானம் ஏதும் கற்றிலேன் களைகண் காணேன் கடவூர்வீரட்டனீரே மேல் #312 சேலின் நேர் அனைய கண்ணார் திறம் விட்டு சிவனுக்கு அன்பாய் பாலும் நல் தயிர் நெய்யோடு பலபல ஆட்டி என்றும் மாலினை தவிர நின்ற மார்க்கண்டற்கு ஆக அன்று காலனை உதைப்பர் போலும் கடவூர்வீரட்டனாரே மேல் #313 முந்து உரு இருவரோடு மூவரும் ஆயினாரும் இந்திரனோடு தேவர் இருடிகள் இன்பம் செய்ய வந்து இருபதுகள் தோளால் எடுத்தவன் வலியை வாட்டி கந்திருவங்கள் கேட்டார் கடவூர்வீரட்டனாரே மேல் 32. திருப்பயற்றூர் - திருநேரிசை #314 உரித்திட்டார் ஆனையின் தோல் உதிர ஆறு ஒழுகி ஓட விரித்திட்டார் உமையாள் அஞ்சி விரல் விதிர்த்து அலக்கண் நோக்கி தரித்திட்டார் சிறிதுபோது தரிக்கிலர் ஆகி தாமும் சிரித்திட்டார் எயிறு தோன்ற திரு பயற்றூரனாரே மேல் #315 உவந்திட்டு அங்கு உமை ஓர்பாகம் வைத்தவர் ஊழிஊழி பவர்ந்திட்ட பரமனார்தாம் மலை சிலை நாகம் ஏற்றி கவர்ந்திட்ட புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி சிவந்திட்ட கண்ணர் போலும் திரு பயற்றூரனாரே மேல் #316 நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள் தங்களுக்கு அருளும் எங்கள் தத்துவன் தழலன்-தன்னை எங்களுக்கு அருள்செய் என்ன நின்றவன் நாகம் அஞ்சும் திங்களுக்கு அருளிச்செய்தார் திரு பயற்றூரனாரே மேல் #317 பார்த்தனுக்கு அருளும் வைத்தார் பாம்பு அரை ஆட வைத்தார் சாத்தனை மகனா வைத்தார் சாமுண்டி சாமவேதம் கூத்தொடும் பாட வைத்தார் கோள் அரா மதியம் நல்ல தீர்த்தமும் சடை மேல் வைத்தார் திரு பயற்றூரனாரே மேல் #318 மூவகை மூவர் போலும் முற்று மா நெற்றிக்கண்ணர் நா வகை நாவர் போலும் நான்மறை ஞானம் எல்லாம் ஆ வகை ஆவர் போலும் ஆதிரைநாளர் போலும் தேவர்கள்தேவர் போலும் திரு பயற்றூரனாரே மேல் #319 ஞாயிறாய் நமனும் ஆகி வருணனாய் சோமன் ஆகி தீ அறா நிருதி வாயு திப்பிய ஈசானன் ஆகி பேய் அறா காட்டில் ஆடும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் தீ அறா கையர் போலும் திரு பயற்றூரனாரே மேல் #320 ஆவியாய் அவியும் ஆகி அருக்கமாய் பெருக்கம் ஆகி பாவியார் பாவம் தீர்க்கும் பரமனாய் பிரமன் ஆகி காவி அம் கண்ணள் ஆகி கடல் வண்ணம் ஆகி நின்ற தேவியை பாகம் வைத்தார் திரு பயற்றூரனாரே மேல் #321 தந்தையாய் தாயும் ஆகி தரணியாய் தரணி உள்ளார்க்கு எந்தையும் என்ன நின்ற ஏழ்உலகு உடனும் ஆகி எந்தை எம்பிரானே என்றுஎன்று உள்குவார் உள்ளத்து என்றும் சிந்தையும் சிவமும் ஆவார் திரு பயற்றூரனாரே மேல் #322 புலன்களை போக நீக்கி புத்தியை ஒருங்க வைத்து இனங்களை போக நின்று இரண்டையும் நீக்கி ஒன்றாய் மலங்களை மாற்ற வல்லார் மனத்தினுள் போகம் ஆகி சினங்களை களைவர் போலும் திரு பயற்றூரனாரே மேல் #323 மூர்த்தி-தன் மலையின் மீது போகாதா முனிந்து நோக்கி பார்த்து தான் பூமி மேலால் பாய்ந்து உடன் மலையை பற்றி ஆர்த்திட்டான் முடிகள் பத்தும் அடர்த்து நல் அரிவை அஞ்ச தேத்தெத்தா என்ன கேட்டார் திரு பயற்றூரனாரே மேல் 33. திருமறைக்காடு - திருநேரிசை #324 இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம் ஆனார் போலும் துதிக்கல் ஆம் சோதி போலும் சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து மந்திரம் ஆனார் போலும் மா மறைக்காடனாரே மேல் #325 தேயன நாடர் ஆகி தேவர்கள்தேவர் போலும் பாயன நாடு அறுக்கும் பத்தர்கள் பணிய வம்-மின் காயன நாடு கண்டம் கதன் உளார் காள_கண்டர் மாயன நாடர் போலும் மா மறைக்காடனாரே மேல் #326 அறுமை இ உலகு-தன்னை ஆம் என கருதி நின்று வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே சிறு மதி அரவு கொன்றை திகழ்தரு சடையுள் வைத்து மறுமையும் இம்மை ஆவார் மா மறைக்காடனாரே மேல் #327 கால் கொடுத்து இரு கை ஏற்றி கழி நிரைத்து இறைச்சி மேய்ந்து தோல் மடுத்து உதிர நீரால் சுவர் எடுத்து இரண்டு வாசல் ஏல்வு உடைத்தா அமைத்து அங்கு ஏழு சாலேகம் பண்ணி மால் கொடுத்து ஆவி வைத்தார் மா மறைக்காடனாரே மேல் #328 விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் விரும்பி ஓத பண்ணினார் கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆட கண்ணினார் கண்ணினுள்ளே சோதியாய் நின்ற எந்தை மண்ணினார் வலம்கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே மேல் #329 அங்கையுள் அனலும் வைத்தார் அறுவகை சமயம் வைத்தார் தம் கையில் வீணை வைத்தார் தம் அடி பரவ வைத்தார் திங்களை கங்கையோடு திகழ்தரு சடையுள் வைத்தார் மங்கையை பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே மேல் #330 கீதராய் கீதம் கேட்டு கின்னரம்-தன்னை வைத்தார் வேதராய் வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார் ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு மாதை ஓர்பாகம் வைத்தார் மா மறைக்காடனாரே மேல் #331 கனத்தின் ஆர் வலி உடைய கடி மதில் அரணம் மூன்றும் சினத்தினுள் சினமாய் நின்று தீ எழ செற்றார் போலும் தனத்தினை தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு மனத்தினுள் மாசு தீர்ப்பார் மா மறைக்காடனாரே மேல் #332 தேசனை தேசன்-தன்னை தேவர்கள் போற்றி இசைப்பார் வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு-மின்கள் காசினை கனலை என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு மாசிகை தீர்ப்பர் போலும் மா மறைக்காடனாரே மேல் #333 பிணி உடை யாக்கை-தன்னை பிறப்பு அறுத்து உய்ய வேண்டில் பணி உடை தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும் தோகை அஞ்ச மணி முடி பத்து இறுத்தார் மா மறைக்காடனாரே மேல் 34. திருமறைக்காடு - திருநேரிசை #334 தேரையும் மேல் கடாவி திண்ணமா தெழித்து நோக்கி ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான்-தன்னை பாரையும் விண்ணும் அஞ்ச பரந்த தோள் முடி அடர்த்து காரிகை அஞ்சல் என்பார் கலி மறைக்காடனாரே மேல் #335 முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர்_கோனை நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை அக்கு அரவு ஆமை பூண்ட அழகனார் கருத்தினாலே தெக்கு நீர் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே மேல் #336 மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி அகப்படுத்து என்று தானும் ஆண்மையால் மிக்கு அரக்கன் உகைத்து எடுத்தான் மலையை ஊன்றலும் அவனை ஆங்கே நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே மேல் #337 அந்தரம் தேர் கடாவி ஆர் இவன் என்று சொல்லி உந்தினான் மா மலையை ஊன்றலும் ஒள் அரக்கன் பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்ட அலறி வீழ சிந்தனைசெய்து விட்டார் திரு மறைக்காடனாரே மேல் #338 தடுக்கவும் தாங்க ஒண்ணா தன் வலி உடையன் ஆகி கடுக்க ஓர் தேர் கடாவி கை இருபதுகளாலும் எடுப்பன் நான் என்ன பண்டம் என்று எடுத்தானை ஏங்க அடுக்கவே வல்லன் ஊர் ஆம் அணி மறைக்காடுதானே மேல் #339 நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் கோள் பிடித்து ஆர்த்த கையான் கொடியன் மா வலியன் என்று நீள் முடிச்சடையர் சேரும் நீள் வரை எடுக்கலுற்றான் தோள் முடி நெரிய வைத்தார் தொல் மறைக்காடனாரே மேல் #340 பத்து வாய் இரட்டி கைகள் உடையன் மா வலியன் என்று பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்_கோனை கத்தி வாய் கதற அன்று கால்விரல் ஊன்றியிட்டார் முத்து வாய் திரைகள் மோதும் முது மறைக்காடனாரே மேல் #341 பக்கமே விட்ட கையான் பாங்கு இலா மதியன் ஆகி புக்கனன் மா மலை கீழ் போதும் ஆறு அறியமாட்டான் மிக்க மா மதிகள் கெட்டு வீரமும் இழந்த ஆறே நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே மேல் #342 நாண் அஞ்சு கையன் ஆகி நல் முடி பத்தினோடு பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று ஏண் அஞ்சு கைகள் செய்தார் எழில் மறைக்காடனாரே மேல் #343 கங்கை நீர் சடையுள் வைக்க காண்டலும் மங்கை ஊட தென்கையான் தேர் கடாவி சென்று எடுத்தான் மலையை முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட அம் கை வாள் அருளினான் ஊர் அணி மறைக்காடுதானே மேல் 35. திருவிடைமருதூர் - திருநேரிசை #344 காடு உடை சுடலை நீற்றர் கையில் வெண் தலையர் தையல் பாடு உடை பூதம் சூழ பரமனார் மருத வைப்பில் தோடு உடை கைதையோடு சூழ் கிடங்கு அதனை சூழ்ந்த ஏடு உடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே மேல் #345 முந்தையார் முந்தி உள்ளார் மூவர்க்கும் முதல்வர் ஆனார் சந்தியார் சந்தி உள்ளார் தவநெறி தரித்து நின்றார் சிந்தையார் சிந்தை உள்ளார் சிவநெறி அனைத்தும் ஆனார் எந்தையார் எம்பிரானார் இடைமருது இடம்கொண்டாரே மேல் #346 கார் உடை கொன்றை மாலை கதிர் மணி அரவினோடு நீர் உடை சடையுள் வைத்த நீதியார் நீதி ஆய போர் உடை விடை ஒன்று ஏற வல்லவர் பொன்னி தென்-பால் ஏர் உடை கமலம் ஓங்கும் இடைமருது இடம்கொண்டாரே மேல் #347 விண்ணினார் விண்ணின் மிக்கார் வேதங்கள் நான்கும் அங்கம் பண்ணினார் பண்ணின் மிக்க பாடலார் பாவம் தீர்க்கும் கண்ணினார் கண்ணின் மிக்க நுதலினார் காமன் காய்ந்த எண்ணினார் எண்ணின் மிக்கார் இடைமருது இடம்கொண்டாரே மேல் #348 வேதங்கள் நான்கும் கொண்டு விண்ணவர் பரவி எத்த பூதங்கள் பாடி ஆடல் உடையவன் புனிதன் எந்தை பாதங்கள் பரவி நின்ற பத்தர்கள்-தங்கள் மேலை ஏதங்கள் தீர நின்றார் இடைமருது இடம்கொண்டாரே மேல் #349 பொறி அரவு அரையில் ஆர்த்து பூதங்கள் பலவும் சூழ முறி தரு வன்னி கொன்றை முதிர் சடை மூழ்க வைத்து மறிதரு கங்கை தங்க வைத்தவர் எத்திசையும் எறிதரு புனல் கொள் வேலி இடைமருது இடம்கொண்டாரே மேல் #350 படர் ஒளி சடையின் உள்ளால் பாய் புனல் அரவினோடு சுடர் ஒளி மதியம் வைத்து தூ ஒளி தோன்றும் எந்தை அடர் ஒளி விடை ஒன்று ஏற வல்லவர் அன்பர்-தங்கள் இடர் அவை கெடவும் நின்றார் இடைமருது இடம்கொண்டாரே மேல் #351 கமழ்தரு சடையின் உள்ளால் கடும் புனல் அரவினோடும் தவழ்தரு மதியம் வைத்து தன் அடி பலரும் ஏத்த மழு அது வல கை ஏந்தி மாது ஒருபாகம் ஆகி எழில் தரு பொழில்கள் சூழ்ந்த இடைமருது இடம்கொண்டாரே மேல் #352 பொன் திகழ் கொன்றை மாலை புது புனல் வன்னி மத்தம் மின் திகழ் சடையில் வைத்து மேதக தோன்றுகின்ற அன்று அவர் அளக்கல் ஆகா அனல் எரி ஆகி நீண்டார் இன்று உடன் உலகம் ஏத்த இடைமருது இடம்கொண்டாரே மேல் #353 மலையுடன் விரவி நின்று மதி இலா அரக்கன் நூக்க தலையுடன் அடர்த்து மீண்டே தலைவனா அருள்கள் நல்கி சிலையுடை மலையை வாங்கி திரி புரம் மூன்று எய்தார் இலையுடை கமல வேலி இடைமருது இடம்கொண்டாரே மேல் 36. திருப்பழனம் - திருநேரிசை #354 ஆடினார் ஒருவர் போலும் அலர் கமழ் குழலினாளை கூடினார் ஒருவர் போலும் குளிர் புனல் வளைந்த திங்கள் சூடினார் ஒருவர் போலும் தூய நல் மறைகள் நான்கும் பாடினார் ஒருவர் போலும் பழனத்து எம் பரமனாரே மேல் #355 போவது ஓர் நெறியும் ஆனார் புரி சடை புனிதனார் நான் வேவது ஓர் வினையில் பட்டு வெம்மைதான் விடவும்கில்லேன் கூவல்தான் அவர்கள் கேளார் குணம் இலா ஐவர் செய்யும் பாவமே தீர நின்றார் பழனத்து எம் பரமனாரே மேல் #356 கண்டராய் முண்டர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி தொண்டர்கள் பாடி ஆடி தொழு கழல் பரமனார்தாம் விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் பண்டை என் வினைகள் தீர்ப்பார் பழனத்து எம் பரமனாரே மேல் #357 நீர் அவன் தீயினோடு நிழல் அவன் எழிலது ஆய பார் அவன் விண்ணின் மிக்க பரம் அவன் பரமயோகி ஆரவன் அண்டம் மிக்க திசையினோடு ஒளிகள் ஆகி பாரகத்து அமுதம் ஆனார் பழனத்து எம் பரமனாரே மேல் #358 ஊழியார் ஊழி-தோறும் உலகினுக்கு ஒருவர் ஆகி பாழியார் பாவம் தீர்க்கும் பராபரர் பரம் அது ஆய ஆழியான் அன்னத்தானும் அன்று அவர்க்கு அளப்பரீய பாழியார் பரவி ஏத்தும் பழனத்து எம் பரமனாரே மேல் #359 ஆலின் கீழ் அறங்கள் எல்லாம் அன்று அவர்க்கு அருளிச்செய்து நூலின் கீழவர்கட்கு எல்லாம் நுண்பொருள் ஆகிநின்று காலின் கீழ் காலன்-தன்னை கடுக தான் பாய்ந்து பின்னும் பாலின் கீழ் நெய்யும் ஆனார் பழனத்து எம் பரமனாரே மேல் #360 ஆதித்தன் அங்கி சோமன் அயனொடு மால் புதனும் போதித்து நின்று உலகில் போற்றி இசைத்தார் இவர்கள் சோதித்தார் ஏழ்உலகும் சோதியுள்சோதி ஆகி பாதி பெண் உருவம் ஆனார் பழனத்து எம் பரமனாரே மேல் #361 கால்-தனால் காலன் காய்ந்து கார் உரி போர்த்த ஈசர் தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி ஏற்றினார் இள வெண் திங்கள் இரும் பொழில் சூழ்ந்த காயம் பாற்றினார் வினைகள் எல்லாம் பழனத்து எம் பரமனாரே மேல் #362 கண்ணனும் பிரமனோடு காண்கிலர் ஆகி வந்தே எண்ணியும் துதித்தும் ஏத்த எரி உரு ஆகி நின்று வண்ண நல் மலர்கள் தூவி வாழ்த்துவார் வாழ்த்தி ஏத்த பண் உலாம் பாடல் கேட்டார் பழனத்து எம் பரமனாரே மேல் #363 குடை உடை அரக்கன் சென்று குளிர் கயிலாய வெற்பின் இடை மடவரலை அஞ்ச எடுத்தலும் இறைவன் நோக்கி விடை உடை விகிர்தன்தானும் விரலினால் ஊன்றி மீண்டும் படை கொடை அடிகள் போலும் பழனத்து எம் பரமனாரே மேல் 37. திருநெய்த்தானம் - திருநேரிசை #364 காலனை வீழ செற்ற கழல் அடி இரண்டும் வந்து என் மேலவாய் இருக்கப்பெற்றேன் மேதக தோன்றுகின்ற கோல நெய்த்தானம் என்னும் குளிர்பொழில் கோயில் மேய நீலம் வைத்து அனைய கண்டம் நினைக்குமா நினைக்கின்றேனே மேல் #365 காமனை அன்று கண்ணால் கனல் எரி ஆக நோக்கி தூபமும் தீபம் காட்டி தொழுமவர்க்கு அருள்கள்செய்து சேம நெய்த்தானம் என்னும் செறி பொழில் கோயில் மேய வாமனை நினைந்த நெஞ்சம் வாழ்வுற நினைந்த ஆறே மேல் #366 பிறை தரு சடையின் மேலே பெய் புனல் கங்கை-தன்னை உறைதர வைத்த எங்கள் உத்தமன் ஊழி ஆய நிறைதரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் என்று குறைதரும் அடியவர்க்கு குழகனை கூடல் ஆமே மேல் #367 வடிதரு மழு ஒன்று ஏந்தி வார் சடை மதியம் வைத்து பொடி தரு மேனி மேலே புரிதரு நூலர் போலும் நெடி தரு பொழில்கள் சூழ நின்ற நெய்த்தானம் மேவி அடி தரு கழல்கள் ஆர்ப்ப ஆடும் எம் அண்ணலாரே மேல் #368 காடு இடம் ஆக நின்று கனல் எரி கையில் ஏந்தி பாடிய பூதம் சூழ பண்ணுடன் பலவும் சொல்லி ஆடிய கழலர் சீர் ஆர் அம் தண் நெய்த்தானம் என்றும் கூடிய குழகனாரை கூடும் ஆறு அறிகிலேனே மேல் #369 வானவர் வணங்கி ஏத்தி வைகலும் மலர்கள் தூவ தான் அவர்க்கு அருள்கள்செய்யும் சங்கரன் செம் கண் ஏற்றன் தேன் அமர் பொழில்கள் சூழ திகழும் நெய்த்தானம் மேய கூன் இளமதியினானை கூடும் ஆறு அறிகிலேனே மேல் #370 கால் அதிர் கழல்கள் ஆர்ப்ப கனல் எரி கையில் வீசி ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற மேலவர் முகடு தோய விரி சடை திசைகள் பாய மால் ஒருபாகம் ஆக மகிழ்ந்த நெய்த்தானனாரே மேல் #371 பந்தித்த சடையின் மேலே பாய் புனல் அதனை வைத்து அந்தி போது அனலும் ஆடி அடிகள் ஐயாறு புக்கார் வந்திப்பார் வணங்கி நின்று வாழ்த்துவார் வாயின் உள்ளார் சிந்திப்பார் சிந்தை உள்ளார் திருந்து நெய்த்தானனாரே மேல் #372 சோதியாய் சுடரும் ஆனார் சுண்ண வெண் சாந்து பூசி ஓதி வாய் உலகம் ஏத்த உகந்து தாம் அருள்கள்செய்வார் ஆதியாய் அந்தம் ஆனார் யாவரும் இறைஞ்சி ஏத்த நீதியாய் நியமம் ஆகி நின்ற நெய்த்தானனாரே மேல் #373 இலையுடை படை கை ஏந்தும் இலங்கையர்_மன்னன்-தன்னை தலையுடன் அடர்த்து மீண்டே தான் அவற்கு அருள்கள்செய்து சிலையுடன் கணையை சேர்த்து திரிபுரம் எரிய செற்ற நிலை உடை அடிகள் போலும் நின்ற நெய்த்தானனாரே மேல் 38. திருவையாறு - திருநேரிசை #374 கங்கையை சடையுள் வைத்தார் கதிர் பொறி அரவும் வைத்தார் திங்களை திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார் மங்கையை பாகம் வைத்தார் மான் மறி மழுவும் வைத்தார் அங்கையுள் அனலும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #375 பொடி-தனை பூச வைத்தார் பொங்கு வெண் நூலும் வைத்தார் கடியது ஓர் நாகம் வைத்தார் காலனை கால வைத்தார் வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகம் வைத்தார் அடி இணை தொழவும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #376 உடை தரு கீளும் வைத்தார் உலகங்கள் அனைத்தும் வைத்தார் படை தரு மழுவும் வைத்தார் பாய் புலி தோலும் வைத்தார் விடை தரு கொடியும் வைத்தார் வெண் புரி நூலும் வைத்தார் அடைதர அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #377 தொண்டர்கள் தொழவும் வைத்தார் தூ மதி சடையில் வைத்தார் இண்டையை திகழ வைத்தார் எமக்கு என்றும் இன்பம் வைத்தார் வண்டு சேர் குழலினாளை மருவி ஓர்பாகம் வைத்தார் அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனாரே மேல் #378 வானவர் வணங்க வைத்தார் வல்வினை மாய வைத்தார் கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் ஆனிடைஐந்தும் வைத்தார் ஆட்டுவார்க்கு அருளும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #379 சங்கு அணி குழையும் வைத்தார் சாம்பர் மெய் பூச வைத்தார் வெம் கதிர் எரிய வைத்தார் விரி பொழில் அனைத்தும் வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் கடுவினை களைய வைத்தார் அங்கம் அது ஓத வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #380 பத்தர்கட்கு அருளும் வைத்தார் பாய் விடை ஏற வைத்தார் சித்தத்தை ஒன்ற வைத்தார் சிவம் அதே நினைய வைத்தார் முத்தியை முற்ற வைத்தார் முறைமுறை நெறிகள் வைத்தார் அத்தியின் உரிவை வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #381 ஏறு உகந்து ஏற வைத்தார் இடைமருது இடமும் வைத்தார் நாறு பூம் கொன்றை வைத்தார் நாகமும் அரையில் வைத்தார் கூறு உமை ஆகம் வைத்தார் கொல் புலி தோலும் வைத்தார் ஆறும் ஓர் சடையில் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #382 பூதங்கள் பலவும் வைத்தார் பொங்கு வெண் நீறும் வைத்தார் கீதங்கள் பாட வைத்தார் கின்னரம்-தன்னை வைத்தார் பாதங்கள் பரவ வைத்தார் பத்தர்கள் பணிய வைத்தார் ஆதியும் அந்தம் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் #383 இரப்பவர்க்கு ஈய வைத்தார் ஈபவர்க்கு அருளும் வைத்தார் கரப்பவர்-தங்கட்கு எல்லாம் கடு நரகங்கள் வைத்தார் பரப்பு நீர் கங்கை-தன்னை படர் சடை பாகம் வைத்தார் அரக்கனுக்கு அருளும் வைத்தார் ஐயன் ஐயாறனாரே மேல் 39. திருவையாறு - திருநேரிசை #384 குண்டனாய் சமணரோடே கூடி நான் கொண்ட மாலை துண்டனே சுடர் கொள் சோதீ தூ நெறி ஆகி நின்ற அண்டனே அமரர் ஏறே திரு ஐயாறு அமர்ந்த தேனே தொண்டனேன் தொழுது உன் பாதம் சொல்லி நான் திரிகின்றேனே மேல் #385 பீலி கை இடுக்கி நாளும் பெரியது ஓர் தவம் என்று எண்ணி வாலிய தறிகள் போல மதியிலார் பட்டது என்னே வாலியார் வணங்கி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஆலியா எழுந்த நெஞ்சம் அழகிதா எழுந்த ஆறே மேல் #386 தட்டு இடு சமணரோடே தருக்கி நான் தவம் என்று எண்ணி ஒட்டிடு மனத்தினீரே உம்மை யான் செய்வது என்னே மொட்டு இடு கமல பொய்கை திரு ஐயாறு அமர்ந்த தேனோடு ஒட்டிடும் உள்ளத்தீரே உம்மை நான் உகந்திட்டேனே மேல் #387 பாசி பல் மாசு மெய்யர் பலம் இலா சமணரோடு நேசத்தால் இருந்த நெஞ்சை நீக்கும் ஆறு அறியமாட்டேன் தேசத்தார் பரவி ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை வாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயும் அன்றே மேல் #388 கடுப்பொடி அட்டி மெய்யில் கருதி ஓர் தவம் என்று எண்ணி வடுக்களோடு இசைந்த நெஞ்சே மதியிலி பட்டது என்னே மடுக்களில் வாளை பாயும் திரு ஐயாறு அமர்ந்த தேனை அடுத்து நின்று உன்னு நெஞ்சே அரும் தவம் செய்த ஆறே மேல் #389 துறவி என்று அவம் அது ஒரேன் சொல்லிய சொலவு செய்து உறவினால் அமணரோடும் உணர்வு இலேன் உணர்வு ஒன்று இன்றி நறவம் ஆர் பொழில்கள் சூழ்ந்த திரு ஐயாறு அமர்ந்த தேனை மறவு இலா நெஞ்சமே நல்மதி உனக்கு அடைந்த ஆறே மேல் #390 பல் உரை சமணரோடே பலபல காலம் எல்லாம் சொல்லிய சொலவு செய்தேன் சோர்வன் நான் நினைந்தபோது மல்லிகை மலரும் சோலை திரு ஐயாறு அமர்ந்த தேனை எல்லியும் பகலும் எல்லாம் நினைந்தபோது இனிய ஆறே மேல் #391 மண் உளார் விண் உளாரும் வணங்குவார் பாவம் போக எண் இலா சமணரோடே இசைந்தனை ஏழை நெஞ்சே தெண் நிலா எறிக்கும் சென்னி திரு ஐயாறு அமர்ந்த தேனை கண்ணினால் காணப்பெற்று கருதிற்றே முடிந்த ஆறே மேல் #392 குருந்தம் அது ஒசித்த மாலும் குலமலர் மேவினானும் திருந்து நல் திருவடீயும் திரு முடி காணமாட்டார் அரும் தவ முனிவர் ஏத்தும் திரு ஐயாறு அமர்ந்த தேனை பொருந்தி நின்று உன்னு நெஞ்சே பொய்வினை மாயும்அன்றே மேல் #393 அறிவு இலா அரக்கன் ஓடி அரு வரை எடுக்கலுற்று முறுகினான் முறுக கண்டு மூதறிவாளன் நோக்கி நிறுவினான் சிறு விரலால் நெரிந்து போய் நிலத்தில் வீழ அறிவினால் அருள்கள்செய்தான் திரு ஐயாறு அமர்ந்த தேனே மேல் 40. திருவையாறு - திருநேரிசை #394 தான் அலாது உலகம் இல்லை சகம் அலாது அடிமை இல்லை கான் அலாது ஆடல் இல்லை கருதுவார்-தங்களுக்கு வான் அலாது அருளும் இல்லை வார் குழல் மங்கையோடும் ஆன் அலாது ஊர்வது இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #395 ஆல் அலால் இருக்கை இல்லை அரும் தவ முனிவர்க்கு அன்று நூல் அலால் நொடிவது இல்லை நுண்பொருள் ஆய்ந்துகொண்டு மாலும் நான்முகனும் கூடி மலர் அடி வணங்க வேலை ஆல் அலால் அமுதம் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #396 நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை சுரி புரிகுழலியோடும் துணை அலால் இருக்கை இல்லை தெரி புரி சிந்தையார்க்கு தெளிவு அலால் அருளும் இல்லை அரி புரி மலர் கொடு ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே மேல் #397 தொண்டு அலால் துணையும் இல்லை தோல் அலாது உடையும் இல்லை கண்டு அலாது அருளும் இல்லை கலந்த பின் பிரிவது இல்லை பண்டை நான்மறைகள் காணா பரிசினன் என்றுஎன்று எண்ணி அண்ட வானவர்கள் ஏத்தும் ஐயன் ஐயாறனார்க்கே மேல் #398 எரி அலால் உருவம் இல்லை ஏறு அலால் ஏறல் இல்லை கரி அலால் போர்வை இல்லை காண்தகு சோதியார்க்கு பிரிவு இலா அமரர் கூடி பெருந்தகை பிரான் என்று ஏத்தும் அரி அலால் தேவி இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #399 என்பு அலால் கலனும் இல்லை எருது அலால் ஊர்வது இல்லை புன் புலால் நாறு காட்டின் பொடி அலால் சாந்தும் இல்லை துன்பு இலா தொண்டர் கூடி தொழுது அழுது ஆடி பாடும் அன்பு அலால் பொருளும் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #400 கீள் அலால் உடையும் இல்லை கிளர் பொறிஅரவம் பைம்பூண் தோள் அலால் துணையும் இல்லை தொத்து அலர்கின்ற வேனில் வேள் அலால் காயப்பட்ட வீரரும் இல்லை மீளா ஆள் அலால் கைம்மாறு இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #401 சகம் அலாது அடிமை இல்லை தான் அலால் துணையும் இல்லை நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி முகம் எலாம் கண்ணீர் மல்க முன் பணிந்து ஏத்தும் தொண்டர் அகம் அலால் கோயில் இல்லை ஐயன் ஐயாறனார்க்கே மேல் #402 உமை அலாது உருவம் இல்லை உலகு அலாது உடையது இல்லை நமை எலாம் உடையர் ஆவர் நன்மையே தீமை இல்லை கமை எலாம் உடையர் ஆகி கழல் அடி பரவும் தொண்டர்க்கு அமைவு இலா அருள்கொடுப்பர் ஐயன் ஐயாறனார்க்கே மேல் #403 மலை அலால் இருக்கை இல்லை மதித்திடா அரக்கன்-தன்னை தலை அலால் நெரித்தது இல்லை தட வரை கீழ் அடர்த்து நிலை இலார் புரங்கள் வேவ நெருப்பு அலால் விரித்தது இல்லை அலையின் ஆர் பொன்னி மன்னும் ஐயன் ஐயாறனார்க்கே மேல் 41. திருச்சோற்றுத்துறை - திருநேரிசை #404 பொய் விராம் மேனி-தன்னை பொருள் என காலம் போக்கி மெய் விராம் மனத்தனல்லேன் வேதியா வேத நாவா ஐவரால் அலைக்கப்பட்ட ஆக்கை கொண்டு அயர்த்துப்போனேன் செய் வரால் உகளும் செம்மை திரு சோற்றுத்துறையனாரே மேல் #405 கட்டராய் நின்று நீங்கள் காலத்தை கழிக்கவேண்டா எட்ட ஆம் கைகள் வீசி எல்லி நின்று ஆடுவானை அட்ட மா மலர்கள் கொண்டே ஆன் அஞ்சும் ஆட்ட ஆடி சிட்டராய் அருள்கள்செய்வார் திரு சோற்றுத்துறையனாரே மேல் #406 கல்லினால் புரம் மூன்று எய்த கடவுளை காதலாலே எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தம் ஆக ஏத்தும் பல் இல் வெண் தலை கை ஏந்தி பல் இலம் திரியும் செல்வர் சொல்லும் நன்பொருளும் ஆவார் திரு சோற்றுத்துறையனாரே மேல் #407 கறையராய் கண்டம் நெற்றிக்கண்ணராய் பெண் ஓர்பாகம் இறையராய் இனியர் ஆகி தனியராய் பனி வெண் திங்கள் பிறையராய் செய்த எல்லாம் பீடராய் கேடு இல் சோற்று துறையராய் புகுந்து என் உள்ள சோர்வு கண்டு அருளினாரே மேல் #408 பொந்தையை பொருளா எண்ணி பொருக்கென காலம் போனேன் எந்தையே ஏகமூர்த்தி என்று நின்று ஏத்தமாட்டேன் பந்தமாய் வீடும் ஆகி பரம்பரம் ஆகி நின்று சிந்தையுள் தேறல் போலும் திரு சோற்றுத்துறையனாரே மேல் #409 பேர்த்து இனி பிறவா வண்ணம் பிதற்று-மின் பேதை_பங்கன் பார்த்தனுக்கு அருள்கள்செய்த பாசுபதன் திறம்மே ஆர்த்து வந்து இழிவது ஒத்த அலை புனல் கங்கை ஏற்று தீர்த்தமாய் போத விட்டார் திரு சோற்றுத்துறையனாரே மேல் #410 கொந்து ஆர் பூம் குழலினாரை கூறியே காலம் போன எந்தை எம்பிரானாய் நின்ற இறைவனை ஏத்தாது அந்தோ முந்து அரா அல்குலாளை உடன்வைத்த ஆதிமூர்த்தி செம் தாது புடைகள் சூழ்ந்த திரு சோற்றுத்துறையனாரே மேல் #411 அம் கதிரோன் அவனை அண்ணலா கருதவேண்டா வெம் கதிரோன் வழியே போவதற்கு அமைந்துகொண்-மின் அம் கதிரோன் அவனை உடன்வைத்த ஆதிமூர்த்தி செம் கதிரோன் வணங்கும் திரு சோற்றுத்துறையனாரே மேல் #412 ஓதியே கழிக்கின்றீர்கள் உலகத்தீர் ஒருவன்-தன்னை நீதியால் நினைக்கமாட்டீர் நின்மலன் என்று சொல்லீர் சாதியா நான்முகனும் சக்கரத்தானும் காணா சோதியாய் சுடர் அது ஆனார் திரு சோற்றுத்துறையனாரே மேல் #413 மற்று நீர் மனம்வையாதே மறுமையை கழிக்க வேண்டில் பெற்றது ஓர் உபாயம்-தன்னால் பிரானையே பிதற்று-மின்கள் கற்று வந்து அரக்கன் ஓடி கயிலாய மலை எடுக்க செற்று உகந்து அருளிச்செய்தார் திரு சோற்றுத்துறையனாரே மேல் 42. திருத்துருத்தி - திருநேரிசை #414 பொருத்திய குரம்பை-தன்னை பொருள் என கருதவேண்டா இருத்தி எப்போதும் நெஞ்சுள் இறைவனை ஏத்து-மின்கள் ஒருத்தியை பாகம் வைத்து அங்கு ஒருத்தியை சடையில் வைத்த துருத்தி அம் சுடரினானை தொண்டனேன் கண்டவாறே மேல் #415 சவைதனை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்ற இவை ஒரு பொருளும் அல்ல இறைவனை ஏத்து-மின்னோ அவை புரம் மூன்றும் எய்தும் அடியவர்க்கு அருளிச்செய்த சுவையினை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #416 உன்னி எப்போதும் நெஞ்சுள் ஒருவனை ஏத்து-மின்னோ கன்னியை ஒருபால் வைத்து கங்கையை சடையுள் வைத்து பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் துன்னிய துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #417 ஊன்-தலை வலியன் ஆகி உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் தான் தலைப்பட்டு நின்று சார் கனலகத்து வீழ வான்-தலை தேவர் கூடி வானவர்க்கு இறைவா என்னும் தோன்றலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #418 உடல்-தனை கழிக்கலுற்ற உலகத்துள் உயிர்கட்கு எல்லாம் இடர்தனை கழிக்க வேண்டில் இறைவனை ஏத்து-மின்னோ கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற சுடர்-தனை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #419 அள்ளலை கடக்க வேண்டில் அரனையே நினை-மின் நீர்கள் பொள்ளல் இ காயம்-தன்னுள் புண்டரீகத்து இருந்த வள்ளலை வானவர்க்கும் காண்பு அரிது ஆகி நின்ற துள் அலை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #420 பாதியில் உமையாள்-தன்னை பாகமா வைத்த பண்பன் வேதியன் என்று சொல்லி விண்ணவர் விரும்பி ஏத்த சாதி ஆம் சதுமுகனும் சக்கரத்தானும் காணா சோதியை துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #421 சாம் மனை வாழ்க்கை ஆன சலத்துளே அழுந்தவேண்டா தூமம் நல் அகிலும் காட்டி தொழுது அடி வணங்கு-மின்னோ சோமனை சடையுள் வைத்து தொல் நெறி பலவும் காட்டும் தூ மணல் துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் #422 குண்டரே சமணர் புத்தர் குறி அறியாது நின்று கண்டதே கருதுவார்கள் கருத்து எண்ணாது ஒழி-மின் நீர்கள் விண்டவர் புரங்கள் எய்து விண்ணவர்க்கு அருள்கள்செய்த தொண்டர்கள் துணையினானை துருத்தி நான் கண்டவாறே மேல் #423 பிண்டத்தை கழிக்க வேண்டில் பிரானையே பிதற்று-மின்கள் அண்டத்தை கழிய நீண்ட அடல் அரக்கன்-தன் ஆண்மை கண்டு ஒத்து கால்விரலால் ஊன்றி மீண்டு அருளிச்செய்த துண்டத்து துருத்தியானை தொண்டனேன் கண்டவாறே மேல் 43. திருக்கச்சிமேற்றளி - திருநேரிசை #424 மறை அது பாடி பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது சடை முடி மேல் பெய் வளையாள்-தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் இறையவர் பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே மேல் #425 மால் அன மாயன்-தன்னை மகிழ்ந்தனர் விருத்தர் ஆகும் பாலனார் பசுபதியார் பால் வெள்ளை நீறு பூசி காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் ஏல நல் கடம்பன்_தந்தை இலங்கு மேற்றளியனாரே மேல் #426 விண்ணிடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த பண்ணிடை சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் எண்ணிடை எழுத்தும் ஆனார் இலங்கு மேற்றளியனாரே மேல் #427 சோமனை அரவினோடு சூழ்தர கங்கை சூடும் வாமனை வானவர்கள் வலங்கொண்டு வந்து போற்ற காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை இலங்கு மேற்றளியனாரே மேல் #428 ஊனவர் உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி தானவர் தனமும் ஆகி தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார் இலங்கு மேற்றளியனாரே மேல் #429 மாயன் ஆம் மாலன் ஆகி மலரவன் ஆகி மண்ணாய் தேயமாய் திசை எட்டு ஆகி தீர்த்தமாய் திரிதர்கின்ற காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் ஏய மென்தோளி_பாகர் இலங்கு மேற்றளியனாரே மேல் #430 மண்ணினை உண்ட மாயன்-தன்னை ஓர்பாகம் கொண்டார் பண்ணினை பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் எண்ணினை எண்ண வைத்தார் இலங்கு மேற்றளியனாரே மேல் #431 செல்வியை பாகம் கொண்டார் சேந்தனை மகனா கொண்டார் மல்லிகை கண்ணியோடு மா மலர் கொன்றை சூடி கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்கு மேற்றளியனாரே மேல் #432 வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளை கூறு இயல் பாகம் வைத்தார் கோள் அரா மதியும் வைத்தார் ஆறினை சடையுள் வைத்தார் அணி பொழில் சச்சி-தன்னுள் ஏறினை ஏறும் எந்தை இலங்கு மேற்றளியனாரே மேல் #433 தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு மன்னவன் விரலால் ஊன்ற மணி முடி நெரிய வாயால் கன்னலின் கீதம் பாட கேட்டவர் காஞ்சி-தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார் இலங்கு மேற்றளியனாரே மேல் 44. திருக்கச்சியேகம்பம் - திருநேரிசை #434 நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் அம்பனை அமுதை ஆற்றை அணி பொழில் கச்சியுள் ஏ கம்பனை கதிர் வெண் திங்கள் செம் சடை கடவுள்-தன்னை செம்பொனை பவள தூணை சிந்தியா எழுகின்றேனே மேல் #435 ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துளை உடைத்தாய் அரை முழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து பெரு முழைவாய்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் கரு முகில் தவழும் மாட கச்சி ஏகம்பனீரே மேல் #436 மலையினார்மகள் ஓர்பாகம் மைந்தனார் மழு ஒன்று ஏந்தி சிலையினால் மதில்கள் மூன்றும் தீ எழ செற்ற செல்வர் இலையின் ஆர் சூலம் ஏந்தி ஏகம்பம் மேவினாரை தலையினால் வணங்க வல்லார் தலைவர்க்கு தலைவர்தாமே மேல் #437 பூத்த பொன் கொன்ற மாலை புரி சடைக்கு அணிந்த செல்வர் தீர்த்தம் ஆம் கங்கையாளை திரு முடி திகழ வைத்து ஏத்துவார் ஏத்த நின்ற ஏகம்பம் மேவினாரை வாழ்த்தும் ஆறு அறியமாட்டேன் மால்கொடு மயங்கினேனே மேல் #438 மையின் ஆர் மலர் நெடும் கண் மங்கை ஓர்பங்கர் ஆகி கையில் ஓர் கபாலம் ஏந்தி கடை-தொறும் பலி கொள்வார் தாம் எய்வது ஓர் ஏனம் ஓட்டி ஏகம்பம் மேவினாரை கையினால் தொழ வல்லார்க்கு கடுவினை களையல் ஆமே மேல் #439 தரு வினை மருவும் கங்கை தங்கிய சடையன் எங்கள் அருவினை அகல நல்கும் அண்ணலை அமரர் போற்றும் திருவினை திரு ஏகம்பம் செப்பட உறைய வல்ல உருவினை உருகி ஆங்க உள்ளத்தால் உகக்கின்றேனே மேல் #440 கொண்டது ஓர் கோலம் ஆகி கோலக்கா உடைய கூத்தன் உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் எண்திசையோரும் ஏத்த நின்ற ஏகம்பன்-தன்னை கண்டு நான் அடிமை செய்வான் கருதியே திரிகின்றேனே மேல் #441 படம் உடை அரவினோடு பனி மதி அதனை சூடி கடம் உடை உரிவை மூடி கண்டவர் அஞ்ச அம்ம இடம் உடை கச்சி-தன்னுள் ஏகம்பம் மேவினான்-தன் நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே மேல் #442 பொன் திகழ் கொன்றை மாலை பொருந்திய நெடும் தண் மார்பர் நன்றியின் புகுந்து என் உள்ளம் மெள்ளவே நவில நின்று குன்றியில் அடுத்த மேனி குவளை அம் கண்டர் எம்மை இன் துயில் போது கண்டார் இனியர் ஏகம்பனாரே மேல் #443 துருத்தியார் பழனத்து உள்ளார் தொண்டர்கள் பலரும் ஏத்த அருத்தியால் அன்பு செய்வார் அவரவர்க்கு அருள்கள்செய்து எருத்தினை இசைய ஏறி ஏகம்பம் மேவினார்க்கு வருத்தி நின்று அடிமை செய்வார் வல்வினை மாயும் அன்றே மேல் 45. திருவொற்றியூர் - திருநேரிசை #444 வெள்ளத்தை சடையில் வைத்த வேதகீதன்-தன் பாதம் மெள்ளத்தான் அடைய வேண்டின் மெய் தரு ஞானத்தீயால் கள்ளத்தை கழிய நின்றான் காயத்துள் கலந்து நின்று உள்ளத்துள் ஒளியும் ஆகும் ஒற்றியூர் உடைய கோவே மேல் #445 வசிப்பு எனும் வாழ்க்கை வேண்டா வானவர்_இறைவன் நின்று புசிப்பது ஓர் பொள்ளல் ஆக்கை அதனொடும் புணர்வு வேண்டில் அசிர்ப்பு எனும் அரும் தவத்தால் ஆன்மாவின் இடம் அது ஆகி உசிர்ப்பு எனும் உணர்வின் உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே மேல் #446 தானத்தை செய்து வாழ்வான் சலத்துளே அழுந்துகின்றீர் வானத்தை வணங்க வேண்டில் வம்-மின்கள் வல்லீராகில் ஞானத்தை விளக்கை ஏற்றி நாடி உள் விரவ வல்லார் ஊனத்தை ஒழிப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே மேல் #447 காமத்துள் அழுந்தி நின்று கண்டரால் ஒறுப்புண்ணாதே சாமத்து வேதம் ஆகி நின்றது ஓர் சயம்பு-தன்னை ஏமத்தும் இடை இராவும் ஏகாந்தம் இயம்புவாருக்கு ஓமத்துள் ஒளி அது ஆகும் ஒற்றியூர் உடைய கோவே மேல் #448 சமையல் மேல் ஆறும் ஆகி தான் ஒரு சயம்பு ஆகி இமையவர் பரவி ஏத்த இனிதின் அங்கு