எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கு அருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ் செவி நீள் முடிக்
கடக்களிற்றைக் கருத்துள் இருத்துவாம்!.
அவன் ஒருவனே அனைத்துமாகவும் , அனைத்திலும் அவன் ஒருவனாகவும் இரண்டறக்கலந்து nbsp; இருப்பவனை ,பஞ்ச பூதங்கள் ஆனவனை , யாண்டும் இளமையோடு கூடிய அழகனை , தேவர்களுக்கும் எட்டாத அதீதத்தில் இருக்கும் சித் ஆகாசனை , அடியவர்களுக்கு எளி வந்த பிரானை,பற்றிப் பிடித்து வளர்வதற்குக் கொம்பு ஒன்றும் இல்லாத கொடி சுழல்வது போன்று மனம் தடுமாறுகிற ,தவிக்கின்ற நம்மைக் காத்து அருள்வானை ,தேவர்களுக்கு மகாதேவராகவும் அனைத்துயிர்களுக்கும் அம்மையப்பராகவும் உள்ள நம் ஈசன் சிவபெருமான் அவன் வாக்கின் கண் எழுந்த "மேலான வழிபாடாவது போற்றியுரைக்கும் புகழுரைகளே யாகும்" என்பதனால் தானே தனது உயிராம் மெய்யடியார்கள் மூலம் உலகம் உய்ய, உயிர்கள் தனதியல்பாம் சிவத்தினுள் நிலை பெற்று சிவானந்தத்தில் என்றென்றும் திளைத்திருக்க அருளிய தேன்மதுரத் தேவாரத் திருமுறைப் பதிகங்களை , பொருளுணர்ந்து , நாவார, நெஞ்சுர மகிழ்ந்து பாடி ஈசன் திருவடியில் என்றென்றும் மாறா அன்பினோடு மனம், மெய் ,மொழியினால் ஒன்றாகி இரண்டறக்கலந்து அவனருளால் நிலைத்து இருப்போமாக!
சைவ திருமுறை
மன்னன் நினைத்திருந்தால் அவர்களைச் சிறையில் பூட்டி, பாடல்களைப்
பறிமுதல் பண்ணியிருக்கலாம். ஆனால் ராஜராஜன் தூய சிவபக்தன். தஞ்சைப்
பெரிய கோயில் கண்டவன்.அதனால் அவன் தீக்ஷிதர்களிடம் எதிர் வாதம்
செய்யாமல், மூவர் திருமேனியையும் சிலை வடிவில் கோயிலுக்கு எடுத்து
வந்து நிறுத்தி, இதோ தேவாரம் பாடியோர் வந்துவிட்டார்கள். சுவடியைக்
கொடுங்கள் என்று கேட்டுப் பெற்றான். அதனால் நமக்குக் கிடைத்தது
அமிழ்தினும் இனிய தேவாரம். அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய
மூவரும் சேர்ந்து 276 சிவாலயங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பு தேவாரம்
எனப்படும்.
இவற்றுள் பதினோரு திருமுறைகளைத் தொகுத்து வகுத்தவர் நம்பியாண்டார்
நம்பி.பின்னர் அநபாய சோழன் என்ற மன்னன் சேக்கிழாரைக் கொண்டு
திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணத்தை அரங்கேறச் செய்து
அதைப் பன்னிரண்டாவது திருமுறை ஆக்கினான்.
சிவ(த்) திருவாளர்கள் , அருளாளர்கள் |
பாடல் பாடப் பெற்ற தேவார சிவாலயங்கள் எண்ணிக்கை |
அப்பர், திருஞான சம்பந்தர், சுந்தரர் பாடியது |
44 |
திருஞான சம்பந்தர், அப்பர் பாடியது |
52 |
திருஞானசம்பந்தர், சுந்தரர் பாடியது |
13 |
அப்பர், சுந்தரர் பாடியது |
2 |
திருஞானசம்பந்தர் மட்டும் பாடியது |
112 |
அப்பர் மட்டும் பாடியது |
28 |
சுந்தரர் மட்டும் பாடியது |
25 |
மூவரால் பாடல் பெற்ற தேவார ஸ்தலங்கள் மொத்தம் |
276 |
திருமுறை |
பாடல்கள் எண்ணிக்கை |
முதல் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1469 |
இரண்டாம் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1331 |
மூன்றாம் திருமுறை (திருஞானசம்பந்தர் ) |
1346 |
1,2,3ம் திருமுறைகள் - திருக்கடைக்காப்பு. திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்கள் (திருக்கடைக்காப்பு ) மொத்தம் எண்ணிக்கை. |
4146 |
நான்காம் திருமுறை-திருநாவுக்கரசு |
1069 |
ஐந்தாம் திருமுறை-திருநாவுக்கரசு |
1015 |
ஆறாம் திருமுறை-திருநாவுக்கரசு |
980 |