இருந்த ஈசன் கமையினை உடையர் ஆகி கழல் அடி பரவுவாருக்கு உமை_ஒருபாகர் போலும் ஒற்றியூர் உடைய கோவே மேல் #449 ஒருத்தி தன் தலை சென்றானை கரந்திட்டான் உலகம் ஏத்த ஒருத்திக்கு நல்லன் ஆகி மறுப்படுத்து ஒளித்தும் ஈண்டே ஒருத்தியை பாகம் வைத்தான் உணர்வினால் ஐயம் உண்ணி ஒருத்திக்கும் நல்லனல்லன் ஒற்றியூர் உடைய கோவே மேல் #450 பிணம் உடை உடலுக்கு ஆக பித்தராய் திரிந்து நீங்கள் புணர்வு எனும் போகம் வேண்டா போக்கல் ஆம் பொய்யை நீங்க நிணம் உடை நெஞ்சினுள்ளால் நினைக்குமா நினைக்கின்றாருக்கு உணர்வினோடு இருப்பர் போலும் ஒற்றியூர் உடைய கோவே மேல் #451 பின்னு வார் சடையான்-தன்னை பிதற்றிலா பேதைமார்கள் துன்னுவார் நரகம்-தன்னுள் தொல்வினை தீர வேண்டின் மன்னு வான் மறைகள் ஓதி மனத்தினுள் விளக்கு ஒன்று ஏற்றி உன்னுவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே மேல் #452 முள்குவார் போகம் வேண்டின் முயற்சியால் இடர்கள் வந்தால் எள்குவார் எள்கி நின்று அங்கு இது ஒரு மாயம் என்பார் பள்குவார் பத்தர் ஆகி பாடியும் ஆடியும் நின்று உள்குவார் உள்ளத்து உள்ளார் ஒற்றியூர் உடைய கோவே மேல் #453 வெறுத்து உக புலன்கள் ஐந்தும் வேண்டிற்று வேண்டும் நெஞ்சே மறுத்து உக ஆர்வ செற்ற குரோதங்கள் ஆன மாய பொறுத்து உக புட்பக தேர் உடையானை அடர ஊன்றி ஒறுத்து உகந்து அருள்கள்செய்தார் ஒற்றியூர் உடைய கோவே மேல் 46. திருவொற்றியூர் - திருநேரிசை #454 ஓம்பினேன் கூட்டை வாளா உள்ளத்து ஓர் கொடுமை வைத்து காம்பு இலா மூழை போல கருதிற்றே முகக்கமாட்டேன் பாம்பின் வாய் தேரை போல பலபல நினைக்கின்றேனை ஓம்பி நீ உய்யக்கொள்ளாய் ஒற்றியூர் உடைய கோவே மேல் #455 மனம் எனும் தோணி பற்றி மதி எனும் கோலை ஊன்றி சினம் எனும் சரக்கை ஏற்றி செறி கடல் ஓடும்போது மதன் எனும் பாறை தாக்கி மறியும்போது அறிய ஒண்ணாது உனை உனும் உணர்வை நல்காய் ஒற்றியூர் உடைய கோவே மேல் 47. திருக்கயிலாயம் - திருநேரிசை #456 கனகம் மா வயிரம் உந்தும் மா மணி கயிலை கண்டு முனகனாய் அரக்கன் ஓடி எடுத்தலும் உமையாள் அஞ்ச அனகனாய் நின்ற ஈசன் ஊன்றலும் அலறி வீழ்ந்தான் மனகனாய் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #457 கழித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி அதிர்த்து அவன் எடுத்திடலும் அரிவைதான் அஞ்ச ஈசன் நெதித்தவன் ஊன்றியிட்ட நிலை அழிந்து அலறி வீழ்ந்தான் மதித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #458 கறுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் மறித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #459 கடுத்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் மடித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #460 கன்றி தன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி வென்றி தன் கைத்தலத்தால் எடுத்தலும் வெருவ மங்கை நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் மன்றி தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #461 களித்தவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி நெளித்து அவன் எடுத்திடலும் நேர்_இழை அஞ்ச நோக்கி வெளித்தவன் ஊன்றியிட்ட வேற்பினால் அலறி வீழ்ந்தான் மளித்து இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #462 கருத்தனாய் கண் சிவந்து கயிலை நல் மலையை கையால் எருத்தனாய் எடுத்த ஆறே ஏந்து_இழை அஞ்ச ஈசன் திருத்தனாய் நின்ற தேவன் திரு விரல் ஊன்ற வீழ்ந்தான் வருத்துவான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #463 கடியவன் கண் சிவந்து கயிலை நல் மலையை ஓடி வடிவு உடை மங்கை அஞ்ச எடுத்தலும் மருவ நோக்கி செடி பட திரு விரலால் ஊன்றலும் சிதைந்து வீழ்ந்தான் வடிவுற ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் #464 கரிய தான் கண் சிவந்து கயிலை நல் மலையை பற்றி இரிய தான் எடுத்திடலும் ஏந்து_இழை அஞ்ச ஈசன் நெரிய தான் ஊன்றா முன்னம் நிற்கிலாது அலறி வீழ்ந்தான் மறிய தான் ஊன்றினானேல் மறித்தும் நோக்கும் இல்லை அன்றே மேல் #465 கற்றனன் கயிலை-தன்னை காண்டலும் அரக்கன் ஓடி செற்றவன் எடுத்த ஆறே சே_இழை அஞ்ச ஈசன் உற்று இறை ஊன்றா முன்னம் உணர்வு அழி வகையால் வீழ்ந்தான் மற்று இறை ஊன்றினானேல் மறித்தும் நோக்கு இல்லை அன்றே மேல் 48. திருஆப்பாடி - திருநேரிசை #466 கடலகம் ஏழினோடும் பவனமும் கலந்து விண்ணும் உடலகத்து உயிரும் பாரும் ஒள் அழல் ஆகி நின்று தடம் மலர் கந்த மாலை தண் மதி பகலும் ஆகி மடல் அவிழ் கொன்றை சூடி மன்னும் ஆப்பாடியாரே மேல் #467 ஆதியும் அறிவும் ஆகி அறிவினுள் செறிவும் ஆகி சோதியுள் சுடரும் ஆகி தூ நெறிக்கு ஒருவன் ஆகி பாதியில் பெண்ணும் ஆகி பரவுவார் பாங்கர் ஆகி வேதியர் வாழும் சேய்ஞல் விரும்பும் ஆப்பாடியாரே மேல் #468 எண் உடை இருக்கும் ஆகி இருக்கின் உட்பொருளும் ஆகி பண்ணொடு பாடல்-தன்னை பரவுவார் பாங்கர் ஆகி கண் ஒரு நெற்றி ஆகி கருதுவார் கருதல் ஆகா பெண் ஒருபாகம் ஆகி பேணும் ஆப்பாடியாரே மேல் #469 அண்டம் ஆர் அமரர்_கோமான் ஆதி எம் அண்ணல் பாதம் கொண்டவன் குறிப்பினாலே கூப்பினான் தாபரத்தை கண்டு அவன் தாதை பாய்வான் கால் அற எறிய கண்டு தண்டியார்க்கு அருள்கள்செய்த தலைவர் ஆப்பாடியாரே மேல் #470 சிந்தையும் தெளிவும் ஆகி தெளிவினுள் சிவமும் ஆகி வந்த நன் பயனும் ஆகி வாள்_நுதல் பாகம் ஆகி மந்தம் ஆம் பொழில்கள் சூழ்ந்த மண்ணி தென்கரை மேல் மன்னி அந்தமோடு அளவு இலாத அடிகள் ஆப்பாடியாரே மேல் #471 வன்னி வாள் அரவு மத்தம் மதியமும் ஆறும் சூடி மின்னிய உரு ஆம் சோதி மெய்ப்பொருள் பயனும் ஆகி கன்னி ஓர்பாகம் ஆகி கருதுவார் கருத்தும் ஆகி இன்னிசை தொண்டர் பாட இருந்த ஆப்பாடியாரே மேல் #472 உள்ளுமாய் புறமும் ஆகி உருவுமாய் அருவும் ஆகி வெள்ளமாய் கரையும் ஆகி விரி கதிர் ஞாயிறு ஆகி கள்ளமாய் கள்ளத்து உள்ளார் கருத்துமாய் அருத்தம் ஆகி அள்ளுவார்க்கு அள்ளல்செய்திட்டு இருந்த ஆப்பாடியாரே மேல் #473 மயக்கம் ஆய் தெளிவும் ஆகி மால் வரை வளியும் ஆகி தியக்கம் ஆய் ஒருக்கம் ஆகி சிந்தையுள் ஒன்றி நின்று இயக்கம் ஆய் இறுதி ஆகி எண் திசைக்கு இறைவர் ஆகி அயக்கம் ஆய் அடக்கம் ஆய ஐயர் ஆப்பாடியாரே மேல் #474 ஆர் அழல் உருவம் ஆகி அண்டம் ஏழ் கடந்த எந்தை பேர் ஒளி உருவினானை பிரமனும் மாலும் காணா சீர் அவை பரவி ஏத்தி சென்று அடி வணங்குவார்க்கு பேர் அருள் அருளிச்செய்வார் பேணும் ஆப்பாடியாரே மேல் #475 திண் திறல் அரக்கன் ஓடி சீ கயிலாயம்-தன்னை எண் திறல் இலனும் ஆகி எடுத்தலும் ஏழை அஞ்ச விண்டு இற நெரிய ஊன்றி மிக கடுத்து அலறி வீழ பண் திறல் கேட்டு உகந்த பரமர் ஆப்பாடியாரே மேல் 49. திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை #476 ஆதியில் பிரமனார்தாம் அர்ச்சித்தார் அடி இணை கீழ் ஓதிய வேதநாவர் உணரும் ஆறு உணரல் உற்றார் சோதியுள் சுயராய் தோன்றி சொல்லினை இறந்தார் பல் பூ கோதி வண்டு அறையும் சோலை குறுக்கைவீரட்டனாரே மேல் #477 நீற்றினை நிறைய பூசி நித்தலும் நியமம் செய்து ஆற்று நீர் பூரித்து ஆட்டும் அந்தணனாரை கொல்வான் சாற்றும் நாள் அற்றது என்று தருமராசற்காய் வந்த கூற்றினை குமைப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே மேல் #478 தழைத்தது ஓர் ஆத்தியின் கீழ் தாபரம் மணலால் கூப்பி அழைத்து அங்கே ஆவின் பாலை கறந்துகொண்டு ஆட்ட கண்டு பிழைத்த தன் தாதை தாளை பெரும் கொடு மழுவால் வீச குழைத்தது ஓர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே மேல் #479 சிலந்தியும் ஆனைக்காவில் திரு நிழல் பந்தர் செய்து உலந்து அவண் இறந்தபோதே கோச்செங்கணானும் ஆக கலந்த நீர் காவிரீ சூழ் சோணாட்டு சோழர்-தங்கள் குலம்-தனில் பிறப்பித்திட்டார் குறுக்கைவீரட்டனாரே மேல் #480 ஏறு உடன் ஏழ் அடர்த்தான் எண்ணி ஆயிரம் பூ கொண்டு ஆறு உடை சடையினானை அர்ச்சித்தான் அடி இணை கீழ் வேறும் ஓர் பூ குறைய மெய் மலர் கண்ணை மிண்ட கூறும் ஓர் ஆழி ஈந்தார் குறுக்கைவீரட்டனாரே மேல் #481 கல்லினால் எறிந்து கஞ்சி தாம் உணும் சாக்கியனார் நெல்லின் ஆர் சோறு உணாமே நீள் விசும்பு ஆள வைத்தார் எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி கொல்லி ஆம் பண் உகந்தார் குறுக்கைவீரட்டனாரே மேல் #482 காப்பது ஓர் வில்லும் அம்பும் கையது ஓர் இறைச்சி பாரம் தோல் பெரும் செருப்பு தொட்டு தூய வாய் கலசம் ஆட்டி தீ பெரும் கண்கள் செய்ய குருதி நீர் ஒழுக தன் கண் கோப்பதும் பற்றி கொண்டார் குறுக்கைவீரட்டனாரே மேல் #483 நிறை மறைக்காடு-தன்னில் நீண்டு எரி தீபம்-தன்னை கறை நிறத்து எலி தன் மூக்கு சுட்டிட கனன்று தூண்ட நிறை கடல் மண்ணும் விண்ணும் நீண்ட வான் உலகம் எல்லாம் குறைவு அற கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே மேல் #484 அணங்கு உமை பாகம் ஆக அடக்கிய ஆதிமூர்த்தி வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்து நல் அரும் தவத்த கணம்புல்லர்க்கு அருள்கள்செய்து காதல் ஆம் அடியார்க்கு என்றும் குணங்களை கொடுப்பர் போலும் குறுக்கைவீரட்டனாரே மேல் #485 எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர்_மன்னன்-தன்னை அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறி போய் அவனும் வீழ்ந்து விடுத்தனன் கை நரம்பால் வேத கீதங்கள் பாட கொடுத்தனர் கொற்றவாள் நாள் குறுக்கைவீரட்டனாரே மேல் 50. திருக்குறுக்கை வீரட்டம் - திருநேரிசை #486 நெடிய மால் பிரமனோடு நீர் எனும் பிலயம் கொள்ள அடியொடு முடியும் காணார் அருச்சுனற்கு அம்பும் வில்லும் துடி உடை வேடர் ஆகி தூய மந்திரங்கள் சொல்லி கொடி நெடும் தேர் கொடுத்தார் குறுக்கைவீரட்டனாரே மேல் #487 ஆத்தம் ஆம் அயனும் மாலும் அன்றி மற்று ஒழிந்த தேவர் சோத்தம் எம்பெருமான் என்று தொழுது தோத்திரங்கள் சொல்ல தீர்த்தம் ஆம் அட்டமீ முன் சீர் உடை ஏழு நாளும் கூத்தராய் வீதி போந்தார் குறுக்கைவீரட்டனாரே மேல் 51. திருக்கோடிகா - திருநேரிசை #488 நெற்றி மேல் கண்ணினானே நீறு மெய் பூசினானே கற்றை புன் சடையினானே கடல் விடம் பருகினானே செற்றவர் புரங்கள் மூன்றும் செ அழல் செலுத்தினானே குற்றம் இல் குணத்தினானே கோடிகா உடைய கோவே மேல் #489 கடி கமழ் கொன்றையானே கபாலம் கை ஏந்தினானே வடிவு உடை மங்கை-தன்னை மார்பில் ஓர்பாகத்தானே அடி இணை பரவ நாளும் அடியவர்க்கு அருள்செய்வானே கொடி அணி விழவு அது ஓவா கோடிகா உடைய கோவே மேல் #490 நீறு மெய் பூசினானே நிழல் திகழ் மழுவினானே ஏறு உகந்து ஏறினானே இரும் கடல் அமுது ஒப்பானே ஆறும் ஓர் நான்கு வேதம் அறம் உரைத்து அருளினானே கூறும் ஓர் பெண்ணினானே கோடிகா உடைய கோவே மேல் #491 காலனை காலால் செற்று அன்று அருள் புரி கருணையானே நீலம் ஆர் கண்டத்தானே நீள் முடி அமரர்_கோவே ஞாலம் ஆம் பெருமையானே நளிர் இளம் திங்கள் சூடும் கோலம் ஆர் சடையினானே கோடிகா உடைய கோவே மேல் #492 பூண் அரவு ஆரத்தானே புலி உரி அரையினானே காணில் வெண் கோவணமும் கையில் ஓர் கபாலம் ஏந்தி ஊணும் ஊர் பிச்சையானே உமை ஒருபாகத்தானே கோணல் வெண் பிறையினானே கோடிகா உடைய கோவே மேல் #493 கேழல் வெண் கெம்பு பூண்ட கிளர் ஒளி மார்பினானே ஏழையேன் ஏழையேன் நான் என் செய்கேன் எந்தை பெம்மான் மாழை ஒண் கண்ணினார்கள் வலைதனில் மயங்குகின்றேன் கூழை ஏறு உடைய செல்வா கோடிகா உடைய கோவே மேல் #494 அழல் உமிழ் அங்கையானே அரிவை ஓர்பாகத்தானே தழல் உமிழ் அரவம் ஆர்த்து தலை-தனில் பலி கொள்வானே நிழல் உமிழ் சோலை சூழ நீள் வரி வண்டு இனங்கள் குழல் உமிழ் கீதம் பாடும் கோடிகா உடைய கோவே மேல் #495 ஏ அடு சிலையினாலே புரம் அவை எரிசெய்தானே மா வடு வகிர் கொள் கண்ணாள் மலைமகள் பாகத்தானே ஆவடுதுறை உளானே ஐவரால் ஆட்டப்பட்டேன் கோ அடு குற்றம் தீராய் கோடிகா உடைய கோவே மேல் #496 ஏற்ற நீர் கங்கையானே இரு நிலம் தாவினானும் நாற்ற மா மலர் மேல் ஏறும் நான்முகன் இவர்கள் கூடி ஆற்றலால் அளக்கலுற்றார்க்கு அழல் உரு ஆயினானே கூற்றுக்கும் கூற்று அது ஆனாய் கோடிகா உடைய கோவே மேல் #497 பழக நான் அடிமை செய்வேன் பசுபதீ பாவநாசா மழ களி யானையின் தோல் மலைமகள் வெருவ போர்த்த அழகனே அரக்கன் திண் தோள் அரு வரை நெரிய ஊன்றும் குழகனே கோல மார்பா கோடிகா உடைய கோவே மேல் 52. திருவாரூர் - திருநேரிசை #498 படு குழி பவ்வத்து அன்ன பண்டியை பெய்த ஆற்றால் கெடுவது இ மனிதர் வாழ்க்கை காண்-தொறும் கேதுகின்றேன் முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும் அடியனேன் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #499 புழு பெய்த பண்டி-தன்னை புறம் ஒரு தோலால் மூடி ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை சழக்கு உடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய அழிப்பனாய் வாழமாட்டேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #500 பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார் நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே மேல் #501 கெண்டை அம் தடம் கண் நல்லார்-தம்மையே கெழும வேண்டி குண்டராய் திரிதந்து ஐவர் குலைத்து இடர் குழியில் நூக்க கண்டு நான் தரிக்ககில்லேன் காத்துக்கொள் கறை சேர் கண்டா அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனீரே மேல் #502 தாழ் குழல் இன்சொல் நல்லார்-தங்களை தஞ்சம் என்று ஏழையேன் ஆகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான் வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து ஆழ் குழி படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #503 மாற்றம் ஒன்று அருளகில்லீர் மதியிலேன் விதி இலாமை சீற்றமும் தீர்த்தல்செய்யீர் சிக்கனவு உடையர் ஆகி கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டு கோகு செய்ய ஆற்றவும்கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #504 உயிர்நிலை உடம்பே காலா உள்ளமே தாழி ஆக துயரமே ஏற்றம் ஆக துன்ப கோல் அதனை பற்றி பயிர்-தனை சுழிய விட்டு பாழ்க்கு நீர் இறைத்து மிக்க அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #505 கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடி பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே முற்றினால் ஐவர் வந்து முறைமுறை துயரம் செய்ய அற்று நான் அலந்துபோனேன் ஆரூர் மூலட்டனீரே மேல் #506 பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய மத்து உறு தயிரே போல மறுகும் என் உள்ளம்தானும் அத்தனே அமரர்_கோவே ஆரூர் மூலட்டனீரே மேல் #507 தட கை நால்_ஐந்தும் கொண்டு தட வரை-தன்னை பற்றி எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம் முடி தலை பத்தும் தோளும் முறிதர இறையே ஊன்றி அடர்த்து அருள்செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே மேல் 53. திருவாரூர் - திருநேரிசை #508 குழல் வலம் கொண்ட சொல்லாள் கோல வேல்கண்ணி-தன்னை கழல் வலம்கொண்டு நீங்கா கணங்கள் அ கணங்கள் ஆர அழல் வலம் கொண்ட கையான் அருள் கதிர் எறிக்கும் ஆரூர் தொழல் வலம்கொண்டல் செய்வான் தோன்றினார் தோன்றினாரே மேல் #509 நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று வேகத்தை தவிர நாகம் வேழத்தின் உரிவை போர்த்து பாகத்தின் நிமிர்தல்செய்யா திங்களை மின் என்று அஞ்சி ஆகத்தில் கிடந்த நாகம் அடங்கும் ஆரூரனார்க்கே மேல் #510 தொழுது அகம் குழைய மேவி தொட்டிமை உடைய தொண்டர் அழுத அகம் புகுந்து நின்றார் அவர் அவா போலும் ஆரூர் எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி பொழில் அகம் விளங்கு திங்கள் புது முகிழ் சூடினாரே மேல் #511 நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் வெம் சுடர் விளக்கத்து ஆடி விளங்கினார் போலும் மூவா வெம் சுடர் முகடு தீண்டி வெள்ளி நாராசம் அன்ன அம் சுடர் அணி வெண் திங்கள் அணியும் ஆரூரனாரே மேல் #512 எம் தளிர் நீர்மை கோல மேனி என்று இமையோர் ஏத்த பைம் தளிர் கொம்பர் அன்ன படர் கொடி பயிலப்பட்டு தம் சடை தொத்தினாலும் தம்மது ஓர் நீர்மையாலும் அம் தளிர் ஆகம் போலும் வடிவர் ஆரூரனாரே மேல் #513 வானகம் விளங்க மல்கும் வளம் கெழு மதியம் சூடி தான் அகம் அழிய வந்து தாம் பலி தேர்வர் போலும் ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம் ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே மேல் #514 அஞ்சு அணை கணையினானை அழலுற அன்று நோக்கி அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் அஞ்சு அணை வேலி ஆரூர் ஆதரித்து இடம்கொண்டாரே மேல் #515 வணங்கி முன் அமரர் ஏத்த வல்வினை ஆன தீர பிணங்கு உடை சடையில் வைத்த பிறை உடை பெருமை அண்ணல் மணம் கமழ் ஓதி பாகர் மதி நிலா வட்டத்து ஆடி அண் அம் கொடி மாட வீதி ஆரூர் எம் அடிகளாரே மேல் #516 நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் புகலிடம் ஆகி வாழும் புகலிலி இருவர் கூடி இகல் இடம் ஆக நீண்டு அங்கு ஈண்டு எழில் அழல் அது ஆகி அகலிடம் பரவி ஏத்த அடிகள் ஆரூரனாரே மேல் #517 ஆயிரம் திங்கள் மொய்த்த அலை கடல் அமுதம் வாங்கி ஆயிரம் அசுரர் வாழும் அணி மதில் மூன்றும் வேவ ஆயிரம் தோளும் மட்டித்து ஆடிய அசைவு தீர ஆயிரம் அடியும் வைத்த அடிகள் ஆரூரனாரே மேல் 54. திருப்புகலூர் - திருநேரிசை #518 பகைத்திட்டார் புரங்கள் மூன்றும் பாறி நீறு ஆகி வீழ புகைத்திட்ட தேவர்_கோவே பொறியிலேன் உடலம்-தன்னுள் அகைத்திட்டு அங்கு அதனை நாளும் ஐவர் கொண்டு ஆட்ட ஆடி திகைத்திட்டேன் செய்வது என்னே திரு புகலூரனீரே மேல் #519 மை அரி மதர்த்த ஒண் கண் மாதரார் வலையில் பட்டு கை எரி சூலம் ஏந்தும் கடவுளை நினையமாட்டேன் ஐ நெரிந்து அக மிடற்றே அடைக்கும்போது ஆவியார்தாம் செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே மேல் #520 முப்பதும் முப்பத்தாறும் முப்பதும் இடு குரம்பை அப்பர் போல் ஐவர் வந்து அது தருக இது விடு என்று ஒப்பவே நலியலுற்றால் உய்யும் ஆறு அறியமாட்டேன் செப்பமே திகழும் மேனி திரு புகலூரனீரே மேல் #521 பொறி இலா அழுக்கை ஓம்பி பொய்யினை மெய் என்று எண்ணி நெறி அலா நெறிகள் சென்றேன் நீதனே நீதி ஏதும் அறிவிலேன் அமரர்_கோவே அமுதினை மனனில் வைக்கும் செறிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே மேல் #522 அளியின் ஆர் குழலினார்கள் அவர்களுக்கு அன்பு அது ஆகி களியின் ஆர் பாடல் ஓவா கடவூர்வீரட்டம் என்னும் தளியினார் பாதம் நாளும் நினைவு இலா தகவு இல் நெஞ்சம் தெளிவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே மேல் #523 இலவின் நா மாதர்-பாலே இசைந்து நான் இருந்து பின்னும் நிலவும் நாள் பல என்று எண்ணி நீதனேன் ஆதி உன்னை உலவினால் உள்கமாட்டேன் உன் அடி பரவும் ஞானம் செலவு இலேன் செய்வது என்னே திரு புகலூரனீரே மேல் #524 காத்திலேன் இரண்டும்_மூன்றும் கல்வியேல் இல்லை என்பால் வாய்த்திலேன் அடிமை-தன்னுள் வாய்மையால் தூயேனல்லேன் பார்த்தனுக்கு அருள்கள்செய்த பரமனே பரவுவார்கள் தீர்த்தமே திகழும் பொய்கை திரு புகலூரனீரே மேல் #525 நீருமாய் தீயும் ஆகி நிலனுமாய் விசும்பும் ஆகி ஏர் உடை கதிர்கள் ஆகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற்கு அரியர் ஆகி அங்கு அங்கே ஆடுகின்ற தேவர்க்கும் தேவர் ஆவார் திரு புகலூரனாரே மேல் #526 மெய்யுளே விளக்கை ஏற்றி வேண்டு அளவு உயர தூண்டி உய்வது ஓர் உபாயம் பற்றி உகக்கின்றேன் உகவா வண்ணம் ஐவரை அகத்தே வைத்தீர் அவர்களே வலியர் சால செய்வது ஒன்று அறியமாட்டேன் திரு புகலூரனீரே மேல் #527 அரு வரை தாங்கினானும் அரு மறை ஆதியானும் இருவரும் அறியமாட்டா ஈசனார் இலங்கை_வேந்தன் கரு வரை எடுத்த ஞான்று கண் வழி குருதி சோர திரு விரல் சிறிது வைத்தார் திரு புகலூரனாரே மேல் 55. திருவலம்புரம் - திருநேரிசை #528 தெண் திரை தேங்கி ஓதம் சென்று அடி வீழும்-காலை தொண்டு இரைத்து அண்டர்_கோனை தொழுது அடி வணங்கி எங்கும் வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத்து அடிகள்-தம்மை கொண்டு நல் கீதம் பாட குழகர்தாம் இருந்தவாறே மேல் #529 மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை பிடி களிறு என்ன தம்மில் பிணை பயின்று அணை வரால்கள் தொடுத்த நல் மாலை ஏந்தி தொண்டர்கள் பரவி ஏத்த வடி தடங்கண்ணி பாகர் வலம்புரத்து இருந்தவாறே மேல் #530 தேன் உடை மலர்கள் கொண்டு திருந்து அடி பொருந்த சேர்த்தி ஆனிடைஅஞ்சும் கொண்டு அன்பினால் அமர ஆட்டி வானிடைமதியம் சூடும் வலம்புரத்து அடிகள்-தம்மை நான் அடைந்து ஏத்தப்பெற்று நல்வினை பயன் உற்றேனே மேல் #531 முளை எயிற்று இள நல் ஏனம் பூண்டு மொய் சடைகள் தாழ வளை எயிற்று இளைய நாகம் வலித்து அரை இசைய வீக்கி புளைகைய போர்வை போர்த்து புனலொடு மதியம் சூடி வளை பயில் இளையர் ஏத்தும் வலம்புரத்து அடிகள்தாமே மேல் #532 சுருளுறு வரையின் மேலால் துளங்கு இளம் பளிங்கு சிந்த இருளுறு கதிர் நுழைந்த இளம் கதிர் பசலை திங்கள் அருளுறும் அடியர் எல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த மருளுறு கீதம் கேட்டார் வலம்புரத்து அடிகளாரே மேல் #533 நினைக்கின்றேன் நெஞ்சு-தன்னால் நீண்ட புன் சடையினானே அனைத்து உடன் கொண்டுவந்து அங்கு அன்பினால் அமைய ஆட்டி புனைக்கின்றேன் பொய்ம்மை-தன்னை மெய்ம்மையை புணரமாட்டேன் எனக்கு நான் செய்வது என்னே இனி வலம்புரவனீரே மேல் #534 செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம் பழம் இனிய நாடி தம் கயம் துறந்து போந்து தடம் பொய்கை அடைந்து நின்று கொங்கையர் குடையும்-காலை கொழும் கனி அழுங்கினார் அம் மங்கல மனையின் மிக்கார் வலம்புரத்து அடிகளாரே மேல் #535 அருகு எலாம் குவளை செந்நெல் அகல் இலை ஆம்பல் நெய்தல் தெரு எலாம் தெங்கு மாவின் பழம் விழும் படப்பை எல்லாம் குருகு இனம் கூடி ஆங்கே கும்மலித்து இறகு உலர்த்தி மருவல் ஆம் இடங்கள் காட்டும் வலம்புரத்து அடிகளாரே மேல் #536 கரு வரை அனைய மேனி கடல்_வண்ணன் அவனும் காணான் திரு வரை அனைய பூ மேல் திசைமுகன் அவனும் காணான் ஒரு வரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து அருமையின் எளிமை ஆனார் அவர் வலம்புரவனாரே மேல் #537 வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை ஆள் வலி கருதி சென்ற அரக்கனை வரை கீழ் அன்று தோளொடு பத்து வாயும் தொலைந்து உடன் அழுந்த ஊன்றி ஆண்மையும் வலியும் தீர்ப்பார் அவர் வலம்புரவனாரே மேல் 56. திருவாவடுதுறை - திருநேரிசை #538 மா இரு ஞாலம் எல்லாம் மலர் அடி வணங்கும் போலும் பாய் இரும் கங்கையாளை படர் சடை வைப்பர் போலும் காய் இரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல ஊரர்க்கு அம் பொன் ஆயிரம் கொடுப்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #539 மடந்தை பாகத்தர் போலும் மான் மறி கையர் போலும் குடந்தையில் குழகர் போலும் கொல் புலி தோலர் போலும் கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் அடைந்தவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #540 உற்ற நோய் தீர்ப்பர் போலும் உறு துணை ஆவர் போலும் செற்றவர் புரங்கள் மூன்றும் தீ எழ செறுவர் போலும் கற்றவர் பரவி ஏத்த கலந்து உலந்து அலந்து பாடும் அற்றவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #541 மழு அமர் கையர் போலும் மாது அவள் பாகர் போலும் எழு நுனை வேலர் போலும் என்பு கொண்டு அணிவர் போலும் தொழுது எழுந்து ஆடி பாடி தோத்திரம் பலவும் சொல்லி அழுமவர்க்கு அன்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #542 பொடி அணி மெய்யர் போலும் பொங்கு வெண் நூலர் போலும் கடியது ஓர் விடையர் போலும் காமனை காய்வர் போலும் வெடுபடு தலையர் போலும் வேட்கையால் பரவும் தொண்டர் அடிமையை அளப்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #543 வக்கரன் உயிரை வவ்வ கண் மலர் கொண்டு போற்ற சக்கரம் கொடுப்பர் போலும் தானவர் தலைவர் போலும் துக்க மா மூடர்-தம்மை துயரிலே வீழ்ப்பர் போலும் அக்கு அரை ஆர்ப்பர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #544 விடை தரு கொடியர் போலும் வெண் புரி நூலர் போலும் படை தரு மழுவர் போலும் பாய் புலி தோலர் போலும் உடை தரு கீளர் போலும் உலகமும் ஆவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடுதுறையனாரே மேல் #545 முந்தி வானோர்கள் வந்து முறைமையால் வணங்கி ஏத்த நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப சிந்தியாதே ஒழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்தி வான் மதியம் சூடும் ஆவடுதுறையனாரே மேல் #546 பான் அமர் ஏனம் ஆகி பார் இடந்திட்ட மாலும் தேன் அமர்ந்து ஏறும் அல்லி திசைமுகம் உடைய கோவும் தீனரை தியங்கு அறுத்த திரு உரு உடையர் போலும் ஆன் நரை ஏற்றர் போலும் ஆவடுதுறையனாரே மேல் #547 பார்த்தனுக்கு அருள்வர் போலும் படர் சடை முடியர் போலும் ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலும் கூத்தராய் பாடி ஆடி கொடு வலி அரக்கன்-தன்னை ஆர்த்த வாய் அலறுவிப்பார் ஆவடுதுறையனாரே மேல் 57. திருவாவடுதுறை - திருநேரிசை #548 மஞ்சனே மணியும் ஆனாய் மரகத திரளும் ஆனாய் நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே துஞ்சும்போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று அஞ்சல் என்று அருளவேண்டும் ஆவடுதுறை உளானே மேல் #549 நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் ஊன் உகந்து ஓம்பும் நாயேன் உள்ளுற ஐவர் நின்றார் தான் உகந்தே உகந்த தகவு இலா தொண்டனேன் நான் ஆன் உகந்து ஏறுவானே ஆவடுதுறை உளானே மேல் #550 கட்டமே வினைகள் ஆன காத்து இவை நோக்கி ஆளாய் ஒட்டவே ஒட்டி நாளும் உன்னை உள் வைக்கமாட்டேன் பட்ட வான் தலை கை ஏந்தி பலி திரிந்து ஊர்கள்-தோறும் அட்ட மா உருவினானே ஆவடுதுறை உளானே மேல் #551 பெருமை நன்று உடையது இல்லை என்று நான் பேசமாட்டேன் ஒருமையால் உன்னை உள்கி உகந்து வான் ஏறமாட்டேன் கருமை இட்டு ஆய ஊனை கட்டமே கழிக்கின்றேன் நான் அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே மேல் #552 துட்டனாய் வினை அது என்னும் கழித்தலை அகப்பட்டேனை கட்டனா ஐவர் வந்து கலக்காமை காத்து கொள்வாய் மட்டு அவிழ் கோதை-தன்னை மகிழ்ந்து ஒருபாகம் வைத்து அட்ட மா நாகம் ஆட்டும் ஆவடுதுறை உளானே மேல் #553 கார் அழல் கண்டம் மேயாய் கடி மதில் புரங்கள் மூன்றும் ஓர் அழல் அம்பினாலே உகைத்து தீ எரிய மூட்டி நீர் அழல் சடை உளானே நினைப்பவர் வினைகள் தீர்ப்பாய் ஆர் அழல் ஏந்தி ஆடும் ஆவடுதுறை உளானே மேல் #554 செறிவு இலேன் சிந்தையுள்ளே சிவனடி தெரியமாட்டேன் குறி இலேன் குணம் ஒன்று இல்லேன் கூறுமா கூறமாட்டேன் நெறி படு மதி ஒன்று இல்லேன் நினையுமா நினையமாட்டேன் அறிவு இலேன் அயர்த்துப்போனேன் ஆவடுதுறை உளானே மேல் #555 கோலம் மா மங்கை-தன்னை கொண்டு ஒரு கோலம் ஆய சீலமே அறியமாட்டேன் செய் வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே மேல் #556 நெடியவன் மலரினானும் நேர்ந்து இருபாலும் நேட கடியது ஓர் உருவம் ஆகி கனல் எரி ஆகி நின்ற வடிவு இன வண்ணம் என்றே என்று தாம் பேசல் ஆகார் அடியனேன் நெஞ்சின் உள்ளார் ஆவடுதுறை உளாரே மேல் #557 மலைக்கு நேராய் அரக்கன் சென்று உற மங்கை அஞ்ச தலைக்கு மேல் கைகளாலே தாங்கினான் வலியை மாள உலப்பு இலா விரலால் ஊன்றி ஒறுத்து அவற்கு அருள்கள்செய்து அலைத்த வான் கங்கை சூடும் ஆவடுதுறை உளானே மேல் 58. திருப்பருப்பதம் - திருநேரிசை #558 கன்றினார் புரங்கள் மூன்றும் கனல் எரி ஆக சீறி நின்றது ஓர் உருவம்-தன்னால் நீர்மையும் நிறையும் கொண்டு ஒன்றி ஆங்கு உமையும் தாமும் ஊர் பலி தேர்ந்து பின்னும் பன்றி பின் வேடர் ஆகி பருப்பதம் நோக்கினாரே மேல் #559 கற்ற மா மறைகள் பாடி கடை-தொறும் பலியும் தேர்வார் வற்றல் ஓர் தலை கை ஏந்தி வானவர் வணங்கி வாழ்த்த முற்ற ஓர் சடையில் நீரை ஏற்ற முக்கண்ணர் தம்மை பற்றினார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே மேல் #560 கரவு இலா மனத்தர் ஆகி கைதொழுவார்கட்கு என்றும் இரவில் நின்று எரி அது ஆடி இன்னருள் செய்யும் எந்தை மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி பரவுவார்க்கு அருள்கள்செய்து பருப்பதம் நோக்கினாரே மேல் #561 கட்டிட்ட தலை கை ஏந்தி கனல் எரி ஆடி சீறி சுட்டிட்ட நீறு பூசி சுடு பிண காடர் ஆகி விட்டிட்ட வேட்கையார்க்கு வேறு இருந்து அருள்கள்செய்து பட்டு இட்ட உடையர் ஆகி பருப்பதம் நோக்கினாரே மேல் #562 கையராய் கபாலம் ஏந்தி காமனை கண்ணால் காய்ந்து மெய்யராய் மேனி-தன் மேல் விளங்கு வெண் நீறு பூசி உய்வராய் உள்குவார்கட்கு உவகைகள் பலவும் செய்து பை அரா அரையில் ஆர்த்து பருப்பதம் நோக்கினாரே மேல் #563 வேடராய் வெய்யர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து ஓடராய் உலகம் எல்லாம் உழிதர்வர் உமையும் தாமும் காடராய் கனல் கை ஏந்தி கடியது ஓர் விடை மேற்கொண்டு பாடராய் பூதம் சூழ பருப்பதம் நோக்கினாரே மேல் #564 மேகம் போல் மிடற்றர் ஆகி வேழத்தின் உரிவை போர்த்து ஏகம்பம் மேவினார்தாம் இமையவர் பரவி ஏத்த காகம்பர் கழறர் ஆகி கடியது ஓர் விடை ஒன்று ஏறி பாகம் பெண் உருவம் ஆனார் பருப்பதம் நோக்கினாரே மேல் #565 பேர் இடர் பிணிகள் தீர்க்கும் பிஞ்ஞகன் எந்தை பெம்மான் கார் உடை கண்டர் ஆகி கபாலம் ஓர் கையில் ஏந்தி சீர் உடை செம் கண் வெள் ஏறு ஏறிய செல்வர் நல்ல பாரிடம் பாணிசெய்ய பருப்பதம் நோக்கினாரே மேல் #566 அம் கண் மால் உடையர் ஆய ஐவரால் ஆட்டுணாதே உங்கள் மால் தீர வேண்டில் உள்ளத்தால் உள்கி ஏத்தும் செங்கண்மால் பரவி ஏத்தி சிவன் என நின்ற செல்வர் பைம் கண் வெள் ஏறு அது ஏறி பருப்பதம் நோக்கினாரே மேல் #567 அடல் விடை ஊர்தி ஆகி அரக்கன் தோள் அடர ஊன்றி கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் சுடர்விடு மேனி-தன் மேல் சுண்ண வெண் நீறு பூசி படர் சடை மதியம் சேர்த்தி பருப்பதம் நோக்கினாரே மேல் 59. திருஅவளிவணல்லூர் - திருநேரிசை #568 தோற்றினான் எயிறு கவ்வி தொழில் உடை அரக்கன்-தன்னை தேற்றுவான் செற்று சொல்ல சிக்கென தவிரும் என்று வீற்றினை உடையன் ஆகி வெடுவெடுத்து எடுத்தவன்-தன் ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவணல்லூராரே மேல் #569 வெம்பினார் அரக்கர் எல்லாம் மிக சழக்கு ஆயிற்று என்று செம்பினால் எடுத்த கோயில் சிக்கென சிதையும் என்ன நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி அம்பினால் அழிய எய்தார் அவளிவணல்லூராரே மேல் #570 கீழ்ப்படக்கருதல் ஆமோ கீர்த்திமை உள்ளதாகில் தோள் பெரு வலியினாலே தொலைப்பன் யான் மலையை என்று வேள் பட வைத்த ஆறே விதிர்விதிர்த்து அரக்கன் வீழ்ந்து ஆட்பட கருதி புக்கார் அவளிவணல்லூராரே மேல் #571 நிலை வலம் வல்லனல்லன் நேர்மையை நினையமாட்டான் சிலை வலம் கொண்ட செல்வன் சீரிய கயிலை-தன்னை தலை வலம் கருதி புக்கு தாங்கினான்-தன்னை அன்று அலைகுலை ஆக்குவித்தார் அவளிவணல்லூராரே மேல் #572 தவ்வலி ஒன்றன் ஆகி தனது ஒரு பெருமையாலே மெய் வலி உடையன் என்று மிக பெரும் தேரை ஊர்ந்து செ வலி கூர் விழியான் சிரம் பத்தால் எடுக்குற்றானை அ வலி தீர்க்க வல்லார் அவளிவணல்லூராரே மேல் #573 நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் வன்மையே கருதி சென்று வலி-தனை செலுத்தலுற்று கன்மையால் மலையை ஓடி கருதி தான் எடுத்து வாயால் அம்மையோ என்ன வைத்தார் அவளிவணல்லூராரே மேல் #574 கதம் பட போதுவார்கள் போதும் அ கருத்தினாலே சிதம்பட நின்ற நீர்கள் சிக்கென தவிரும் என்று மதம் படு மனத்தன் ஆகி வன்மையான் மிக்கு நோக்க அதம் பழத்து உருவு செய்தார் அவளிவணல்லூராரே மேல் #575 நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை ஓடு மிக்கு என்று சொல்லி ஊன்றினான் உகிரினாலே பாடு மிக்கு உய்வன் என்று பணிய நல் திறங்கள் காட்டி ஆடு மிக்கு அரவம் பூண்டார் அவளிவணல்லூராரே மேல் #576 ஏனமாய் கிடந்த மாலும் எழில் தரு முளரியானும் ஞானம்தான் உடையர் ஆகி நன்மையை அறியமாட்டார் சேனம்தான் இலா அரக்கன் செழு வரை எடுக்க ஊன்றி ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவணல்லூராரே மேல் #577 ஊக்கினான் மலையை ஓடி உணர்வு இலா அரக்கன்-தன்னை தாக்கினான் விரலினாலே தலை பத்தும் தகர ஊன்றி நோக்கினார் அஞ்ச தன்னை நோன்பு இற ஊன்று சொல்லி ஆக்கினார் அமுதம் ஆக அவளிவணல்லூராரே மேல் 60. திருப்பெருவேளூர் - திருநேரிசை #578 மறை அணி நாவினானை மறப்பிலார் மனத்து உளானை கறை அணி கண்டன்-தன்னை கனல் எரி ஆடினானை பிறை அணி சடையினானை பெருவேளூர் பேணினானை நறை அணி மலர்கள் தூவி நாள்-தொறும் வணங்குவேனே மேல் #579 நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற பாதன் ஆம் பரமயோகி பலபல திறத்தினாலும் பேதனாய் தோன்றினானை பெருவேளூர் பேணினானை ஓத நா உடையன் ஆகி உரைக்கும் ஆறு உரைக்கின்றேனே மேல் #580 குறவி தோள் மணந்த செல்வ குமரவேள் தாதை என்று நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை பிறவியை மாற்றுவானை பெருவேளூர் பேணினானை உறவினால் வல்லன் ஆகி உணரும் ஆறு உணர்த்துவேனே மேல் #581 மை ஞவில் கண்டன்-தன்னை வலங்கையில் மழு ஒன்று ஏந்தி கை ஞவில் மானினோடும் கனல் எரி ஆடினானை பிஞ்ஞகன் தன்னை அம் தண் பெருவேளூர் பேணினானை பொய் ஞெக நினையமாட்டா பொறி இலா அறிவினேனே மேல் #582 ஓடை சேர் நெற்றி யானை உரிவையை மூடினானை வீடு அதே காட்டுவானை வேதம் நான்கு ஆயினானை பேடை சேர் புறவு நீங்கா பெருவேளூர் பேணினானை கூட நான் வல்ல மாற்றம் குறுகும் ஆறு அறிகிலேனே மேல் #583 கச்சை சேர் நாகத்தானை கடல் விடம் கண்டத்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கனல் எரி ஆடுவானை பிச்சை சேர்ந்து உழல்வினானை பெருவேளூர் பேணினானை இச்சை சேர்ந்து அமர நானும் இறைஞ்சும் ஆறு இறைஞ்சுவேனே மேல் #584 சித்தராய் வந்து தன்னை திருவடி வணங்குவார்கள் முத்தனை மூர்த்தி ஆய முதல்வனை முழுதும் ஆய பித்தனை பிறரும் ஏத்த பெருவேளூர் பேணினானை மெத்த நேயவனை நாளும் விரும்பும் ஆறு அறிகிலேனே மேல் #585 முண்டமே தாங்கினானை முற்றிய ஞானத்தானை வண்டு உலாம் கொன்றை மாலை வளர் மதி கண்ணியானை பிண்டமே ஆயினானை பெருவேளூர் பேணினானை அண்டம் ஆம் ஆதியானை அறியும் ஆறு அறிகிலேனே மேல் #586 விரிவு இலா அறிவினார்கள் வேறு ஒரு சமயம் செய்து எரிவினால் சொன்னாரேனும் எம்பிராற்கு ஏற்றது ஆகும் பரிவினால் பெரியோர் ஏத்தும் பெருவேளூர் பற்றினானை மருவி நான் வாழ்த்தி உய்யும் வகை அது நினைக்கின்றேனே மேல் #587 பொரு கடல் இலங்கை_மன்னன் உடல் கெட பொருத்தி நல்ல கருகிய கண்டத்தானை கதிர் இளம் கொழுந்து சூடும் பெருகிய சடையினானை பெருவேளூர் பேணினானை உருகிய அடியர் ஏத்தும் உள்ளத்தால் உள்குவேனே மேல் 61. திருவிராமேச்சுரம் - திருநேரிசை #588 பாசமும் கழிக்ககில்லா அரக்கரை படுத்து தக்க வாசம் மிக்க அலர்கள் கொண்டு மதியினால் மால் செய் கோயில் நேசம் மிக்கு அன்பினாலே நினை-மின் நீர் நின்று நாளும் தேசம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரம்மே மேல் #589 முற்றின நாள்கள் என்று முடிப்பதே காரணமாய் உற்ற வன் போர்களாலே உணர்வு இலா அரக்கர்-தம்மை செற்ற மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை பற்றி நீ பரவு நெஞ்சே படர் சடை ஈசன்-பாலே மேல் #590 கடலிடை மலைகள்-தம்மால் அடைத்து மால் கருமம் முற்றி திடலிடை செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை தொடலிடை வைத்து நாவில் சுழல்கின்றேன் தூய்மை இன்றி உடலிடை-நின்றும் பேரா ஐவர் ஆட்டுண்டு நானே மேல் #591 குன்று போல் தோள் உடைய குணம் இலா அரக்கர்-தம்மை கொன்று போர் ஆழி அ மால் வேட்கையால் செய்த கோயில் நன்று போல் நெஞ்சமே நீ நன்மையை அறிதியாயில் சென்று நீ தொழுது உய்கண்டாய் திரு இராமேச்சுரம்மே மேல் #592 வீரம் மிக்கு எயிறு காட்டி விண்ணுற நீண்டு அரக்கன் கூரம் மிக்கவனை சென்று கொன்று உடன் கடல் படுத்து தீரம் மிக்கான் இருந்த திரு இராமேச்சுரத்தை கோரம் மிக்கு ஆர் தவத்தால் கூடுவார் குறிப்பு உளாரே மேல் #593 ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி போர் வலம் செய்து மிக்கு பொருதவர் தம்மை வீட்டி தேர் வலம் செற்ற மால் செய் திரு இராமேச்சுரத்தை சேர் மட நெஞ்சமே நீ செம் சடை எந்தை-பாலே மேல் #594 வாக்கினால் இன்பு உரைத்து வாழ்கிலார்-தம்மை எல்லாம் போக்கினால் புடைத்து அவர்கள் உயிர்-தனை உண்டு மால்தான் தேக்குநீர் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை நோக்கினால் வணங்குவார்க்கு நோய் வினை நுணுகும் அன்றே மேல் #595 பலவும் நாள் தீமைசெய்து பார்-தன் மேல் குழுமி வந்து கொலை விலார் கொடியர் ஆய அரக்கரை கொன்று வீழ்த்த சிலையினான் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை தலையினால் வணங்குவார்கள் தாழ்வர் ஆம் தவம் அது ஆமே மேல் #596 கோடி மா தவங்கள் செய்து குன்றினார்-தம்மை எல்லாம் வீடவே சக்கரத்தால் எறிந்து பின் அன்புகொண்டு தேடி மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை நாடி வாழ் நெஞ்சமே நீ நன்நெறி ஆகும் அன்றே மேல் #597 வன்கண்ணர் வாள் அரக்கர் வாழ்வினை ஒன்று அறியார் புன்கண்ணர் ஆகி நின்று போர்கள் செய்தாரை மாட்டி செங்கண்மால் செய்த கோயில் திரு இராமேச்சுரத்தை தம் கணால் எய்த வல்லார் தாழ்வர் ஆம் தலைவன்-பாலே மேல் #598 வரைகள் ஒத்தே உயர்ந்த மணி முடி அரக்கர்_கோனை விரைய முற்று அற ஒடுக்கி மீண்டு மால் செய்த கோயில் திரைகள் முத்தால் வணங்கும் திரு இராமேச்சுரத்தை உரைகள் பத்தால் உரைப்பார் உள்குவார் அன்பினாலே மேல் 62. திருவாலவாய் - திருநேரிசை #599 வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றுஎன்று ஓதியே மலர்கள் தூவி ஒடுங்கி நின் கழல்கள் காண பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படர் சடை மதியம் சூடும் ஆதியே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #600 நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி என் பொனே ஈசா என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் பின்பினே திரிந்து நாயேன் பேர்த்து இனி பிறவா வண்ணம் அன்பனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #601 ஒரு மருந்து ஆகி உள்ளாய் உம்பரோடு உலகுக்கு எல்லாம் பெரு மருந்து ஆகி நின்றாய் பேர் அமுதின் சுவையாய் கரு மருந்து ஆகி உள்ளாய் ஆளும் வல்வினைகள் தீர்க்கும் அரு மருந்து ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #602 செய்ய நின் கமல பாதம் சேருமா தேவர்தேவே மை அணி கண்டத்தானே மான் மறி மழு ஒன்று ஏந்தும் சைவனே சால ஞானம் கற்று அறிவு இலாத நாயேன் ஐயனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #603 வெண் தலை கையில் ஏந்தி மிகவும் ஊர் பலி கொண்டு என்றும் உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர அண்டனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #604 எஞ்சல் இல் புகல் இது என்றுஎன்று ஏத்தி நான் ஏசற்று என்றும் வஞ்சகம் ஒன்றும் இன்றி மலர் அடி காணும் வண்ணம் நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு அஞ்சல் என்று ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #605 வழு இலாது உன்னை வாழ்த்தி வழிபடும் தொண்டனேன் உன் செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட குழகனே கோல வில்லீ கூத்தனே மாத்தாய் உள்ள அழகனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #606 நறு மலர் நீரும் கொண்டு நாள்-தொறும் ஏத்தி வாழ்த்தி செறிவன சித்தம் வைத்து திருவடி சேரும் வண்ணம் மறி கடல்_வண்ணன் பாகா மா மறை அங்கம் ஆறும் அறிவனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #607 நலம் திகழ் வாயில் நூலால் சருகு இலை பந்தர் செய்த சிலந்தியை அரசு அது ஆள அருளினாய் என்று திண்ணம் கலந்து உடன் வந்து நின் தாள் கருதி நான் காண்பது ஆக அலந்தனன் ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் #608 பொடி கொடு பூசி பொல்லா குரம்பையில் புந்தி ஒன்றி பிடித்து நின் தாள்கள் என்றும் பிதற்றி நான் இருக்கமாட்டேன் எடுப்பன் என்று இலங்கை கோன் வந்து எடுத்தலும் இருபது தோள் அடர்த்தனே ஆலவாயில் அப்பனே அருள்செயாயே மேல் 63. திருவண்ணாமலை - திருநேரிசை #609 ஓதி மா மலர்கள் தூவி உமையவள்_பங்கா மிக்க சோதியே துளங்கும் எண் தோள் சுடர் மழுப்படையினானே ஆதியே அமரர்_கோவே அணி அணாமலை உளானே நீதியால் நின்னை அல்லால் நினையுமா நினைவு இலேனே மேல் #610 பண்-தனை வென்ற இன்சொல் பாவை ஓர்பங்க நீல கண்டனே கார் கொள் கொன்றை கடவுளே கமல பாதா அண்டனே அமரர்_கோவே அணி அணாமலை உளானே தொண்டனேன் உன்னை அல்லால் சொல்லுமா சொல் இலேனே மேல் #611 உருவமும் உயிரும் ஆகி ஓதிய உலகுக்கு எல்லாம் பெரு வினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க அருவி பொன் சொரியும் அண்ணாமலை உளாய் அண்டர்_கோவே மருவி நின் பாதம் அல்லால் மற்று ஒரு மாடு இலேனே மேல் #612 பைம்பொனே பவள குன்றே பரமனே பால் வெண் நீற்றாய் செம்பொனே மலர் செய் பாதா சீர் தரு மணியே மிக்க அம் பொனே கொழித்து வீழும் அணி அணாமலை உளானே என் பொனே உன்னை அல்லால் ஏதும் நான் நினைவு இலேனே மேல் #613 பிறை அணி முடியினானே பிஞ்ஞகா பெண் ஓர்பாகா மறைவலா இறைவா வண்டு ஆர் கொன்றையாய் வாமதேவா அறை கழல் அமரர் ஏத்தும் அணி அணாமலை உளானே இறைவனே உன்னை அல்லால் யாதும் நான் நினைவு இலேனே மேல் #614 புரி சடை முடியின் மேல் ஓர் பொரு புனல் கங்கை வைத்து கரி உரி போர்வை ஆக கருதிய காலகாலா அரி குலம் மலிந்த அண்ணாமலை உளாய் அலரின் மிக்க வரி மிகு வண்டு பண்செய் பாதம் நான் மறப்பு இலேனே மேல் #615 இரவியும் மதியும் விண்ணும் இரு நிலம் புனலும் காற்றும் உரகம் ஆர் பவனம் எட்டும் திசை ஒளி உருவம் ஆனாய் அரவு உமிழ் மணி கொள் சோதி அணி அணாமலை உளானே பரவும் நின் பாதம் அல்லால் பரம நான் பற்று இலேனே மேல் #616 பார்த்தனுக்கு அன்று நல்கி பாசுபதத்தை ஈந்தாய் நீர் ததும்பு உலாவு கங்கை நெடு முடி நிலாவ வைத்தாய் ஆர்த்து வந்து ஈண்டு கொண்டல் அணி அணாமலை உளானே தீர்த்தனே நின்தன் பாத திறம் அலால் திறம் இலேனே மேல் #617 பாலும் நெய் முதலா மிக்க பசுவில் ஐந்து ஆடுவானே மாலும் நான்முகனும் கூடி காண்கிலா வகையுள் நின்றாய் ஆலும் நீர் கொண்டல் பூகம் அணி அணாமலை உளானே வால் உடை விடையாய் உன்தன் மலர் அடி மறப்பு இலேனே மேல் #618 இரக்கம் ஒன்று யாதும் இல்லா காலனை கடிந்த எம்மான் உரத்தினால் வரையை ஊக்க ஒரு விரல் நுதியினாலே அரக்கனை நெரித்த அண்ணாமலை உளாய் அமரர் ஏறே சிரத்தினால் வணங்கி ஏத்தி திருவடி மறப்பு இலேனே மேல் 64. திருவீழிமிழலை - திருநேரிசை #619 பூதத்தின் படையர் பாம்பின் பூணினர் பூண நூலர் சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் கீதத்தின் பொலிந்த ஓசை கேள்வியர் வேள்வியாளர் வேதத்தின் பொருளர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #620 காலையின் கதிர்செய் மேனி கங்குலின் கறுத்த கண்டர் மாலையின் மதியம் சேர்ந்த மகுடத்தர் மதுவும் பாலும் ஆலையில் பாகும் போல அண்ணித்திட்டு அடியார்க்கு என்றும் வேலையின் அமுதர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #621 வரும் தினம் நெருநல் இன்றாய் வழங்கின நாளர் ஆல் கீழ் இருந்து நன் பொருள்கள் நால்வர்க்கு இயம்பினர் இருவரோடும் பொருந்தினர் பிரிந்து தம்பால் பொய்யர் ஆம் அவர்கட்கு என்றும் விருந்தினர் திருந்து வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #622 நிலை இலா ஊர் மூன்று ஒன்ற நெருப்பு அரி காற்று அம்பு ஆக சிலையும் நாண் அதுவும் நாகம் கொண்டவர் தேவர்-தங்கள் தலையினால் தரித்த என்பும் தலை மயிர் வடமும் பூண்ட விலை இலா வேடர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #623 மறையிடை பொருளர் மொட்டின் மலர் வழி வாச தேனர் கறவிடை பாலின் நெய்யர் கரும்பினில் கட்டியாளர் பிறையிடை பாம்பு கொன்றை பிணையல் சேர் சடையுள் நீரர் விறகிடை தீயர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #624 எண் அகத்து இல்லைஅல்லர் உளர்அல்லர் இமவான் பெற்ற பெண் அகத்தர் ஐயர் காற்றில் பெரு வலி இருவர் ஆகி மண்ணகத்து ஐவர் நீரில் நால்வர் தீ அதனில் மூவர் விண்ணகத்து ஒருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #625 சந்து அணி கொங்கையாள் ஓர்பங்கினர் சாமவேதர் எந்தையும் எந்தை தந்தை தந்தையும் ஆய ஈசர் அந்தியோடு உதயம் அந்தணாளர் ஆன் நெய்யால் வேட்கும் வெம் தழல் உருவர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #626 நீற்றினை நிறைய பூசி நித்தல் ஆயிரம் பூ கொண்டு ஏற்றுழி ஒரு நாள் ஒன்று குறைய கண் நிறைய இட்ட ஆற்றலுக்கு ஆழி நல்கி அவன் கொணர்ந்து இழிச்சும் கோயில் வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #627 சித்தி செய்பவர்கட்கு எல்லாம் சேர்விடம் சென்று கூட பத்தி செய்பவர்கள் பாவம் பறைப்பவர் இறப்புஇலாளர் முத்து இசை பவள மேனி முதிர் ஒளி நீல_கண்டர் வித்தினில் முளையர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் #628 தருக்கின அரக்கன் தேர் ஊர் சாரதி நிலாது பொருப்பினை எடுத்த தோளும் பொன் முடி பத்தும் புண்ணாய் நெரிப்புண்டு அங்கு அலறி மீண்டு நினைந்து அடி பரவ தம் வாள் விருப்பொடும் கொடுப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே மேல் 65. திருச்சாய்க்காடு - திருநேரிசை #629 தோடு உலாம் மலர்கள் தூவி தொழுது எழு மார்க்கண்டேயன் வீடும் நாள் அணுகிற்று என்று மெய் கொள்வான் வந்த காலன் பாடு தான் செல்லும் அஞ்சி பாதமே சரணம் என்ன சாடினார் காலன் மாள சாய்க்காடு மேவினாரே மேல் #630 வடம் கெழு மலை மத்து ஆக வானவர் அசுரரோடு கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி அடைந்து நும் சரணம் என்ன அருள் பெரிது உடையர் ஆகி தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே மேல் #631 அரண் இலா வெளிய நாவல் அரு நிழல் ஆக ஈசன் வரணியல் ஆகி தன் வாய் நூலினால் பந்தர்செய்ய முரண் இலா சிலந்தி-தன்னை முடி உடை மன்னன் ஆக்கி தரணிதான் ஆள வைத்தார் சாய்க்காடு மேவினாரே மேல் #632 அரும் பெரும் சிலை கை வேடனாய் விறல் பார்த்தற்கு அன்று உரம் பெரிது உடைமை காட்டி ஒள் அமர் செய்து மீண்டே வரம் பெரிது உடையன் ஆக்கி வாள் அமர் முகத்தில் மன்னும் சரம் பொலி தூணி ஈந்தார் சாய்க்காடு மேவினாரே மேல் #633 இந்திரன் பிரமன் அங்கி எண் வகை வசுக்களோடு மந்திர மறை அது ஓதி வானவர் வணங்கி வாழ்த்த தந்திரம் அறியா தக்கன் வேள்வியை தகர்த்த ஞான்று சந்திரற்கு அருள்செய்தாரும் சாய்க்காடு மேவினாரே மேல் #634 ஆ மலி பாலும் நெய்யும் ஆட்டி அர்ச்சனைகள் செய்து பூ மலி கொன்றை சூட்ட பொறாத தன் தாதை தாளை கூர் மழு ஒன்றால் ஓச்ச குளிர் சடை கொன்றை மாலை தாம நல் சண்டிக்கு ஈந்தார் சாய்க்காடு மேவினாரே மேல் #635 மை அறு மனத்தன் ஆய பகீரதன் வரங்கள் வேண்ட ஐயம் இல் அமரர் ஏத்த ஆயிரம் முகம் அது ஆகி வையகம் நெளிய பாய்வான் வந்து இழி கங்கை என்னும் தையலை சடையில் ஏற்றார் சாய்க்காடு மேவினாரே மேல் #636 குவ பெரும் தட கை வேடன் கொடும் சிலை இறைச்சி பாரம் துவர் பெரும் செருப்பால் நீக்கி தூய வாய் கலசம் ஆட்ட உவ பெரும் குருதி சோர ஒரு கண்ணை இடந்து அங்கு அப்ப தவ பெரும் தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே மேல் #637 நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு மிக்க பூசனைகள் செய்வான் மென் மலர் ஒன்று காணாது ஒக்கும் என் மலர் கண் என்று அங்கு ஒரு கண்ணை இடந்தும் அப்ப சக்கரம் கொடுப்பர் போலும் சாய்க்காடு மேவினாரே மேல் #638 புயங்கள் ஐ_ஞான்கும் பத்தும் ஆய கொண்டு அரக்கன் ஓடி சிவன் திரு மலையை பேர்க்க திரு மலர் குழலி அஞ்ச வியன் பெற எய்தி வீழ விரல் சிறிது ஊன்றி மீண்டே சயம் பெற நாமம் ஈந்தார் சாய்க்காடு மேவினாரே மேல் 66. திருநாகேச்சரம் - திருநேரிசை #639 கச்சை சேர் அரவர் போலும் கறை அணி மிடற்றர் போலும் பிச்சை கொண்டு உண்பர் போலும் பேரருளாளர் போலும் இச்சையால் மலர்கள் தூவி இரவொடு பகலும் தம்மை நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #640 வேடுறு வேடர் ஆகி விசயனோடு எய்தார் போலும் காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல நாடு அறி புகழர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #641 கல் துணை வில் அது ஆக கடி அரண் செற்றார் போலும் பொன் துணை பாதர் போலும் புலி அதள் உடையார் போலும் சொல் துணை மாலை கொண்டு தொழுது எழுவார்கட்கு எல்லாம் நல் துணை ஆவர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #642 கொம்பு அனாள் பாகர் போலும் கொடி உடை விடையர் போலும் செம்பொன் ஆர் உருவர் போலும் திகழ் திருநீற்றர் போலும் எம்பிரான் எம்மை ஆளும் இறைவனே என்று தம்மை நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #643 கட கரி உரியர் போலும் கனல் மழுவாளர் போலும் பட அரவு அரையர் போலும் பாரிடம் பலவும் கூடி குடம் உடை முழவம் ஆர்ப்ப கூளிகள் பாட நாளும் நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #644 பிறையுறு சடையர் போலும் பெண் ஒருபாகர் போலும் மறையுறு மொழியர் போலும் மால் மறையவன்-தன்னோடு முறைமுறை அமரர் கூடி முடிகளால் வணங்க நின்ற நறவு அமர் கழலர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #645 வஞ்சகர்க்கு அரியர் போலும் மருவினோர்க்கு எளியர் போலும் குஞ்சரத்து உரியர் போலும் கூற்றினை குமைப்பர் போலும் விஞ்சையர் இரிய அன்று வேலை-வாய் வந்து எழுந்த நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #646 போகம் ஆர் மோடி கொங்கை புணர்தரு புனிதர் போலும் வேகம் ஆர் விடையர் போலும் வெண் பொடி ஆடும் மேனி பாகம் மால் உடையர் போலும் பருப்பத வில்லர் போலும் நாகம் நாண் உடையர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #647 கொக்கரை தாளம் வீணை பாணிசெய் குழகர் போலும் அக்கு அரை அணிவர் போலும் ஐந்தலை அரவர் போலும் வக்கரை அமர்வர் போலும் மாதரை மையல் செய்யும் நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே மேல் #648 வின்மையால் புரங்கள் மூன்றும் வெம் தழல் விரித்தார் போலும் தன்மையால் அமரர்-தங்கள் தலைவர்க்கும் தலைவர் போலும் வன்மையால் மலை எடுத்தான் வலியினை தொலைவித்து ஆங்கே நன்மையால் அளிப்பர்-போலும் நாகஈச்சுரவனாரே மேல் 67. திருக்கொண்டீச்சரம் - திருநேரிசை #649 வரைகிலேன் புலன்கள் ஐந்தும் வரைகிலா பிறவி மாய புரையுளே அடங்கி நின்று புறப்படும் வழியும் காணேன் அரையிலே மிளிரும் நாகத்து அண்ணலே அஞ்சல் என்னாய் திரை உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #650 தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நைந்து பேர்வது ஓர் வழியும் காணேன் அண்டனே அண்டவாணா அறிவனே அஞ்சல் என்னாய் தெண் திரை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #651 கால் கொடுத்து எலும்பு மூட்டி கதிர் நரம்பு ஆக்கை ஆர்த்து தோல் உடுத்து உதிரம் அட்டி தொகு மயிர் மேய்ந்த கூரை ஓலெடுத்து உழைஞர் கூடி ஒளிப்பதற்கு அஞ்சுகின்றேன் சேல் உடை பழனம் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #652 கூட்டமாய் ஐவர் வந்து கொடும் தொழில் குணத்தர் ஆகி ஆட்டுவார்க்கு ஆற்றகில்லேன் ஆடு அரவு அசைத்த கோவே காட்டிடை அரங்கம் ஆக ஆடிய கடவுளேயோ சேட்டு இரும் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #653 பொக்கமாய் நின்ற பொல்லா புழு மிடை முடை கொள் ஆக்கை தொக்கு நின்று ஐவர் தொண்ணூற்றறுவரும் துயக்கம் எய்த மிக்கு நின்று இவர்கள் செய்யும் வேதனைக்கு அலந்துபோனேன் செக்கரே திகழும் மேனி திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #654 ஊன் உலாம் முடை கொள் ஆக்கை உடை கலம் ஆவது என்றும் மான் உலாம் மழைக்கணார்-தம் வாழ்க்கையை மெய் என்று எண்ணி நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் தேன் உலாம் பொழில்கள் சூழ்ந்த திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #655 சாண் இரு மருங்கு நீண்ட சழக்கு உடை பதிக்கு நாதர் வாணிகர் ஐவர் தொண்ணூற்றறுவரும் மயக்கம்செய்து பேணிய பதியின்-நின்று பெயரும்போது அறியமாட்டேன் சேண் உயர் மாடம் நீடு திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #656 பொய் மறித்து இயற்றிவைத்து புலால் கமழ் பண்டம் பெய்து பை மறித்து இயற்றி அன்ன பாங்கு இலா குரம்பை நின்று கை மறித்து அனைய ஆவி கழியும்போது அறியமாட்டேன் செந்நெறி செலவு காணேன் திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #657 பாலனாய் கழிந்த நாளும் பனி மலர் கோதைமார்-தம் மேலனாய் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து கோலனாய் கழிந்த நாளும் குறிக்கோள் இலாது கெட்டேன் சேல் உலாம் பழன வேலி திரு கொண்டீச்சரத்து உளானே மேல் #658 விரை தரு கரு மென் கூந்தல் விளங்கு இழை வேல் ஒண்_கண்ணாள் வெருவர இலங்கை_கோமான் விலங்கலை எடுத்த ஞான்று பருவரை அனைய தோளும் முடிகளும் பாறி வீழ திரு விரல் ஊன்றினானே திரு கொண்டீச்சரத்து உளானே மேல் 68. திருவாலங்காடு - திருநேரிசை #659 வெள்ள நீர் சடையர் போலும் விரும்புவார்க்கு எளியர் போலும் உள்ளுளே உருகி நின்று அங்கு உகப்பவர்க்கு அன்பர் போலும் கள்ளமே வினைகள் எல்லாம் கரிசு அறுத்திடுவர் போலும் அள்ளல் அம் பழனை மேய ஆலங்காட்டு அடிகளாரே மேல் #660 செம் தழல் உருவர் போலும் சின விடை உடையர் போலும் வெந்த வெண் நீறு கொண்டு மெய்க்கு அணிந்திடுவர் போலும் மந்தம் ஆம் பொழில் பழனை மல்கிய வள்ளல் போலும் அந்தம் இல் அடிகள் போலும் ஆலங்காட்டு அடிகளாரே மேல் #661 கண்ணினால் காமவேளை கனல் எழ விழிப்பர் போலும் எண்ணிலார் புரங்கள் மூன்றும் எரி உண சிரிப்பர் போலும் பண்ணின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேய அண்ணலார் எம்மை ஆளும் ஆலங்காட்டு அடிகளாரே மேல் #662 காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் தூறு இடு சுடலை-தன்னில் சுண்ண வெண் நீற்றர் போலும் கூறு இடும் உருவர் போலும் குளிர் பொழில் பழனை மேய ஆறு இடு சடையர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே மேல் #663 பார்த்தனோடு அமர் பொருது பத்திமை காண்பர் போலும் கூர்த்த வாய் அம்பு கோத்து குணங்களை அறிவர் போலும் பேர்த்தும் ஓர் ஆவநாழி அம்பொடும் கொடுப்பர் போலும் தீர்த்தம் ஆம் பழனை மேய திரு ஆலங்காடனாரே மேல் #664 வீட்டினார் சுடு வெண் நீறு மெய்க்கு அணிந்திடுவர் போலும் காட்டில் நின்று ஆடல் பேணும் கருத்தினை உடையர் போலும் பாட்டின் ஆர் முழவம் ஓவா பைம் பொழில் பழனை மேயார் ஆட்டினார் அரவம்-தன்னை ஆலங்காட்டு அடிகளாரே மேல் #665 தாள் உடை செங்கமல தடம் கொள் சேவடியர் போலும் நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் கோள் உடை பிறவி தீர்ப்பார் குளிர் பொழில் பழனை மேய ஆள் உடை அண்ணல் போலும் ஆலங்காட்டு அடிகளாரே மேல் #666 கூடினார் உமை-தன்னோடே குறிப்பு உடை வேடம் கொண்டு சூடினார் கங்கையாளை சுவறிடு சடையர் போலும் பாடினார் சாமவேதம் பைம் பொழில் பழனை மேயார் ஆடினார் காளி காண ஆலங்காட்டு அடிகளாரே மேல் #667 வெற்று அரை சமணரோடு விலை உடை கூறை போர்க்கும் ஒற்றரை சொற்கள் கொள்ளார் குணங்களை உகப்பர் போலும் பெற்றமே உகந்து அங்கு ஏறும் பெருமையை உடையர் போலும் அற்றங்கள் அறிவர் போலும் ஆலங்காட்டு அடிகளாரே மேல் #668 மத்தனாய் மலை எடுத்த அரக்கனை கரத்தோடு ஒல்க ஒத்தினார் திரு விரலால் ஊன்றியிட்டு அருள்வர் போலும் பத்தர்-தம் பாவம் தீர்க்கும் பைம் பொழில் பழனை மேய அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே மேல் 69. திருக்கோவலூர் வீரட்டம் - திருநேரிசை #669 செத்தையேன் சிதம்ப நாயேன் செடியனேன் அழுக்கு பாயும் பொத்தையே போற்றி நாளும் புகலிடம் அறியமாட்டேன் எத்தை நான் பற்றி நிற்கேன் இருள் அற நோக்கமாட்டா கொத்தையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே மேல் #670 தலை சுமந்து இரு கை நாற்றி தரணிக்கே பொறை அது ஆகி நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நித்தலும் ஐவர் வேண்டும் விலை கொடுத்து அறுக்கமாட்டேன் வேண்டிற்றே வேண்டி எய்த்தேன் குலை கொள் மாங்கனிகள் சிந்தும் கோவல்வீரட்டனீரே மேல் #671 வழித்தலை படவும் மாட்டேன் வைகலும் தூய்மை செய்து பழித்திலேன் பாசம் அற்று பரம நான் பரவமாட்டேன் இழித்திலேன் பிறவி-தன்னை என் நினைந்து இருக்கமாட்டேன் கொழித்து வந்து அலைக்கும் தெண் நீர் கோவல்வீரட்டனீரே மேல் #672 சாற்றுவர் ஐவர் வந்து சந்திக்க குடிமை வேண்டி காற்றுவர் கனல பேசி கண் செவி மூக்கு வாயுள் ஆற்றுவர் அலந்துபோனேன் ஆதியை அறிவு ஒன்று இன்றி கூற்றுவர் வாயில் பட்டேன் கோவல்வீரட்டனீரே மேல் #673 தடுத்திலேன் ஐவர்-தம்மை தத்துவத்து உயர்வு நீர்மை படுத்திலேன் பரப்பு நோக்கி பல் மலர் பாதம் முற்ற அடுத்திலேன் சிந்தை ஆர ஆர்வலித்து அன்பு திண்ணம் கொடுத்திலேன் கொடியவா நான் கோவல்வீரட்டனீரே மேல் #674 மா செய்த குரம்பை-தன்னை மண்ணிடை மயக்கம் எய்தும் நா செய்து நாலும் ஐந்தும் நல்லன வாய்தல் வைத்து காச்செய்த காயம்-தன்னுள் நித்தலும் ஐவர் வந்து கோ செய்து குமைக்க ஆற்றேன் கோவல்வீரட்டனீரே மேல் #675 படைகள் போல் வினைகள் வந்து பற்றி என் பக்கல் நின்றும் விடகிலா ஆதலாலே விகிர்தனை விரும்பி ஏத்தும் இடை இலேன் என் செய்கேன் நான் இரப்பவர்-தங்கட்கு என்றும் கொடை இலேன் கொள்வதே நான் கோவல்வீரட்டனீரே மேல் #676 பிச்சு இலேன் பிறவி-தன்னை பேதையேன் பிணக்கம் என்னும் துச்சுளே அழுந்தி வீழ்ந்து துயரமே இடும்பை-தன்னுள் அச்சனாய் ஆதிமூர்த்திக்கு அன்பனாய் வாழமாட்டா கொச்சையேன் செய்வது என்னே கோவல்வீரட்டனீரே மேல் #677 நிணத்திடை யாக்கை பேணி நியமம் செய்து இருக்கமாட்டேன் மனத்திடை ஆட்டம் பேசி மக்களே சுற்றம் என்னும் கணத்திடை ஆட்டப்பட்டு காதலால் உன்னை பேணும் குணத்திடை வாழமாட்டேன் கோவல்வீரட்டனீரே மேல் #678 விரி கடல் இலங்கை_கோனை வியன் கயிலாயத்தின் கீழ் இருபது தோளும் பத்து சிரங்களும் நெரிய ஊன்றி பரவிய பாடல் கேட்டு படை கொடுத்து அருளிச்செய்தார் குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல்வீரட்டனாரே மேல் 70. திருநனிபள்ளி - திருநேரிசை #679 முன் துணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன்-தன்னை சொல் துணை ஆயினானை சோதியை ஆதரித்து உற்று உணர்ந்து உருகி ஊறி உள் கசிவு உடையவர்க்கு நல் துணை ஆவர் போலும் நனிபள்ளி அடிகளாரே மேல் #680 புலர்ந்த-கால் பூவும் நீரும் கொண்டு அடி போற்றமாட்டா வலம்செய்து வாயின் நூலால் வட்டணை பந்தர்செய்த சிலந்தியை அரையன் ஆக்கி சீர்மைகள் அருள வல்லார் நலம் திகழ் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே மேல் #681 எண்பதும் பத்தும் ஆறும் என் உளே இருந்து மன்னி கள் பழக்கு ஒன்றும் இன்றி கலக்க நான் அலக்கழிந்தேன் செண்பகம் திகழும் புன்னை செழும் திரள் குரவம் வேங்கை நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே மேல் #682 பண்ணின் ஆர் பாடல் ஆகி பழத்தினில் இரதம் ஆகி கண்ணின் ஆர் பார்வை ஆகி கருத்தொடு கற்பம் ஆகி எண்ணினார் எண்ணம் ஆகி ஏழ்உலகு அனைத்தும் ஆகி நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே மேல் #683 துஞ்சு இருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்து இராதே அஞ்சுஎழுத்து ஓதில் நாளும் அரன் அடிக்கு அன்பு அது ஆகும் வஞ்சனை பால் சோறு ஆக்கி வழக்கு இலா அமணர் தந்த நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே மேல் #684 செம்மலர் கமலத்தோனும் திரு முடி காணமாட்டான் அம் மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான் நின்மலன் என்று அங்கு ஏத்தும் நினைப்பினை அருளி நாளும் நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே மேல் #685 அரவத்தால் வரையை சுற்றி அமரரோடு அசுரர் கூடி அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் விரவி தம் அடியர் ஆகி வீடு இலா தொண்டர்-தம்மை நரகத்தில் வீழ ஒட்டார் நனிபள்ளி அடிகளாரே மேல் #686 மண்ணுளே திரியும்போது வருவன பலவும் குற்றம் புண்ணுளே புரைபுரையன் புழு பொதி பொள்ளல் ஆக்கை மேல் #687 பத்தும் ஓர் இரட்டி தோளான் பாரித்து மலை எடுக்க பத்தும் ஓர் இரட்டி தோள்கள் படர் உடம்பு அடர ஊன்றி பத்து வாய் கீதம் பாட பரிந்து அவற்கு அருள் கொடுத்தார் பத்தர்தாம் பரவி ஏத்தும் நனிபள்ளி பரமனாரே மேல் 71. திருநாகைக்காரோணம் - திருநேரிசை #688 மனைவி தாய் தந்தை மக்கள் மற்று உள சுற்றம் என்னும் வினையுளே விழுந்து அழுந்தி வேதனைக்கு இடம் ஆகாதே கனையும் மா கடல் சூழ் நாகை மன்னு காரோணத்தானை நினையுமா வல்லீராகில் உய்யல் ஆம் நெஞ்சினீரே மேல் #689 வையனை வையம் உண்ட மால் அங்கம் தோள் மேல் கொண்ட செய்யனை செய்ய போதில் திசைமுகன் சிரம் ஒன்று ஏந்தும் கையனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட ஐயனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே மேல் #690 நிருத்தனை நிமலன்-தன்னை நீள் நிலம் விண்ணின் மிக்க விருத்தனை வேதவித்தை விளைபொருள் மூலம் ஆன கருத்தனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட ஒருத்தனை உணர்தலால் நாம் உய்ந்தவா நெஞ்சினீரே மேல் #691 மண்-தனை இரந்து கொண்ட மாயனோடு அசுரர் வானோர் தெண் திரை கடைய வந்த தீ விடம்-தன்னை உண்ட கண்டனை கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட அண்டனை நினைந்த நெஞ்சே அம்ம நாம் உய்ந்த ஆறே மேல் #692 நிறை புனல் அணிந்த சென்னி நீள் நிலா அரவம் சூடி மறை ஒலி பாடி ஆடல் மயானத்து மகிழ்ந்த மைந்தன் கறை மலி கடல் சூழ் நாகைக்காரோணம் கோயில்கொண்ட இறைவனை நாளும் ஏத்த இடும்பை போய் இன்பம் ஆமே மேல் #693 வெம் பனை கரும் கை யானை வெருவ அன்று உரிவை போர்த்த கம்பனை காலல் காய்ந்த காலனை ஞாலம் ஏத்தும் உம்பனை உம்பர்_கோனை நாகைக்காரோணம் மேய செம்பொனை நினைந்த நெஞ்சே திண்ணம் நாம் உய்ந்த ஆறே மேல் #694 வெம் கடும் கானத்து ஏழை-தன்னொடும் வேடனாய் சென்று அங்கு அமர் மலைந்து பார்த்தற்கு அடு சரம் அருளினானை மங்கைமார் ஆடல் ஓவா மன்னு காரோணத்தானை கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்த ஆறே மேல் #695 தெற்றினர் புரங்கள் மூன்றும் தீயினில் விழ ஓர் அம்பால் செற்ற வெஞ்சிலையர் வஞ்சர் சிந்தையுள் சேர்வு இலாதார் கற்றவர் பயிலும் நாகைக்காரோணம் கருதி ஏத்த பெற்றவர் பிறந்தார் மற்று பிறந்தவர் பிறந்திலாரே மேல் #696 கரு மலி கடல் சூழ் நாகைக்காரோணர் கமல பாதத்து ஒரு விரல் நுதிக்கு நில்லாது ஒண் திறல் அரக்கன் உக்கான் இரு திற மங்கைமாரோடு எம்பிரான் செம்பொன் ஆகம் திருவடி தரித்து நிற்க திண்ணம் நாம் உய்ந்த ஆறே மேல் 72. திருஇன்னம்பர் - திருநேரிசை #697 விண்ணவர் மகுட கோடி மிடைந்த சேவடியர் போலும் பெண் ஒருபாகம் போலும் பேடு அலி ஆணர் போலும் வண்ண மால் அயனும் காணா மால் வரை எரியர் போலும் எண் உரு அநேகர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #698 பன்னிய மறையர் போலும் பாம்பு அரை உடையர் போலும் துன்னிய சடையர் போலும் தூ மதி மத்தர் போலும் மன்னிய மழுவர் போலும் மாது இடம் மகிழ்வர் போலும் என்னையும் உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #699 மறி ஒரு கையர் போலும் மாது உமை உடையர் போலும் பறி தலை பிறவி நீக்கி பணி கொள வல்லர் போலும் செறிவு உடை அங்க மாலை சேர் திரு உருவர் போலும் எறி புனல் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #700 விடம் மலி கண்டர் போலும் வேள்வியை அழிப்பர் போலும் கடவு நல் விடையர் போலும் காலனை காய்வர் போலும் படம் மலி அரவர் போலும் பாய் புலி தோலர் போலும் இடர் களைந்து அருள்வர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #701 அளி மலர் கொன்றை துன்றும் அவிர் சடை உடையர் போலும் களி மயில் சாயலோடும் காமனை விழிப்பர் போலும் வெளி வளர் உருவர் போலும் வெண் பொடி அணிவர் போலும் எளியவர் அடியர்க்கு என்றும் இன்னம்பர் ஈசனாரே மேல் #702 கணை அமர் சிலையர் போலும் கரி உரி உடையர் போலும் துணை அமர் பெண்ணர் போலும் தூ மணி குன்றர் போலும் அணை உடை அடியர் கூடி அன்பொடு மலர்கள் தூவும் இணை அடி உடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #703 பொருப்பு அமர் புயத்தர் போலும் புனல் அணி சடையர் போலும் மருப்பு இள ஆமை தாங்கு மார்பில் வெண் நூலர் போலும் உருத்திரமூர்த்தி போலும் உணர்விலார் புரங்கள் மூன்றும் எரித்திடு சிலையர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #704 காடு இடம் உடையர் போலும் கடி குரல் விளியர் போலும் வேடு உரு உடையர் போலும் வெண் மதி கொழுந்தர் போலும் கோடு அலர் வன்னி தும்பை கொக்கு இறகு அலர்ந்த கொன்றை ஏடு அமர் சடையர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #705 காறிடு விடத்தை உண்ட கண்டர் எண் தோளர் போலும் நீறு உடை உருவர் போலும் நினைப்பினை அரியர் போலும் பாறு உடை தலை கை ஏந்தி பலி திரிந்து உண்பர் போலும் ஏறு உடை கொடியர் போலும் இன்னம்பர் ஈசனாரே மேல் #706 ஆர்த்து எழும் இலங்கை_கோனை அரு வரை அடர்ப்பர் போலும் பார்த்தனோடு அமர் பொருது படை கொடுத்து அருள்வர் போலும் தீர்த்தம் ஆம் கங்கை-தன்னை திரு சடை வைப்பர் போலும் ஏத்த ஏழ்உலகும் வைத்தார் இன்னம்பர் ஈசனாரே மேல் 73. திருச்சேறை - திருநேரிசை #707 பெரும் திரு இமவான் பெற்ற பெண்_கொடி பிரிந்த பின்னை வருந்து வான் தவங்கள் செய்ய மா மணம் புணர்ந்து மன்னும் அரும் திரு மேனி-தன்-பால் அங்கு ஒருபாகம் ஆக திருந்திட வைத்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #708 ஓர்த்து உள ஆறு நோக்கி உண்மையை உணரா குண்டர் வார்த்தையை மெய் என்று எண்ணி மயக்கில் வீழ்ந்து அழுந்துவேனை பேர்த்து எனை ஆளாக்கொண்டு பிறவி வான் பிணிகள் எல்லாம் தீர்த்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #709 ஒன்றிய தவத்து மன்னி உடையனாய் உலப்பு இல் காலம் நின்று தம் கழல்கள் ஏத்தும் நீள் சிலை விசயனுக்கு வென்றி கொள் வேடன் ஆகி விரும்பி வெம் கானகத்து சென்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #710 அஞ்சையும் அடக்கி ஆற்றல் உடையனாய் அநேக காலம் வஞ்சம் இல் தவத்துள் நின்று மன்னிய பகீரதற்கு வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை செம் சடை ஏற்றார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #711 நிறைந்த மா மணலை கூப்பி நேசமோடு ஆவின் பாலை கறந்து கொண்டு ஆட்ட கண்டு கறுத்த தன் தாதை தாளை எறிந்த மாணிக்கு அப்போதே எழில் கொள் தண்டீசன் என்ன சிறந்த பேறு அளித்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #712 விரித்த பல் கதிர் கொள் சூலம் வெடிபடு தமருகம் கை தரித்தது ஓர் கோல காலபயிரவன் ஆகி வேழம் உரித்து உமை அஞ்ச கண்டு ஒண் திரு மணி வாய் விள்ள சிரித்து அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #713 சுற்றும் முன் இமையோர் நின்று தொழுது தூ மலர்கள் தூவி மற்று எமை உயக்கொள் என்ன மன்னு வான் புரங்கள் மூன்றும் உற்று ஒரு நொடியின் முன்னம் ஒள் அழல் வாயின் வீழ செற்று அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #714 முந்தி இ உலகம் எல்லாம் படைத்தவன் மாலினோடும் எம் தனி நாதனே என்று இறைஞ்சி நின்று ஏத்தல்செய்ய அந்தம் இல் சோதி-தன்னை அடி முடி அறியா வண்ணம் செம் தழல் ஆனார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் #715 ஒருவரும் நிகர் இலாத ஒண் திறல் அரக்கன் ஓடி பெரு வரை எடுத்த திண் தோள் பிறங்கிய முடிகள் இற்று மருவி எம்பெருமான் என்ன மலர் அடி மெள்ள வாங்கி திரு அருள்செய்தார் சேறை செந்நெறி செல்வனாரே மேல் 74. பொது - நினைந்த திருநேரிசை #716 முத்தினை மணியை பொன்னை முழுமுதல் பவளம் ஏய்க்கும் கொத்தினை வயிர மாலை கொழுந்தினை அமரர் சூடும் வித்தினை வேத வேள்வி கேள்வியை விளங்க நின்ற அத்தனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #717 முன்பனை உலகுக்கு எல்லாம் மூர்த்தியை முனிகள் ஏத்தும் இன்பனை இலங்கு சோதி இறைவனை அரிவை அஞ்ச வன் பனை தட கை வேள்வி களிற்றினை உரித்த எங்கள் அன்பனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #718 கரும்பினும் இனியான்-தன்னை காய் கதிர் சோதியானை இரும் கடல் அமுதம்-தன்னை இறப்பொடு பிறப்பிலானை பெரும்பொருள் கிளவியானை பெரும் தவ முனிவர் ஏத்தும் அரும் பொனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #719 செருத்தனை அருத்தி செய்து செம் சரம் செலுத்தி ஊர் மேல் கருத்தனை கனக மேனி கடவுளை கருதும் வானோர்க்கு ஒருத்தனை ஒருத்தி பாகம் பொருத்தியும் அருத்தி தீரா நிருத்தனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே மேல் #720 கூற்றினை உதைத்த பாத குழகனை மழலை வெள் ஏறு ஏற்றனை இமையோர் ஏத்த இரும் சடை கற்றை-தன் மேல் ஆற்றனை அடியர் ஏத்தும் அமுதனை அமுத யோக நீற்றனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே மேல் #721 கரு பனை தட கை வேழ களிற்றினை உரித்த கண்டன் விருப்பனை விளங்கு சோதி வியன் கயிலாயம் என்னும் பொருப்பனை பொருப்பன்மங்கை பங்கனை அங்கை ஏற்ற நெருப்பனை நினைந்த நெஞ்சம் நேர்பட நினைந்த ஆறே மேல் #722 நீதியால் நினைப்பு உளானை நினைப்பவர் மனத்து உளானை சாதியை சங்க வெண் நீற்று அண்ணலை விண்ணில் வானோர் சோதியை