4, 5, 6ம் திருமுறைகள் - தேவாரம். திருநாவுக்கரசரால் பாடப்பட்ட தேவார(ம்)ப் பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
3064 |
7ம் திருமுறை - திருப்பாட்டு. சுந்தரரால் பாடப்பட்ட பாடல்கள். |
1026 |
8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருவாசகப் பாடல்கள் |
656
|
8ம் திருமுறை மாணிக்கவாசகரால் பாடப்பட்ட திருக்கோவையார் பாடல்கள் |
400 |
8ம் திருமுறை - திருவாசகம், திருக்கோவையார் மாணிக்கவாசகரால் பாடப்பட்ட பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
1056 |
9ம் திருமுறை - திருவிசைப்பா, திருப்பல்லாண்டு. இத்திருமுறையில், திருமாளிகைத்தேவர், சேந்தனார், கருவூர்த்தேவர், பூந்துருத்தி நம்பிகாட நம்பி, கண்டராதித்தர், வேணாட்டடிகள், திருவாலியமுதனார், புருஷோத்தம நம்பி, சேதிராயர், சேந்தனார் ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. |
301 |
10ம் திருமுறை - திருமந்திரம். திருமூலரால் பாடப்பட்ட திருமந்திரம். பாடல்கள் மொத்த எண்ணிக்கை. |
3047 |
11ம் திருமுறை - பிரபந்தம் திருமுறையில் திருவாலவாய் உடையார்(ஈசன்), காரைக்கால் அம்மையார், ஐயடிகள் காடவர் கோன், சேரமான் பெருமான், நக்கீரர், கல்லாடர், கபிலர், பரணர், இளம்பெருமான் அடிகள், அதிரா அடிகள், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி ஆகியோர் பாடிய பாடல்களின் தொகுப்பு அடங்கியுள்ளது. |
1385 |
12ம் திருமுறை - பெரிய புராணம் |
4286 |
12 திருமுறைகள்,27 திருஅருளாளர்கள், 76 நூல்கள். மொத்த பாடல்கள் எண்ணிக்கை. |
18326 |
கலியுகத்தில் நமக்கு ஊழ்வினையால் ஏற்படும் துன்பங்களுக்கும்,வாழ்வில்
நாம் சந்திக்கும் அனைத்து துன்பங்களுக்கும், பிறவி என்னும்
மிகப்பெரியபிணிக்கும், மருந்தாக அமைந்து நம்மைக் காத்து அருள்வது
பன்னிரு திருமுறைகள் எனப்படும் சிவ ஆகமங்களாகும். மிகவும்
பெருமைமிக்கது, அளப்பரியது, ஆற்றல்மிக்கது. வேத ஆகமங்கள் மற்றும் சைவ
சித்தாந்தத்தின் பிழிந்த சாறாக, நமக்கு இன்பம் தரும் நமது தமிழ்
மொழியில், அருளாளர்கள் வழியாக இறைவனால் நமக்கு அருளப்பட்டது, பன்னிரு
திருமுறை என்னும் தமிழ் வேதம். நம்முடைய துன்பங்கள் அனைத்திற்க்கும்
மூல காரணமாக விளங்குவது நம் அறியாமை. அந்த அறியாமையிலிருந்து நம்மைக்
காத்துக் கொள்வதற்கு திருமுறை வாக்குகள் பெரிதும் உதவுகின்றன. வினை
வயப்பட்டுத் துன்புறும் நாம் திருந்தி உய்யும் பொருட்டு, இறைவன்
அருளாளர்களை இப்பூமிக்கு அனுப்பி அவர்கள் வாயிலாக நமக்கு இந்த
திருமுறைகளை அருளிச் செய்துள்ளான். திருமுறைகளில் உள்ள ஒவ்வொரு
சொல்லும் மிகுந்த மந்திர ஆற்றல் உடையவை.
திருமுறைகளை நாம் பாராயணம் செய்து ஓதுவித்தால், அதில் உள்ள மந்திர
ஆற்றல், நம் உயிரில் கலந்து நமது அறியாமையைப் போக்கும். யாராலும்
மாற்றியமைக்க முடியாத நம் விதியை, இறைவனின் கருணையினால் மட்டுமே
மாற்றியமைக்க முடியும். விதியை மதியால் வெல்வது என்பது திருமுறைகளை
ஓதுவித்து, இறைவன் அருள்பெற்று, நம் விதியை மாற்றுவதேயாகும்.
பன்னிரு திருமுறைகளால் நம் ஆன்மீக பூமியில் பல அற்புதங்கள்
நிகழ்ந்துள்ளன. அவற்றில் சில: பாண்டிய மன்னன் வெப்பு நோய்
தீர்ந்து, கூன் நிமிர்ந்தது. வேதங்களால் பூட்டப்பட்ட திருக்கதவு
திறந்து, பின் தாளிட்டது. பாலை நிலம் நெய்தல் ஆனது. தேவார ஏடுகள்
தீயில் கருகாமல் பச்சையாக இருந்தது, வைகை ஆற்று வெள்ளத்தில் எதிரே
நீந்தியது. ஆண் பனை பெண் பனையாயிற்று. எலும்பு பெண்ணாகியது.