துளக்கம் இல்லா விளக்கினை அளக்கல் ஆகா ஆதியை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #723 பழகனை உலகுக்கு எல்லாம் பருப்பனை பொருப்போடு ஒக்கும் மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த குழகனை குழவி திங்கள் குளிர் சடை மருவ வைத்த அழகனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #724 விண்ணிடை மின் ஒப்பானை மெய் பெரும்பொருள் ஒப்பானை கண்ணிடை மணி ஒப்பானை கடு இருள் சுடர் ஒப்பானை எண்ணிடை எண்ணல் ஆகா இருவரை வெருவ நீண்ட அண்ணலை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் #725 உரவனை திரண்ட திண் தோள் அரக்கனை ஊன்றி மூன்று ஊர் நிரவனை நிமிர்ந்த சோதி நீள் முடி அமரர்-தங்கள் குரவனை குளிர் வெண் திங்கள் சடையிடை பொதியும் ஐவாய் அரவனை நினைந்த நெஞ்சம் அழகிதா நினைந்த ஆறே மேல் 75. பொது - தனித் திருநேரிசை #726 தொண்டனேன் பட்டது என்னே தூய காவிரியின் நன் நீர் கொண்டு இருக்கு ஓதி ஆட்டி குங்கும குழம்பு சாத்தி இண்டை கொண்டு ஏற நோக்கி ஈசனை எம்பிரானை கண்டனை கண்டிராதே காலத்தை கழித்த ஆறே மேல் #727 பின் இலேன் முன் இலேன் நான் பிறப்பு அறுத்து அருள்செய்வானே என் இலேன் நாயினேன் நான் இளம் கதிர் பயலை திங்கள் சில் நிலா எறிக்கும் சென்னி சிவபுரத்து அமரர் ஏறே நின் அலால் களைகண் ஆரே நீறு சேர் அகலத்தானே மேல் #728 கள்ளனேன் கள்ள தொண்டாய் காலத்தை கழித்து போக்கி தெள்ளியேன் ஆகி நின்று தேடினேன் நாடி கண்டேன் உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன் வெள்கி நானும் விலா இற சிரித்திட்டனே மேல் #729 உடம்பு எனும் மனையகத்துள் உள்ளமே தகளி ஆக மடம் படும் உணர் நெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம் படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பு அமர் காளை தாதை கழல் அடி காணல் ஆமே மேல் #730 வஞ்ச பெண் அரங்கு கோயில் வாள் எயிற்று அரவம் துஞ்சா வஞ்ச பெண் இருந்த சூழல் வான் தவழ் மதியம் தோயும் வஞ்ச பெண் வாழ்க்கையாளன் வாழ்வினை வாழலுற்று வஞ்ச பெண் உறக்கம் ஆனேன் வஞ்சனேன் என் செய்கேனே மேல் #731 உள்குவார் உள்ளத்தானை உணர்வு எனும் பெருமையானை உள்கினேன் நானும் காண்பான் உருகினேன் ஊறிஊறி எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னுகின்ற கொள்ளி மேல் எறும்பு என் உள்ளம் எங்ஙனம் கூடும் ஆறே மேல் #732 மோத்தையை கண்ட காக்கை போல வல்வினைகள் மொய்த்து உன் வார்த்தையை பேச ஒட்டா மயக்க நான் மயங்குகின்றேன் சீத்தையை சிதம்பு-தன்னை செடி கொள் நோய் வடிவு ஒன்று இல்லா ஊத்தையை கழிக்கும் வண்ணம் உணர்வு தா உலகமூர்த்தீ மேல் #733 அங்கத்தை மண்ணுக்கு ஆக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தை போக மாற்றி பாவித்தேன் பரமா நின்னை சங்கு ஒத்த மேனி செல்வா சாதல் நாள் நாயேன் உன்னை எங்கு உற்றாய் என்றபோதா இங்கு உற்றேன் என் கண்டாயே மேல் #734 வெள்ள நீர் சடையனார்தாம் வினவுவார் போல வந்து என் உள்ளமே புகுந்து நின்றார்க்கு உறங்கும் நான் புடைகள் பேர்ந்து கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே மேல் #735 பெருவிரல் இறைதான் ஊன்ற பிறை எயிறு இலங்க அங்காந்து அரு வரை அனைய தோளான் அரக்கன் அன்று அலறி வீழ்ந்தான் இருவரும் ஒருவன் ஆய உருவம் அங்கு உடைய வள்ளல் திருவடி சுமந்துகொண்டு காண்க நான் திரியும் ஆறே மேல் 76. பொது - தனித் திருநேரிசை #736 மருள் அவா மனத்தன் ஆகி மயங்கினேன் மதியிலாதேன் இருள் அவா அறுக்கும் எந்தை இணை அடி நீழல் என்னும் அருள் அவா பெறுதல் இன்றி அஞ்சி நான் அலமந்தேற்கு பொருள் அவா தந்த ஆறே போது போய் புலர்ந்தது அன்றே மேல் #737 மெய்ம்மை ஆம் உழவை செய்து விருப்பு எனும் வித்தை வித்தி பொய்ம்மை ஆம் களையை வாங்கி பொறை எனும் நீரை பாய்ச்சி தம்மையும் நோக்கி கண்டு தகவு எனும் வேலி இட்டு செம்மையுள் நிற்பராகில் சிவகதி விளையும் அன்றே மேல் #738 எம்பிரான் என்றதே கொண்டு என் உளே புகுந்து நின்று இங்கு எம்பிரான் ஆட்ட ஆடி என் உளே உழிதர்வேனை எம்பிரான் என்னை பின்னை தன்னுளே கரக்கும் என்றால் எம்பிரான் என்னின் அல்லால் என் செய்கேன் ஏழையேனே மேல் #739 காயமே கோயில் ஆக கடி மனம் அடிமை ஆக வாய்மையே தூய்மை ஆக மனமணி இலிங்கம் ஆக நேயமே நெய்யும் பாலா நிறைய நீர் அமைய ஆட்டி பூசனை ஈசனார்க்கு போற்று அவி காட்டினோமே மேல் #740 வஞ்சக புலையனேனை வழி அற தொண்டில் பூட்டி அஞ்சல் என்று ஆண்டுகொண்டாய் அதுவும் நின் பெருமை அன்றே நெஞ்சகம் கனியமாட்டேன் நின்னை உள் வைக்கமாட்டேன் நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே மேல் #741 நாயினும் கடைப்பட்டேனை நன் நெறி காட்டி ஆண்டாய் ஆயிரம் அரவம் ஆர்த்த அமுதனே அமுதம் ஒத்து நீயும் என் நெஞ்சினுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க நோய் அவை சாருமாகில் நோக்கி நீ அருள்செயாயே மேல் #742 விள்ளத்தான் ஒன்று மாட்டேன் விருப்பு எனும் வேட்கையாலே வள்ள தேன் போல நுன்னை வாய்மடுத்து உண்டிடாமே உள்ளத்தே நிற்றியேனும் உயிர்ப்புளே வருதியேனும் கள்ளத்தே நிற்றி அம்மா எங்ஙனம் காணும் ஆறே மேல் #743 ஆசை வன் பாசம் எய்தி அங்கு உற்றேன் இங்கு உற்றேனாய் ஊசலாட்டுண்டு வாளா உழந்து நான் உழிதராமே தேசனே தேசமூர்த்தி திரு மறைக்காடு மேய ஈசனே உன்தன் பாதம் ஏத்தும் ஆறு அருள் எம்மானே மேல் #744 நிறைவு இலேன் நேசம் இல்லேன் நினைவு இலேன் வினையின் பாசம் மறைவிலே புறப்பட்டு ஏறும் வகை எனக்கு அருள் எம் எம்மான் சிறை இலேன் செய்வது என்னே திருவடி பரவி ஏத்த குறைவு இலேன் குற்றம் தீராய் கொன்றை சேர் சடையினானே மேல் #745 நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா அடுவன அஞ்சு பூதம் அவை-தமக்கு ஆற்றல் ஆகேன் படுவன பலவும் குற்றம் பாங்கு இலா மனிதர் வாழ்க்கை கெடுவது இ பிறவி சீசீ கிளர் ஒளி சடையினீரே மேல் 77. பொது - தனித் திருநேரிசை #746 கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி இடும் பலிக்கு இல்லம்-தோறும் உழிதரும் இறைவனீரே நெடும் பொறை மலையர்பாவை நேர் இழை நெறி மென் கூந்தல் கொடும் குழை புகுந்த அன்றும் கோவணம் அரையதேயோ மேல் #747 கோவணம் உடுத்த ஆறும் கோள் அரவு அசைத்த ஆறும் தீ வண சாம்பர் பூசி திரு உரு இருந்த ஆறும் பூவண கிழவனாரை புலி உரி அரையனாரை ஏ வண சிலையினாரை யாவரே எழுதுவாரே மேல் #748 விளக்கினார் பெற்ற இன்பம் மெழுக்கினால் பதிற்றி ஆகும் துளக்கு இல் நல் மலர் தொடுத்தால் தூய விண் ஏறல் ஆகும் விளக்கு இட்டார் பேறு சொல்லின் மெய்ஞ்ஞெறி ஞானம் ஆகும் அளப்பு இல கீதம் சொன்னார்க்கு அடிகள்தாம் அருளும் ஆறே மேல் #749 சந்திரன் சடையில் வைத்த சங்கரன் சாமவேதி அந்தரத்து அமரர் பெம்மான் ஆன் நல் வெள்ஊர்தியான்-தன் மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் வெந்து அறும் வினையும் நோயும் வெவ் அழல் விறகிட்டன்றே மேல் #750 புள்ளுவர் ஐவர் கள்வர் புனத்திடை புகுந்து நின்று துள்ளுவர் சூறை கொள்வர் தூ நெறி விளைய ஒட்டார் முள்ளுடையவர்கள்-தம்மை முக்கணான் பாத நீழல் உள்ளிடை மறைந்து நின்று அங்கு உணர்வினால் எய்யல் ஆமே மேல் #751 தொண்டனேன் பிறந்து வாளா தொல்வினை குழியில் வீழ்ந்து பிண்டமே சுமந்து நாளம் பெரியது ஓர் அவாவில் பட்டேன் அண்டனே அமரர்_கோவே அறிவனே அஞ்சல் என்னாய் தெண் திரை கங்கை சூடும் திரு தகு சடையினானே மேல் #752 பாறினாய் பாவி நெஞ்சே பன்றி போல் அளற்றில் பட்டு தேறி நீ நினைதியாயின் சிவகதி திண்ணம் ஆகும் ஊறலே உவர்ப்பு நாறி உதிரமே ஒழுகும் வாசல் கூறையால் மூட கண்டு கோலமா கருதினாயே மேல் #753 உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர வைத்த கால் அரக்கனோ தன் வான் முடி தனக்கு நேர்ந்தான் மொய்த்த கான் முகிழ் வெண் திங்கள் மூர்த்தி என் உச்சி-தன் மேல் வைத்த கால் வருந்தும் என்று வாடி நான் ஒடுங்கினேனே மேல் 78. பொது - குறைந்த திருநேரிசை #754 வென்றிலேன் புலன்கள் ஐந்தும் வென்றவர் வளாகம்-தன்னுள் சென்றிலேன் ஆதலாலே செந்நெறி அதற்கும் சேயேன் நின்று உளே துளும்புகின்றேன் நீசனேன் ஈசனேயோ இன்று உளேன் நாளை இல்லேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #755 கற்றிலேன் கலைகள் ஞானம் கற்றவர்-தங்களோடும் உற்றிலேன் ஆதலாலே உணர்வுக்கும் சேயன் ஆனேன் பெற்றிலேன் பெரும் தடம் கண் பேதையார்-தமக்கும் பொல்லேன் எற்று உளேன் இறைவனே நான் என் செய்வான் தோன்றினேனே மேல் #756 மாட்டினேன் மனத்தை முன்னே மறுமையை உணரமாட்டேன் மூட்டி நான் முன்னை நாளே முதல்வனை வணங்கமாட்டேன் பாட்டு இல் நாய் போல நின்று பற்று அது ஆம் பாவம்-தன்னை ஈட்டினேன் களையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #757 கரை கடந்து ஓதம் ஏறும் கடல் விடம் உண்ட கண்டன் உரை கடந்து ஓதும் நீர்மை உணர்ந்திலேன் ஆதலாலே அரை கிடந்து அசையும் நாகம் அசைப்பனே இன்ப வாழ்க்கைக்கு இரைக்கு இடைந்து உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #758 செம்மை வெண் நீறு பூசும் சிவன் அவன் தேவதேவன் வெம்மை நோய் வினைகள் தீர்க்கும் விகிர்தனுக்கு ஆர்வம் எய்தி அம்மை நின்று அடிமை செய்யா வடிவு இலா முடிவு இல் வாழ்க்கைக்கு இம்மை நின்று உருகுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #759 பேச்சொடு பேச்சுக்கு எல்லாம் பிறர்-தமை புறமே பேச கூச்சு இலேன் ஆதலாலே கொடுமையை விடும் ஆறு ஓரேன் நா சொலி நாளும் மூர்த்தி நன்மையை உணரமாட்டேன் ஏச்சுளே நின்று மெய்யே என் செய்வான் தோன்றினேனே மேல் #760 தேசனை தேசம் ஆகும் திருமால் ஓர்பங்கன்-தன்னை பூசனை புனிதன்-தன்னை புணரும் புண்டரிகத்தானை நேசனை நெருப்பன்-தன்னை நிவஞ்சகத்து அகன்ற செம்மை ஈசனை அறியமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #761 விளைக்கின்ற வினையை நோக்கி வெண் மயிர் விரவி மேலும் முளைக்கின்ற வினையை போக முயல்கிலேன் இயல வெள்ளம் திளைக்கின்ற முடியினான்-தன் திருவடி பரவமாட்டாது இளைக்கின்றேன் இருமி ஊன்றி என் செய்வான் தோன்றினேனே மேல் #762 விளைவு அறிவு இலாமையாலே வேதனை குழியில் ஆழ்ந்து களைகணும் இல்லேன் எந்தாய் காமரம் கற்றுமில்லேன் தளை அவிழ் கோதை நல்லார்-தங்களோடு இன்பம் எய்த இளையனும் அல்லேன் எந்தாய் என் செய்வான் தோன்றினேனே மேல் #763 வெட்டனவு உடையன் ஆகி வீரத்தால் மலை எடுத்த துட்டனை துட்டு தீர்த்து சுவைபட கீதம் கேட்ட அட்டமாமூர்த்தி ஆய ஆதியை ஓதி நாளும் எள்தனை எட்டமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் 79. பொது - குறைந்த திருநேரிசை #764 தம்மானம் காப்பது ஆகி தையலார் வலையுள் ஆழ்ந்து அம்மானை அமுதன்-தன்னை ஆதியை அந்தம் ஆய செம் மான ஒளி கொள் மேனி சிந்தையுள் ஒன்றி நின்ற எம்மானை நினைய மாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #765 மக்களே மணந்த தாரம் அ வயிற்றவரை ஓம்பும் சிக்குறே அழுந்தி ஈசன் திறம் படேன் தவம் அது ஒரேன் கொப்புளே போல தோன்றி அதனுளே மறைய கண்டும் இ களேபரத்தை ஓம்ப என் செய்வான் தோன்றினேனே மேல் #766 கூழையேன் ஆகமாட்டேன் கொடுவினை குழியில் வீழ்ந்து ஏழின் இன்னிசையினாலும் இறைவனை ஏத்தமாட்டேன் மாழை ஒண் கண்ணின் நல்ல மடந்தைமார்-தமக்கும் பொல்லேன் ஏழையேன் ஆகி நாளும் என் செய்வான் தோன்றினேனே மேல் #767 முன்னை என் வினையினாலே மூர்த்தியை நினையமாட்டேன் பின்னை நான் பித்தன் ஆகி பிதற்றுவன் பேதையேன் நான் என் உளே மன்னி நின்ற சீர்மை அது ஆயினானை என் உளே நினையமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #768 கறை அணி கண்டன்-தன்னை காமரம் கற்றுமில்லேன் பிறை நுதல் பேதை மாதர் பெய்வளையார்க்கும் அல்லேன் மறை நவில் நாவினானை மன்னி நின்று இறைஞ்சி நாளும் இறையேயும் ஏத்தமாட்டேன் என் செய்வான் தோன்றினேனே மேல் #769 வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய தளைத்து வைத்து உலையை ஏற்றி தழல் எரி மடுத்த நீரில் திளைத்து நின்று ஆடுகின்ற ஆமை போல் தெளிவு இலாதேன் இளைத்து நின்று ஆடுகின்றேன் என் செய்வான் தோன்றினேனே மேல் 80. கோயில் - திருவிருத்தம் : பண் - கொல்லி #770 பாளை உடை கமுகு ஓங்கி பல மாடம் நெருங்கி எங்கும் வாளை உடை புனல் வந்து எறி வாழ் வயல் தில்லை-தன்னுள் ஆள உடை கழல் சிற்றம்பலத்து அரன் ஆடல் கண்டால் பீளை உடை கண்களால் பின்னை பேய்த்தொண்டர் காண்பது என்னே மேல் #771 பொரு விடை ஒன்று உடை புண்ணியமூர்த்தி புலி அதளன் உரு உடை அம் மலைமங்கை மணாளன் உலகுக்கு எல்லாம் திரு உடை அந்தணர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் திருவடியை கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே மேல் #772 தொடுத்த மலரொடு தூபமும் சாந்தும் கொண்டு எப்பொழுதும் அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்கும் காண்பு அரியான் பொடி கொண்டு அணிந்து பொன் ஆகிய தில்லை சிற்றம்பலவன் உடுத்த துகில் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே மேல் #773 வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த கச்சின் அழகு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே மேல் #774 செய் ஞின்ற நீலம் மலர்கின்ற தில்லை சிற்றம்பலவன் மை ஞின்ற ஒண் கண் மலைமகள் கண்டு மகிழ்ந்து நிற்க நெய் ஞின்று எரியும் விளக்கு ஒத்த நீல மணி_மிடற்றான் கை ஞின்ற ஆடல் கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே மேல் #775 ஊனத்தை நீக்கி உலகு அறிய என்னை ஆட்கொண்டவன் தேன் ஒத்து எனக்கு இனியான் தில்லை சிற்றம்பலவன் எம் கோன் வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் ஏனத்து எயிறு கண்டால் பின்னை கண்கொண்டு காண்பது என்னே மேல் #776 தெரிந்த கணையால் திரி புரம் மூன்றும் செம் தீயில் மூழ்க எரித்த இறைவன் இமையவர்_கோமான் இணை அடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் சிரித்த முகம் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே மேல் #777 சுற்றும் அமரர் சுரபதி நின் திருப்பாதம் அல்லால் பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் செற்று அங்கு அநங்கனை தீவிழித்தான் தில்லை அம்பலவன் நெற்றியில் கண் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே மேல் #778 சித்தத்து எழுந்த செழும் கமலத்து அன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லை சிற்றம்பலவன் முத்தும் வயிரமும் மாணிக்கம்-தன்னுள் விளங்கிய தூ மத்த மலர் கண்ட கண்கொண்டு மற்று இனி காண்பது என்னே மேல் #779 தருக்கு மிகுத்து தன் தோள் வலி உன்னி தட வரையை வரை கைகளால் எடுத்து ஆர்ப்ப மலைமகள்_கோன் சிரித்து அரக்கன் மணி முடி பத்தும் அணி தில்லை அம்பலவன் நெருக்கி மிதித்த விரல் கண்ட கண்கொண்டு காண்பது என்னே மேல் 81. கோயில் - திருவிருத்தம் : பண் - கொல்லி #780 கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே மேல் #781 ஒன்றி இருந்து நினை-மின்கள் உம்தமக்கு ஊனம் இல்லை கன்றிய காலனை காலால் கடிந்தான் அடியவற்கா சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே மேல் #782 கல்மனவீர் கழியும் கருத்தே சொல்லி காண்பது என்னே நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி என் மனமே ஒன்றி புக்கனன் போந்த சுவடு இல்லையே மேல் #783 குனித்த புருவமும் கொவ்வை செ வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம் போல் மேனியும் பால் வெண் நீறும் இனித்தம் உடைய எடுத்த பொன் பாதமும் காணப்பெற்றால் மனித்த பிறவியும் வேண்டுவதே இந்த மா நிலத்தே மேல் #784 வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் பார்த்தற்கு பாசுபதம் அருள்செய்தவன் பத்தருள்ளீர் கோத்து அன்று முப்புரம் தீ விளைத்தான் தில்லை அம்பலத்து கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே மேல் #785 பூத்தன பொன் சடை பொன் போல் மிளிர புரி கணங்கள் ஆர்த்தன கொட்டி அரித்தன பல் குறள் பூத கணம் தேத்தென என்று இசை வண்டுகள் பாடு சிற்றம்பலத்து கூத்தனின் கூத்து வல்லார் உளரோ என்தன் கோல்_வளைக்கே மேல் #786 முடி கொண்ட மத்தமும் முக்கண்ணின் நோக்கும் முறுவலிப்பும் துடி கொண்ட கையும் துதைந்த வெண் நீறும் சுரி குழலாள் படி கொண்ட பாகமும் பாய் புலி தோலும் என் பாவி நெஞ்சில் குடிகொண்டவா தில்லை அம்பல கூத்தன் குரை கழலே மேல் #787 படைக்கலம் ஆக உன் நாமத்து எழுத்து அஞ்சு என் நாவில் கொண்டேன் இடைக்கலம் அல்லேன் எழு பிறப்பும் உனக்கு ஆட்செய்கின்றேன் துடைக்கினும் போகேன் தொழுது வணங்கி தூ நீறு அணிந்து உன் அடைக்கலம் கண்டாய் அணி தில்லை சிற்றம்பலத்து அரனே மேல் #788 பொன் ஒத்த மேனி மேல் வெண் நீறு அணிந்து புரி சடைகள் மின் ஒத்து இலங்க பலி தேர்ந்து உழலும் விடங்கர் வேட சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே மேல் #789 சாட எடுத்தது தக்கன்-தன் வேள்வியில் சந்திரனை வீட எடுத்தது காலனை நாரணன் நான்முகனும் தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம் ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே மேல் 82. திருக்கழுமலம் - திருவிருத்தம் #790 பார் கொண்டு மூடி கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம் நால்_அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர் நளிர் மதியம் கால்கொண்ட வண் கை சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு ஆள் அன்றி மற்றும் உண்டோ அம் தண் ஆழி அகலிடமே மேல் #791 கடை ஆர் கொடி நெடு மாடங்கள் எங்கும் கலந்து இலங்க உடையான் உடை தலை மாலையும் சூடி உகந்து அருளி விடைதான் உடைய அ வேதியன் வாழும் கழுமலத்துள் அடைவார் வினைகள் அவை என்க நாள்-தொறும் ஆடுவரே மேல் #792 திரை-வாய் பெரும் கடல் முத்தம் குவிப்ப முகந்துகொண்டு நுரை வாய் நுளைச்சியர் ஓடி கழுமலத்துள் அழுந்தும் விரை வாய் நறு மலர் சூடிய விண்ணவன்-தன் அடிக்கே வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே மேல் #793 விரிக்கும் அரும் பதம் வேதங்கள் ஓதும் விழுமிய நூல் உரைக்கில் அரும் பொருள் உள்ளுவர் கேட்கில் உலகம் முற்றும் இரிக்கும் பறையொடு பூதங்கள் பாட கழுமலவன் நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே மேல் #794 சிந்தித்து எழு மனமே நினையா முன் கழுமலத்தை பந்தித்த வல்வினை தீர்க்க வல்லானை பசுபதியை சந்தித்த காலம் அறுத்தும் என்று எண்ணி இருந்தவர்க்கு முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே மேல் #795 நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்தாய் அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இ தோணிபுரம் சிலையில் திரி புரம் மூன்று எரித்தார் தம் கழுமலவர் அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே மேல் #796 முற்றி கிடந்து முந்நீரின் மிதந்து உடன் மொய்த்து அமரர் சுற்றி கிடந்து தொழப்படுகின்றது சூழ் அரவம் தெற்றி கிடந்து வெம் கொன்றையும் துன்றி வெண் திங்கள் சூடும் கற்றை சடைமுடியார்க்கு இடம் ஆய கழுமலமே மேல் #797 உடலும் உயிரும் ஒருவழி செல்லும் உலகத்துள்ளே அடையும் உனை வந்து அடைந்தார் அமரர் அடி இணை கீழ் நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே மேல் #798 பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் நிரவி கிடந்து தொழப்படுகின்றது நீண்டு இருவர் சிரமப்பட வந்து சார்ந்தார் கழல் அடி காண்பதற்கே அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே மேல் #799 கலை ஆர் கடல் சூழ் இலங்கையர்_கோன்-தன் முடி சிதற தொலையா மலர் அடி ஊன்றலும் உள்ளம் விதிர்விதிர்த்து தலையாய் கிடந்து உயர்ந்தான்-தன் கழுமலம் காண்பதற்கே அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே மேல் 83. திருக்கழுமலம் - திருவிருத்தம் #800 படை ஆர் மழு ஒன்று பற்றிய கையன் பதி வினவில் கடை ஆர் கொடி நெடு மாடங்கள் ஓங்கும் கழுமலம் ஆம் மடைவாய் குருகு இனம் பாளை விரி-தொறும் வண்டு இனங்கள் பெடை வாய் மது உண்டு பேராது இருக்கும் பெரும் பதியே மேல் 84. பொது - ஆருயிர்த் திருவிருத்தம் #801 எட்டு ஆம் திசைக்கும் இரு திசைக்கும் இறைவா முறை என்று இட்டார் அமரர் வெம் பூசல் என கேட்டு எரி விழியா ஒட்டா கயவர் திரி புரம் மூன்றையும் ஓர் அம்பினால் அட்டான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #802 பேழ் வாய் அரவின் அரைக்கு அமர்ந்து ஏறி பிறங்கு இலங்கு தேய் வாய் இளம் பிறை செம் சடை மேல் வைத்த தேவர்பிரான் மூவான் இளகான் முழு உலகோடு மண் விண்ணும் மற்றும் ஆவான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #803 தரியா வெகுளியனாய் தக்கன் வேள்வி தகர்த்து உகந்த எரி ஆர் இலங்கிய சூலத்தினான் இமையாத முக்கண் பெரியான் பெரியார் பிறப்பு அறுப்பான் என்றும் தன் பிறப்பை அரியான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #804 வடிவு உடை வாள் நெடும் கண் உமையாளை ஓர்பால் மகிழ்ந்து வெடி கொள் அரவொடு வேங்கை அதள் கொண்டு மேல் மருவி பொடி கொள் அகலத்து பொன் பிதிர்ந்து அன்ன பைம் கொன்றை அம் தார் அடிகள் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #805 பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தான் கறுப்பு அழகா உடையான் கங்கை செம் சடை மேல் செறுத்தான் தனஞ்சயன் சேண் ஆர் அகலம் கணை ஒன்றினால் அறுத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #806 காய்ந்தான் செறற்கு அரியான் என்று காலனை கால் ஒன்றினால் பாய்ந்தான் பணை மதில் மூன்றும் கணை என்னும் ஒள் அழலால் மேய்ந்தான் வியன் உலகு ஏழும் விளங்க விழுமிய நூல் ஆய்ந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #807 உளைந்தான் செறுத்தற்கு அரியான் தலையை உகிர் ஒன்றினால் களைந்தான் அதனை நிறைய நெடு மால் கண் ஆர் குருதி வளைந்தான் ஒரு விரலினொடு வீழ்வித்து சாம்பர் வெண் நீறு அளைந்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #808 முந்து இ வட்டத்திடை பட்டது எல்லாம் முடி வேந்தர்-தங்கள் பந்தி வட்டத்திடைப்பட்டு அலைப்புண்பதற்கு அஞ்சி-கொல்லோ நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி அந்தி வட்டத்து ஒளியான் அடி சேர்ந்தது என் ஆருயிரே மேல் #809 மிக தான் பெரியது ஓர் வேங்கை அதள் கொண்டு மெய் மருவி அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் முகத்தால் குளிர்ந்திருந்து உள்ளத்தினால் உகப்பான் இசைந்த அகத்தான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #810 பை மாண் அரவு அல்குல் பங்கய சீறடியாள் வெருவ கைம்மா வரி சிலை காமனை அட்ட கடவுள் முக்கண் எம்மான் இவன் என்று இருவரும் ஏத்த எரி நிமிர்ந்த அம்மான் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் #811 பழக ஒர் ஊர்தி அரன் பைம் கண் பாரிடம் பாணிசெய்ய குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை கிழவன் இருபது தோளும் ஒரு விரலால் இறுத்த அழகன் அடி நிழல் கீழது அன்றோ என்தன் ஆருயிரே மேல் 85. திருச்சோற்றுத்துறை - திருவிருத்தம் #812 காலை எழுந்து கடி மலர் தூயன தாம் கொணர்ந்து மேலை அமரர் விரும்பும் இடம் விரையான் மலிந்த சோலை மணம் கமழ் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் மாலை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் #813 வண்டு அணை கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் கொண்டு அணைந்து ஏறு முடி உடையான் குரை சேர் கழற்கே தொண்டு அணைந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் வெண் தலை மாலை அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் #814 அளக்கும் நெறியினன் அன்பர்கள்-தம் மனத்து ஆய்ந்து கொள்வான் விளக்கும் அடியவர் மேல் வினை தீர்த்திடும் விண்ணவர்_கோன் துளக்கும் குழை அணி சோற்றுத்துறை உறைவார் சடை மேல் திளைக்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் #815 ஆய்ந்த கை வாள் அரவத்தொடு மால் விடை ஏறி எங்கும் பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே சேர்ந்த கை மா மலர் துன்னிய சோற்றுத்துறை உறைவார் ஏந்து கை சூலம் மழு எம்பிரானுக்கு அழகியதே மேல் #816 கூற்றை கடந்ததும் கோள் அரவு ஆர்த்ததும் கோள் உழுவை நீற்றில் துதைந்து திரியும் பரிசு அதும் நாம் அறியோம் ஆற்றில் கிடந்து அங்கு அலைப்ப அலைப்புண்டு அசைந்தது ஒக்கும் சோற்றுத்துறை உறைவார் சடை மேலது ஓர் தூ மதியே மேல் #817 வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர் வல் அசுரர் கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர் வந்து இறைஞ்ச சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் வில் ஆடி நின்ற நிலை எம்பிரானுக்கு அழகியதே மேல் #818 ஆயம் உடையது நாம் அறிவோம் அரணத்தவரை காய கணை சிலை வாங்கியும் எய்தும் துயக்கு அறுத்தான் தூய வெண்நீற்றினன் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் பாயும் வெண் நீர் திரை கங்கை எம்மானுக்கு அழகியதே மேல் #819 அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை உண்டும் அதனை ஒடுக்க வல்லான் மிக்க உம்பர்கள்_கோன் தொண்டு பயில்கின்ற சோற்றுத்துறை உறைவார் சடை மேல் இண்டை மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் #820 கடல் மணி_வண்ணன் கருதிய நான்முகன்தான் அறியான் விடம் அணி கண்டம் உடையவன் தான் எனை ஆள்உடையான் சுடர் அணிந்து ஆடிய சோற்றுத்துறை உறைவார் சடை மேல் படம் மணி நாகம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் #821 இலங்கைக்கு இறைவன் இருபது தோளும் முடி நெரிய கலங்க விரலினால் ஊன்றி அவனை கருத்து அழித்த துலங்கல் மழுவினான் சோற்றுத்துறை உறைவார் சடை மேல் இலங்கும் மதியம் அன்றோ எம்பிரானுக்கு அழகியதே மேல் 86. திருவொற்றியூர் - திருவிருத்தம் #822 செற்று களிற்று உரி கொள்கின்ற ஞான்று செரு வெண் கொம்பு ஒன்று இற்று கிடந்தது போலும் இளம் பிறை பாம்பு அதனை சுற்றி கிடந்தது கிம்புரி போல சுடர் இமைக்கும் நெற்றிக்கண் மற்று அதன் முத்து ஒக்குமால் ஒற்றியூரனுக்கே மேல் #823 சொல்ல கருதியது ஒன்று உண்டு கேட்கில் தொண்டாய் அடைந்தார் அல்லல் பட கண்டு பின் என் கொடுத்தி அலை கொள் முந்நீர் மல்லல் திரை சங்கம் நித்திலம் கொண்டு வம்ப கரைக்கே ஒல்லை திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே மேல் #824 பரவை வரு திரை நீர் கங்கை பாய்ந்து உக்க பல் சடை மேல் அரவம் அணிதரு கொன்றை இளம் திங்கள் சூடியது ஓர் குரவ நறு மலர் கோங்கம் அணிந்து குலாய சென்னி உரவு திரை கொணர்ந்து எற்று ஒற்றியூர் உறை உத்தமனே மேல் #825 தான் அகம் காடு அரங்கு ஆக உடையது தன் அடைந்தார் ஊன் அகம் நாறும் முடை தலையில் பலி கொள்வது தான் தேன் அகம் நாறும் திரு ஒற்றியூர் உறைவார் அவர்தாம் தான் அகமே வந்து போனகம் வேண்டி உழிதர்வரே மேல் #826 வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த மாலை சடையார்க்கு உறைவிடம் ஆவது வாரி குன்றா ஆலை கரும்பொடு செந்நெல் கழனி அருகு அணைந்த சோலை திரு ஒற்றியூரை எப்போதும் தொழு-மின்களே மேல் #827 புற்றினில் வாழும் அரவுக்கும் திங்கட்கும் கங்கை என்னும் சிற்றிடையாட்கும செறிதரு கண்ணிக்கும் சேர்விடம் ஆம் பெற்றுடையான் பெரும் பேச்சு உடையான் பிரியாது எனை ஆள் விற்று உடையான் ஒற்றியூர் உடையான்-தன் விரி சடையே மேல் #828 இன்று அரைக்கண் உடையார் எங்கும் இல்லை இமயம் என்னும் குன்றர் ஐக்கு அண் நல் குலமகள் பாவைக்கு கூறு இட்ட நாள் அன்று அரைக்கண்ணும் கொடுத்து உமையாளையும் பாகம் வைத்த ஒன்றரைக்கண்ணன் கண்டீர் ஒற்றியூர் உறை உத்தமனே மேல் #829 சுற்றி வண்டு யாழ்செயும் சோலையும் காவும் துதைந்து இலங்கு பெற்றி கண்டால் மற்று யாவரும் கொள்வர் பிறரிடை நீ ஒற்றி கொண்டாய் ஒற்றியூரையும் கைவிட்டு உறும் என்று எண்ணி விற்றிகண்டாய் மற்று இது ஒப்பது இல் இடம் வேதியனே மேல் #830 சுற்றி கிடந்து ஒற்றியூரன் என் சிந்தை பிரிவு அறியான் ஒற்றி திரிதந்து நீ என்ன செய்தி உலகம் எல்லாம் பற்றி திரிதந்து பல்லொடு நா மென்று கண் குழித்து தெற்றித்து இருப்பது அல்லால் என்ன செய்யும் இ தீவினையே மேல் #831 அம் கள் கடுக்கைக்கு முல்லை புறவம் முறுவல்செய்யும் பைம் கண் தலைக்கு சுடலை களரி பரு மணி சேர் கங்கைக்கு வேலை அரவுக்கு புற்று கலை நிரம்பா திங்கட்கு வானம் திரு ஒற்றியூரர் திரு முடியே மேல் #832 தருக்கின வாள் அரக்கன் முடி பத்து இற பாதம்-தன்னால் ஒருக்கின ஆறு அடியேனை பிறப்பு அறுத்து ஆள வல்லான் நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே மேல் 87. திருப்பழனம் - திருவிருத்தம் #833 மேவித்து நின்று விளைந்தன வெம் துயர் துக்கம் எல்லாம் ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவை அறுப்பான் பாவித்த பாவனை நீ அறிவாய் பழனத்து அரசே கூவித்து கொள்ளும்தனை அடியேனை குறிக்கொள்வதே மேல் #834 சுற்றி நின்றார் புறம் காவல் அமரர் கடை தலையில் மற்று நின்றார் திருமாலொடு நான்முகன் வந்து அடி கீழ் பற்றி நின்றார் பழனத்து அரசே உன் பணி அறிவான் உற்று நின்றார் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #835 ஆடி நின்றாய் அண்டம் ஏழும் கடந்து போய் மேல் அவையும் கூடி நின்றாய் குவி மென்முலையாளையும் கொண்டு உடனே பாடி நின்றாய் பழனத்து அரசே அங்கு ஓர் பால் மதியம் சூடி நின்றாய் அடியேனை அஞ்சாமை குறிக்கொள்வதே மேல் #836 எரித்துவிட்டாய் அம்பினால் புரம் மூன்றும் முன்னே படவும் உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை பரித்துவிட்டாய் பழனத்து அரசே கங்கை வார் சடை மேல் தரித்துவிட்டாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #837 முன்னியும் முன்னை முளைத்தன மூஎயிலும் உடனே மன்னியும் அங்கும் இருந்தனை மாய மனத்தவர்கள் பன்னிய நூலின் பரிசு அறிவாய் பழனத்து அரசே உன்னியும் உன் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #838 ஏய்த்து அறுத்தாய் இன்பனாய் இருந்தே படைத்தான் தலையை காய்ந்து அறுத்தாய் கண்ணினால் அன்று காமனை காலனையும் பாய்ந்து அறுத்தாய் பழனத்து அரசே என் பழவினை நோய் ஆய்ந்து அறுத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #839 மற்று வைத்தாய் அங்கு ஓர் மால் ஒருபாகம் மகிழ்ந்து உடனே உற்று வைத்தாய் உமையாளொடும் கூடும் பரிசு எனவே பற்றி வைத்தாய் பழனத்து அரசே அங்கு ஓர் பாம்பு ஒரு கை சுற்றி வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #840 ஊரின் நின்றாய் ஒன்றி நின்று விண்டாரையும் ஒள் அழலால் போரில் நின்றாய் பொறையால் உயிர் ஆவி சுமந்துகொண்டு பாரில் நின்றாய் பழனத்து அரசே பணி செய்பவர்கட்கு ஆர நின்றாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #841 போகம் வைத்தாய் புரி புன் சடை மேல் ஓர் புனல் அதனை ஆகம் வைத்தாய் மலையான் மட மங்கை மகிழ்ந்து உடனே பாகம் வைத்தாய் பழனத்து அரசே உன் பணி அருளால் ஆகம் வைத்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் #842 அடுத்து இருந்தாய் அரக்கன் முடி வாயொடு தோள் நெரிய கெடுத்து இருந்தாய் கிளர்ந்தார் வலியை கிளையோடு உடனே படுத்திருந்தாய் பழனத்து அரசே புலியின் உரி தோல் உடுத்திருந்தாய் அடியேனை குறிக்கொண்டு அருளுவதே மேல் 88. திருப்பூந்துருத்தி - திருவிருத்தம் #843 மாலினை மால் உற நின்றான் மலைமகள்-தன்னுடைய பாலனை பால் மதிசூடியை பண்பு உணரார் மதில் மேல் போலனை போர் விடை ஏறியை பூந்துருத்தி மகிழும் ஆலனை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே மேல் #844 மறி உடையான் மழுவாளினன் மா மலைமங்கை ஓர்பால் குறி உடையான் குணம் ஒன்று அறிந்தார் இல்லை கூறில் அவன் பொறி உடை வாள் அரவத்தவன் பூந்துருத்தி உறையும் அறிவு உடை ஆதிபுராணனை நான் அடி போற்றுவதே மேல் #845 மறுத்தவர் மும்மதில் மாய ஓர் வெம் சிலை ஓர் அம்பால் அறுத்தனை ஆல் அதன் கீழனை ஆல் விடம் உண்டு அதனை பொறுத்தனை பூத படையனை பூந்துருத்தி உறையும் நிறுத்தனை நீல_மிடற்றனை யான் அடி போற்றுவதே மேல் #846 உருவினை ஊழி_முதல்வனை ஓதி நிறைந்து நின்ற திருவினை தேசம் படைத்தனை சென்று அடைந்தேனுடைய பொரு வினை எல்லாம் துரந்தனை பூந்துருத்தி உறையும் கருவினை கண் மூன்று உடையனை யான் அடி போற்றுவதே மேல் #847 தக்கன்-தன் வேள்வி தகர்த்தவன் சாரம் அது அன்று கோள் மிக்கன மும்மதில் வீய ஓர் வெம் சிலை கோத்து ஓர் அம்பால் புக்கனன் பொன் திகழ்ந்தன்னது ஓர் பூந்துருத்தி உறையும் நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே மேல் #848 அருகு அடை மாலையும் தான் உடையான் அழகால் அமைந்த உருவுடை மங்கையும் தன் ஒருபால் உலகு ஆயும் நின்றான் பொரு படை வேலினன் வில்லினன் பூந்துருத்தி உறையும் திரு உடை தேச மதியனை யான் அடி போற்றுவதே மேல் #849 மன்றியும் நின்ற மதிலரை மாய வகை கெடுக்க கன்றியும் நின்று கடும் சிலை வாங்கி கனல் அம்பினால் பொன்றியும் போக புரட்டினன் பூந்துருத்தி உறையும் அன்றியும் செய்த பிரான்-தனை யான் அடி போற்றுவதே மேல் #850 மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் என் நிறம் என்று அமரர் பெரியார் இன்னம் தாம் அறியார் பொன் நிறம் மிக்க சடையவன் பூந்துருத்தி உறையும் எல் நிற எந்தை பிரான்-தனை யான் அடி போற்றுவதே மேல் #851 அந்தியை நல்ல மதியினை யார்க்கும் அறிவு அரிய செந்தியை வாட்டும் செம்பொன்னினை சென்று அடைந்தேனுடைய புந்தியை புக்க அறிவினை பூந்துருத்தி உறையும் நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே மேல் #852 பைக்கையும் பாந்தி விழிக்கையும் பாம்பு சடையிடையே வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் மிக்க நல் வேத விகிர்தனை நான் அடி போற்றுவதே மேல் 89. திருநெய்த்தானம் - திருவிருத்தம் #853 பாரிடம் சாடிய பல் உயிர் வான் அமரர்க்கு அருளி கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் ஊர் அடைந்து இ உலகில் பலி கொள்வது நாம் அறியோம் நீர் அடைந்த கரை நின்ற நெய்த்தானத்து இருந்தவனே மேல் #854 தேய்ந்து இலங்கும் சிறு வெண் மதியாய் நின் திரு சடை மேல் பாய்ந்த கங்கை புனல் பல் முகம் ஆகி பரந்து ஒலிப்ப ஆய்ந்து இலங்கும் மழு வேல் உடையாய் அடியேற்கு உரை நீ ஏந்து இள மங்கையும் நீயும் நெய்த்தானத்து இருந்ததுவே மேல் #855 கொன்று அடைந்து ஆடி குமைத்திடும் கூற்றம் ஒன்னார் மதில் மேல் சென்று அடைந்து ஆடி பொருததும் தேசம் எல்லாம் அறியும் குன்று அடைந்து ஆடும் குளிர் பொழில் காவிரியின் கரை மேல் சென்று அடைந்தார் வினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே மேல் #856 கொட்டு முழவு அரவத்தொடு கோலம் பல அணிந்து நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து சிட்டர் திரிபுரம் தீ எழ செற்ற சிலை உடையான் இட்டம் உமையொடு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே மேல் #857 கொய் மலர் கொன்றை துழாய் வன்னி மத்தமும் கூவிளமும் மொய் மலர் வேய்ந்த விரி சடை கற்றை விண்ணோர் பெருமான் மை மலர் நீல நிறம் கருங்கண்ணி ஓர்பால் மகிழ்ந்தான் நின்மலன் ஆடல் நிலயம் நெய்த்தானத்து இருந்தவனே மேல் #858 பூம் தார் நறும் கொன்றை மாலையை வாங்கி சடைக்கு அணிந்து கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி சேர்ந்து ஆர் உமையவளோடும் நெய்த்தானத்து இருந்தவனே மேல் #859 பற்றின பாம்பன் படுத்த புலி உரி தோல் உடையன் முற்றின மூன்று மதில்களை மூட்டி எரித்து அறுத்தான் சுற்றிய பூத படையினன் சூலம் மழு ஒரு மான் செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே மேல் #860 விரித்த சடையினன் விண்ணவர்_கோன் விடம் உண்ட கண்டன் உரித்த கரி உரி மூடி ஒன்னார் மதில் மூன்று உடனே எரித்த சிலையினன் ஈடு அழியாது என்னை ஆண்டுகொண்ட தரித்த உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே மேல் #861 தூங்கான் துளங்கான் துழாய் கொன்றை துன்னிய செம் சடை மேல் வாங்கா மதியமும் வாள் அரவும் கங்கை தான் புனைந்தான் தேங்கார் திரிபுரம் தீ எழ எய்து தியக்கு அறுத்து நீங்கான் உமையவளோடு நெய்த்தானத்து இருந்தவனே மேல் #862 ஊட்டி நின்றான் பொரு வானில் அம் மும்மதில் தீ அம்பினால் மாட்டி நின்றான் அன்றினார் வெந்து வீழவும் வானவர்க்கு காட்டி நின்றான் கத மா கங்கை பாய ஓர் வார் சடையை நீட்டி நின்றான் திரு நின்ற நெய்த்தானத்து இருந்தவனே மேல் 90. திருவேதிகுடி - திருவிருத்தம் #863 கையது கால் எரி நாகம் கனல் விடு சூலம் அது வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் செய்யினில் நீலம் மணம் கமழும் திரு வேதிகுடி ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #864 கை தலை மான் மறி ஏந்திய கையன் கனல் மழுவன் பொய் தலை ஏந்தி நல் பூதி அணிந்து பலி திரிவான் செய்-தலை வாளைகள் பாய்ந்து உகளும் திரு வேதிகுடி அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #865 முன் பின் முதல்வன் முனிவன் எம் மேலை வினை கழித்தான் அன்பின் நிலை இல் அவுணர்புரம் பொடி ஆன செய்யும் செம்பொனை நல் மலர் மேலவன் சேர் திரு வேதிகுடி அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #866 பத்தர்கள் நாளும் மறவார் பிறவியை ஒன்று அறுப்பான் முத்தர்கள் முன்னம் பணிசெய்து பாரிடம் முன் உயர்ந்தான் கொத்தன கொன்றை மணம் கமழும் திரு வேதிகுடி அத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #867 ஆன் அணைந்து ஏறும் குறி குணம் ஆர் அறிவார் அவர் கை மான் அணைந்து ஆடும் மதியும் புனலும் சடைமுடியன் தேன் அணைந்து ஆடிய வண்டு பயில் திரு வேதிகுடி ஆன் அண் ஐந்து ஆடும் மழுவனை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #868 எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழிய பண்ணின் இசை மொழி பாடிய வானவர்தாம் பணிவார் திண்ணென் வினைகளை தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #869 ஊர்ந்த விடை உகந்து ஏறிய செல்வனை நாம் அறியோம் ஆர்ந்த மட மொழி மங்கை ஓர்பாகம் மகிழ்ந்து உடையான் சேர்ந்த புனல் சடை செல்வ பிரான் திரு வேதிகுடி சார்ந்த வயல் அணி தண்_அமுதை அடைந்து ஆடுதுமே மேல் #870 எரியும் மழுவினன் எண்ணியும் மற்றொருவன் தலையுள் திரியும் பலியினன் தேயமும் நாடும் எல்லாம் உடையான் விரியும் பொழில் அணி சேறு திகழ் திரு வேதிகுடி அரிய அமுதினை அன்பர்களோடு அடைந்து ஆடுதுமே மேல் #871 மை அணி கண்டன் மறை விரி நாவன் மதித்து உகந்த மெய் அணி நீற்றன் விழுமிய வெண் மழுவாள் படையன் செய்ய கமலம் மணம் கமழும் திரு வேதிகுடி ஐயனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் #872 வருத்தனை வாள் அரக்கன் முடி தோளொடு பத்து இறுத்த பொருத்தனை பொய்யா அருளனை பூத படை உடைய திருத்தனை தேவர்_பிரான் திரு வேதிகுடி உடைய அருத்தனை ஆராவமுதினை நாம் அடைந்து ஆடுதுமே மேல் 91. திருவையாறு - திருவிருத்தம் #873 குறுவித்தவா குற்ற நோய் வினை காட்டி குறுவித்த நோய் உறுவித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி அறிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே செறிவித்தவர் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #874 கூர்வித்தவா குற்றம் நோய் வினை காட்டியும் கூர்வித்த நோய் ஊர்வித்தவா உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி ஆர்வித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே சேர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #875 தாக்கினவா சலம் மேல் வினை காட்டியும் தண்டித்த நோய் நீக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி ஆக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே நோக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #876 தருக்கின நான் தகவு இன்றியும் ஓட சலம் அதனால் நெருக்கினவா நெடுநீரின் நின்று ஏற நினைந்து அருளி உருக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே பெருக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #877 இழிவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து கழிவித்தவா கட்ட நோய் வினை தீர்ப்பான் கலந்து அருளி அழிவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே தொழுவித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #878 இடைவித்த ஆறு இட்ட நோய் வினை காட்டி இடர்ப்படுத்து உடைவித்த ஆறு உற்ற நோய் வினை தீர்ப்பான் உகந்து அருளி அடைவித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே தொடர்வித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #879 படக்கினவா பட நின்று பல் நாளும் படக்கின நோய் அடக்கின ஆறு அது அன்றியும் தீவினை பாவம் எல்லாம் அடக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே தொடக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #880 மறப்பித்தவா வல்லை நோய் வினை காட்டி மறப்பித்த நோய் துறப்பித்தவா துக்க நோய்வினை தீர்ப்பான் உகந்து அருளி இறப்பித்த ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே சிறப்பித்தவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #881 துயக்கினவா துக்க நோய் வினை காட்டி துயக்கின நோய் இயக்கின ஆறு இட்ட நோய் வினை தீர்ப்பான் இசைந்து அருளி அயக்கின ஆறு அடியேனை ஐயாறன் அடிமைக்களே மயக்கினவா தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் #882 கறுத்துமிட்டார் கண்டம் கங்கை சடை மேல் கரந்து அருளி இறுத்துமிட்டார் இலங்கைக்கு இறை-தன்னை இருபது தோள் அறுத்துமிட்டார் அடியேனை ஐயாறன் அடிமைக்களே பொறுத்தும் இட்டார் தொண்டனேனை தன் பொன் அடி கீழ் எனையே மேல் 92. திருவையாறு - திருவிருத்தம் #883 சிந்திப்பு அரியன சிந்திப்பவர்க்கு சிறந்து செந்தேன் முந்தி பொழிவன முத்தி கொடுப்பன மொய்த்து இருண்டு பந்தித்து நின்ற பழவினை தீர்ப்பன பாம்பு சுற்றி அந்தி பிறை அணிந்து ஆடும் ஐயாறன் அடித்தலமே மேல் #884 இழித்தன ஏழ்ஏழ் பிறப்பும் அறுத்தன என் மனத்தே பொழித்தன போர் எழில் கூற்றை உதைத்தன போற்றவர்க்காய் கிழித்தன தக்கன் கிளர் ஒளி வேள்வியை கீழ முன் சென்று அழித்தன ஆறு அங்கம் ஆன ஐயாறன் அடித்தலமே மேல் #885 மணி நிறம் ஒப்பன பொன் நிறம் மன்னின மின் இயல் வாய் கணி நிறம் அன்ன கயிலை பொருப்பன காதல்செய்ய துணிவன சீலத்தர் ஆகி தொடர்ந்து விடாத தொண்டர்க்கு அணியன சேயன தேவர்க்கு ஐயாறன் அடித்தலமே மேல் #886 இருள் தரு துன்ப படலம் மறைப்ப மெய்ஞ்ஞானம் என்னும் பொருள் தரு கண் இழந்து உண் பொருள் நாடி புகல் இழந்த குருடரும் தம்மை பரவ கொடு நரக குழி-நின்று அருள்தரு கை கொடுத்து ஏற்றும் ஐயாறன் அடித்தலமே மேல் #887 எழுவாய் இறுவாய் இலாதன எங்கள் பிணி தவிர்த்து வழுவா மருத்துவம் ஆவன மா நரக குழிவாய் விழுவாய் அவர் தம்மை வீழ்ப்பன மீட்பன மிக்க அன்போடு அழுவார்க்கு அமுதங்கள் காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #888 துன்ப கடலிடை தோணி தொழில் பூண்டு தொண்டர்-தம்மை இன்ப கரை முகந்து ஏற்றும் திறத்தன மாற்று அயலே பொன் பட்டு ஒழுக பொருந்து ஒளி செய்யும் அ பொய் பொருந்தா அன்பர்க்கு அணியன காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #889 களித்து கலந்தது ஓர் காதல் கசிவொடு காவிரி-வாய் குளித்து தொழுது முன் நின்ற இ பத்தரை கோது இல் செந்தேன் தெளித்து சுவை அமுது ஊட்டி அமரர்கள் சூழ் இருப்ப அளித்து பெரும் செல்வம் ஆக்கும் ஐயாறன் அடித்தலமே மேல் #890 திருத்தி கருத்தினை செவ்வே நிறுத்தி செறுத்து உடலை வருத்தி கடி மலர் வாள் எடுத்து ஓச்சி மருங்கு சென்று விருத்திக்கு உழக்க வல்லோர்கட்கு விண் பட்டிகை இடுமால் அருத்தித்து அரும் தவர் ஏத்தும் ஐயாறன் அடித்தலமே மேல் #891 பாடும் பறண்டையும் மொந்தையும் ஆர்ப்ப பரந்து பல் பேய் கூடி முழவ குவி கவிழ் கொட்ட குறுநரிகள் நீடும் குழல்செய்ய வையம் நெளிய நிண பிணக்காட்டு ஆடும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #892 நின் போல் அமரர்கள் நீள் முடி சாய்த்து நிமிர்ந்து உகுத்த பைம் போது உழக்கி பவளம் தழைப்பன பாங்கு அறியா எம்போலிகள் பறித்து இட்ட இலையும் முகையும் எல்லாம் அம் போது என கொள்ளும் ஐயன் ஐயாறன் அடித்தலமே மேல் #893 மலையான்மடந்தை மனத்தன வானோர் மகுடம் மன்னி நிலையாய் இருப்பன நின்றோர் மதிப்பன நீள் நிலத்து புலை ஆடு புன்மை தவிர்ப்பன பொன்னுலகம் அளிக்கும் அலை ஆர் புனல் பொன்னி சூழ்ந்த ஐயாறன் அடித்தலமே மேல் #894 பொலம் புண்டரிக புது மலர் போல்வன போற்றி என்பார் புலம்பும் பொழுதும் புணர் துணை ஆவன பொன் அனையாள் சிலம்பும் செறி பாடகமும் செழும் கிண்கிணி திரளும் அலம்பும் திருவடி காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #895 உற்றார் இலாதார்க்கு உறு துணை ஆவன ஓதி நன் நூல் கற்றார் பரவ பெருமை உடையன காதல் செய்ய கிற்பார்-தமக்கு கிளர் ஒளி வானகம்தான் கொடுக்கும் அற்றார்க்கு அரும் பொருள் காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #896 வானை கடந்து அண்டத்து அப்பால் மதிப்பன மந்திரிப்பார் ஊனை கழித்து உய்யக்கொண்டு அருள்செய்வன உத்தமர்க்கு ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச ஆனை உரித்தன காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #897 மாதிரம் மா நிலம் ஆவன வானவர் மா முகட்டின் மீதன மென் கழல் வெம் கச்சு வீக்கின வெம் நமனார் தூதரை ஓட துரப்பன துன்பு அற தொண்டுபட்டார்க்கு ஆதரம் ஆவன காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #898 பேணி தொழுமவர் பொன் உலகு ஆள பிறங்கு அருளால் ஏணிப்படி நெறி இட்டு கொடுத்து இமையோர் முடி மேல் மாணிக்கம் ஒத்து மரகதம் போன்று வயிரம் மன்னி ஆணிக்கனகமும் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே மேல் #899 ஓதிய ஞானமும் ஞானப்பொருளும் ஒலி சிறந்த வேதியர் வேதமும் வேள்வியும் ஆவன விண்ணும் மண்ணும் சோதி அம் செம் சுடர் ஞாயிறும் ஒப்பன தீ மதியோடு ஆதியும் அந்தமும் ஆன ஐயாறன் அடித்தலமே மேல் #900 சுணங்கு முகத்து துணை முலை பாவை சுரும்பொடு வண்டு அணங்கும் குழலி அணி ஆர் வளை கரம் கூப்பி நின்று வணங்கும் பொழுதும் வருடும் பொழுதும் வண் காந்தள் ஒண் போது அணங்கும் அரவிந்தம் ஒக்கும் ஐயாறன் அடித்தலமே மேல் #901 சுழல் ஆர் துயர் வெயில் சுட்டிடும்போது அடித்தொண்டர் துன்னும் நிழல் ஆவன என்றும் நீங்கா பிறவி நிலை கெடுத்து கழலா வினைகள் கழற்றுவ காலவனம் கடந்த அழல் ஆர் ஒளியன காண்க ஐயாறன் அடித்தலமே மேல் #902 வலியான் தலை பத்தும் வாய்விட்டு அலற வரை அடர்த்து மெலியா வலி உடை கூற்றை உதைத்து விண்ணோர்கள் முன்னே பலி சேர் படு கடை பார்த்து பல் நாளும் பலர் இகழ அலி ஆம் நிலை நிற்கும் ஐயன் ஐயாறன் அடித்தலமே மேல் 93. திருக்கணியூர் வீரட்டன் - திருவிருத்தம் #903 வானவர் தானவர் வைகல் மலர் கொணர்ந்து இட்டு இறைஞ்சி தானவர் மால் பிரமன் அறியாத தகைமையினான் ஆனவன் ஆதிபுராணன் அன்று ஓடிய பன்றி எய்த கானவனை கண்டியூர் அண்டவாணர் தொழுகின்றதே மேல் #904 வான மதியமும் வாள் அரவும் புனலோடு சடை தானம் அது என வைத்து உழல்வான் தழல் போல் உருவன் கான மறி ஒன்று கை உடையான் கண்டியூர் இருந்த ஊனம் இல் வேதம் உடையனை நாம் அடி உள்குவதே மேல் #905 பண்டு அங்கு அறுத்தது ஓர் கை உடையான் படைத்தான் தலையை உண்டு அங்கு அறுத்ததும் ஊரொடு நாடு அவைதான் அறியும் கண்டம் கறுத்த மிடறு உடையான் கண்டியூர் இருந்த தொண்டர்பிரானை கண்டீர் அண்டவாணர் தொழுகின்றதே மேல் #906 முடியின் முற்றாதது ஒன்று இல்லை எல்லாம் உடன் தான் உடையான் கொடியும் உற்ற விடை ஏறி ஓர் கூற்று ஒருபால் உடையான் கடிய முற்று அ வினை நோய் களைவான் கண்டியூர் இருந்தான் அடியும் உற்றார் தொண்டர் இல்லை கண்டீர் அண்ட வானவரே மேல் #907 பற்றி ஓர் ஆனை உரித்த பிரான் பவள திரள் போல் முற்றும் அணிந்தது ஓர் நீறு உடையான் முன்னமே கொடுத்த கல் தம் குடையவன்தான் அறியான் கண்டியூர் இருந்த குற்றம் இல் வேதம் உடையானை ஆம் அண்டர் கூறுவதே மேல் #908 போர் பனை யானை உரித்த பிரான் பொறி வாய் அரவம் சேர்ப்பது வான திரை கடல் சூழ் உலகம் இதனை காப்பது காரணம் ஆக கொண்டான் கண்டியூர் இருந்த கூர்ப்பு உடை ஒள் வாள் மழுவனை ஆம் அண்டர் கூறுவதே மேல் #909 அட்டது காலனை ஆய்ந்தது வேதம் ஆறு அங்கம் அன்று சுட்டது காமனை கண் அதனாலே தொடர்ந்து எரிய கட்டு அவை மூன்றும் எரித்த பிரான் கண்டியூர் இருந்த குட்டம் முன் வேத படையனை ஆம் அண்டர் கூறுவதே மேல் #910 அட்டும் ஒலி நீர் அணி மதியும் மலர் ஆன எல்லாம் இட்டு பொதியும் சடை முடியான் இண்டை மாலை அம் கை கட்டும் அரவு அது தான் உடையான் கண்டியூர் இருந்த கொட்டும் பறை உடை கூத்தனை ஆம் அண்டர் கூறுவதே மேல் #911 மாய்ந்தன தீவினை மங்கின நோய்கள் மறுகி விழ தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை காய்ந்த பிரான் கண்டியூர் எம்பிரான் அங்கம் ஆறினையும் ஆய்ந்த பிரான் அல்லனோ அடியேனை ஆட்கொண்டவனே மேல் #912 மண்டி மலையை எடுத்து மத்து ஆக்கி அ வாசுகியை தண்டி அமரர் கடைந்த கடல் விடம் கண்டு அருளி உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே மேல் 94. திருப்பாதிரிப்புலியூர் - திருவிருத்தம் #913 ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய் மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் தோன்றா துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே மேல் #914 பற்றாய் நினைந்திடு எப்போதும் நெஞ்சே இந்த பாரை முற்றும் சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரியது உண்டே மேல் #915 விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு அடையா அவலம் அரு வினை சாரா நமனை அஞ்சோம் புடை ஆர் கமலத்து அயன் போல்பவர் பாதிரிப்புலியூர் உடையான் அடியார் அடி அடியோங்கட்கு அரிய உண்டே மேல் #916 மாயம் எல்லாம் முற்ற விட்டு இருள் நீங்க மலைமகட்கே நேயம் நிலாவ இருந்தான் அவன்-தன் திருவடிக்கே தேயம் எல்லாம் நின்று இறைஞ்சும் திரு பாதிரிப்புலியூர் மேய நல்லான் மலர் பாதம் என் சிந்தையுள் நின்றனவே மேல் #917 வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து சித்தம் ஒருக்கி சிவாயநம என்று இருக்கின் அல்லால் மொய்த்த கதிர் மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர் அத்தன் அருள் பெறல் ஆமோ அறிவு இலா பேதை நெஞ்சே மேல் #918 கருவாய் கிடந்து உன் கழலே நினையும் கருத்து உடையேன் உருவாய் தெரிந்து உன்தன் நாமம் பயின்றேன் உனது அருளால் திருவாய் பொலிய சிவாயநம என்று நீறு அணிந்தேன் தருவாய் சிவகதி நீ பாதிரிப்புலியூர் அரனே மேல் #919 எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் திண் ஆர் அசுரர் திரிபுரம் தீ எழ செற்றவனே பண் ஆர்ந்து அமைந்த பொருள்கள் பயில் பாதிரிப்புலியூர் கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே மேல் #920 புழுவாய் பிறக்கினும் புண்ணியா உன் அடி என் மனத்தே வழுவாது இருக்க வரம் தரவேண்டும் இ வையகத்தே தொழுவார்க்கு இரங்கி இருந்து அருள்செய் பாதிரிப்புலியூர் செழு நீர் புனல் கங்கை செம் சடை மேல் வைத்த தீ_வண்ணனே மேல் #921 மண் பாதலம் புக்கு மால் கடல் மூடி மற்று ஏழ்உலகும் விண்-பால் திசை கெட்டு இரு சுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் கண் பாவும் நெற்றி கடவுள் சுடரான் கழல் இணையே மேல் #922 திருந்தா அமணர்-தம் தீ நெறி பட்டு திகைத்து முத்தி தரும் தாள் இணைக்கே சரணம் புகுந்தேன் வரை எடுத்த பொருந்தா அரக்கன் உடல் நெரித்தாய் பாதிரிப்புலியூர் இருந்தாய் அடியேன் இனி பிறவாமல் வந்து ஏன்றுகொள்ளே மேல் 95. திருவீழிமிழலை - திருவிருத்தம் #923 வான் சொட்டச்சொட்ட நின்று அட்டும் வளர் மதியோடு அயலே தேன் சொட்டச்சொட்ட நின்று அட்டும் திரு கொன்றை சென்னி வைத்தீர் மான் பெட்டை நோக்கி மணாளீர் மணி நீர் மிழலை உள்ளீர் நான் சட்ட உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #924 அந்தமும் ஆதியும் ஆகி நின்றீர் அண்டம் எண் திசையும் பந்தமும் வீடும் பரப்புகின்றீர் பசு ஏற்று உகந்தீர் வெம் தழல் ஓம்பும் மிழலை உள்ளீர் என்னை தென் திசைக்கே உந்திடும்போது மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #925 அலைக்கின்ற நீர் நிலம் காற்று அனல் அம்பரம் ஆகி நின்றீர் கலை கன்று சேரும் கரத்தீர் கலைப்பொருள் ஆகி நின்றீர் விலக்கு இன்றி நல்கும் மிழலை உள்ளீர் மெய்யில் கையொடு கால் குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #926 தீ தொழிலான் தலை தீயில் இட்டு செய்த வேள்வி செற்றீர் பேய்த்தொழிலாட்டியை பெற்றுடையீர் பிடித்து திரியும் வேய் தொழிலாளர் மிழலை உள்ளீர் விக்கி அஞ்சுஎழுத்தும் ஓத்து ஒழிந்து உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #927 தோள் பட்ட நாகமும் சூலமும் சுத்தியும் பத்திமையால் மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறு உடையீர் நாள் பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன் தமர்-தம் கோள்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #928 கண்டியில் பட்ட கழுத்து உடையீர் கரி காட்டில் இட்ட பண்டியில் பட்ட பரிகலத்தீர் பதி வீழி கொண்டீர் உண்டியில் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மை ஐவர் கொண்டியில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #929 தோற்றம் கண்டான் சிரம் ஒன்று கொண்டீர் தூய வெள் எருது ஒன்று ஏற்றம் கொண்டீர் எழில் வீழிமிழலை இருக்கை கொண்டீர் சீற்றம் கொண்டு என் மேல் சிவந்தது ஓர் பாசத்தால் வீசிய வெம் கூற்றம் கண்டு உம்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #930 சுழிப்பட்ட கங்கையும் திங்களும் சூடி சொக்கம் பயின்றீர் பழிப்பட்ட பாம்பு அரை பற்று உடையீர் படர் தீ பருக விழிப்பட்ட காமனை விட்டீர் மிழலை உள்ளீர் பிறவி சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #931 பிள்ளையின் பட்ட பிறைமுடியீர் மறை ஓத வல்லீர் வெள்ளையில் பட்டது ஓர் நீற்றீர் விரி நீர் மிழலை உள்ளீர் நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் கொள்ளையில் பட்டு மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் #932 கறுக்கொண்டு அரக்கன் கயிலையை பற்றிய கையும் மெய்யும் நெறுக்கென்று இற செற்ற சேவடியால் கூற்றை நீறுசெய்தீர் வெறி கொன்றை மாலை முடியீர் விரி நீர் மிழலை உள்ளீர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னை குறிக்கொண்-மினே மேல் 96. திருச்சத்திமுற்றம் - திருவிருத்தம் #933 கோவாய் முடுகி அடு திறல் கூற்றம் குமைப்பதன் முன் பூ ஆர் அடிச்சுவடு என் மேல் பொறித்துவை போக விடில் மூவா முழு பழி மூடும் கண்டாய் முழங்கும் தழல் கை தேவா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #934 காய்ந்தாய் அநங்கன் உடலம் பொடிபட காலனை முன் பாய்ந்தாய் உயிர் செக பாதம் பணிவார்-தம் பல் பிறவி ஆய்ந்துஆய்ந்து அறுப்பாய் அடியேற்கு அருளாய் உன் அன்பர் சிந்தை சேர்ந்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #935 பொத்து ஆர் குரம்பை புகுந்து ஐவர் நாளும் புகல் அழிப்ப மத்து ஆர் தயிர் போல் மறுகும் என் சிந்தை மறுக்கு ஒழிவி அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் அமரர்கள்-தம் சித்தா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #936 நில்லா குரம்பை நிலையா கருதி இ நீள் நிலத்து ஒன்று அல்லா குழி வீழ்ந்து அயர்வுறுவேனை வந்து ஆண்டுகொண்டாய் வில் ஏர் புருவத்து உமையாள் கணவா விடின் கெடுவேன் செல்வா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #937 கருவுற்று இருந்து உன் கழலே நினைந்தேன் கரு புவியில் தெருவில் புகுந்தேன் திகைத்த அடியேனை திகைப்பு ஒழிவி உருவில் திகழும் உமையாள் கணவா விடின் கெடுவேன் திருவின் பொலி சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #938 வெம்மை நமன் தமர் மிக்கு விரவி விழுப்பதன் முன் இம்மை உன் தாள் என்தன் நெஞ்சத்து எழுதிவை ஈங்கு இகழில் அம்மை அடியேற்கு அருளுதி என்பது இங்கு ஆர் அறிவார் செம்மை தரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #939 விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெம் கணையால் சுட்டாய் என் பாச தொடர்பு அறுத்து ஆண்டுகொள் தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #940 இகழ்ந்தவன் வேள்வி அழித்திட்டு இமையோர் பொறை இரப்ப நிகழ்ந்திட அன்றே விசயமும் கொண்டாய் நீல_கண்டா புகழ்ந்த அடியேன்-தன் புன்மைகள் தீர புரிந்து நல்காய் திகழ்ந்த திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #941 தக்கு ஆர்வம் எய்தி சமண் தவிர்த்து உன்தன் சரண் புகுந்தேன் எ காதல் எ பயன் உன் திறம் அல்லால் எனக்கு உளதே மிக்கார் திலையுள் விருப்பா மிக வட மேரு என்னும் திக்கா திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் #942 பொறி தேர் அரக்கன் பொருப்பு எடுப்புற்றவன் பொன் முடி தோள் இற தாள் ஒரு விரல் ஊன்றிட்டு அலற இரங்கி ஒள் வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன் செய் குற்ற கொடுவினை நோய் செறுத்தாய் திரு சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே மேல் 97. திருநல்லூர் - திருவிருத்தம் #943 அட்டு-மின் இல் பலி என்றுஎன்று அகம் கடை-தோறும் வந்து மட்டு அவிழும் குழலார் வளை கொள்ளும் வகை என்-கொலோ கொட்டிய பாணி எடுத்திட்ட பாதமும் கோள் அரவும் நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே மேல் #944 பெண் இட்டம் பண்டையது அன்று இவை பெய் பலிக்கு என்று உழல்வார் நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே பண் இட்ட பாடலர் ஆடலராய் பற்றி நோக்கி நின்று கண்ணிட்டு போயிற்று காரணம் உண்டு கறை_கண்டரே மேல் #945 பட ஏர் அரவு அல்குல் பாவை நல்லீர் பகலே ஒருவர் இடுவாரிடை பலி கொள்பவர் போல வந்து இல் புகுந்து நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ வட-பால் கயிலையும் தென்-பால் நல்லூரும் தம் வாழ் பதியே மேல் #946 செம் சுடர் சோதி பவள திரள் திகழ் முத்து அனைய நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் துஞ்சிடை கண்டு கனவின்-தலை தொழுதேற்கு அவன்தான் நெஞ்சிடை நின்று அகலான் பல காலமும் நின்றனனே மேல் #947 வெண் மதி சூடி விளங்க நின்றானை விண்ணோர்கள் தொழ நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே திண் நிலயம் கொடு நின்றான் திரி புரம் மூன்று எரித்தான் கண்ணுளும் நெஞ்சத்து அகத்துளும் உள கழல் சேவடியே மேல் #948 தேற்றப்பட திரு நல்லூர் அகத்தே சிவன் இருந்தால் தோற்றப்பட சென்று கண்டுகொள்ளார் தொண்டர் துன்மதியால் ஆற்றில் கெடுத்து குளத்தினில் தேடிய ஆதரை போல் காற்றின் கடுத்து உலகு எல்லாம் திரிதர்வர் காண்பதற்கே மேல் #949 நாள் கொண்ட தாமரை பூ தடம் சூழ்ந்த நல்லூர் அகத்தே கீள் கொண்ட கோவணம் கா என்று சொல்லி கிறிபட தான் வாள் கொண்ட நோக்கி மனைவியொடும் அங்கு ஓர் வாணிகனை ஆட்கொண்ட வார்த்தை உரைக்கும் அன்றோ இ அகலிடமே மேல் #950 அறை மல்கு பைம் கழல் ஆர்க்க நின்றான் அணி ஆர் சடை மேல் நறை மல்கு கொன்றை அம் தார் உடையானும் நல்லூர் அகத்தே மறை மல்கு பாடலன் ஆடலன் ஆகி பரிசு அழித்தான் பிறை மல்கு செம் சடை தாழ நின்று ஆடிய பிஞ்ஞகனே மேல் #951 மன்னிய மா மறையோர் மகிழ்ந்து ஏத்த மருவி என்றும் துன்னிய தொண்டர்கள் இன்னிசை பாடி தொழுது நல்லூர் கன்னியர்தாமும் கனவிடை உன்னிய காதலரை அன்னியர் அற்றவர் அங்கணனே அருள் நல்கு என்பரே மேல் #952 திரு அமர் தாமரை சீர் வளர் செங்கழுநீர் கொள் நெய்தல் குரு அமர் கோங்கம் குரா மகிழ் சண்பகம் கொன்றை வன்னி மரு அமர் நீள் கொடி மாடம் மலி மறையோர்கள் நல்லூர் உரு அமர் பாகத்து உமையவள்_பாகனை உள்குதுமே மேல் #953 செல் ஏர் கொடியன் சிவன் பெருங்கோயில் சிவபுரமும் வல்லேன் புகவும் மதில் சூழ் இலங்கையர்_காவலனை கல் ஆர் முடியொடு தோள் இற செற்ற கழல் அடியான் நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே மேல் 98. திருவையாறு - திருவிருத்தம் #954 அந்தி வட்ட திங்கள்கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என் புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ சிந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே மேல் #955 பாடக கால் கழல் கால் பரிதி கதிர் உக்க அந்தி நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் ஆடக கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே மேல் 99. திருக்கச்சியேகம்பம் - திருவிருத்தம் #956 ஓதுவித்தாய் முன் அறவுரை காட்டி அமணரொடே காதுவித்தாய் கட்டம் நோய் பிணி தீர்த்தாய் கலந்தருளி போதுவித்தாய் நின் பணி பிழைக்கின் புளியம்வளாரால் மோதுவிப்பாய் உகப்பாய் முனிவாய் கச்சி ஏகம்பனே மேல் #957 எத்தைக்கொண்டு எத்தகை ஏழை அமணொடு இசைவித்து எனை கொத்தைக்கு மூங்கர் வழி காட்டுவித்து என்ன கோகு செய்தாய் முத்தின் திரளும் பளிங்கினின் சோதியும் மொய் பவள தொத்தினை ஏய்க்கும் படியாய் பொழில் கச்சி ஏகம்பனே மேல் #958 மெய் அம்பு கோத்த விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் பொய் அம்பு எய்து ஆவம் அருளிச்செய்தாய் புரம் மூன்று எரிய கை அம்பு எய்தாய் நுன் கழல் அடி போற்றா கயவர் நெஞ்சில் குய்யம் பெய்தால் கொடி மா மதில் சூழ் கச்சி ஏகம்பனே மேல் #959 குறிக்கொண்டு இருந்து செந்தாமரை ஆயிரம் வைகல்வைகல் நெறிப்பட இண்டை புனைகின்ற மாலை நிறை அழிப்பான் கறை_கண்ட நீ ஒரு பூ குறைவித்து கண் சூல்விப்பதே பிறை துண்ட வார்சடையாய் பெரும் காஞ்சி எம் பிஞ்ஞகனே மேல் #960 உரைக்கும் கழிந்து இங்கு உணர்வு அரியான் உள்குவார் வினையை கரைக்கும் என கைதொழுவது அல்லால் கதிரோர்கள் எல்லாம் விரை கொள் மலரவன் மால் எண் வசுக்கள் ஏகாதசர்கள் இரைக்கும் அமிர்தர்க்கு அறிய ஒண்ணான் எங்கள் ஏகம்பனே மேல் #961 கருவுற்ற நாள் முதல் ஆக உன் பாதமே காண்பதற்கு உருகிற்று என் உள்ளமும் நானும் கிடந்து அலந்து எய்த்தொழிந்தேன் திரு ஒற்றியூரா திரு ஆலவாயா திரு ஆரூரா ஒரு பற்று இலாமையும் கண்டு இரங்காய் கச்சி ஏகம்பனே மேல் #962 அரி அயன் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் உரிய நின் கொற்ற கடைத்தலையார் உணங்கா கிடந்தார் புரிதரு புன் சடை போக முனிவர் புலம்புகின்றார் எரிதரு செம் சடை ஏகம்ப என்னோ திருக்குறிப்பே மேல் #963 பாம்பு அரை சேர்த்தி படரும் சடை முடி பால்_வண்ணனே கூம்பலை செய்த கரதலத்து அன்பர்கள் கூடி பல் நாள் சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் சரண் என்று ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் கச்சி ஏகம்பனே மேல் #964 ஏன்றுகொண்டாய் என்னை எம்பெருமான் இனி அல்லம் என்னில் சான்றுகண்டாய் இ உலகம் எல்லாம் தனியேன் என்று என்னை ஊன்றி நின்றார் ஐவர்க்கு ஒற்றி வைத்தாய் பின்னை ஒற்றி எல்லாம் சோன்றுகொண்டாய் கச்சி ஏகம்பம் மேய சுடர்_வண்ணனே மேல் #965 உந்தி நின்றார் உன்தன் ஓலக்க சூளைகள் வாய்தல் பற்றி துன்றி நின்றார் தொல்லை வானவர் ஈட்டம் பணி அறிவான் வந்து நின்றார் அயனும் திருமாலும் மதில் கச்சியாய் இந்த நின்றோம் இனி எங்ஙனமோ வந்து இறைஞ்சுவதே மேல் 100. திருஇன்னம்பர் - திருவிருத்தம் #966 மன்னும் மலைமகள் கையால் வருடின மா மறைகள் சொன்ன துறை-தொறும் தூ பொருள் ஆயின தூ கமலத்து அன்ன வடிவின அன்புடை தொண்டர்க்கு அமுது அருத்தி இன்னல் களைவன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #967 பைதல் பிண குழை காளி வெம் கோபம் பங்கப்படுப்பான் செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் உய்தல்பொருட்டு வெம் கூற்றை உதைத்தன உம்பர்க்கு எல்லாம் எய்தற்கு அரியன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #968 சுணங்கு நின்று ஆர் கொங்கையாள் உமை சூடின தூ மலரால் வணங்கி நின்று உம்பர்கள் வாழ்த்தின மன்னும் மறைகள் தம்மில் பிணங்கி நின்று இன்னஅளவு என்று அறியாதன பேய் கணத்தோடு இணங்கி நின்று ஆடின இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #969 ஆறு ஒன்றிய சமயங்களின் அவ்வவர்க்கு அ பொருள்கள் வேறு ஒன்று இலாதன விண்ணோர் மதிப்பன மிக்கு உவமன் மாறு ஒன்று இலாதன மண்ணொடு விண்ணகம் மாய்ந்திடினும் ஈறு ஒன்று இலாதன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #970 அரக்கர்-தம் முப்புரம் அம்பு ஒன்றினால் அடல் அங்கியின்-வாய் கரக்க முன் வைதிகத்தேர் மிசை நின்றன கட்டுருவம் பரக்க வெம் கானிடை வேடு உரு ஆயின பல் பதி-தோறு இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #971 கீண்டும் கிளர்ந்தும் பொன் கேழல் முன் தேடின கேடு படா ஆண்டும் பலபல ஊழியும் ஆயின ஆரணத்தின் வேண்டும் பொருள்கள் விளங்க நின்று ஆடின மேவு சிலம்பு ஈண்டும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #972 போற்றும் தகையன பொல்லா முயலகன் கோப புன்மை ஆற்றும் தகையன ஆறுசமயத்தவர் அவரை தேற்றும் தகையன தேறிய தொண்டரை செந்நெறிக்கே ஏற்றும் தகையன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #973 பயம் புன்மை சேர்தரு பாவம் தவிர்ப்பன பார்ப்பதி-தன் குயம் பொன்மை மா மலர் ஆக குலாவின கூட ஒண்ணா சயம்பு என்றே தகு தாணு என்றே சதுர்வேதங்கள் நின்று இயம்பும் கழலின இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #974 அயன் நெடு மால் இந்திரன் சந்திராதித்தர் அமரர் எல்லாம் சயசய என்று முப்போதும் பணிவன தண் கடல் சூழ் வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும் இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் #975 தருக்கிய தக்கன்-தன் வேள்வி தகர்த்தன தாமரை போது உருக்கிய செம்பொன் உவமன் இலாதன ஒண் கயிலை நெருக்கிய வாள் அரக்கன் தலை பத்தும் நெரித்து அவன்-தன் இருக்கு இயல்பாயின இன்னம்பரான்-தன் இணை அடியே மேல் 101. திருவாரூர் - திருவிருத்தம் #976 குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ அலம்பு அலம்பு ஆவரு தண் புனல் ஆரூர் அவிர் சடையான் சிலம்பு அலம்பாவரு சேவடியான் தி ருமூலட்டானம் புலம்பல் அம்பு ஆவரு தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #977 மற்று இடம் இன்றி மனை துறந்து அல் உணா வல் அமணர் சொல் திடம் என்று துரிசுபட்டேனுக்கும் உண்டு-கொலோ வில் திடம் வாங்கி விசயனொடு அன்று ஒரு வேடுவனாய் புற்று இடம்கொண்டான்-தன் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #978 ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ செரு வடி வெம் சிலையால் புரம் அட்டவன் சென்று அடையா திரு உடையான் திரு ஆரூர் திருமூலட்டானன் செம் கண் பொரு விடையான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #979 மாசினை ஏறிய மேனியர் வன்கண்ணர் மொண்ணரை விட்டு ஈசனையே நினைந்து ஏசறுவேனுக்கும் உண்டு-கொலோ தேசனை ஆரூர் திருமூலட்டானனை சிந்தைசெய்து பூசனை பூசுரர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #980 அருந்தும்பொழுது உரையாடா அமணர் திறம் அகன்று வருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு உண்டு-கொலோ திருந்திய மா மதில் ஆரூர் திருமூலட்டானனுக்கு பொருந்தும் தவம் உடை தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #981 வீங்கிய தோள்களும் தாள்களுமாய் நின்று வெற்று அரையே மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ தேம் கமழ் சோலை தென் ஆரூர் திருமூலட்டானன் செய்ய பூங்கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #982 பண்ணிய சாத்திர பேய்கள் பறி தலை குண்டரை விட்டு எண் இல் புகழ் ஈசன்-தன் அருள் பெற்றேற்கும் உண்டு-கொலோ திண்ணிய மா மதில் ஆரூர் திருமூலட்டானன் எங்கள் புண்ணியன்-தன் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #983 கரப்பர்கள் மெய்யை தலை பறிக்க சுகம் என்னும் குண்டர் உரைப்பன கேளாது இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ திரு பொலி ஆரூர் திருமூலட்டானன் திரு கயிலை பொருப்பன் விருப்பு அமர் தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #984 கையில் இடு சோறு நின்று உண்ணும் காதல் அமணரை விட்டு உய்யும் நெறி கண்டு இங்கு உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ ஐயன் அணி வயல் ஆரூர் திருமூலட்டானனுக்கு பொய் அன்பு இலா அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் #985 குற்றம் உடைய அமணர் திறம் அது கை அகன்றிட்டு உற்ற கருமம் செய்து உய்ய போந்தேனுக்கும் உண்டு-கொலோ மல் பொலி தோளான் இராவணன்-தன் வலி வாட்டுவித்த பொன் கழலான் அடித்தொண்டர்க்கு தொண்டர் ஆம் புண்ணியமே மேல் 102. திருவாரூர் - திருவிருத்தம் #986 வேம்பினை பேசி விடக்கினை ஓம்பி வினை பெருக்கி தூம்பினை தூர்த்து அங்கு ஓர் சுற்றம் துணை என்று இருத்திர் தொண்டீர் ஆம்பல் அம் பூம் பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடி நிழல் கீழ் சாம்பலை பூசி சலம் இன்றி தொண்டுபட்டு உய்ம்-மின்களே மேல் #987 ஆராய்ந்து அடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்து அடக்கி பார் ஊர் பரப்ப தம் பங்குனி உத்தரம் பால்படுத்தான் நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே மேல் #988 பூம் படிமக்கலம் பொன் படிமக்கலம் என்று