விடத்தினால் இறந்த செட்டி உயிர் பெற்றார். ஆற்றில் போட்டது
குளத்தில் கிடைத்தது. சுண்ணாம்பு காளவாயில் 7 நாட்கள் உயிரோடு
இருந்தது. மதயானையை வணங்கச் செய்தது. கல்லில் கட்டி கடலில்
வீசியவர் தெப்பமாக மிதந்து கரை சேர்ந்தது. நரி குதிரையாகியது.
முதலை விழுங்கிய பிள்ளை 3 ஆண்டுகள் கழித்து மீண்டது. பிறவி ஊமை
பேசியது. சிவபெருமானே தம் கைப்பட எழுதியது நூலானது. இன்னும் பல
எண்ணற்ற அற்புதங்களை செய்துள்ளது பன்னிரு திருமுறை. திருமுறையே
சைவநெறிக் கருவூலம், செந்தமிழ் வேதம்.
பன்னிரு திருமுறைகள், 27 ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது.
திருஞானசம்பந்தரால் பாடிய திருக்கடைக்காப்பு 1,2,3 ஆம் திருமுறை.
திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் 4,5,6 ஆம் திருமுறை. சுந்தரர் பாடிய
திருப்பாட்டு 7 ஆம் திருமுறை. மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம்,
திருக்கோவையார் 8 ஆம் திருமுறை. 9 ஆசிரியர்கள் பாடிய திருவிசைப்பா,
திருப்பல்லாண்டு 9 ஆம் திருமுறை. திருமூலர் அருளிய திருமந்திரம் 10
ஆம் திருமுறை.காரைக்கால் அம்மையார் முதலிய 11 ஆசிரியர்கள் அருளிய
பிரபந்தம் 11 ஆம் திருமுறை. திருத்தொண்டர் 63 நாயன்மார்கள் வரலாறு
பாடும் சேக்கிழார் அருளிய பெரியபுராணம் 12 ஆம் திருமுறையாகும்.
மொத்தம் 18,326 பாடல்களைக் கொண்டது பன்னிரு திருமுறை.
பிறப்பு இறப்பு, ஆதி அந்தம் இல்லாத சிவபெருமான் ஒருவரே
முழுமுதற்கடவுள். பன்னிரு திருமுறை சிவபெருமானின் மந்திர
வடிவமாகும். திருமுறை சிவாலயங்களில் கண்ணாடிப் பேழைக்குள்
வைக்கப்பெற்று சிவபெருமானாகவே வழிபடப் பெற்று வருவது. பன்னிரு
திருமுறைகளை ஓதினாலும், ஓதுவதைக் கேட்டாலும், அத்தனை தீய
சக்திகளும் அவ்விடத்திலிருந்து விலகி நல்ல மந்திர சக்தியால் அந்த
இடம் சூழ்ந்து நல்லதே நடக்கும். ஆகையால் திருமுறை அறிவோம். தினமும்
திருமுறை ஓதுவோம்.
ஒம்!
ஒம்! ஒம்!
ஒம் நமசிவாய!
திருச்சிற்றம்பலம்.
செம்பொன்னம்பலம்!
திருவம்பலம்!
திருச்சிற்றம்பலம்!
இவ்விணையத்தை பயன்படுத்தும் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சிவபெருமான்
தான் எழுந்தருளியுள்ள தன்மையினை
உணர்த்தவும், யாவற்றிலும் தன்னையே காணும்; பேதமற்ற பரிபக்குவ நிலையை
அளித்தருளவும் முக்கண் முதல்வர்
திருவுள்ளம் கொள்வோனாக!
சிவபெருமான் தேவார சிவத் திருத்தொண்டரடியவர்கள் திருக்குழு
https://tevaaram.blogspot.com
(No AdSense /Advertisement ) வில் இணைந்து இணையவழி பங்களிப்பை அளித்து சிவத் தொண்டு புரிய விருப்பமுள்ளவர்கள்
தங்கள் மின்னஞ்சல் முகவரியையும் , whatsup தொலைபேசி எண்ணையும் கீழே
உள்ள
தொடர்பு படிவம்
முலம் பகிரவும்...
(அத்தகவல் இந்த மின்னஞ்சளுக்கு
thevaarams@gmail.com வந்தடையும். ).
இணைய வழித் தேவார சிவபெருமான் சிவத் தொண்டரடியவர்கள் திருக்குழுவுடன் இணைந்து சிவத் தொண்டு புரிய வாருங்கள்…
No comments:
Post a Comment