இவற்றால் ஆம் படிமக்கலமாகிலும் ஆரூர் இனிது அமர்ந்தார் தாம் படிமக்கலம் வேண்டுவரேல் தமிழ் மாலைகளால் நாம் படிமக்கலம் செய்து தொழுதும் மட நெஞ்சமே மேல் #989 துடிக்கின்ற பாம்பு அரை ஆர்த்து துளங்கா மதி அணிந்து முடி தொண்டர் ஆகி முனிவர் பணி செய்வதேயும் அன்றி பொடிக்கொண்டு பூசி புகும் தொண்டர் பாதம் பொறுத்த பொற்பால் அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே மேல் #990 கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்புறப்பட்டார் இவர்கள் நிற்க அரும்பு அவிழ் தண் பொழில் சூழ் அணி ஆரூர் அமர்ந்த பெம்மான் விரும்பு மனத்தினை யாது ஒன்று நான் உன்னை வேண்டுவனே மேல் #991 கொடி கொள் விதானம் கவரி பறை சங்கம் கைவிளக்கோடு இடிவு இல் பெரும் செல்வம் எய்துவர் எய்தியும் ஊனம் இல்லா அடிகளும் ஆரூர் அகத்தினராயினும் அம் தவள பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே மேல் #992 சங்கு ஒலிப்பித்திடு-மின் சிறுகாலை தடவு அழலில் குங்கிலிய புகைக்கூட்டு என்றும் காட்டி இருபது தோள் அங்கு உலம் வைத்தவன் செம் குருதி புனல் ஓட அம் ஞான்று அங்குலி வைத்தான் அடி தாமரை என்னை ஆண்டனவே மேல் 103. திருநாகைக்காரோணம் - திருவிருத்தம் #993 வடிவு உடை மா மலைமங்கை_பங்கா கங்கை வார்சடையாய் கடி கமழ் சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே பிடி மத வாரணம் பேணும் துரகம் நிற்க பெரிய இடி குரல் வெள் எருது ஏறும் இது என்னை-கொல் எம் இறையே மேல் #994 கற்றார் பயில் கடல் நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே வில் தாங்கிய கரம் வேல் நெடுங்கண்ணி வியன் கரமே நல் தாள் நெடும் சிலை நாண் வலித்த கரம் நின் கரமே செற்றார் புரம் செற்ற சேவகம் என்னை-கொல் செப்பு-மினே மேல் #995 தூ மென் மலர் கணை கோத்து தீ வேள்வி தொழில்படுத்த காமன் பொடிபட காய்ந்த கடல் நாகைக்காரோண நின் நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் சாம் அன்று உரைக்க தகுதி கண்டாய் எங்கள் சங்கரனே மேல் #996 பழிவழி ஓடிய பாவி பறி தலை குண்டர்-தங்கள் மொழிவழி ஓடி முடிவேன் முடியாமை காத்துக்கொண்டாய் கழிவழி ஓதம் உலவு கடல் நாகைக்காரோண என் வழிவழி ஆள் ஆகும் வண்ணம் அருள் எங்கள் வானவனே மேல் #997 செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ கந்தம் மலி பொழில் சூழ் கடல் நாகைக்காரோணம் என்றும் சிந்தைசெய்வாரை பிரியாது இருக்கும் திருமங்கையே மேல் #998 பனை புரை கை மத யானை உரித்த பரஞ்சுடரே கனை கடல் சூழ்தரு நாகைக்காரோணத்து எம் கண்_நுதலே மனை துறந்து அல் உணா வல் அமண் குண்டர் மயக்கை நீக்கி எனை நினைந்து ஆட்கொண்டாய்க்கு என் இனி யான் செயும் இச்சைகளே மேல் #999 சீர் மலி செல்வம் பெரிது உடைய செம்பொன் மா மலையே கார் மலி சோலை சுலவு கடல் நாகைக்காரோணனே வார் மலி மென்முலையார் பலி வந்து இட சென்று இரந்து ஊர் மலி பிச்சை கொண்டு உண்பது மாதிமையோ உரையே மேல் #1000 வங்கம் மலி கடல் நாகைக்காரோணத்து எம் வானவனே எங்கள் பெருமான் ஓர் விண்ணப்பம் உண்டு அது கேட்டு அருளீர் கங்கை சடையுள் கரந்தாய் அ களத்தை மெள்ள உமை நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே மேல் #1001 கருந்தடங்கண்ணியும் தானும் கடல் நாகைக்காரோணத்தான் இருந்த திரு மலை என்று இறைஞ்சாது அன்று எடுக்கலுற்றான் பெரும் தலை பத்தும் இருபது தோளும் பிதிர்ந்து அலற இருந்து அருளிச்செய்ததே மற்று செய்திலன் எம் இறையே மேல் 104. திருஅதிகை வீரட்டானம் - திருவிருத்தம் #1002 மாசு இல் ஒள் வாள் போல் மறியும் மணி நீர் திரை தொகுதி ஊசலை ஆடி அங்கு ஒண் சிறை அன்னம் உறங்கலுற்றால் பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல் கண்டு வீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே மேல் #1003 பைம் கால் தவளை பறை கொட்ட பாசிலை நீர் படுகர் அம் கால் குவளை மெல் ஆவி உயிர்ப்ப அருகு உலவும் செம் கால் குருகு இவை சேரும் செறி கெடில கரைத்தே வெம் கால் குரு சிலை வீரன் அருள் வைத்த வீரட்டமே மேல் #1004 அம் மலர்க்கண்ணியர் அஞ்சனம் செம் துவர் வாய் இளையார் வெம் முலை சாந்தம் விலை பெறு மாலை எடுத்தவர்கள் தம் மருங்கிற்கு இரங்கார் தடம் தோள் மெலிய குடைவார் விம்மு புனல் கெடில கரைத்தே எந்தை வீரட்டமே மேல் #1005 மீன் உடை தண் புனல் வீரட்டரே நும்மை வேண்டுகின்றது யான் உடை சில் குறை ஒன்று உளதால் நறும் தண் எருக்கின் தேன் உடை கொன்றை சடை உடை கங்கை திரை தவழும் கூன் உடை திங்கள் குழவி எப்போதும் குறிக்கொண்-மினே மேல் #1006 ஆர் அட்டதேனும் இரந்து உண்டு அகம்அகவன் திரிந்து வேர் அட்ட நிற்பித்திடுகின்றதால் விரி நீர் பரவை சூர் அட்ட வேலவன் தாதையை சூழ் வயல் ஆர் அதிகை வீரட்டத்தானை விரும்பா அரும் பாவ வேதனையே மேல் #1007 படர் பொன் சடையும் பகுவாய் அரவும் பனி மதியும் சுடலை பொடியும் எல்லாம் உளவே அவர் தூய தெண் நீர் கெடில கரை திரு வீரட்டர் ஆவர் கெட்டேன் அடைந்தார் நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே மேல் #1008 காளம் கடந்தது ஓர் கண்டத்தர் ஆகி கண் ஆர் கெடில நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த தாளங்கள் கொண்டும் குழல் கொண்டும் யாழ் கொண்டும் தாம் அங்ஙனே வேடங்கள் கொண்டும் விசும்பு செல்வார் அவர் வீரட்டரே மேல் 105. திருப்புகலூர் - திருவிருத்தம் #1009 தன்னை சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடைய புன்னை பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்-மின்களோ என்னை பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ்நரகத்து என்னை கிடக்கல் ஒட்டான் சிவலோகத்து இருந்திடுமே மேல் #1010 பொன்னை வகுத்து அன்ன மேனியனே புணர் மென்முலையாள் தன்னை வகுத்து அன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய் புன்னை மலர் தலை வண்டு உறங்கும் புகலூர்க்கு அரசே என்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே மேல் #1011 பொன் அளவு ஆர் சடை கொன்றையினாய் புகலூர்க்கு அரசே மன் உள தேவர்கள் தேடும் மருந்தே வலஞ்சுழியாய் என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார் உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே மேல் #1012 ஓண பிரானும் ஒளிர் மா மலர் மிசை உத்தமனும் காண பராவியும் காண்கின்றிலர் கரம் நால் ஐந்து உடை தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் கோணப்பிரானை குறுக குறுகா கொடுவினையே மேல் 106. திருக்கழிப்பாலை - திருவிருத்தம் #1013 நெய்தல் குருகு தன் பிள்ளை என்று எண்ணி நெருங்கி சென்று கைதை மடல் புல்கு தென் கழிப்பாலை அதின் உறைவாய் பைதல் பிறையொடு பாம்பு உடன்வைத்த பரிசு அறியோம் எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே மேல் #1014 பரு மா மணியும் பவளம் முத்தும் பரந்து உந்தி வரை பொரு மால் கரை மேல் திரை கொணர்ந்து ஏற்ற பொலிந்து இலங்கும் கரு மா மிடறு உடை கண்டன் எம்மான் கழிப்பாலை எந்தை பெருமான் அவன் என்னை ஆள்உடையான் இ பெரு நிலத்தே மேல் #1015 நாள்பட்டு இருந்து இன்பம் எய்தலுற்று இங்கு நமன் தமரால் கோட்பட்டு ஒழிவதன் முந்துறவே குளிர் ஆர் தடத்து தாள் பட்ட தாமரை பொய்கை அம் தண் கழிப்பாலை அண்ணற்கு ஆட்பட்டொழிந்தம் அன்றே வல்லமாய் இ அகலிடத்தே மேல் 107. திருக்கடவூர் வீரட்டம் - திருவிருத்தம் #1016 மருள் துயர் தீர அன்று அர்ச்சித்த மாணி மார்க்கண்டேயற்காய் இருட்டிய மேனி வளை வாள் எயிற்று எரி போலும் குஞ்சி சுருட்டிய நாவில் வெம் கூற்றம் பதைப்ப உதைத்து உங்ஙனே உருட்டிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1017 பதத்து எழு மந்திரம் அஞ்சுஎழுத்து ஓதி பரிவினொடும் இதத்து எழு மாணி-தன் இன்னுயிர் உண்ண வெகுண்டு அடர்த்த கதத்து எழு காலனை கண் குருதி புனல் ஆறு ஒழுக உதைத்து எழு சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1018 கரப்புறு சிந்தையர் காண்டற்கு அரியவன் காமனையும் நெருப்பு உமிழ் கண்ணினன் நீள் புனல் கங்கையும் பொங்கு அரவும் பரப்பிய செம் சடை பால்_வண்ணன் காலனை பண்டு ஒரு கால் உரப்பிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1019 மறி திகழ் கையினன் வானவர்_கோனை மனம் மகிழ்ந்து குறித்து எழு மாணி-தன் ஆருயிர் கொள்வான் கொதித்த சிந்தை கறுத்து எழு மூ இலை வேல் உடை காலனை தான் அலற உறுக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1020 குழை திகழ் காதினன் வானவர்_கோனை குளிர்ந்து எழுந்து பழக்கமொடு அர்ச்சித்த மாணி-தன் ஆருயிர் கொள்ள வந்த தழல் பொதி மூ இலை வேல் உடை காலனை தான் அலற உழக்கிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1021 பாலனுக்காய் அன்று பாற்கடல் ஈந்து பணைத்து எழுந்த ஆலினின் கீழ் இருந்து ஆரணம் ஓதி அரு முனிக்காய் சூலமும் பாசமும் கொண்டு தொடர்ந்து அடர்ந்து ஓடி வந்த காலனை காய்ந்த பிரான் கடவூர் உறை உத்தமனே மேல் #1022 படர் சடை கொன்றையும் பன்னக மாலை பணி கயிறா உடை தலை கோத்து உழல் மேனியன் உண் பலிக்கு என்று உழல்வோன் சுடர் பொதி மூ இலை வேல் உடை காலனை துண்டம் அதா உடறிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் #1023 வெண் தலை மாலையும் கங்கை கரோடி விரி சடை மேல் பெண்டு அணி நாயகன் பேய் உகந்து ஆடும் பெருந்தகையான் கண் தனி நெற்றியன் காலனை காய்ந்து கடலின் விடம் உண்டு அருள்செய்த பிரான் கடவூர் உறை உத்தமனே மேல் #1024 கேழல் அது ஆகி கிளறிய கேசவன் காண்பு அரிதாய் வாழி நல் மா மலர் கண் இடந்து இட்ட அம் மால் அவற்கு அன்று ஆழியும் ஈந்து அடு திறல் காலனை அன்று அடர்த்து ஊழியும் ஆய பிரான் கடவூர் உறை உத்தமனே மேல் #1025 தேன் திகழ் கொன்றையும் கூவிள மாலை திரு முடி மேல் ஆன் திகழ் ஐந்து உகந்து ஆடும் பிரான் மலை ஆர்த்து எடுத்த கூன் திகழ் வாள் அரக்கன் முடி பத்தும் குலைந்து விழ ஊன்றிய சேவடியான் கடவூர் உறை உத்தமனே மேல் 108. திருமாற்பேறு - திருவிருத்தம் #1026 மாணிக்கு உயிர் பெற கூற்றை உதைத்தன மாவலி-பால் காணிக்கு இரந்தவன் காண்டற்கு அரியன கண்ட தொண்டர் பேணி கிடந்து பரவப்படுவன பேர்த்தும் அஃதே மாணிக்கம் ஆவன மாற்பேறு உடையான் மலர் அடியே மேல் #1027 கருட தனி பாகன் காண்டற்கு அரியன காதல் செய்யில் குருடர்க்கு முன்னே குடிகொண்டு இருப்பன கோலம் மல்கும் செருட கடி மலர் செல்வி தன் செம் கமல கரத்தால் வருட சிவப்பன மாற்பேறு உடையான் மலர்அடியே மேல் 109. திருத்தூங்கானைமாடம் - திருவிருத்தம் #1028 பொன் ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும் என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இரும் கூற்று அகல மின் ஆரும் மூ இலை சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல் துன் ஆர் கடந்தையுள் தூங்கானைமாட சுடர் கொழுந்தே மேல் #1029 ஆவா சிறு தொண்டன் என் நினைந்தான் என்று அரும் பிணி நோய் காவாது ஒழியின் கலக்கும் உன் மேல் பழி காதல் செய்வார் தேவா திருவடி நீறு என்னை பூசு செந்தாமரையின் பூ ஆர் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் புண்ணியனே மேல் #1030 கடவும் திகிரி கடவாது ஒழிய கயிலை உற்றான் படவும் திரு விரல் ஒன்று வைத்தாய் பனி மால் வரை போல் இடபம் பொறித்து என்னை ஏன்றுகொள்ளாய் இரும் சோலை திங்கள் தடவும் கடந்தையுள் தூங்கானைமாடத்து எம் தத்துவனே மேல் 110. பொது - பசுபதி திருவிருத்தம் #1031 சாம்பலை பூசி தரையில் புரண்டு நின் தாள் பரவி ஏம்பலிப்பார்கட்கு இரங்குகண்டாய் இரும் கங்கை என்னும் காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர் பூண் வன முலை மேல் பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1032 உடம்பை தொலைவித்து உன் பாதம் தலை வைத்த உத்தமர்கள் இடும்பை படாமல் இரங்குகண்டாய் இருள் ஓட செம் தீ அடும்பு ஒத்து அனைய அழல் மழுவா அழலே உமிழும் படம் பொத்து அரவு அரையாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1033 தாரித்திரம் தவிரா அடியார் தடுமாற்றம் என்னும் மூரி திரை பௌவம் நீக்குகண்டாய் முன்னைநாள் ஒரு-கால் வேரி தண் பூம் சுடர் ஐங்கணை வேள் வெந்து வீழ செம் தீ பாரித்த கண் உடையாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1034 ஒருவரை தஞ்சம் என்று எண்ணாது உன் பாதம் இறைஞ்சுகின்றார் அருவினை சுற்றம் அகல்வி கண்டாய் அண்டமே அளவும் பெரு வரை குன்றம் பிளிற பிளந்து வேய்த்தோளி அஞ்ச பரு வரை தோல் உரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1035 இடுக்கு ஒன்றும் இன்றி எஞ்சாமை உன் பாதம் இறைஞ்சுகின்றார்க்கு அடர்க்கின்ற நோயை விலக்குகண்டாய் அண்டம் எண் திசையும் சுடர் திங்கள் சூடி சுழல் கங்கையோடும் சுரும்பு துன்றி படர்க்கொண்ட செஞ்சடையாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1036 அடலை கடல் கழிவான் நின் அடி இணையே அடைந்தார் நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் சுடலை பொடி சுண்ணம் மாசுணம் சூளாமணி கிடந்து படர சுடர் மகுடா எம்மை ஆளும் பசுபதியே மேல் #1037 துறவி தொழிலே புரிந்து உன் சுரும்பு அடியே தொழுவார் மறவி தொழில் அது மாற்றுக்கண்டாய் மதில் மூன்று உடைய அறவை தொழில் புரிந்து அந்தரத்தே செல்லும் மந்திரத்தேர் பறவைப்புரம் எரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் #1038 சித்தத்து உருகி சிவன் எம்பிரான் என்று சிந்தையுள்ளே பித்து பெருக பிதற்றுகின்றார் பிணி தீர்த்து அருளாய் மத்தத்து அரக்கன் இருபது தோளும் முடியும் எல்லாம் பத்து உற்று உற நெரித்தாய் எம்மை ஆளும் பசுபதியே மேல் 111. பொது - சரக்கறைத் திருவிருத்தம் #1039 விடையும் விடை பெரும் பாகா என் விண்ணப்பம் வெம் மழுவாள் படையும் படையாய் நிரைத்த பல் பூதமும் பாய் புலி தோல் உடையும் முடை தலை மாலையும் மாலை பிறை ஒதுங்கும் சடையும் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1040 விஞ்ச தட வரை வெற்பா என் விண்ணப்பம் மேல் இலங்கு சங்க கலனும் சரி கோவணமும் தமருகமும் அந்தி பிறையும் அனல் வாய் அரவும் விரவி எல்லாம் சந்தித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1041 வீந்தார் தலை கலன் ஏந்தீ என் விண்ணப்பம் மேல் இலங்கு சாந்து ஆய வெந்த தவள வெண் நீறும் தகுணிச்சமும் பூம் தாமரை மேனி புள்ளி உழை மான் அதள் புலி தோல் தாம்தாம் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1042 வெம் சமர் வேழத்து உரியாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு வஞ்சமா வந்த வரு புனல் கங்கையும் வான் மதியும் நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை தஞ்சமா வாழும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1043 வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு காலன் கடந்தான் இடம் கயிலாயமும் காமர் கொன்றை மாலை பிறையும் மணி வாய் அரவும் விரவி எல்லாம் சால கிடக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1044 வீழிட்ட கொன்றை அம் தாரார் என் விண்ணப்பம் மேல் இலங்கு சூழிட்டு இருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் ஏழ் இட்டு இருக்கும் நல் அக்கும் அரவும் என்பு ஆமை ஓடும் தாழிட்டு இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1045 விண்டார் புரம் மூன்றும் எய்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு தொண்டு ஆடிய தொண்டு அடிப்பொடி நீறும் தொழுது பாதம் கண்டார்கள் கண்டிருக்கும் கயிலாயமும் காமர் கொன்றை தண் தார் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1046 விடு பட்டி ஏறு உகந்து ஏறீ என் விண்ணப்பம் மேல் இலங்கு கொடுகொட்டி கொக்கரை தக்கை குழல் தாளம் வீணை மொந்தை வடு விட்ட கொன்றையும் வன்னியும் மத்தமும் வாள் அரவும் தடுகுட்டம் ஆடும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1047 வெண் திரை கங்கை விகிர்தா என் விண்ணப்பம் மேல் இலங்கு கண்டிகை பூண்டு கடி சூத்திரம் மேல் கபால வடம் குண்டிகை கொக்கரை கொன்றை பிறை குறள் பூத படை தண்டி வைத்திட்ட சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1048 வேதித்த வெம் மழுவாளீ என் விண்ணப்பம் மேல் இலங்கு சோதி திருக்கும் நல் சூளாமணியும் சுடலை நீறும் பாதி பிறையும் படு தலை துண்டமும் பாய் புலி தோல் சாதித்து இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் #1049 விவந்து ஆடிய கழல் எந்தாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு தவந்தான் எடுக்க தலை பத்து இறுத்தனை தாழ் புலி தோல் சிவந்து ஆடிய பொடி நீறும் சிர மாலை சூடி நின்று தவம்தான் இருக்கும் சரக்கறையோ என் தனி நெஞ்சமே மேல் 112. பொது - தனித் திருவிருத்தம் #1050 வெள்ளி குழை துணி போலும் கபாலத்தன் வீழ்ந்து இலங்கு வெள்ளி புரி அன்ன வெண் புரிநூலன் விரி சடை மேல் வெள்ளி தகடு அன்ன வெண் பிறை சூடி வெள் என்பு அணிந்து வெள்ளி பொடி பவள புறம் பூசிய வேதியனே மேல் #1051 உடலை துறந்து உலகு ஏழும் கடந்து உலவாத துன்ப கடலை கடந்து உய்ய போயிடல் ஆகும் கனக_வண்ண படலை சடை பரவை திரை கங்கை பனி பிறை வெண் சுடலை பொடி கடவுட்கு அடிமை-கண் துணி நெஞ்சமே மேல் #1052 முன்னே உரைத்தால் முகமனே ஒக்கும் இ மூஉலகுக்கு அன்னையும் அத்தனும் ஆவாய் அழல்_வணா நீ அலையோ உன்னை நினைந்தே கழியும் என் ஆவி கழிந்ததன் பின் என்னை மறக்கப்பெறாய் எம்பிரான் உன்னை வேண்டியதே மேல் #1053 நின்னை எப்போதும் நினையல் ஒட்டாய் நீ நினைய புகில் பின்னை அப்போதே மறப்பித்து பேர்த்து ஒன்று நாடுவித்தி உன்னை எப்போதும் மறந்திட்டு உனக்கு இனிதா இருக்கும் என்னை ஒப்பார் உளரோ சொல்லு வாழி இறையவனே மேல் #1054 முழு தழல் மேனி தவளப்பொடியன் கனக குன்றத்து எழில் பரஞ்சோதியை எங்கள் பிரானை இகழ்திர்கண்டீர் தொழப்படும் தேவர் தொழப்படுவானை தொழுத பின்னை தொழப்படும் தேவர்-தம்மால் தொழுவிக்கும் தன் தொண்டரையே மேல் #1055 விண்ணகத்தான் மிக்க வேதத்து உளான் விரி நீர் உடுத்த மண்ணகத்தான் திருமால் அகத்தான் மருவற்கு இனிய பண்ணகத்தான் பத்தர் சித்தத்து உளான் பழ நாய் அடியேன் கண்ணகத்தான் மனத்தான் சென்னியான் எம் கறை_கண்டனே மேல் #1056 பெரும் கடல் மூடி பிரளயம் கொண்டு பிரமனும் போய் இரும் கடல் மூடி இறக்கும் இறந்தான் களேபரமும் கரும் கடல்_வண்ணன் களேபரமும் கொண்டு கங்காளராய் வரும் கடல் மீள நின்று எம் இறை நல் வீணை வாசிக்குமே மேல் #1057 வானம் துளங்கில் என் மண் கம்பம் ஆகில் என் மால் வரையும் தானம் துளங்கி தலைதடுமாறில் என் தண் கடலும் மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு ஊனம் ஒன்று இல்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே மேல் #1058 சிவன் எனும் நாமம் தனக்கே உடைய செம் மேனி அம்மான் அவன் எனை ஆட்கொண்டு அளித்திடுமாகில் அவன்-தனை யான் பவன் எனும் நாமம் பிடித்து திரிந்து பல் நாள் அழைத்தால் இவன் எனை பல் நாள் அழைப்பு ஒழியான் என்று எதிர்ப்படுமே மேல் #1059 என்னை ஒப்பார் உன்னை எங்ஙனம் காண்பர் இகலி உன்னை நின்னை ஒப்பார் நின்னை காணும் படித்தன்று நின் பெருமை பொன்னை ஒப்பாரித்து அழலை வளாவி செம் மானம் செற்று மின்னை ஒப்பார மிளிரும் சடை கற்றை வேதியனே மேல் 113. பொது - தனித் திருவிருத்தம் #1060 பவள தட வரை போலும் திண் தோள்கள் அ தோள் மிசையே பவள குழை தழைத்தால் ஒக்கும் பல் சடை அ சடை மேல் பவள கொழுந்து அன்ன பைம் முக நாகம் அ நாகத்தொடும் பவள கண் வால மதி எந்தை சூடும் பனி மலரே மேல் #1061 முருகு ஆர் நறு மலர் இண்டை தழுவி வண்டே முரலும் பெருகு ஆறு அடை சடைக்கற்றையினாய் பிணி மேய்ந்து இருந்த இரு கால் குரம்பை இது நான் உடையது இது பிரிந்தால் தருவாய் எனக்கு உன் திருவடி கீழ் ஒர் தலைமறைவே மேல் #1062 மூவா உருவத்து முக்கண் முதல்வ மிக்கு ஊர் இடும்பை காவாய் என கடை தூங்கு மணியை கையால் அமரர் நாவாய் அசைத்த ஒலி ஒலிமாறியது இல்லை அப்பால் தீயாய் எரிந்து பொடியாய் கழிந்த திரிபுரமே மேல் #1063 பந்தித்த பாவங்கள் உம்மையில் செய்தன இம்மை வந்து சந்தித்த பின்னை சமழ்ப்பது என்னே வந்து அமரர் முன்நாள் முந்தி செழு மலர் இட்டு முடி தாழ்த்து அடி வணங்கும் நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே மேல் #1064 அந்தி வட்டத்து இளங்கண்ணியன் ஆறு அமர் செஞ்சடையான் புந்தி வட்டத்திடை புக்கு நின்றானையும் பொய் என்பனோ சந்தி வட்ட சடை கற்றை அலம்ப சிறிது அலர்ந்த நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே மேல் #1065 உன்மத்தக மலர் சூடி உலகம் தொழ சுடலை பல் மத்தகம் கொண்டு பல் கடை-தோறும் பலி திரிவான் என் மத்தகத்தே இரவும் பகலும் பிரிவு அரியான் தன் மத்தகத்து ஒர் இளம் பிறை சூடிய சங்கரனே மேல் #1066 அரை-பால் உடுப்பன கோவண சின்னங்கள் ஐயம் உணல் வரைப்பாவையை கொண்டது எ குடிவாழ்க்கைக்கு வான் இரைக்கும் இரைப்பா படுதலை ஏந்து கையா மறை தேடும் எந்தாய் உரைப்பார் உரைப்பனவே செய்தியால் எங்கள் உத்தமனே மேல் #1067 துறக்கப்படாத உடலை துறந்து வெம் தூதுவரோடு இறப்பன் இறந்தால் இரு விசும்பு ஏறுவன் ஏறி வந்து பிறப்பன பிறந்தால் பிறை அணி வார் சடை பிஞ்ஞகன் பேர் மறப்பன்-கொலோ என்று என் உள்ளம் கிடந்து மறுகிடுமே மேல் #1068 வேரி வளாய விரை மலர் கொன்றை புனைந்து அனகன் சேரி வளாய என் சிந்தை புகுந்தான் திரு முடி மேல் வாரி வளாய வரு புனல் கங்கை சடை மறிவாய் ஏரி வளாவி கிடந்தது போலும் இளம் பிறையே மேல் #1069 கல் நெடும் காலம் வெதும்பி கரும் கடல் நீர் சுருங்கி பல் நெடும் காலம் மழைதான் மறுக்கினும் பஞ்சம் உண்டு என்று என்னொடும் சூள் அறும் அஞ்சல் நெஞ்சே இமையாத முக்கண் பொன் நெடும் குன்றம் ஒன்று உண்டுகண்டீர் இ புகலிடத்தே மேல் #1070 மேலும் அறிந்திலன் நான்முகன் மேல் சென்று கீழ் இடந்து மாலும் அறிந்திலன் மால் உற்றதே வழிபாடு செய்யும் பாலன் மிசை சென்று பாசம் விசிறி மறிந்து சிந்தை காலன் அறிந்தான் அறிதற்கு அரியான் கழல் அடியே மேல் |
மேல் திருநாவுக்கரசர் வரலாறு திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது. இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும் நிறைந்துள்ளன. புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்னண ஆற்றின் பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன. இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெரியிலும் தமக்குவமை இல்லாதவர்களாய் வாழ்ந்து வந்தனர். உலகமெங்கும் சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள் அப்பர், சுந்தரர் என்னும் இரு நாயன்மார்கள் தோன்றிய பெருøம இப்பழம் பெரும்பதியையே சேரும் ! இத்தைகைய பல்வளம் கொழிக்கும் திருமுனைப்பாடியில் தெய்வத் தன்மைமிக்கத் திருவாமூர் என்னும் சிவத்தலம் உள்ளது. சைவ நெறி வழங்கிய பெருமையையும், புகழையும் தன்னகத்தே கொண்டுள்ளது !இங்கு வருந்துவன கொங்கைகளின் பாரத்தைத் தாங்கமுடியாத மங்கையர்களின் நாரினும் மெல்லிடைகளே! ஒலிப்பன அம்மகளிர் அணிந்துள்ள அழகிய காற்சிலம்புகளே ! இரங்குபவன அம்மெல்லிடையார்களின் இடையிலே அழகுற அறியப் பெற்றுள்ள மாணிக்காஞ்சியே! ஓங்கி உயர்ந்து காணப்படுவது மாடமாளிகைகளே ! ஒழுகுபவன அறங்களே ! நீங்குபவன தீய நெறிகளே ! நெருங்குபவன பெருங்குடியே ! இப்படியாகப் புகழ்படும், இப்பெரு நகரிலே வேளாண் மரபிலே குறுக்கையர்குடி மிகச் சிறந்த தொன்றாக விளங்கி வந்தது. இக்குறுக்கையர் குடியிலே புகழனார் என்னும் பெயருடைய சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவரது மனைவியாக மாதினியார் என்னும் பெருமனைக் கிழத்தியார் அமைந்திருந்தார்.அம்மையார் பெண்களுள் மென்மையும், இனிமையும் பூண்ட தன்மையினராய் விளங்கினார்கள். கணவனும் மனைவியும் இல்லற நெறி உணர்ந்து வள்ளுவன் வாய்மொழிக்கு ஏற்ப வாழ்ந்தனர். இவ்வாறு, இவர்கள் இல்லறமெனும் நல்லறத்தை இனிது நடத்தி வரும்பொழுது இறைவன் அருளால் மாதினியார் கருவுற்றாள். மேல்அம்மையார் மணி வயிற்றில் நின்றும் திருமகளே வந்து தோன்றினாற்போல் அருள்மிக்க அழகிய பெண்மகவு பிறந்தது. அப்பெண் குழந்தைக்குத் திலகவதி என்று திருநாமம் சூட்டிப் பெற்றோர்கள் பெருமகிழ்ச்சி பூண்டனர். திலகவதியார் தளிர்நடை பயின்று மழலையமுதம் பொழியும் நாளில் அம்மையார் மீண்டும் கருவுற்றார். அம்மையார் மணிவயிற்றிலிருந்து திருசடையானின் அருள்வடிவமாக சைவம் ஓங்க தமிழ் வளர கலைகள் செழிக்க மருள் எல்லாம் போக்கும் அருள் வடிவமாக கோடி சூரியப் பிரகாசத்துடன் கூடிய ஆண் குழந்தை பிறந்தது. பெறோர்கள் அந்த ஆண் குழந்தைக்கு மருள் நீக்கியார் என்று நாமகரணம் சூட்டினர். மருள் நீ்ககியார் முற்பிறப்பில் வாகீச முனிவராக இருந்தார். இவர் திருக் கைலாயத்திதல் அமர்ந்து எம்பெருமானின் திருவடியை அடைய அருந்தவம் புரிந்து வந்தார். ஒரு சமயம் இராவணன் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருந்தான். கைலாய மலையைப் புஷ்பக விமானம் அணுகியதும் அங்கு எழுந்தருளியிருந்த நந்தியெம்பெருமான் ராவணனிடம், இப்புண்ணிய மலை எம்பெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருமலை. அதனால் நீ வலப் பக்கமாகப் போய்விடு என்று பணித்தார். மதியற்ற ராவணன் நந்தியெம்பெருமானுடைய பெருமையையும் அவர் எம்பெருமானிடம் கொண்டுள்ள பக்தியின் திறத்தினையும் எண்ணிப் பார்க்க இயலாத நிலையில மந்தி போல் முகத்தை வைத்துக் கொணடிருக்கும் நீ இந்த மாவீரன் இராவணனுக்கா அறிவுரை கூறுகின்றாய் ? என்று சினத்தோடு செப்பினான். அளவு கடந்த கோபம் கொண்ட நந்தியெம்பெருமான் அப்படி என்றால் உன்நாடும், உன் வீரமும் குரங்கினாலேயே அழிந்து போகக்கடவது ! என்று கூறித் சாபம் கொடுத்தார்.இராவணன் ஆத்திரத்தோடு என்னைத் தடுத்து நிறுத்திய இந்த கைலாய மலையை அடியோடு பெயர்த்துõக்கி எறிகிறேன் பார் என்று கூறித் தனது வலிமை பொருந்திய இருபது கரங்களாலும் மலையை அசைத்தான். அது சமயம் ஈசுவரியுடன் நவமணி பீடத்தில் எழுந்தருளியிருந்த எம்பெருமான் தமது தண்டை சிலம்பணிந்த சேவடி பாதப் பெருவிரல் நுனி நகத்தால் லேசாக அழுத்தினார். அக்கணமே இராவணனது இருபது கரங்களும் மலையினடியில் சிக்கியது. இராவணன் கரங்களை அசைக்க முடியாமல் துடித்துக் கொண்டிருந்தான். ஓலக்குரல் எழுப்பினான். அத்திருமலையில் தவமிருந்து வந்த அருந்தவசியான வாகீசரின் செவிகளில் இராவ்ணனின் ஓலக் குரல் வீழ்ந்தது. இராவணின் நிலைக்கண்டு மனம் இளகினார் முனிவர். அவனது துயரம் நீங்குவதற்கு நல்லதொரு உபாயம் சொன்னார். மேல்எம்பெருமான் இசைக்குக் கட்டுப்பட்டவர். அவரை இசையால் வசப்படுத்தினால் இத்துயரத்திலிருந்து விடுபடுவதற்கு உகந்த மார்க்கும் பிறக்கும்.வாகீசமுனிவரின் அருளுரை கேட்ட ராவணன் தனது நரம்பை யாழாக்கி பண் இசைத்தான். பரமனின் பாதகமலங்களைப் போற்றி பணிந்தான்.பக்தனின் இசைவெள்ளம் ஈசனின் செவிகளில் தேனமுதமாய்ப் பாய்ந்தது. சிவனார் சிந்தை குளிர்ந்தார். அவன் முன்னால் பெருமான் பிரசன்னமானார்.இராவணின் பிழையைப் பொறுத்தார். சந்திஹாஸம்ய என்னும் வாள் ஒன்றை அவனுக்கு அளித்ததோடு ஐம்பது லட்சம் ஆண்டுகள் உயிர்வாழும் பெரும் பேற்றினையும் அளித்தார். இராவணன் எம்பருபெருமானைத் தோத்திரத்தால் மேலும் வழிபட்டான். பேரின்பப் பெருக்குடன் இலங்கைக்குச் சென்றான்.அதே சமயம் நந்தி தேவருக்கு வாகீச முனிவரின் செயல் சினத்தை மூட்டியது. இராவணனுக்கு உதவிசெய்த வாகீச முனிவரை பூலோகததில் பிறக்குமாறு சாபம் கொடுத்தார். அவரும் மாதினியார் மணிவயிற்றில் அவதரித்தார். நாவின் நலத்தினால் நாடு போற்ற அவதரித்த வாகீசரும் மருள்நீக்கியார் என்னும் நாமத்தை பெற்றார். மருள் நீக்கியாரும் நற்பண்புகளுக்கெல்லாம் திலக்ம் போன்ற திலகவதியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து குழந்தைப் பருவத்தைக் கடந்தனர். இருவரும் கல்வி கேளிவிகளில் மேம்பட்டு சகல கலா வல்லவர்களாக விளங்கினர். அப்பொழுது திலகவதியாருக்கு பன்னிரண்டாவது பிராயம். பெற்றோர்கள் திலகவதியை அரசனிடம் சேனாதிபதியாக பணியாற்றும் கலப்பகையார் என்னும் வீரருக்கு மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர். இத்தருணத்தில் புகழனார் விண்ணுலகை எய்தினார். கணவன் இறந்து போன துயரத்தைத் தாங்கமுடியாத மாதினியாரும் தொடர்ந்து அவரோடு எம்பெருமானின் திருவடியில் ஒன்றினாள்.பெற்றோர்கள் விண்ணுலகு எய்திய துக்கத்தைத் தாளமுடியாமல் திலகவதியாரும், மருள்நீக்கியாரும் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலையில்தான் ஊழ்வினை அவர்களை மேலும் துன்புறுத்தியது. திலகவதியாருக்கு நிச்சயித்திருந்த கலிப்பகையார், போர்க்களத்தில் வீர சொர்க்கம் அடைந்தார் ! இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற திலகவதியாரும் மருள்நீக்கியாரும் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தாற்போன்ற வேதனையை அடைந்தார். மேல்கலிப்பகையார் உயிர் துறந்த பின்னர் திலகவதியார் உயிர் வாழ விரும்பவில்லை, கலிப்பகையாருக்கும் தனக்கும் திருமணமாகாவிட்டாலும் அவரை மனதில் கணவராக வரிந்துவிட்ட நிலையில் திலகவதியார் இந்த முடிவுக்கு வந்தாள். நான் என் கணவர் சென்ற இடத்திற்கே சென்றுவிடப் போகிறேன் என்று திலகவதியார் உலகை வெறுத்து உயிர் துறக்க எண்ணினாள். அம்முடிவைக் கண்ட மருள்நீக்கியார் தமக்கையாரிடம் பணிந்து வேண்டினார்.அருமைச் சகோதரி ! தாயும் நம்மைவிட்டு மறைந்த பின்னர் உம்மையே அவர்களாக எண்ணி நான் ஓரளவு மன உறுதியுடன் வாழ நினைத்தேன். எனக்குக் கொழுகொம்பாக உள்ள தங்களும் என்னை இந்த தரணியில் தனியே விட்டுச் செல்வதனால் நான் தங்களுக்கு முன்பே உயிர் துறப்பது திண்ணம் என்று கூறி அழுதார். உடன்பிறந்தோன் மீது தாம் கொண்டுள்ள அளவற்ற கருணையினாலும், அன்பினாலும் திலகவதியார் மனம் மாறினாள். மருள் நீக்கியாருக்காக வேண்டி மண்ணுலகில் வாழ முடிவு பூண்டõள். அம்மையார் மங்கள அணிகளையும் மின்னும் வைரங்களையும், பளபளக்கும் பட்டாடடைகளையும் களைந்து உலக பற்று அற்று, எல்லா உயிர்களிடத்தும் கருணை பூண்டு மனைத்தவம் புரியும் மங்கையராக வாழ்த் தலைப்பட்டாள்.தமக்கையார் தமக்காக உயிர்வாழ்த் துணிந்தது கண்டு மருள்நீக்கியார் துயரத்தை ஒழித்து மனமகிழ்ச்சி பூண்டார். மருள்நீக்கியார் உலகில் யாக்கை நிலையாமை இளமை நிலையாமை செல்வ நிலையாமை ஆகியவற்றை சிந்தித்துத் தெளிந்து அறிந்து நல்ல அறங்களைச் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டார். திருவாமூரில் பொன்னும் மணியும் வேண்டிய அளவிற்குப் செலவு செய்து அறச்சாலைகளையும், தண்ணீர்ப் பந்தல்களையும் அமைத்தார். சாலைகளைச் செப்பனிட்டார். அழகிய சோலைகளை வளர்த்தார். நீர் நிலைகள் பல வெட்டினார். விருந்தினரை உபசரித்து, உண்பித்து வகையோடு வழிபட்டு வேண்டியதை ஈந்து மகிழ்ந்தார் ! தம்மை நாடிவந்த புலவர்கள், பாடி மகிழக் கேட்டு அவர்களது வாடிய முகம் மாறப் பரிசுகள் பல அளித்துப் பெருமை பூண்டார். இவ்வாறாக, மருள்நீக்கியார் பற்பல தருமங்களைப் பாகுபாடின்றி வாரி வாரி வழங்கி வற்றாத பெருமையை சீரோடு பெற்றுச் சிறப்போடு வாழ்ந்து வந்தார். இத்தகைய அறநெறி ஒழுக்கங்களை இடையறாது நடத்தி வந்த மருள்நீக்கியார் பற்றற்ற உலக வாழ்க்கைகய விட்டு விலகுவதற்காக வேண்டி சமண சமயமே சிறந்த என்று கருதினார். அச்சமயத்தில் சேர்ந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தின் மகிமையையும், திருவெண்ணீற்றின் திறத்தினையும் உணர்ந்தவருக்கு சமண நூல்களை எல்லாம் கற்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. மேல்சமண நூல்களைக் கற்றறிந்து வரும் பொருட்டு, அருகிலுள்ள பாடலிபுரத்திற்கு சென்று அங்குள்ள ஓர் சமணப் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சில, நாட்கள் தங்கியிருந்து சமண நூல்களைக் கற்றுணர்ந்து வல்லுனர் ஆனார். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற பெரும் புலமையைப் பாராட்டி மகிழந்த சமணர்கள் அவருக்கு தருமசேனர் என்னும் சிறப்புப் பட்டத்தைக் கெõடுத்து கெளரவித்தனர். மருள்நீக்கியார் சமண மதத்தில் பெற்ற புலமையின் வல்லமையால் ஒரு முறை பெளத்திர்களை வாதில் வென்று, சமண சமயத்தின் தலைமைப்பதவியையும் பெற்றார். சமண மதத்தில் மிகுந்த ஈடுபாடு உடையவராக மருள் நீக்கியார் வாழ்ந்து வந்ததற்கு நேர்மாறாக அவரது தமக்கையாரான திலகவதியார் சைவ சமயத்தில் மிகுந்த பற்றுடையவராய் சிவநெறியைச் சார்ந்து ஒழுகலானாள். சித்தத்தை சிவனார்க்காக அர்ப்பணித்த திலகவதியார் திருக்கெடிலத்தின் வடகரையில் அமைந்துள்ள திருவதிகை வீரட்டானத்தில் மடம் ஒன்றை அமைத்துக் கொண்டாள். வீரட்டானேசுரர்க்குத் திருத்தொண்டுகள் பல புரியத் தொடங்கினாள். தினந்தோறும் திலகவதியார் வைகரைத் துயிலெழுந்து தூய நீராடி கோயிலின் முன்னே அலகிட்டு கோமாய நீரால் சுத்தமாக மெழுகிக் கோலமிடுவாள். மலர்வனம் சென்று, நறுந்தேன் மலர்களைக் கொய்து வந்து மாலைகள் தொடுத்து எம்பெருமானுக்குச் சாத்தி வணங்கி வழிபடுவாள் திலகவதி !இவ்வாறு அம்மையார் கோயிலில் அருந்தவம் புரிந்து வரும் நாளில் மருள்நீக்கியார் சமண சமயத்தில் புலமை பெற்று அச்சமயத்திலேயே மூழ்கி வாழ்கிறார் என்ற செய்தி கேட்டாள். அளவு கடந்த துயரமடைந்தான். தமது சகோதரனை எப்படியாகிலும் சமணத்தைத் துறந்து சைவத்தில் சேரச் செய்ய முயற்ச்சித்தாள். நாள்தோறும் எம்பெருமானிடம் விண்ணப்பம் செய்தாள். ஒருநாள் இறைவன் திலகவதியின் கனவிலே எழுந்தருளி, திலகவதி ! கலங்காதே ! முற்பிறப்பில் மருள்நீக்கியார் ஓர் முனிவனாக இருந்து என்னை அடைய அருந்தவம் புரிந்தவன். இப்பிறப்பில் அவனைக் சூலை நோயால் தடுத்தாட்கொள்வோம் என்றார். எம்பெருமானின் அருள்மொழி கேட்டுத் திலகவதியார் துயில் நீங்கினாள். துயர் மறந்தாள். சிவநாம சிந்தை பூண்டாள். மன அமைதி கொண்டாள். உடன் பிறந்தோன் உளம் திருந்தி வரும் நன்னாளை எதிர்ப்பார்த்து இருந்தாள். எம்பெருமான் மருள் நீக்கியாரை தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளம் கொண்டு அவர் உடலில் சூலை நோய் உண்டாகச் செய்தார். சூலை நோய் அவரது வயிற்றுள் புகுந்து அதனது உக்கிரத்தைத் தொடங்கியது.வடவைத்தீயும், கொடிய நஞ்சும், வச்சிரமும் போல் புகுந்த சூலைநோ்ய் மருள்நீக்கியாரின் குடலைக் குடைந்து தாங்க முடியாத அளவிற்கு அவருக்குப் பெரும் வேதனையைக் கொடுத்தது. வெந்தணல் போல் மேனியைச் சுட்டெரித்துக் கொண்டிருந்த சூலை நோயின் கொடிய துயரத்தைத் தாங்க முடியாத மருள்நீக்கியார் சேõர்ந்து கீழே சாய்ந்தார். அவர் தாம் சமணச் சமயத்தில் பயின்ற மணி மந்திரங்களைப் பயன்படுத்தி, நோயினைத் தீர்க்க முயன்றார்.நோயின் உக்ரம் சற்றும் குறையவில்லை. வினாடிக்கு வினாடி வலி அதிகரித்துக் கொண்டே இருந்தது. வேதனையைத் தாங்க முடியாத அவர் தணலிடைப் புழுப்போல் துடித்தார். சற்று நேரத்தில் மயக்கமுற்றார். மேல்மருள் நீக்கியாரின் மயக்க நிலையைக் கண்ட சமண குருமார்கள் அக்கணமே ஒன்றுதிரண்டார்கள். பற்பல சமண நெறிவழிகளைக் கையாண்டு நோயைக் குணமாக்க முயன்று பயன் ஒன்றும் காணாது தோற்றுப் போயினர். சமண குருமார்கள் நடத்திய வழிமுறைகளால் மருள் நீக்கியாரைப் பற்றிக் கொண்டிருந்த சூலைநோய் முன்னைவிட அதிகப்பட்டதே தவிர சற்றுக்கூடக் குறையவில்லை. சமண குருமார்களோ அவருக்குத் தொடர்ந்து மயிற்பீலியைக் கொண்டு தடவுவதும், குண்டிகை நீரை மந்திரித்து அவரைக் குடிக்கச் செய்வதுமாகவே இருந்தனர். இறுதியில், சமண குருமார்கள் தங்களால் இக்கொடிய நோயைத தீர்க்க முடியாது என்று தங்களது தோல்வியை ஒப்புக்கொண்டனர். அவரைக் கைவிட்டு விட்டுச் சென்றனர்.மருள்நீக்கியார் வேறு வழியின்றி தமக்கையாரிடம் செல்லத் தீர்மானித்தார். சமையற்காரனை அøழத்தார். தமக்கு ஏற்பட்டுள்ள துயரத்தைப் பற்றித் திலகவதியாரிடம் சென்று அறிவிக்குமாறு சொல்லி அவனை அனுப்பி வைததார். சமயற்காரனும் அக்கணமே பாடலிபுரத்தை விட்டகன்றான். பொழுது புலரும் தருணத்தில் திருவதிகையை வந்து அடைந்தான். நான் தங்கள் உடன் பிறந்தவரால் அனுப்பப்பட்டவன். அவருக்குக் கடுமையான சூலை நோய் கண்டுள்ளது. சமண குருமார்கள் அனைவரும் அந்நோயின் கொடுமையைப் போக்க முடியாத நிலையில் அவரைக் கைவட்டு போயினர். தமது இத்தகைய துயர நிலையைத் தங்களிடம் அறிவித்து வரும்படி என்னை அனுப்பியுள்ளார்கள். சமையற்காரன் சொன்ன செய்தி அம்மையாருக்குத் தீயாகச் சுட்டது. அம்மையார் மன வருத்தங் கொண்டார்கள். இருந்தும் சமணர்களை வெறுக்கும் அம்மையார், அப்பா! சமணர்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு நான் ஒருபோதும் வரமாட்டேன் என்று அவனிடம் சென்று உரைப்பாயாக ! என்று விடை பகர்ந்து அவனைத் திரும்ப அனுப்பி வைத்தாள் திலகவதி ! சமையற்காரன் விடைபெற்றுப் புறப்பட்டான். சமையற்காரன் பாடலிபுரத்தை வந்தடைந்தான். மருள்நீக்கியார் ஆவலோடு அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் மருள்நீக்கியாரிடம் திலகவதியார் கூறியவற்றைக் கூறினான். தமக்கையாரின் பதிலைக் கேட்டு மருள்நீக்கியார் மனம் வாடிச் சோர்வுற்றார். வேறு வழியின்றி திருவதிகைக்குப் புறப்பட முடிவு செய்தார்.இத்தகைய எண்ணம் எழுந்தை மாத்திரத்திலேயே, நோயின் உக்கிரம் உடம்பில் சற்று தணிந்தாற்போல் இருந்தது அவருக்கு! பாயினால் அணியப்பட்ட உடை களைந்தார். கமண்டலத்தையும், மயிற்பீலியையும், ஒழித்தார். தூய வெண்ணிற ஆடையைத் தரித்தார். சமணர்கள் எவரும் அறியாவண்ணம் இரவோடு இரவாக அரங்கிருந்து தமது பணியாளுடன் புறப்பட்டுத்ச திருவதிகையை அடைந்தார். அம்மையார் தங்கியிருக்கும் மடத்துள் புகுந்தார் மருள்நீக்கியார். மடத்துள் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறு அமர்ந்திருந்த தமக்கையை நமஸ்கரித்தார் மருள்நீக்கியார். திலகவதியார் ஒருபுறம் மகிழ்ச்சியும், மறுபறம் வேதனையும் கொண்டாள். மருள்நீக்கியார் மனவேதனையுடன் திலகவதியாரிடம் தமக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தை பற்றிக் கூறினார். மேல்நம் குலம் செய்த அருந்தவத்தால் அவதாரம் செய்த தமக்கையே ! என் குடலுள் புகுந்து உடலை வருத்தும் இக்கொடிய சூலை நோயினைத் தீர்த்துக் காத்திடல் வேண்டும் என்று கண்களில் நீர் மல்க வேண்டி நின்றாள் மருள்நீக்கியார் ! திலகவதியார் சகோதரனைப் பார்த்து மேலும் உளம் உருகினாள். புரமெரிந்த புண்ணியரது பொன்னடிகளை நினைத்து மலர்க்கைக் கூப்பித் தொழுது இறைஞ்சினான் திலகவதி. மருள்நீக்கியார் திருமேனியைத் தொட்டு நல்ல கொள்கையில்லாது புறச்சமயப் படுகுழியில் விழ்ந்து அறியாது அல்லூற்றாய். இனமேல் எழுந்திருப்பாயாக ! என்று மொழிந்தாள். அம்மையாரின் அமுத மொழிக்கேட்டு மருள்நீக்கியார் தாம் பற்றிக் கொண்டிருந்த சகோதரியின் கால்களை இரு கைகளாலும் கண்களில் ஒற்றிக்கொண்டு பிணியின் துன்பம் சற்று குறைந்த நிலையில் மெதுவாக எழுந்தார். திலகவதியார் கண் கலங்க சகோதரா ! வருந்தாதே ! இச்சூலை நோய் உனக்கு ஏற்பட்டதற்குக் காரணம் எம்பெருமானின் அருளேயாகும். மீண்டும் உன்னை அவரது அடியாராக ஏற்றுக்கொள்வதற்காக இம்முறையில் உன்னை ஆட்கொண்டார். பற்றற்ற சிவனடியார்களை நினைத்து வழிபட்டுச் சிவத்தொண்டு புரிவாயாக! உன்னைப் பற்றிய மற்ற நோயும் அற்றுப்போகும் என்று கூறினாள். மருள்நீக்கியாருக்கு சமய மாற்றம் வேண்டித் திலகவதியார், திருவெண்ணீ்ற்றினை எடுத்து ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியவண்ணம் கொடுத்தாள். அம்மையார் அருளிக் கொடுத்த திருவெண்ணீற்றினைத் தாழ்ந்து பணிந்து பெற்றுக்கொண்ட மருள்நீ்க்கியார், எனக்குப் பற்றற்ற பெருவாழ்வு கிட்டிற்று. பரமனைப் பணிந்து மகிழும் திருவாழ்வு பெற்றேன் என்று கூறிக் திருவெண்ணீற்றை நெற்றியிலும் மேனி முழுவதும் தரித்துக் கொண்டார். திருவெண்ணீற்றின் மகிமையால் மருள்நீக்கியார் நோய் சற்று நீங்கப்பெற்ற நிலை கண்டார். அதுகண்டு அத்திருத்தொண்டர் மனம் குளிர்ந்தார். பெருவாழ்வு பெற்ற மருள்நீக்கியார் முன்போல் சைவராய்த் திகழ்ந்தார். அம்மையார் தம்பியாரை அழைத்துக்கொண்டு திருவலகும், திருமெழுகுத் தோண்டியும் எடுத்துக் கொண்டு கோயிலுக்கு வந்தாள். மருள்நீக்கியார், தமக்கையோடு கோயிலை வலம் வந்து, எம்பெருமான் திருமுன் வணங்கி நின்றார். சிவச்சந்நதியில் சைவப்பழமாக நின்று கொண்டிருந்தார் மருள்நீக்கியார் ! பேரொளிப் பிழம்பான எம்பெருமானின் திருவருள் அவர் மீது பொழிந்தது. தமிழ்ப் பாமாலை சாத்தும் உணர்வு அவருக்கு உதித்தது. உணர்ச்சி ஊற்றெடுத்துப் பெருகியது. மருள்நீக்கியார், தம்மைப் பற்றிக்கொண்டு படாத பாடுபடுத்திய சூலைநோயினையும், மாயையினையும் அறுத்திடும் பொருட்டு கூறிறாயினைவாயு விலக்கிலீர் என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடினார்.பாடி முடித்ததும் அவரைப் பற்றிக் கொண்டிருந்த சூலை நோய் அறவே நீங்கியது. எம்பெருமானின் திருவருளை வியந்து போற்றி, திலகவதி கண்ணீர் விட்டாள். மருள்நீக்கியார் சிரமீது கரம் குவித்து நின்று மெய்யருவி பிரார்த்தித்தார். மேல்ஐயனே ! அடியேன் உயிரையும், அருளையும் பெற்று உய்ந்தேன் என்று மனம் உருகக் கூறினார் மருள்நீக்கியார் ! அப்பொழுது விண்வழியே அசரீரி கேட்டது. இனிய செந்தமிழ்ப் பாக்களால் திருப்பதிகத் தொகையை பாடியருளிய தொண்டனே ! இனி நீ நாவுக்கரசு என்று நாமத்தால் ஏழுலகமும் ஏந்தப் பெறுவாய். மருள்நீக்கியார் திருநாவுக்கரசு என்னும் திருநாமத்தைப் பெற்றார். எம்பெருமானின் திருவருளை எண்ணிப் பூரித்துப் போன திலகவதியார் தமது உடன்பிறந்தோர் சமணப் பித்து, சூலைப் பிணியும் நீங்கியது கண்டு உவகை பூண்டாள். திருநாவுக்கரசர் சைவத்திருத் தோற்றம் பூண்டார். அவரது தலையிலும், கழுத்திலும், கையிலும் உருத்திராட்ச மாலைகள் அணியெனத் திகழந்தன. திருவெண்ணீறு அவரது மேனியில் பால் போல் பிரகாசித்துது. அவரது மனம் ஐந்தெழுத்து மந்திரத்தை நினைக்க - மொழி திருப்பதிகமாக காயம் திருத்தொண்டுகள் புரியத் தொடங்கின. இங்ஙனம நாவுக்கரசர் எம்பெருமானின் சேவடிக்கு மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் சைவத் தொண்டு புரிந்து பரலானார். சைவ நெறியைப் பின்பற்றி மருள்நீக்கியார் வாழ்வதைக் கேள்வியுற்ற சமண குருமார்கள் கொதித்தெழுந்தார்கள். வெகுண்டார்கள். ஒழித்துக் கட்டுகிறோம் என்று அவர்கள் வீண் சபதம் எடுத்துக் கொண்டார்கள். கெடுமதி படைத்த அச்சமணர்கள், பெருங்கூட்டமாகக் கூடி, மன்னனைக் காண விரைந்தார்கள். அரண்மனையை அடைந்த சமணர்கள், மன்னனை வணங்கி, அரசே, அரசே ! தருமசேனர் தம்மைச் சூலைநோய் பற்றி கொண்டதாகப் பொய் கூறி, நம்மைவிட்டு அன்றதோடல்லாமல் அவரது தமக்கையாரிடம் சென்று சைவத்தைச் சரணடைந்து விட்டார் . நம் சமண சமயத்தை புறக்கணித்துவிட்டார் என்று கூறினார். அவர்கள் மொழிந்ததைக் கேட்ட மன்னன், அருந்தவ முனிவர்களே ! அஞ்சாதீர்! சொல்லுங்கள்! தருமசேனருக்குத் தண்டனை கொடுக்க நான் ஒருபோதும் தயங்கமாட்டேன் ! என்று ஆறுதல் பகர்ந்தான். அரசன் அமைச்சரை நோக்கி, உடனே அவைக்களத்திற்கு மருள்நீக்கியாரை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் ஆணைக்கு அடிபணிந்த அமைச்சர்கள், சேனைகள் சூழ, நாவுக்கரசர் எழுந்தருளியிருக்கும் திருவதிகையை அடைந்தனர்.திருவெண்ணீற்றைப் பொலிவுடன் அமர்ந்திருந்த நாவுக்கரசரை அணுகி, தருமசேனரே! மன்னன் மகேந்திரவர்மன் தங்களை உடனடியாக அழைத்து வருமாறு எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார். ஆதலால் நீவிர் இக்கணமே எங்களுடன் புறப்பட்டு வரவேண்டும் என்று அரச தோரணையில் ஆணையைப் பிறப்பித்தனர், நஞ்சை அமுதாக உண்ண நீலகண்டரின் திருவடியில் தஞ்சம் புகுந்த திருநாவுக்கரசர், சற்றும் அஞ்சாது நெஞ்சு நிமிர்ந்து, நாமார்க்கும் குடியல்லோம்; நமனையஞ்சோம் எனத் தொடங்கும் மறுமாற்றத் திருத்தாண்டகத் திருப்பதிகத்தைப் பாடினார். மேல்அமைச்சர்கள் நாவுக்கரசரின் திருப்பதிகத்தில் மெய் உருகினார். அவரது மலர்த்தாளினைப் போற்றி வணங்கினர். ஐயனே தயவுசெய்து எங்களுடன் எழுந்தருளல் வேண்டும் என்று பணிவன்போடு வேண்டிக் கொண்டனர். அமைச்சர்கள் இவ்வாறு வினவியதும் நாவுக்கரசர்ல இங்குவரும் வினைகளுக்கு எம்பிரான் எம்மோடு துணை உள்ளார் என மொழிந்தாவாறு அவர்களுடன் புறப்பட்டார். நாவுக்கரசர் பல்லவன் அரண்மனையை அடைந்தார். பல்லவன் முன்னால் சிவஜோதி வடிவான நாவுக்கரசர் தலைநிமிர்ந்து நின்றார். நாவுக்கரசரைக் கண்டதும் சமணர்கள் பொங்கி எழுந்தனர். அருள் வடிவாய் நின்றுகொண்டிருந்த நாவுக்கரசர் முன்னால் அக்கிரமமே உருவெடுத்தாற் போல் அறந்துறந்து சமணர்கள் நின்று கொண்டிருந்தனர். சமணத்தை நம்பிய பல்லவ மன்னன் அறம் மறந்து அரியாசனத்தில் அமர்ந்திருந்தான். அக்கொற்றவன் சமணர்களிடம் தருமசேனரை யாது செய்யவேண்டும் ? என்று கேட்டான். மன்னன் மொழிந்ததைக் கேட்டு மதியற்ற சமண மத குருமார்கள் சினத்துடன் அரசரைப் பார்த்து, அரசே! திருவெண்ணீற்றை அணியும் இத் தருமசேனரைச் சுண்ணாம்புக் காளவாயில் தள்ள வேண்டும் என்று கூறினார். அரசன் எவ்வித விசாரணையுமின்றி சமண மயக்கத்தில் அமைச்சர்களிடம் தருமசேனரை சுண்ணாம்புக் காளவாயில் தள்ளுமாறு கட்டளையிட்டான். மன்னன் ஆணைப்படி ஏவலாளர்கள் நாவுக்கரசரைக் கொழுந்து விட்டெரியும் தீயுடன் கூடிய நீற்றறையில் விடுத்து கதவை அடைந்து வெளியே காவல் புரிந்தனர். நீற்றறையில் அடைபட்ட நாவுக்கரசர் எம்பருமான் நாமத்தை மனத்தால் தியானித்த வண்ணமாகவே இருந்தார். இறைவனின் அருளால், வெப்பம் மிகுந்த அந்த சுண்ணாம்பு நீற்று, இளவேனிற் காலத்தில் வீசும் குளிர்த் தென்றலைப் போல் - குளிர்ச்சி பொருந்திய தடாகம் போல் யாழின் மெல்லிமை போல் தண்மை மிகும் குளிர் நிலவு போல் நாவுக்கரசருக்கு இன்பத்தைக் கொடுத்தது. பிறைமுடி வேணியரை நினைத்து மகிழ்ந்து, மாசில் வீணையும் மாலை மதியும் எனத் தொடங்கும் திருப்பதிக்ம் ஒன்றைப் பாடினார். ஏழு நாட்கள் செனற பின்னர், பல்லவ மன்னனின் கட்டளைப்படி சமண குருமார்கள் அறையைத் திறந்து பார்க்க வந்தனர்.கரியமேகக் கூட்டம் திரண்டு வந்தாற் போல் நீற்றறையை வந்தடைந்த சமணர்கள் கதவுகளைத் திறந்ததும் அங்கு அவர்கள் கண்ட காட்சி அவர்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. திருநாவுக்கரசர் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கி அம்பலவாணராது பாதமலர்க் கமலங்களில் ஊறுகின்ற தேனமுதத்தை உண்டுகளித்து, எவ்வகையான ஊனமும் ஏற்படாமல் உவகை பொங்க எழுந்தருளியிருப்பதைக் கண்டனர். ஆத்திரத்தோடு கொதித்தெழுந்த சமணர்கள், மன்னனிடம் விரைந்து சென்று, ""அரசே தருமசேனர், நமதுசமண நூல்களில் இறவாமல் இருப்பதற்கு கூறப்பட்டுள்ள மந்திரங்களை, ஜபித்து சாகாமல் உயிர் தப்பியுள்ளார் என்று கூறினர். அது கேட்ட பல்லவ மன்னன், அங்ஙனமாயின் இப்பொழுது தருமசேனரை யாது செய்தல் வேண்டும் ? என்று கேட்க சமணர்கள், தருமசேனரைக் கொடிய நஞ்சு ஊட்டிக் கொல்லவேண்டும் என்று கூறினார். மேல்பல்லவ வேந்தனும் அநத பாவிகளின் கூற்றிற்கு இணங்கி, அவ்வாறே தண்டனை கொடுப்போம் என்று கூறி, தருமசேனரைக் கொல்ல ஆணையிட்டார். சமணர்கள், நஞசு கலந்த பால் சோற்றை எடுத்துக் கொண்டு நாவுக்கரசரை அணுகி, அவரை உண்ணுமாறு செய்தனர். நாவுக்கரசர், பால்சோற்றினை வாங்கிக் கொண்டு, எங்கள் நாதருடைய அடியாருக்கும் நஞ்சும் அமுதமாகும் என்று கூறியவாறு உண்டார். அமரரைக் காக்க ஆலகாலத்தை அமுதம் போல் அள்ளிப் பருகிய நீலகண்டர், நாவுக்கரசர் உண்ணும் நஞ்சு கலந்த பால் சோற்றையும் திருவமுதாக்கி அருளினார். முன்னைவிடப் புதுப்பொலிவுடன், மகிழ்ச்சி பொங்கக் காணப்பட்டார் நாவுக்கரசர்! சமணர்கள் அஞ்சினர். தங்கள் சமயத்திற்கு அந்திம காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தனர். மீண்டும் அக்கொடியவர்கள் பல்லவ மன்னனை அணுகி, விவரத்தை விளக்கிக் கூற, மூன்றாவது முறை அவரை, மத யானையால் இடறச் செய்து கொன்றுவிடுவது என்று உபாயத்தைச் சொல்லினர். மன்னனும் அங்ஙனமே மதங்கொண்ட யானையால் மாய்த்துவிடுவோம். உடனே மத யானையை ஏவி விடுக என்று கட்டளையிட்டான். வில்லிலிருந்து புறப்படும் கொடிய அம்பு போல் மன்னனது ஆணை புறப்பட்டதும் சற்றும் தாமதியாமல் காவலர் மத யானையை அவிழ்த்து விட்டனர். சமணர்கள் நாவுக்கரசரை அழைத்து வந்து மத யானை வரும் திசைக்கு எதிரில் நிறுத்தினர். நாவுக்கரசர் சிவநாமத்தை சிந்தையிலிருத்தி சுண்ணவெண் சந்தைனச் சாந்தும் எனத் தொடங்கும் சிவப்பாடலைப் பாடினார். திருப்பாட்டின் இறுதியில், அஞ்சுவது யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை என்று அமையுமாறு திருப்பதிகம் அமைத்தார் நாவுக்கரசர்.அப்பொழுது புயல் போல் முழக்கமிட்டுக் கொண்டு வந்த மத யானை நாவுக்கரசரின் அருகே வந்ததும் துதிக்கையை உயர்த்தி அவரைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தது. நிலத்தில் வீழ்ந்து வணங்கி அவருக்கு மரியாதை செய்தது. மத யானையின் மாறுபட்ட செயலைக் கவனித்த சமணர்கள் பாகர்களிடம் நாவுக்கரசரைக் கொல்லுமாறு யானைக்கு செய்கை காட்டுங்கள் என்று பொருமினர். அவர்களும் குறிப்பால் யானைக்கு அதனை உணர்த்தினர். உடனே மத யானை மதம் பொங்க துதிக்கையால் பாகர்களைத் தூக்கி எடுத்து வீசி எறிந்து கொன்றது; அத்தோடு யானை அடங்கவில்லை. அந்த மத யானை சமணர்களின் மீது பாய்ந்து அவர்களையும் காலால் மிதித்துத் தந்தத்தால் குத்திக் கிழித்தது. துதிக்கையால் தூக்கி எறிந்து கொன்று குவித்தது.மந்திரகிரி திருப்பாற் கடலைக் கலக்கியது போல், மத யானை அத்திரு நகரை ஒரு கலக்கு கலக்கி சமணர்களைக் கொன்று குவித்தது. மத யானையின் பிடியில் விழாமல் தப்பிப் பிழைத்த ஒருசில சமணர்கள் அஞ்சி நடுங்கி பல்லவ வேந்தனிடம் தஞ்சம் புகுந்தனர். சமணர்கள் மீது வெறுப்பு கொண்ட அரசன், ஆத்திரத்தோடு சமணர்களைப் பார்த்து இனிமேல் செய்வதற்கு என்னதான் இருக்கிறது? என்று வெறுப்போடு கேட்டதும், சமணர்கள் இம்முறை தருமசேனரைக் கல்லோடு சேர்ந்து கட்டி கடலில் போட வேண்டும் என்று கேட்டு கொண்டார்கள். அந்த நிலையிலும் சமணர்களின் செருக்கு அடங்கவில்லை. அவர்களது இத்தகைய முடிவிற்குத் தலைவணங்கிய வேந்தன், நாவுக்கரசரை கல்லோடு கட்டிக் கடலில் கொண்டு போய்த் தள்ளிவிடுங்கள் என்று ஏவலாளருக்குக் கட்டளையிட்டான். மேல்ஏவலாளர் நாவுக்கரசரைப் படகில் ஏற்றிக் கொண்டு சமணர்களுடன் கடலில் புறப்பட்டனர். நடுக்கடல் சென்றதும், அவரைக் கல்லோடு கட்டி கடலில் வீழ்த்திவிட்டுக் கரைக்குத் திரும்பினார். கடலுள் வீழ்ந்த நாவுக்கரசர், எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும்; இவ்வெளியோன் எம்பிரானை ஏத்துவேன் என்று நினைத்தார். சொற்றுணை என அடி எடுத்து நற்றுணையாவது நமச்சிவாயவே என்று பதிகம் பாடி கடலில் மூழ்கினார். ஆழ்கடலில் அருந்தமிழ் முத்தை கொடுத்தார். பைந்தமிழ் பாமாலை கோர்த்தார். புலித்தோலைப் போர்த்த அரவணிந்த அண்ணலுக்கு அழகிய ஆரமாய் அணிவித்தார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உடலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது எழுந்தருளினார். கல்லும் கனிய இன்மொழியில், நாவரசர் பாமாலை தொடுத்து, ஐந்தெழுத்தை ஓதியதும், அவரது உடலைப் பிணித்திருந்த கயிறு அறுபட்டு வீழ்ந்தது. அக்கயிற்றோடு கட்டியிருந்த கல்லும், தெப்பமாகக் கடல் மீது மிதந்தது. நாவுக்கரசர் அதன் மீது எழுந்தருளினார். நாவுக்கரசர் வருணனின் உதவியால் திருப்பாதிரிப் புலியூருக்கு அருகிலே கரை சேர்த்தார். அத்தலத்தின்கண் வாழும் அன்பர்களும், அடியார்களும் விரைந்தோடி வந்து நாவுக்கரசரை அன்பு கொண்டு அழைத்து அக மகிழந்தனர். சிவநாமத்தை விண்ணெட்ட ஒலித்த வண்ணம் நாவுக்கரசரை திருப்பாதிரிப்புலியூர் ஐயனின் திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அங்கே குடிகொண்டிருக்கும் முக்கண்ணரின் மென்மலர்த்தாளினை ஏத்தி வழிபட்டு, ஈன்றாளுமாயெனக்கெழுந்தையுமாய் என்று தொடங்கும் நமச்சிவாயப் பதிகத்தை இறைவனின் செவிகுளிர ஓதினார் நாவுக்கரசர். உருத்திராக்ஷ மாலைகளும, திருவெண்ணீரும் மேனியில் துலங்க, கையிலே உழவாரமும் தாங்கியவாறு அப்பர் பெருமான் நின்ற கோலம்கண்டு அன்பர்கள் பேரானந்தம் பூண்டனர். இவற்றை எல்லாம் கேள்வியுற்ற பல்லவ மன்னன் மனம் மாறினான். மதி தெளிந்தான். எஞ்சிய சமணர்களை அடியோடு ஒழித்தான். நாவுக்கரசருக்குத் தான் செய்த பாவத்திற்கு பிராயசித்தம் தேடப் புறப்பட்டான். அதற்குள் நாவுக்கரசர் அங்கிருந்து புறப்பட்டு, பல சிவத்தலங்களைத் தரிசித்தவாறு, திருவதிகையை வந்தடைந்தார். நாவுக்கரசரை வரவேற்க, திருவதிகைவாழ் அன்பர்கள் மிகப்பெரிய ஏற்பாடுகள் பலவற்றைச் செய்தனர். தமிழுக்கு அரசராகிய நாவுக்கரசர், சிவமே உருவெடுத்து வந்து கொண்டிருந்தார். திருவதிகைத் தொண்டர்களும், அன்பர்களும் இன்னிசை முழக்கத்தோடும், வேத ஒலியோடும், எல்லையிலேயே நாவுக்கரசரை வணங்கி வரவேற்று, நகருள் அழைத்துச் சென்றனர். அவரது அன்புத் திறத்தையும், பக்தி திறத்தையும், அருட் திறத்தையும் எண்ணி விம்மித முற்றனர். இவ்வாறு அன்பர்கள் சூழ்ந்துவர, வீதிவழியே வலம் வந்த திருநாவுக்கரசர், ஆலயத்தை அடைந்து திருவீரட்டானேசுவரரைப் பார்த்து, இறைவன் தன்னை ஏழையேன் நான் பண்டிகழ்ந்தவாறே என்று முடியும் திருத்தாண்டகப் பதிகத்தைப் பாடிப் பரமனைப் பேணினார். மேல்வீரட்டானேசுவரரிடம் ஆராக்காதல் கொண்ட நாவுக்கரசர், சில நாட்கள் அத்திரு நகரிலேயே தங்கி, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபட்டு உழவாரப் பணி செய்து கொண்டிருந்தார். நாவுக்கரசர், திருவதிகைத் தலத்தில் எழுந்தருளியிருந்து பரமனைப் பாடிப் பணிவதைக் கேள்வியுற்றான் மன்னன் ! நால்வகைப் படை சூழ, மங்கல வாத்தியங்கள் ஒலிக்க திருவதிகையை அடைந்தான் பல்லவ மன்னன் ! திருமடத்தில தங்கியிருக்கும் நாவுக்கரசர் மலரடியில் வீழ்ந்து வணங்கி எழுந்தான். பிழை பொருத்தருளப் பிரார்த்திததான். அவரது அருளையும், அன்பையும் பெற்றான்; முக்தி நெறியினை உணர்ந்தான். சிவமே உருவெடுத்து செந்தமிழ்ச் செல்வரின் கருணை உள்ளத்திலே கட்டுண்ட பல்லவன், அன்னையின் அன்பு அரவணைப்பிலே சிக்கித் தவித்த மழலை போலானான். தனது தவற்றை எல்லாம் உணர்ந்து, தம் முன்னால் சிவப்பழமாக நிற்கும் பல்லவ மன்னனுக்கு நாவுக்கரசர், ஐந்தெழுத்து மந்திரத்தை ஜபித்துத் திருவெண்ணீறு கொடுத்தார். அரசன் திருவெண்ணீற்றைப் பக்தியோடு பெற்றுக் கொண்டு தனது நெற்றியிலும், திருமேனியிலும் பூசிக்கொண்டவாறு, நாவுக்கரசரின் அடிமலரைப் பணிந்தான். சில நாட்கள் அவரோடு தங்கியிருந்து, மனம் மகிழ்ந்த மன்னன், ஓர்நாள் அவரிடம் விடை பெற்றுக் கொண்டு பாடலிபுரத்துக்குப் புறப்பட்டான். பாடலிபுரத்தை அடைந்த மன்னன். முதல் வேலையாக சமணர்களின் பள்ளிகளையும், பாழிகளையும் இடித்துத் தள்ளினான். திருவதிகையில் குண பாலீசுரம் என்றும் திருக்கோயிலைக் கட்டி, சைவ சமயத்திற்குச் சிறந்த தொண்டாற்றத் தொடங்கினான். திருநாவுக்கரசர் பல சிவத்தலங்களைத் தரிசித்து வரும் பொருட்டு, திருவதிகைப் பெருமானை வணங்கித் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவெண்ணெய்நல்லூர், திருவாமாத்தூர், திருக்கோவிலூர் போன்றத் தலங்களில் எழுந்தருளியிருக்கும் இறைவனைத் துதித்த வண்ணம் பெண்ணாடத்தைப் வ்நதணைந்தார். பரம்பொருளைப் பாமாலை சாத்திப் போற்றினார். ஐயனே! எம்மை ஆட்கொண்டு அருளிய அருள் வடிவே ! சமணத்தோடு சேர்ந்து சில காலம் அவர்களுக்காகவே உழைத்த இந்த ஈன உடம்பு உலகில் உயிர் வாழ விரும்பவில்லை. அடியேன் உலகில் உமது திருநாமம் போற்றி மகிழ்ந்து வாழ்ந்திட வேண்டுமென்றால் தேவரீர் திருவுள்ளம் கனிந்து, இந்த ஏழையின் வெண்ணீறு அணிந்த மேனியிலே, உமது குலச்சினையான சூலத்தையும் இடபத்தையும் பொறித்து அருள்புரிவீராகுக என்று வேண்டினார் நாவுக்கரசர். பொன்னாற் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடினார். மேல்திருநாவுக்கரசர் பதிகம் பாடி முடித்தார். எவரும் அறியா வண்ணம் பூதகணத்தவர் தோள்களில் சூல முத்திரையையும், இடபமுத்திரையையும் பொறித்து விட்டு அகன்றனர். திருநாவுக்கரசர் ஆனந்தக் கண்ணீர் வடித்து நின்றார். விண்ணவர் மலர்மாறி பொழிந்தனர். ஆலயத்துள் மறையொலி முழங்கியது. அருள் ஒளி பிறந்தது. அடிகளார் உய்ந்தேன் எனக்கூறி மகிழ்ந்து தம்மை மறந்த நிலையில், பரமனின் பாத கமலங்களில் வீழ்ந்தார். அருந்தவசிகளும், அமரர்களும், திருமூர்த்திகளும் பேõற்றி வணங்கும் வேணியர் பிரானின் மலரடியில் அன்பின் அருள்வடிவமாய் வீழ்ந்த அண்ணல் அம்மையப்பரின் அருத்திறத்தினை எண்ணிப் பெருமிதமுற்றார். அத்தலத்தில் சில நாட்கள் தங்கியிருந்து முக்காலமும், முக்கண்ணரைப் போற்றிச் செந்தமிழ்ப் பாமாலை சாத்தி, சிந்தை மகிழ, திருத் தொண்டுகள் பல நடத்தி வந்தனர். ஒருநாள் அத்திருத்தலத்திலிருந்து புறப்பட்டார். திருவரத்துறை, திருமுதுகுன்றம் போன்ற தலங்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிய வண்ணம் தில்லையை அடைந்தார். நாவுக்கரசர், கோபுரத்தைக் கண்டு, கண்களில் நீர்மல்க, சிவநாமத்தைப் பாடிப் பணிந்தார். சிதம்பரம் தில்லை நடராஜர் கோயிலின் மேற்கு ராஜகோபுரத்தின் வழியாக சென்று நடராஜரை தரிசித்தார். தி்ல்லைவாழ் அந்தணர்கள் சூழ ஆலயத்துள் எழுந்தருளிய நாவுக்கரசர், பேரம்பலத்தை வணங்கினார். ஆனந்தத் தாண்டவம் ஆடும் பொன்னம்பலத்தரசரைப் பேரன்புருகத் தொழுதார். கையுந் தலைமிசை புனையஞ்சலியன எனத் தொடங்கும் செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடினார். எம்பெருமானின் ஆனந்த வடிவத்தைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்து நின்ற திருநாவுக்கரசருக்கு, பாத கி்ண்கிணிகள் பரதமாட - அரவமணிந்த அழகிய வெண்ணீறு துலங்கும் மலர்க்கரங்கள் அபிநயத்தோடு தெரிவது கண்டார், இறைவன் தன்னைப் பார்த்து, என்று வந்தாய் ? என்று கேட்பது போன்ற குறிப்பைப் புலப்படுத்த நடனம் புரிகின்றாய் என்று உணர்ந்து கொண்டவராய், கருநட்ட கண்டøன என்னும் விருத்தத்தையும், பத்தனாய்ப் பாடமாட்டேன் என்னும் நேரிசையையும் பாடிப் பணி்ந்தார் திருநாவுக்கரசு ! அத்தலத்தில் சிலகாலம் தங்கியிருந்து உழவாரப்பணி செய்து வந்தார். எம்பெருமானை வணங்கி பாமாலை பல பாடினார். ஒருநாள் நாவுக்கரசர் தில்லையைவிட்டுப் புறப்பட்டுத் திருநாரையூர் வந்தார். பொள்ளõப் பிள்ளையாரை வணங்கினார். அங்கிருந்து புறப்பட்டுச் சீர்காழிப் பதியின் எல்லையை வந்தடைந்தார். தோணியப்பருக்குத் திருத்தொண்டு புரிநதுவரும் ஞான சம்பந்தர், அன்பர்களோடும், அடியார்களோடும் புறப்பட்டுச் சென்று நாவுக்கரசரை அகமும், முகமும் மலர எதிர்க்கொண்டு அழைத்தார். நாவுக்கரசர் திருக்கூட்டத்தின் இடையே சென்று அவருடைய மலரடியைப் பணிந்தார்.ஞான சம்பந்தர், நாவுக்கரசரை தமது தந்தையாரைப் போன்ற தலைமையான சிறப்பு மிக்கவர் என்பதை உளமாற உணர்ந்து, அப்பரே என்று அழைத்ததும், திருநாவுக்கரசர் அடியேன் என்று தமது பணிவான அன்பை வெளிப்படுத்தினார். அருட்கடலும், அன்புக்கடலும் கலந்தாற்போன்று, இணைந்த இவ்விரு ஞானமூர்த்திகளும் அன்பர்கள் புடைசூழ தோணியப்பர் ஆலயத்தை வந்தடைந்தனர். திருக்கோபுரத்தை வழிபட்ட இருவரும் வானளாவி ஓங்கி நிற்கும் விமானத்தை வலம் வந்து தொழுதனர். ஆளுடைப்பிள்ளையார்அப்பரடிகளைப் பார்த்து, அப்பரே! நீவிர் உம்மை ஆட்கொண்டருளிய எம்பெருமானை இன்பத் தழிழால் பாடுவீராக ! என்று வேண்டினார். ஆனந்தக் கடலில் மூழ்கி நின்ற அப்பரடிகள், பார் கொண்டு முடி என்னும் பைந்தமிழ்ப் பாமாலை சாத்தித் திருத்தோணியப்பரையும், பெரியநாயகியம்மையாரையும் பணிந்தார். மேல்கலைஞானக் கன்றாகிய ஆளுடைப்பிள்ளையின் விருப்பதிற்கிணங்க அருள்ஞான அரசராகிய அப்பரடிகளும் சீர்காழியில், ஞானசம்பந்தருடன் சிலகாலம் தங்கி இருந்தார். இரு சிவநேசர் செல்வர்களும் நாடோறும் எம்பெருமானை வணங்கி, பதிகம் பல பாடிப் பணிந்து வந்தனர். சீர்காழிப் பதியிலுள்ள மெய்யன்பர்கள் அருள்பெற்ற இந்த நாயன்மார்களின் செந்தமிழ்த் தேன் சிந்தும் பக்திப் பாடல்களைப் பருகிப் பெருமிதம் பொங்கினர். சீர்காழி நகரம் விழாக்கோலம் பூண்டது ! ஒரு நாள் சோழநாட்டிலுள்ள திருத்தலங்களை எல்லாம் தரிசித்து வரவேண்டும் என்று ஆராக் காதலுடன் இரு ஞானமூர்த்திகளும் சீர்காழியை விட்டுப் புறப்பட்டனர். பல சிவதலங்களைத் தரிசித்தவாறு திருகோலக்கா என்னும் தலத்தை வந்தடைந்தனர். அங்கு இருவரும், எம்பெருமானைத் தரிசித்து சிந்தை குளிர்ந்தனர். ஆளுடையப்பிள்ளையார் அப்பர் சுவாமிகளிடம் விடைöபற்றுக்கொண்டு சீர்காழி்க்குத் திரும்பினார். அப்பரடிகள் கோலக்காவிலிருந்து புறப்பட்டார். கருப்பறியலூர், திருப்புன்கூர், நீடூர், திருக்குறுக்கை, வீராட்டம், திருநின்றயூர், திருநனிப்பள்ளி வழியாக பல சிவத்தலங்களைத் தரிசித்தவாறு திருச்சத்தி முற்றத்தை வந்தடைந்தார். உமாதேவியார் போற்றிப் பணிந்த புனிதத்தலமாகிய திருச்சத்தி முற்றத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவனை வணங்கி வழிபட்டார். அப்பரடிகள் அவ்வூரில் தங்கியிருந்து எம்பெருமானுக்கு உழவாரப் பணிசெய்யத் திருவுள்ளம் பற்றினார். திருச்சத்தி முற்றத்து பக்தகோடிகள் திருநாவுக்கரசரின் வருகையால் புளங்காகிதம் அடைந்தனர். நாவுக்கரசர் உழவாரப் பணிபுரிந்து பரமனை வழிபட்டார். ஆன்மீக அன்பர்களும் அப்பரடியாருக்கு உறுதுணையாக நின்றனர். அப்பரடிகள் எம்பெருமானே! கூற்றவன் வந்து எனது உயிரைக் கவர்ந்து செல்லுமுன் உமது திருவடி அடையாள்ம் பதியுமாறு அடியேன் சென்னிமீது வைத்து அருளவேண்டும் என்ற கருத்தமைந்த கோவாய் முடுகியடுறதில் எனத் தொடங்கி, திருச்சத்தியமுற்ற துறையும் சிவக்கொழுந்தே என்னும் திருப்பதிகத்தைப் பாடினார். அருள்வடிவமாகி எம்பெருமான், திருநல்லூருக்கு வா என்று அப்பரடிகளுக்கு அருள்புரிந்தார். அடிகள் ஆனந்தம் மேலிட அக்கணமே திருச்சத்தி முற்றத்தை விட்டுப் புறப்பட்டார். திருநல்லூர் என்னும் பழம்பதியை வந்தடைந்தார். நலம் தந்த நாதரை வலம் வந்து வணங்கினார். அப்பொழுது கருணைக் கடலாகிய நல்லூர்ப் பெருமானார், திருச்சத்தி முற்றத்தில் உளம் உருக என்னிடம் வேண்டியதற்கு ஏற்ப உனது எண்ணத்தை முடி்க்கின்றோம் என்று திருவாய் மலர்ந்து, தமது திருப்பாத மலர்களை அப்பர் சுவாமிகளின் சென்னியின் மீது சூட்டி அருளினார். எம்பெருமான் கருணைக் கடலில் மூழ்கி கரைகாணாமல் தத்தளித்துப் போன அப்பரடிகள் நினைத்துருகும் அடியாரை எனத் தொடங்கி நல்லூர்ப் பெருமானார் நல்லவாரே எனப் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு திங்களூர் வந்தடைந்த அப்பரடிகள், அப்பூதி அடிகளின் இல்லத்திற்கு எழுந்தருளினார். அங்கு திருவமுது உண்ணப்போகும் தருணத்தில் அபபூதி அடிகளின் மகன்களுள் மூத்தவன் அரவம் தீண்டி இறந்தான் என்பதறிந்து அவனைத் திருப்பதிகம் பாடி உயிர் பெற்று எழச் செய்தார் நாவுக்கரசர். மேல்நாவுக்கரசர் அப்பூதி அடிகளோடு திங்களூரில் தங்கியிருந்து எம்பெருமானைப் பணிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நாவுக்கரசர். திருப்பழனம் வழியாக நல்லூர், பழையாறை, வலஞ்சுழி, திருக்குடமுக்கு, திருச்சேறை, திருக்குடவாயில், திருநாரையூர், திருவாஞ்சியம், பெருவேளூர், திருவிளாமர் முதலிய தலங்களைத் தரிசித்துக்கொண்டே வந்தார். பெருமானை வண்டமிழ்ப் பாமாலை பாடிப்போற்றினார் நாவுக்கரசர். எண்திசையும் அவரது புகழ் பேச சிவதரிசனம் செய்துகொண்டே திருவாரூரை வந்தணைந்தார். திருவாரூர்ச் சிவத்தொண்டர்களுகளும், சிவ அன்பர்களும் அப்பரைக் கோலாகலத்தோடு வணங்கி வரவேற்றார்கள். அடியார்கள் சூழ, அப்பரடிகள் தேவாசிரிய மண்டபத்தின் முன்சென்று வணங்கிய வண்ணம் கோயில் உள்ளே செனறார். புற்றிடங் கொண்ட தியாகேசப்பெருமானை அன்போடு துதி செய்து திருத் தாண்டகம் பாடி அன்போடு துதி செய்து திருத் தாண்டகம் பாடி மகிழ்ந்தார். திருவாதிரைத் திருநாளைக் கண்டுகளித்தனர். அப்பரடிகள் அத்தலத்திலேயே எழுந்தருளியிருந்து தினந்தோறும் தியாகேசப் பெருமானை வழிபட்டு இனிய பக்திப் பாமாலைகளைச் சாத்திச் சிந்தை குளிர்ந்தார். அடுத்துள்ள வலிவலம், கீழ்வேளூர், கன்றாப்பூர் போன்ற திருப்பதிகளுக்கும் சென்று வந்தார். திருவாமூர் திருவாதிரைத் திருவிழாவைக் கண்டு களிப்புற்றார். பின்னர் அங்கிருந்து திருப்புகலூருக்குப் புறப்பட்டார். இத்தருணத்தில் சீர்காழியில் இருந்து எழுந்தருளிய ஞானசம்பந்தர் பல சிவ தலங்களைத் தரிசித்த வண்ணம் திருப்புகலூரை வந்தணைந்தார். முருகநாயனார் மடத்தில் தங்கியிருந்து நாடோறும் ஆலயம் சென்று அரனாரை வணங்கி வழிபட்டு வந்தார் சம்பந்தர். அவ்வமயம் அப்பரடிகள் தமது அன்பர்களுடன் திருப்புகலூருக்கு வந்து கொண்டிருந்தார். இவ்விவரத்தை முன்னதாகவே அறிந்துகொண்ட ஆளுடைப் பிள்ளையார் திருப்புகலூர்த் தொண்டர்களுடன் அப்பரடிகளை எதிர்கொண்டு வரவேற்று ஆரத்தழுவி மகிழ்ந்தார். தொண்டர்கள் புடைசூழ இரு ஞான செல்வர்களும் முருகநாயனார் மடத்திற்கு வந்தனர். முருகநாயனார், பேரானந்தத்துடன் இரு சிவனருட் செல்வர்களையும் வரவேற்று மடத்துள் எழுந்தருளச் செய்தார்; சிவஞானப் பதிகம் பாடி மகிழ்ந்தார். ஆளுடைபிள்ளையார் அப்பரடிகளிடம், அப்பரே! திருவாதிரைத் திருநாளில் நிகழ்ந்த அற்புதங்களையும் புற்றிடங் கொண்ட பெருமானின் பெருமையையும் ஏற்றமிகும் இன்பத் தமிழால் எடுத்துரைப்பீர் என்று வேண்டினார். அம்மொழி கேட்டு அகமகிழ்ந்த அப்பரடிகள் தியாகேசப் பெருமானின் திருக்கோலத் திருவிழா வைபவத்தை முத்துவிதான மணி்ப பொற்கவரி எனத் தொடங்கும் தண்தமிழ்ப் பதிகத்தால் நெக்குருக பாடினார். இவ்வற்புதத் திருப்பதிகத்தைச் செவி குளிரக் கேட்டு இன்புற்ற ஆளுடைப் பிள்ளையார், தியாகேசப் பெருமானைத் தரிசிக்க வேண்டும் என்று அளவிலா ஆசை கொண்டார். சிலநாட்கள் அப்பருடன் முருகநாயனாரின் மடத்தில் தங்கியிருந்து சம்பந்தர், அப்பரடிகளிடம் விடை பெற்றுக் கொண்டு சிவ அன்பர்களுடன், திருவாரூருக்குப் புறப்பட்டார். மேல்அப்பரடிகள், புகலூர்ப் பெருமானுக்கு உழவாரப் பணி செய்து மகிழ்ந்து வந்தார். திருப்புகலூரில் தங்கியிருந்து திருத்தொண்டுகள் புரிந்து வந்த அப்பரடிகள், அடுத்துள்ள திருச்சாத்தமங்கை, திருமருகல் போன்ற சிவத்தலங்களுக்கு அன்பர்களுடன் சென்று சிவதரிசனம் செய்து வந்தார். திருவாரூர் சென்றிருந்த ஆளுடைப் பிள்ளையார் புற்றிடங் கொண்ட பெருமானை வழிபட்டு அன்பர்களுடன் திருப்புகலூருக்குத் திரும்ப வந்தார். அப்பரடிகள், திருத்தொண்டர்களுடன் சென்று, எல்லையிலேயே ஆளுடைப் பிள்ளையாரைச் சந்தித்து, எதிர்கொண்டு வரவேற்றார். இரு ஞானமூர்த்திகளும் திருப்புகலூர்ப் பெருமானை வழிபட்டவாறு மடத்தில் தங்கியிருந்தனர். சிறுத்தொண்ட நாயனாரும், திருநீலநக்க நாயனாரும், முருக நாயனாரும் மடத்திற்கு எழுந்தருளினர். இரு திருஞான மூர்த்தியர்களையும் வணங்கி மகிழ்ந்தனர். அச்சிவனடியார்கள், இரு ஞான மூர்த்திகள் திருத்தொண்டில் அருட்திறத்தினை வானளாவப் புகழ்ந்து போற்றினர். அருள்பெற்ற சிவனருட் தொண்டர்களாடு, முருக நாயனார் திருமடத்தில் தங்கியிருந்த ஆளுடைப் பிள்ளையாருக்கும், அப்பரடிகளுக்கும், சிவயாத்திரைக்குப் புறப்பட வேண்டும் என்ற பெருவிருப்பம் ஏற்பட்டது. அவர்கள் அனபர்களக அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திருப்புகலூர்ப் புண்ணியரின் அருளோடு திருக்கடவூர் என்னும் திருத்தலத்திற்குப் புறப்பட்டனர். இரு திருவருட் செல்வர்களும் திருக்கடவூரை அடைந்து, காலனை உதைத்த விமலநாதரைஅமுதத்தமிழால் பாடிப் பணிந்து குங்குலியக் கலயனார் மடத்திற்கு எழுந்தருளினார். குங்குலியக் கலயனார் எல்லையில்லா மகிழ்வோடு இரு ஞானமூர்த்தியர்களையும் வழிபட்டு வரவேற்றார். இத்திருநகரில் குங்குலிய கலியநாயனாருடன் சில நாட்கள் தங்கியிருந்து, திருத்தொண்டுகள் பல புரிந்து வந்த இரு ஞானமூர்த்திகளும், குங்குலியக்கலய நாயனாரிடம் விடைபெற்க் கொண்டு, திரு ஆக்கூர் வழியாக தங்கள் சிவயõத்திரையத் தொடங்கினார். போகும் வழியிலேயே பல புண்ணிய சிவத்தலங்களைத் தரிசித்து, அரவணிந்த அண்ணலை, அழகு தமிழில் வழிபட்டனர். திருவீழிமிழலை என்னும் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தனர். ஒருமுறை திருமால் சக்ராயதம் பெருவதற்காக எம்பெருமானை, ஆயிரத்தெட்டு கமல மலர்களால் வழிபடலானார். எம்பெருமான், அம்மலருள் ஒரு மலர் குறையுமாறு செய்தருளினார். அதை அறியாத திருமால் ஒவ்வொரு மலர்களாக எடுத்து, ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி அர்ச்சனை செய்து வந்தார். இறுதியில், ஒரு மலர் குறைகிறது என்பதை உணர்ந்து உளம் உருகினார். திருமால் வேறு மலர் கொய்து வருவதற்குள் தாமதம் ஏற்பட்டு, வழிபாடு தடைப்பட்டுவிடும் என்பதை உணர்ந்தார். வழிபாட்டை நிறைவோடு முடிக்கக் கருதினார். தமது மலர் கண்களிலே ஒன்றை எடுத்து அர்ச்சனை செய்வது என்ற முடிவோடு ஒரு விழியைத் தோண்டி எடுக்கத் துணிந்தபொழுது, எம்பெருமான் எழுந்தருளி அவரைத் தடுத்தாட் கொண்டார். மேல்திருமாலின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருசடைப் பிரான் சக்ராயுதம் கொடுத்தருளினார். திருமால் விழிகளில் ஒன்றை எடுத்து இறைவனுக்கு அர்ச்சிக்கத் துணிந்தால் இத்திருத்தலம் திருவீழிமிழலை என்று திருநாமத்தைப் பெற்றது. இத்திருநகரில் அடியார்களின் கூட்டம் கடல் வெள்ளம் போல் பொங்கி எழுந்தது. நக்ர்ப்புறம் வநது இரு ஞானமூர்த்திகளையும் எதிர்கொண்டு வணங்கி, மலர் தூவி வரவேற்றனர் அடியார்கள். அருட்செல்வங்கள் மட்டற்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு தொண்டர் குழாத்தோடு கலந்து, மாடவீதி வழியாக விண்விழி விமானத்தையுடைய கோவிலுள் எழுந்தருளினர். கோயிலை வலம் வந்து திருமுன் பக்திப் பழமாக நின்ற இரு ஞானமூர்த்திகளும், தமிழ்ப் பதிகத்தால் வீழி அழகரை ஏற்றித் துதித்தனர். அப்பரடிகள், திருவீழிமிழலையானைச் சேராதார் தீயநெறிக்கே சேர்கின்றாரே என்ற ஈற்றிடியினைக் கொண்ட திருத்தாண்டகப் பதிகம் பாடினார். திருவீழிமிழலை அன்பர்கள் இரு சிவன் அடியார்களும் தங்குவதற்குத் தனித்தனியழகிய திருமடங்களை ஏற்பாடு செய்தனர். இரண்டு மடங்களிலும் ஆண்டவன் ஆராதனையும் அடியார் துதியாராதனையும் சிறப்பாக நடந்தன. இருவரும் அத்தலத்திலேயே சிலகாலம் தங்கியிருந்து திருத்தொண்டுகள் பல புரிந்து வந்தனர். இந்த சமயத்தில் வானம் பொய்த்தது; மழையின்றி எங்கும் வறட்சி ஏற்பட்டது. நாடெங்கும் விளைச்சல் இல்லாமற் போனது, மக்கள் தாங்க முடியாத பஞ்சத்தால் பெரிதும் துயருற்றனர். மக்களுக்கு ஏற்பட்ட பஞ்சத்தை எண்ணி அப்பரும், ஆளுடைப் பிள்ளையும் செய்வதறியாது சிந்தித்தனர். திருவீழிமிழலை திருசடை அண்ணலைத் தியானித்த வண்ணமாககே இருந்தனர். ஒருநாள் எம்பெருமான், இரு ஞானமூர்த்திகளுடைய கனவிலும் எழுந்தருளி, உங்களைத் தொழுது வழிபடும் தொண்டர்களுக்காக உங்களுக்குத் தினந்தோறும் படிக்காசு தருவோம். அதனைக் கொண்டு அடியார்களின் அவலநிலையை அகற்றுங்கள் என்று திருவாய் மலர்ந்து மறைந்தார். மறுநாள் எம்பெருமான், கனவி்ல் அருளிச் செய்ததற்கு ஏற்ப, கிழக்கு பீடத்தில் ஆளுடை பிள்ளையாருக்கும், மேற்கு பீடத்தில் அப்பரடிகளுக்கும், பொற்காசுகளை வைத்தார். திருஞான சம்பந்தர் அம்பிகையின் ஞானப்பாலுண்ட திருமகனாரானதால் அவருக்கு வாசியுடன் கூடிய காசும், அப்பரடிகள் எம்பெருமானிடத்து மெய் வருந்த அருந்தொண்டு ஆற்றிகிறவராதலால் அவருக்கு வாசி இல்லாத காசும் கிடைக்கப் பெற்றது. இருவரும் படிக்காசுகளைக் கொண்டு பண்டங்கள் வாங்கி வந்து அடியார்க்கு அமுதளி்க்க வகை செய்தனர். எல்லோரும் அமுது உண்டு செல்லுங்கள் என்று பறை சாற்றினர். மக்களுக்கு அன்னதானம் புரிந்து பஞ்சத்தைப் போக்கினர். இவ்விரு சிவனடியார்களின் இருமடங்களிலும் தினந்தோறும் தொண்டர்கள் அமுதுண்டு மகிழ்ந்த வண்ணமாகவே இருந்தனர். இறைவனின் திருவருளாலே, மாதம் மும்மாரி பொழிந்தது. நெல்வளம் கொழித்தது. எங்கும் முன்போல் எல்லா மங்களங்களும் பொங்கிப் பொழிந்தன. இரு சிவ மூர்த்திகளும், தங்கள் சிவ தரிசன யாத்திரையைத் தொடங்கினர். திருவாஞ்சியம் முதலிய சிவத்தலங்களை வழிபட்ட வண்ணம் வேதாரணியம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடு என்னும் தலத்தை வந்தணைந்தார். மேல்ஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஆலயத்திற்கு வந்தனர். கோயிலில் கதவுகள் அடைககப்பட்டிருந்தன. அதுகண்டு வியப்பு மேலிட்ட இரு ஞானமூர்த்திகளும் அன்பர்களிடம் கதவுகள் அடைக்கப்பட்டிருப்பதின் காரணத்தை வினவினர். அச்சிவ அன்பர்கள், இருவரையும் தொழுது வணங்கியவாறு விவரத்தை விளக்கினர். சுவாமி! ஆதிகாலத்தில், இத்திருமறைக் காட்டில் எழுந்தருளியுள்ள பெருமானை வழிபட்ட மøறகள், கதவைக் காப்பிட்டுச் சென்றனர். அன்று முதல் இன்று வரைக் கதவு திறக்கப்படாமலே இருந்து வருகிறது. வாயிலைத் திறக்க வல்லார் ஒருவரும் வராமையால், நாங்கள் மற்றொரு வாயில் வழியாக அரனாரை வழிபாடு செய்து வருகின்றோம். அன்பர்கள் மொழிந்ததைக் கேட்டு இரு ஞான மூர்ததிகளும் எப்படியும் கதவுகளைத் திறத்தல் வேண்டும் என்று எண்ணினார். ஆளுடைப் பிள்ளையார், அப்பரடிகளைப் பார்த்து, அன்பரே! மறைகள் வழிபட்ட வேணிபிரானை நாம் எப்படியும் இந்த நேர்வாயிலின் வழியே சென்று தரிசித்து வழிபடுதல் வேண்டும். எனவே திருமுன் காப்பிட்ட கதவும் திறக்கும்படி திருப்பதிக்ம் பாடி அருள்வீராக! என்று கேட்டுக் கொண்டார். ஆளுடைப்பிள்ளையாரின் அன்புக் கட்டளையக் கேட்டு், அகமகிழ்ந்த நாவுக்கரசர் இறைவனைத் தியானித்த வண்ணம், பண்ணின் நேர்மொழியாள் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடினார். இருந்தும் கதவம திறக்கத் தாமதமாவதைக் கண்டு இறக்க மொன்றிவிர் என்று திருக்கடைக் காப்பிலே பாடினார். இங்ஙனம் திருநாவுக்கரசர் மெய்யுருகப் பாடிமுடித்த அளவில் மறைக்காட்டு மணிகண்டப் பெருமானின் திருவருளால் மணிக் கதவம் தாள் நீங்கியது. திருக்கதவும திறக்கப்பட்டது. அப்பரடிகளும்,ஆளுடைப் பிள்ளையும் அகமும், முகமும் மலர்ந்தனர். அன்பரகளும், அடியார்களும், சிவநாமத்தை விண்ணெட்ட முழக்கினர். இரு ஞானமூர்த்திகளும் மற்ற சில அன்பர்களோடு. ஆலயத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் ஆலயத்திற்குள் சென்றனர். வேதவனப் பெருமானின் தோற்றப் பொலிவைக்கண்டு மருள்கொண்டு நின்றனர், அழகு தமிழால் வழிபட்ட இரு ஞானமூர்த்திகளும் புறத்தே வந்தார்கள். அப்பரடிகள், இம மணிக்கதவம் அடைக்குமாறு நீரும் பாடியருள்க என்று ஆளுடையப் பிள்ளையாரிடம் வேண்டிக் கொண்டார். அம்பிகையின் ஞானப்பாலுண்ட சிவக் கொழந்து பாடினார். திருப்பதிகத்தில், முதற்காட்டிலேயே திண்ணிய கதவம் தானே மூடிக்கொண்டது. அன்று முதல் ஆலயத்தின் மணி கதவுகள் தானாகவே திறக்கவும், மூடவும் ஏற்றாற்போல் அமைந்தது. இத்தயை மகிழ்ச்சிப் பெருக்கில் அனைவரும் இருஞானச் செல்வர்களையும் மலர் தூவிக் கொண்டாடினர். அத்திருத்தொண்டர்கள் புடைசூழ மடத்திற்குப் புறப்பட்டனர். மொழிக்கு முதல்வராகிய நாவுக்கரசர் மடத்தில் ஒரு புறத்தே படுத்துக்கொண்டார். அவருக்கு உறக்கம் வரவில்லை. மனதில் எழுந்த ஒரு சிறு கலக்கம் அவரை அளவு கடந்து குழப்பிக் கொண்டிருந்தது. மேல்முதலில் வாயில் காப்பு நீங்குவதற்கு அடியேன் இரு தடவைகள் முயன்று பாடிய பின்னரே திறந்தது. ஆனால் ஞானசம்பந்தர் காப்பு மூடுவதற்குப் பாடத் தொடங்கியபொழுதே கதவும் அடைபட்டு விட்டது. அது ஏன் ? நான் பாடியவுடன் மட்டும் கதவம் ஏன் திறக்கவில்லை ? எம்பெருமானுடைய திருவுள்ளக் கிடக்கை யாதோ என்பதை இந்த அடியேன் அறிய இயலாது போனேனே ! என்ற எண்ணம் நாவுக்கரசரின் நித்திரையைக் கெடுத்தது. கண்களை மூடிக்கொண்டு சிவசிந்தையில் ஒருவாறு கண் அயர்ந்தார். இறைவன் அவரது கனவில் எழு்ந்தருளினார் ! வாகீசா ! நாம் திருவாய்மூரில் இருப்போம். அங்கு நீ எம்மைத் தொடர்ந்து வருவாயாக ! என்று எம்பெருமான் அருள்வாக்கு மலர்ந்தருளினார். அப்பரடிகள் உறக்கம் கலைந்து எழுந்தார். எம்பெருமானைப் பணிந்து, எங்கே என்னை இருந்திடத் தேடிக்கொண்டு எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார் அப்பரடிகள். அந்த இரவிலேய திருவாய்மூர் புறப்பட எண்ணினார். அந்த நள்ளிரவு வேளையில் சம்பந்தரின் நித்திரையைக் கெடுக்க விரும்பவில்லை நாவுக்கரசர். மடத்திலுள்ள சில அடிகளாரிடம் மட்டும் கூறிவிட்டு புறப்பட்டார். எம்பெருமான், அந்தணர் கோலத்துடன் அடியார் முன்னால் சென்று கொண்டிருந்தார். எம்பெருமானுக்கு பின்னால் அப்பரடிகள் அதிவேகமாக நடக்கலானார் நிறைந்த அமுதம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாதது போல், தம்மால் முயன்றவரை முழு வேகத்தடன் விரைந்து சென்றும் அவரால் எம்பெருமானை நெருங்க முடியவில்லை ! இத்தருணத்தில் எம்பெருமானின் திருவருளால் இமைமூடித் திறப்பதற்குள் இவர்கள் செல்லும் பாதையில் ஒருமருங்கில், பொன்மயமான திருக்கோயில் ஒன்று எழுந்தது. எம்பெருமானும், அதனுள் மறைந்தார். அப்பரடிகள் அப்பொன் வண்ணக் கோயிலுள் விரைந்து சென்றார். அங்கே பெருமாளைக் காணாது கண்களில் நீர் மல்க நின்றார். அங்கேயே துயினறார். மறுநாள் ஞானசம்பந்தர் அப்பரடிகள் இறைவன் அருளியதற்கு ஏற்ப திருவாய்மூர் சென்றுள்ளார் என்று விவரத்தை கேள்விப்பட்டு அக்கணமே அன்பர்களுடன் திருவாய்மூருக்கு விரைந்தார். திருவாய்மூரில், எம்பெருமானால் அருளப்பட்ட பொன்வண்ணக் கேõயிலை வந்தணைந்தார். ஞானசம்பந்தர் ! அப்பரடிகளைக் கண்டு அப்பரே! என்றார். ஞானசம்ப்ந்தர் குரல் கேட்டுச் சற்று மனக் கலக்கம் நீங்கி அகமகிழ்ந்த அப்பரடிகள் அவரை வணங்கி வரவேற்றார். எம்பெருமானிடம் குறை ப்கர்ந்தார். ஐயனே ! என்னை இங்கு அழைத்து வ்ந்து உமது அருள் தோற்றத்தைக் காட்டாமல் மறைத்து விட்டீரே ! வேதாரண்யத்திலும் பெருமான் எனை சோதித்தீர் ! எளியவன் மீது ஐயனின் கருணை இம்மட்டும்தானா ? உமது அன்புத் தொண்டர் திருஞான சம்பந்தரே பதிகம் பாடிக் காப்பு நீங்கச் செய்ய வேண்டும் என்ற உமது திருவுள்ளத்தினை உணராமல் நான் பதிகம் பாடி காப்பு நீங்கச் செய்த கதவைத் திறப்பித்தது அடியேன் செய்த பிழைதான். அதற்காக இக்கோயிலுள் மாயமாய் ஒளிந்துக் கொண்டிருப்பது சரிதானா! மேல்எம்பெருமானே! திருத்தொண்டின் ஒப்பற்ற திறத்தினால் முதற்பாட்டிலேயே கதவை அடைக்கச் செய்த அளுடைப் பிள்ளையார் இங்கு எழுந்தருளியுள்ளார். ஐயன் அவருக்குக் கட்சியளிக்காமல் இவ்வாறு மறைநது கொள்வதும் முறையோ ? என்று வேண்டினார் அப்பரடிகள். இவ்வாறு அப்பரடிகள் உள்ளம் உருக இறைஞ்சி நின்றதும், பிறையணிந்த வேணியப்பிரான், ஆளுடைப் பிள்ளைக்குக் காட்சி அளித்தார்.ஞானசம்பந்தர், அக்காட்சியைக் கண்டு பரமனைப் பணிந்தவாறு அப்பரிடம், அப்பரே! ஐயனைப் பாரும் என்று கூறினார். அம்பலவாணரின் ஆனந்தத் தோற்றத்தைக் கண்டு பேரின்பம் பூண்ட அப்பரடிகள், இறைவனின் பாதக்கமலங்களைப் பணிந்து எழுந்து, பாவ வடியார் பரவக் கண்டேன் என்று தொடங்கும் தமிழ்ப் பாமாலையால் பூமாலை சாத்தி புளகாங்கிதம் அடைந்தார். அவரது பாமாலைய ஏற்றுக்கொண்ட கயிலையரசர் மறைந்தருளினார்.இரு ஞான மூர்த்திகளின் பக்தியின் வலிமையைக் கண்டு, சூழ்ந்திருந்த அன்பர்கள் ஆராவாரித்தனர். இருவரும் அன்பர்களுடன், திருவாய்மூரில் சில காலம் தங்கியிருந்து பெருமானுக்குத் திருத்தொண்டு புரிந்தனர். பின்னர் அன்பர்களுடன திருவாய்மூரை நீத்து திருமறைக் காட்டிற்கு திரும்பி வந்தனர்.வேதவனப் பெருமான் வழிபட்டு இரு சிவனருட் செல்வர்களும் தத்தம் மடத்திற்குச் சென்றனர். இவ்விரு ஞான சீலர்களும் திருமறைக் காட்டில் தங்கியிருந்த நாளில், ஆளுடைப் பிளளையாரைப் பார்க்க மதுரையிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் சுவாமிகளை வணங்கி பாண்டியமாதேவியும், அமைச்சர் குலச்சிறையாரும், சமணத்தில் வளர்ச்சியைத் தடுத்து சைவத்தை உய்விக்கும் பொருட்டு மதுரைக்கு எழுந்தருள வேண்டும் !என்று கேட்டுக் கொண்டதாக விண்ணப்பித்தனர். ஆளுடைப் பிள்ளையாரும் அவர்களிடம், விரையில் வருவோம் என்று செய்தி சொல்லி அனுப்பி வைத்தார்.ஆளுடைப் பிள்ளையார் பாண்டிய நாடு பேõகத் தீர்மானித்தார் என்பதைக் கேள்வியுற்ற அப்பரடிகள் அவரது திருமடத்திற்கு விரைந்து வந்து அவரைப் பாண்டியநாடு போகாதவாறு தடுக்க எண்ணினார். அப்பரடிகள் அன்பு மேலிட, ஆளுடைப் பிள்ளையாரிடம், மாசு படிந்த உடலும், தூசி படிந்த கொள்கையும் கொண்டு வாழும் வஞ்சக நெஞ்சம் கொண்ட மாயையில் வல்ல சமணர்களை ஒழிக்க, தூய்மையும், வாய்மையும் மிக்கத் தாங்கள் செல்வது ந்ன்றன்று. அக்கொடியவர்கள் எனக்கு இழைத்த கொடுமைகள் கணக்கிலடங்கா. தேவரீர் ! அங்கு செல்ல வேண்டாம். அடியேன் ஒருபோதும் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று மொழிந்தார். அப்பரே! திருசடை அண்ணலையும், திருத்தொண்டர்களையும் திருவெண்ணீற்றையும் பேõற்றுகின்ற ஆற்றல் மிக்கவர்கள் பாண்டியமாதேவியும், அமைச்சரும் ! அவர்கள் அழைப்பிற்கு இணங்கி, நேரில் செல்வதால் எனக்கு எவராலும் எவ்வித இடர்பாடும் ஏற்படாது ! சமணத்தை நம்பி அதர்மத்தில் உழலும் பாண்டிய மன்னனைக் கொண்டே அச்சமணர்களின் செருக்கை அடக்குவேன். சைவத் தவ நெறியினைப் பாண்டிய நாட்டில் நிலைநாட்டுவேன். அதுவரைத் தாங்கள் இத்தலத்திலேயே இருங்கள். எப்படியும் பாண்டியநாட்டைச் சூழ்ந்துள்ள பிற சமய இருளை நீக்கி சைவத் திருவிளக்கை ஏற்றி வெற்றிவாகை சூடி வருகிறேன் ! என்றார். அப்பரடிகளும் மறுமொழி பேசாது விடை கெடுத்தார். வேதவனப் பெருமாளை வணங்கி வழிபட்டு, ஆளுடைப் பிள்ளையார் மதுரைக்குப் புறப்பட்டார். அதன் பின்னர், அப்பரடிகள் மட்டும், திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்து, வேதவனப் பெருமானுக்கு நாடோறும் திருப்பணிகள் செய்து வந்தார். மேல்ஒருநாள் அப்பரடிகள், அத்தலத்திலிருந்து புறப்பட்டு நாகைக் காரோணம், திருவீழிமிழலை, திருவாடுதுறை வழியாக திருப்பழையாறை என்னும் பழம்பெரும் பதியை வந்தணைந்தார். வடதளி என்னும் பெயர் பெற்ற பழையாறை அடுத்துள்ள கோயிலில் சிவலிங்கப் பெருமானைச் சமணர்கள் தங்கள் சூழ்ச்சியால் மறைத்து சமணக் கோவிலாக மாற்றியிருந்தனர். இச்செய்தியை அவ்வூரிலுள்ள சிவ அன்பர்கள் வாயிலாகக் கூறக்கேட்ட அப்பரடிகள் அளவிலா வேதனை கொண்டார். மனம் பொறாது உளம் நொநது வருந்தினார். அப்பரடிகள் அக்கோயிலின் தெய்வ சந்நிதானத்தின அருகில் ஓர் இடத்திலமர்ந்து எம்பெருமானுடைய பாதகமலங்களை மனதில் தியானித்தவராய், பித்தா! பிறைசூடிப் பெருமானே ; அருளாளா! இளம் பிறையணிந்துஐ விடையேறுமு் பெருமானே ! சமணர்களின் சூழ்ச்சியை அழித்து தேவரீருடைய திருவுருவத்தை வடதளி விமானத்தில் காட்டி அருளினாலன்றி, இவ்விடத்தை விட்டு நான் ஒரு அடிகூட எடுத்து வைக்கமாட்டேன் என்று தமது கருத்தை உறுதியிட்டுப் பரமனுக்கு உணர்த்தியவாறு தியானத்தில் அமர்ந்தார். அன்றிரவு கொன்றை மலர் அணிந்த மாதொரு பாகர், சோழ அரசருடை கனவில் எழுந்தருளினார். அறிவில்லாத சமணர்கள் சிவ அன்பர்களுக்கு அடுக்கடுக்காக இன்னல் அளிப்பதோடு, நம்முடைய வடதளி விமானக் கோயிலை மறைத்து எமது மேனியை மண்ணுக்குள் மறைந்து வைத்துள்ளனர். இப்பொழுது எமது அன்பு பக்தன் - நாவுக்கரசன் எம்மைத் தரிசித்து வழிபடக் காத்துக் கிடக்கிறான். நாவுக்கரசன் கருத்தை நிறைவேற்றுவாயாக! கண்ணுதற் கடவுள் சோழ வேந்தனுக்கு, சமணர்கள் தம் திருமேனியை மறைத்து வைத்திருக்கும் இடத்தின் அடையாளங்களையும் விளக்கி அருளி மறைந்தார். சோழ மன்னர் கனவு தெளிந்து எழுந்தார். அமைச்சர்களுடனும் , வீரர்களுடனும் வடதளி ஆலயத்தை வந்தடைந்தார். எம்பெருமான் அருளிய அடையாளத்தைக் கொண்டு சிவலிங்கப் பெருமானைக் கண்டு எடுத்தார். பின்னர் அரசர், வெளியே தியானத்தில் இருக்கும் அப்பரடிகளின் திருவடிகளை வணங்கி சிவலிங்கப் பெருமானை, சமணர்கள் மறைந்த இடத்திலிருந்து வெளிப்படுத்திக் கெõண்டு வந்துள்ளோம் என்றார் திருநாவுக்கரசர் பேரின்பம் பூண்டார். சோழப் பேரரசன் வாழ்த்தினார். திருநாவுக்கரசர் அன்பர்களுடன் ஆலயத்துள் சென்று வடதளி அண்ணலப் பணிந்து அகமகிழ்ந்தார். சோழ வேந்தன் சிவபெருமானுக்கு வடதளியில் விமானம் அளமத்து நல்லோரையில் பெருவிழா நடத்தி சிவலிஙகப் பெருமானை பிரதிஷ்டை செய்தார். வடதளிநாதர் கோயிலில் மீண்டும் முன்போல் நித்திய நைமித்தியங்கள் சிறப்பாக நடந்தேற எல்லா ஏற்பாடுகளையும செய்தார். ஆலய வழிபாட்டிற்கு ஏராளமான் நிலபுலன்களை அளித்தார் மன்னர். இவ்வாறு நாடு போற்ற நற்பணி செய்த மன்னர், முதற் காரியமாக சமணர்களை யானைகளால் கொல்லச் செய்தார். சிவ மதத்தை ஓங்கச் செய்தார், அப்பரடிகள், வடதளியில் எழுந்தருளியிருக்கும் சிவலிங்கப் பெருமானைப் பணிந்து பதிகங்கள் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு காவிரிக்கு இருமருங்கிலுமுள்ள சிவத்தலங்களை தரிசித்துத் தமிழ்மாலை சாத்திய வண்ணம் திருவானைக்கா, திருவெறும்பியூர், திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பாத்துறை வழியாக, திருப்பைஞ்ஞீலியை நோக்கிப் புறப்பட்டார் அப்பரடிகள். நாட்கணக்காக நடந்த காரணத்தால் அப்பரடிகளுக்கு களைப்பு ஏற்பட்டது. பசியும், தாகமும் மேலிட்டது ; சோர்வினால் உடல் வருத்தியது. இருந்தும் அத்திருஞான சீலர் உள்ளம் கலங்காது உடல் சேர்வையும் எண்ணிப்பாராது திருப்பைஞ்ஞீலிப் பெருமானை தியானித்தபடியே வழிநடந்தார். அப்போது எம்பெருமான் தமது தொண்டரின் வேதனையைப் போக்கத் திருவுள்ளம் கொண்டார். திருப்பைஞ்ஞீலி செல்லும் வழியில் குளிர்நீர்ப் பொய்கையயையும், எழில்மிகு சோலையையும் உருவாக்கினார். அத்தோடு அந்தணர் கோலத்தில் கையில் பொதி÷சாறுடன் அப்பரடிகள் வரும் வழியில் அவரை எதிர்பார்த்து வீற்றிருந்தார். சற்று நேரத்தில் அப்பரும் அவ்வழியே வந்து சேர்ந்தார். மேல்எம்பெருமான் அப்பரடிகளுக்குப் பொதி சோறு கொடுத்தார். அப்பரடிகள் பொதி சோற்றை உண்டு அருகிலுள்ள குளத்தில் குளிர்ந்த நீரைப்பருகி தளர்வு நீங்கப் பெற்றார். அந்தணர்க்குத் தமது நன்றியை தெரிவித்தார். எம்பெருமான், அன்பரே! நீர் எங்கே செல்கின்றீர்கள் ? என்று கேட்டார். சுவாமி ! அடியேன் திருப்பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருக்கும் திருசடைப் பெருமானை தரிசிக்கப் போய்க் கொண்டிருக்கிறேன். அன்பரே நன்று. நானும் அத்திருக் கோயிலுக்குத் தான் போகிறேன். என்று கூறினார். அவரையும் அழைத்து்க்கொண்டு திருப்பைஞ்ஞீலிக்குப் புறப்பட்டார். இருவரும் ஆலயத்தை வந்தடைந்தனர். அந்தணர் வடிவில் எழுந்தருளிய நீலகண்டப் பெருமான் மாயமாக மறைந்தார், அநதணர் வடிவில், தம்மோடு எழுந்தருளியது எம்பெருமான் என்பதை உணர்ந்த அப்பர் எல்லையில்லா பரமனைப் போற்றிப் பணிந்தார். அங்கிருந்து புறப்பட்டு, வடதிசையிலுள்ள திருவண்ணாமலை போன்ற பல சிவத்தலங்களை வழிபட்ட வண்ணம் தொண்டை நன்னாட்டுப் பதிகளைத் தரிசிக்க வேண்டும் என்ற பெரு விருப்பத்துடன் திருவேõத்துரை அடைந்தார் அப்பரடிகளார். அங்கு எழுந்தருளியிருக்கும் வேதம் ஓதும் பெருமானைக் கண்டு களித்துப் பாடிப் புளங்காகிதமடைந்தார். சிறிது காலம் அத்திருத்தலத்தில் தங்கியிருந்து உழவாரப் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் விடையேரும் பெருமானிடம் விடை பெற்றுக் கொண்டு காஞ்சிபுரத்தை வந்தணைந்தார். காஞ்சி மாநகரத்து அன்பர்களும், சிவதொண்டர்களும் நாவுக்கரசரை எல்லையிலே எதிர்கொண்டு வணங்கி வரவேற்றனர். ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றனர். அப்பரடிகள், தழிழ்ப்பதிகம் சாத்தி ஏகாம்பரேசுவரளர வழிபட்டார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவத்தலங்களைத் தரிசிதது வந்தார் அப்பரடிகள். ஏகாம்பரநாரைப் பிரிய மனமில்லாமல் பக்தி மயக்கத்தில் மூழ்கினார். ஒரு நாள் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார். திருக்கழுக்குன்றம், திருவான்மியூர், மயிலாப்பூர், திருவொற்றியூர், திருப்பாச்சூர், திருவாலங்காடு, திருக்காரிகை வழியாகத் திருக்காளத்திமலையை அணுகினார் அப்பர். திருக்காளத்தியப்பரையும், திருக்காளத்தியப்பரின் வலப்பக்கத்தில் வில்லேந்தி நிற்கும் அருள் வல்லவர் கண்ணப்ப நாயனாரது திருச்சேவடிகளையும் வணங்கி வண்ணத் தமிழ்ப் பாமாலையால் அர்ச்சனை செய்தார். சில நாட்கள் அத்திருமலையில் தங்கியிருந்து புறப்பட்ட அப்பரடிகள், திருப்பருபதம் என்னும் ஸ்ரீ சைலத்தை வந்தணைந்தார். இத்திருத்தலத்தில் நந்தியெம்பெருமான், எம்பெருமானைத் தவஞ்செய்து வரம் பெற்று இம்மலை வடிவமாக எழுந்தருளி எம்பெருமானைத் தாங்குகிறார் என்பது புராண வரலாறு. தேவர்களும், சித்தர்களும், கின்னரர்களும், நாகர்களும், இயக்கர்களும், விஞ்சையர்களும், சிவமுனிவர்களும், தினந்தோறும் போற்றி மகிழ்நது வணங்கி வழிபடும் மல்லிகார்ச்சுனரை உளம் குளிரக் கண்டு பக்திப் பாமாலை சாத்தி வழிபட்டார் அப்பரடிகள். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, தெலுங்கு நாடு, மாளவதேசம், மத்தியப் பிரதேசம் முதலியவற்றைக் கடந்து காசியை வந்தடைந்தார் நாவுக்கரசர் ! அத்திரு நகரிலுள்ள தொண்டர்கள், அப்பரடிகளை வணங்கி மகிழ்ந்தனர். அவரோடு தலயாத்திரைக்குப் புறப்பட எண்ணினார். அப்பரடிகள் தடங்கண்ணித் தாயாரையும், விசுவ லிங்கத்தையும் போற்றி தமிழ்ப் பதிகம் பாடியருளினார். அப்பரடிகள் தம்முடன் வந்த அன்பர்களை விட்டு விட்டு திருக்கயிலாய மலைக்குப் புறப்பட்டார். மேல்அடர்ந்த காடுகளையும், உயர்ந்த மலைகளையும், காட்டாறுகளையும் கடந்து, கங்கைவேணியர் மீது தாம் கொண்டுள்ள அரும்பெருங் காதலுடன் தன்னந்தனியாக வழிநடக்கலானார் அப்பரடிகள். அவர் சிந்தை அனைத்தும் சிவநாமத்தைப் பற்றிய தாகவே இருந்தது. காய், கனி, கிழங்கு, குலை முதலியவற்றை உண்பதையும் அறவே நிறுத்திவிட்டார்! இரவென்றும், பகலென்றும் பாராமல் பரமன் மீது ஆறாக் காதல் பூண்டு நடந்து செல்லலானார். அத்திருவருட் செல்வரது பட்டுப் பாதங்கள் தேயத் தொடங்கின. இரவு வேளையில் காடுகளில் காணும் கொடிய விலங்குகள் அவருக்கு எவ்வித துண்பத்தையும் கொடுக்காமல் அஞ்சி நடுங்கி ஒளிந்தன. நல்ல பாம்புகள் படமெடுத்து அதனது பணாமகுடத்துள்ள நாகமணிகளால் அவருக்கு விளக்கெடுத்தன. இவ்வாறு அப்பரடிகள் நடந்து கொண்டே பாலை வனத்தைக் கடக்கும் நிலைக்கும் வந்தார். கதிரவனின் கொடிய வெப்பத்தால், பாலைவனத்தில் நடந்த அவரது திருவடிகள் பரடுவரையும் தேய்ந்தன. கால்கள் தேய்ந்து ரத்தம் சொட்ட தொடங்கின. அதைப் பற்றியும் சறறும் வருந்தாமல் திருக்கைகளை ஊன்றி தத்தித் தத்தித் சென்றார். அதனால் கரங்களும் மணிக்கட்டுவரைத் தேய்ந்தன. அப்பொழுதும் அயர்ந்து விடாத அப்பரடிகள் மார்பினால் தவழ்ந்து சென்றார். சற்று தூரம் சென்றதும், மார்பும் தேய்ந்து குருதி பொங்க, சதைப்பற்று அற்று எலும்புகள் முறிந்தன. அப்பரடிகள் எதைப் பற்றியும் வருத்தப்படாமல் கயிலை அரசரின் சிந்தையிலே உடல் தசைகள் கெட, உடம்பை உருட்டிக் கொண்டே சென்றார். இவ்வாறு புற உறுப்புக்கள் எல்லாம் உபயோகமற்றுப் போனதும், அப்பரடிகள் செய்வதறியாது நிலத்தில் வீழ்ந்தார். அப்பரடிகள் வீழ்ந்து கிடந்த இடத்திற்கு அருகே ஓர் அழகிய தாமரைத் தடாகத்தைத் தோற்றுவித்தருளிய பரமன், ஓர் தவசி வடிவம் கொண்டு அப்பர் எதிரில் தோன்றினார். விழிகளை மூடியவாறு சயனித்திருந்த அப்பரடிகள் கண்னைத் திறந்துப் பார்த்தபோது தம்மைச் சுற்றித் தடாகமும், அத்தடாகத்தருகே அருந்தவசியும் இருக்கக் கண்டு வியந்தார். அப்பொழுது அத்தவசி, அன்பரே! உள்ளம் உருக உடல் தேய்ந்து, சிதைந்து, அழிந்து போகுமளவிற்கு இந்தக் கொடிய கானகத்தில் இப்படித் துயறுருவது யாது கருதி ? எனக் கேட்டார். அத்தவசியின் கோலத்தைக் கண்டு அவரது பாதங்களைப் பணிந்தார். கண்களிலே நீர் மல்க, சுவாமி ! மலைமகளுடன் கயிலையில் எழுந்தருளி யிருக்கும் எம்பெருமானைத் தரிசித்து வழிபட ஆறாக்காதல் கொண்டேன். ஆளும் நாயகனைக் கண்டுகளிக்காதவரை, என் வாழ்வு முற்றுப் பெறாது. பிறவித் துன்பத்தில் நின்றும் நான் விடுவிட, பிறையணிந்த பெருமானைக் கயிலைக்குச் சென்று எப்படியாகிலும் பேõற்றி÷ய தீருவேன். என்று மிகுந்த சிரமத்துடன் அப்பரடிகள் பதிலுரைத்தார். அது கேட்ட அத்தவசி புன்னகை முகத்தில் மலர, அப்பனே ! பாம்பணிந்த பரமேசுரர் பார்வதியுடன் வீற்றிருக்கும் கயிலைமலையை மானுடர் சென்று காண்பது என்பது ஆகாத காரியம் அப்படியிருக்க இறைவன் தரிசனம் உனக்கு மட்டும் எப்படியப்பா கிட்டும் ? எதற்கப்பட இந்த வீண் முயற்சி ? தேவர்களுக்கும் அது அரிது. கயிலையையாவது நீ காண்பதாவது? பேசாமல் வந்த வழியே திரும்ப போவதே தக்கச்செயல். இல்லையேல் கயிலைக்குப் போவதற்குள் உன் உடல்தான் அழியும். மேல்சுவாமி! அழியப் போகும் இந்த உடலுக்காக அஞசேன். கயிலைமலை பூமியில் எழுந்தருளியிருக்கும் என் அப்பனின் ஆனந்த தாண்டவத்தை கண்டு களித்த பின்னரன்றி நான் மீளேன். இந்தப் பொய்யான மெய்யுடம்பை ஒருபோதும் திரும்பச் சுமந்து செல்லேன். தவசியாக வந்த பெருமான் மறைந்தார். நாவுக்கரசர் வியப்புற்றார். ஓங்கு புகழ் நாவுக்கரசனே ! எழுந்திரு என்ற இறைவனின் அருள்வாக்கி ஒலித்தது. அப்பரடிகள், பூரித்தார். அவரது தேய்ந்து அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல் வளர்ந்து பிரகாசித்தது. அவர் உடல் வன்மை பெற்று எழுந்தார். நிலமதில் வீழ்ந்து வணங்கினார். சிவ சிவ சுந்தரதேவனே! அருட்கடல் அண்ணலே! அடியேனைக் காத்த ஐயனே! ஆடுகின்ற அரசனே! மண்ணிலே தோன்றி விண்ணிலே மறைந்தருளி அற்புதம் புரிந்த தேவநாயகனே! தேவரீர் திருக்கயிலைமலை மீதில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலத்தைக் கண்டு வழிபட இந்த அடியேனுக்கு அருள்வீர் ! இறைவன் அசரீரியாக அப்பரடிகளுக்கு, அன்ப! இப்பொய்கையில் மூழ்கி திருவையாற்றில் எழுந்திருப்பாயாக ! அங்கு திருக்கயிலையில் நாம் வீற்றிருக்கும் காட்சியைக் காட்டியருளுவேன் என்று மொழிந்தருளினார். அம்பலத்தரசனின் ஆணையைச் சிரமேற்கொண்டு சிந்தை குளிர்ந்த அப்பரடிகள் செந்தமிழ்ப் பதிகத்தால் செஞ்சடை அண்ணலைப் போற்றிப் பணிந்தவாறு தூய தடாகத்தில் மூழ்கினார். பிறையணிந்த பெருமானின் பெருமையை யாரே அறியவல்லார் ? அத்தடாகத்தில் மூழ்கிய அப்பர் பெருமான் திருவையாறு பொற்றாமரைக் குளத்தில் தோன்றிக் கரையேறினார். அப்பரடிகள் இறைவனின் அருளை எண்ணி எண்ணி கண்ணீர் மல்கி கரைந்துருகினார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். அவரது பொன் திருமேனியிலும், நெற்றியிலும், தெய்வீகப் பேரொளி பால் வெண்ணீறு போல் பிரகாசித்தது. சிரம் மீது கரம் உயர்த்தியவாறு நீரிலிருந்து கரையேறினார் அப்பரடிகள் ! கோயிலை அடைந்தார். பூங்கோயில் கயிலைப் பனிமலை போல் காட்சி அளித்தது. எம்பெருமான் அப்பர் அடிகளுக்கு சக்தி சமேதராய் நவமணி பீடத்தில காட்சி கொடுத்தார். அப்பரடிகள், சிவானந்தச் சமுத்திரத்தைக் கண்கள் என்னும் திருக்கரங்களால் அள்ளி அள்ளி்ப பருகினார். வீழ்ந்து பணிந்து எழுந்தார். ஆனந்தக் கண்ணீர் வடித்தார்; சிவக் கடலில் மூழ்கி திளைத்தார். அப்பரடிகள், திருத்தாண்டகப் பதிகங்களைப் பக்திப் பெருக்கோடும பாடிப் பாடி அளவிலா இன்பம் எய்தி நின்றார். அப்பரடிகளின் ஆசையை நிறைவேற்றிய பெருமான் அத்திருக் காட்சியைக் மறைந்தருளினார். கயிலைக் காட்சி சட்டென்று மறைந்தது கண்டு திகைத்த அப்பரடிகள் மாதர் பிறைக் கண்ணியாளை மலையான் மகளொடும் எனத் தொடங்கும் தமிழ்ப் பதிகம் பாடினார். திருவையாற்றில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச நதீசுவரரின் திருவடித் தாமரைகளைப பணிந்தார். அத்திருத்தலத்தை விட்டுச் செல்ல மனம் வராத அடியார் திருவையாற்றில் தங்கியிருந்து உழவாரப் பணி செய்து வரலானானர். சில நாட்களில், அங்கிருந்து புறப்பட்டு சிவத்தலங்களைத் தரிசித்துத் தமிழ்ப் பாமாலை பாடிய வண்ணம் திருப்பூந்துருத்தி என்னும் தலத்தை அடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானுக்குத் திருத்தொண்டுகள் பல புரிந்து வரலானார். இந்தச் சமயத்தில் பாண்டிய நாட்டிலே சமணரை வென்று வெற்றி வாகை சூடிய ஞானசம்பந்தர், சோழநாடு திரும்பினார். திருப்பூந்துருத்தியில் அப்பரடிகள் அவரைக் கண்டு மகிழ அடியார்களும் புடைசூழ தமது முத்துச் சிவிகையில் புறப்பட்டார். அதுபோல, ஞானசம்பந்தரின் வருகையைக் கேள்விப் பட்ட அப்பரடிகள், உவகைப் பொங்க அக்கணமே அவரை எதிர் கொண்டழைக்கப் புறப்பட்டார். மேல்அப்பரடிகள் முத்துச் சிவிகையில் சம்பந்தர் வருவதைக் கண்டார். அப்பரடிகள் தம்மை எவரும் காணாதபடி ஞானசம்பந்தர் வீற்றிருக்கும் முத்துச் சிவிகைதனைத் தோள் கொடுத்துச் சுமந்து நடக்கலானார். திருப்பூந்துருத்தியை வந்தடைந்த ஆளுடைப்பிள்ளை அப்பர் அடிகளை எங்கும் காணாது அப்பர் எங்கிருக்கிறார் என்று கேட்க திருநாவுக்கரசர் தேவரீருடைய அடியேன், முத்து சிவிகையினைத் தாங்கி உமது திருவடிகளைப் போற்றி வரும் பெறும்பேறு பெற்று இங்குள்ளேன் என்று மகிழ்ச்சிப் பொங்க கூறினார். அப்பருடைய மொழி கேட்டு, ஆளுடைப் பிள்ளையார் சிவிகையினின்றும் விரைந்து கீழே இறங்கினார். உள்ளமும், உடலும் பதைபதைக்க அப்பரடிகளை வணங்க வந்தார். அதற்குள் அப்பரடிகள் விரைந்து ஆளுடைப் பிள்ளை தம்மை வணங்குவதற்கு முன் அவரை வணங்கி மகிழந்து உள்ளம் உருகில கண்களில் நீர்மல்க நின்றார். இக்காடசியைக் கண்ட சிவனடியார்கள் அனைவரும் மெய்யுருகி நின்றனர். இரு திருத்தொண்டர்களையும் வணங்கினர். இரு ஞானமூர்த்திகளும், அத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் தாளைத் தலையால் வணங்கி திருத்தாண்டகம் பாடி மகிழ்ந்தனர். அன்பர்களுடன் இரு சிவநேசச் செல்வர்களும் மடத்தில் தங்கினர். அப்பரும், ஆளுடைப்பிள்ளையும் அடியார்கள் புடைசூழ, மேளதாள வாத்தியங்கள் முழங்க திருக்கோயில் சென்று திருப்பூந்துருத்திப் பெருமானைப் பாமாலையால் போற்றிப் பணிந்தனர். பக்தர்கள் பரமனையும், பரமன் அருள்பெற்ற தவசியர்களையும் வணங்கி மகிழந்தனர். ஒருநாள் ஆளுடைப்பிள்ளையார் அப்பரடிகளிடம் பாண்டி நாட்டில் தாம் சமணர்களை வாதில் வென்று வெற்றி பெற்ற விவரத்தை கூற, நாவுக்கரசர் பாண்டிய நாடு செல்ல ஆவல் கொண்டார். அப்பரடிகள் ஆளுடைப்பிள்ளையாரிடம், நான் பாண்டிய நாடு சென்று வருகிறேன். தாங்கள் தொண்டை நன்னாட்டிலுள்ள சிவத்தலங்களைத் தரிசித்து வருவீராகுக என்று கூறினார். ஆளுடைப்பிள்ளையாரும் அவ்வாறே செய்யச் சித்தம் பூண்டார். ஞானசமபந்தர் அப்பரடிகளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். ஞானசம்பந்தரை வழி அனுப்பிவிட்டு அப்பரடிகள் தமது பாத யாத்திரையைத் தொடர்ந்தார். பல திருத்தலங்களைத் தரிசித்துக் கொண்டே மதுரையம் பதியை வந்தடைந்தார் அப்பரடிகள் ! அப்பரடிகள், மதுரையம்பதிக்கு எழுந்தருளியுள்ளார் என்று செய்தியறிந்தான் பாண்டியன் ! மன்னரும், மங்கையர்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும், அன்பர்களாடு, அடியார்களோடு அப்பரடிகளைத் தொழுது வணங்கி, உபசரித்து வரவேற்றார். ராஜ மரியாதைகளுடன் அப்பரடிகளை கெளரவப்படுத்தினான் மன்னன். அத்திருத்தலத்தில், அடியார் சிலகாலம் தங்கியருந்தார். எம்பெருமானு்க்குத் தமிழ்த் தொண்டாற்றினார். மன்னர் மனம் மகிழ்ந்தார். அரசியாரும், அமைச்சரும் அடியாரைப் போற்றி பெருமிதம் கொண்டனர். அங்கிருந்து புறப்பட்ட அப்பரடிகள் திருப்புவனம், திருராமச்சுரம், திருநெல்வேலி, திருகானப்பேர் போன்ற பல பாண்டி நாட்டுக் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் பரமனைப் பாடிப் பரவிய வண்ணம், சோழ நாட்டை நோக்கிப் புறப்பபட்டார். பொன்னி நாட்டில் ஒளிவிடும் பொன்னார் மேனியனுடைய புனிதத் தலங்களையெல்லாம் கண்குளிரக் கண்டு பற்பல பைந்தமிழப் பதிகங்களைப் பாடி வணங்கிய வண்ணம் திருப்புகலூரை அடைந்தார். திருப்புகலூர்ப் பெருமானின் தாளை வணங்கி ஆறாக் காதலுடன், உள்ளமும், உடலும் உருக, அத்திருத்தலத்திலேயே தங்கியிருந்து, புகலூர்ப் புனிதர்க்கு உழவாரப் பணிசெய்து வராலனார் அப்பரடிகள். அப்பொழுது அப்பரடிகள் நினற திருத்தாண்டகம், தனித் திருத்தாண்டகம், திருத்தலக்கோவை, குறைந்த திருநேரிசை, தனித்திருநேரிசை, ஆருயிர் திருவிருத்தம், தசபுராணம், பாவநாசப்பதிகம், சரக்கறைத் திருவிருத்தம் முதலிய பல திருப்பதிகங்களைப் பாடினார். அப்பரடிகளின் பற்றற்ற பரம நிலையை உலகிற்கு உணர்த்துவான் வேண்டி புகலூர்ப் பெருமான், உழவார பணிபுரிந்து வரும் மன்றலிலே, பொன்னும், நவரத்தினங்களும் மின்னும்படிச் செய்தார். மேல்அப்பரடிகள் பொன்னையும், நவமணிகளையும் உழவாரப் பணிபுரியும் மன்றலிலே உருளும் கற்களுக்கு ஒப்பாகவே கருதி, அவற்றை உழவாரப் படைகொண்டு எடுத்து அருகிலுள்ள தாமரைத் தடாகத்தில் வீசி எறிந்தார். பொன்னாசையும், பொருளாசையும் கொள்ளாத அப்பரடிகள், பெண்ணாசையும் வெறுத்த துறவு நிலையை மேற்கொள்ளும் பெரு ஞானி என்பதையும் உலகிற்கு உணர்த்துவான் வேண்டிப் புகலூர் சிவபெருமான் அரம்பையர்களை மன்றலிலே தோன்றச் செய்தார். வில்லைப் போன்ற புருவங்களையும், மின்னலைப் போன்ற மேனியையும், கன்னலையொத்த மொழியையும், தென்றலைப் போன்ற குளுமையையும் உடைய அரம்பையர், அப்பரை நோக்கினர். அப்பரடிகள் தியானத்திலேயே இருந்தார். அரம்பையர்கள் மெல்லிய மலர்ப் பாதத்திலே சிலம்புகள் ஒலித்தன. செங்கழுநீர் மலர் போன்ற மெல்லிய விரல்களினை வட்டணையோடு அசைத்தனர். அக்கரங்களின் வழியே கெண்டைமீன் வடிவங்கொண்ட வட்டக் கருவிழிகளைச் செலுத்தி, பொற்கொடி போல் அசைந்தாடினர். தித்திக்கும் தேன்போல் கொவ்வை இதழ்களில் பண் இசைத்து சுழன்று, சுழன்று மயக்கும் அழகு நடனம் புரிந்தார்கள். மலர்மாரி பொழிதலும், தழுவுபவர் போல அணைத்தலும், காரிருள் கூநதல் அவிழ, இடை துவள மான் போல் துள்ளி ஓடுதலுமாக, தாங்கள் கற்ற கலைகளை எல்லாம் காட்டிக் காமன் கணை தொடுத்தாற் போல், பற்பல செய்ல்களை நடத்தினர் அரம்பையர். அப்பரடிகள் சித்தத்தைச் சிவனாரடிக்கே அர்ப்பணித்து சற்றும் சித்தநிலை திரியாது திருத்தொண்டு லீலைகளில் அவரது உள்ளத்தையோ, உடலையோ பறிகொடுத்து விடவில்லை. அப்பரடியார் அரம்பையர்களைப் பார்த்து, மயங்கும் மாலை வடிவங்களே ! எதற்காக என்னிடம் வந்து இப்படி வீணாக அலைகிறீர்கள் ? உமக்கு நீவிர் மயக்கி ஆளும் உலகம் மட்டும் போதாதா ? எதற்காக என்னிடம் வந்து ஆடிப் பாடுகிறீர்கள் ? திருவாரூர் தியாகேசப் பெருமானின் திருவடிகளில் தமிழ்ப் பதிகம் பாடித் திருத்தொண்டு புரிந்துவரும் சிறந்த பணியில் நிலையாக நிற்பவன். என்னை உங்கள் வலையில் சிக்கி எண்ணி வீணாக அலைய வேண்டாம். போய்விடுங்கள் என்று கருத்து கொண்ட பொய்ம்மாய பெருங்கடல் எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தைப் பாடினார். உடனே அத்தேவக் கன்னிகைகள் அவரது திருவடியை வணங்கி மறைந்தனர். அப்பரடிகளுடைய உள்ள உறுதியையும், பக்தியின் திறத்தினையும், பாமாலை பாடும் ஆற்றலையும் ஏழு உலகங்களும் போற்றிப் புகழ்ந்தன. இவ்வாறு புகலூர்ப் பெருமானுக்கு அரும்பணி ஆற்றிவந்த அன்பு வடிவம் கொண்ட அப்பரடிகள் எம்பெருமானின் திருவடிகளில் தமது திருமெய் ஒடுங்கும் காலம் நெருங்கி வந்துவிட்டதே என்பதை தமது திருக்குறிப்பினால் உணர்ந்தார். அதனால். அவர் அத்திருத்தலத்தை விட்டு சற்றும் நீங்காமல், பாமாலைப் பாடிப் பரமனை வழிபட்டு வந்தார். புடமிட்ட பொன்போல் உலகிற்கு பேரொளியாய்த் திகழ்ந்த திருநாவுக்கரசர் தாம் இறைவனது பொன்மலர் தாளினை அடையப் போகும் பேரின்ப நிலையை உணர்ந்தார். எண்ணுகேன் என் சொல்லி எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தை ஊன் உருக, உடல் உருக, உள்ளம் உருகப் பாடினார். எம்பெருமானின் சேவடியைப் பாமாலையால் பூஜித்து திருச்செவியைச் செந்தமிழால் குளிரச் செய்தார். திருநாவுக்கரசர் சித்திரைத் திங்கள் - சதயதிருநக்ஷத்திரத்தில், சிவானந்த ஞான வடிவேயாகிய சிவபெருமானுடைய பொன் மலர்ச் சேவடிக் கீழ் அமர்ந்தருளி பேரின்பப் பெருவாழ்வு பெற்றாறர். விண்ணவரும் மலர்மாரி பொழிந்தனர். தேவ துந்துபிகள் ஐந்தும் விண்ணில் முழங்கின. எல்லா உயிர்களும் நிறைந்த மகிழ்ச்சியால் உளம் நிறைவுபெற்று நின்றன. அப்பரடிகளாக அவதரித்த வாகீசமுனிவர் வேணிபிரானின் திருப்பாத நிழலில் வைகும் நிலையான சிவலோக பதவியைப் பெற்றார். முன்போல் திருக்கயிலாய மலையில் தவஞானியாக எழுந்தருளினார். குருபூஜை திருநாவுக்கரசரின் குருபூஜை சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன். மேல் |
No comments:
Post a Comment